Jump to content

Recommended Posts

ரிஷப் பன்ட் விஸ்வரூபம்! 187 ரன்கள் குவித்த டெல்லி #DDvsSRH

 
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. 

ரிஷப் பண்ட்

 

Photo Credit: Twitter/IPL

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிகள் மோதிய போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருந்தது. 4 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி, தொடக்க வீரர்கள் இருவரையுமே இழந்திருந்தது. பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஜேசன் ராய் 9 ரன்களிலும் ஷகிப் அல்ஹசன் வீசிய 4-வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 3 ரன்கள் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால், 7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் என்ற நிலையில் டெல்லி அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

https://www.vikatan.com/news/sports/124705-ipl-2018-dd-sets-188-runs-target-for-srh.html

51/1 * (5.6/20 ov, target 188)
Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்

 

டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #DDvSRH

 
டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்
 
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
 
பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
201805102334219005_1_rishab-2._L_styvpf.jpg
 
இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார்.
 
அடுத்து, கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
 
இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. #IPL2018 #DDvSRH

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் ராயல்ஸ்; சென்னை அணியுடன் இன்று பலப்பரீட்சை: தோல்வியடைந்தால் மூட்டை கட்ட வேண்டியதுதான்

 

 
11CHPMUDHONI

தோனி   -  THE HINDU

11CHPMUAJINKYARAHANE

அஜிங்க்ய ரஹானே   -  AFP

11CHPMUAJINKYARAHANE2

பிங்க் நிற உடையை அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்.

 
11CHPMUDHONI

தோனி   -  THE HINDU

ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ள அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது ராஜஸ்தான். எனினும் அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு சாத்தியப்படும்.

 

இந்த சீசனில் 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது ராஜஸ்தான் அணி. கடந்த 20-ம் தேதி புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு தனது சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கை தகர்ந்துவிடும். அந்த அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது சற்று சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சீசனில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்திறன் ஒட்டுமொத்த அணியையும் வெகுவாக காயப்படுத்தி உள்ளது. ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் இருந்து சராசரியான செயல்திறனே வெளிப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வலுவான சென்னை அணிக்கு எதிராக வெற்றி காண வேண்டுமானால் இவர்கள் ஒருசேர எழுச்சி காண வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 பந்துகளில், 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜாஸ் பட்லரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அந்த ஆட்டத்தில் 158 ரன்களையே இலக்காக அமைத்த போதிலும் பந்து வீச்சில் கிருஷ்ணப்பா கவுதம், இஷ் சோதி, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினர். இவர்கள் கூட்டாக 11 ஓவர்களை வீசி 58 ரன்களை வழங்கிய நிலையில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இந்த கூட்டணி சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் எளிதாக கால்பதித்துவிடலாம். இரண்டு வருட தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் உச்சகட்ட பார்மில் உள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வரும் நிலையில் பந்து வீச்சு இன்னும் கவலை அளிக்கும் விதத்திலேயே உள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை வெறும் 127 ரன்களுக்குள் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தினர்.

ஆடுகளத்தின் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி ஜடேஜாவும் (3/18), ஹர்பஜன் சிங்கும் (2/22) சிறப்பாக பந்து வீசி பெங்களூரு அணியை வீழ்ச்சியடைச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த செயல் திறனால் நம்பிக்கை பெற்றுள்ள அவர்கள் இன்றைய ஆட்டத்திலும் அதேபோன்று செயல்பட முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் தீபக் ஷகார் இல்லாதது அணியின் சமநிலையை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. இதனால் லுங்கி நிகிடி, ஷர்துல் தாக்குர், டேவிட் வில்லே கூட்டணி கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் அம்பாட்டி ராயுடு, ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணிக்கு தேவையான தருணங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதிலும் அம்பாட்டி ராயுடு தொடக்க வீரராகவும், 4-வது வீரராகவும் களமிறங்கி அற்புதமாக விளையாடி வருகிறார். 10 ஆட்டங்களில் 423 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் சேர்த்துள்ளவர்களின் பட்டியலில் 3-வது இடம் வகிக்கும் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் தன்மீதான கடந்த கால விமர்சனங்களுக்கு அதிரடி பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து வரும் தோனியும் மீண்டும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

பிங்க் உடையில் ரஹானே குழுவினர்

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க போராடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது. புற்று நோய் விழிப்புணர்வுக்காக அந்த அணி இந்த உடையில் விளையாடுகிறது. பிங்க் நிறத்துடன் மேலும் இரு நிறங்கள் உடையில் இடம் பெற்றுள்ளது. இந்த 3 வண்ணங்களும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், செர்விக்கல் கேன்சர் ஆகியவற்றைக் குறிக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23845405.ece

Link to comment
Share on other sites

‘ரெய்னாவை ஓரம் கட்டிய ரோகித் சர்மா’; டி20 போட்டிகளில் மைல்கல்: சில சுவாரஸ்யத் தகவல்கள்

 

 
rohit-sharma-m

ரோகித் சர்மா   -  படம்: ஏப்ஃபி

கொல்கத்தாவில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட சில சாதனைகளைச் செய்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டக்கில் கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

 

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 31 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 747 ரன்கள் சேர்த்த முதல் வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 746 ரன்கள் சேர்த்தே சாதனையாக இருந்தது.

இவர்களுக்கு அடுத்த அடத்தில், விராட் கோலி 490 ரன்களுடனும், கெயில் 594, டேவிட் வார்னர் 677 ரன்கள், தோனி 455, ஷிகார் தவாண் 459 ரன்கள் என வரிசையில் உள்ளனர்.

சில சுவாரஸ்யத் தகவல்கள்….

1. தோனி, கம்பீர், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்ததாக டி20 போட்டிகளில் 100 போட்டிகளுக்கு கேப்டன் செய்த பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.

2. மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான் அரை சதம் அடிக்க 17 பந்துகள் எடுத்துக்கொண்டார். இதுதான் அந்த அணியின் வீரர் ஒருவர் அரை சதம் அடிக்க எடுத்துக்கொண்ட குறைந்தபட்ச பந்துகளாகும்.

3. இஷான் கிஷான் தான் சேர்த்த 62 ரன்களில் 56 ரன்கள் பவுண்டரிகள் மூலமே சேர்த்துள்ளார். இதற்கு ரெய்னா, கே.எல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதுபோன்று 50 ரன்களுக்கு மேல் பவுண்டரிகளாகச் சேர்த்திருந்தனர்.

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது.

5. கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்ததே இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

6. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23840272.ece

Link to comment
Share on other sites

புவனேஷ்வர் குமாரை 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய ரிஷப் பந்த்: சுவையான தகவல்கள்

 

 
rishab%20pant

ரிஷப் பண்ட் அடித்த சிக்சர்களில் ஒன்று.   -  படம். | ஏ.எஃப்.பி.

டெல்லியின் சிறிய மைதான அனுகூலத்தைத் தனக்குச் சாதகமாக்கிய ரிஷப் பந்த் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 128 ரன்கள் விளாசி தனி நபராக டெல்லியை முன்னுக்கு இட்டுச் சென்றார், ஆனால் ஷிகர் தவன், கேன் வில்லியம்சன் டெல்லியின் 188 ரன்கள் வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து சன் ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஷிகர் தவண் 50 பந்துகளில் 92 ரன்களையும் கேப்டன் வில்லியம்சன் 53 பந்துகளில் 88 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

 

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் ஏற்படுத்திய சாதனைத்துளிகளிl சிலவும் பிறவும்..

ரிஷப் பந்த் எடுத்த 128 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். இதற்கு முன்னால் முரளி விஜய் 2010 ஐபிஎல்-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 127 ரன்களை எடுத்ததுதான் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும்.

டெல்லி டேர் டெவில்ஸ் எடுத்த 187 ரன்களில் பந்த் பங்களிப்பு 68%. ஐபிஎல் தொடக்க போட்டியில் 2008ம் ஆண்ட் பிரெண்டன் மெக்கல்லம் பெங்களூரு அணிக்கு எதிராக விளாசிய 158 ரன்கள் கொல்கத்தாவின் 222/3 என்பதில் 71% பங்களிப்பாகும்.

புவனேஷ்வர் குமாரை இந்த ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கிய ஒரே வீரர் ரிஷப் பந்த் என்றால் அது மிகையல்ல. 11 பந்துகளில் பண்ட் அவரை 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். புவனேஷ்வர் குமாரை இவ்வளவு ரன்கள் அடித்த ஒரே வீர்ர் ரிஷப் என்ற சாதனைக்கும் சொந்தக் காரரானார்.

அதே போல் டைட்டாக வீசி முக்கிய விக்கெட்டுகளுடன் சன் ரைசர்ஸ் வெற்றியில் பெரும் பங்கு செலுத்தி வரும் ரஷீத் கான் ஓவரில் ரிஷப் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும்.

மொத்தம் புவனேஷ்வர், ரஷீத்தின் 24 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார் ரிஷப் பந்த்.

மணீஷ் பாண்டே முதலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் கண்ட இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் அப்போது அவருக்கு வயது 19 ஆண்டுகள் 253 நாட்கள். ரிஷப் பந்த் இந்த அதிகபட்ச தனிப்பட்ட ஐபிஎல் ஸ்கோரை எடுக்கும் போது வயது 20 ஆண்டுகள் 218 நாட்களாகும்.

128 ரன்கள் கடைசியில் வெற்றிக்கு உதவவில்லை, இது போன்று இன்னும் 3 அதிரடி இன்னிங்ஸ்கள் தோல்வியில் முடிந்துள்ளன. கிறிஸ் கெய்ல் 2015-ல் கெண்ட் அணிக்கு எதிராக சோமர்செட் அணிக்கு எடுத்த 151 ரன்கள் தோல்வியில் முடிந்த அதிகபட்ச அதிரடி ஸ்கோராகும். ஒருமுறை கேமரூன் பேங்க்ராப்ட் இதே சோமர்செட் அணிக்கு எடுத்த 141 ரன்களும் தோல்வியில் முடிந்தது. டேனியல் கிறிஸ்டியனின் 129 ரன்கள் மிடில்செக்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் சைமண்ட்ஸ் டெக்கான் சார்ஜர்சுக்காக 2008-ல் ராஜஸ்தானுக்கு எதிராக அடித்த 117 நாட் அவுட்டும் தோல்வியில்தான் முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/article23850012.ece?homepage=true

காட்டடி ரிஷப் பன்ட்... அலட்டாமல் அசத்திய ஷிகர் - வில்லியம்சன்...! #DDvSRH

 
 

முதலில் பேட் செய்து தட்டுத் தடுமாறி ரன்கள் சேர்த்துவிட்டு பின்னர் பவுலர்களை வைத்து, 'ஏரியாவுக்கு வாய்யா, ஏரியாவுக்கு வாயா' என உக்கிரமாக வம்பிழுப்பதுதான் இந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் ஸ்டைலாக இருந்தது. 'பேசாம பதின்னொன்னும் பவுலராகிட்டா இன்னும் சிறப்பா இருக்கும்ல' என்றெல்லாம் கமென்ட் கிளம்பவும் சன்ரைஸர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கும் கோபம் வந்துவிட்டது போல. ஆனால், பாவம் தப்பான அணியை அடித்துத் துவைத்துவிட்டார்கள். #DDvSRH

#DDvSRH

 

 

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'உங்களை பேட் பண்ண வச்சா வழக்கம்போல ஆட்டம் காட்டுவீங்க, நாங்களே இறங்குறோம்' என பேட்டை பிருத்வி ஷா, ஜேசன் ராய் கையில் கொடுத்தனுப்பிவிட்டார். ஆடிய அத்தனை போட்டிகளிலும் அதிரடி காட்டிய ஷா நேற்று கொஞ்சம் தடுமாறித்தான் போனார். முதல் மூன்று ஓவர்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடுகிறார்கள் எனத் தெரிந்ததும் ஷகிப்பை கொண்டுவந்தார் வில்லியம்சன். கேப்டன் சீப்பாக போட்ட ப்ளானை ஷார்ட் பால் போட்டு முடித்து வைத்தார் ஷகிப். தவான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷா. 'போறானே ப்ருத்வி ஷா பொசுக்குனு அவுட்டாகித்தான்' என ஹஸ்கி வாய்ஸில் பாடியபடி அடுத்த பாலிலேயே ராயும் நடையைக் கட்டினார்.

இப்போது களத்தில் இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பன்ட். டெல்லியின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்திய அணியின் எதிர்காலமும் இவர்களிடத்தில்தான். அதை நிரூபிக்கும் வகையில் சித்தார்த் கெளல் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்தார் பன்ட். 8-வது ஓவரில் 'என்ன நீ மட்டும் அடிக்கிற, இந்தப் பக்கம் வா நான் காட்டு காட்டுனு காட்டுறேன்' என சிங்கிள் ரன்னுக்கு ஓடிவந்தார் ஸ்ரேயாஸ். என்ன நினைத்தாரோ பாதி தூரம் வந்தவரை 'திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி' என அனுப்பி வைத்தார் பன்ட். கேப்பில் கரெக்ட்டாக ரன் அவுட் செய்தார் சந்தீப் ஷர்மா. 

#DDvSRH

 

அடுத்து இறங்கிய ஹர்ஷல் படேலையும் அதே ஸ்டைலில் ரன் அவுட்டாக்கியிருப்பார் பன்ட். 'அவன் நேக்கா ஆடுறான்யா! நீ சூதானமா இரு' என கேப்டன் சொல்லி அனுப்பினார் போல! உஷாராக க்ரீஸில் தஞ்சமடைந்தார் படேல். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சன்ரைஸர் பவுலிங் அட்டாக்கை பதம் பார்த்தார்கள். ரஷீத் கானின் ஓவரில் மூன்று பவுண்டரிகள், சந்தீப்பின் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என வளைத்துக் கட்டி வெளுத்தார்கள். 'கடைசில நம்ம பவுலிங்கும் போச்சே' என கேன் முகத்தில் கவலை தெறித்தது.

இந்த முறையும் சேம் சைடு கோல் போட்டது பன்ட்தான். இரண்டாவது ரன்னுக்கு ஓடிவந்த ஹர்ஷலை பாதி க்ரீஸில் நிறுத்தி யூ டர்ன் போடச் சொன்னார் பன்ட். அதற்குள் பந்து கீப்பர் கோஸ்வாமி கையில் தஞ்சமடைந்தது. அவர் அதை கோட்டை விட்டுவிட்டு தரையில் தடவ, 'இப்போ எப்படி சிறுத்தை மாதிரி பாயுறேன் பாரு' என க்ரீஸ் தொட ஓடினார் ஹர்ஷல். 'மிஸ்டர் சீட்டா, அப்படியே பெவிலினுக்கு ஓடிப் போயிருங்க' என ரன் அவுட் செய்தேவிட்டார் கோஸ்வாமி. விக்கெட் கணக்கு: ஹைதராபாத் பவுலர்கள் - 1, ரிஷப் பன்ட் - 2!

