Jump to content

பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி?


Recommended Posts

பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி?

தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

விபச்சாரத்தையும், பாலியல் தொழிலையும் இணையம் மாற்றியது எப்படி?

இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

"பியாண்ட் த கேஸ்" (Beyond the Gaze) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு, புதிய தொழில்நுட்பங்களால் அதிக பாலியல் தொந்தரவு, மறைமுகமாக பின்தொடர்தல், பாலியல் தொழிலில் இருப்பதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிய வருதல் போன்ற புதிய ஆபத்துகளை உருவாக்கியிருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டன் பாலியல் தொழில் சந்தையை அடிப்படையாக கொண்டதாகும்.

2 ஆண்டுகளாக பணிச் சூழ்நிலை, பாதுகாப்பு, காவல்துறை ரோந்து ஆகியவற்றை ஆராய்ந்து லெய்செஸ்டர் மற்றும் ஸ்ட்ராத்ஸ்கிடி பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த முடிவுகளுக்கு வந்துள்ளனர்.

புள்ளிவிபரங்கள்படத்தின் காப்புரிமைIMAGE: GETTY

இந்த ஆய்வுக்காக 640 பாலியல் தொழிலாளர்களிடமும், 1500 வாடிக்கையாளர்களிடமும் ஆய்வாளர்கள் பேசியுள்ளனர்.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் இந்த தொழில் முற்றிலும் உருமாறியிருக்கிறது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையம் இல்லாவிட்டால், தாங்கள் இதனை செய்யமாட்டோம் என்று 60 சதவீத பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெகிழ்வுத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம்

தன்னுடைய குடும்ப வாழ்க்கையோடு பாலியல் தொழிலை இணையம் வழியாக நடத்துவது எளிதாகிறது என்று பாலியல் தொழிலாளரும், செயற்பாட்டாளருமான சார்லோட் ரோஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"இந்த தொழிலில் தான் விரும்புவது அதிலுள்ள நெகிழ்வுத்தன்மையைதான். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களோடு நேரம் செலவிடுவதோடு, வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது உண்மையிலே மிகவும் முக்கியம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தன்னுடைய சொந்த வியாபாரத்தை கொண்ட சுதந்திரமான, சுய தொழில் செய்யும் நபர்தான் ஒரு பாலியல் தொழிலாளி" என்று கூறுகிற ரோஸ், தங்களுடைய பிராண்ட் பற்றி பிறரை அறிய செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்ளவும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் இணையம் உதவுகிறது" என்கிறார்.

விபச்சாரத்தையும், பாலியல் தொழிலையும் இணையம் மாற்றியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் தொழிலாளியாக இருப்பதால் கிடைக்கின்ற சமூக முத்திரை போன்ற தீமைகளும் இதிலுள்ளன என்று ரோஸ் தெரிவிக்கிறார்.

ரோஸ் பாலியல் தொழிலாளியாக இருப்பதால் கடந்த காலத்தில், அவருடைய குழந்தைகளுக்கு சிரமமாக இருந்துள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்களோடு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.

"வாழ்வதற்காக நான் என்ன செய்கிறேனோ அது தொடர்பாக பிறர் கூறும் அறநெறி கருத்துக்காக நான் அச்சுறுத்தப்பட்டேன், மிரட்டப்பட்டேன். நான் இரண்டு முறை வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டேன்" என்கிறார் ரோஸ்.

 

 

இணையம் வழியாக பாலியல் தொழில் சேவைகளை விளம்பரப்படுத்துவது பிரிட்டனிலுள்ள சட்டத்திற்கு எதிரானதல்ல. 60 முதல் 80 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவர்கள் செய்கின்ற தொழில் பொதுவாக பாலியல் தொழில் என்று பார்க்கப்படுவதும், அவர்களது தொழிலும் சிறிதளவே தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

வெர்னைய்ரி என்பவர் 'ஸ்ட்ரிக்ட்லி மாடல்ஸ்' நிறுவனத்தின் மேலாளராகும். இந்த நிறுவனம் வயது வந்தோருக்கான வெப்கேம் வலையமைப்புகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

"பெரும்பாலான நேரங்களில் மாடல் அழகிகள் தங்களுடைய ஆடைகளை உண்மையிலேயே அகற்றிவிடுவதில்லை. தங்களுடன் பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடும் தனிமையில் வாடும் மக்கள் பலரை அங்கு நீங்கள் காணலாம்" என்று அவர் தெரிவிக்கிறார்.

