Jump to content

Recommended Posts

ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்

 
அ-அ+

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB

 
 
 
 
ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்
 
ஜெய்ப்பூர்:
 
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
 
அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே திரிபாதியுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 99 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், ரகானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகினார். அடுத்து ஆடிய கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர்.
 
201805191808443662_1_royal-3._L_styvpf.jpg
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.
 
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார்.
 
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/19180844/1164291/royal-challange-bangalore-need-165-runs-against-rajasthan.vpf

113/8 * (15.6/20 ov, target 165)
Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

பெங்களூரின் பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி! - 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்

 
 

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

ராஜஸ்தான் வீரர்கள்

 

Photo Credit: Twitter/IPL

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்தப் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இல்லாமல் ராஜஸ்தான் அணி களம் கண்டது. இதையடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ராகுல் திரிபாதி, ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் சேர்த்தார். ரஹானே 33 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் 165 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. கேப்டன் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு பார்த்திவ் படேலுடன் ஜோடி சேர்ந்த டிவிலியர்ஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில்  பார்த்திவ் படேல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி, மன்தீப் சிங், கிராண்ட்ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, பெங்களூர் அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த டிவிலியர்ஸும், 53 ரன்களில் நடையைக் கட்ட, பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய கைநழுவியது. பின் வரிசை வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ராஜஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், 19.2 ஓவர்களில் 134 ரன்களில் ஆட்டமிழந்தது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.  

https://www.vikatan.com/news/tamilnadu/125453-ipl-2018-rr-beat-rcb-by-30-runs.html

Link to comment
Share on other sites

34 ரன்கள் வித்தியாசத் தோல்வி நெருக்கமான போட்டி? ஆம் என்கிறார் ஸ்டீபன் பிளெமிங்

 

 
fleming

தோனி, பிளெமிங். | படம். | விவேக் பெந்த்ரே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடம் அடைந்த 34 ரன்கள் தோல்விக்கு பேட்ஸ்மென்களே காரணம் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

இந்தத் தோல்வி குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

 

பெரும்பாலான அணிகளுக்கு இறுதி ஓவர்களின் பவுலிங் பிரச்சினைகள் உள்ளன. பிராவோ கடந்த போட்டியில் எதிரணி 200 ரன்களுக்குச் செல்லாமல் 180க்கு மட்டுப்பட உதவினார். இதுதான் இந்த ஆட்டத்தின் போக்கு. இந்தத் தொடரில் பிராவோவுக்கு நல்ல நாட்கள் அமைந்தன, இந்தப் போட்டியில் அமையவில்லை, பவுலிங் நன்றாகத்தான் இருந்தது.

பேட்டிங்கில்தான் போட்டியை இழந்தோம். முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிகளை உருவாக்கவில்லை. எங்களிடம் முனைப்பு இருந்தது ஆனால் உத்வேகத்தை உருவாக்குவது கடினமாக அமைந்தது. பிட்ச் கொஞ்சம் வேகமாக மாறும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அவர்கள் பந்துகளை நன்றாகக் கலவையாக வீசினர்.

இடைவேளைக்குப் பிறகு ரெய்னா ஆட்டமிழந்தார், அங்கிருந்து ஆட்டத்தை நகர்த்திச் சென்றிருந்தால் ஆட்டம் வேறு விதமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் கேட்ச்களைப் பிடித்தனர், அழுத்தம் ஏற்படுத்தினர். இது நெருக்கமான ஆட்டம்தான், முக்கியத் தருணங்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

http://tamil.thehindu.com/sports/article23937114.ece?homepage=true

Link to comment
Share on other sites

பெங்களூரு வீரர்கள் கோபால், கவுதம் அபாரம்: ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது; ராஜஸ்தான் வெற்றி

 

 
rajastan

வெற்றி பெற்று பெங்களூருவை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்.   -  படம். | ஆர்.வி.மூர்த்தி.

ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவுகள் தகர்ந்தது. ராஜஸ்தான் அணியின் பெங்களூரு வீரர்களான ஸ்ரேயஸ் கோபால், மற்றும் கவுதம் ஆகியோரின் ஆட்டத்தினால் ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரு அணியை ஐபிஎல் 2018-லிருந்து வெளியேற்றியது.

கள நிலவரம் ஓர் உத்தேசம்:

 

மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகள் மற்றும் +0.384 நெட் ரன் ரேட்டுடன் உள்ளது, அடுத்த போட்டி டெல்லி டேர் டெவில்ஸுடன் ஆடவிருப்பது இரு அணிகளுக்கும் கடைசி போட்டி இதில் ஏற்கெனவே வெளியேறிய டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி பெற்று என்ன பயன்? கொல்கத்தா வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலும்... இன்னொரு இடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகள் எடுத்தும் நெட் ரன் விகிதம் மைனஸில் உள்ளது. கிங்ஸ் லெவன் சென்னையை வீழ்த்தினாலும் 14 புள்ளிகள் வந்தும் பயனில்லை ஏனெனில் நெட் ரன் விகிதத்தை மைனஸிலிருந்து பிளஸ் ஆக்குவது மிகக் கடினம், கொல்கத்தா இன்று தோற்றாலும் 14 புள்ளிகளுடன் நெட் ரன் விகிதம் மைனசில்தான் இருக்கப் போகிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் 165 ரன்கள் இலக்கை ஆர்சிபி 15.5 ஓவர்களில் எடுத்து வென்றிருந்தால் அது 14 புள்ளிகளுடன் பிளஸ் நெட் ரன் விகிதத்திலும் மும்பையுடன் போட்டியில் இறங்க வாய்ப்பிருந்தது. அதுவும் நடக்கவில்லை...

ஆகவே மும்பை இந்தியன்ஸ் தன் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலே போதுமானது... அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ‘ஸ்டேஜ்’ செட் ஆகிவிட்டது. இப்போது 3வது அணியாக மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃபுக்குத் தகுதி பெற்றால், 4வது அணி என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு மும்பை கடைசி போட்டியில் வென்றாலே போதுமானது என்ற நிலை உள்ளது, 4வது அணிக்கான போட்டி மற்ற 2 அணிகளுக்கு இடையேதான் , இதில் கிங்ஸ் லெவன் அணி கடைசியாக ஆடுவதால் இது நெட் ரன் விகிதத்தில் ராஜஸ்தான் அல்லது கொல்கத்தாவை முறியடிக்க வேண்டும்.

பெங்களூருவை முறியடித்த ராஜஸ்தான் அணியின் பெங்களூரு வீரர்கள்

பெயர்தான் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, அணியில் ஒரு பெங்களூரு வீரர் கூட இல்லை, ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷ்ரேயஸ் கோபால், கவுதம் என்ற பெங்களூரு வீரர்கள் இருந்தனர்.

கோபால் 4 பெரிய விக்கெட்டுகளைக் கைப்பற்ற கவுதம் விராட் கோலி என்ற முதலையை முறியடித்ததோடு 2 ஓவர்களில் 6 ரன்களையே விட்டுக் கொடுத்து, பேட்டிங்கில் கடைசியில் இறங்கி 5 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 14 முக்கியமான ரன்களை விளாசித் தன் பணியைச் செவ்வனே செய்தார். இந்த 2 பெங்களூரு வீரர்கள் பங்களிப்பும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவை சாலஞ்ச் இல்லாமல் ஆக்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. 18 ஓவர்களில் 136 என்றுதான் இருந்தது ராஜஸ்தான், ஆனால் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் இதில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி. இதனால் 164/5 என்று ஓரளவுக்கு மரியாதைக்குரிய ரன் எண்ணிக்கையை எட்டியது. ஆனால் இது வெற்றி ரன் எண்ணிக்கையாக இருக்கும் என்று ராஜஸ்தான் கருதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோலியை கவுதம் பவுல்டு செய்தது, பார்த்திவ் படேல், டிவில்லியர்ஸ், மொயின் அலி, மந்தீப் சிங் ஆகியோரை லெக் ஸ்பின்னர் ஸ்ரேயஸ் கோபால் அடுத்தடுத்து வீழ்த்தியது

98/6 என்று சரிவடைய 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஐபிஎல்-ஐ விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டது ஆர்சிபி.

இடையில் விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல் ஜோடி 34 பந்துகளில் 55 ரன்கள் கூட்டணி அமைத்து 8.2 ஓவர்களில் 75/1 என்ற வலுவான நிலையிலேயே இருந்தது.

shreyas%20Gopaljpg

ஷ்ரேயஸ் கோபால். | படம்: ஆர்.வி.மூர்த்தி.

 

அதன் பிறகுதான் ஷ்ரேயஸ் கோபால் தன் அருமையான லெக் ஸ்பின் மூலம் பார்த்திவ் படேல் (33), மொயின் அலி (1),டிவில்லியர்ஸ் (53) ஆகியோரை வீழ்த்தினார், இதில் மொயின் அலி மட்டுமே கோபாலிடம் அவரிடமே கேட்ச் ஆனார். மீது மூவரும் ஸ்டம்ப்டு அவுட். கிளாசன் தன் கிளவ் திறமையை வெளிப்படுத்தினார், கொலின் டி கிராண்ட் ஹோம் இடையில் இஷ் சோதி பந்தில் 2 ரன்களில் வெளியேறினார். சர்பராஸ் கான் 7 ரன்களையும் சவுதி மற்றும் சிராஜ் தலா 14 ரன்களை எடுத்தும் பயனில்லை, சற்று தூரத்திலேயே 134 ரன்களுக்கு பெங்களூரு கதை முடிந்தது. கோபால் 4 ஓவர்களில் 16 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் இறக்குவதன் பலனை மீண்டும் ஒரு முறை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அவருடன் ஜோப்ரா ஆர்ச்சரை இறக்கியது பயனளிக்கவில்லை, அவர் உமேஷ் யாதவ் வேகத்துக்கு டக் அவுட் ஆனார். அதன் பிறகு ரஹானே (33), திரிபாதி இணைந்து 99 ரன்களை சேர்த்தனர். திரிபாதி 12வது ஓவரில் அரைசதம் அடித்தார், கொலின் பந்தை நேராக ஒரு சிக்சரும் அடித்தார். மீண்டும் உமேஷ் யாதவ் வர ரஹானேவி எல்.பி. செய்தார். சஞ்சு சாம்சன் அடுத்த உமேஷ் பந்தை நேராக கையில் அடித்து டக் அவுட் ஆனார்.

கிளாசன் அருமையான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 21 பந்துகளில் 32 ரன்களை அவர் எடுக்க அதில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ், இந்த சிக்ஸ் சிராஜின் வைடு யார்க்கரில் பாயிண்டுக்கு மேல் சென்ற அபார ஷாட்டாகும். கவுதம் கடைசி ஓவரில் சவுதியை 2 சிக்சர்கள் அடித்து 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் ராஜஸ்தான் 164/5. ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உமேஷ் யாதவ் 25 ரன்களுக்கு 3 விக்கெட், சாஹல் 4-26 என்று சிக்கனம் காட்டினார். இறுதியில் ஆர்சிபி தோற்று வெளியேறியது.

http://tamil.thehindu.com/sports/article23937694.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 
அ-அ+

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. #IPL2018 #VIVOIPL #SRHvKKR

 
 
 
 
ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
 
ஐதராபாத்:
 
ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.
 