#DDvSRH

'இரண்டு இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி இருக்கிறோம், நாமும் அவுட்டானால் டிரெஸ்ஸிங் ரூமில் ரிக்கி பான்டிங் பச்சை பச்சையாக கேட்பார்' என்பது பன்ட்டுக்கு தெரிந்தே இருந்தது. முகத்தில் கோபத்தை தக்க வைத்துக்கொண்டார். சுழற்ற ஆரம்பித்தார் ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டை. ஷகிப்பின் ஓவரில் 13 ரன்கள், கெளலின் ஓவரில் 9 ரன்கள், ரஷீத் கானின் ஓவரில் 13 ரன்கள், தொடரின் சூப்பர் பவுலர் புவனேஸ்வர் குமாரின் ஓவரில் 18 ரன்கள் என பாரபட்சம் பார்க்காமல் வெளுத்தார். அதிலும் நின்றபடி ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து தேர்ட் மேன் பக்கம் பந்தைப் பறக்கவிட்டதெல்லாம் Shot of the decade! அதுவும் ஒருமுறை இரண்டுமுறையல்ல, மூன்று முறை. Pitch Perfect!

காட்டடி அடித்தால் செஞ்சுரி போட்டுத்தானே ஆகவேண்டும். 56 பந்துகளில் சதம் கடந்தார் பன்ட். அதன்பின்னும் ஆட்டம் நிற்கவில்லை. புவியின் கடைசி ஓவரில் பன்ட் சந்தித்த ஐந்து பால்களில் முதல் இரண்டில் பவுண்டரி, அடுத்த மூன்றில் சிக்ஸ்! நான்கு ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் கொடுத்திருந்தார் புவி. அவர் ஒன் டே மேட்ச்சில் கூட சமீபத்தில் இவ்வளவு ரன்கள் கொடுத்ததில்லை. உபயம்: பன்ட். கேன் வில்லியம்சன் தொடங்கி ஹர்ஷா போக்ளே வரை எல்லாரும் இந்த இன்னிங்ஸைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தார்கள். கங்குலி தொடங்கி ஆரோன் பின்ச் வரை ட்விட்டரில் புகழ்மாலை சூட்டினார்கள். அமைதியாக க்ளவுஸை மாட்டிக்கொண்டு ஸ்டம்ப் பின்னால் வந்து நின்றார் கீப்பர் பன்ட்.

#DDvSRH

சேஸிங்கில் ஏற்கெனவே சென்னையிடம் மண்ணைக் கவ்வியிருந்தது ஹைதராபாத். அதுதான் அந்த அணியின் கடைசி தோல்வியும்கூட. 188 ரன்களை சேஸ் செய்வது ரொம்பவே கஷ்டம்தான். பொறுப்பாக ஆட வேண்டும். 'எனக்குத்தான் அது இல்லையே' என இரண்டாவது ஓவரிலேயே அவுட்டானார் ஹேல்ஸ். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் எப்போது அடிப்பார்கள், எப்போது அவுட்டாவார்கள் என்பதெல்லாம் பிரபஞ்ச ரகசியம். ஆக, தவானும் வில்லியம்சனும் அடித்தால்தான் உண்டு! அடித்தார்கள்.

பெரிய ஸ்கோர் என்ற பிரஷரை இருவரும் எடுத்துக்கொள்ளவே இல்லை. அதே சமயம் இருவரும் உலகின் மோஸ்ட் அட்டாக்கிங் பேட்ஸ்மேன்களும் இல்லை. இருவரிடமும் பிரதானமாக இருப்பது ஸ்டைல்தான். அதை நேற்று ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் முழுதாக அனுபவித்தது. டெல்லியின் பவுலர்களை என்னனென்னமோ காம்பினேஷன்களில் பயன்படுத்திப் பார்த்தார் ஸ்ரேயாஸ். ஒரு நானோகிராம் அளவுக்குக்கூட பயனில்லை. 

#DDvSRH

இதை சிம்பிளான நம்பர் விளையாட்டில் சொல்லிவிடலாம். டெல்லியின் பன்ட் தன் இன்னிங்ஸில் அடித்தது 15 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள். கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கோட்டை தொட வைத்த தவானும், வில்லியம்சனும் சேர்ந்து அடித்த பவுண்டரிகள் 17 தான். சிக்ஸ் அதைவிட கம்மி. ஆறு சிக்ஸர்கள்தான். அந்தளவுக்கு நீட்டான இன்னிங்ஸ் அது. ஒரு கட்டத்தில் தேவையான ரன்ரேட்டை விட அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்தது. ஏழு பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் மேட்ச்சை முடித்துவைத்தார்கள் இருவரும். A Neat and Composed Partnership!

 

ஹைதராபாத் வென்றது பிரச்னையில்லை. ஆனால், தோற்றது டெல்லி என்பதுதான் இங்கு சோகமே. ஐபிஎல்லின் பிரதான நோக்கமான இளம்வீரர்களை அடையாளம் காண்பது என்பதைச் சரியாக செய்தது டெல்லி அணிதான். ஸ்ரேயாஸ் ஐயர், பன்ட், ப்ருத்வி ஷா, ஹர்ஷல் படேல், விஜய் ஷங்கர், அவேஷ் கான், தெவேதியா என எக்கச்சக்கப் பேரை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்ததுதான் சோகமுரண். You deserve a better tournament DD!

https://www.vikatan.com/news/sports/124756-srh-beat-dd-by-9-wickets-as-the-later-lost-the-playoff-spot.html

Link to comment
Share on other sites

ரிஷப் பந்த் அதிரடி சதம்: அறியாத விஷயங்கள்!

 

 
pant_srh81818111

 

தில்லிக்கு எதிரான அதிரடியாக ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. எனினும் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டம் ரசிகர்கள், நிபுணர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ளது.

தில்லி டேர் டெவில்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் 42-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு புதுதில்லியில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய பந்த், 7 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 128 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ரிஷப் பந்தின் அதிரடி சதத்தின் முக்கிய அம்சங்கள்:

* தில்லி அணியின் ஸ்கோரில் 68.4% ரன்களை ரிஷப் பந்தே எடுத்தார். ஐபிஎல்-லில் இது இரண்டாவது அதிகப் பங்களிப்பு. ஐபிஎல்-லின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அடித்த 222 ரன்களில் மெக்கல்லம் மட்டும் 158 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோரில் 71.7% ரன்கள். இதை இதுவரை யாராலும் தாண்டமுடியவில்லை. 

* ஐபிஎல்-லில் நான்காவதாக அல்லது அதற்கும் கீழே களமிறங்கிய வீரர்களில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு ராஜஸ்தானுக்கு எதிராக முதல் ஐபிஎல் போட்டியில் சிமண்ட்ஸ் 117* ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதை பந்த் தாண்டியுள்ளார். 

* 20 வயதில் ( 20 வருடம் 218 நாள்கள்) ஐபிஎல் சதம் எடுத்துள்ளார் பந்த். ஐபிஎல்-லில் சதமடித்த இரண்டாவது இளம் வீரர் இவர். இதற்கு முன்பு, 2009-ல்  19 வயதில் ( 19 வருடம் 253 நாள்கள்) பெங்களூர் வீரராக மணீஷ் பாண்டே டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 114 ரன்கள் எடுத்ததே இன்றும் சாதனையாக உள்ளது.

* இந்த ஐபிஎல்-லில் அனைவருக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சை பந்த் சிதறடித்தார். புவனேஸ்வரின் 11 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் பந்த். புவனேஸ்வரின் பந்துவீச்சில் டி20 ஆட்டங்களில் வேறு யாரும் இந்தளவுக்கு ரன்கள் குவித்ததில்லை. ரஷித் கானின் 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார் பந்த். அதாவது இருவருடைய பந்துவீச்சுகளில் 24 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் பந்த். 

 

* டி20 போட்டிகளில் இருமுறை மட்டுமே புவனேஸ்வர் குமார் 50 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

4-0-55-2 vs பெங்களூர், 2016 (கடைசி 5 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார் சர்ஃபராஸ் கான்)
4-0-51-1 vs தில்லி, 2018 (கடைசி 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார் ரிஷப் பந்த்)

* 128 ரன்கள் எடுத்தாலும் ரிஷப் பந்தின் தில்லி அணி தோல்வியே அடைந்தது. தோல்வியில் அமைந்த ஐபிஎல் சதங்கள்

* 128* ரிஷப் பந்த்
* 117* சிமண்ட்ஸ்
* 115* சாஹா

* 2016-ல் ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சஞ்சு சாம்சன் (21 வருடம் 183 நாள்கள்). நேற்று, அதை முறியடித்து ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் பந்த் (20 வருடம் 218 நாள்கள்). 

* ஐபிஎல் போட்டியில் சதமெடுத்த இந்தியர்கள் (13 பேர்):

மணீஷ் பாண்டே, யூசுப் பதான், முரளி விஜய், வல்தாட்டி, டெண்டுல்கர், சேவாக், ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, சாஹா, கோலி, சாம்சன், ரிஷப் பந்த்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் - இந்தியர்கள்

128* - ரிஷப் பந்த் vs ஹைதராபாத், 2018
127 - முரளி விஜய் vs ராஜஸ்தான், 2010
126* - சுரேஷ் ரெய்னா vs பெங்கால், 2018

ரிஷப் பந்த் - 2018 ஐபிஎல்

20 வயது பந்த், 521 ரன்களை இதுவரை எடுத்துள்ளார். 27 சிக்ஸர்கள்.

500+ ரன்கள் எடுத்த இளம் வீரர்
25+ சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்.

2018 ஐபிஎல்

அதிக ரன்கள்: ரிஷப் பந்த்
அதிக பவுண்டரிகள்: ரிஷப் பந்த்
அதிக சிக்ஸர்கள்: ரிஷப் பந்த் / தோனி
அதிகபட்ச ரன்கள்: ரிஷப் பந்த்

http://www.dinamani.com/sports/special/2018/may/11/rishabh-pant-takes-70-off-24-balls-against-rashid-and-bhuvneshwar-2917721.html

https://www.iplt20.com/video/134895

Link to comment
Share on other sites

நியூட்ரல் பிட்ச்சில் தோனியை சமாளிப்பாரா ரஹானே? #RRvCSK

 
 

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஈஸியா, ஜாலியா அல்வாபோல ஒரு மேட்ச் இன்று. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடுகிறது சென்னை. இதுவரை 10 மேட்ச் விளையாடி, அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை. 10 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான். ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பு ராயல்ஸுக்கு இன்னும் இருக்கிறது. அதனால், இது சென்னையைவிடவும் ராஜஸ்தானுக்குத்தான் மிக முக்கியமான போட்டி. அதேசமயம் சன் ரைஸர்ஸ் தொடர்ந்து வெற்றிபெறுவதால், எப்படியும் இரண்டாவது இடத்தில் லீக் மேட்ச்களை முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது சென்னை. #RRvCSK

#RRvCSK

 

ஜெய்ப்பூர் பிட்ச்!

பேட்டிங், பெளலிங் என இரண்டுக்குமே சாதகமான ஆடுகளம் ஜெய்ப்பூர் பிட்ச். இந்த சீஸனில் இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோர் என்பது, மும்பை இந்தியன்ஸின் 167 ரன்னை சேஸ் செய்து ராஜஸ்தான் பெற்ற 168 ரன்தான். இங்கு இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ஸ்பின்னர்களைவிட இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களே சிறப்பாகப் பந்துவீசி, ரன்னைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். 

Sanju Samson #RRvCSK

ரஹானேவின் ப்ளேயிங் லெவன்!

பஞ்சாப்புடனான போட்டியில் இதே மைதானத்தில் கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றதால் கிட்டத்தட்ட அதே அணியையே ரஹானே இன்றும் களம் இறக்குவார். ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்டோக்ஸ், கெளதம் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருப்பர். 18 வயதேயான ராஜஸ்தானின் இளம் வீரர் மஹிப்பால் லாம்ரோர் கடந்த போட்டியில் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் கோபால் இடம்பிடிக்கக்கூடும். இவர் மூன்று வாரங்களுக்கு முன் புனேவில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து 20 ரன் மட்டுமே கொடுத்தவர். ஸ்டூவர்ட் பின்னிக்கு இன்றைய போட்டியில் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படலாம். பெளலிங்கைப் பொறுத்தவரை ஆர்ச்சர், உனத்கட், கெளதம், பென் ஸ்டோக்ஸ், சோதி, பின்னி ஆகியோர் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சாளரான அனுருத் சிங்கும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கலாம். 

Ben Stokes

தோனியின் ப்ளேயிங் லெவன் என்ன?

சென்னை அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது. வாட்சன், ராயுடு, ரெய்னாவுடன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் புகுந்த டெல்லி பேட்ஸ்மேன் துருவ் ஷோரியும் அணியில் இடம்பிடிப்பார். தோனி, ஜடேஜா, பிராவோ ஆகியோர் டெத் ஓவர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி இந்த சீரிஸில் விளையாடிய முதல் மேட்ச் பெங்களூருவுக்கு எதிரான மேட்ச்தான். சிறப்பாகப் பந்து வீசி  ஓவருக்கு 6 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் வில்லி. ஆனால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம்தான். தீபக் சாஹர் காயம் குணமாகி, இன்று அணியில் விளையாடுவார். தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர்தான் அணியின் பேஸ் பெளலர்களாக இருப்பார்கள். டேவிட் வில்லிக்குப் பதிலாக வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டில் ஸ்பின்னர் இம்ரான் தாஹீர் இடம்பிடிப்பார். 

#RRvCSK

யாருக்கு வெற்றி?

ராஜஸ்தான், நம்பிக்கை இழந்த மிகுந்த சோர்வடைந்த அணியாக இருப்பதுதான் அதன் பலவீனம். சிக்ஸர்களாகச் சிதறவிடுவார், விக்கெட்டுகளை அள்ளுவார் என எதிர்பார்க்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இதுவரை எந்தவிதமான மாயாஜாலங்களையும் நிகழ்த்தவில்லை. அப்படியே அவர் நிகழ்த்தினாலும் பல மேன் ஆர்மிகளைக்கொண்டிருக்கும் சென்னை, ஈஸியாக அதைச் சமாளித்துவிடும். ஜெய்ப்பூரில் சென்னை சிங்கங்களின் உறுமல் இன்று அதிகமாகவே இருக்கும்!

