Jump to content

நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்


Recommended Posts

நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்

Nadanasigamani-_0186.jpg?resize=800%2C54
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் பிரச்சனையை முற்றாக தீர்ப்பதற்காக தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சிலர் கொல்லப்பட்டதன் ஊடாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நடனசிகாமணி தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடலில் செல்லும் கப்பலில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கப்பலில் ஆயிரம் பேர் உள்ளனர். அப்போது மாலுமி சொன்னார் கப்பலில் இருந்து ஐந்து பேர் கடலில் குதித்தால் நான் மிகுதி 995 பேரையும் உயிருடன் கரை சேர்ப்பேன். இல்லை எனில் 1000 பேரும் கடலில் மூழ்க வேண்டியது தான் என .

அதனை கேட்ட கப்பலில் இருந்த சிலர் ஐந்து பேரை கடலில் தள்ளி விட்டார்கள். பின்னர் மிகுதி 995 பேரும் உயிருடன் கரை சேர்ந்தனர்.

அதேபோன்றே நாட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது சிலர் கொல்லப்படுவதன் ஊடாகவே பிரச்சனைக்கு முடிவு வரும் என இருந்த போது இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அதனாலேதான் இன்று மற்றவர்கள் காப்பற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64694/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்திசிகாமணியை தூக்கி இப்ப கடலுக்க போடவேணுமே...:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்  விட்டுப்போச்சு..tw_angry:.

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

குளிர்  விட்டுப்போச்சு..tw_angry:.

Nadanasigamani-_0186.jpg?resize=800%2C54

குளிர் விட்டதோ விடவில்லையோ எந்த முகத்தைவைத்து வீட்டுக்குத் திரும்பப் போவதென்று விழி பிதுங்குவது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’நடன சிகாமணி’ என்றால் பெயருக்கேத்தமாதிரிதானே பேசுவார், ஒரு மெண்டிஸ் போத்திலுக்காக ஆசைப்பட்டு மேடையேறீட்டீங்களே நடனசிகாமணி.

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

நாட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது சிலர் கொல்லப்படுவதன் ஊடாகவே பிரச்சனைக்கு முடிவு வரும் என இருந்த போது இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்.

நாட்டில் இன்னமும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பது உலகம் அறிந்த மகா உண்மை!

இதன் மூலம் பிழையானவர்களால், பிழையானவர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவு.

எனவே நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க அந்த  பிழையானவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட வேண்டிவர்கள் என்பதும் தெளிவாகிறது. 

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் பிரச்சனையை முற்றாக தீர்ப்பதற்காக தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சிலர் கொல்லப்பட்டதன் ஊடாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நடனசிகாமணி தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடலில் செல்லும் கப்பலில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கப்பலில் ஆயிரம் பேர் உள்ளனர். அப்போது மாலுமி சொன்னார் கப்பலில் இருந்து ஐந்து பேர் கடலில் குதித்தால் நான் மிகுதி 995 பேரையும் உயிருடன் கரை சேர்ப்பேன். இல்லை எனில் 1000 பேரும் கடலில் மூழ்க வேண்டியது தான் என .

அதனை கேட்ட கப்பலில் இருந்த சிலர் ஐந்து பேரை கடலில் தள்ளி விட்டார்கள். பின்னர் மிகுதி 995 பேரும் உயிருடன் கரை சேர்ந்தனர்.

அதேபோன்றே நாட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது சிலர் கொல்லப்படுவதன் ஊடாகவே பிரச்சனைக்கு முடிவு வரும் என இருந்த போது இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அதனாலேதான் இன்று மற்றவர்கள் காப்பற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

 

பிரச்சனையை முறறாக தீர்த்தாச்சா ?  யாரைக் கொன்று யாரைக் காப்பாற்றினீர்கள் ? என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு உதாரணம் !!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, சண்டமாருதன் said:

 

பிரச்சனையை முறறாக தீர்த்தாச்சா ?  யாரைக் கொன்று யாரைக் காப்பாற்றினீர்கள் ? என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு உதாரணம் !!!

 

 

ஒரு லட்சம் தமிழர்கள்,போராளிகளை கொன்று.... யாழ்ப்பாண தமிழர்களை காப்பாற்றியிருக்கிறார்களாம்,!

 யாழ்ப்பாண மக்கள் தொகையில் அந்த ஒரு லட்சம் மக்கள் தொகை என்பது நடன சிகாமணி ஐயாவுக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் ஒரு சிலர்தானாம்அதுதான் நடன சிகாமணி ஐயா சொல்லவருகிறார்!

 எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத சம்பவங்களை எப்படி நியாயப்படுத்துவது என்ற பிரச்சனை வரும்போது நடன சிகாமணி ஐயாபோன்று பொருத்தமற்ற  விளக்கங்களும், உதாரணங்களும் பொதுமேடைகளில் சொல்வது வழமைதானே.

அவரும் என்ன பண்ணுவது எழுதி கொடுத்ததை பேசுறார்,இரவிரவாக அந்த  கப்பல் கதையை மனப்பாடம் செய்ய பட்டபாடு அவருக்குத்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்

அதை தான் சிங்கள அரச இயந்திரங்கள் "நாட்டின் பிரச்ச்னை தீர்க்க தமிழனை கொல்" என்று 58 ஆம் ஆண்டே செய்ய தொடங்கிவிட்டார்கள் நீங்கள் இப்ப தான் விளக்கம் கொடுக்கிறீயள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.