Jump to content

Recommended Posts

ஸ்பின்னர்ஸ் vs ஸ்பின்னர்ஸ்... சென்னையுடன் ஃபைனல் விளையாடப் போவது யார்?! #SRHvKKR

 
 

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளப் போவது யார் என்பதை முடிவு செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கவுள்ளது. முதல் குவாலிஃபையரில் சென்னையிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹோம் டீம் கொல்கத்தா நைட்ரைடர்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது. #SRHvKKR

இதற்கு முன்பு ஈடன் கார்டனில் நடந்த எலிமினேட்டரில் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்கள். பழைய ஈடன் ஆடுகளத்தைப் போல், அந்தப் போட்டியின்போது ஆடுகளம் சுழலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இரண்டு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் நிரம்பியுள்ள நிலையில், இந்தப் போட்டி இரு பௌலிங் யூனிட்டுகளுக்கும் இடையிலான யுத்தமாகவே இருக்கும். 

 

#SRHvKKR

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்திருந்தபோதும், சுழற்பந்துவீச்சாளர்களின் 11 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் ஈஷ் சோதியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நைட்ரைடர்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். சன்ரைசர்ஸ் அணியில் ரஷீத் கான், ஷகிப் அல் ஹசன் என இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பதால், கொல்கத்தாவின் பேட்டிங் ஆர்டரை ஒருகை பார்க்கலாம். ஓப்பனர் கிறிஸ் லின் சுழலில் திணறக்கூடியவர் என்பதால், ஷகிப்பை வில்லியம்சன் பவர்பிளேவின்போதே பயன்படுத்துவார். 

சுழலுக்கு ஒத்துழைப்பு தராத மைதானங்களிலேயே ரஷீத் வித்தை காட்டுவார். ஆடுகளம் கடந்த போட்டியைப் போல் இருந்தால், அந்த ஆஃப்கன் வீரரைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் கொல்கத்தாவின் சுழல் கூட்டணியும் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க பயங்கர உக்கிரமாக மாறிக்கொண்டிருக்கிறது. சுனில் நரைன் கூட சற்று ஓய்ந்துவிட்டார், ஆனால், குல்தீப் - பியூஷ் சாவ்லா கூட்டணி மிரட்டல் ஃபார்மில் இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாகவே குல்தீப் அசத்திக்கொண்டிருக்கிறார். அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறுவது கண்கூடாகத் தெரிகிறது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ஓப்பனர்களால் டார்கெட் செய்யப்பட்ட நரைன் எப்படியும் இன்று மீண்டுவர முயற்சி செய்வார். ஷிகர் தவான், கோஸ்வாமி என இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், பவர்பிளேவில் நித்திஷ் ராணாவும் ஓரிரு ஓவர்கள் சுழலில் மிரட்டக்கூடும்.

பேட்டிங்கில் ஷிகர் தவான் எப்போது அடிப்பார், எப்போது சொதப்புவார் என்று அவருக்கே தெரிவதில்லை. மனீஷ் பாண்டே, யுசுஃப் பதான் இருவரும் 10 போட்டிக்கு ஒரு போட்டி வீதம்தான் அடிப்பார்கள் போல. மொத்த பேட்டிங் யூனிட்டின் பாரத்தையும் கேப்டன் வில்லியம்சன் ஒருவரே சுமக்கவேண்டியுள்ளது. அவர் அடித்தால் ரன் வரும்... இல்லையேல் இல்லை. சென்னையுடனான போட்டியில் ஒரு ஷார்ட் பாலில் ஆடிய தவறான ஷாட் அவர் விக்கெட்டைக் காவு வாங்கியது. கொல்கத்தாவின் அபாயகரமான சுழல் கூட்டணியை எதிர்த்து விளையாடும்போது எந்தத் தவறும் செய்யாமல் இருப்பது அவசியம்.  

#SRHvKKR

ஹைதராபாத்தைவிட கொல்கத்தா அணி கொஞ்சம் பலமாகக் காணப்படுகிறது. தினேஷ் கார்த்திக் தவிர யாரும் கன்சிஸ்டெட்டாக விளையாடவில்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் ஆடிவிடுகிறார்கள். பவர்பிளேவில் நரைன் 200-க்கும் மேலான ஸ்ட்ரைக் ரேட்டில் 20-25 ரன்கள் எடுத்தாலும் அது அவர்களுக்கு லாபம்தான். அவர் அடிக்கத் தவறினால் கிறிஸ் லின் எப்படியேனும் தேறிவிடுகிறார். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடிய உத்தப்பா, பெரிய ஆட்டங்களில் சோபிப்பார் என்று எதிர்பார்க்கலாம். 19 வயது சுப்மான் கில், அவரால் முடிந்த மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். எல்லோரும் சோபிக்கத் தவறினால் ரஸ்ஸல் வந்து பொளந்துவிடுகிறார். நித்திஷ் ராணா மட்டும் இன்னும் தன்மீதான எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. 

 

இரண்டு அணிகளின் பந்துவீச்சும் இந்த ஆடுகளத்தில் எடுபடும் என்பதால், அதிக ரன்களை இந்தப் போட்டியில் எதிர்பார்க்க முடியாது. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களைக் கடந்துவிட்டாலே வெற்றி பெறுவது எளிதாகிவிடும்.

https://www.vikatan.com/news/sports/125935-ipl-2018-qualifier-preview.html

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 
அ-அ+

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvKKR

 
 
 
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

201805252056187591_1_KKRvSRH001-s._L_styvpf.jpg

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/25205618/1165679/surisers-hyderabad-175-runs-targets-to-Kolkata-Knight.vpf

6/0 (0.6/20 ov, target 175)
Link to comment
Share on other sites

நான்கு அரை சதங்கள் எடுத்தும் ஆட்ட நாயகன் விருது வாங்காத பிரபல சிஎஸ்கே வீரர்!

 

 
raina_dhoni1xx

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணியில் ராயுடு, வாட்சன், தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். இவர்கள் மூவரும் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.

அதேசமயம் சுரேஷ் ரெய்னாவும் 400 ரன்களுக்கு அதிகமாக எடுத்து அணிக்குப் பங்களித்துள்ளார். ராயுடு, வாட்சன், தோனி போல அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிகளுக்குப் பெரிதாக உதவாமல் போனாலும் ரெய்னாவின் பங்களிப்பை எவ்விதத்திலும் குறை சொல்லமுடியாது.

ஐபிஎல் 2018 - அதிக ரன்கள் - சிஎஸ்கே

ராயுடு - 586 ரன்கள்
தோனி - 455 ரன்கள்
வாட்சன் - 438 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 413 ரன்கள்

அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களில் ரெய்னா 4-ம் இடத்தைப் பிடித்தாலும் சராசரி ரன்களில் ஷேன் வாட்சனை விடவும் ரெய்னாவே முன்னிலையில் உள்ளார். வாட்சனின் சராசரி - 31.28. ரெய்னா - 37.54.

இந்த வருடம் இதுவரை ஆட்ட நாயகன் விருது ஒருமுறை கூட ரெய்னாவுக்கு வழங்கப்படவில்லை என்பது விநோதமே. காரணம், சிஎஸ்கே அணியில் அதிக அரை சதங்கள் எடுத்தும் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.

மற்ற எல்லா சிஎஸ்கே வீரர்களை விடவும் ரெய்னா முன்னிலையில் இருப்பது அதிக அரை சதங்களில்தான். 14 ஆட்டங்களில் 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக ராயுடு 1 சதம் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். தோனியும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

ஆனால், சிக்ஸ் அடிப்பதில் மற்ற வீரர்களை விடவும் மிகவும் பின்தங்கியுள்ளார் ரெய்னா.

ஐபிஎல் 2018 - அதிக சிக்ஸர் - சிஎஸ்கே

ராயுடு - 33
தோனி - 30
வாட்சன் - 27
ரெய்னா - 11

2008 முதல் ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ரெய்னா, அனைத்து வருடங்களிலும் குறைந்தபட்சம் 350 ரன்களாவது எடுத்துவிடுகிறார். இந்தப் பெருமை ஐபிஎல்-லில் வேறு எந்த வீரருக்கும் கிடையாது.

http://www.dinamani.com/sports/special/2018/may/25/suresh-raina-2926706.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்

 
அ-அ+

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி. #IPL2018 #KKRvSRH

 
 
ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்
 
ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து அவுட்டானார்.
 
தொடர்ந்து, சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
கொல்கத்தா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஷிவம் மாவி, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201805252308265476_1_rana-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, 175 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ரானா 22 ரன்னிலும், ராபின் உத்தப்பா 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 
 
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சித்தார்த் கவுல், பிராத்வைட் ஆகியோர் 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவை வீழ்த்திய ஐதராபாத் அணி, ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. #IPL2018 #KKRvSRH

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/25230826/1165695/sun-risers-hedearbad-beat-kolkatta-kinght-riders-by.vpf

Link to comment
Share on other sites

இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா? ஐதராபாத்துடன் நாளை பலப்பரீட்சை

 
அ-அ+

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH

 
 
 
 
இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா? ஐதராபாத்துடன் நாளை பலப்பரீட்சை
 
மும்பை:

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.

இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

கடந்த 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

‘பிளேஆப்’ சுற்று கடந்த 22-ந் தேதி தொடங்கியது. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதனால் ராஜஸ்தான் வெறியேறியது.

‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் ஐதராபாத் அணி 14 ரன்னில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி வெளியேற்றப்பட்டது.

இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை (27-ந்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. ‘லீக்‘ போட்டியில் 5 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. 9 போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஐதராபாத்தை 3 தடவை வீழ்த்தி இருந்தது. 2 ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் சென்னை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றே வெற்றி பெற்றது. டுபெலிசிஸ் மற்றும் பின்வரிசை வீரர்களான தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்கள். இதனால் இறுதிப் போட்டியில் கவனமுடன் விளையாட வேண்டும்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் 4 முறை (2008, 2012, 2013, 2015) தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எதிரான நாளைய இறுதிப்போட்டியில் மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும்.

பேட்டிங்கில் அம்பதி ராயுடு (585 ரன்), கேப்டன் டோனி (455ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் ஜடேஜா, பிராவோ மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் நிகிடி நன்றாக செயல்படுகிறார்.

மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தால் கோப்பையை வெல்லலாம். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் (688 ரன்), தவான் (471 ரன்), மனீஷ் பாண்டே (286 ரன்), யூசுப்பதான் (215 ரன்), சகிப் அல்-ஹசன் (216 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் ரஹீத்கான் (21 விக்கெட்), சித்தார்த் கவுல் (21 விக்கெட்), புவனேஷ்வர் குமார், சந்திப் சர்மா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26103216/1165754/chennai-super-kings-vs-sunrisers-hyderabad-final-match.vpf

Link to comment
Share on other sites

தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை- தினேஷ் கார்த்திக் வருத்தம்

 
அ-அ+

ஐதராபாத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.#IPL2018 #KKR #DineshKarthik

 
தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை- தினேஷ் கார்த்திக் வருத்தம்
 
கொல்கத்தா:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை இழந்தது.

இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டனும், சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றி விட்டது.
 
நான், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார்.
 
201805261205081757_1_djs6dcnd._L_styvpf.jpg

இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். இது அணிக்கு சிறப்பாக அமையும்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.#IPL2018 #KKR #DineshKarthik

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26120508/1165787/Dinesh-Karthik-says-Unable-to-digest-KKR-defeat.vpf

Link to comment
Share on other sites

சன்ரைசர்ஸை பைனலுக்கு அழைத்துச் சென்ற ராஷித்கான்: தினேஷின் கடைசிநேர தடுமாற்றம் ஏன் ?

 

 
rashid

கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்த ராஷித் கான்   -  படம்உதவி: பிசிசிஐ ட்விட்டர்

டிவில்லியர்ஸாக சில நிமிடங்கள் மாறிய ராஷித்கானின் காட்டடி பேட்டிங், திணறவைக்கும் துல்லியமான லெக் ஸ்பின், கூக்ளி வீச்சு, 2 அபாரமான கேட்சுகள், ஒரு ரன்அவுட் ஆகியவை சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த முக்கியத்துவம் வாய்ந்த ப்ளே-ஆஃப் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ரன்களில் தோற்கடித்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2-வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

     
 

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஐபிஎல் சாம்பியனை இறுதி செய்யும் பைனலில் 7 முறை பைனலுக்கு வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் அணி கடந்த 3 ஆண்டுகளில் 2-வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும், கடந்த ஆண்டு ப்ளே-ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து 4-வது இடம் பெற்றது. அந்த தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக்கொண்டது.

லீக் ஆட்டங்கள் அனைத்திலும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட சன்ரைசர்ஸ் வீரர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் சொதப்பிவிட்டனர். குறிப்பாக விர்திமான் சாஹா பேட்டிங்கில் ஃபார்மிலேயே இல்லை, அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியதை என்ன வென்று சொல்வது?.

இந்த ஐபிஎல் தொடரில் கழித்துக்கட்ட வேண்டிய விக்கெட் கீப்பர் பட்டியலில் சாஹா வைத்திருக்கும் போது எந்த துணிச்சலில் அவரை களமிறக்கினார்கள் எனத் தெரியவில்லை.

லீக் ஆட்டங்களில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னாக திகழ்ந்த வில்லியம்ஸன், குல்தீப்பின் கூக்ளிக்கு சட்டென இரையானது வேதனை. தவான், சஹிப் அல்ஹசன், தீபக் ஹூடா ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்கு விக்கெட்டை நிலைப்படுத்தி ரன்களைச் சேர்த்தனர்.

சன்ரைசர்ஸ் அணியில் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது இந்த போட்டியில் பட்டவர்த்தனம் ஆகியுள்ளது. வில்லியம்ஸனுக்கு பின் நிலைத்து விளையாடக் கூடியவர்கள் எந்த வீரரும் இல்லை. வார்னர் இல்லாத குறையை வில்லியம்ஸன் போக்கினாலும், நடுவரிசையை ஸ்திரமான பேட்டிங் கொண்டதாக மாற்றுவது பைனலுக்கு கைகொடுக்கும்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விலைபோகாத வீரர் பட்டியலில் யூசுப் பதான் இடம் பெறுவதை இந்த சீஸனில் அவர் உறுதி செய்துவிட்டார்.பேட்டிங் மறந்துவிட்டதோ என்று கேட்கும் அளவுக்கு இந்த தொடரில் சொதப்பிவிட்டார்.

சன்ரைசர்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக ஒளிர்ந்தவர் ராஷித்கான் மட்டுமே. கடைசி நேரத்தில் களத்துக்கு தனது பேட்டிங்கில் அனல் பறக்கவிட்டார். அவரின் பேட்டிங்கின் அதிரடியில் டிவில்லியர்ஸின் சாயலும், பேட்டிங்கிஸ் ஸ்டைலில் சேவாக்கின் பிரதிபலிப்பும் இருந்ததைக் காண முடிந்தது.

rasijpg

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ராஷித்கான்

 

10 பந்துகளில் ராஷித்கான் சேர்த்த 34 ரன்களே சன்ரைசர்ஸ் அணியை கடைசி நேரத்தில் கவுரவமான ஸ்கோர் வர காப்பாற்றியது. 2 பவுண்டரிகளும், 4 அபாரமான சிக்ஸர்களும் அடித்து அணியை கரைசேர்த்தார். இந்த 34 ரன்கள் மட்டும் சன்ரைசர்ஸ் அணி சேர்க்காமல் இருந்திருந்தால், இந்நேரம் கொல்கத்தாவிடம் வெற்றியைத் தாரைவார்த்துவிட்டு நடையை கட்டி இருக்க வேண்டியது இருக்கும்.

அதிலும் ராஷித்கான் கடைசி ஓவரின், கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர் கடந்த 1979-ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் விவியன் அடித்த சிக்ஸரா நினைவுபடுத்தியது.

பந்துவீச்சில் லீக் ஆட்டங்களில் இருந்து மிரட்டிவரும் ராஷித்கான் இந்த போட்டியிலும் அற்புதமாகச் செயல்பட்டார்.

குறிப்பாக இன்றைய போட்டியில் கிறிஸ் லின், உத்தப்பா, ரஸல் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் கடைசி ஓவரில் இரு அற்புதமான கேட்சுகளைப் பிடித்து ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தார் ராஷித்கான். ராணாவின் விக்கெட்டை துல்லியமான எறிதல் மூலம் ரன் அவுட் ஆக்கியது என ராஷித்கான் இந்த போட்டியில் ஹூரோவாக ஜொலித்தார்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பைனலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு ராஷித்கானின் பந்துவீச்சு சிம்மசொப்னமாக இருக்கும். வலிமையான பேட்ஸ்மன்கள் ராஷித்திடம் வீழ்வது உறுதி. அடுத்த மாதம் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அணியில் இடம் பெறும் ராஷித்கான், இந்திய அணிக்கும் அவரின் லெக்ஸ்பின் பெரும் குடைச்சலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மிகக்குறைந்த வயதில் வேர்ல்டு கிளாஸ் பந்துவீச்சாளராக ராஷித்கான் மிளிர்வது அற்புதமானதாகும். இந்தப் போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ராஷித்கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த முறை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தனது பணியை சிறப்பாகச் செய்து இருக்கிறார். தனது அணியை முதல் முயற்சியிலேயே ப்ளே-ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்துள்ளது பாராட்டுக்குரியது.

லீக் ஆட்டங்களில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தினேஷ் கார்த்திக் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் சிறிது சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால், அணி இறுதிப்போட்டிக்குச் சென்று இருக்கும்.

கார்த்திக் கடைசி நேரத்தில் கேப்டன்ஷிப்பில் இப்படி சொதப்புவார் என எதிர்பார்க்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத வேகப்பந்துவீச்சாள பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாகும். அதிலும் கடைசி ஓவரில் பந்துவீசச் செய்து ரன்களை வாரிக் கொடுக்க வைத்துவிட்டார். (உஷ் கண்டுகாதீங்க தருணத்தை நினைவுபடுத்துகிறது)

கொல்கத்தா மைதானத்தில் 2-வதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் காற்றின் ஈரப்பதம் காரணமாக நன்றாக பந்தை ஸ்விங் செய்யவும், சுழலவும் வைக்க முடியும், பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அப்படி இருக்கும், போது டாஸ்வென்ற கார்த்தி ஏன் 2-வது பேட்டிங்கை தேர்வு செய்தார் எனத் தெரியவில்லை.

அனுபவம் மிகுந்த ரஸலுக்கு ஒரு ஓவர் மட்டுமே தரப்பட்டது, பியூஸ் சாவ்லாவுக்கு 3 ஓவர்கள் மட்டுமே தரப்பட்டு இருந்தது. இவர்களுக்கு தலா ஒரு ஓவர் கூடுதலாக வழங்கி இருந்தால், ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். (இந்த கேள்விகளும் உஷ் கண்டுகாதீங்க தருணத்தை நினைவு படுத்துகிறது) சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஆடுகளம் ஒத்துழைக்கும் போது, பியூஸ் சாவ்லாவுக்கு கூடுதலாக ஒரு ஓவர் கொடுத்திருக்கலாமே.

பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 56ரன்கள் வாரிவழங்கி வள்ளலாகி மாறிவிட்டார். இதில் 3 வைடுகள் வேறு வீசி இருக்கிறார் அதையும் சேர்த்தால் மொத்தம் 59 ரன்களாகும்.

கொல்கத்தா அணியின் தோல்விக்கு, நடுவரிசையில் பேட்டிங் சொதப்பியது என்றால், பெரும்பகுதி காரணம் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சுதான் என்பதில் சந்தேகமில்லை. இவரின் கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், போட்டியின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும்.

மற்றவகையில் பிரசித் கிருஷ்ணாவைத் தவிர பியூஸ் சாவ்லா, சுனில் நரேன், குல்தீப் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக், உத்தப்பா, ரஸல் ஆகியோர் நிலைத்து விளையாடாதது இன்றைய தோல்விக்கு முக்கியக்காரணமாகும். அனேகமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து ரஸலை கைகழுவிவிட்டாலும் வியப்பில்லை. இவரும் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் சேர தயாராகிவிட்டார்.

தொடக்கத்தில் விர்திமான் சாஹாவுக்கு தினேஷ் கார்த்திக் ஒரு கேட்சை கோட்டைவிட்டதும், அவரை நிலைத்துவிளையாட வைக்க துணை சென்றுவிட்டது.

கார்த்திக் இந்த போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு பிரசித்கிருஷ்ணாவை கடைசியில் பந்துவீசச் செய்ததுதான். மற்றவகையில் கிறிஸ் லின், சுனில் நரேன் இந்த தொடர் முழுவதும் தங்களுக்குரிய பணியைச் சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்.