 

ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மகேந்திர சிங் தோனி

https://www.vikatan.com/news/sports/124761-chennai-super-kings-vs-rajasthan-royals-match-preview.html

Link to comment
Share on other sites

ஐபிஎல்-ல் தொடரும் மோசடித் தீர்ப்புகள்: டாம் கரன் வீசியது நோ-பாலா? சர்ச்சையில் நடுவர்கள்

 

 

 

screenshotJPG

டாம் கரனின் பாதி பாதம் கிரீசிற்குள் இருக்கும் போது நோ-பால்.   -  படம். | ஸ்க்ரீன் ஷாட்.

அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் செய்த வெளிப்படையான தவறு ஒன்றினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதக நிலை ஏற்பட்டது.

அன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட் செய்த போது இன்னிங்சின் 16வது ஓவரை இங்கிலாந்தின் டாம் கரன் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை நடுவர் கே.என்.அனந்தபத்மநாபன் நோ-பால் என்று அறிவித்தார், அதாவது டாம் கரனின் முன் பாதம் கிரீஸைக் கடந்து சென்றது என்று அவர் முடிவு கட்டினார்.

 
 

இதனால் கூடுதல் ரன்னும், ஃப்ரீ ஹிட்டும் மும்பை இந்தியன்ஸுக்குக் கிடைத்தது. ஆனால் ரீப்ளேயில் டாம் கரனின் பாதத்தில் பாதி கிரீசிற்குள் இருந்தது தெரியவந்தது.

ரீப்ளேயைப் பார்த்த கொல்கத்தா ஊழியர் ஒருவர் கேம்ரூன் டெல்போர்ட்டை அனுப்பித்து லாங் ஆனில் நின்று கொண்டிருந்த ரிங்கு சிங்கிடம் அது நோ-பால் இல்லை என்று தெரிவித்தார், இதனையடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக், டாம் கரன் இருவரும் நடுவரிடம் பேசினர், ஆனால் நடுவர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை அதிகாரபூர்வ ரீப்ளேயும் கேட்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், இதனை “நோ-பால், நீங்கள் சீரியஸாகத்தான் கூறுகிறீர்களா? என்று ஸ்மைலியுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தது.

முன்னதாக கிங்ஸ் லெவன் பவுலர் ஆண்ட்ரூ டை ஓவரில் களநடுவரின் கணக்குக் குழப்பத்தினால் 7 பந்துகளை ஒரு ஓவரில் வீசுவது நடந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக முக்கியக் கட்டத்தில் கேன் வில்லியம்சன் இடுப்புக்கு மேல் சென்ற புல்டாஸுக்கு நோ-பால் கொடுக்காமல் அந்த போட்டி சிஎஸ்கே வசமானது.

இதோடு இல்லாமல் தவறான எல்.பி.தீர்ப்புகள் (அவுட் தீர்ப்பு, நாட் அவுட் தீர்ப்பு இரண்டுமே), விக்கெட் கீப்பர் கேட்ச் கொடுக்கப்பட்டது, மறுக்கப்பட்டது உள்ளிட்ட தவறுகள். மேலும் சில வைடுகள் வெளிப்படையாக வைடுகள் அல்ல என்பதும் பார்ப்பவர்களுக்கு வெட்ட வெளிச்சமான ஒன்று.

இதனையடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ-யில் நடுவர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர், இதில் 12 நடுவர்கள் மேல் தளத்தில் உள்ளனர். இவர்களுக்கு பிசிசிஐ போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.20,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களில் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதில்லை.

கீழ்நிலையில் உள்ள, நாளொன்றுக்கு ரூ.15,000 பெறும் நடுவர்கள் ஐபிஎல்-ல் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஏற்கெனவே பிசிசிஐ நடுவர்களின் பணித்திறன் மேம்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக எழுந்த செய்திகளைப் பொய்யாக்கும் வண்ணம் மீண்டும் மீண்டும் நடுவர் தீர்ப்புகள் சில அணிகளுக்கு, சில வீரர்களுக்கு ஆதரவாகச் சென்று கொண்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23852336.ece

Link to comment
Share on other sites

அஸ்வின் முன்னால் இறங்கிய விவகாரம்: ப்ரீத்தி ஜிந்தா, சேவாக் இடையே மோதல்?

 

 
SSL-ZINTAjpg

சேவாக், ப்ரீத்தி ஜிந்தா.   -  படம். | கே.முரளிகுமார்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடைந்த தோல்வியை அடுத்து அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கும் அணியின் ஆலோசகர் விரேந்திர சேவாகுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அணியின் செயல்பாட்டில் தலையீடு இருப்பதாக அதிருப்தி அடைந்துள்ள சேவாக் இந்த சீசனுடன் கிங்ஸ் லெவன் அணியுடனான தனது 5 ஆண்டுகால உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அன்று கிங்ஸ்லெவன் அணி வெற்றி பெற முயற்சியே செய்யாமல் தோல்வி அடைந்தது, மேலும் கேள்விக்குரிய சில முடிவுகளை கிங்ஸ் லெவன் எடுத்தது, அதில் ஒன்று அஸ்வினை 3ம் நிலையில் களமிறக்கியதும் சர்ச்சையானது.

கருண் நாயர், மனோஜ் திவாரி இருக்கும் போது அஸ்வின் மூன்றாம் நிலையில் இறங்கியதும் பிரச்சினையாகியுள்ளது. அஸ்வின் டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து ஏன் அஸ்வினை 3ம் நிலையில் இறக்க வேண்டும் என்று சேவாகிடம் விளக்கம் கேட்டுள்ளார் அணியின் சக உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா. ஆனால் சேவாக் அளித்த பதில் ஜிந்தாவுக்கு திருப்திகரமாக இல்லை. இதனையடுத்து ப்ரீத்தி அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தன் வழிமுறைகளில் அவர் குறுக்கிட்டதற்காக சேவாகும் பரஸ்பர அதிருப்தியில் இருப்பதாக கிங்ஸ் லெவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணியின் மற்ற உரிமையாளர்களான வாடியா, மோஹித் பர்மனிடம் சேவாக், பிரீத்தி ஜிந்தா தன் விஷயங்களில் அதிகம் தலையீடு செய்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு ஜிந்தா-சேவாக் இடையே நடந்த பேச்சு சாதாரணமானது, வழக்கமானது என்றும் “இருவரிடமும் பேசிவிட்டதாகவும் பிரச்சினை இல்லை” என்று மோஹித் பர்மன் தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23850492.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

 

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #RRvCSK #IPL2018

 
ஐபிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
 
ஜெய்ப்பூர்:
 
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
 
ராயுடு 12 ரன்னில் அவுட்டானார். வாட்சன் மற்றும் ரெய்னா ஜோடி 86 ரன்கள் சேர்த்தது. வாட்சன் 39 ரன்களில் வெளியேறினார். ரெய்னா சிறப்பாக விளையாடி 52 ரன்களில் அவுட் ஆனார்.
 
அதன்பின் இறங்கிய தோனி நிதானமாக ஆடினார். பில்லிங்ஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
201805112357422618_1_raina-2._L_styvpf.jpg
 
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் எடுத்தார். 
 
இதையடுத்து, 177  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
 
ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், ரகானே 4 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 21 ரன்னிலும்,  பிரசாந்த சோப்ரா 8 ரன்னிலும், பின்னி 22 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 12 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பட்லர் அரை சதமடித்து அசத்தினார்.
 
பரபரப்பான கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தன. 4-வது பந்தில் சிக்சர் பறந்தது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.
 
சென்னை அணி சார்பில் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், பிராவோ, டேவிட் வில்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #RRvCSK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/11235742/1162407/rajasthan-royals-beat-chennai-super-kings-by-4-wickets.vpf

Link to comment
Share on other sites

சிஎஸ்கேவின் வெற்றிக்கு “செக்” வைத்த பட்லர்: “கூல் கேப்டன்” “ஹாட்”

 

 
jos%20butler

பிங்க் உடையில் வெற்றியை ருசித்த ராஜஸ்தான், ஆட்ட நாயகன் பட்லர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஜோஸ்பட்லரின் ஆர்ப்பரிப்பான பேட்டிங், கவுதமின் கடைசி நேர அதிரடி ஆகியவற்றால் ஜெய்பூரில் நேற்று நடந்த 43-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

“கூல் கேப்டன்” என்று கிரிக்கெட் உலகில் பெயரெடுத்த தோனியை சிஎஸ்கே வீரர்கள் “ஹாட் கேப்டனாக” மாற்றிவிட்டனர். கடைசி 3 ஓவர்களில் பீல்டிங்கை கோட்டை விட்டதும், கேட்ச்களை தவறவிட்டதும், ரன்களை வாரிக்கொடுத்ததும் தோனியை கடுப்பேற்றிவிட்டது. பிறகென்ன தனது வழக்கமான “டிரேட்மார்க்கை” காப்பாற்ற முகத்தை எப்போதும் போல கூலாக மாற்றிக்கொண்டு அமைதியாக இருப்பதுபோல் தோனி கீப்பிங் பணியில் ஈடுபட்டார்.

 

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், பேட்டிங்குக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைக்காது என்பதை அறிந்தும் தோனி டாஸில் வென்று முதலில் பேட் செய்தது ஏன் எனத் தெரியவில்லை,. சிஎஸ்கே அணியில் மெச்சும்படியான சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் இல்லாத நிலையில், தோனி முதலில் பேட் செய்தது ரசிகர்கள் மத்தியில் வியப்புக்குள்ளாக்கியது. ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோரை சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சேர்த்த காலம் மலையேறிவிட்ட நிலையில் இம்ரான் தாஹிருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

பேட்டிங்கிலும் சிஎஸ்கே வீரர்கள் சொதப்பிவிட்டனர். அதிரடியான தொடக்கத்தை அளித்த ராயுடு, தரமான வேகப்பந்துவீச்சை சந்தித்து விளையாடமாட்டார் என்ற விமர்சனம் எழந்து வந்தது. அதுபோல், ஜோப்ரா ஆர்ச்சர் 148 கி.மீ வேகத்தில் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகினார் ராயுடு மீதான விமர்சனத்தை எல்லாம் அது நிஜமாக்கியது. பவுண்டரிகள், சிக்ஸர்கள அடிக்கவும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறியது ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சுக்கு கிடைத்த பாராட்டாகும்.

கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வீரர் வாட்ஸன் தனக்கு நேராக வந்த பந்தை கேட்ச்பிடிக்காமல் தவறவிட்டது, தோனி ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது, பட்லர் தூக்கி அடித்த பந்தை யாருமே பிடிக்காமல் வேடிக்கை பார்த்தது ஆகியவை எல்லாம் “உஷ் கண்டுகாதீங்க” தருணத்தை நினைவு படுத்துகிறது. அதிலும், பந்தை டைவ் அடித்து பிடிக்க முடியாமல் தோனி பக்கத்திலேயே பாய்ந்து விழுந்துவிட்டது அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் உணர்த்துகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸை எளிதாக வீழ்த்திவிடும் சிஎஸ்கே என்று நினைத்தவர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

அதேசயம், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இறுதிவரை வெற்றிக்காக போராடியது பாராட்டத்தக்கது. எந்தவிதமான பந்துவீச்சையும் அனாசயமாக சந்தித்து ரன்களைக் குவித்தார். ஜோஸ் பட்லர் ஃபார்முக்கு திரும்புவது, இந்திய அணிக்குத்தான் ஆபத்தாகும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதே ஜோஸ் பட்லர் நின்று விளையாடினால், நமது பாடு திண்டாட்டமே. சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பட்லர், தொடர்ந்து 4-வது முறையாக அரைசதம் அடித்தார்.

கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பின்னி, கவுதம் ஆகியோர் அடித்த சிக்ஸர்கள், பட்லரின் பணியை சிறிது எளிதாக்கியது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பாதி பந்துவீச்சாளர்கள் காரணம் என்றால், மீதி பட்லரை மட்டுமே சாரும்.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 7 வெற்றி என மொத்தம் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி 5வெற்றி, 6 தோல்வி என மொத்தம் 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட் செய்தார். அணியில் இங்கிடி, துருவ் ஆகியோருக்கு பதிலாக பில்லிங்ஸ், கரண் சர்மா சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் அங்கித் சர்மா, பிரசாந்த் சோப்ரா வாய்ப்புப் பெற்றனர்.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றிஎனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாட்ஸன், ராயுடு களமிறங்கினார்கள். அதிரடியாக 2 பவுண்டரிகள் சாத்திய ராயுடு, விரைவாக ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 148 கி.மீ. வேகத்தில் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் 3-வது ஓவரில் 12 ரன்களில் ராயுடு ஆட்டமிழந்தார். ராயுடு திடீரென வெளியேறியது சிஎஸ்கேவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்துவந்த ரெய்னா, வாட்ஸனுடன் இணைந்தார். அவ்வப்போது சில பவுண்டரிகளை ரெய்னா அடித்ததால், ரன்ரேட் வேகமெடுத்தது. இதனால் பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 55 ரன்களைத் தொட்டது. அதன்பின் இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். சோதி வீசிய 9-வது ஓவரில் ரெய்னாவும், வாட்ஸனும் ஆளுக்கொரு சிக்ஸர் விளாசினார்கள். மீண்டும் ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஆர்ச்சர் வீசிய 12-வது ஓவரில் வாட்ஸன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்து தோனி வந்தார். நிதானமாக பேட் செய்த ரெய்னா 30 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது 45-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

அடுத்து சிறிது நேரமே களத்தில் நீடித்த ரெய்னா, 52 ரன்கள் சேர்த்த நிலையில், சோதியின் கூக்ளி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 105 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த சிஎஸ்கே, திடீரென 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து திணறியது. அடுத்து வந்த பில்லிங்ஸ், தோனியுடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி கூட அடிக்கமுடியாமல், சிங்கிள் ரன்களாகச் சேர்த்தனர். தோனி முதல் பவுண்டரியை 17வது பந்தில்தான் அடித்தார், அது சிக்ஸராக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் மிகச்சிறப்பாக இருந்தது. 14-வது ஓவர் முதல் 19-வது ஓவர் வரை சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், உனட்கத், ஆர்ச்சர் ஆகியோர் துல்லியமான பந்துவீச்சிலும், யார்கர்லும் கடும் நெருக்கடி அளித்தனர்.

கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணியிடம் 7 விக்கெட்டுகள் இருந்தும், தோனியும், பில்லிங்ஸும் அதிரடியாக ஏன் பேட் செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. கடைசி 6 ஓவர்களில் மொத்தம் 45 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். டி20 போட்டியில் முதல் 6 ஓவர்களும், கடைசி 5 ஓவர்களும் ரன் சேர்க்க முக்கியமான ஓவர்களாகும் அதில் சிஎஸ்கே நேற்று கோட்டை விட்டது. கடைசி ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. தோனி 33 ரன்களுடனும், பிராவோ ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடந்த சில போட்டிகளாக பிராவோவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்காமல் தவிர்க்கப்படுவதும் உஷ்கண்டுகாதீங்க கேள்வியை எழுப்புகிறது.ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், சோதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர் டாப் கியரில் ஆட்டத்தை தொடங்கினார். வில்லி வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார் பட்லர்., ஹர்பஜன் வீசிய 2-வது ஓவரையும் பொளந்து கட்டிய பட்லர் 3 பவுண்டரிகள் அடித்தார். ஹர்பஜன் வீசிய 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ஃபார்முக்கு வந்த ஸ்டோக்ஸ், 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ரஹானேயின் மோசமான பேட்டிங் தொடர்ந்துவருவது கவலைக்குரியதாகும். ரஹானே 4ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா வீசிய 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம்ஸன், பட்லருடன் இணைந்தார்.