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
201805200000498268_1_PTI5_19_2018_000253B._L_styvpf.jpg
 
அப்போது அணியின் எண்ணிக்கை 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
 
கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜவோன் சியர்லஸ், ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 173 ரன்களை இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்தது.
 
201805200000498268_2_RON_4703._L_styvpf.jpg
 
இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் 3.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 50-ஐ தாண்டியது. 4-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ உட்பட 29 ரன்கள் எடுத்தார். அதன்பின் ராபின் உத்தப்பா களமிறங்கினார்.
 
கொல்கத்தா அணி 6 ஓவரின் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது. லின், உத்தப்பா இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடியும் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய லின் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். 
 
201805200000498268_3_A70I1060._L_styvpf.jpg
 
14-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை லின் தூக்கி அடித்தார். அந்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு மணிஷ் பாண்டே சிறப்பான முறையில் கேட்ச் பிடித்தார். லின் 43 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
 
கொல்கத்தா அணி 15 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. உத்தப்பா 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து நிதிஷ் ராணா களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.  
 
201805200000498268_4_RON_5232._L_styvpf.jpg
 
இறுதியில் கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக்  ரன்களுடன் களத்தில் இருந்தார். ஐதராபாத் அணி பந்துவீச்சில் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. #IPL2018 #VIVOIPL #SRHvKKR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/19234731/1164331/IPL-Kolkata-Knight-Riders-beat-Sunrisers-Hyderabad.vpf

Link to comment
Share on other sites

பிளே ஆஃப் சுற்றில் நுழைவது யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் இன்று மோதல்; மற்றொரு ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

 

Match%20summ13052018col
20CHPMUASHWIN

அஸ்வின்   -  THE HINDU

20CHPMUROHITSHARMA

ரோடிஹித் சர்மா   -  AFP

 
 
20CHPMUASHWIN

அஸ்வின்   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் இன்று இரவு புனேவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தொடரின் முதல் பகுதியில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த நிலையில் பிற்பாதியில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. அந்த அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

 

-0.490 ரன்ரேட்டை கொண்டு உள்ள பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுனால் சென்னை அணிக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் மற்ற அணிகள் தங்களது லீக் ஆட்டங்களை நிறைவு செய்த பின்னரே தனது இறுதி லீக் ஆட்டத்தை விளையாடுகிறது.

இதனால் எத்தனை ஓவர்களில் இலக்கை அடைய வேண்டும் அல்லது எத்தனை ஓவர்களில் எதிரணியை மடக்க வேண்டும் என்பதில் பஞ்சாப் அணிக்கு தெளிவு கிடைத்துவிடும். இந்த சீசனில் பஞ்சாப் அணி ஒருங்கிணைந்த குழுவாக செயல்படத் தவறியது. 652 ரன்கள் குவித்துள்ள கே.எல்.ராகுல் மட்டுமே பேட்டிங்கில் தொடர்ச்சியாக சீரரான திறனை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எவருமே தங்களது திறனுக்கேற்ப சீரான திறனை வெளிப்படுத்தவில்லை.

மும்பை அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் 3 ரன்களில் வெற்றி வாய்ப்பை பஞ்சாப் அணி தவறவிட்டிருந்தது. சீசனின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ் கெயிலிடம் இருந்து பிற்பாதி தொடரில் வெற்றிக்கான பங்களிப்பு தொடரவில்லை. ஆரோன் பின்ச், கருண் நாயர், மார்கஸ் ஸ்டாயினிஸ், மயங்க் அகர்வால், யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு தேவையான நேரங்களில் பங்களிப்பு செய்யாதது பெரிய பின்னடைவாக உள்ளது.

இதேபோல் பந்து வீச்சில் 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ஆன்ட்ரூ டை மட்டுமே பலம் சேர்த்து வருகிறார். பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க வேண்டுமானால் அஸ்வின் தலைமையிலான அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள சென்னை அணி கடைசி லீக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். டெல்லி அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஏறக்குறைய தோனி 4 ஓவர்களை சந்தித்த போதிலும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கத் தவறினார். மேலும் கடைசி 10 ஓவர்களில் உத்வேகம் இல்லாத ஆட்டத்தையே சென்னை அணி மேற்கொண்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக தோனி குழுவினர் மீண்டும் எழுச்சி கண்டால் அணியின் ஸ்திரத்தன்மை மேலும் வலுப்பெறும்.

 

மும்பை - டெல்லி

முன்னதாக பிற்பகல் 4 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றை இழந்துள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது. 13 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி +0.384 ரன் ரேட்டை கொண்டிருப்பது சாகதமான விஷயமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றை பிரகாசமாக்கிக் கொள்ளும். பஞ்சாப் அணிக்கு எதிராக பொலார்டு, பும்ரா ஆகியோர் பார்முக்கு திரும்பியிருப்பது அணியை வலுவடையச் செய்துள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரையில் இழப்பதற்கு ஒன்றும் இல்லாததால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23939745.ece

Link to comment
Share on other sites

மூன்றாவது அணி... ஆறாவது முறை... பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா! #SRHvKKR

 
 


ஹைதராபாத், சென்னையைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2018 ஐ.பி.எல் சீசனில் இருந்து வெளியேறிய சில மணி நேரத்தில், ஆறாவது முறையாக பிளே ஆஃப் சென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா. #SRHvKKR

#SRHvKKR

 

ஹைதராபாத் அணியில் புவி, பிரத்வெய்ட் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என ஷிவம் மவிக்குப் பதிலாக பியூஸ் சாவ்லாவை டிக் செய்தது கொல்கத்தா. சன்ரைசர்ஸ் ஏற்கெனவே பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிட்டதால், பரிச்சார்த்த முயற்சியாக கோஸ்வாமியை ஓபனிங் இறக்கிவிட்டது. இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடிய கோஸ்வாமி, முதன்முறையாக பேட் செய்யும் வாய்ப்பு பெற்றார். அதுவும் ஓப்பனிங். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த கொல்கத்தாவுக்கு முதல் ஓவரை வீசவந்தவர் நித்திஷ் ராணா.

பவர்பிளேவில் எப்படியும் டாப் ஆர்டரை ஆட்டம் காணச் செய்யும் முயற்சியில் இருந்த தினேஷ் கார்த்திக், ஐந்து ஓவர்களில் ராணா, பிரஷித், ரஸெல், சுனில் நரைன், பியூஸ் சாவ்லா என ஐந்து பெளலர்களை மாற்றிவிட்டார். ஆனாலும், விக்கெட் விழவில்லை. மாறாக, ரஸெல் ஓவரில் 20 ரன்கள் சேர்த்தது தவான் – கோஸ்வாமி ஜோடி. சுனில் நரைன் பந்தில் ஷிகர் தவன் சிக்ஸர் பறக்கவிட, பவர்பிளேயில் போதுமான ரன் சேர்த்துவிட்டது ஹைதராபாத். ஆறு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன். ரன்ரேட் 10.

#SRHvKKR

குல்தீப் பந்தை இறங்கி வந்து லாங் ஆனில் சிக்ஸர் அடிக்க முயன்ற கோஸ்வாமி, ரஸெலிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், முதலுக்கு மோசமில்லை ரேஞ்சில், ஓபனிங் இறங்கியதற்கு 35 ரன்கள் எடுத்துவிட்டார். ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி, இன்ஃபார்மில் இருப்பதை அறிவித்தார். அதை நிரூபிக்கும்விதமாக குல்தீப் பந்தில் ஸ்லாக் ஸ்வீப் மூலம் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த சீசனில் மற்ற ஃபீல்டர்கள் கஷ்டமான கேட்ச்களை எல்லாம் பறந்துபறந்து பிடித்துக்கொண்டிருக்கையில் கையில் வந்து விழுந்த லட்டு கேட்ச்சை மிஸ் செய்தார் சுனில் நரைன். கண்டம் தப்பினார் ஷிகர் தவன். சியர்லஸ் வீசிய அதே ஓவரில் பேக் டு பேக் சிக்ஸர் பறக்கவிட்ட வில்லியம்சன், மீண்டும் ஒரு சிக்ஸருக்கு ஆசைப்பட்டு டீப் பாயின்ட் திசையில் இருந்த ரஸெலிடம் கேட்ச் கொடுத்தார். வில்லியம்சன் 36 ரன்களில் அவுட்.  

மறுமுனையில் ஷிகர் தவன் சத்தமின்றி அரைசதம் கடந்தார். 50 அடித்த கையோடு பிரஷித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். ரஸெல் பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தாலும் மணீஷ் பாண்டேவின் டாட் பால் பிரச்னை தீரவேயில்லை. இவரை அணியில் தக்கவைப்பது குறித்து அடுத்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் சிந்திக்க வேண்டிய நேரம் இது என கமென்ட் அடித்தனர் ரசிகர்கள். ஐந்து ஓவர்களே இருக்கிறது. பிரத்வெய்ட்டை இறக்கிவிட்டால் சிக்ஸர்கள் பறக்கவிடுவார். இல்லையெனில் அவரை பிளேயிங் லெவனில் எடுத்ததே வேஸ்ட் என்ற சூழல் இருந்தபோது இறங்கியது யுசுஃப் பதான். வந்த வேகத்தில் அவுட்டாகி தன்னை அந்த இடத்தில் இறக்கியது தவறு என்பதை நிரூபித்தார் யுசுஃப்.

#SRHvKKR

மிடில் ஓவர்களில் 10 ரன்ரேட்டை மெயின்டன் செய்த சன்ரைசர்ஸ், டெத் ஓவர்களில் மிடில் ஓவர் ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடியது. மணீஷ் பாண்டே அப்போதும் சிங்கிள் தட்டுவதிலேயே தீவிரமாக இருந்தார். பிரத்வெய்ட் வந்துட்டார். இனி சிக்ஸர் பறக்கும் என எதிர்பார்த்தபோது, அவர் ரஸெல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து  3 ரன்களில்  பெவிலியன் திரும்பினார்.

சிக்ஸர்கள் பறக்கவிட வேண்டிய கடைசி ஓவரில், வழக்கம்போல தெமேவென தூக்கிக் கொடுத்து அவுட்டானார் மணீஷ் (25). பவுண்டரி அடித்த திருப்தியுடன் ஷகிப் வெளியேற, அடுத்த பந்திலேயே ரஷித் கான் அவுட். கடைசி பந்தில் புவி ரன் அவுட். ஆக, கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட். கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. 12.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்த சன்ரைசர்ஸ் கடைசி 7  ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. 31 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.  