இந்த தோல்வி மூலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக ப்ளே-ஆஃப் சுற்றோடு கொல்கத்தா அணி வெளியேறியது. கடந்தஆண்டும், இந்த ஆண்டும் 3-வது இடத்தையும், 2016-ம்ஆண்டில் 4-வது இடத்தையும் கேகேஆர் அணி பிடித்து இருக்கிறது.

டாஸ்வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

சாஹா, ஷிகர்தவான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும், கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே திணறி பந்தைத் தடவினார்கள். மவி வீசிய 3-வது விர்திமான் சாஹாவுக்கு தினேஷ் கார்த்திக் ஒரு கேட்சை தவறாகக் கணித்து கோட்டை விட்டார். இந்த கேட்ச் பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடித்த தவான் 34 ரன்களில் குல்தீப் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 45 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து வந்த வில்லியம்ஸனும், 3 ரன்களில் குல்தீப்பின் அதே ஓவரில் கூக்ளி பந்துவீச்சுக்கு இரையாகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த சஹிப்அல்ஹசன், சாஹாவுடன் இணைந்து விளையாடினார். பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத சாஹா ரன் சேர்க்க சிரமப்பட்டார். இருந்தும் அவ்வப்போது சில பவுண்டரிகள் சாத்தினார்.

dinesh%20sagajpg

சாஹாவை ஸ்டெம்பிங் செய்த தினேஷ்கார்த்திக்

 

11-வது ஓவரில் சாவ்லா ஓவரில் சாஹா 35 ரன்கள் சேர்த்திருந்த போது தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹுடா 19 ரன்கள், சஹிப் அல்ஹசன் 28 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 3 , பிராத்வெய்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 17.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து திணறியது சன்ரசைர்ஸ் அணி. ஆனால், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஷித் கான் தனக்கு கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டார். இவரின் ஒவ்வொரு ஷாட்டும் டீவில்லியல்ஸையும், சேவாக்கையும் நினைவுபடுத்தியது.

மவி வீசிய 19-வது ஓவரில் ராஷித்கான் இரு சிக்ஸர்களையும், பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து மிரளவைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஷித் கான் 10 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும், புவனேஷ்குமார் 5 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சாவ்லா, நரேன், மவி தலாஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணியின் நரேன், லின் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அகமது வீசிய 2-வது ஓவரில் லின் ஒரு சிக்ஸரும், நரேன் பவுண்டரியும் விளாசினர். புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் நரேன் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.

4-வது ஓவரை வீச கவுல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2-வது பந்தில் நரேன் 26 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ராணா, அதிரடியாக இரு சிக்ஸர்களை ராணாவின் 5-வது ஓவரில் விளாசினார்.

6-வது ஓவரில் இருந்து ராஷித்கான் பந்துவீச அழைக்கப்பட்டவுன் கொல்கத்தாவின் ரன்வேகம் மட்டுப்பட்டது. ஆனால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்பங்களில் லின் பவுண்டரிகளையும், சிக்ஸர்களும் அடித்தார்.

நிதானமாக பேட் செய்த ராணா 22 ரன்களில் ராஷித்கானால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த உத்தப்பா 2 ரன்னில் ராஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் சஹிப் அல்ஹசன் பந்துவீச்சில் வெளியேறினார்.

sunjpg

வெற்றியைக் கொண்டாடும் சன் ரைசர்ஸ் அணியினர்

 

கடைசி வரிசையில் களமிறங்கிய ரஸல் 3 ரன்னில் ராஷித்திடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பியூஸ் சாவ்லா 12 ரன்னிலும், சிவம் மகி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஆளாகப் போராடிய சுப்மான் கில் 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இவர் வெளியேறியவுடன் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது.

குல்தீப் யாதவ், கிருஷ்ணா ரன் ஏதும் சேர்க்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணித் தரப்பில் ராஷித்கான் 3 விக்கெட்டுகளையும், கவுல், பிராத்வெய்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

http://tamil.thehindu.com/sports/article23997709.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

 
 அ-அ+

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

 
 
 
 
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை
 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 சீசன் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு முறை சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது. 
 
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி முதல் பிளே-ஆப் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது ஏழாவது முறையகும். இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள இறுதிப் போட்டிகள் குறித்து காணலாம்:
 
முதல் சீசன் (2008):
 
2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. 
 
அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
 
தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னே பவுண்டரி அடித்து  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.
 
201805261711316933_1_IPL-2008._L_styvpf.jpg
 2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்
 
2009-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
 
 
மூன்றாவது சீசன் (2010):
 
மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.
 
சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சென்னை அணி, மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
 
தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
 
201805261711316933_2_ipl-2010._L_styvpf.jpg
2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்
 
நான்காவது சீசன் (2011):
 
4-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது.
 
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. 
 
201805261711316933_3_ipl-2011._L_styvpf.jpg
2011 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்
 
ஐந்தாவது சீசன் (2012):
 
5-வது சீசன் தொடரில் லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை நான்காவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும். 
 
பிளே-ஆப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. பிளே-ஆப் குவாலிபையர்-2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
 
இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பவுண்டரிகளை அடித்து  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.
 
201805261711316933_4_ipl-2012._L_styvpf.jpg
2012 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
ஆறாவது சீசன் (2013):
 
இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.
 
முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.
 
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம்  சென்னை அணி தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது.
 
201805261711316933_5_ipl2013._L_styvpf.jpg
2013 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
 
2014-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
 
 
எட்டாவது சீசன் (2015):
 
இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
 
முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
 
இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.
 
201805261711316933_6_ipl-2015._L_styvpf.jpg
2015 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
 
அடுத்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், சென்னை அணி பங்குபெறவில்லை.
 
 
11-வது சீசன் (2018):
 
இதையடுத்து இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
முதல் பிளே-ஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.
 
201805261711316933_7_ipl-2018._L_styvpf.jpg
 
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏற்கனவே மூன்று முறை தோற்கடித்துள்ளது. இதற்கு ஐதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது நாளை தெரிந்துவிடும். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26171131/1165871/Chennai-Super-Kings-road-to-the-IPL-finals.vpf

Link to comment
Share on other sites

`சென்னையில் விளையாடாதது துரதிருஷ்டவசமானது!’ - தோனி நெகிழ்ச்சி

 
 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடதது துரதிருஷ்டவசமானது என சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்தார். 

தோனி

 

Photo Credit: Twitter/@ChennaiIPL

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதும் 4வது போட்டி இதுவாகும். இதுவரை நடந்த 3 போட்டிகளிலுமே சென்னை அணியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. 

இந்தநிலையில், மும்பையில் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். மேலும், கோப்பையுடனும் அவர்கள் போஸ் கொடுத்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ``இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் களமிறங்கியதால், ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சிமயமாக இருந்தோம். ஆனால், ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் புரபஷனலாக விளையாடத் தொடங்கினோம். 

Dhoni1_21509.jpg

\Photo Credit: Twitter/@ChennaiIPL

 

சென்னை மைதானத்தில் விளையாடதது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், அங்கு ஒரு போட்டியிலாவது விளையாட முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால், அந்த ஒரு நிகழ்விற்காக ரசிகர்கள் நீண்டநாள்களாகக் காத்திருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்தாலும், சென்னை அணிக்கான ரசிகர்கள் பெருகிக் கொண்டே இருந்தனர். சென்னை அணி மீண்டும் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் விளையாடதது துரதிருஷ்டவசமானது. டி20 போன்ற பார்மாட்டில் அணிக்குத் தேவைப்படும்போது ஒவ்வொரு வீரரரும், தங்களை பொறுப்பை உணர்ந்து விளையாடுவது அவசியம். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது அவசியம்தான். ஆனால், தனி ஒரு வீரராக எதிரணியின் வெற்றியைத் தட்டிப் பறித்து, மற்ற வீரர்களின் சுமையைக் குறைப்பதும் முக்கியமானது’’ என்று பேசினார். 

https://www.vikatan.com/news/tamilnadu/126036-disappointed-that-we-couldnt-play-matches-in-chennai-says-ms-dhoni-in-mumbai.html

Link to comment
Share on other sites

நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன் - ஷாருக் கான்

 

கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளரான ஷாருக் கான் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். #IPL2018 #KolkataKnightRiders #ShahRukhKhan

 
நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன் - ஷாருக் கான்
 
 
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
இந்நிலையில், கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான், கொல்கத்தா வீரர்களுக்கு ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
நான்றாக இருங்கள். எனது விமான டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும், இருப்பினும் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது. நீங்களே உங்களை பெருமைபட செய்துள்ளிர்கள். அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள். உங்களை எனக்கு பிடிக்கும், நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன். அனைத்து பொழுதுபோக்குக்கும், மிகச்சிறப்பான தருணங்களுக்கு நன்றி. நாம் ஒரு மிகச்சிறந்த அணி
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #IPL2018 #KolkataKnightRiders #ShahRukhKhan

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26201833/1165896/I-am-smiling-tweets-Shsh-Rukh-Khan.vpf

Link to comment
Share on other sites

இறுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்: சென்னைக்குச் சாதகமாக உள்ள புள்ளிவிவரம்!

 

 
win_hyd1

 

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன.

இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் இறுதிச்சுற்றில் மோதுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு ஐந்துமுறை இதுபோல நடைபெற்றுள்ளன.

இறுதிச்சுற்றில் மோதிய முதலிரண்டு அணிகள்

பெங்களூர் v சென்னை, 2011
சென்னை v மும்பை, 2013
பஞ்சாப் v கொல்கத்தா, 2014
சென்னை v மும்பை, 2015
மும்பை v புணே, 2017
ஹைதராபாத் v சென்னை, 2018

இதில் 2017-ல் மட்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை, ஐபிஎல் கோப்பையையும் வென்றது. மற்ற ஐந்து வருடங்களிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணிகளே கோப்பையை வென்றுள்ளன.

இதே நிலைமை இந்த வருடமும் தொடருமா? சென்னை ஐபிஎல் கோப்பையை வெல்லுமா? அல்லது மும்பையின் சாதனையை ஹைதராபாத்தும் தொடருமா?

http://www.dinamani.com/sports/special/2018/may/26/teams-finishing-top-two-in-the-ipl-finals-2927301.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றிவாய்ப்பு?

 
 

மும்பை வாங்கடே மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள 11-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

யாருக்கு வெற்றிவாய்ப்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று தொடங்கிய 11-ஆவது ஐபிஎல் தொடரில் 'லீக்' ஆட்டங்கள் மே 20-ஆம் தேதியுடன் முடிந்தன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து 'பிளேஆஃப்' சுற்றுக்கு முன்னேறின.