நிதானமாக ஆடிய பட்லர் 26-பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது தொடர் 4-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 11-வது ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 அரைசதம் விராட்கோலி, சேவாக் மட்டுமே அடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது ஜோஸ்பட்லரும் இணைந்தார்.

dhonijpg

பட்லர் அடிப்பதை பார்க்கும் தோனி.| ஏ.எஃப்.பி.

 

நிதானமாக பேட் செய்து வந்த சாம்ஸன் 21ரன்கள் சேர்த்தநிலையில் பிராவோ ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய புதுமுக வீரர் சோப்ரா 2 பவுண்டரிகள் அடித்த நிலையில், தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும், மனம் தளறாமல் பட்லர் பேட் செய்துவந்தார்.

ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு அளித்தார். பின்னி தனது பங்குக்கு ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினார். பிராவோ வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த பின்னி 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அதிரடி வீரர் கவுதம் களமிறங்கினார். கடைசி 14 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில் பட்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தோனி தவறவிட்டார். இந்த கேட்சை தோனி பிடித்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறி இருக்கும். வில்லி வீசிய 19-வது ஓவரில் 2 அதிரடி சிக்ஸர்கள் அடித்து பரபரப்பை அதிகப்படுத்தினார் கவுதம். ஆனால் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் கவுதம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கவுதம் சிறப்பாகச் செய்துவிட்டு வெளியேறினார்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றி எளிதாக சிஎஸ்கே எடுத்துச் சென்று இருக்கலாம். அனுபவம் வாய்ந்த பிராவோதான் பந்துவீசினார். முதல்பந்தில் ரன் இல்லை, 2-வது,3-வது பந்தில் பட்லர் தலா 2 ரன்கள் சேர்த்தார். 4-வது பந்தில் எதிர்பாராத சிக்ஸரை பட்லர் அடிக்க அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. தோனியின் முகம் கோபத்தால் கொதித்தது. 5-வது பந்தில் 2 ரன்கள் பட்லர் ஓட ராஜஸ்தான் வெற்றி உறுதியானது.

19.5 ஓவர்களில் 6 விக்கெட்இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 60 பந்துகளைச் சந்தித்த பட்லர் 95 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

சிஎஸ்கே தரப்பில் 7 பேர் பந்துவீசினார்கள். அதில் பிராவோ, தாக்கூர், ஜடேஜா, வில்லி, ஹர்பஜன் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர்.

http://tamil.thehindu.com/sports/article23861943.ece?homepage=true

Link to comment
Share on other sites

கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை

 
 
 
12CHPMUDINESHKARTHIK

தினேஷ் கார்த்திக்   -  PTI

12CHPMURAVICHANDRANASHWIN

அஸ்வின்   -  AFP

 
 

ஐபிஎல் இன்று மாலை இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தன. கொல்கத்தா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் வீழ்ந்திருந்தன.

 

பஞ்சாப் அணியின் பேட்டிங் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த சீசனில் கே.எல்.ராகுல் 471 ரன்களும், கெயில் 311 ரன்களும் சேர்த்துள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 159 ரன்கள் இலக்கை விரட்டிய போது கே.எல்.ராகுலை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். கே.எல்.ராகுல் 70 பந்துகளில் 95 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் நின்ற போதும் அணியின் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது. கடந்த ஆட்டத்தில் சோபிக்க தவறிய கெயில் மீண்டும் மட்டையை சுழற்றக்கூடும்.

இவர்கள் இருவரை தவிர பேட்டிங்கில் கருண் நாயர் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்த சீசனில் 243 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், மயங்க் அகர்வால் ஆகியோரது மோசமான பார்ம் நடுகள வரிசை பேட்டிங்கை ஆட்டம் காணச் செய்துள்ளது. இதனால் இவர்கள் 3 பேரும் சிறந்த பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் மோகித் சர்மா, அங்கித் ராஜ் புத், ஆன்ட்ரூ டை ஆகியோருடன் சுழலில் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் ஆன்ட்ரூ டை 8 ஆட்டங்களில் 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு அவர், சராசரியாக 7.77 ரன்களை மட்டுமேவிட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அங்கித் ராஜ் புத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர். இந்த பந்து வீச்சு கூட்டணி, கொல்கத்தா பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

கொல்கத்தா அணி கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். தொடக்க வீரர்களான கிறிஸ் லின், சுனில் நரேன் ஜோடி சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பின்னடைவாக உள்ளது. தினேஷ் கார்த்திக் மட்டுமே சீராக ரன்கள் குவிப்பவராக உள்ளார். 11 ஆட்டங்களில் 321 ரன்கள் சேர்த்துள்ள அவர், மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். துணை கேப்டனான ராபின் உத்தப்பா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகிறார். இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் அவர், கூடுதல் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் அணி வலுப்பெறும். நித்திஷ் ராணா, சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோரும் மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொல்கத்தா அணியின் பந்து வீச்சு இந்த சீசனில் சுழற்பந்து வீச்சை சார்ந்தே இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் கூட்டாக 7 ஓவர்களை வீசி 91 ரன்களை தாரை வார்த்திருந்தனர். இதேபோல் வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணாவும் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23861125.ece

Link to comment
Share on other sites

``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..!” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR

 
 

இந்த சீசனைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் போட்டி குஷி படம் போலதான். ஜெயிக்கப்போவது சென்னை. ஆனால் எப்படி என்பதற்காகத்தான் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு ஷாக் தந்திருக்கிறது வார்னேவிடம் பாடம் படித்த ராஜஸ்தான் ராயல்ஸ். #CSKvsRR

இந்த முறை சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள். பில்லிங்க்ஸும் கார்ன்ஷர்மாவும் மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். ராஜஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள். ரெண்டு வருஷமா ரெண்டு டீமும் தடை செய்யப்பட்டு, இந்த சீசனில் ரெண்டாவது முறையாக மோதும்போதும் ரெண்டு மாற்றங்களுடன் ரெண்டு புள்ளிகளுக்காக மோதும் போட்டியில் டாஸ் வென்ற தோனி ராஜஸ்தானை ரெண்டாவதாக பேட்டிங் செய்யலாம் என்றார். சென்னையை விட ராஜஸ்தானுக்குத்தான் அந்த ரெண்டு புள்ளிகள் முக்கியமானவை. 

 

கேப்டன் கூல் தோனியையே கோவப்படுத்திட்டீங்களேய்யா! #RRvCSK மேட்ச் மீம் ரிப்போர்ட்

ராஜஸ்தானின் சக்ஸஸ்ஃபுல் ஸ்பின்னரான கெளதம் வீசிய முதல் ஓவரில் கொஞ்சம் கஷ்டமான கேட்ச் ஒன்றைத் தந்தார் ராயுடு. ம்ஹூம். பிடிக்கவில்லை ராஜஸ்தான். ஆனால் மூன்றாவது ஓவர் வீச வந்த ஆர்ச்சர் போட்ட பிள்ளையார் சுழியே ராயுடு விக்கெட்தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன பந்தை இன்சைடு எட்ஜ் ஆக்கி போல்ட் ஆனார் ராயுடு. அடுத்து வந்தவர் ரெய்னா. இந்த சீசனில் பெரிதாக ஷைன் ஆகாத ரெய்னாவிடம்``எதையாவது மாத்தியே ஆகணும்” எனச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழந்தை முகத்தில் குறுந்தாடியுடன் வந்தார் சின்னத்தல. ஆனால், தமிழகத்தை தாடி எப்போது ஏமாற்றியிருக்கிறது? தொட்டதெலாம் ரன்தான். அதுவும் நோபால் போட்டு ஆரம்பித்து வைத்தார் ஆர்ச்சர். ஃப்ரீ ஹிட்டில் வைடு போட, ``இதெல்லாம் வைடா? ஃபிக்ஸிங்” என அலற ஆரம்பித்தது சமூக வலைதளம்.

சென்னையை வீழ்த்திய பட்லர்

ஆர்ச்சரைப் போலவே பிள்ளையார் சுழி போட நினைத்தார் உனட்கட். ஆனால், அது வைடானது. அந்த ஓவரில் லாங் ஆஃபுக்கு போன பந்தை விரட்டிச் சென்று விழுந்து விழுந்து தடுத்து நிறுத்தினார் ஸ்டோக்ஸ். மழை பெய்தால் சூப்பர் ஸாப்பர் பதிலாக ஸ்டோக்ஸை பயன்படுத்தலாம். அப்படி ஒரு பெருக்கு பெருக்கி ஒரு பவுண்டரியைத் தடுத்தார். அதனால் பவர் ப்ளேயில் 56 ஆக வேண்டிய சென்னையின் ஸ்கோர் 55 ஆனதுதான் மிச்சம்.

அதன் பின் மந்தமானது சென்னை அணி. ``மெதுமெதுவாய் உனை இழந்தேனே… இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே” என ரன்ரேட்டைப் பார்த்து பாடியது வாட்ஸன் - ரெய்னா ஜோடி. ஒரு வழியாக கிடைத்த லூஸ் பால்களை பார்சல் செய்து, 50 ரன் பார்னர்ஷிப்பைப் கடந்து 11வது ஓவரில் சதமடித்தார்கள். அடுத்த ஓவர் ஆர்ச்சர் வீச, பொறுமையிழந்தார் வாட்ஸன். முதல் ஷாட் கீப்பர் தலைக்கு மேல் 4 போனது. ஆனால், அடுத்த பந்து கீப்பர் கையிலே தஞ்சமடைந்தது. “ஃபேன்டஸி டீம்ல எடுத்தவங்களுக்குப் போதுமான பாயின்ட் கொடுத்துட்டேன்ல” என்பது போல நடையைக் கட்டினார் வாட்ஸன். அடுத்த ஓவரிலே ``நீ முன்னால போனா நான் பின்னால வாறேன்” எனப் பாடிக்கொண்டே பெவிலியன் திரும்பினார் ரெய்னா. 

பில்லிங்க்ஸுடன் ஜோடி சேர்ந்த தோனி கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனைப் போல ஒரு ஒரு ரன்னாகச் சேர்த்தார். பில்லிங்க்ஸ் விளாசினார். ஆனால், அவருக்கும் கிளிஞ்சல்தான் கிடைத்தது என்பதுதான் சோகம். 18 ஓவரில் 153 ரன்களைச் சேர்த்தது இந்த இந்திய - இங்கிலாந்து இணை. 

19வது ஓவர் பஞ்சா பறக்கும் எனக் காத்திருந்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற ரேஞ்சிலியே விளையாடியது தோனிங்க்ஸ் ஜோடி. தெரியாத்தனமாக கால் சந்தில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார் தோனி. பிராவோவும் வில்லியும் நரம்புப் புடைக்க டக்கவுட்டில் காத்திருந்தது தனிக்கதை. 

20வது ஓவரில் அடித்தே ஆக வேண்டும். ஏனெனில் 21வது ஓவர் போடுவதாக இல்லை ராஜஸ்தான். அதனால், வேறு வழியில்லாமல் ரெண்டு பவுண்டரிகள் அடித்தார் பில்லிங்க்ஸ். ``சிக்ஸ் எங்கடா” என சிங்கம்புலி கணக்காகக் கதறிய சென்னை ரசிகர்களுக்குக் கடைசிவரை அந்த அப்பளம் கிடைக்கவேயில்லை. கடைசிப் பந்து. களத்தில் தோனி. அப்புறம் என்ன என்கிறீர்களா? அவ்வளவுதான். கிளிஞ்சல். ஒரே ஒரு ரன்.

“We are short of 15 runs “ என மேட்ச் முடிந்ததும் சொல்வதற்கேற்ற ரன்கள். 176.

raina

ராஜஸ்தான் இன்னிங்க்ஸை மூன்று பவுண்டரிகளுடன் தொடங்கினார் பட்லர். எதுவுமே பெரிய ஹிட் இல்லை. கிடைக்கிற சந்தில்தான் சிந்து பாடினார். எல்லோரையும் ஆஃப் சைடில் நிற்க வைத்தால் ரிவர்ஸ் ஸ்வீவ் ஆடுவது, எட்ஜ் ஆகி பவுண்டரி போவது என பட்லர் தோனியை ரொம்பவே டென்ஷன் ஆக்கினார். எதிர்முனையில் ஸ்டோக்ஸும் ரஹானேவும் அவர்களது லிமிட் ஆன சிங்கிள் டிஜிட் ரன் எடுத்ததும் அவுட் ஆகிக்கொண்டிருந்தனர். ஆனால், ``அந்தச் சாவல்களுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை” என்ற ரீதியில் பொளந்து கொண்டிருந்தார் பட்லர். 10 ஓவரில் சென்னை எவ்வளவு எடுத்திருந்ததோ (90) அந்த இடத்துக்கு ராஜஸ்தானைக் கட்டி இழுத்து வந்திருந்தார். ஆனால், கூட நிதானமாக ஆடிய சாம்சனை 12வது ஓவரில் ரன் அவுட் ஆக்கிவிட்டார் பட்லர். சென்னைக்கு பட்லர் காட்டிய ஒரே ஒரு கரிசனப் பார்வை அதுதான்.

அதன்பின் வந்த புதுப்பையன் சோப்ரா இரண்டாவது பந்தையே பவுண்டரி ஆக்கினார். அடுத்தும் இன்னொரு 4 அடித்துவிட்டு “இவ்ளோ தக்கையா இருக்கே” என்பது போல பார்க்க, அடுத்த பந்திலே அவரை அவுட் ஆக்கி வெயிட் காட்டினார் தாக்கூர். சென்னை அணியில் தோனி சொன்னதை ஓரளவுக்குக் கேட்டு போட்டது அவர்தான். அதனாலோ என்னவோ, விக்கெட் விழுந்த கேப்பில் தாக்கூரின் தோளில் கைப்போட்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் தோனி. இந்த சீசன் முழுவதுமே ஓவர் அட்வைஸா இருக்கே தல? வயசாயிடுச்சோ?