#SRHvKKR

கொல்கத்தா 129 ரன்களை எடுத்துவிட்டால் நெட் ரன்ரேட்டில் ராஜஸ்தானை முந்திவிடலாம் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ப ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட முடிவு செய்திருந்தது கிறிஸ் லின் – சுனில் நரைன் ஜோடி. புவி வீசிய முதல் ஓவரில் லின் அட்டகாசமாக இரண்டு பவுண்டரிகள் அடிக்க, சந்தீப் சர்மா பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி, இறங்கி வந்து லாங் ஆனில் சிக்ஸர் என மிரட்டினார் சுனில் நரைன். சித்தார்த் கவுல் பந்தில் மிட் விக்கெட்டில் சிக்ஸர், நக்கிள் பாலில் பவுண்டரி விரட்ட, ஸ்கோர் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41.

வேகப்பந்து எடுபடாததை உணர்ந்து ஸ்பின்னர் ஷகிப் அல் ஹசனிடம் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். ஸ்கொயர் லெக்கில் 4, லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்ட சுனில் நரைன் அதே சூட்டோடு மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றபோது மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தார். நரைன் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட். யார் வந்தாலும் போனாலும் ஸ்ட்ரைக்கில் இருப்பவர்கள், பவர்பிளேவில் ரன்ரேட்டை பத்துக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். பவர்பிளே முடிவில் கே.கே.ஆர் ஸ்கோர் 66/1.

#SRHvKKR

ரஷித் கான் ஓவரில் ஹைதராபாத்துக்கு ஒரு திருப்புமுனை கிடைத்திருக்கும். அதை மிஸ் செய்தனர். உத்தப்பா கொடுத்த கேட்ச்சை ரஷித் கோட்டைவிட்டார். சந்தீப் சர்மா பந்தில் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார் லின். அணியின் ஸ்கோரும் சதம் தொட்டது. தன் பங்குக்கு ஷகிப் அல் ஹசன் பந்தில் லாங் ஆனில் சிக்ஸர், கட் ஷாட் மூலம் பவுண்டரி என உத்தப்பா ஆக்சிலேட்டரை மிதித்தார். அதற்குள் சித்தார்த் கவுல் பந்தில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து லின் வெளியேறினார்

33 பந்தில் 51 ரன் தேவை. கொல்கத்தா வெற்றியை நெருங்க, நெருங்க எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது. புவி லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார். அதை அலட்டாமல் ஃபைன் லெக் பக்கம் சிக்ஸர் அனுப்பினார் டிகே. தினேஷ் கார்த்திக்கும், உத்தப்பாவும் மிட் ஆனில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓடினர். ரஷித் ஓவரில் உத்தப்பா 4,6 என வெளுத்துக்கட்டினார். ஆனால், பிரத்வெய்ட் வீசிய ஒரு ஷார்ட் பாலில் விக்கெட்டை இழந்தார் உத்தப்பா (45). வேகமாக மேட்ச்சை முடிக்க நினைத்த ரஸெல், வேகமாக பெவிலியன் திரும்பினார். டிகே- ராணா இருவரும் மேட்ச்சை கடைசி ஓவர் வரை கொண்டுபோக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதுகூட பரவாயில்லை. வெற்றிக்கு ஒரு ரன் தேவை எனும்போது ராணா அவுட்டானார். கொட்டாவி வந்தது. `எப்படா முடிப்பிங்க’ என புலம்பாத குறைதான். ஒருவழியாக, டிகே ஆட்டத்தை முடித்து வைத்தார். கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

https://www.vikatan.com/news/sports/125480-kkr-enters-playoffs-for-the-sixth-time.html

Link to comment
Share on other sites

மும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை? #CSKVSKXIP PREVIEW

 
 

செம கெத்தாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்திருக்க வேண்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் பரிதாபகரமான நிலையில் வந்து நிற்கிறது. 2018 ஐபிஎல்-ன் தொடக்கத்தில் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்று அசத்திய அணி பஞ்சாப். ஆனால் கடைசி ஏழு போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான அணியாக மாறி நிற்கிறது.  #CSKVSKXIP

CSKVSKXIP

 


பாயின்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னைக்கும், ஏழாவது இடத்தில் இருக்கும் பஞ்சாபுக்கும் இடையேதான் இன்றைய போட்டி. பஞ்சாப் ஏழாவது இடத்தில் இருந்தாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பிருக்கிறது. அதற்கு முதலில் இன்று நான்கு மணிக்கு தொடங்கும் மேட்சில் மும்பை, டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். அப்படி மும்பை தோல்வியடைந்தாலும் பஞ்சாப் ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிடமுடியாது. சென்னையை 53 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 38 பந்துகள் மீதம் உள்ள நிலையில் தோற்கடிக்கவேண்டும். அப்படி மும்பை தோல்வியடைந்து, சென்னையை இப்படி தோற்கடித்தால் மட்டுமே பஞ்சாப் ஐதராபாத், சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு அடுத்தபடி நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்குள் நுழையும்.

CSKVSKIXP

பெருவெற்றி பெறுமா பஞ்சாப்?

சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியின் பரபரப்பு டெல்லி கையில்தான் இருக்கிறது. ஐபிஎல்லை விட்டு வெளியேறியிருந்தாலும் மோசமான அணியாக வெளியேறிவிடக்கூடாது என வெறிகொண்டு ஆடும் டெல்லி மும்பையை இன்று தோற்கடித்தால் மட்டுமே சென்னை- பஞ்சாப் மேட்ச் களைகட்டும். மும்பை தோல்வியடைந்துவிட்டால் பஞ்சாபுக்கு பெருவெற்றி வேண்டும். மாறாக சென்னை பெருவெற்றிபெற்றால் பாயின்ட்ஸ் டேபிளில் ஐதராபாத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடிக்கும். 
பஞ்சாபின் தொடர் தோல்விகளுக்கு காரணம் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் கேப்டன் அஷ்வினும், அணியின் இயக்குநர் ஷேவாக்கும் திணறுவதுதான். கெய்ல், கேஎல் ராகுல் ஓகே... ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பஞ்சாபின் பெரும் சொதப்பல். ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் மட்டுமே இதுவரையிலான 13 போட்டிகளில் 652 ரன்கள் அடித்திருக்க, பஞ்சாபின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாகவே 13 மேட்ச்களில் 674 ரன்கள்தான் அடித்திருக்கிறார்கள். கருண் நாயர், ஆரோன் ஃபின்ச், மாயங்க் அகர்வால், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி என படா பேட்ஸ்மேன்கள் இருந்தும் இவர்கள் எவரும் ஒருங்கிணைந்து ஆடாததே பஞ்சாபின் பலவீனம்.

அதேப்போல் ஆண்ட்ரு டை, முஜீப் என இருவரை நம்பித்தான் பெளலிங்கும் இருக்கிறது. காயம் அடைந்திருக்கும் முஜீப் உர் ரஹ்மான் இன்று ஃபிட்னஸ் டெஸ்ட்டில் தேர்வுபெற்றால் மட்டுமே பஞ்சாபின் பெளலிங் டீம் தெம்பாகும். முஜீப் அணிக்குள் வருவதற்கான சாத்தியங்கள் இன்று அதிகமாகவே இருக்கிறது.

CSKVSKIXP

 அன்று... இன்று!

முதல் மேட்சில் சென்னையை தோற்கடித்திருக்கிறது பஞ்சாப். அந்த வெற்றி தந்த அனுபவத்தில்தான் இன்று சென்னையை எதிர்கொள்வார் பஞ்சாப் கேப்டன் அஷ்வின். முதல் மேட்சில் பஞ்சாபுக்கு நம்பிக்கைத் தந்தவர் கிறிஸ் கெய்ல். 33 பந்துகளில் 63 ரன்கள் அடித்து பஞ்சாபின் பேட்டிங்கிற்கு பவர் கொடுத்தார் கெய்ல். 197 ரன்கள் அடித்த பஞ்சாபிடம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை. 

கிட்டத்தட்ட அன்று சென்னைக்கு எதிராக விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் கொண்டே அஷ்வின் களம் இறங்குவார். ஆனால் யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனோஜ் திவாரி களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கலாம். மற்றபடி பேட்டிங், பெளலிங்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. மோஹித் ஷர்மா, ஆண்ட்ரு டை என வேகப்பந்து வீச்சாளர்களுடன் முஜீப், அஷ்வின், அக்ஸர் பட்டேல் என மூன்று ஸ்பின்னர்களும் இன்று பஞ்சாபில் இருப்பார்கள். காரணம் பஞ்சாபுக்கு ஸ்பின்னர்கள்தான் அதிக ரன்களை  விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதோடு வாட்ஸன், ராயுடு, டுப்ளெஸ்ஸி, பிராவோ ஆகியோரை சமாளிக்க ஸ்பின்னர்களே தேவை. பேட்டிங்கைப் பொருத்தவரை ராகுல், கெய்ல், கருண் நாயர், ஃபின்ச், மனோஜ் திவாரி, மாயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்குள் இருப்பார்கள்.

CSKVSKIXP
 

சென்னையின் ப்ளேயிங் லெவன்!

ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான முன்னோட்டமாகவே இன்றைய போட்டியை சென்னை ஆடும். கொல்கத்தாவுக்கு எதிரான  போட்டியைத்தவிர மற்ற போட்டிகளில் சரியாக பேட் செய்யாத சாம் பில்லிங்ஸை தோனி இன்றைய ப்ளேயிங் லெவனில் சேர்க்கமாட்டார் என நம்பலாம். அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்க கேப்டன் டுப்ளெஸ்ஸி அணிக்குள் இடம்பிடிப்பார். வாட்ஸன், டுப்ளெஸ்ஸி, ராயுடு, ரெய்னா, தோனி, ஜடேஜா, பிராவோ என்பதுதான் சென்னையின் பேட்டிங் லைன் அப்பாக இருக்கும். 
பெளலிங்கைப் பொருத்தவரை போன மேட்சில் ஆடிய அதே பெளலர்களே இன்றைய போட்டியில் இருப்பார்கள். லுங்கி எங்கிடி, தீபக் சாஹர், ஷ்ரதுல் தாக்கூர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோர் சென்னையின் முக்கிய பெளலர்களாக இருப்பார்கள்.


புனே பிட்ச்?!

புனேவில் இந்த சீஸனில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மூன்று போட்டிகளில் சேஸ் செய்த  அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன. இதுவரை ஆடிய போட்டிகளில் இந்த பிட்சில் டெல்லிக்கு எதிராக சென்னை அடித்த 211 ரன்கள்தான் அதிகபட்சம். அதேப்போல் பெங்களூரு அடித்த 127 ரன்கள்தான் குறைந்தபட்ச ஸ்கோர். சேஸிங் செய்ய ஏற்ற பிட்ச் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பெளலிங்கையே தேர்ந்தெடுக்கும். 
சென்னைக்கு இந்த மேட்சில் பெரிய பிரஷர் ஏதும் இல்லை. ஆனால் மும்பை டெல்லியிடம் தோல்வியடைந்தால் ப்ளே ஆஃப்க்குள் நுழைய வேண்டும் என்கிற கூடுதல் பிரஷருடன் பஞ்சாப் விளையாடும். ஆனால் எப்படிப்பார்த்தாலும் சென்னைக்கு எதிராக பஞ்சாப் பெருவெற்றி பெறுவது என்பது பெரும்கனவுதான்!

https://www.vikatan.com/news/sports/125475-will-kings-xi-punjab-qualify-into-play-off.html

Link to comment
Share on other sites

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? குவாலிபையரை தக்கவைக்குமா சென்னை?