இறுதியாட்டத்துக்கு தகுதி பெற நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கடந்த 22-ஆம் தேதியன்று மோதின. இதில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

பின்னர், எலிமினேட்டர் பிரிவு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கடந்த 25-ஆம் தேதியன்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

யாருக்கு வெற்றிவாய்ப்பு?படத்தின் காப்புரிமைIMAGE COPYWRITETWITTER / IPL

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறைகளும் (2010, 2011), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 முறையும் (2016) கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல் 2018 இறுதியாட்டத்தில் மோதும் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி கூறுகையில் ''இரண்டு அணிகளும் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளன. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் மட்டுமல்ல திட்டமிடல் போன்ற அம்சத்திலும் இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன'' என்று குறிப்பிட்டார்.

''ஆனால், அனுபவம் மற்றும் அணியின் தொடர்ச்சியான கட்டுக்கோப்பான நிலை ஆகியவற்றில் சென்னை அணி சற்றே சிறப்பான நிலையில் உள்ளது. அதே வேளையில் ஹைதராபாத் அணியும் சற்றும் குறைந்தது அல்ல'' என்று விஜய் லோக்பாலி மேலும் தெரிவித்தார்.

யாருக்கு வெற்றிவாய்ப்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

3 ஐபிஎல் தொடர் இறுதியாட்டங்களில் சென்னை அணி தோற்றது குறித்து கேட்டபோது ''முந்தைய தொடர்களில் நடந்ததற்கும், இன்றைய போட்டிக்கும் தொடர்பில்லை. இரண்டு பந்துகளிலேயே ஒரு ஆட்டம் திசைமாறிவிடும்'' என்று அவர் கூறினார்.

ரஷித் கானை சென்னை அணி எப்படி எதிர்கொள்ளும்?

''தோனியை நன்கு அறிந்தவரையில் இளம் சுழல் பந்துவீச்சாளரும், ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித் கானை அவரே சிறப்பாக எதிர்கொள்வார். ரஷித் கானுக்கு எதிராக தனது ஆக்ரோஷ பேட்டிங் பாணியை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். உலகின் எந்த சிறப்பான பந்துவீச்சாளரையும் தனது அதிரடி பேட்டிங் பாணியில் வெல்லும் திறமை தோனிக்கு உண்டு'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

''அதே வேளையில், ரெய்னா, ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற சென்னை வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்ய வாய்ப்புண்டு'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

ஷிகர் தவான்படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR Image captionஷிகர் தவான்

கேன் வில்லியம்சன், யூசுப் பதான், ஷிகர் தவான் போன்ற ஹைதராபாத் அணியின் பேட்டிங் நட்சத்திரங்களை சென்னை அணி பந்துவீச்சாளர்கள் எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என்பதும் ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஷகிப், சித்தார்த் போன்ற ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

சென்னை அணியின் பலம் என்ன?

இன்று நடக்கவுள்ள 2018 ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் வெற்றி வாய்ப்பு மற்றும் சாதக பாதகங்கள் குறித்து பிபிசி தமிழிடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் பேசினார்.

ஸ்ரீராம் ஸ்ரீதரன் Image captionஸ்ரீராம் ஸ்ரீதரன்

''இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், அந்த அணியின் அனுபவமும் இன்றைய போட்டியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும். அந்த வகையில் சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகம்'' என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 3 ஐபிஎல் தொடர் இறுதியாட்டங்களில் சென்னை அணி தோற்றது குறித்து சுட்டிக்காட்டியபோது, ''அது சென்னை அணிக்கு பாதகமாக அமையாது. சிஎஸ்கே அணியின் தலைவர் தோனியின் பக்குவமான அணுகுமுறை இறுதியாட்டத்தில் பரபரப்பான தருணங்களில் அந்த அணிக்கு கைகொடுக்கும்'' என்று ஸ்ரீராம் மேலும் கூறினார்.

இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கானை ராயுடு இதற்கு முன்பு நன்றாக எதிர்கொண்டார். அவரும் , சுரேஷ் ரெய்னாவும் ரஷித் கானை சிறப்பாக எதிர்கொண்டு பேட் செய்யும் பட்சத்தில் அது சிஎஸ்கே அணிக்கு லாபமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷித் கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஷித் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், இறுதியாட்டத்தில் பரபரப்பான தருணங்களை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று விளையாட்டு நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-44267104

Link to comment
Share on other sites

3-வது முறையாக பட்டம் வெல்லுமா சிஎஸ்கே?; மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஐபிஎல் இறுதி ஆட்டம்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை

 

 
Match%20Timecol
27CHPMUDHONI

தோனி   -  Prashant nakwe

27CHPMURASHIDKHAN

ரஷித் கான்   -  THE HINDU

27CHPMURASHIDKHAN2

ரஷித் கான்   -  The Hindu

ipl-2018-final%20copy
Match%2020%20crorecol
Match%20Timecol
27CHPMUDHONI

தோனி   -  Prashant nakwe

ஐபிஎல் டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் தான் இரு அணிகளும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தகுதி சுற்று 1 ஆட்டத்தில் மோதியிருந்தன.

 

அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கையே துரத்திய போதிலும் 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் டு பிளெஸ்ஸிஸ் அபாரமாக விளையாட பரபரப்பான அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 7-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை மற்றும் பிளே ஆஃப் என 3 முறை ஹைதராபாத் அணியை வீழ்த்தி உள்ள சென்னை அணி மீண்டும் ஒரு முறை அந்த அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக்கூடும்.

வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி தகுதி சுற்று 1-ல் வெற்றியை தவறவிட்ட நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்த கையோடு அந்த அணி இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு பயணமானது. கடந்த 4 நாட்களில் இரு முக்கிய ஆட்டங்களை சந்தித்த அந்த அணி தற்போது கோப்பையை வெல்வதற்கான ஆட்டத்தில் மிகுந்த களைப்புடன் சென்னையை சந்திக்கிறது. அதேவேளையில் இந்த 4 நாட்கள் ஓய்வானது சென்னை அணிக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கக்கூடும்.

ஹைதராபாத் அணியின் வெற்றிகளில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக உருவெடுத்த அவர், அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினார். பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய அவர், பேட்டிங்கின் போது 10 பந்துகளில் 34 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். மேலும் பீல்டிங்கின் போது இரு முக்கிய கேட்ச்கள் மற்றும் ஒரு ரன் அவுட்டையும் நிகழ்த்தி ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்துச் சென்றார்.

முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கும் தொல்லை கொடுக்க ரஷித் கான் தவறவில்லை. அந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் தோனியை தனது கூக்ளி பந்து வீச்சால் போல்டாக்கி மிரட்டிய அவர் அதன் பின்னர் டுவைன் பிராவோவையும் வெளியேற்ற சென்னை அணி 62 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடிக்கு ஆளானது. 4 ஓவர்களை வீசிய ரஷித் கான் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். முக்கியமான இந்த ஆட்டத்தில் கடைசி வரை களத்தில் நிலைப்பெற்று வெற்றி தேடிக் கொடுத்த டுபிளெஸ்ஸிஸ் கூட ரஷித் கான் தனது ஓவர்கள் கோட்டாவை முடித்த பிறகே மட்டையை சுழற்றினார்.

டுபிளெஸ்ஸிஸும் அந்த ஆட்டத்தில் ரஷித் கான் சுழலில் எல்பிடபிள்யூ முறையில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மேல்முறையீடு செய்து ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். ஆட்டத்தை வென்று கொடுத்த பின்னர் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “ரஷீத் கான் உண்மையிலேயே சிறந்த பந்துவீச்சாளர். அவர் பந்துகளை கணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் ஓவர் முடியட்டும் என்று காத்திருந்தோம்.

ரஷித் கான் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர். அவர் தன் சொந்தத் திறமையிலேயே போட்டிகளை வென்று கொடுப்பார். அதனால் அவரது பந்து வீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடவேண்டும். நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியவில்லை” என்றார். இதில் இருந்தே ரஷித் கானின் பந்து வீச்சு எந்த அளவுக்கு எதிரணிக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது புலனாகும்.

இந்த சீசனில் 16 ஆட்டங்களில் 21 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள ரஷித் கானுக்கு பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோரும் பக்கபலமாக உள்ளனர். இறுதி கட்ட ஓவர்களில் அசத்தி வரும் சித்தார்த் கவுலும் இந்த சீசனில் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். இந்த பந்து வீச்சு கூட்டணி சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பதம் பார்க்க மீண்டும் ஒரு முறை முயற்சிக்கும். இதேபோல் கார்லோஸ் பிராத் வெயிட்டின் ஆல்ரவுண்டர் திறனாலும் சென்னை அணி சிறிது சிக்கலை சந்திக்கக்கூடும்.

தகுதி சுற்று ஆட்டத்தில் இவர் கடைசி கட்டத்தில் 43 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அவர், கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசியிருந்தார். எதிரணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் இரு விக்கெட்களை கைப்பற்றியதுடன் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பேட்டிங்கில் வில்லியம்சன் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம். இந்த சீசனில் 688 ரன்கள் குவித்துள்ள அவர், கடைசி இரு ஆட்டங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறினார். சீரற்ற வகையில் விளையாடி வரும் ஷிகர் தவணும் மட்டையை சுழற்றினால் பலம் சேர்க்கலாம். தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்த பிறகும் அணியின் நடுகள பேட்டிங் புத்துயிர் பெறாதது பலவீனமாக கருதப்படுகிறது. இந்த வரிசையில் ஒருசில மாற்றங்களை வில்லியம்சன் மீண்டும் மேற்கொள்ளக்கூடும்.

3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் சென்னை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அம்பாட்டி ராயுடு (586), தோனி (455), ஷேன் வாட்சன் (438), சுரேஷ் ரெய்னா (413) ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இந்த பேட்டிங் கூட்டணி மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளது. டு பிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோருடன் பின்கள வரிசையில் ஹர்பஜன் சிங்,ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார் ஆகியோரும் பேட்டிங் திறனை பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் வலு சேர்க்க்கிறது.