16வது ஓவரைத்தான் வாட்ஸனுக்கு தந்தார் தோனி. அந்த ஓவரில் கைக்கு ஒரு கேட்ச் தந்தார் பட்லர். ஆனால், ``வெள்ளையா இருக்கிறவன் கேட்ச் பிடிக்க மாட்டான்” என்பது போல அதைத் தவறவிட்டார் வாட்ஸன். பிடித்திருந்தால் ``நயி சோச் அவார்டு”, ``ஸ்டைலிஷ் அவார்டு”, ``இதுக்கு பேரில்லை அவார்டு” என ஏதாவது ஒன்று கிடைத்திருக்கும்.

அடுத்த ஓவர் வில்லி. ``ஒத்த டிஜிட்லாம் ஆகாதுப்பா” என்பது போலவே வீசினார். அடுத்த ஓவர் வீசிய பிராவோவின் பந்தை லாங் ஆனில் லாங் சிக்ஸ் ஆக்கினார் பின்னி. 4,6 போகும்போதெல்லாம் கேமராமேன் தோனி பக்கம் திரும்பிவிடுவார். அய்யனார் சிலை போல ஆடாமல் நிற்பார் தோனி. அவரை அசைத்தே ஆக வேண்டிய கட்டாயம் பிராவோவுக்கு. கைகளை எப்படியோ சுழற்றி போட்ட பந்தை பின்னி மேலே தூக்க மிஸ் செய்யாமல் பிடித்துவிட்டார் வாட்ஸன். லேசாக அசைந்தார் தோனி. பட்லரை அவுட் ஆக்கினால்தான் அவரை நன்றாக அசைக்க முடியுமென்பது சென்னை பவுலர்களுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான் தெரியவில்லை. ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் என ஸ்டம்புக்குப் பின்னால்தான் பெரும்பாலான ரன்களை எடுத்தார் பட்லர். அப்படி அடித்த ஒரு பந்து தோனி கிளவுஸ் வரை சென்றது. ஆனால் கேட்ச் ஆகவில்லை. `ஒருத்தனுக்கு நேரம் நல்லா இருந்தா பந்து தோனி கைக்குப் போனா கூட மிஸ் ஆகும்’ என்பார்களே. அந்த நல்ல நேரம் நேற்று பட்லருக்கு.

சிஎஸ்கே

CSK Vs KKR report

இந்த வில்லி மீது தோனிக்கு அப்படி என்ன நம்பிக்கை எனத் தெரியவில்லை. அவ்வளவு ரன் கொடுத்தும் அவரிடமே 19வது ஓவரைத் தந்தார். களத்துக்கு வந்த கெளதம் முதல் பாலையே சிக்ஸ் ஆக்கினார். ஐந்தாவது பந்தில் இன்னொரு சிக்ஸ். அந்த ஓவர் முடிவில் ராஜஸ்தானுக்கு 12 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவர் பிராவோ. ``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா” எனக் கொதித்தனர் சென்னை ரசிகர்கள்.

முதல் பாலே ஸ்லோ பால். பந்து பட்லரை அடைய பத்து நிமிடம் ஆனது. ஆனாலும் அவரால் தொடமுடியவில்லை. அடுத்து 2 ரன்கள். அடுத்த பாலும் ஸ்லோ. எட்ஜ் ஆகி ராக்கெட் விட்டார் பட்லர். ஆனால், பிடிக்க யாரும் வரவில்லை. பட்லரும் ரன் ஓடவில்லை. சென்னையின் மிகப்பெரிய தவறு அது. அடுத்த பந்தை மிட் விக்கெட்டில் சிக்ஸர் ஆக்கினார் பட்லர். அடுத்த பந்து சிங்கிள் ஆக வேண்டியது. ஆகியிருந்தால் டை. ஆனால், ஸ்டம்ப்பை அடிக்கிறேன் என வாட்ஸன் செய்த அடுத்த தவறால் ஓவர் த்ரோ ஆனது. அந்தப் பந்திலே மேட்ச்சை முடித்தார் பட்லர்.

பாயின்ட் டேபிளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், இப்போது ப்ளே ஆஃப்க்கு எந்த டீம் போகும் என்பதில் எக்ஸ்டிரா குழப்பம். இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும் இப்போது வாய்ப்பு அதிகரித்திருக்கிறது

தோனி வில்லியை ஓவராக நம்பியது, பவர் ப்ளேவில் அதிக ரன்களைத் தந்தது, பட்லரின் கேட்ச்களை விட்டது என இந்தப் போட்டியில் சென்னை செய்த தவறுகள் ஏராளம். போட்டி முடிந்ததும் பேசிய தோனி ``இந்த ரன் நல்ல ரன்தான். பிரச்னை பவுலர்களிடம்தான்” என்றார். உண்மைதான். ஆனால், அவர்களும்தான் சென்னை சூப்பர் கிங்ஸ். அவர்களை சரி செய்யாமல் சாம்பியன் ஆவது சாதாரண விஷயமில்லை.

https://www.vikatan.com/news/sports/124834-ipl-match-report-csk-vs-rr-match-number-43.html

எப்படி வீச வேண்டும் என்று பவுலர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தினோம்: தோல்வி ஏமாற்றத்தில் தோனி

 

 
dhoni2jpg

படம். | ஆர்.ரகு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது. ஜோஸ்பட்லரின் பேட்டிங், இலக்கை அமைக்கும் போது ராஜஸ்தான் பவுலர்கள் அதிரடி வீரர் தோனியைக் கட்டிப்போட்டது, சென்னை பவுலர்கள் எப்போதும் போல் திருப்திகரமாக வீசாதது என்று சென்னை தோல்விக்குப் பல காரணங்கள் உண்டு.

தனியார் கிரிக்கெட்தான் வீரர்களின் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் தட்டி எழுப்பிவிடுகிறது!! கேப்டன் கூல் நேற்று ஹாட் ஆகிவிட்டார்.

 
 

மீண்டும் ஒரு மோசமான 19வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது. டேவிட் வில்லே அந்த ஓவரில்தான் 2 சிக்சர்களைக் கொடுத்தார். அவர் வீசிய லெந்த் சரியில்லை, இதைத்தான் தோனி ஆட்டம் முடிந்து சுட்டிக்காட்டினாரோ என்னவோ?

மீண்டும் சென்னை அணியின் பவுலர்கள் திருப்திகரமாக வீசவில்லை. தோனி அடிக்கடி கூறும் ‘டெத்’ ஓவர்கள்தான் நேற்றும் சென்னைக்கு ‘டெத்’ ஆக மாறியது.

ஆட்ட முடிந்து தோனி தன் அதிருப்தியை வெளிப்படுத்துகையில், “நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில் தான் வீசியிருக்க வேண்டும் அதுதான் திட்டமும் கூட. பவுலர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதாவது பேக் ஆஃப் லெந்த் பந்துகளை வீசுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முடியவில்லை.

ஏனெனில் ஃபுல் லெந்த் பந்துகளில் நிறைய பவுண்டரிகள் கொடுத்தோம். 176 ஒரு சரிநிகருக்கும் கூடுதலான ரன் எண்ணிக்கைதான். பவுலர்கள்தான் எங்களைக் கைவிட்டனர். பீல்டிங்கில் இந்த லெவன் இவ்வளவுதான் சிறப்பாக செயலாற்ற முடியும்.

நாங்கள் வெறுமனே பிளே ஆஃபுக்கு தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம்” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23862134.ece

சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணமா?: தோனியின் விருப்பத்தை நிராகரித்த ஸ்டீபன் பிளெம்மிங்

 

 
stephen-fleming-and-ms-dhoni

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி : கோப்புப்படம்

பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யக்கோரியும், தன்னுடைய விருப்பத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் கூறியும் அதை நிராகரித்துவிட்டதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் டாஸில் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஊடகங்களிடம் பேசுகையில், எனக்குக் களத்தில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய அதிகமான விருப்பம். ஆனால், எனது ஆசைக்குப் பயிற்சியாளர் ஸ்டீபன்பிளெமிங் தடைவிதித்துவிட்டார். பேட்டிங் வரிசையில் அதிகமான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடாது அது நிலைத்தன்மையை குலைத்துவிடும் என்று கூறிவிட்டார்.

ஆனால், என்னைப்பொறுத்தவரை தற்போது 4 வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்குகிறேன். ஆனால், ஒன்டவுனில் களமிறங்கி நீண்ட நேரம் விளையாடி ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், இதற்குப் பயிற்சியாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் எந்தவிதமான சோதனை முயற்சியும் செய்ய முடியாமல் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

dhoni-mjpg

எம்.எஸ்.தோனி

 

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 360 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 90 ஆக இருக்கிறது. 4-வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்கிவரும் தோனி, இந்த சீசனில் 3 அரைசதங்கள்அடித்துள்ளார். ஒருவேளை தோனியின் விருப்பப்படி அவரை ஒன்டவுனிலோ அல்லது 2-வது வீரராகவோ களமிறக்கினால், களத்தில் நின்று விளையாடி அதிகமான ரன்களைச் சேர்க்க முடியும்.

5-வது வீரராக களமிறங்கும்போது, ஏறக்குறைய 15 ஓவர்களுக்கு மேல்தான் தோனி பேட் செய்கிறார். இதனால் நெருக்கடியான நேரத்தில், அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், இதன் காரணமாக விக்கெட்டுகளையும் இழக்க வேண்டியது இருக்கிறது. சிஎஸ்கே அணி அதிகமான ரன்குவிக்க தோனியின் ஆசை நிறைவேறாததும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தோனியின் பேட்டிங் திறமை மீதும், ரன் எடுக்கும் வேகம் குறித்தும் கடந்த ஆண்டு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், அவர் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2018 ஐபிஎல் சீசனில் பேட்டிங்கிலும், ரன் எடுக்கும் ஓட்டங்களிலும் தூள் பறத்தி வருகிறார். 36-வயதான ஒருவர் களத்தில் இந்த அளவுக்கு ஓட முடியுமா என்று வியக்கும் வகையில் உடற்கட்டை மாற்றி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கால்காப்புடன் பவுண்டரி வரை ஓடி பீல்டிங் செய்து தனது ஓட்டத்திறனை தோனி நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23862694.ece

இரு திட்டங்களும் வெற்றி பெற்றிருந்தால் முடிவு மாறியிருக்கும்: பட்லர் ‘கிளாஸ் பிளேயர்’: பிளெமிங் புகழாரம்

 

 
flemming

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி   -  படம்உதவி: ட்விட்டர் பிசிசிஐ

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின், முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இரு திட்டங்கள் வைத்திருந்தோம், அது செயல்பாட்டுக்கு வந்திருந்தால், முடிவு மாறியிருக்கும், ஆனால், அனைத்தையும் ஜோஸ்பட்லர் சிதறடித்துவிட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ்பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 95 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

போட்டி முடிந்தபின், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராஜஸ்தான் அணியில் எந்தநேரமும் அபாயகரமான பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லருக்கு எதிராக ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தோம். இவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுஇருந்தோம்.

இதற்காக இடது கை சுழற்பந்துவீச்சையும் பயன்படுத்தினோம், ஆனால், பட்லரின் ஆர்ப்பரிப்பான பேட்டிங் முன் எதுவுமே எடுபடவில்லை.

ஜெய்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமானது, இந்த ஆடுகளத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையும் பட்லர் பேட் செய்தது சிறப்பானதாகும். பட்லரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தி இருந்தால், போட்டியின் முடிவு மாறி இருக்கும். ஆனால், எங்களின் திட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ததால், ஒரு பாதி மட்டுமே வெற்றி பெற்றது.

ஸ்டோக்ஸை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டோம், ஆனால், கடைசிவரை 7 பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றிப் பயன்படுத்தியும், பட்லரை எங்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாகத்தான் இருந்தது, ஆனால், பட்லரின் பேட்டிங்குக்கு ஒப்பிடும் போது, இன்னும் சிறப்பாக இருந்தால், அவரின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.

பவர்ப்ளே ஓவரில் நாங்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியும் முடிவை எங்கள் பக்கம் கொண்டுவர முடியவில்லை. ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல மெதுவாக மாறும் என்பதால், மெதுவாகப் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினோம். ஆனால், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் மிதவேகப்பந்துவீச்சாளர்களே சிறப்பாகச் செயல்பட்டனர்.

எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், துல்லியமாகப் பந்துவீசினார்கள். ஆனால், பட்லர் நீண்டநேரம் களத்தில் இருந்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஒருவிதமான நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

கடினமான ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த ரன்களும், விளையாடிய விதமும் மகிழ்ச்சி அளிக்கிறது. பட்லரின் பேட்டிங்தான் ஒட்டுமொத்த ஆட்டத்தின் போக்கை தீர்மானித்து விட்டது

இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உனத்கட் ஊடகங்ளிடம் பேசியதாவது:

unadkatjpg

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்

 

ராஜஸ்தான் அணியில் கடந்த 4 போட்டிகளாக பட்லர் சிறப்பாக விளையாடி வருகிறார், அணியை முன்னெடுப்பதும் அவராகவே இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக நடுவரிசையில் பேட்ஸ்மென்கள் இருந்தால், அந்த அணிக்கு இன்னும் சிறப்பாக ஆடி இருக்கும். அனைத்து நேரங்களிலும் ஒருவரே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்பது இயலாது.

நடுவரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்தார்கள், சில சிக்ஸர்களையும் அடித்தார்கள். ஆனால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அதிகமாகப் பங்களிப்பு செய்ய வேண்டும்.

கடந்த சில போட்டிகளாக ரஹானே விளையாடாவிட்டாலும் கூட அவர் மிகச்சிறந்த வீரர். தனியாக நின்று விளையாடியே சில போட்டிகளை வென்று கொடுக்கும் திறமை படைத்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்த ஸ்பெஷல் வீரர் ரஹானே. அவருக்கான நேரம் வரும்போது ஸ்பெஷல் இன்னிங்ஸை விளையாடுவார். விரைவில் அவருடைய ஸ்பெஷல் இன்னிங்ஸை பார்க்கலாம்.