 

 
Rohit_Rahane_Ashwin

 

ஐபிஎல்-இல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியின் முடிவிலேயே ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணி யார் என்பது தெரிந்துவிடும். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்டன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அடுத்த 2 இடங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூருவை தோற்கடித்து தனது பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. இதில், தோல்வியடைந்ததன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. 

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு நடந்த 2-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக முன்னேறியது. 

இந்நிலையில், ஐபிஎல் லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4வது அணி யார் என்பதை தீர்மானிக்கவுள்ளது.

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு நடைபெறும் 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?

மும்பை இந்தியன்ஸ்:

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி, டெல்லியை வீழ்த்தினாலே 14 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மும்பை அணியின் ரன் ரேட் பிளஸில் (+) உள்ளதால் 14 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் மற்றும் ஒருவேளை இரவு போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் மும்பை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால், மும்பை அணி டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பின்னர், சென்னையுடன் இரவு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி சாதரண வெற்றி இல்லாமல் மிகப் பெரிய வெற்றியை பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். 

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தால் 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும். 2வது பேட்டிங் செய்தால் 38 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டும். இதில், ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானைவிட ரன் ரேட்டில் அதிகம் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது இக்கட்டான நிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூருவை தோற்கடித்து 14 புள்ளிகளை பெற்றது. இருப்பினும், நெட் ரன் ரேட் மைனஸில் (-) உள்ளதால், இன்று நடைபெறும் 2 போட்டிகளின் முடிவு தான் ராஜஸ்தானின் பிளே ஆப் வாய்ப்பை தீர்மானிக்கவுள்ளது. இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். 

இதைத்தொடர்ந்து, இரவு நடைபெறும் 2வது போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைய வேண்டும். இல்லையெனில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் முதலில் பேட்டிங் செய்தால் 53 ரன்களுக்கு குறைவான ரன்களின் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 2-ஆவது பேட்டிங் செய்தால் 37 பந்துகளுக்கு குறைவான பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தான் வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், ராஜஸ்தானைவிட குறைவான நெட் ரன் ரேட்டை தான் பெற்றிருக்கும். அதனால், ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக முன்னேறிவிடும். 

குவாலிபையரை தக்கவைக்குமா சென்னை? 

பஞ்சாப் அணிக்கெதிராக இரவு நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், சென்னை அணி குறைவான வித்தியாசத்திலாவது தோல்வியடையவேண்டும். சென்னை அணி 2வது பேட்டிங் செய்தால் 76 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். முதல் பேட்டிங் செய்தால், 50 பந்துகளுக்கு குறைவான பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தோல்வியடைய வேண்டும். இல்லையெனில், ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது இடத்துக்கு முன்னேறிவிடும். 

முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணி குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்தால் எலிமினேட்டர் போட்டியில் விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு இருக்கும்.

3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் எலிமினேட்டர் 1 போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதைத்தொடர்ந்து குவாலிபையரில் தோல்வியடையும் அணியுடன் எலிமினேட்டர் 2 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும்.

http://www.dinamani.com/sports/2018/may/20/ipl-play-off--todays-games-going-to-be-the-decider-2923512.html

Link to comment
Share on other sites

பெங்களூரு... 2019-ல் இதயத்துக்குப் பதில் கோப்பை வெல்ல வாழ்த்துகள்! #RRvRCB

 
 

ஒவ்வொரு முறையும் இது சிறப்பான அணியாகத்தானே இருக்கிறது. ஏன் இது கோப்பை வெல்வதில்லை என தோன்றுவதுண்டு. அதை இந்த முறையும் நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ். இந்தத் தொடரில் கோலி, ஏ பி டி விக்கெட்டுக்கள் விழுந்தால், டிவியை அணைத்து விடலாம் என்கிற நிலையில் இருந்தது அவர்களது பெர்பாமன்ஸ். முதல் முறையாக பவுலிங்கில் சற்று ஷார்ப்பாகி இருந்தது பெங்களூரு அவ்வளவு தான், இந்தத் தொடருக்கான பாசிட்டிவ்.  #RRvRCB

#RRvRCB

 

பிளே ஆஃபுக்கு முன்னேறும் வாய்ப்பான நேற்றைய போட்டியில், பெங்களூரூ எங்கே சொதப்பியது என பார்ப்போம். டாஸ் வென்ற ராஜஸ்தான், அதிக ரன்களை குவிக்கும் நோக்கத்துடன் பேட்டிங் தேர்வு செய்தது. முதல்முறையாக பட்லர், பென் ஸ்டோக்ஸ் இல்லாத ராஜஸ்தான். இருவரையும் டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணி அழைக்க, லாலின், கிளார்ஸன் மாற்று வீரர்களாக களமிறங்கினர். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

ராகுல் திரிபாதியுடன் பட்லருக்கு பதிலாக பரிசோதனை முயற்சியாக ஆர்ச்சர் ஓப்பனிங் பிளேயராக களமிறக்கினார் ரஹானே. அதற்கு 'நல்ல பலன்' கிடைத்தது. ஆம், ஆட்டத்தின் இரண்டவது ஓவரிலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார் ரஹானே. அதிர்ஷடவசமாக திரிபாதி அதிரடி மோடுக்கு மாறியிருந்தார். பவர்பிளே முடிவில் 45 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். 

#RRvRCB

ஒன்பது விக்கெட் கையில் இருக்கிறது. எதிர்த்து ஆடிக்கொண்டிருப்பது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரூ. ஆனால், அதைப்பற்றிய யாதொரு கவலையும் இல்லாமல், ஆடிக்கொண்டிருந்தார் ரஹானே. இந்த ஐபிஎல் தொடரில், முதல் நான்கு இடங்களுக்குள் களமிறங்கும் வீரர்களில் ரஹானே அளவுக்கு மோசமான ஸ்டிரைக் ரேட் (119.11)  வைத்திருக்கும் வீரர் எவரும் இல்லை. ஒருவழியாய் ரஹானேவை LBW முறையில் அவுட் செய்தார் உமேஷ் யாதவ் 33 (31b 3x4 0x6) SR: 106.45 . 'அப்பாடா' என ஆர்வமாக மேட்ச் பார்க்க ஆரம்பித்த ராஜஸ்தான் ராயஸுக்கு அடுத்த பந்திலேயே செக் வைத்தார் உமேஷ். ஏற்கெனவே நிறைய பந்துகளை வீணடித்துவிட்டதால், முதல் பந்தையே அடித்து ஆட, ஆசைப்பட்டார் சஞ்சு சாம்சன். மொயின் அலியிடம் கேட் கொடுத்து, கோல்டன் டக் எடுத்தார் சஞ்சு. 

இறுதியாக கிளார்சன் 32 (21b 3x4 1x6) SR: 152.38 , கௌதமின்  14 (5b 0x4 2x6) SR: 280.00 அதிரடி ஆட்டத்தால், 164 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ராகுல் திரிபாதி 58 பந்துகளில், 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

#RRvRCB

15.5 ஓவர்களில் ராஜஸ்தானின் டார்கெட் சேஸ் செய்தால், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்கிற நிலை ராயல் சாலஞ்சர்ஸுக்கு.' பேட்டிங்கில் தான் டக் அவுட் , பவுலிங்கில் ஆவது ஏதாவது செய்' என இரண்டாவது ஓவரை வீச ஆர்ச்சரை அழைத்தார் ரஹானே. பார்த்தீவ் அந்த ஓவரில் இரு சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த கௌதம், தன் இரண்டாவது ஓவரை வீசினார். சும்மாவே சொதப்பும் ராயல் சாலஞ்சர்ஸுக்கு, இந்த 15.5 ஓவர் டார்கெட் எல்லாம் இன்னும் பிரஷரை ஏற்றியது. அடித்து ஆட முற்பட்ட கோலி, கௌதமின் பந்தில் ஸ்டம்புகள் சிதற போல்ட் ஆனார். ஆர்ச்சரின் பந்தில் மூன்று பவுண்டரி அடித்து, டார்கெட் நோக்கி விரைந்தார் ஏபிடி. 

#RRvRCB

'அங்கிட்டு உமேஷின் ஒரே ஓவரில் ரெண்டு விக்கெட்னா, இங்கிட்டு கோபாலின் ஓரே ஓவரில் ரெண்டு விக்கெட் ' என ஸ்கிரிப்ட் எழுதி இருப்பார்கள் போல. ஒரே ஓவரில் பார்த்திவ் பட்டேல், மொயின் அலி இருவரையும் காலி செய்தார் கோபால். வழக்கம் போல், மந்தீப் சிங், கிராண்ட் ஹோம் தங்கள் வேலையை செய்ய (அதான் பாஸ் அவுட் ), ஏபிடி மறுமுனையில் அரைசதம் கடந்தார். இந்த சீசனில் ஏபிடியின் ஆறாவது அரைசதம் இது. இறுதியாக, கோபால் பந்தில் ஏபிடியும் ஸ்தம்பிங் முறையில் அவுட்டாக, அப்புறமென்ன வழக்கம் போல், ' மௌக்கா மௌக்கா ' மோடுக்கு சென்றது ராயல் சாலஞ்சர்ஸ்.  4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார் ஸ்ரேயாஸ் கோபால் தன்னை அணியில் எடுக்காத கர்நாடக அணியை வைத்து செய்திருக்கிறார் கர்நாடகாவின் ஸ்ரேயாஸ் கோபால் என்று தான் தோன்றியது. 

#RRvRCB

ஏபிடி அவுட்டானதும் போட்டி முடிந்துவிட்டதா என்ன என்கிறீர்களா? . கோலி, ஏபிடி இருவரும் அவுட்டானால், அவர்களை அப்படியே பின் தொடர்ந்து அவுட் ஆவது தான் பெங்களூரு ஸ்டைல். அந்த அணியின் செல்லப்பிள்ளை சர்ஃபாஸ் கான், லாலின் பந்தில் அவுட். அடுத்த பந்திலேயே உமேஷ் யாதவும் அவுட். 50 ரன் அடித்த ஏபிடி தவறான ஷாட் மூலம் அவுட் ஆனால்கூட, சரி பரவாயில்லை என விடலாம். ஆனால், அதையே மற்றவர்களும் ஃபாலோ செய்வதெல்லாம் அபத்தம். அதுவும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு போட்டியில். சரி, அது தானே ராயல் சாலஞ்சர்ஸ். இதயத்துக்காக விளையாடும் அணி, கொஞ்சமேனும் மூளையோடும் விளையாடலாம். அடுத்த தொடரிலாவது கோப்பை வெல்ல வாழ்த்துக்கள். 