சென்னை அணியின் பந்து வீச்சும் பலம் அடைந்துள்ளது. லுங்கி நிகிடி, தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர் ஆகியோரை உள்ளடக்கிய வேகக் கூட்டணி ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். இதேபோல் ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ ஆகியோரது அனுபவம் வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article24003413.ece

Link to comment
Share on other sites

நான்காவது முறை ஐதராபாத்தை வெல்ல தோனிக்கு கைகொடுக்கும் 7 வியூகங்கள்! #CSKvSRH PREVIEW

 
 

2018 ஐபிஎல்-ன் இறுதி நாள் இன்று. தோனியா, கேன் வில்லியம்சனா... வெல்லப்போவது ஐதரபாத்தா, சென்னையா? கலாநிதி மாறனா, சீனிவாசனா என்கிற கேள்விகளுக்கு விடை சொல்லும் நாள் இது. ஐதராபாத், சென்னை என இரண்டு வெவ்வேறு நகரங்கள் மோதுவதுபோல் இருந்தாலும் இது இரண்டு தமிழர்களுக்கு சொந்தமான அணிகளுக்கு  இடையே நடக்கும் மோதல்தான்.
சென்னையின் பலம் எதுவோ அதுதான் ஐதராபாத்தின் பலவீனம். ஐதராபாத்தின் பலம் எதுவோ அதுதான் சென்னையின் பலவீனம். பேட்டிங்கில் ஸ்ட்ராங்கான சென்னை அணிக்கும், பெளலிங்கில் ஸ்ட்ராங்கான ஐதராபாத்துக்கும் இடையேயான இன்றைய மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று யாராலும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. 

 

 

CSKVsSRH



கேப்டனாக கேன் வில்லியம்சனுக்கு இது முதல் ஐபிஎல் ஃபைனல். ஆனால் கேப்டனாக தோனிக்கு இது ஏழாவது ஃபைனல். இதில் இரண்டு வெற்றிகளையும், 4 போட்டிகளில் தோல்வியையும் கேப்டனாக சந்தித்திருக்கிறார் தோனி.  ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டன்  தோனிதான். கூல் கேப்டன் என்று பெயர்பெற்ற தோனி சமீபத்திய சென்னை போட்டிகளில் கொஞ்சம் கோபப்படுவது தெரிகிறது. மாறாக வெற்றியோ தோல்வியை மிகவும் கூலாக இருக்கிறார் கேன் வில்லியம்சன்!


கேன் வில்லியம்சனின் கேப்டன்ஸி!

2018 ஐபிஎல்-ல் ஐதராபாத் இறுதிப்போட்டி வரை வர முக்கியக் காரணம் கேன் வில்லியம்சனின் கேப்டன்ஸியும், அவரது பேட்டிங்கும்தான். இதுவரை இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச ரன்கள் எடுத்திருப்பவர் கேன்தான். கேப்டன் என்பவன் தனது எந்த முடிவு தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்பதை ஆராய்ந்து, அதை அடுத்தப்போட்டியில் நடக்காமல் மாற்றிக்காட்டி வெற்றிபெறவேண்டும். அந்தவகையில் சென்னைக்கு எதிரானப் போட்டியில் கேன் வில்லியம்சன் எடுத்த தவறான முடிவுதான் சென்னைக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. சென்னைக்கு எதிரான போட்டியில் எடுத்த தவறான முடிவை சரிசெய்ததுதான் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத்தந்தது.

முதல் குவாலிஃபையரில் சென்னை 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஹர்பஜன் சிங்கும், டுப்ளெஸ்ஸியும் களத்தில் இருக்கிறார்கள். மூன்று ஓவர்கள் இருக்கின்றன. 18 பந்துகளில் சென்னை 43 ரன்கள் எடுக்க வேண்டும். அன்று தனது முக்கிய பெளலர்களான புவனேஷ்குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா என மூவருக்குமே ஒரு ஓவர் மீதம் இருக்கிறது. புவனேஷ்குமார் 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார். அதேப்போல் சித்தார்த் கவுல் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். சந்தீப் ஷர்மா கொஞ்சம் எக்ஸ்பென்சிவ். 3 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இங்கே அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வாரோ அதை செய்யத்தவறினார் கேன் வில்லியம்சன். 18வது ஓவரை புவனேஷ்குமாருக்கு கொடுத்து ரன்களைக் கட்டுக்குள் வைத்திருந்தால் அடுத்த இரண்டு ஓவர்களில் சென்னைக்கு பிரஷர் இன்னும் கூடியிருக்கும். புவனேஷ்குமார் குமார் ஓவரில் விக்கெட்டுகள்கூட விழுந்திருக்கும். காரணம், அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் கடைசி ஓவர் வரை மேட்ச் போகும் என கேன் வில்லியம்சன் அவராகவே கணித்து கடைசி ஓவரை புவனேஷ்குமாருக்கும், 19வது ஓவரை சித்தார்த் கவுலுக்கும் ஒதுக்கிவிட்டு 18வது ஓவரை பிராத்வெய்ட்டிடம் கொடுத்தார். சந்தீப் ஷர்மாவிடம் கொடுக்காமல் பிராத்வெய்ட்டிடம் கொடுக்க ஓரே காரணம் பிராத்வெய்ட் எக்கனாமிக்கலாக இருந்ததுதான். 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால் வில்லியம்சனின் கணக்குத் தவறாகப் போனது. பிராத்வெய்ட்டின் 18வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்து வெற்றியை தன்பக்கம் கொண்டுவந்தது சென்னை.  

CSKVsSRH



கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரிலும் ஐதரபாத்துக்கு இதே சூழல்தான். 18 பந்துகளில் 39 ரன்கள் கொல்கத்தா அடிக்க வேண்டும். புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹசன் என மூவருக்கும் ஒரு ஓவர் இருக்கிறது. பிராத்வெய்ட் அதுவரை ஒரு  ஓவர் மட்டுமே வீசியிருக்கிறார். ஆனால் இந்தமுறை ஸ்மார்ட்டாக முடிவெடுத்தார் கேன். 18வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே  கொடுத்தார் குமார். அடுத்த ஓவர் சித்தார்த் கவுல். 1 விக்கெட்டையும் எடுத்து 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கவுல். இப்போது கடைசி ஓவரில் 19 ரன்கள்  தேவை. ஸ்பின்னருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரே சரியாக இருக்கும் என பிராத்வெய்ட்டிடம் ஓவரைத்தருகிறார் கேன் வில்லியம்சன். வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் எடுத்து ஐதராபாத்துக்கு வெற்றியைத்தருகிறார் பிராத்வெய்ட். இதுதான் சரியான கேப்டன்ஸி. 
சென்னையிடம் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். தோனியின் வியூகங்கள் என்னவாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட கேனுக்குப் புரிந்திருக்கும். நான்காவது தொடர் தோல்விக்கு அவர் நிச்சயம் அவ்வளவு எளிதில் இடம்கொடுக்கமாட்டார் என்பதால் இன்றைய போட்டிக்கு உச்சகட்ட பரபரப்பிருக்கும்.
 

CSKVsSRH



தோனியின் ப்ளேயிங் லெவன்?!

அணியை எப்போதுமே யாரும் கணிக்கமுடியாதபடி வைத்திருக்கவேண்டும் என்று நினைப்பவர் தோனி. குறிப்பாக இறுதிப்போட்டிகளில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் தருவார். 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக ஶ்ரீசாந்தை கொண்டுவந்தார். அதேப்போல் யுவராஜ் சிங்குக்கு பதிலாக தான் முன்னால் பேட்டிங் ஆடவந்தார். ஆனால் ஐபிஎல்-ல் அவர் குவாலிஃபையருக்கு மேல் அணியில் பெரிய மாற்றங்கள் செய்ததில்லை என்பதே வரலாறு. 
அதனால் இன்றைய சென்னையின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். ஷேன் வாட்ஸனும், டுப்பெளஸ்ஸியும்தான் இன்றைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள்.சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக அம்பதி ராயுடு வருவார். தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் சென்னையின் பின்வரிசை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். தீபக் சாஹர், ஷ்ரதுல் தாக்கூர், லுங்கி எங்கிடி, ஹர்பஜன் சிங் என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும்.

ஐதராபாத் லெவன்?!

கிட்டத்தட்ட யூகிக்கக்கூடிய அணியாகத்தான் சென்னை இருக்கும் என்பதால் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் சமாளிக்க பல வியூகங்களோடு ஐதராபாத் காத்திருக்கும். ஐதராபாத்தின் பலவீனமே பேட்டிங்தான். கேன் வில்லியம்சனும், தவானும் இல்லையென்றால் ஐதராபாத்தின் பேட்டிங் அவுட். சரியான ஓப்பனிங்  பார்ட்னர்ஷிப்பும் இல்லாமல் திணறுகிறது. இன்றைய போட்டியில் விருத்மான் சாஹாவும், தவானும் ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.கேன் வில்லியம்சன், ஹூடா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், பிராத்வெய்ட் என்பதுதான்  ஐதராபாத்தின் பேட்டிங் வரிசையாக இருக்கும். பெளலிங்கைப் பொருத்தவரை கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி மேட்சில் விளையாடாத சந்தீப் ஷர்மா அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கலாம். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, ஷகீப் என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும். 

CSKVsSRH


டாஸ்!

இந்த சீஸனில் இதுவரை 8 போட்டிகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. இதில் நான்கில் சேஸ் செய்த அணிகளும், நான்கில் முதலில் பேட் செய்த அணிகளும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனாலும் சேஸிங் செய்வதுதான் மும்பை பிட்சில் நல்லது. அதனால் இன்றைய டாஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு அணிகளுமே  டாஸ் வென்றால் பெளலிங்கைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கும். முதலில் பேட் செய்யும் அணி 150 ரன்களுக்குள் சுருண்டுவிட்டால் சேஸ் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். 


ஐதராபாத்தை சமாளிக்க என்ன செய்வார் தோனி?

1. தோனியின் ஆயுதமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எக்கனாமிக்கலாகவும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் சிறப்பாகப் பந்துவீசியவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களே. அதனால் பவர் ப்ளே, டெத் ஓவர்களில் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தவும் தோனி வேகப்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்துவார். அதனால் இன்றைய போட்டியிலும் ஹர்பஜனுக்கு வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.

2. தவானும், கேன் வில்லியம்சனும்தான் ஐதராபாத்தின் பேட்டிங் பலம். தவான் சென்னைக்கு எதிராக இரண்டு போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். அதில் ஒரு மேட்சில் டக் அவுட். ஒரு மேட்சில் 79 ரன்கள். இதை 49 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அடித்தார் தவான். பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் என மூன்று ஸ்லோ பெளலர்களையுமே வெளுத்திருக்கிறார் தவான். அதனால் சாஹர், தாக்கூர், எங்கிடி என மூவரையும் பயன்படுத்தி பவர் ப்ளே ஓவர்களுக்குள் தவானை அவுட் ஆக்கினால்தான் ஐதராபாத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட முடியும். மிடில் ஓவர்கள் வரை தவானை ஆட விட்டால் அது சென்னைக்கு ஆபத்து.