இவ்வாறு உனத்கட் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23862964.ece

Link to comment
Share on other sites

நரேன், தினேஷ் கார்த்திக் அதிரடி! 245 ரன்கள் குவித்த கொல்கத்தா

 
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

சுனில் நரேன்

 

Photo Credit: Twitter/IPL

இந்தூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சிறிய மைதானம் என்பதால், பவர் ஹிட்டர் ஆரோன் பின்ச் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரை அஷ்வின் பிளேயிங் லெவனில் சேர்த்தார். அதேபோல், கொல்கத்தா அணியில் ஜேவோன் சார்லஸ் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 

கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். கிறிஸ் லின் 24 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள, மறுமுனையில் வழக்கம்போல் அதிரடி காட்டினார் சுனில் நரேன். அவர் 36 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசினார். அடுத்துவந்த உத்தப்பாவும் 24 ரன்களில் வெளியேறினார். 12வது ஓவரில் 125 ரன்களைக் கொல்கத்தா அணி கடந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் - ஆல்ரவுண்டர் ரஸல் இணை, 76 ரன்கள் சேர்த்தது. ரஸல் 14 பந்துகளில் 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 17வது ஓவரிலேயே 200 ரன்களைக் கடந்து பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸில் சார்லஸ், தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் சுப்மன் கில் அதிரடி காட்ட, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். 

https://www.vikatan.com/news/sports/124868-ipl-2018-kkr-sets-massive-246-runs-target-for-kxip.html

94/4 * (9.1/20 ov, target 246)
Link to comment
Share on other sites

`31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி’ - பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட கொல்கத்தா! #KXIPvsKKR

 

பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கத்தா அணி

 

Photo Credit: Twitter/IPL

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சுனில் நரேன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

 

246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, தொடக்கமே சிறப்பாகவே அமைந்தது. நரேன் வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, ராகுல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 5.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 57 ரன்கள் எடுத்திருந்த போது, 21 ரன்களில் கெயில் வெளியேறினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் மற்றும் கருண் நாயர் ஆகியோர் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல், 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நல்ல ஸ்கோர் இருந்தும் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தவண்ணம் இருந்தன. ஆரோன் பின்ச் 34 ரன்களிலும், அஷ்வின் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலின் முதல் 4 இடங்களுக்குள் மீண்டும் இடம்பிடித்தது.       

https://www.vikatan.com/news/sports/124874-ipl-2018-kkr-beat-kxip-by-31-runs.html

Link to comment
Share on other sites

நரேன், தினேஷ் காட்டடியில் மிரண்ட அஸ்வின் அணி: கொல்கத்தா சூப்பர் வெற்றி

 
 
dinejpg
raghuljpg
narine1

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சுனில் நரேன்   -  படம் உதவி: ஐபில் ட்விட்டர்

சுனில் நரேன், தினேஷ் கார்த்திக்கின் காட்டடி பேட்டிங்கால், இந்தூரில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்ளிட்ட 36 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய நரேனின் பேட்டிங்கும், 23 பந்துகளில் முதல் அரை சதம் அடித்த தினேஷ் கார்த்திக்கின் காட்டடியும் கொல்கத்தா அணி இமாலாய ஸ்கோர் குவிக்க முக்கியக் காரணமாகும். பந்துவீச்சிலும் கேஎல். ராகுல் என்ற முக்கிய விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

   
 

நரேன் மிகவும் ஆபத்தானவர் எனத் தெரிந்திருந்தும் அவரை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்காமல் வைத்திருந்த பஞ்சாப் அணி அதற்கான தண்டனையை வாங்கிக்கட்டிக் கொண்டது. ஐபிஎல் போட்டிகளில் 4-வது மிகப்பெரிய ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் எட்டியது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

இந்தப் போட்டியின் மூலம் ப்ளேஆப் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த போட்டியில் மும்பை அணியிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி விரைவாக மீண்டும் வந்து பிரமாண்ட ஸ்கோரை அடித்து, வெற்றி பெற்றது பாராட்டுக்குரியதாகும்.

அதேசமயம், மிகச்சிறிய மைதானம், எந்த பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்காத பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து அஸ்வின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் புயல் விரைவாக ஆட்டமிழந்ததும் பஞ்சாப் அணியை பாதாளத்தில் தள்ளிவிட்டது. அதற்கு கெயிலின் கடந்த கால வரலாறும் முக்கியக் காரணம்

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 5 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கிறிஸ் லின், நரேன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சர்மா வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் லின். ஆனால், அடுத்த இரு ஓவர்களுக்கு நிதானமாக இருவரும் பேட் செய்தனர்.

அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் இருந்து நரேன் வானவேடிக்கை நிகழ்த்தத் தொடங்கினார். அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார் நரேன். மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் வீசிய ஸ்ரன் 5-வது ஓவரில் அடுத்தடுத்து நரேன் 2 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார்.

6-வது ஓவரை ஆன்ட்ரூ டை வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த கிறிஸ் லின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். லின் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்து 53 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து உத்தப்பா களமிறங்கினார். நரேன் அதிரடி ஆட்டம் ஆட உத்தப்பா ஒத்துழைத்தார். பவர்ப்ளே ஓவரில் கொல்கத்தா 59 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் நரேன் விளாசி, 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் உத்தப்பா தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர்,பவுண்டரி அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.

ஸ்ரன் வீசிய 11-வது ஓவரை நரேன் பொளந்து கட்டினார். இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் 17 ரன்கள் சேர்த்தனர். டை வீசிய 12-வது ஓவரில் பவுண்டரி அடித்த நரேன், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 75 ரன் சேர்த்து நரேன் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர், 9பவுண்டரி அடங்கும்) ஆன்ட்ரூ டை வீசிய அதேஓவரில் உத்தப்பாவும் 24ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

dinejpg

பந்தை சிக்ஸருக்கு விரட்டும் தினேஷ் கார்த்திக்

 

4-வது விக்கெட்டுக்கு ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக் சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் பந்துவீச்சை பொளந்து கட்டினார்கள். ஒவருக்கு பவுண்டரி, சிக்ஸர் எனப் பந்து பறந்தது. படேல் வீசிய 15-வது ஓவரில் ரஸல் 2 சிக்ஸர் விளாச, கார்த்திக் பவுண்டரி அடித்தார்.

முஜிப் வீசிய 16-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும் விளாச, ரஸல் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.

ஆன்ட்ரூ டை வீசிய 17-வது ஓவரில் கார்த்திக் ஒரு சிக்ஸரும், ரஸல் பவுண்டரியும் விளாசினார்கள். கொல்கத்தா அணி 200 ரன்களை வேகமாக எட்டியது. ஐபிஎல் போட்டியில் 200 ரன்களே மிகவேகமாக எட்டிய 3-வது அணியாகும்.

ஆன்ட்ரூ டை வீசிய அதே ஓவரில் 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ரஸல் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த ராணா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து சுப்மான் கில் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரை சதம் அடித்து ஐபிஎல் போட்டியில் முதலாவது அரை சதத்தை எட்டினார். ஸ்ரன் வீசிய கடைசி ஓவரில் 23 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய கில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். சீர்லெஸ் 6 ரன்களிலும், கில் 16 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணி தரப்பில் ஆன்ட்ரூ டை அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2008-ம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 240 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்பட்ட 4-வது அதிபட்ச ஸ்கோர் இந்த போட்டியில் கொல்கத்தா அணி சேர்த்த 245 ரன்கள் இதுவாகும்.

246 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்கை துரத்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெயில் அமைதியாக, கே.எல் ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தார். ராகுல் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடக்கத்தில் இருந்தே வெளிப்படுத்தினார்.

நரேன் வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து ராகுல் பிரமாதப்படுத்தினார். சீர்லஸ் வீசிய 3-வது ஓவரில் கெயில், ராகுல் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ரஸல் வீசிய 4-வது ஓவரில் கெயில் அடித்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

200 ரன்கள் இலக்கை விரட்டிச் செல்லும்போதெல்லாம் கெயில் சொதப்புவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 2 முறை டக் அவுட்டிலும், ஒருமுறை 10 ரன்கள், 32 ரன்கள், 76 ரன்கள் என கெயில் சொதப்பியுள்ளார். அது இந்த முறையும் தொடர்ந்தது.

ரஸல் வீசிய 6-வது ஓவரில் கெயில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த அகர்வால் டக்அவுட்டில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார்.

raghuljpg

அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல்

 

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் ராகுல் தனக்கான அதிரடியை கைவிடாமல் ஒவருக்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். 22 பந்துகளில் ராகுல் அரைசதம் அடித்தார். ரஸல் வீசிய 8-வது ஓவரில் கருண் நாயர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நரேன் வீசிய 9-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் விளாசிய ராகுல் 23 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்த ஆடவில்லை, பிஞ்ச், அஸ்வின் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. குல்தீப் வீசிய 14-வது ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்து 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 19 ரன்களிலும், டை 14 ரன்களிலும் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 22 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரன் ஒரு ரன்னிலும், சர்மா 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் ரஸல் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

http://tamil.thehindu.com/sports/article23867019.ece

Link to comment
Share on other sites

கோலி - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை எளிதில் வென்றது பெங்களூர்

 

விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #DDvRCB

 
கோலி - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை எளிதில் வென்றது பெங்களூர்
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும், ஜேசன் ராய் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
 
இறுதியில், 6-வது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன் எடுத்து அசத்தினார். விஜய் சங்கர் 21 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
 
201805122345150152_1_Pant-2._L_styvpf.jpg
 
பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், மொயின் அலி, மொகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 182 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேல், மொயின் அலி இறங்கினர். படேல் 6 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 18 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.
 
அவர்களை தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், டி வில்லியர்சும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்தனர்.
 
கோலி 40 பந்தில் 70 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மந்தீப் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் கான் 11 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், பெங்களூர் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன் எடுத்தார்.
 
டெல்லி அணி சார்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், லாமிச்சென், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvRCB

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/12234515/1162595/royal-challangers-bangalore-beat-delhi-daredevils.vpf

Link to comment
Share on other sites

வாழ்வா, சாவா போராட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன்: மும்பை இன்று மோதல்

 

 

 
13CHPMUROHITSHARMA

ரோஹித் சர்மா   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடரின் முதற்கட்ட பகுதியில் அடுத்தடுத்த தோல்விகளால் கடும் நெருக்கடியை சந்தித்த போதிலும் பிற்பகுதியில் போராடி வெற்றிகளை குவித்து வருகிறது. கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. 11 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அந்த அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

 

அதேவேளையில் ராஜஸ்தான் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பதற்காக போராடி வருகிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா என்ற போராட்டமாகவே இருக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் அணி ஏறக்குயை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடும். மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளார். இந்த சீசனில் 435 ரன்கள் குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இஷான் கிஷன் அதிரடி பார்முக்கு திரும்பியிருப்பது பேட்டிங்கை வலுப்படுத்தி உள்ளது.

எவின் லீவிஸ், ரோஹித் சர்மா, கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஜேபி டுமினி ஆகியோரும் மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் மயங்க் மார்க்கண்டே பலம் சேர்த்து வருகிறார். இதேபோல் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, மெக்லீனகன், பென் கட்டிங், கிருணல் பாண்டியா ஆகியோரும் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் மீண்டும் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். கிருஷ்ணப்பா கவுதமும் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பேட்டிங் வலுப்பெறும்.

http://tamil.thehindu.com/sports/article23870918.ece

Link to comment
Share on other sites

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

 

 
 
13CHPMUMSD

தோனி   -  AFP

13CHPMUWILLIAMSON

வில்லியம்சன்   -  AFP

Match%20summ13052018col

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று புனேவில் உள்ள மகாராஷ்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதுகிறது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வருட தடைக்குப் பிறகு திரும்பிய நிலையில் முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. அதன் பின்னர் நடப்பு சாம்பியனான மும்பை அணியிடம் தோல்வி கண்டது. தற்போதைய நிலையில் 11 ஆட்டங்களில், 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் கையில் இருக்கும் நிலையில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் கால்பதித்துவிடலாம்.

 

நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்னும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை அணி. அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்ந்திருந்தது. கடந்த 5 ஆட்டங்களில் சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி 176 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் வெற்றியை தாரைவார்த்திருந் தது.

களத்தில் எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் காணப்படும் தோனி ஆட்டம் முடிவடைந்ததும் பந்து வீச்சாளர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில் தான் வீசியிருக்க வேண்டும், அதுதான் திட்டமும் கூட. பந்து வீச்சாளர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதாவது பேக் ஆஃப் லெந்த் பந்துகளை வீசுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தவில்லை. ஃபுல் லெந்த் பந்துகளில் நிறைய பவுண்டரிகள் கொடுத்தோம். 176 ரன்கள் என்பது சரிநிகருக்கும் கூடுதலான ரன் எண்ணிக்கைதான். பந்து வீச்சாளர்கள்தான் எங்களைக் கைவிட்டனர்” என்றார்

சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் 2 ஓவர்களில் 29 ரன்களை தாரைவார்த்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதன் பின்னர் அவர் பந்துவீச அழைக்கப்படவே இல்லை. முக்கியமான கட்டத்தில் ஜாஸ் பட்லருக்கு ஷேன் வாட்சன், பிராவோ, தோனி ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் ஜாஸ் பட்லர் அதிக உயரத்துக்கு பந்தை தூக்கி அடித்த நிலையில் அதை பிடிக்க எந்த வீரரும் முன்வராததும் தோனியை விரக்தியடையச் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக 19-வது ஓவரை வீசிய டேவிட் வில்லே 19 ரன்களை தாரை வார்த்ததுதான் ராஜஸ்தான் அணியின் வெற்றியை சுலபமாக்கியது.

இதனால் சென்னை அணி இறுதி கட்ட பந்து வீச்சு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய நிலையில் உள்ளது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்கக்கூடும். பேட்டிங்கில் வழக்கம் போல ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் மட்டையை சுழற்ற தயாராக உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 90 ரன்கள் குவித்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க தவறியது. அதிலும் 14 முதல் 17 ஓவர்கள் இடைவெளியில் வெறும் 23 ரன்களே சேர்க்கப்பட்டது. இதுவே பெரிய அளவில் ரன் குவிப்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த விஷயத்திலும் சென்னை அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

மறுபுறம் 11 ஆட்டங்களில், 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடிப்பதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும். தொடக்க வீரரான ஷிகர் தவண், டெல்லி அணிக்கு எதிராக 92 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பேட்டிங்கை வலுவடையச் செய்துள்ளது. இந்த சீசனில் 493 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யூசுப்பதான் (186), மணீஷ் பாண்டே (184), ஷகிப் அல்-ஹசன் (158) ஆகியோரும் நெருக்கடியான சூழ்நிலைகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்த அளவிலான ரன்கள் சேர்த்தாலும் வெற்றியை தேடித்தரக்கூடிய வகையிலான வலுவான பந்து வீச்சு குழுவை ஹைதராபாத் அணி பெற்றி பெற்றிருப்பது அதீதபலமாக உள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு அதிக சோதனைக்கு உள்ளானது. ரிஷப் பந்தின் காட்டடியால் ஒட்டுமொத்த ஹைதராபாத் அணியின் பந்து வீச்சும் சிதைவுக்கு உள்ளாகியிருந்தது. இதில் இருந்து மீண்டெழுந்து சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கு புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ரஷித் கான், ஷகிப் அல்-ஹசன் ஆகியோரை உள்ளடக்கிய ஹைதராபாத் பந்து வீச்சு குழு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.

