Jump to content

நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா?


Recommended Posts

நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா?

 

(கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல)

தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் என தி.மு.க மகிழ்ந்திருக்க முடியுமா?

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஜினிகாந்த்

அமைப்பு பலம், வாக்கு வங்கி பலத்தில் தி.மு.க இன்றுள்ள நிலையில் முன்னணியில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அ,தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.கவுக்கே அதிகம் கிடைத்தன. இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் முடிவாகிவிட்டது.

இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் எங்கே போகும்? அப்படிப் பார்க்கும்போது, ஊசலாடும் அல்லது அலைபாயும் மக்கள் வாக்குகள் தாறுமாறாக பிரிய வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.

கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆர் என்ற மக்கள் தலைவருடன் ஒப்பிடத்தகுந்தவர்கள் அல்ல. திடீர் அரசியல்வாதி அல்ல எம்.ஜி.ஆர். அவர் கட்டமைத்த கதாநாயக பிம்பமும் ஒப்பீட்டுக்குள் அடங்காதது. ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியின் வாக்காளர்கள் யார்? ஆன்மிக வாக்குகள் எனத் தனியாக ஒன்றும் இல்லை.

பிரிப்பதானால், அவர் அ.தி.மு.க சார்பு வாக்குகளைத்தான் பிரிக்க வேண்டும். ஆனால், "ஜெயலலிதா கூட ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருந்தார். அதனால் ரஜினி வருகை எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது," என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்கிறார்.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகமல்ஹாசன்

கமலைப் பொறுத்தவரை அவரது அரசியல் தத்துவம் பிடிபடாததாக உள்ளது. மக்களுடன் நெருங்கி உரையாடி தன் கருத்துகளை கமல் புரியவைப்பாரா என்பதும் சந்தேகம். திராவிட அரசியலையும் சேர்த்துப்பேசுவதால் மட்டும் தி.மு.க ஆதரவு வாக்குகளை கமலால் ஈர்க்க முடியுமா?

சில கருத்துக் கணிப்புகள், கமல் அதிக வாக்குகளை ஈர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றன. காவி என் நிறம் அல்ல என்று சொன்ன கமல் கருப்புக்குள் காவி உட்பட பல நிறங்கள் அடக்கம் என்றும் சொன்னார். சமீபத்தில் திராவிடம் தமிழ்நாடு தழுவியது மாத்திரமல்ல என்றார். ``சிலர் கூறுவது போல் திராவிடத்தை அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தேவையின்றி தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டியதும் இல்லை'' இப்படியெல்லாம் பேசுவது மூலம் எல்லாத் தரப்புக்கும் சமிஞைகளை கமல் அனுப்புகிறாரா? அல்லது மாற்றி மாற்றி பேசுகிறாரா? திட்டவட்டமாக கொள்கையை வெளிப்படுத்திவிட விரும்பவில்லையா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

சினிமா கவர்ச்சி, புகழ் மட்டுமே போதுமானதா? சினிமாப் புகழ்தான் அடிப்படை என்றால் விஜய், சூர்யா, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி ரசிகர்கள் யாரை ஆதரிப்பார்கள்? ரசிகர்கள் கட்சி சார்பற்றவர்கள் என எப்படி முடிவுக்கு வர முடியும்?

தமிழக அரசியல்

கமல், ரஜினி ரசிகர்களாக இருப்பவர்களின் வாக்குகள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிச்சயமல்ல. 1996ல் ரஜினிக்கு அதிக செல்வாக்கு இருந்த காலத்திலேயே 7 சதவீத வாக்குகளே கிடைக்க வாய்ப்புள்ளது என ஒரு சர்வே வெளிப்படுத்தியது.

ஆனால் சமீபத்திய ( இந்திய டுடே) சர்வே ஒன்று ரஜினிக்கு 16 சதவீத வாக்குகளும் 33 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளது. இதுவும் சாத்தியமில்லாதது என்றே தோன்றுகிறது.

திமுக, அதிமுக மீது பெருமளவில் அதிருப்தி இருந்தால் 2016 சட்டசபையில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளையாவது மக்கள் நல கூட்டணி பெற்றிருக்க வேண்டும். திமுக, அதிமுகவும் இணைந்து மொத்தத்தில் 80 சதவீத வாக்குகளை பெற்றது ஏன்?