3. சென்னைக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். அவசரப்படாமல் ஆடுவதுதான் வில்லியம்சன் ஸ்டைல். இவருமே ஸ்பின் பெளலிங்கை சமாளிக்கக்கூடியவர். அடித்து ஆடுபவர். வேகப்பந்து வீச்சுதான் இவரை வீழ்த்தவும் கைகொடுக்கும். வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பெளலிங் ரொட்டேஷன் கைகொடுக்கும். பெளலர்களை மாற்றிக்கொண்டே இருக்கும்போது வில்லியம்சன் ஒரு ஃபார்மேட்டுக்குள் வரமுடியாமல் திணறுவார்.

CSKVsSRH



4. சென்னைக்கு பயமே ரஷித் கானின் பெளலிங்தான். சென்னைக்கு எதிராக கடைசி மேட்சில்தான் ரஷீத் கான் சிறப்பாகப் பந்துவீசினார். தோனி, பிராவோ என அவர் அடுத்தடுத்து எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கியமானவை. கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே சூப்பர் மேனாக சீறியிருக்கிறார் ரஷீத். அதனால் ரஷீத் கானை சமாளிப்பதுதான் சென்னை  சூப்பர் கிங்ஸின் பெரிய பிளானாக இருக்கும். ரஷீத் கானின் பந்துவீச்சை சிறப்பாக ஆடியிருப்பவர் அம்பதி ராயுடு. அதேப்போல் ரஷித் கானின் கூக்ளிகளை சரியாக கணித்து விளையாடியிருக்கிறார். ரஷித் கானின் பெளலிங்கில் மட்டும் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்திருக்கிறார் ராயுடு. அதனால் 2 டவுன் பேட்ஸ்மேனாக ராயுடுவை களம் இறக்கி, ரஷீத் கானை சமாளிப்பதுதான் தோனியின் வியூகமாக இருக்கும்.

5. புவனேஷ்வர் குமார்தான் சென்னையின் டாப் ஆர்டரை கலைக்கும் வல்லமை கொண்டவர். அதனால் இவரது பெளலிங்கை வாட்ஸன், டுப்பெளஸ்ஸி, ரெய்னா மூவருமே தாக்குப்பிடித்து ஆட வேண்டும். 10 ஓவர்களுக்குள் புவனேஷ்குமாரை மூன்று ஓவர்கள் வீச வைப்பார் கேன் வில்லியம்சன். இந்த மூன்று ஓவர்கள்தான் சென்னையின் டாப் ஆர்டருக்கு சோதனையாக இருக்கும். புவனேஷ்வர் குமார் ஓவரில் விக்கெட் விழுகிறதோ இல்லையோ, ரன் எடுக்க முடியாது. இவர் ஓவரில் ரன் எடுக்கமுடியவில்லை என்பதால் அடுத்த பெளலரின் ஓவரில் ரன் எடுக்க அடித்து ஆடும்போதுதான் விக்கெட் விழுகிறது. இதை சென்னையின் டாப் ஆர்டர்கள் கவனமாக சமாளிக்க வேண்டும்.

6. சென்னையின் பேட்டிங் ஆர்டரில் இன்று ஒரு சிறிய மாற்றத்தை தோனி செய்யக்கூடும். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஓப்பனிங் விக்கெட் விழுந்துவிட்டால் தோனி, 1 டவுன் பேட்ஸ்மேனாக ரெய்னாவை இறக்காமல் பின்ச் ஹிட்டர்களை இறக்குவார். அது  சாஹர் அல்லது ஹர்பஜன் சிங்காக இருக்கும்.

7. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் நான்கில் தோல்வியடைந்திருக்கிறது. இரண்டு முறை சேஸ் செய்யமுடியாமலும், இரண்டு முறை டிஃபென்ட் செய்யமுடியாமலும் தோல்வியடைந்திருக்கிறது. தோனி கூலாக இருந்தாலும் ஃபைனல்களில் அணியின் வீரர்கள் கூலாக விளையாடாததே அணியின் தோல்விக்குக் காரணம். 2013 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பையின் 149 ரன்கள் டார்கெட்டை அடிக்கமுடியாமல் 125 ரன்களுக்குள் சுருண்டிருக்கிறது சென்னை. அதனால் இன்று தோனி அணியினருக்கு சொல்லப்போவது இறுதிப்போட்டி என்பதை  மறந்துவிட்டு ஆடுவோம் என்பதே. 

இதுவரை விளையாடிய ஐபிஎல்-களைவிட இந்தமுறை சென்னை அணி மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம் அணியின் வீரர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட மேட்ச் வின்னர்களாக இருப்பதுதான். அதனால் இறுதிபோட்டியில் தோற்கும் சென்னையின் வழக்கத்தில் இருந்து இன்று மாற்றம் இருக்கும் என்றே நம்பலாம்.

 

https://www.vikatan.com/news/sports/126054-will-dhonis-csk-beat-sun-risers-hyderabad-for-the-fourth-consecutive-battle-cskvsrh-preview.html

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர்: எல்.பாலாஜி

 

 
dhoni-balaji

படம். | ஆர்.ரகு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேட்ச் வின்னர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று அதன் பவுலிங் பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டிலேயே மிகவும் சீரான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், 7 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

 

இந்நிலையில் சென்னையின் இத்தகைய ஆட்டத்திறமைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் தி இந்து (ஆங்கிலம்) எல்.பாலாஜியை அணுகிய போது,

“அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டு ஆற்றல்களிலுமே மேட்ச் வின்னர்கள் உள்ளனர். தோனி, ராயுடு, ரெய்னா, பிராவோ, வாட்சன், டுபிளெசிஸ், ஹர்பஜன், இங்கிடி என்று இவர்களில் யார் வேண்டுமானாலும் மேட்ச் வின்னர்களாவார்கள்.

முன்பு ஹெய்டன், ஹஸ்ஸி, முரளிதரன் இருந்தனர், அணியின் முயற்சியுடன் தனிப்பட்ட திறமையும் பளிச்சிட்டது.

மேலும் தோனி மட்டுமல்லாது டுபிளெசிஸ், வாட்சன், பிராவோ ஆகியோரும் தங்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். இவர்களும் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டு இளம் தலைமுறையினரை வழிநடத்துகின்றனர். பிறகு ஹஸ்ஸி இருக்கிறார் எப்பவும் தன் கிரிக்கெட் அறிவை சொல்லிக் கொடுக்கத் தயங்காதவர்.

தோனி களத்துக்கு வெளியே வீரர்களை ரிலாக்ஸாக இருக்க உதவுகிறார், களத்துக்கு உள்ளே ஆட்டத்தின் போக்கைச் சிறப்பாக கணிக்கக் கூடியவராக இருக்கிறார். தோனி ஆட்டத்தின் பினிஷிங் திறன், அவரது அமைதி ஆகியவை பற்றி நிறைய பேசியுள்ளோம். ஆனால் மனரீதியாக அவர் அமைதியடைவதுதான் எனக்கு அவரிடத்தில் பிடித்த விஷயம்.

நான் இறுதி ஓவர்களை வீசும் போது கூட தோனி எனக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கியதில்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை சூசகமாகத் தெரிவிப்பார் அவ்வளவுதான், பவுலர்கள் மீது அழுத்தம் ஏற்ற மாட்டார். களவியூகம் தனித்துவமானது, புதியன புகுத்துவது, அவர் உள்ளுணர்வு சார்ந்த கேப்டனாவார்.

தோனி தலைமையின் கீழ் சிஎஸ்கே ஒரு குடும்பம் போன்றது. அணியில் ஆடினால்தான் அதை அனுபவித்து உணர முடியும். ஒத்திசைவு உள்ளது, வீரர்களை நிர்வாகம் ஆதரிக்கிறது, அதனால் மகிழ்ச்சியுடன் ஆட முடிகிறது, அனைவரையும் சமபாவனையுடன் தான் தோனி நடத்துவார், அவர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சிஎஸ்கே அணியின் பலம் என்னவெனில் கடைசி பந்து வரை தோல்வியை ஏற்க மாட்டாத குணம். சாத்தியமற்ற சூழ்நிலையிலிருந்து வெல்வது, 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இல்லை, ஆனால் இப்போது மீண்டும் வந்த விதம் எப்படி என்று நீங்களே பார்க்கிறீர்களே” என்றார் பாலாஜி.

http://tamil.thehindu.com/sports/article24005547.ece

 

 

ரஷீத் கானை வித்தியாசமாகப் பயன்படுத்தி சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சியளிக்குமா ஹைதராபாத்?

 

 
Rashid%20Khan

ரஷீத் கான் | ஏ.எஃப்.பி.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கும் ‘தல’ தோனியின் சிஎஸ்கேவும், பிரமாதமாக இந்தத் தொடரில் ஆடிவரும் சன் ரைசர்ஸ் அணியும் கோப்பைக்கான போட்டியில் மோதுகின்றன.

இரு அணிகளுமே சச்சின் டெண்டுல்கர் கூறியது போல் ‘உயிரைக் கொடுத்து ஆடுகின்றனர்’. இறுதிப்போட்டி வேறு நிச்சயம் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.

 

அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 10 பந்துகளில் 34 ரன்களை விளாசி திடீரென ரஷீத் கானுக்குள் டிவில்லியர்ஸ் புகுந்தது போல் ஆடி ஸ்கோரை எதிர்பார்ப்புக்கும் மேல் கொண்டு சென்று கொல்கத்தாவுக்கு அதிர்ச்சியளித்த ரஷீத் கான் பிறகு அற்புதமான பந்து வீச்சில் ஹைதராபாத்தை பல போட்டிகள் போல் வெற்றிக்கு இட்டுச்சென்றார். 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் விளாசி ஸ்கோர் 174 ரன்களுக்குச் சென்றது, பிறகு லின், உத்தப்பா, ரஸலை தன் அருமையான பந்துவீச்சில் காலி செய்ய கொல்கத்தா 160 ரன்களில் தோற்று வெளியேறியது.

இந்நிலையில் ரஷீத் கானை வித்தியாசமாகப் பயன்படுத்த சன் ரைசர்ஸ் முயற்சி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தோனி, ஹர்பஜன் சிங்கையும் சாஹரையும் இறக்கி கிங்ஸ் லெவனுக்கு பாடம் கற்பித்தது போல் இன்று சன் ரைசர்ஸ் ஒருவேளை ரஷீத் கானை பேட்டிங்கில் முன்னால் இறக்க வாய்ப்புள்ளது.