கடைசியாக ஏப்ரல் 22-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு இம்முறை ஹைதராபாத் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். போட்டி மாலையில் நடைபெறுவதால் உலர்ந்த ஆடுகளத்தால் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடக்கூடும் என கருதப்படுகிறது. கடந்த 5-ம் தேதி இங்கு நடைபெற்ற மாலை நேர போட்டியின் போது முதலில் பேட் செய்த பெங்களூருவை 127 ரன்களுக்குள் சென்னை கட்டுப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23870914.ece

Link to comment
Share on other sites

கோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்! - #RCBVsDD

 
 

2018 ஐபிஎல்-ல் இருந்து லீக் சுற்றுகளோடு வெளியேறும் முதல் அணி என்கிற பெருமையை பெற்றிருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். 182 ரன்கள் என்பது டெல்லி மைதானத்தில் நல்ல ஸ்கோர்தான். ஆனால், கோலி- டிவில்லியர்ஸ்  பார்ட்னர்ஷிப் போட்டதும் 180 ரன்கள் என்பதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை என்பதுபோல சுருங்கிப்போனது. #RCBVSDD

 2018 ஐபிஎல், லீக் சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாயின்ட்ஸ் டேபிளின் கட்டக் கடைசியில் இருந்த பெங்களூருவுக்கும், டெல்லி டேர்டெவில்ஸுக்கும்தான் நேற்று மேட்ச். ஐபிஎல்-லை விட்டு முதலில் வெளியேறும் அணி எது என்பதை தெரிந்துகொள்வதற்கான மேட்ச்தான் இது. பெங்களூரு வென்றது. டெல்லி தோற்றது. ரிசல்ட் சிம்பிள்தான். ஆனால் மேட்ச் சிம்பிளாக முடியவில்லை. பல சுவாரஸ்யங்களுடன் நடந்து முடிந்தது டெல்லி வெர்சஸ் பெங்களூரு போட்டி.

டெல்லி

 


மீண்டும் குழப்பிய கோலியின் ப்ளேயிங் லெவன்!

டாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கேப்டன் கோலி. இந்த ஐபிஎல் சீசனில் மூன்று மேட்சுகள் விளையாடி ஃபார்முக்கே வராத இளம் வீரர் சர்ஃபரஸ் கானை அணியில் சேர்த்திருந்தார் கோலி. மெக்கல்லம் இல்லை. அதற்கு பதிலாக மொயின் அலியை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார். வாஷிங்டன் சுந்தர், முரளி அஷ்வின் இருவரும் அணியில் இல்லை. உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மொகமது சிராஜ், கிராந்தோம் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்.
டெல்லி ஒரு மிகப்பெரிய சாதனையை நேற்று நிகழ்த்தியது. நேபாள நாட்டின் முதல் கிரிக்கெட் வீரராக அணிக்குள் இடம்பிடித்தார் சந்தீப் லாமிசேன். 17 வயதேயான லாமிசேன் லெக் ஸ்பின்னர். ப்ரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லாமிசேன் என டெல்லி ப்ளேயிங் லெவனில் நேற்று மட்டும் 18 வயதுக்குட்பட்ட மூன்று வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.


சாஹலுடன் முதல் ஓவர்!

இதுவரை பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே பெளலிங்கை தொடங்கிய கோலி, நேற்று சாஹலிடம் முதல் ஓவரைக் கொடுத்தார். ப்ரித்வி ஷா, ஜேசன் ராய் இருவருமே முதல் ஓவரில் சாஹலின் பந்துகளை சந்தித்தனர். ஆனால் அடித்துஆடவில்லை. முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ப்ரித்வி ஷாவை அவுட் ஆக்கினார் சாஹல். அதிக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷா 2 ரன்களோடு கிளம்பினார். 

ஆனால் அடுத்த ஓவர் போட்ட உமேஷ் யாதவின் பந்தில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார் ஜேசன் ராய். உமேஷ் யாதவைப் போலவே சாஹலையும் அடிக்க நினைக்க மூன்றாவது ஓவரிலேயே 12 ரன்களுடன் வீழ்ந்தார் ராய். டெல்லி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, டெல்லியின் சூப்பர் ஸ்டார்ஸ் ஷ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பன்ட்டும் கூட்டணி போட்டனர். 
இந்த மேட்சில் பன்ட்டை நம்பி ஓடி ரன் அவுட் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷ்ரேயாஸ். அதேப்போல் பன்ட்டும் ஐயரின் விக்கெட்டை காலி செய்யவில்லை. இருவருமே பவர் ப்ளே ஓவர்களில் கண்டபடி ஆடி விக்கெட்டை இழக்கவும் இல்லை. 6 ஓவர்களில் 44 ரன்களுடன் இருந்தது டெல்லி. 8வது ஓவரில் அடிக்க ஆரம்பித்தார் பன்ட். சிராஜின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர். பத்தாவது ஓவரில் ஷ்ரேயாஸின் கதையை முடிக்க நல்ல வாய்ப்பு. கோலி, டிவில்லியர்ஸ் என இருவருமே கேட்ச்சைப் பிடிக்க ஓட, இருவருக்கும் நடுவில் விழுந்தது பந்து. இறுதியில் பிடிக்க முயன்று கேட்சைவிட்டார் டிவில்லியர்ஸ். 

சாஹலையும் பன்ட் விட்டுவைக்கவில்லை. 12வது ஓவரில் அடுத்தடுத்து 1சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார் பன்ட். மொயின் அலியின் 13வது ஓவரில் லாங் ஆனில் அற்புதமாக விழுந்துபிடித்து பன்ட்டை அவுட் ஆக்கினார் டிவில்லியர்ஸ். 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார் பன்ட். ரிஷப் பன்ட் அவுட் ஆனது டெல்லியின் வேகம் முழுவதுமாக குறைந்தது. 16வது ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட் ஆனார். மிகப்பொறுமையாக ஆடி 35 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார் ஐயர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட் இங்குதான் நடந்தது. டெல்லி அணிக்காக இந்த சீஸனில் முதல் போட்டியில் விளையாடிய அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் அதகளம் செய்தார். 17 வயதேயான இந்த பஞ்சாப் பொடியன் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்து பெங்களூருவுக்கு 182 ரன்கள் என டார்கெட் செட் செய்தார். 46 ரன்களில் மிக முக்கியமானது டிம் சவுத்தியின் ஓவரில்  அடுத்தடுத்து அபிஷேக் ஷர்மா அடித்த 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும்தான்.டெத் ஓவர்களில் சொதப்பும் பெங்களூரு இந்த மேட்சிலும் கடைசி 6 ஓவரில் 65 ரன்கள் விட்டுக் கொடுத்தது.

கோலி டி வில்லியர்ஸ்
 

போட்டுப் பொளந்த கோலி- டிவில்லியர்ஸ்!

வழக்கம்போல கோலியும், டிவில்லியர்ஸும் ஆடினால் வெற்றிபெறலாம் என்கிற கோட்பாட்டின்படியே ஆடவந்தது பெங்களூரு. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி முதலில் அவுட் ஆக, அடுத்து பார்த்தீப் பட்டேல் அவுட் ஆனார். நேப்பாள நாட்டின் லாமிசேன்தான் முதல் ஓவர் வீசினார். பார்த்தீப் பட்டேலின் விக்கெட் அவருக்குத்தான் கிடைத்தது. பெங்களூருவின் முதல் சிக்ஸரை பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் அடித்தார் கோலி. 6 ஓவர்களில் 58 ரன்கள் அடித்திருந்தது பெங்களூரு. பவர்ப்ளே முடிந்தும் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என அடித்துக்கொண்டிருந்தது பெங்களூரு.   லாமிசேனின் ஓவர்களை கோலி, டிவில்லியர்ஸ் இருவருமே அடித்து ஆடவில்லை. லாமிசேன் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய கோலி ஐபிஎல் வரலாற்றில் 34வது அரைசதம் அடித்தார். கோலி-டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. 70 ரன்களில் இருக்கும்போது கோலி அவுட். ஆனால் டிவில்லியர்ஸ் பொறுமை இழக்கவில்லை. 19வது ஓவரில் டெல்லியின் ஆட்டத்தை முடித்தார் டிவில்லியர்ஸ். 37 பந்துகளில் 72 ரன்கள் அடித்து பெங்களூருவை வெற்றிபெறவைத்தார் டிவில்லியர்ஸ். 

 


பெங்களூருவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிசயங்கள் நிகழவேண்டும். கோலியின் மீது ஐபிஎல் இறக்கம் காட்டவேண்டும்!

https://www.vikatan.com/news/sports/124910-kohli-and-devillers-smashed-delhi-daredevils-rcbvsdd.html

 

 

459 ரன்கள்... 67 பௌண்டரிகள்... வெறித்தன ஆட்டத்தில் கொல்கத்தா கூல் வெற்றி! #KXIPvKKR

 
 

இந்தூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். டாஸ் வென்றதும் நம்பிக்கையாக பௌலிங் தேர்வு செய்தார் அஷ்வின். டாம் கரன் நீக்கப்பட்டு ஜேவன் சியர்லஸ் சேர்க்கப்பட, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் காம்போவாகக் களமிறங்கியது நைட் ரைடர்ஸ். 'ஷார்ட் பால் போட்டாத்தான் நரைன் அவுட்டாவார்' என்பதைத் தன் பௌலர்களுக்கு சொல்லிக்கொடுத்து அழைத்துவந்திருந்தார் அஷ்வின். ஆனால், மோஹித் ஷர்மா அதைக் கொஞ்சம் மறந்து கிறிஸ் லின் பேட்டிங் செய்யும்போது ஷார்ட் பால்களாக வீச, முதல் ஓவரிலேயே தொடர்ந்து 2 பௌண்டரிகள் அடித்து அமர்க்களமாகத் தொடங்கினார் லின். மற்றொரு எண்டில் முஜீப் பந்துவீச, இருவரும் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள். 20 பந்துகளுக்கு 20 ரன்கள் என்று மெதுவாகத் தொடங்கியிருந்த ஆட்டம், 4-வது ஓவரில் மொத்தமாக மாறியது. #KXIPvKKR

#KXIPvKKR

 

நரைன் அடித்த பந்து, பௌலர் மீஜீப்பின் கையத் தாக்கியதால், பாதியிலேயே வெளியேறினார் அந்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர். வழக்கம்போல் முந்திக்கொண்டு வந்தார் அஷ்வின். அதுவரை அமைதியாய் இருந்த நரைன் அடுத்தடுத்து சிக்ஸர், பௌண்டரி என அதிரடித்தார். அடுத்த ஓவர் ஸ்ரன்... முதல் பந்தையே ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பினார் லின். நரைனுக்கு ஸ்ரன் ஷார்ட் பால் வீச, டாப் அட்ஜாகி அதுவும் பௌண்டரி ஆனது. அந்த ஓவரில் இன்னொரு பௌண்டரி உள்பட 15 ரன்கள். 

அடுத்து பர்ப்பிள் கேப் பௌலர் டை-யை அழைத்துவந்தார் அஷ்வின். முதல் பந்தில் சிக்ஸர் அடித்தவர், அடுத்த பந்தையும் காட்டுத்தனமாகச் சுத்த, விசித்திரமான முறையில் போல்டானார் லின். அவர் சுத்தும்போது, தொடையில் பட்டு ஏறிய பந்து, கடிகாரம் போல் சுற்றிக்கொண்டிருந்த அவரது கைகளில் பட்டு ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது. கொல்கத்தா 53-1. ஆனாலும், அந்த ஓவரில் 12 ரன்கள். அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் 12 ரன்கள். 7 ஓவர்களுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது நைட்ரைடர்ஸ். 'நானே வர்றேன்' என மீண்டும் பந்துவீச வந்தார் ஆஷ். அவருக்காகவே காத்திருந்ததைப் போல் முதல் இரண்டு பந்துகளையும் பௌண்டரிக்குப் பறக்கவிட்டார் நரைன். அந்த ஓவரிலும் 11 ரன்கள். அக்சர் வீசிய அடுத்த ஓவரிலும் 11 ரன்கள். அவர் வீசிய ஷார்ட் பாலில், லாங் ஆன் திசையில் பௌண்டரி விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார் நரைன். ஐ.பி.எல் வரலாற்றில் அவரது 'ஸ்லோயஸ்ட் 50'!  அஷ்வினின் அடுத்த ஓவரை உத்தப்பாவும் வெளுத்து வாங்க 9.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது கொல்கத்தா. 

#KXIPvKKR

ஸ்ரன் ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸர், மிட்விக்கெட் திசையில் 1 சிக்ஸர், 1 பௌண்டரி என மெர்சல் காட்டினார் நரைன். எந்த பௌலரையும் விட்டுவைக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் மீண்டும் டையை அழைத்தார் அஷ்வின். மொத்த டீமும் ரன்களை வாரி வழங்க, இவர் மட்டுமே அணியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். ஒரே ஓவரில் நரைன், உத்தப்பா இருவரும் அவுட். எதிர்பார்த்ததைப் போல் ஷார்ட் பாலிலேயே வெளியேறினார் நரைன். இரு புது பேட்ஸ்மேன்கள்... ரன் ரேட் குறையும் என்று எதிர்பார்த்தால், மாறாகக் கூடியது. கார்த்திக் பௌண்டரிகளாகவும், ரஸ்ஸல் சிக்ஸர்களாகவும் டீல் செய்ய, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

தன் அணி பந்துவீசிய அழைகைப் பார்த்து கைவலியோடு மீண்டும் பந்துவீச வந்தார் முஜீப். 2 பௌண்டரி, 2 சிக்ஸர் என அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள். மீண்டும் பெவிலியனுக்கே சென்றுவிட்டார். மீண்டும் டை... ரஸ்ஸல் (31 ரன்கள்) அவுட். அந்த ஓவரிலேயே 200 ரன்களையும் கடந்திருந்தது கே.கே.ஆர். நித்திஷ் ராணா - முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இவரும் தன் பங்குக்கு பஞ்சாப்பைப் பஞ்சராக்கினார். இன்னொரு பௌண்டரி அடித்தவர், மோஹித் வீசிய நக்கில் பாலில் கேட்சானார். அடுத்து சுப்மான் கில்.. சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி. இப்படி பாரபட்சமில்லாமல் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அஷ்வின் அண்ட் கோ-வை அடித்து நொறுக்கினார்கள். 19-வது ஓவரி ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்து, இந்த சீசனில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் டி.கே. கடைசி ஓவரிலும் 16 ரன்கள்... 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது நைட்ரைடர்ஸ். ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

#KXIPvKKR

20 ஓவர்களில் 246 ரன்கள் தேவை. மிகவும் கடினம். ஆனால், களமிறங்கியிருப்பது யுனிவர்சல் பாஸ்! அவருடன் மரண ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல். அதனால் பஞ்சாப் அணியின் நம்பிக்கை குறையவில்லை. அதற்குத் தகுந்தார்போல், நரைன் வீசிய முதல் ஓவரிலயே, ராகுல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட 15 ரன்கள் கிடைத்தது. இரண்டாவது ஓவரை, இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக வீச, 8 ரன்களே எடுத்தனர் பஞ்சாப் ஓப்பனர்கள். ஓவருக்கு ஒரு பௌண்டரி அல்லது ஒரு சிக்ஸராவது வந்துகொண்டிருக்க, 5 ஓவர்கள்ல் முடிவில் 51 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். 6-வது ஓவரை வீசிய ரஸ்ஸல் பஞ்சாப்புக்கு டபுள் ஹார்ட் அட்டாக் கொடுத்தார். அவர் வீசிய ஷார்ட் பாலில் கெயில் எட்ஜாக, முன்பு கேட்ச் விட்டிருந்த கார்த்திக், இம்முறை பெர்ஃபெக்டாகப் பிடித்துவிட்டார். 3-வது வீரராக 'ஆல்ரவுண்டர்' அஷ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வந்தது அகர்வால். அடுத்த பந்தும் ஷார்ட் பால்.. தேவையில்லாமல் புல் ஷாட் அடித்து அவுட்டானார் மயாங்க். 