மற்றொரு சர்வே (REPUBLIC TV ) 2019 மக்களவைத் தேர்தலில் 33.7 சதவீத வாக்குகளையும் 23 இடங்களையும் ரஜினி பிடிப்பார் என்று கூறுகிறது. இது எதார்த்த நிலைக்கு சற்றும் தொடர்பு இல்லாதது. சில சக்திகள் ரஜினியை உயர்த்திப் பிடிக்க முழுநேரமும் செயல்படுகின்றன.

டி.டி.வி.தினகரன்படத்தின் காப்புரிமைAIADMK Image captionடி.டி.வி.தினகரன்

வேறு வேறு குரலில் பேசினாலும் ரஜினியும் கமலும் திமுக, அதிமுக, வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு தளம் அமைக்க முயற்சிக்கின்றனர் என்று ஆரூடமும் சொல்லப்படுகிறது. இருவரும் இணைவதை சிலர் விரும்புகிறார்கள்.

ரஜினியுடன் கமல் கைகோர்க்க வேண்டும் என்று தமிழருவி மணியன் வலியுறுத்துகிறார். ரஜினி அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டுச் சேரக் கூடாது என தமிழருவி மணியன் ரஜினியிடம் வலியுறுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லை ரஜினியின் கட்சிக்கு வேறு கட்சிகளின் பிரபலங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். வெகுஜனக் கட்சியாக மாறும் எந்தக் கட்சியும் வடிகட்டியே தொண்டர்களைச் சேர்ப்பேன் என்பது நடக்காத காரியம்.

அரசியலில் சில காலமாவது பணியாற்றாமல் முதல்வர் கனவில் வருபவர்களை ஏற்கும் அளவுக்குத்தான் தமிழக மக்களின் அரசியல் புரிதல் இருக்கிறதா? குறிப்பாக ஆட்சி அதிகாரத்தை நெருங்க வாய்ப்புள்ள தி.மு.க. வெறுமனே அடையாளப் போராட்டங்களை தவிர்த்து களத்தில் மக்களுடன் நிற்க வேண்டும்.

ஊசலாட்டமற்ற கொள்கை உறுதி அந்தக் கட்சிக்கு இப்போது தேவை. அ.தி.மு.கவில் உள்ளது போல யார் வேண்டுமென்றாலும் உயர் பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் கட்சியினர் முழுமூச்சுடன் பணியாற்றுவார்கள்.

தமிழக அரசியல்

அ.தி.மு.க அணிகளைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவை திரட்ட என்ன செய்யப் போகின்றன என்பதை யூகிக்க முடியவில்லை. அதிமுக-எடப்பாடி-ஓபிஎஸ் அணி பலம் பெற வேண்டுமென்றால் தினகரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆட்சியையும் தக்க வைக்க முடியும் என்று உள்ளுக்குள் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. தினகரனை சேர்ப்பதில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆட்சேபம் நீடிக்கிறது.

எனினும் பிளவுபட்டு நின்றால் ஆட்சிக்கும் ஒட்டுமொத்த எதிர்காலத்துக்கும் ஆபத்து என்றால் நிபந்தனைகளும் ஆட்சேபங்களும் கைவிடப்படலாம்.

ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு கடும் நிலையை தினகரனும் எடுப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு காலவரையின்றி நீடித்தால் தேர்தல் உடனடியாக வராது என்று சொல்லலாம்.

நீண்டகால அரசியல் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் தங்கள் வசம் உள்ள பணபலம் ஆள்பலம் உள்ளிட்ட வழிகளை - உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் போடும் கணக்கு வித்தியாசமாகவே இருக்கும். தமிழக அரசியலில் களம் யாரும் புகுந்து விளையாட முடிகிற களமாக காட்சியளிக்கிறது.

ஆனால் மக்கள் யாருக்கு எத்தகைய அதிர்ச்சி வைத்தியம் வைத்திருக்கிறார்களோ?

http://www.bbc.com/tamil/india-42845369

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.