சுனில் நரைனின் பேட்டிங் திறமைகள் தொடக்கத்தில் வெளிப்படுவது போல் ரஷீத் கான் திறமையும் வெளிப்படலாம். ஆப்கானிஸ்தானில் தன் கிளப்புக்கு தொடக்க வீரராக அவர் இறங்கியுள்ளார்.

டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 138.14. மொத்தம் 17 பவுண்டரிகள் 18 சிக்சர்களை மொத்தம் 107 போட்டிகளில் அடித்துள்ளார், பின்னால்தான் பெரும்பாலும் களமிறங்குகிறார். ஒருநாள் சர்வதேச போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 60 நாட் அவுட். டி20 சர்வதேச போட்டியில் 29 ஆட்டங்களில் 100 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ட்ரைக் ரேட் 129.87. லிஸ்ட் ஏ ஸ்ட்ரைக் ரேட் 100.84.

எனவே சுனில் நரைனை தொடக்கத்தில் இறக்குவது போல் இவரையும் தொடக்கத்தில் இறக்கி சிஎஸ்கே திட்டங்களுக்கு ஒரு அதிர்ச்சி மருத்துவம் அளிக்கலாமே. செய்யுமா சன் ரைசர்ஸ்? பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல் பிராத்வெய்ட்டின் பவர் ஹிட்டிங்கையும் முன்னதாக இறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://tamil.thehindu.com/sports/article24005780.ece

Link to comment
Share on other sites

அவர்தான் திட்டமிடுவார், நான் செயல்படுத்துவேன் - டோனி

 
அ-அ+

அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni

 
 
 
 
அவர்தான் திட்டமிடுவார், நான் செயல்படுத்துவேன் - டோனி
 
மும்பை:

சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.
 
இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
201805271310576009_1_flim._L_styvpf.jpg
இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.
 
201805271310576009_2_Harbaj._L_styvpf.jpg
எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27131057/1165984/IPL-2018-Dhoni-says-Fleming-who-makes-the-strategy.vpf

Link to comment
Share on other sites

`கோப்பையைக் கையில் ஏந்தப்போவது யார்? - ஐபிஎல் பைனலில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சென்னை

 
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

ஐபிஎல்

 

Photo Credit: Twitter/IPL

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதும் 4வது போட்டி இதுவாகும். இதுவரை நடந்த 3 போட்டிகளிலுமே சென்னை அணியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. மும்பை மைதானம் சேசிங்குக்கு கைகொடுக்கும் என்பதால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்வது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாகக் கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்துள்ள சாஹாவுக்குப் பதிலாக கோஸ்வாமியும் கலீலுக்குப் பதிலாக சந்தீப் ஷர்மாவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

https://www.vikatan.com/news/tamilnadu/126078-ipl-final-csk-won-the-toss-and-choose-to-field-against-srh.html

Link to comment
Share on other sites

 

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

 
 
 
 
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
 
மும்பை:
 
11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 
 
இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 
 
201805272056198541_1_GAZI_3174._L_styvpf.jpg
 
4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.  ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 
 
9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார். 
 
201805272056198541_2_dhawan-out._L_styvpf.jpg
 
10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. 
 
11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 
 
201805272056198541_3_williamson-50._L_styvpf.jpg
 
16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
 
201805272056198541_4_raina-catch._L_styvpf.jpg
 
கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27205303/1166058/IPL-2018-Finals-SRH-set-179-runs-as-target-for-CSK.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி

 

 
 

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final

 
 
 
 
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி
 
மும்பை:
 
11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 
 
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 
 
இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
9-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்களை குவித்தது. தொடர்ந்து 10வது ஓவரை ரஷித் கான் வீச ஒரு பவுண்டரியுடன் 8 ரன் மட்டுமே கிடைத்தது.
 
11வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.
 
12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. இந்த  ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை சந்திப் சர்மா வீசினார். இதில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 27 ரன்களை குவித்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
 
14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரியுடன் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
 
15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து சென்னை அணி வெற்றி பெற 33 ரன்கள் தேவைப்படுகிறது. 
 
இறுதியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்ட்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.#IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/27224401/1166071/chennai-super-kings-beat-sunrisers-hyderabad-by-8.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைனலை பார்த்த சந்தோஷம்... பரிசளிப்பு நிகழ்வில் எரிக் சொல்ஹெய்மை கண்டதும் சப்பெண்டு போயிட்டுது.

 

Link to comment
Share on other sites

`தனி ஒருவனாக வெற்றி தேடித்தந்த வாட்சன்!’ - ஐபிஎல் மகுடத்தை மூன்றாவது முறையாகச் சூடிய சென்னை #CSKvsSRH #IPLFinal

 
 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

சென்னை வீரர் ஷேன் வாட்சன்

 

Photo Credit: Twitter/IPL

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் இங்கிடி மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்க்கொண்டு 179 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதேநேரம், நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியை 3 முறை வீழ்த்திய நம்பிக்கையோடு சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் தொடங்கினர். 

ஹைதராபாத் சார்பில் முதல் ஓவர் வீசிய புவனேஷ் குமார், வாட்சனை மிரட்டினார். ஸ்விங் பந்துகளால் திணறடித்த புவனேஷ்வர் குமார், முதல் ஓவரை மெய்டனாக வீசினார். தொடர்ந்து ஹைதராபாத் வீரர்கள் கட்டுக்கோப்பாக லைன் அண்ட் லெந்தில் பந்துவீச அனுபவ வீரர்களான வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் ரன் குவிக்கத் திணறினர். சந்தீப் ஷர்மா வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் டூப்ளசி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, ஷேன் வாட்சனுடன், ரெய்னா கைகோத்தார். இந்த ஜோடி பேட் செய்யத் தொடங்கியதுமே போட்டி சென்னை அணியின் பக்கம் திரும்பியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்த சென்னை, இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி மிக வேகமாக முன்னேறியது.

 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவர், சந்தித்த முதல் 10 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், பிராத்வொய்ட் வீசிய பவுன்சரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்த வாட்சன்,  51 பந்துகளில்  சதமடித்து அசத்தினார். ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி எட்டியது. இதன்மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அம்பாதி ராயுடு 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/126086-csk-beat-srh-by-8-wickets-in-ipl-final.html

Link to comment
Share on other sites

சாதித்தது தோனி படை: சன் ரைசர்ஸை நொறுக்கிய வாட்சனின் சதம்; 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே

 

 

 
csk

3வது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய தோனிபடை சிஎஸ்கே.   -  படம். | விவேக் பெந்த்ரே.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் மந்தமாகத் தொடங்கி பிறகு பிரமாதமான, அனாயாச சரவெடி சதத்தின் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதி சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன்களாகிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

பிராத்வெய்ட் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தை கவர் திசையில் ராயுடு தெறிக்கும் பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது, மஞ்சள் நிறம் மைதானத்தை ஆக்ரமித்தது. வாட்சன் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 117 ரன்களெடுத்து இறுதி வரை வீழ்த்த முடியாத வீரராகத் திகழ்ந்தார். அவர் ஈடுபடும் 2வது ஐபிஎல் இறுதிப் போட்டியாகும் இது. 2008ல் தன் தலைமையில் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸை வெல்ல வைத்த வாட்சன் 2018 ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அற்புதமான பேட்டிங்கினால் சிஎஸ்கேவுக்கு இன்னொரு மகுடத்தைப் பெற்றுத்தந்தார். இந்த ஐபிஎல்-ல் வாட்சனின் 2வது சதமாகும். மொத்தமாக 4 ஐபிஎல் சதங்களை அவர் இன்றைய சதத்துடன் எடுத்துள்ளார். ராயுடு 19 பந்துகளில் 16 நாட் அவுட்.

   
 

டாஸ் வென்று முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார் தோனி, அந்த அணியில் ஒருவரும் அரைசதம் எடுக்கவில்லை, கேன் வில்லியம்சன் (47) விக்கெட்டை கரன் ஷர்மா வீழ்த்தியது திருப்பு முனையாக அமைய 178 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ், இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 181/2 என்று சன் ரைசர்ஸை ஊதித்தள்ளியது.

முதல் 10 பந்தில் 0... வாட்சன் இன்னிங்ஸைக் கட்டமைத்த விதம்:

watsonjpg

வாட்சன் சதம். | ஏ.எப்.பி.

 

வயதான வீரர்களைக் கொண்ட அணி என்று பலராலும் கேலி செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியில் தோனி உறுதியாக நம்பிய அனுபவத்தினால்தான் வெற்றியைச் சாதித்தது. ஏனெனில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா வீசிய தொடக்க ஓவர்களில் எந்த இளம் வீரர்களும் விக்கெட்டைப் பறிகொடுத்திருப்பார்கள், முதல் 10 பந்தில் 0-வில் இருந்த வாட்சன் 11வது பந்தை அடித்த பவுண்டரியிலிருந்து திரும்பிப் பார்க்கவேயில்லை. வாட்சனின் சரவெடிக்கு சன்ரைசர்ஸின் சித்தார்த் கவுலின் மோசமான பந்து வீச்சு உதவியது. பிறகு சந்தீப் சர்மா தன் 4வது ஓவரை படுமோசமாக வீச 27 ரன்கள் விளாசினார் வாட்சன். பிராத்வெய்ட் ரெய்னாவை ஷார்ட் பிட்ச் பவுன்சரில் வீழ்த்திய அதே ஓவரில் 1 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார் வாட்சன். இந்த ஓவரை கொஞ்சம் டைட் செய்திருந்தால் கூட கொஞ்சம் நெருக்கடியாக அமைந்திருக்கும், ஆனால் வாட்சன் இருந்த மூடிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த ரணகள அதிரடியிலும் ரஷீத் கானை ஒன்றும் அசைக்கக் கூட முடியவில்லை. அவர் 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார், 4வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 4 ஓவர்களில் 25 என்று முடிந்தார். அவருக்கு இது சிறந்த ஐபிஎல் தொடராக அமைந்தது. அதாவது திட்டம் என்னவெனில் ரஷீத் கான் ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடி கடந்து செல்வதாகும்.

