Jump to content

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம்


Recommended Posts

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. 

b3f400ef-2833-4118-bfa5-317a554d3345_232

 

மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர்.

596974bd-d08f-4e48-8dfb-416f7c9837f0_235

அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு, கோயில் நடையை திறந்துப் பார்த்தப்போது, கடைகள் தீ பிடித்து எரிந்துள்ளது. மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளது. அந்தக் கடைகளிலுள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

30f3c37b-60c6-4bd0-9aca-22598295adce_232

அந்தக் கடைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இருந்துள்ளன. அதனால், தீ விடாமல் எரிந்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மின் கசிவின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. லாரி அதிகம் வர முடியாத நிலையால் குடங்கள் மூலம் தண்நீர் கொண்டு செல்லப்பட்ய்கிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உடனே ஸ்பாட்டுக்கு வந்து தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு, பணியை விரைவுப்படுத்தினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/115298-fire-at-madurai-meenakshi-amman-temple.html

Link to comment
Share on other sites

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் தீ விபத்து

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து Image captionதீ விபத்தால் அந்தப்பகுதி புகை மண்டலமாக மாறியது

இந்த விபத்தில் பட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் சிலவற்றில் இரவு 9 மணி வாக்கில் திடீரெனத் தீ பிடித்தது. முதலில் மூன்று கடைகளில் பற்றிய இந்தத் தீ, பிறகு மெல்ல மெல்ல பிற கடைகளுக்கும் பரவியது.

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த விபத்தில் எரிந்து நாசமாகிவிட்டன.

மேலும் அருங்காட்சியகம் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியும் இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

இந்தத் தீ விபத்தின் காரணமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லையென மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பக்தர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

மதுரை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், 5 கோபுர வாசல்களைக் கொண்டது. இவற்றில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டு வாசல்களையும் ஒட்டி பல கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகள் சிலவற்றிலேயே வெள்ளிக்கிழமை இரவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கடைகளில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-42925864

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.