போட்டியில் வெற்றி பெற்றாலும், இன்றைய போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். 
டெல்லிக்கு எதிரான போட்டியில், மும்பையும், சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாபும் தோற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃபுக்கு முன்னேறலாம்.  

https://www.vikatan.com/news/sports/125495-goodbye-rcb-rr-waits-for-fortune.html

https://www.vikatan.com/news/sports/125495-goodbye-rcb-rr-waits-for-fortune.html

Link to comment
Share on other sites

ரிஷாப் பன்ட், விஜய் ஷங்கர் அதிரடி! மும்பை அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி #DDvsMI

 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 

டெல்லி வீரர் ரிஷாப் பன்ட்

 

Photo Courtesy: Twitter/IPL

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்துடன் களமிறங்கின. மும்பை அணியில் மெக்லெனஹனுக்குப் பதிலாக முஸ்தாபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் அவேஷ் கானுக்குப் பதிலாக லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டுள்ளார். 

டெல்லி அணியின் இன்னிங்ஸை பிரித்வி ஷாவுடன், மேக்ஸ்வெல் தொடங்கினார். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிரித்வி ஷா 12 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 22 ரன்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, விஜய் ஷங்கருடன் இணைந்த ரிஷாப் பன்ட் அதிரடியாக் ரன் குவிக்கத் தொடங்கினார். இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பன்ட், 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களில் விஜய் ஷங்கர் - அபிஷேக் ஷர்மா ஜோடி அதிரடியாக ரன் சேர்க்க, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பாண்ட்யா, பும்ரா, மார்கண்டேயா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

https://www.vikatan.com/news/tamilnadu/125503-ipl-2018-dd-sets-175-runs-target-for-mi.html

14/1 * (2/20 ov, target 175)
Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

 
அ-அ+

புனேயில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #CSKvKXIP

 
 
 
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
 
ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/20193750/1164461/chennai-super-kings-won-toss-select-bowl-first.vpf

Link to comment
Share on other sites

மும்பை அணியின் பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி! #DDvsMI

 
 

மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து மும்பை அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.  

டெல்லி வீரர்கள்

 

Photo Credit: Twitter/IPL

டெல்லி அணி நிர்ணயித்த 175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 3 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், லாமிசேன் வீசிய 4-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷான் பொறுமைகாக்க மறுமுனையில் லீவிஸ் அதிரடி காட்டினார். பவர் பிளேவில் 57 ரன்களைக் குவித்த மும்பை, 7வது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே லீவிஸூம் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 48 ரன்கள் எடுத்தார். லீவிஸைத் தொடர்ந்து கிரண் போலார்ட் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் லாமிசேன் வீசிய 10வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அப்போது மும்பை அணி, 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

 

இதையடுத்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஹர்ஷல் படேல் பிரித்தார். ரோகித் ஷர்மா 13 ரன்களுடன் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே பாண்ட்யாவும் 27 ரன்களுடன் நடையைக் கட்டினார். மும்பை அணியின் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவர்களில் பென் கட்டிங் அதிரடி காட்ட, மும்பை அணி வெற்றியை நோக்கி மெதுவாக முன்னேறியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பென் கட்டிங், ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த மும்பை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியை அடுத்து, மும்பை அணி நடப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி தரப்பில் போல்ட், லாமிசேன் மற்றும் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

https://www.vikatan.com/news/tamilnadu/125510-ipl-2018-dd-beat-mi-by-11-runs.html

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 
அ-அ+

புனேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #CSKvKXIP

 
 
 
 
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.

இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.

201805202156425701_1_lungi-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/20215642/1164481/kings-xi-punjab-154-runs-targets-to-chennai-super.vpf

70/4 *
Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்

 
அ-அ+

புனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvKXIP

 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்
 
 
புனே:
 
ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
 
அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.
 
 
201805202353235577_1_PTI5_20_2018_000130B._L_styvpf.jpg
 
இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.
 
அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
201805202353235577_2_A70I1861._L_styvpf.jpg
 
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்பதி ராயுடு, டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், மோகித் சர்மா வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். 4-வது ஓவரை அன்கித் ராஜ்பூட் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் டு பிளெசிஸ் ஆட்டமிழந்தார், தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ் முதல் பந்திலேயே போல்டானார்.
 
இதனால் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன்பின் ரெய்னா உடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
 
201805202353235577_3_PTI5_20_2018_000144B._L_styvpf.jpg
 
இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக் சஹார் களமிறங்கினார்.
 
15-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் சஹார் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய சஹார் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். 
 
 
201805202353235577_4_RON_6614._L_styvpf.jpg
 
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஒவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 45 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் அக்னித் ராஜ்பூட், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #VIVOIPL #CSKvKXIP

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/20235323/1164500/IPL-Chennai-Super-Kings-beat-Kings-XI-Punjab-by-5.vpf

Link to comment
Share on other sites

அனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மற்ற அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

 
அனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்
 
 
புனே:
 
ஐபிஎல் 11வது சீசன் போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் கலந்துகொண்ட இதில் ஒவ்வொரு அணியின் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை கைப்பற்றும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 
 
201805210256406726_1_SA-i-KAT34090._L_styvpf.jpg
 
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளை இரண்டு முறையும் வீழ்த்தியுள்ளது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/21025640/1164509/CSK-is-the-only-team-to-beat-all-the-7-opponents-at.vpf

Link to comment
Share on other sites

தனக்கு முன்னதாக ஹர்பஜன், சாஹரை களமிறக்கியது ஏன்? இது தான் தோனி வியூகம்

 

 
Bhajji,_Chahar,_Dhoni

 

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 

ஆனால், பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் முதல் பேட்டிங் என்பதால் குறைந்தபட்சம் 53 ரன்கள் வித்தியாசத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

பின்னர், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், கெயிலும் களமிறங்கினர். நேற்றைய போட்டியில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. சாஹர் மற்றும் நிகிடி இருவருக்கும் பந்து அருமையாக ஸ்விங் ஆனது. இதனால், அந்த அணியின் டாப் ஆர்டர் தாக்குபிடிக்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டியது. 

இறுதிக்கட்டத்தில் கருண் நாயரின் அதிரடியால் அந்த அணி 19.4 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

சென்னை அணிக்கு பந்து ஸ்விங் ஆனது போல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களான ராஜ்புத்துக்கும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால், சென்னை அணியும் திணறியது. ராயுடு, டு பிளேசிஸ் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஹர்பஜன் சிங் களமிறங்கினார். 

சற்று நேரம் தாக்குபிடித்த ஹர்பஜன் 19 ரன்கள் எடுத்து 4-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்த நிலையிலாவது தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதும் அவருக்கு பதிலாக சாஹர் களமிறங்கினார். இதனால், ரசிகர்கள் அனைவரும் குழம்பி போயிருந்தனர். ஆனால், சாஹர் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி 20 பந்துகளில் 39 ரன்கள் என அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றினார். சாஹரும் ஆட்டமிழந்த பிறகு தான் தோனி களமிறங்கினார்.

இதையடுத்து, தோனியும் ரெய்னாவும் சேர்ந்து சென்னை அணியை வெற்றி பெற வைத்து பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இந்த வெற்றிக்குப் பிறகு ஹர்பஜன் மற்றும் சாஹரை முன்னதாக இறக்கியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து, தோனி கூறியதாவது,

"பஞ்சாப்பின் பந்துவீச்சு வரிசையை பார்க்கும் போது அன்கித்துக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆனது. கேப்டனின் பார்வையில், முன்னதாக எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமோ அத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதனால் தான் குழப்பத்தை உண்டாக்க ஹர்பஜன் மற்றும சாஹரை முன்னதாக அனுப்பினோம். 

அதனால், பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களும் யார்க்கர்களுமாக வீசத் தொடங்கினர். பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தால் தங்களது திட்டப்படி சரியான இடத்தில், சரியான அளவில் பந்தை வீசி திணறடித்து இருப்பர். ஆனால், ஹர்பஜன் மற்றும் சாஹருக்கு எதிராக அவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்தாமல் அவர்களது சரியான இடம் மற்றும் அளவை மறந்துவிட்டனர். 
 
அதுமட்டுமில்லாமல், பிளே ஆஃபில் ஹர்பஜனும் சாஹரும் அவர்களது பங்கை அளிப்பர்" என்றார்.

தோனியின் இந்த வியூகம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இல்லையெனில், பல விமர்சனங்களுக்கு அவர் பதில் கூற கடமைப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். 

http://www.dinamani.com/sports/sports-news/2018/may/21/why-harbhajan-and-chahar-comes-in-before-dhoni-2924012.html

Link to comment
Share on other sites

அப்படி என்ன தான் சொன்னார் பிரீத்தி ஜிந்தா? சமூகவலைதளங்களில் வைரலாகும் விடியோ   

 

 
Preity_Zinta

 

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்று போட்டிகள் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) சென்னை - பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 

நேற்றைய சூழ்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி அணிக்கான இடத்துக்கு மும்பை, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், நேற்றைய முதல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இதில், மும்பை அணி வெற்றி பெற்றிருந்தால் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருக்கும். 

ஆனால், மும்பை அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், பிளே ஆஃப் நுழைவுக்கான போட்டி ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியாக குறைந்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி சென்னையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

இது ஒரு புறம் இருக்க பொதுவாகவே பஞ்சாப் அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளின் போதும் அந்த அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு அளித்து ஊக்கமளிப்பார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின் போதும் அவர் மைதானத்துக்கு வந்திருந்தார். அப்போது, அவர் தனது அருகில் இருந்த நபரிடம் ஏதோ கூற அது மைதானத்தில் உள்ள கேமராக்களில் பதிவாகி ஒளிபரப்பானது. 

அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் எடுத்து அதில், பிரீத்தி ஜிந்தா பேசுவதின் உதட்டசைவை வைத்து சமூகவலைதளவாசிகள் அவர் கூறியதை கணித்துள்ளனர். இதையடுத்து, அந்த விடியோவையும் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாக கூறப்படும் வாக்கியத்தையும் இணைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, அந்த விடியோ காட்சி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 

அந்த விடியோவில் பிரீத்தி ஜிந்தா கூறியிருப்பதாக கூறப்படுவது, 

"மும்பை அணி பைனலுக்கு முன்னேறாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது." (மொழி பெயர்க்கப்பட்டுள்ளது) 

ஆனால், நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4-ஆவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது.

http://www.dinamani.com/sports/2018/may/21/did-preity-zinta-says-about-mumbai-indians-failure-to-play-off-qualification-2924072.html

Link to comment
Share on other sites

பெளலர்களே பேட்ஸ்மேன்களாக...தோனியின் மாத்தி யோசி மாஸ்டர் பிளான்! #CSKvsKXIP

 
 

2018 ஐ.பி.எல்-ன் உச்சகட்ட டென்ஷன் நாள் நேற்று. டெல்லியை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை, டென்ஷனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கடைசியில் தோற்றுப்போனது. மும்பை தோற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்துக்கு முன்னேற, பஞ்சாப், ராஜஸ்தானை பின்னுக்குத்தள்ள வேண்டும் என்றால் சென்னையிடம் பெருவெற்றிபெறவேண்டும் என்கிற நிலை. #CSKvsKXIP

#CSKvsKXIP

 

சென்னை கேப்டன் தோனியும், பஞ்சாப் கேப்டன் அஷ்வினும் டாஸ் போடும்போது கிட்டத்தட்ட மும்பை வென்றுவிடும் என்கிற நிலையில்தான் இருந்தது. டாஸ் வென்ற தோனி, ஃபீல்டிங்கைத் தேர்தெடுத்தார். கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இரண்டு கேப்டன்களுமே ப்ளேயிங் லெவனில் என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதில்தான் இருந்தது. டு ப்ளெஸ்ஸியை நிச்சயம் அணிக்குள் தோனி அழைத்துவருவார் என எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே டு ப்ளெஸ்ஸி வந்தார். ஆனால், அவர் பில்லிங்ஸுக்கு பதிலாக இல்லாமல் வாட்ஸனுக்கு பதிலாக களமிறக்கப்பட்டதுதான் அதிர்ச்சி. 