தெருக்களில் குறைந்த விபச்சாரம்

விபச்சாரத்தையும், பாலியல் தொழிலையும் இணையம் மாற்றியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிக அளவிலான "நடமாடும் மற்றும் பலதரப்பட்ட" பாலியல் தொழில் வடிவங்களை புதிய தொழில்நுட்பங்கள் வழங்கியுள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தனக்குரிய பாதுகாப்பான இணைய கேமரா மூலம் ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்களை பெறுவது சாத்தியமாகியுள்ளது.

இந்த வசதி பாலியல் தொழிலில் பலதரப்பட்ட தெரிவுகளை இந்த தொழிலை செய்து வருவோருக்கு வழங்கியுள்ளது. இத்தகைய புதிய வசதி இல்லாவிட்டால் அவர்களில் பலர் இந்த தொழிலை செய்ய தொடங்கியிருக்க மாட்டார்கள்.

கேமராவுக்கு முன்னால் நடத்தப்படுகின்ற நிகழ்வுகளுக்காக வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவது முதல், பாதுகாப்பு சேவைகள் வரையான பல சேவைகளில் வழங்கப்படுகின்றன.

பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் இணையம் மூலம் தொழில் நடத்த தொடங்கியுள்ளதோடு, தெருவில் நடக்கும் பாலியல் தொழில் பாலியல் சந்தையில் வெறும் 3 சதவீதமே நடைபெறுவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

புதிய ஆபத்துக்கள்

விபச்சாரத்தையும், பாலியல் தொழிலையும் இணையம் மாற்றியது எப்படி?

பாலியல் தொழில்துறையை இணையம் பாதுகாப்பானதாக ஆக்கியிருக்கலாம். ஆனால், அதே இணையத்தால் பிற ஆபத்துக்கள் தோன்றியுள்ளன என்று இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையிலான குற்றத்தை தாங்கள் அனுபவித்திருப்பதாக 80 சதவீதத்திற்கு அதிகமான பாலியல் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆய்வில் பங்கெடுத்தோரில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறியுள்ளனர்.

தங்களுடைய அந்தரங்கம் மீறப்பட்டுள்ளதால் அச்சமடைவதாகவும், தாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்று குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தெரிய வந்துள்ளதால் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் ஏறக்குறைய பாதி பேர் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிலில் 24 ஆண்டுகள் வேலை செய்துள்ள பாலியல் தொழிலாளி லௌரா லீ, "இணையம் ஓரளவுக்கு நம்மை பாதுகாக்கலாம்" என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இணையம் மூலமாக நடைபெறும் பாலியல் தொழில் வன்முறை குற்றச்செயல் சம்பவங்களை குறைத்திருக்கும் நிலையில், பாலியல் கொடுமை மற்றும் சம்மதம் இல்லாமலேயே பாலியல் தொழிலாளர்களின் தகவல்களை மக்கள் பயன்படுத்துவது போன்ற இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் உயரிய குற்றங்கள் நடைபெறுவதாக இந்த பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

"தொடர் மின்னஞ்சல்கள், இடைவிடாத தொலைபேசி அழைப்புக்கள், வீடுகளுக்கே வாடிக்கையாளர்கள் செல்வது போன்ற சில தொந்தரவுகள் 6, 7, 8 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் டெல்லா சான்டர்ஸ் வழங்கிய அறிக்கை குறிப்பிடுகிறது.

"பாலியல் தொழிலாளர்கள் இந்த குற்றங்களை காவல்துறையினரிடம் தெரிவிக்க மனமின்றி இருப்பது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகும் வாய்ப்பு அல்லது பழிவாங்கப்படும் வாய்ப்பை நினைத்து அவர்கள் அச்சமடைகின்றனர்" என்று பேராசிரியர் சான்டர்ஸ் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை முரண்பட்டதாக இருந்து வந்துள்ளது.

அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கை அடிக்கடி முதிர்ச்சியான ஒன்றாக இல்லாமலும், கடத்தல் மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதோடு, அவர்களின் அதிகாரத்தை காட்டுவதாக இருக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-42824426

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.