ஆனால், ராகுல்... நிறுத்தவேயில்லை. சியர்லஸ், ரஸ்ஸல் என யார் பந்துவீசினாலும் சிக்ஸர்களாலேயே டீல் செய்துகொண்டிருந்தார். வந்ததிலிருந்து உருட்டிக்கொண்டே இருந்த கருண் நாயர், ரஸ்ஸல் ஓவரில் முதல் முறையாகத் தூக்கியடிக்க, லாங் ஆனில் நின்றிருந்த பிரஷித் கிருஷ்ணா கேட்ச் பிடித்தார். 6 பந்துகளைச் சந்தித்து வெறும் மூன்றே ரன்களில் வெளியேறினார் கருண். மீண்டும் நரைன்... மீண்டும் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் ராகுல். அதுவரை வீசிய 11 பந்துகளில் 29 ரன்கள் கொடுத்திருந்தார் ஜீனியஸ். பேட்ஸ்மேன் நரைன் தாண்டவமாட, அமைதியாக தனக்குள் படுத்திருந்த சுழல் ஜீனியஸை திடீரென்று தட்டியெழுப்பினார். ராகுல் அவுட் (29 பந்துகளில் 66 ரன்கள்). அரௌண்ட் தி ஸ்டம்பிலிருந்து வந்து வீச, ஸ்வீப் ஆட முற்பட்ட ராகுலை ஏமாற்றி ஸ்டம்ப்பைத் தாக்கித் தகர்த்தது அந்தப் பந்து. பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு அந்த இடத்தில் பறிபோனது. 

#KXIPvKKR

சியர்லஸ், நரைன் வீசிய அடுத்த இரண்டு ஓவர்களில் முறையே 8, 4 ரன்களே வந்தன. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்திருந்தது பஞ்சாப். ராகுல் களத்திலிருந்த வரை இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும் பௌலிங் கொடுக்காமலேயே வைத்திருந்தார் டி.கே. நரைன் பந்தையே பறக்கவிடும்போது அவர்கள் பந்துவீச்சை..? 12-வது ஓவரில் முதல் முறையாக குல்தீப்பை அழைத்தார். ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 'நானும் ஆல்ரவுண்டர் தான்டா' என்று விளாசிக்கொண்டிருந்த அக்ஸர் படேலை கடைசிப் பந்தில் வெளியேற்றினார் குல்தீப். 

#KXIPvKKR

 

இந்த சீசன் முழுதும் 'இன்ஃபினிடி வார்' ஹல்க் போல் முக்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டியில் கொஞ்சம் அடித்து ஆடினார். குல்தீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், சியர்லஸ் ஓவரில் ஒரு சிக்ஸர் எனப் பறக்கவிட்டவர் 34 ரன்களில் வெளியேறினார். பேட்ஸ்மேன்களெல்லாம் வெளியேறிவிட, திடீரென்று விஸ்வரூபம் எடுத்தார் அஷ்வின். நரைன் ஓவரில் தொடர்ந்து இரண்டு பௌண்டரிகள் அடித்து அசத்தினார். ரஸ்ஸல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பௌண்டரி என மிரட்டினார். லேட் கட், உப்பர் கட் என பேட்ஸ்மேனாக கலக்கினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 45 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் வெளியேறினார். இறுதியாக பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கே.கே.ஆர் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

https://www.vikatan.com/news/sports/124904-kkr-beat-kxip-by-31-runs-to-keep-play-off-hopes-alive.html

Link to comment
Share on other sites

முதலில் தோனி, இப்போது கோலி: பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ரசிகர் உற்சாகம்

 

 
sel

டெல்லியில் நேற்று நடந்த போட்டியின் போது விராட் கோலியின் காலில் விழுந்த ரசிகர்   -  படம் உதவி: ட்விட்டர்

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியின்போது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்தில் நுழைந்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை பார்க்க வந்த ரசிகரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட் மதமாகவும், வீரர்கள் கடவுளாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்கள். அது கபில்தேவ், சச்சின் காலம் முதல் தற்போது தோனி, விராட் கோலி விளையாடும் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

   
 

சதம் அடித்தால் கொண்டாடுவதும், கோப்பையை வென்றால் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுமாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ வீரர்களை கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம், மோசமாக விளையாடும் போது அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் தவறுவதில்லை.

அதிலும் சமீபகாலமாக தோனி, கோலி ஆகிய இரு வீரர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு எழுந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் 2 ஆண்டுகளுக்குபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவதால், தோனியை மஞ்சள் நிறை ஆடையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர்.

மைதானத்தில் இறங்கி தோனியின் காலைத் தொட்டு ஆசிபெற்று ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவருடன் செல்ஃபியும் எடுத்து சென்றனர்.

இதேபோன்ற சம்பவம் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போதும் நிகழ்ந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டிலி் முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 37 பந்துகளில் 72 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

viratjpg

காலில் விழுந்த ரசிகரை எழுப்பும் கோலி

 

வழக்கத்தைக் காட்டிலும் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கோலிக்கு ஆதரவாக அரங்கிலும், ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியவாறு இருந்தனர். ஏராளமானோர் கோலியின் ஜெர்சி எண் பதித்த ஆடையை அணிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டியின் போது பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்துக்குள் 29 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர் புகுந்தார். அவரை விரட்டிப் பிடிக்க பாதுகாவலர்கள் முயன்றும் அவர் மின்னல் வேகத்தில் விராட் கோலியை அடைந்தார்.

ஏதோ செய்யப்போகிறார் என மிரட்சியில் இருந்த விராட் கோலியின் காலில் சாஷ்டாங்கமாக அந்த ரசிகர் விழுந்தார். இதைப் பார்த்த கோலி சில வினாடிகள் திகைத்துப்போனார், அந்த ரசிகரின் தோளைப்பிடித்து எழுந்திருங்கள் என்று கூறி, எழுப்பிவிட்டார்.

-kohli-fan-2jpg

கோலியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர்

 

அந்த ரசிகரிடம் சிலவினாடிகள் பேசிய கோலி, அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அந்த ரசிகர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செல்பி எடுக்க முயன்றபோது அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். அந்த ரசிகரை ஒன்றும் செய்ய வேண்டாம், விட்டுவிடுங்கள் என்று சிரித்துக்கொண்டே கோலி கூறி மீண்டும் பேட்டிங்கைத் தொடர்ந்தார். கோலியை கடவுளாக காலில் விழுந்து கொண்டாடும் இந்த சம்பவத்தை அருகே நின்று டிவில்லியர்ஸ் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

http://tamil.thehindu.com/sports/article23871658.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டியில் முதன்முதலில் தடம் பதித்த நேபாள வீரர்: விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை

 

 
nepal

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்ற நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே   -  படம்: ஏபி

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம் வீரர் முதன் முதலில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று, விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம்வீரர் சந்தீப் லாமிச்சானே. லெக் ஸ்பின்ரானா சந்தீப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2018- ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்து இருந்தது. கடந்த 10 போட்டிகளாக வாய்ப்பைப்பெறாமல் அணியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுஇருந்த லேமிச்சானேவுக்கு நேற்றைய பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

நேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் வீரரான லாமிச்சானே முத்திரைபதிக்கவும்தவறவில்லை. 4 ஓவர்கள் வீசிய லாமிச்சானே 25 ரன்கள் விட்டுக்கொடுத்து, பர்தீப் படேல் விக்கெட்டைவீழ்த்தினார்.

போட்டி முடிந்த பின் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே ஊடகங்களிடம் கூறியதாவது:

நேபாளத்தில் இருந்து வந்து முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றதைப் பெருமையாகநினைக்கிறேன். இதுபோன்ற லீக் போட்டிகள் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க உதவும். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கவும், பரபரப்பாக வைத்திருக்கவும் ஐபிஎல் போன்றலீக் போட்டிகள் அவசியமாகும்.

நேபாளத்தில் என்னைப் போன்ற ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்குமட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. கரீபியன் லீக்கில் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக இந்தஆண்டு நான் விளையாடினேன். நேபாளிகளுக்கு கிரிக்கெட் பயணம் தொடங்கி இருக்கிறது, அடுத்தடுத்துஅதிகமான வாய்ப்புகளை அவர்கள் பெறுவார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிக்கற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. எனக்கு இந்த ஒன்றரை மாதத்தில் ஏராளமானவிஷயங்களைக் கற்றேன்.

சிறந்த கேப்டன், அனுபவமான பயிற்சியாளர், நட்புடன் பழகிய சகவீரர்கள் என இனிய அனுபவமாகஇருந்தது. மைக்கேல் கிளார்க்கின் கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி எடுத்ததால், என்னை அவர்தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்தப் போட்டியில் நான் பந்துவீசிய முறை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். எனக்குஇந்தப்போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தாலும், டெல்லி அணி தோல்வி அடைந்தது சோகத்தைஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தீப் லாமிச்சனேவை ரூ.2.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23871959.ece

Link to comment
Share on other sites

விராட் கோலியை திகைக்க வைத்த டீவில்லியர்ஸின் அந்த 'ஷாட்'

 

 
kohli

டீ வில்லியல்ஸ் அடித்த ஷாட்டைப் பார்த்து பிரமிக்கும் கேப்டன் விராட் கோலி   -  படம் உதவி: ட்விட்டர்

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்வெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் டீவில்லியர்ஸின் பேட்டிங்கை கண்டு கேப்டன் விராட் கோலி மிரண்டுவிட்டார்.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தை டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து மோதியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

 

ஐபிஎல் ப்ளேஆப் சுற்றுக்கு செல்ல இந்த வெற்றி மிக முக்கியம் என்பதால், கேப்டன் விராட் கோலியும், முக்கிய வீரர் டீ வில்லியர்ஸும் மிகுந்த பொறுப்புடனும், அதேசமயம், அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

3-வது விக்கெட்டுக்கு இருவரும் 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் விராட் கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 37 பந்துகளில் 72 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்தபின், பெவிலியனில் அமர்ந்து டீவில்லியர்ஸின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, டெல்லி வீரர் டிரன்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரில் டீவில்லியர்ஸ் அடித்த ஷாட்டைப் பார்த்து விராட் கோலி திகைத்து அங்கிருந்து சத்தமிட்டார்.

devillersjpg

ஆப் சைடு சென்ற பந்தை தேடிச் சென்று அடித்து சிக்ஸருக்கு பறக்கவிட்ட டீவில்லியர்ஸ்

 

டிரன்ட் போல்ட் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக ஆப்சைடுக்கு விலகிச் சென்றது. ஆனால், ஆப்சைடுவரை சென்ற டீவில்லியர்ஸ் அந்த பந்தை மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அபாரமான சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதை பெவிலியனில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி திகைத்து சத்தமிட்டு டீவில்லியர்ஸ்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

போட்டியின் வெற்றிக்கு பின் விராட் கோலி ஊடகங்களிடம் கூறுகையில், டீவில்லியர்ஸ் களமிறங்கும்போதே இந்த போட்டியில் நாம் வென்றாக வேண்டும் என்னிடம் கூறிக்கொண்டே வந்தார். அதற்குஏற்றார்போல் சரியான நேரத்தில் வெற்றி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

டெல்லி அணிக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதைப் பார்த்துவியப்பாக இருக்கிறது. பந்துவீச்சை நாம் முதலில் தேர்வு செய்யும் போது, அடுத்து பேட்ஸ்மென்களுக்கு மிகுந்த பொறுப்பு இருப்பது அவசியமாகும்.

எங்கள் அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. அதேசமயம், பேட்டிங்கில் டீவில்லியர்ஸ் சிறப்பாகச் செயல்பட்டார். இன்னும் சில ஓவர்களுக்கு முன்பே ஆட்டத்தை முடித்து, ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ள முயன்றோம். இருந்தாலும் வெற்றி கிடைத்தது இந்த நேரத்தில் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23872171.ece

`ஸ்பின்னருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர்!’ - ஹைதராபாத்துக்குச் செக் வைக்குமா தோனியின் வியூகம் #CSKvsSRH

 
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணி வீரர்கள்

 

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இவ்விரண்டு அணிகள் மோதும் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளுமே தலா 11 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 9 வெற்றிகளும், சென்னை 7 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி ஏற்கெனெவே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், முதலிடத்தைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. அதேநேரம், சென்னை அணி, இந்த போட்டியில் வெற்றிபெறும் சூழலில் முதலிரண்டு இடங்களில் லீக் சுற்றை நிறைவு செய்யும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளும். ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வென்ற 2 அணிகளில் சென்னை அணியும் ஒன்று. 

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இரு அணிகளிலுமே தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் சுழற்பந்துவீச்சாளர் கரண் ஷர்மாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஹைதராபாத் அணியில் யூசுப் பதானுக்குப் பதிலாக, தீபக் ஹூடா பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/124920-ipl-2018-csk-won-the-toss-and-choose-to-bowl-first-against-srh.html

Link to comment
Share on other sites

அம்பதி ராயுடுவின் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை

 

அம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை துவம்சம் செய்து 2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvSRH

 
அம்பதி ராயுடுவின் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை
 
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார்.

201805131936406909_1_rayudu001-s._L_styvpf.jpg

அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.

201805131936406909_2_watson1-s._L_styvpf.jpg

18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோரை சமன் செய்தது. அடுத்த பந்தில் டோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/13193641/1162722/IPL-2018-chennai-super-kings-beats-sunrisers-and-reached.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயுடு 100 அடிப்பதற்காக தோனி விட்டுக்கொடுத்து விளையாடிய விளையாட்டையும் பார்த்தோம்.  இருவரும் பிட்ஸில என்ன நடிப்பு  நடிச்சாங்கள்....சிவாஜி பத்மினி எங்கினேக்க ......!  tw_blush:

realy he is gentleman.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.