அதேபோல் பஞ்சாப் கேப்டன் அஷ்வின் யுவராஜ் சிங்குக்கு பதிலாக கருண் நாயரை அணிக்குள் சேர்த்திருந்தார். முஜீபுக்கு காயம் குணமாகததால் அவருக்கு பதிலாக, முன்பு பஞ்சாப் அணியில் ரெகுலர் வீரராக இருந்த டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டார்.

கெய்ல் காலி!

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கெய்லும், ராகுலும் களம் இறங்கினர். பஞ்சாப் பேட்டிங் ஆட ஆரம்பித்த முதல் ஓவர் முடிவில்தான் மும்பையின் தோல்வி உறுதியானது. அதனால் இரண்டாவது ஓவரில் இருந்து பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள், ஆட்டம் அனல் பறக்கும் என கமென்ட்டேட்டர்கள் உற்சாகம் ஆனார்கள். காரணம் ப்ளே ஆஃப்க்குள் தகுதிபெற வேண்டும் என்றால் சென்னையை 53 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடிக்க வேண்டும். ஆனால், பட்டையைக் கிளப்ப வேண்டிய கெய்ல் சொதப்ப, ஏற்கெனவே சொதப்பல் ஆர்டரான மிடில் ஆர்டரும் சொதப்ப சுருண்டது பஞ்சாப்.

லுங்கி எங்கிடி வீசிய மேட்ச்சின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. கெய்ல் 2 ரன்களுக்கு அவுட். சாஹரின் மூன்றாவது ஓவரில் நான்கு ரன்களுடன் ஆரோன் ஃபின்ச் அவுட். நான்காவது ஓவரில் எங்கிடியின் பந்தை சரியாகக் கணிக்காமல் விட்ட கே.எல் ராகுலின் ஸ்டம்புக்கள் தெறித்தது. இந்த ஐபிஎல்-ன் டாப் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் 7 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் நான்கு ஓவர்களுக்குள் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பஞ்சாப்.

#CSKvsKXIP

மில்லரும், மனோஜ் திவாரியும் பவர்ப்ளே ஓவர்களை சமாளித்து விளையாடினர். 12-வது ஓவரில் மீண்டும் சொதப்பல் ஆரம்பித்தது. ஜடேஜாவின் பந்துவீச்சில் மனோஜ் திவாரி அவுட்டாக, அடுத்த ஓவரிலேயே பிராவோவின் பந்துவீச்சில் மில்லர் கிளீன் போல்டு. போன மேட்ச்சில் பெஞ்ச்சில் உட்காரவைக்கப்பட்ட கருண் நாயர்தான் பஞ்சாபின் பேட்டிங்கைக் காப்பாற்றினார். 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் கருண் நாயர். பிராவோவின் 19-வது ஓவரில் அவுட் ஆவதற்கு முந்தைய மூன்று பால்களையும், பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார் நாயர்.  153 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது பஞ்சாப். லுங்கி எங்கிடி நான்கு ஓவர்களில், 1 மெய்டன் ஓவர் போட்டு, 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

#CSKvsKXIP

ஈஸி டார்கெட்!

சென்னைக்கு டார்கெட்டாக 154 ரன்களே கொடுத்திருந்தது பஞ்சாப். இந்த டார்க்கெட்டை 17.4 ஓவர்களுக்குள் அடித்தால் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை சென்னை பிடிக்கலாம். 100 ரன்களுக்குள் சென்னையை சுருட்டினால் பஞ்சாப் ப்ளே ஆஃப்குள் நுழையலாம் என்கிற நிலையில் சென்னை பேட்டிங்கைத் தொடங்கியது.

இதற்கு முந்தைய போட்டிகள் வரை பேட்டிங் பிட்ச்சாக இருந்த புனே புட்ச், நேற்று இங்கிலாந்து பிட்ச் போல ஸ்விங்குகளால் தெறிக்கவிட்டது. முதல் ஆஃபில் லுங்கி எங்கிடியின் பந்துகள் ஸ்விங் ஆனதால் இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்களுடன் ஆரம்பித்தார் அஷ்வின்.
பந்து பயங்கரமாக ஸ்விங் ஆகும் என்பது அங்கித் ராஜ்புட்டின் முதல் ஓவரிலேய நிரூபணமானது. மேட்ச்சின் இரண்டாவது ஓவரான மோஹித் ஷர்மாவின் ஓவரில் விக்கெட். வேகமாக ஸ்விங் ஆகி வந்த பந்து அம்பதி ராயுடுவின் பேட் எட்ஜில் பட்டு கீப்பரிடம் போக 1 ரன்னில் அவுட் ஆனார் ராயுடு. அங்கித் ராஜ்புத்தின் மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள். டு ப்ளெஸ்ஸி 14 ரன்களில் இருக்கும்போது அங்கித் ராஜ்புத்தின் ஸ்விங் பேட்டில் பட்டு ஸ்லிப்புக்குப் போக ஆச்சர்யமாக கீழே விழுந்து பிடித்தார் கெய்ல். அடுத்தப்பந்திலேயே பில்லிங்ஸ் அவுட். ஸ்விங்காகி வந்தபந்து பில்லிங்ஸின் பேட்டைக் கடந்துபோக என்ன ஆனது என்று புரியாமல் முழித்தார் பில்லிங்ஸ். ஸ்விங்கை சரியாகக் கணிக்காமல் விட்ட பில்லிங்ஸ் போல்டாகி டக் அவுட் ஆனார். 

மாத்தியோசி மாஸ்டர் பிளான்!

இங்கேதான் தோனியின் மாத்தியோசி மாஸ்டர் பிளான் ஆரம்பம். பில்லிங்ஸுக்கு அடுத்தடியாக களம் இறங்கவேண்டிய தோனி உள்ளே வரவில்லை. அவருக்கு பதிலாக பின்ச் ஹிட்டரைப் போல ஹர்பஜன் சிங்கை களத்துக்குள் இறக்கினார். இங்குதான் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வார் என்பதை மற்ற கேப்டன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பந்து அதிகமாக ஸ்விங் ஆகிறது. பெளலர்கள் உள்ளே வந்தால் அவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே யார்க்கர், ஃபுல் லென்த் பந்துகளை வீசுவார்கள். லைன் அண்ட் லென்த்தை விட்டுவிடுவார்கள் என்கிற யோசனையுடன் தோனி ஹர்பஜன் சிங்கை களத்துக்குள் இறக்கினார்.

ஹர்பஜன் சிங்கிற்கு மூன்று ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்திவைத்தார் அஷ்வின். அங்கித் ராஜ்புத்தின் ஹாட்ரிக் பாலை சரியாகத்தடுத்து ஆடிய ஹர்பஜன் அடுத்த பாலை நேராக ஸ்லிப்புக்குக் கொடுத்தார். முதல் ஸ்லிப்பில் இருந்த கிறிஸ் கெய்ல் பிடித்திருக்கவேண்டிய கேட்சை இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ஆரோன் ஃபின்ச் பாய்ந்து பிடிக்க முயன்று கேட்ச்சைவிட்டார். மேட்ச்சையும் விட்டார்.

Ashwin

அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ராஜ்புத்தின் ஓவரில் ஒரு சிக்ஸர் என ஹர்பஜன் பஞ்சாப் பெளலர்களை டீஸ் செய்தார். 11-வது ஓவருக்கு அஷ்வின் வந்தார். அஷ்வினின் முதல் ஓவரின் முதல் பந்தில் பார்ட்னர்ஷிப் உடைந்தது. 19 ரன்களில் அவுட் ஆனார் ஹர்பஜன். 59 பந்துகளில் 96 ரன்கள் அடிக்கவேண்டும் என மேட்ச் பரபரப்பான கட்டத்தை நோக்கிப் பறந்தது. ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்கள் தேவை என்கிற நிலை. ஆனால், அப்போதும் தோனி அசரவில்லை. தீபக் சாஹர் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார். 

ஓவர் பிரஷரில் சிதறவிட்ட அஷ்வின்!
100 ரன்களுக்குள் சென்னையை சுருட்ட வேண்டும் என்கிற பிரஷரில் ஸ்ட்ரைக் பெளலர்கள் அனைவரையும் போட்டு முடித்தார் அஷ்வின். 8 ஓவர்களுக்குள்ளேயே ராஜ்புத்தின் ஓவர்களை முடித்துவிட்டார். அதேபோல் 12-வது ஓவரிலேயே இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச விக்கெட் டேக்கரான ஆண்ட்ரு டையின் மூன்று ஓவர்களை முடித்துவிட்டார். ''டெத் ஓவர்களில் முக்கியமான பெளலர்கள் இருக்கமாட்டார்கள். நாம் இறங்கி அடிக்க சரியாக இருக்கும்'' என்கிற தோனியின் பிளான் சூப்பராக வொர்க் அவுட் ஆனது.

சாஹர் பெளலர்களை சாத்தி எடுத்தார். கடைசி 36 பந்துகளில் 73 ரன்கள் தேவை என்கிற நிலையில் கேப்டன் அஷ்வினின் பெளலிங். முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார் சாஹர். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் 1 பவுண்டரி அடித்து பஞ்சாப் ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியாதவகையில் 100 ரன்களைக் கடந்தது சென்னை. இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். ஆனால், மனம் தளராத, வேறு ஆப்ஷன்கள் இல்லாத அஷ்வின் மீண்டும் 17-வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்த சாஹர் அவுட் ஆனார்.  தோனி களத்துக்குள் வந்தார். 23 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்கிற நிலையிலும் செம கூலாக அஷ்வின் ஓவரை விளையாடியது தோனி- ரெய்னா இணை. இந்த ஓவரில் 6 ரன்கள்தான் அடித்தது சென்னை.