முதல் ஓவரே புவனேஷ்வர்குமார் அதி அற்புதமாக ஸ்விங் செய்து மெய்டன் ஓவரை வீசினார். 2வது ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாக வீசி டுபிளெசிஸின் ஒரு பவுண்டரியுடன் முடித்தார். புவனேஷ்வர் குமார் மீண்டும் ஒரு ஓவரை டைட்டாக வீசி 2 ஓவர்களில் 1 மெய்டன் 5 ரன்கள் என்று நெருக்கடி கொடுக்க வாட்சன் 10 பந்துகளில் 0. தன் 11வது பந்தில் சந்தீப் சர்மாவை பவுலருக்குப் பின்னால் பவுண்டரி அடித்தவர் நிற்கவில்லை, நிறுத்த முடியவில்லை. இதே ஓவரில் டுபிளெசிஸ் சந்தீப்பின் வேகம் குறைக்கப்பட்ட விரலிடுக்கு பந்தில் நேராக பவுலர் தலைக்கு மேல் கொடியேற்ற சந்தீப் சர்மாவே அதனைப் பிடித்தார். குமார் தன் முதல் ஸ்பெல்லில் 3 ஓவர்கள் 9 ரன்கள்தான்!! பவர் பிளே முடிய இருந்த 6வது ஓவரில் ஷேன் வாட்சன் ஆரம்பித்தார். சந்தீப் சர்மாவை டி20 ஸ்டைல் ஷாட்டில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ். பிறகு மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி. இவையெல்லாம் நல்ல பந்துகள் அல்ல என்பது வேறு விஷயம். பவர் பிளே முடிவில் 35/1.

7வது ஓவரில் சித்தார்த் கவுல் சென்னைக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார். முதல் பந்தே வாட்சனுக்கு வாகாக அவர் கால்காப்பில் வீச அங்கு போட்டபோதெல்லாம் வாட்சன் தன் வாழ்நாள் முழுக்க ஆன் திசையில் சிக்ஸ் அடித்துள்ளார், இந்தப் பந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. இதே ஓவரில் ரெய்னாவுக்கு இந்தத் தொடர் முழுதும் பவுலர்கள் சில இலவச பவுண்டரிகளை வழங்கியது போல் கவுல் மீண்டும் ஒரு லெக் திசை ஷார்ட் பிட்ச் அசிங்கமான பந்தை வீச பவுண்டரி ஆனது. மீண்டும் லெக் திசையில் ரெய்னா பவுண்டரி அடிக்க ஒரு ஓவரில் 16 ரன்கள். ரஷீத் கான் தன் முதல் ஓவரை டைட்டாக வீச எச்சரிக்கையுடன் 5 ரன்கள்தான் எடுக்கப்பட்டது. ஆனால் கவுல் ஓவரை கட் செய்திருக்க வேண்டிய வில்லியம்சன் மீண்டும் அவரிடமே கொடுக்க மீண்டும் இரண்டு விரலிடுக்கு மெதுவான பந்துகளில் ஒன்று சிக்ஸ், ஒன்று பவுண்டரி. 16 ரன்கள்! கவுல் 2 ஓவர்களில் 32 ரன்கள். ஷாகிப் அல் ஹசன் சற்று தாமதமாகக் கொண்டு வரப்பட மோசமான லெக் திசை பந்து மிட்விக்கெட்டில் வாட்சன் மட்டையிலிருந்து சிக்ஸ் ஆக 33 பந்துகளில் 51 என்று வந்தார் வாட்சன். இதே ஓவரில் ரெய்னாவுக்கும் ஒரு இலவசப் பந்து சிக்ஸ் ஆனது. ஷாகிப் ஒரு ஓவர் 15 ரன்கள்.

12 ஓவர்களில் 104/1 என்று இருந்த போது சந்தீப் சர்மா 13வது ஓவரை வீசினார், ஷேன் வாட்சன் மைதானம் நெடுக பந்தை சிதறடித்தார், புல்டாஸ்கள், வேகம் குறைந்த விரலிடுக்குப் பந்துகள், ஆஃப் வாலி என்று சொதப்பலாக வீச 4,6,6,6, வைடு, 4, என்று 27 ரன்கள் விளாசப்பட்டது.

ரெய்னா ஒரு முனையில் உறுதுணை இன்னிங்சை ஆடி 24 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32 எடுத்து பிராத்வெய்ட்டின் ஷார்ட் பிட்ச் பவுன்சரில் விக்கெட் கீப்பரின் அபாரமான கேட்சுக்கு வெளியேறினார். இதை முதலிலேயே செய்திருக்கலாம். அதே ஓவரில் வாட்சனிடம் பிராத்வெய்ட் சிக்க ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 97 ரன்கள் வந்தார் வாட்சன். பிறகு ரஷீத் கான் பந்தை சிங்கிள் தட்டி 51வது பந்தில் சதம் கண்டார் வாட்சன். சதம் கண்டதைக் கொண்டாட ரஷீத் கானையே 2 பவுண்டரிகள் விளாசினார். மீண்டும் கவுல் வந்தார், கவுல் மீது இவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை மீண்டும் 2 பவுண்டரிகளை விளாசினார். கடைசியில் 19வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரி அடித்தார் ராய்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் 2018 ஐபிஎல் சாம்பியன்கள்!!. புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் 17 ரன்கள் சந்தீப் சர்மா 4 ஓவர்கள் 52 ரன்கள். கவுல் 3ஓவர்களில் 43 ரன்கள். பிராத்வெய்ட் 2.3 ஓவர்களில் 27 ரன்கள், ஆக இவர்கள் மூவரும் சேர்ந்து 9.3 ஓவர்களில் 122 ரன்களை கொடுத்தாகிவிட்டது. எப்படி வெற்றி சாத்தியமாகும், ஷாகிப் அல் ஹசன் 1 ஓவர் 15 ரன்கள். தோனி இறங்க வேண்டிய தேவையில்லாமலேயே சிஎஸ்கே வெற்றி. தோனியின் வெற்றி சிக்சரைப் பார்க்க நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ ஏமாற்றம்தான். ரெய்னா வாட்சன் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 117 ரன்களைச் சேர்த்து சன் ரைசர்ஸுக்குக் குழி தோண்டினர்.

சிஎஸ்கே பவுலிங் அபாரம்.. மட்டுப்பட்ட சன் ரைசர்ஸ்

williamson%20Staumpedjpg

வில்லியம்சன் ஸ்டம்ப்டு, பவுலர் கரன் சர்மா, தோனி ஸ்டம்பிங்.

 

சிஎஸ்கேயில் வழக்கம் போல் லுங்கி இங்கிடி, தீபக் சாஹர் மிக அருமையாகத் தொடங்கினர். ஹர்பஜனுக்குப் பதிலாக தோனி, கரன் சர்மாவை எடுத்தது உடனடியாகப் பலன் கொடுத்தது, கோஸ்வாமி இல்லாத 2வது ரன்னை எடுக்கப் போக ஸ்கொயர் லெக்கில் ஓடி வந்து கரண் சர்மா பந்தை தோனியிடம் அடிக்க ரன் அவுட் ஆனார். கரண் சர்மா வேகமான கால்கள் உடையவர். தோனி அவரை எடுத்தது இன்னொரு விதத்திலும் முக்கியத்துவமானது. 3 ஓவர்கள் வீசி 25 ரன்களில் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் அபாயகரமாக திகழ்ந்த போது ஒரு பந்தை வெளியே வீசி இறங்கி வந்தவரை பீட் செய்ய தோனி ஸ்டம்பிங்கை முடித்தார், இது திருப்பு முனை விக்கெட், இன்னொரு முறை தோனியின் அணி மாற்றம் மிக அற்புதமாக வேலை செய்தது.

கோஸ்வாமி அவுட் ஆன பிறகு வில்லியம்சன் தவண் இணைந்து ஸ்கோரை 6 ஓவர்களில் 42/1 என்று கொண்டு வந்தனர்.

25 ரன்கள் எடுத்த தவண் ஜடேஜாவின் முதல் ஓவரில் பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் ஜடேஜாவின் 2வது ஓவர் 2 பவுண்டரிகளோ 1 சிக்சருடன் ஷாகிப், வில்லியம்சன் கையில் சாத்துமுறையாக 17 ரன்கள் வந்தது. சாஹர் தன் அருமையான ஸ்பெல்லை 4 ஓவர்கள் 25 என்று முடித்திருந்தார். பிராவோ 22 ரன்களை 2 ஓவர்களில் விட்டுக் கொடுத்தார்.

36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 எடுத்த வில்லியம்சன் கரண் சர்மாவிடம் ஸ்டம்ப்டு ஆக, யூசுப் பத்தான் இறங்கினார். யூசுப் பத்தான் சில அடிகளைச் சாத்த 12 பந்துகளில் 21 என்றும் ஷாகிப் 13 பந்துகளில் 22 என்றும் 15வது ஓவரில் சன் ரைசர்ஸ் ஸ்கோர் 126/3 என்று இருந்தது. பிராவோவிடம் ஷாகிப் அல் ஹசன் 23 ரன்களில் வெளியேறினார். புல்டாஸை நேராக எப்படி கவரில் ஜடேஜாவிடம் அடித்தார் என்று புரியவில்லை.

யூசுப் பத்தான் 25 பந்துகளில் 45 ரன்கள் என்று நல்ல இன்னிங்சை ஆட, ரஷீத் கானை இறக்கி அவரது பார்மை பயன்படுத்திக் கொள்ளாத வில்லியம்சன் பிராத்வெய்ட்டை இறக்கினார், அவர் 11 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தாலும் 5 பந்துகளை அவர் டாட்பால்களாக விட்டார். ரன்கள் எடுத்த 6 பந்துகலில் 3 சிக்சர்கள் மற்றும் 3 ரன்கள்தான். இந்த டாட்பால்களை விடாமல் 2-3 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தல் ஒருவேளை 190க்கும் மேல் ஸ்கோர் சென்றிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் லுங்கி இங்கிடி, தாக்கூர் அருமையாக வீசினர். இங்கிடி 4 ஓவர்களில் 26 ரன்கள் ஒரு விக்கெட். 178 ரன்களுக்கு மடிந்தது ஹைதராபாத். ஆனாலும் இந்தப் பிட்சில் இது வெற்றிக்கான ஸ்கோர்தான். வாட்சன் முதல் 10 பந்துகளுக்குப் பிறகு பொங்கி எழுவார் என்று யாருக்குத் தெரியும்.

தோனிக்கு இந்தத் தொடரின் சிறந்த திடீர் முடிவுகளை, புத்தம் புதிய முடிவுகளை எடுத்த சிறந்த சிந்தனைக்கான பரிசு கிடைத்தது.

http://tamil.thehindu.com/sports/article24008005.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.