18 பந்துகளில் 34 ரன்கள் தேவை. தோனி காத்திருந்ததுபோலவே மோஹித் ஷர்மா ஓவர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 11 ரன்கள். 19-வது ஓவர் ஆண்ட்ரு டை. 12 பந்துகளில் 23 ரன்கள் அடிக்கவேண்டும். முதல் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி ஸ்லோ பாலாக போட்டார் டை. ரெய்னா அதை சரியாக ரீச் செய்து சிக்ஸருக்கு அடித்தார். அடுத்த பால் இரண்டு ரன். மூன்றாவது பந்து மீண்டும் சிக்ஸர். ஷார்ட் பாலை லாங் ஆன் நோக்கி அடித்தார் ரெய்னா. நான்காவது பால் பவுண்டரி. ஐந்தாவது பந்தும் பவுண்டரி. இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கொடுத்து சென்னைக்கு வெற்றியை கிஃப்ட்டாக கொடுத்தார்  ஆண்ட்ரூ டை. மோஹித் ஷர்மாவின் கடைசி ஓவரின் முதல் பந்தை  சிக்ஸருக்கு அனுப்பிவைத்து ஆட்டத்தை முடித்தார் தோனி. 

தோனி

பெளலர்களை பேட்ஸ்மேன்களாக களமிறக்கிய உத்தி டி-20 கிரிக்கெட்டில் புதுசு. அதுவும் தோனி, ஜடேஜா, பிராவோ என அடுத்தடுத்து மூன்று பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது தோனி இந்த மாஸ்டர் பிளானை கையில் எடுத்தார். ஹர்பஜன் சிங்கின் கேட்சை ஃபின்ச் பிடித்திருந்த்தால், சாஹர் வந்த வேகத்தில் அவுட் ஆகியிருந்தால் இந்த முடிவு 'பைத்தியக்காரத்தனம்' என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும். ஆனால், தோனிக்கு எல்லாமே நேற்று ஆல் இஸ் வெல்தான்! 

ஆனால், இதே மாஸ்டர் பிளானை எல்லாம் குவாலிஃபையரில் காட்டிடாதீங்க தோனி!

https://www.vikatan.com/news/sports/125556-dhonis-master-plan-to-defeat-kings-eleven-punjab.html

Link to comment
Share on other sites

கொல்கத்தா வென்றிருக்கா விட்டால் எனக்கும் கூட ஓய்வுதான்: சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்

 

 
chahar2

தீபக் சாஹர் பந்து வீசுகிறார். | படம். | ஏ.எஃப்.பி.

சுல்தான் ஆஃப் ஸ்விங் ஆகிவரும் சென்னை சூப்பர் கிங்சின் தீபக் சாஹர், ஒரு ஆல்ரவுண்டர் என்ற தனது திறமையையும் நேற்று அபாரமான பேட்டிங்கினால் கிங்ஸ் லெவனை வெளியேற்றிய போட்டியில் அடையாளப்படுத்தினார்.

இந்த அதிர்ச்சி மருத்துவத்தை தோனி இத்தகைய நெருக்கடிப் போட்டிகளுக்காக வைத்திருந்தார் போலும்.

 

நேற்று கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அது பற்றி சாஹர் கூறும்போது கொல்கத்தா அணி வென்று 16 புள்ளிகளுடன் தகுதி பெற்றிருக்காவிட்டால் தனக்கும் கூட ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் என்றார்.

போட்டி முடிந்தவுடன் தீபக் சாஹர் கூறியது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். முதல் போட்டியிலிருந்தே இந்தப் பிட்சில் நான் பவுலிங் செய்ய விரும்பினேன்.

பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆகின. 160-க்குள் அவர்களை மட்டுப்படுத்தியதை முக்கியமாகக் கருதுகிறேன்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு இந்த பேட்டிங் வாய்ப்புக் கிடைத்தது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பிரகாசிப்பேன். பந்து வீச்சில் வேகத்துக்காக கடந்த 6 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன் ஆரம்பிக்கும் போது ஸ்விங் பவுலர்தான் இப்போது கொஞ்சம் வேகம் கூட்டியுள்ளேன்.

இந்த ப்ளே ஆப் வாய்ப்புக்காக 2 ஆண்டுகள் காத்திருந்தோம். நிச்சயம் சிறப்பாக ஆடுவோம் என்று கருதுகிறேன். வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கொல்கத்தா வெற்றி பெற்றிருக்கா விட்டால் எனக்கும் கூட ஓய்வுதான் அளிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு கூறினார் தீபக் சாஹர்.

http://tamil.thehindu.com/sports/article23949726.ece

Link to comment
Share on other sites

விரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா

அ-அ+

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கால் விரும்பத்தகாத சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI #Rohitsharma

 
 
 
 
விரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா
 
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்து பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதிக ரன்ரேட் வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லியை வீழ்த்தினாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது. மும்பை அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் முக்கிய காரணம்.

201805211624014702_1_Rohitsharma001-s._L_styvpf.jpg

இந்த தொடரில் 14 ஆட்டங்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். சராசரி 23.83 புள்ளியே. 2013-ல் 538 ரன்கள் குவித்தார். 19 போட்டியில் சராசரி 38.42 ஆகும்.

2008-ல் 404 ரன்கள் அடித்திருந்தார். 2009-ல் 362 ரன்களும், 2010-ல் 404 ரன்களும், 2011-ல் 372 ரன்களும், 2012-ல் 433 ரன்களும், 2013-ல் 538 ரன்களும், 2014-ல் 390 ரன்களும், 2015-ல் 482 ரன்களும், 2016-ல் 489 ரன்களும், 2017-ல் 333 ரன்களும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/21162401/1164641/IPL-2018-Mumbai-Indians-Skipper-Rohit-Sharma-Ends.vpf

 

 

நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்

 
அ-அ+

நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது என, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் டுவிட் செய்துள்ளார். #IPL2018

 
 
 
 
நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்
 
ஐபிஎல் 11-வது சீசனின் லீக் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. வாழ்வா? சாவா? போட்டியில் வீறுகொண்டு எழுந்து வந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

201805212043589695_1_Rohittwitter001-s._L_styvpf.jpg

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாதது குறித்து ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது ஏமாற்றத்தை அளிக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும், நாம் எதை விரும்புகிறமோ, அதை எப்பொழுதுமே பெற முடியாது. நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால், எதிரணிகள் எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டனர். அடுத்த வரும் இதில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்க்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/21204359/1164703/we-can-not-always-get-what-we-want-rohit-sharma.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 பிளே ஆஃப்: சிஎஸ்கே உள்ளே; ஆர் சி பி வெளியே - காரணம் என்ன?

 
"இந்திய அணியில் ஜொலிக்கும் கோலி, ஆர்சிபியில் சொதப்புவது ஏன்?"படத்தின் காப்புரிமைAFP

ஞாயிற்றுக்கிழமையன்று மும்பை அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றது . இதன் மூலம் பிளே ஆஃ ப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இந்தாண்டுக்கான தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

ஐபிஎல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத வகையில் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்லின் 11வது தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம். நேற்று மும்பை-டெல்லி மற்றும் சென்னை-பஞ்சாப் அணிகளுக்கிடையே நடந்த போட்டியோடு இந்தாண்டுக்கான லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரையிலான முடிவுகளை பார்க்கும்போது, எட்டு அணிகளில் குறிப்பாக மூன்று அணிகளின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

அதாவது, இரண்டாண்டு தடைக்காலத்திற்கு பிறகு மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடும், இந்திய அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் விராட் கோலி, பலம் நிறைந்த வீரர்களை கொண்டிருந்தாலும் ஆர்சிபி இந்தாண்டும் சோபிக்காதது ஏன் மற்றும் ஐபிஎல் தொடங்கிய வருடம் முதல் இதுவரை சொதப்பலான ஆட்டத்தை டெல்லி அணி வெளிப்படுத்துவதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுகின்றன.

"இந்திய அணியில் ஜொலிக்கும் கோலி, ஆர்சிபியில் சொதப்புவது ஏன்?"படத்தின் காப்புரிமைAFP

ஜொலிக்கும் கோலி; சொதப்பும் ஆர்சிபி

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அணியை சிறப்பாக வழிநடத்துவதுடன் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆர்சிபியின் கேப்டனாக வலம் வரும் கோலியின் தலைமையில் அந்த அணி தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறவில்லை.

ஜொலிக்கும் கோலி; சொதப்பும் ஆர்சிபிபடத்தின் காப்புரிமைAFP

"ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் ஏ.பி. டிவில்லியர்ஸை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பதே அந்த அணியில் நிலவும் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களை சரிசமமாக தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். மேலும், முந்தைய ஆண்டுகளில் அணியில் சிறப்பாக செயல்பட்ட கே.எல்.ராகுல் போன்ற வீரர்களை ஏலத்தில் மற்ற அணிகளை வாங்க விட்டதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்" என்று பிபிசி தமிழிடம் பேசிய விளையாட்டுத்துறை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அயாஸ் மேமன் கூறுகிறார்.

அயாஸ் மேமன்படத்தின் காப்புரிமைTWITTER Image captionஅயாஸ் மேமன்

"என்னைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சுதான் ஆர்.சி.பிக்கு பிரச்சனையாக உள்ளது. அதாவது, அதிகமான ரன்களை குவிக்கும் நோக்கத்துடனே அந்த அணியின் வீரர்கள் தேர்வு இருப்பதால், எதிரணி ரன்களை குவிப்பதை தடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் ஆர்சிபி உள்ளது. வெகுகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள ஸ்பின்னர் மற்றும் கோலி, டீவில்லியர்ஸை தவிர்த்து இரண்டாம் கட்ட வீரர்களை உருவாக்குவதே இதற்கு தீர்வாக அமையும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ் கூறினார்.

சென்னை அணி சிறப்பாக செயல்படுவதற்கான காரணம் என்ன?

"இந்திய அணியில் ஜொலிக்கும் கோலி, ஆர்சிபியில் சொதப்புவது ஏன்?"படத்தின் காப்புரிமைTWITTER

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பங்கேற்றுள்ள ஒன்பது ஐபிஎல் போட்டிகளிலுமே பிளே ஆஃப் சுற்றை கடந்துள்ளது. அதில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், நான்கு முறை இறுதிப்போட்டி வரையும், மீதமுள்ள மூன்று முறை ப்ளே ஆஃப் சுற்றையும் கடந்து சென்றுள்ளது.

மேலும், 2008ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அணிகளுக்கான பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.

"சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு தோனி மட்டுந்தான் ஒரே காரணம் என்று கூற முடியாவிட்டாலும், அவர் மிகப் பெரிய பங்கை வகிக்கிறார் என்பதில் மாற்று கருத்தில்லை. ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்களின் தேர்வும், வீரர்கள் - கேப்டன் - பயிற்சியாளர் இடையேயான புரிதலும் மிகவும் அவசியம். அதை சென்னை அணி சிறப்பாக கையாண்டு வருவதே அவர்களின் தொடர் வெற்றிக்கு காரணம்" என்று அயாஸ் கூறுகிறார்.

சடகோபன் ரமேஷ்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசடகோபன் ரமேஷ்

2008ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 157 போட்டிகளில் 92 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்ட கேப்டன்களில் 58.97 வெற்றி சதவீதத்துடன் தோனி முதலிடத்தில் உள்ளார்.

"ஒரு அணியின் வெற்றிக்கு ஒருவர் மட்டும் எல்லா நேரங்களிலும் காரணமாக இருக்க முடியாது. ஆனால், அணியிலுள்ள வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு கேப்டன் என்ற முறையில் தோனி தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். மேலும், ஒரு அணி தோற்கும் சூழ்நிலையில் இருக்கும்போது அதன் வீரர்களின் மனநிலை கேப்டனின் செயற்பாட்டை பொறுத்தே அமையும். அந்த வகையில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் அணுகுமுறையும், வீரர்களின் தேர்வும் முக்கிய காரணம்" என்று சடகோபன் கூறினார்.

டெல்லி அணிக்கு என்னதான் பிரச்சனை?

டெல்லி அணிக்கு என்னதான் பிரச்சனை?படத்தின் காப்புரிமைTWITTER

11 வருடங்களாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி கருதப்படுகிறது. அதாவது, எட்டு முறை லீக் சுற்றுடனும், இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்துடனும், ஒருமுறை ப்ளே ஆஃப் சுற்றுடனும் நடையை கட்டியது டெல்லி அணி.

இந்தாண்டு 14 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி, ஐந்து போட்டிகளில் வெற்றியும், ஒன்பது போட்டிகளில் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன், எட்டு அணிகளை கொண்ட புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய அயாஸ், "டெல்லி அணியின் செயல்பாடு தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாறும் கேப்டன்கள், தொடர்ந்து நீடிக்காத வீரர்கள், வீரர்களை சரிசமமான தேர்வு செய்யாதிருப்பது போன்றவை டெல்லி அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"கிரிக்கெட்டின் அனைத்து கூறுகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான அணியை தெரிவு செய்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக சென்னை என்றால் தோனி, பெங்களூரு என்றால் கோலி என்று குறிப்பிடும் வகையில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் டெல்லி அணியில் இல்லை. நிலையான கேப்டனும், சரி விகிதத்தில் அமைந்த பேட்ஸ்மன், வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பீல்டர்கள் அமையாதவரை டெல்லி அணி முன்னேறுவது சாத்தியமில்லாத ஒன்று" என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்..

https://www.bbc.com/tamil/sport-44193258

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டியில் கோடிகளில் வாங்கப்பட்டு ‘சொதப்பிய’ 11 வெளிநாட்டு வீரர்கள்

 

 
ipl

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், தெ.ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் : கோப்புப்படம்

11-வது ஐபிஎல் சீசனில் பல்வேறு அணிகளில் இடம் பெற்ற வெளிநாட்டு வீரர்களில் 11 பேர் பேட்டிங், பந்துவீச்சில் சொதப்பி பிளாஃப் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் போட்டித் தொடர் வியாபார நோக்கத்துடன், கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்கத் தொடங்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் கூறினாலும், உள்நாட்டு இளைஞர்கள் திறமையை நிரூபிக்க அது மிகச்சிறந்த மேடை அமைத்துக் கொடுத்தது. அதேபோல வெளிநாட்டு அணிகளில் இருந்தும் வீரர்கள் பலர் இடம் பெற்று தங்களின் திறமையை மெருகேற்றி வருகின்றனர்.

 

சில நேரங்களில் அணிகள் ஏலத்தில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களை எடுத்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்ற நினைப்பில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்கின்றன. ஆனால், அனைத்து நேரங்களிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதை ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பிளாஃப் வீரர்களை வைத்து ஒரு புதிய அணியே உருவாக்கிவிடலாம் என்ற அளவுக்கு மோசான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அவர்கள் குறித்த விவரம்.

ஆர்கி ஷார்ட்(ஆஸி.)

 

short1jpg

ஆர்கி ஷார்ட்(ஆஸி.)

 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஷார்ட் அங்கு நடந்த பிக் பாஷ் டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். ஹோபர்ட் ஹரிக்கன்ஸ் அணியில் இடம் பெற்று 572 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இவரை ரூ.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஆனால், 7 போட்டிகளில் பங்கேற்ற ஷார்ட் இதுவரை 115 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார்.

காலின் முன்ரோ(நியூசி.)

 

munrojpg

முன்ரோ(நியூசி.)

 

நியூசிலாந்து வீரரான காலின் முன்ரோ சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.1.90 கோடிக்கு விலைக்கு வாங்கியது. டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் 2-ம் இடத்தில் காலின் முன்ரோ இருப்பதால் மிகப்பெரிய பலமாக அணிக்கு இருப்பார் என்று டெல்லி அணி நினைத்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட முன்ரோ சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கிய முன்ரோ 63 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதில் அதிகபட்சம் 33 ரன்களாகும்.

பிரண்டன் மெக்கலம்(நியூசி)

 

Brendon-McCullum-1jpg

மெக்கலம்(நியூசி)

 

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர். கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான சதம், அரை சதங்களால் வெற்றியை எளிதாக்கிக் கொடுத்தவர். கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மெக்கலம் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பெங்களூரு அணியில் விராட் கோலி, டீகாக், மெக்கலம், டிவில்லியர்ஸ் எனச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முடியவில்லை.

மிகச்சிறந்த மேட்ச் வின்னரான மெக்கலம் 6 போட்டிகளில் களமிறங்கி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் அதிபட்சம் 43 ரன்களாகும்.

மேக்ஸ்வெல்(ஆஸி.)

 

glen-maxwelljpg

மேக்ஸவெல்(ஆஸி.வீரர்)

 

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெலின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமும் தலைகீழானது. சர்வதேச ஆல்ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெலை ரூ.9 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் ஒரு போட்டியில் கூட மேக்ஸ்வெல் மேட்ச் வின்னராக அணிக்குத் திகழவில்லை என்பது வேதனையாகும். 12 போட்டிகளில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 169 ரன்கள் சேர்த்தார். சராசரியாக 14 ரன்களும், அதிகபட்சமாக 49 ரன்களாகும்.

ஆரோன் பிஞ்ச்(ஆஸி.)

ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.6.2 கோடிக்கு ஏலத்தில் ஆரோன் பிஞ்சை ஏலத்தில் எடுத்தது. பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரராக பிஞ்ச் களமிறக்கப்பட்டு, டக்அவுட்சில் தலைதெறிக்க ஓடினார். அதன்பின் நடுவரிசையில் களமிறக்கப்பட்டும் ஆரோன் பிஞ்ச் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச் 134 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக 46 ரன்களும், சராசரியாக 16 ரன்களும் சேர்த்திருந்தார்.

பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து)

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகையான ரூ.12.50 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடம் பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு போட்டியில் கூட பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. 13 போட்டிகளில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இவரின் ஒவ்வொரு ரன்னுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொடுத்த விலை ரூ.6.38 லட்சமாகும். 13 போட்டிகளில் 29 ஓவர்கள் பந்துவீசி 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார் பென் ஸ்டோக்ஸ். இவரின் ஓவர் எக்கானமி ரேட் 9 ரன்களாகும். பேட்டிங்கிலும் சராசரி 16 ரன்களாகும். பென் ஸ்டோக்ஸின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

கோரி ஆன்டர்ஸன்(நியூசி.)

 

corryjpg

கோரி ஆன்டர்ஸன்(நியூசி வீரர்)

 

நியூசிலாந்து ஆல்ரவுண்டரான கோரி ஆன்டர்ஸன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்தார். ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாமல் ஆன்டர்ஸன் இருந்தார். இங்கிலாந்து வீரர் ஆன்டர்ஸன் காயம் காரணமாக விளையாட முடியாத காரணத்தால் மாற்றுவீரராக ஆன்டர்ஸன் தேர்வு செய்யப்பட்டார்.

கோரி ஆன்டர்ஸனின் மோசமான பாஃர்மைப் பார்த்து நியூசிலாந்து அணியே கழித்துக்கட்டி வைத்தது. ஆனால்,அது தெரியாமல் நன்றாக விளையாடுவார் என நம்பி ஆன்டர்ஸனை எடுத்த பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற ஆன்டர்ஸன் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 விக்கெட் வீழ்த்தினார்.

கெய்ரன் பொலார்ட்(மே.இ.தீவுகள்)

 

pollardjpg

கெய்ரன் பொலார்ட்(மே.இ.தீவுகள்)

 

மேற்கிந்தியத்தீவுகள் வீரரான கெய்ரன் பொலார்ட் சிறந்த ஆல்ரவுண்டர். பொலார்டின் திடீர் அதிரடி பேட்டிங், விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் இவரைத் தக்கவைத்தது. கடந்த சில ஐபிஎல் சீஸன்களாக சொதப்பி வந்த பொலார்டை இந்த முறை மும்பை அணி கழற்றிவிட்டு இருக்க வேண்டும்

ஆனால், தக்கவைத்ததற்கு நல்ல தண்டனை கிடைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் ரோகித் சர்மா பலமுறை பொலார்டுக்கு வாய்ப்பு கொடுத்தும் பேட்டிங்கில் சொதப்பினார். இதனால், 7 போட்டிகளோடு பொலார்டை கழற்றிவிட்டனர். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பொலார்ட் 76 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கிறிஸ் வோக்ஸ்(இங்கிலாந்து)

 

kohli-rcb-spc-380jpg

கேப்டன் விராட் கோலியுடன் பென் ஸ்டோக்ஸ்(இங்கி)

 

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் இந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பெங்களூரு அணி ஏலத்தில் ரூ.7.60 கோடிக்கு வோக்ஸை ஏலத்தில் எடுத்தது.

கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வோக்ஸ் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால், நம்பி எடுத்த வோக்ஸை எடுத்த பெங்களூரு அணி மோசம் போனது. 5 போட்டிகளில் பங்கேற்ற வோக்ஸ் 17 ரன்கள் சேர்த்தால், 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார்.

மிட்ஷெல் ஜான்ஸன்(ஆஸி.)

 

mitchell-johnson-jpg

மிட்ஷெல் ஜான்சன்

 

ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மிட்ஷெல் ஜான்ஸன் பந்துவீச்சில் அனல் பறக்கும். அத்தகைய சிறந்த பந்துவீச்சாளர் இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று கண்டுகொள்ளப்படவில்லை. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் ஜான்ஸன் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், 10 போட்டிகளில் பந்துவீசிய ஜான்ஸன் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். சராசரியா ஓவருக்கு 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இம்ரான் தாஹிர் (தெ.ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தாஹிர் அதன்பின் சொதப்பினார். இதனால் சிஸ்கே அணி இம்ரானை ஓரம் கட்டியது. 6 போட்டிகளில் விளையாடிய இம்ரான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

http://tamil.thehindu.com/sports/article23952292.ece?homepage=true

Link to comment
Share on other sites

சொந்த நாட்டுக்காக இவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நினைக்கிறேன். இப்போட்டிகளை பணம் வந்தால் போதும் என்ற அளவில் தான் பார்க்கிறார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.