Jump to content

Recommended Posts

பனிப்பொழிவு இல்லாமல் போய் விட்டது; கெய்ல், முஜீப்தான் வித்தியாசம்: தோனி

 

 
dhoni2jpg

முதுகு காயம் அடைந்த தோனி.   -  படம். | அகிலேஷ் குமார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோனி தி பினிஷர் களத்தில் நின்றும் கிங்ஸ் லெவன் அணியிடம் தோல்வி தழுவியது, முதல் தோல்விதான் என்றாலும் கேப்டன்சியில் தோனியை ஒருவாறு சாமர்த்தியமாக எதிர்கொண்டார் அஸ்வின்.

தோனி முதுகு காயத்திலும் உறுதியான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் 28 பந்துகளில் 33 ரன்கள் என்று இன்னிங்சைக் கட்டமைத்தார். 21 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 65 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று விளாசினார். குறிப்பாக முடிவு ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான ஆண்ட்ரூ டை பந்து வீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டு அடிக்கப்பட்ட அடி இன்னிங்ஸ் என்று கூற முடியாது, அடித்து  ஆட வேண்டிய கட்டாயம்.. அடித்து ஆடினார். இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு அவர் ஆடியிருந்தால் 1 ஓவர் மிச்சம் வைத்து வென்றிருக்க முடியும். ஆனால் காயத்தினால் அவர் சில ஸ்ட்ரோக்குகளை ஆட முடியாமல் கூட போயிருக்கலாம்.

 

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அவரால் மோஹித் சர்மாவை அடிக்க முடியவில்லை என்பதுதான் பளிச்சிடும் உண்மை. நெருங்கி வந்து தோற்றது சென்னை.

ஆட்டம் தோல்வியடையக் காரணமாக பிராவோவை ஜடேஜாவுக்குப் பிற்பாடு களமிறக்கியதைக் கூறலாம், அல்லது மோஹித் சர்மா வீசிய வைடு பந்துகளை தோனியால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் போனதைக் கூறலாம் கெய்ல் இன்னிங்ஸைக் கூறலாம் இன்னும் எவ்வளவோ காரணங்கள் உண்டு அதேபோல் ஒருவர் தன் அணியின் பலம் குறித்தும் நம்பிக்கைக் கொண்டு அதற்கான காரணங்களைக் கூறலாம்... ஏன் அவரின் முதுகுக் காயத்தைக் கூட கூறலாம்.

தோனி ஆட்டம் முடிந்து இவ்வாறு கூறினார்:

அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன். முஜீப்தான் பெரிய வித்தியாசம். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவ்வளவாகப் பனிப்பொழிவு இல்லை.

கிறிஸ் கெய்லின் இன்னிங்சும் முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச்சும் அவர்களுக்கு வெற்றி தேடித் தந்தது. இது நெருக்கமான போட்டி, இது முக்கியம் ஏனெனில் நாம் சவாலாகத் திகழ்கிறோம் என்பதற்கு நெருக்கமான போட்டி என்பதே அடையாளம். எந்த மாதிரியான பவுண்டர்களை நாம் நீக்க வேண்டும். எந்த மாதிரியான சுலபமான பந்துகளைத் தவிர்க்க வேண்டும்? ஆகிய விஷயங்களில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் நெருக்கமாக இருப்பதால் அணி வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இப்படிக் கூறினார்லும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இப்போதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். ரெய்னா மட்டுமே முன்னிலையில் ஒரு இடது கை வீரராக இருக்கிறார் இந்நிலையில் ஜடேஜாவை நாம் நெகிழ்வாகப் பயன்படுத்தினால், இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் பார்க்கும் போது, இப்படியாக அவரைப் பயன்படுத்தினால் அவர் நன்றாக வருவார்.

முதுகு காயம் மோசமாக உள்ளது, ஆனால் கடவுள் எனக்கு நிறைய சக்தியைக் கொடுத்துள்ளதால் முதுகைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படவில்லை. என்னுடைய கைகளே வேலையைச் செய்துவிடும்.

என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23554106.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக் - ஒரு பவுண்டரியில் மிஸ்! #CSKvsKXIP

 
 

'ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்... இரண்டெல்லாம் இல்லை, எக்கச்சக்க ஆடுகள் நேற்று மொகாலியில் சந்தித்துக்கொண்டன. கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பி டீம் என இரண்டு அணிகள் மோதிய போட்டிதான் நேற்று நடந்தது. தனது கேப்டன்சி திறமையால் பஞ்சாபை வெற்றி அடையச் செய்த அஸ்வின், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் சென்னைக்கு வெற்றியை தாரை வார்க்கக் காத்திருந்த மோகித். இருவருமே சென்னை அணியின் வார்ப்புகள்

டாஸ் வென்றால் இனி மைக்கை நீட்டி கேட்க எல்லாம் தேவையில்லை போல. எல்லாரும் பீல்டிங்கைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தோனியும் அப்படியே. மொகாலி பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளமென்பதால் சேஸிங் செய்வது சுலபமாக இருக்கும் என தோனி நினைத்திருக்கலாம். சென்னையில் காயமடைந்த ரெய்னாவுக்குப் பதில் முரளி விஜய், பஞ்சாப் அணியில் காயமடைந்த அக்சருக்குப் பதில் பரீந்தர் ஸ்ரன். ஸ்டோய்னிஸ் பெரிதாக சோபிக்காததால் கடோத்கஜன் கெயில் கையில் பேட்டைக் கொடுத்து 'அந்தா வெள்ளைக் கலருல ஒண்ணு பவுலர் கையில இருக்கு பாரு, அதை அப்பப்ப வெளியே அனுப்பிவிடு' என கிசுகிசுத்து வண்டியேற்றிவிட்டார் சேவாக்.

கெயில்

`என்னையவா ஏலத்துல எடுக்காம லூஸ்ல விடுறீங்க?' என தேக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் க்ரீஸில் காட்டினார் கெயில். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே முன்னால் கால் வைத்து ஒரு பவுண்டரி. 'சாப்பிட்டது செரிக்கல' ரீதியில் முதுகே வளையாமல் நின்றபடி ஆடுவதுதான் கெயில் ஸ்டைல். ஆனால், வழக்கத்துக்கு மாறான முதல் ஷாட். அதிலேயே தெரிந்தது ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறார் என. சென்னைக்கு எதிராக கெயில் எப்போது ஆடினாலும் ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டு அவரை பெவிலியனுக்கு அனுப்புவார் தோனி. நேற்றும் அந்த நினைப்பில்தான் தமிழ்ப்புலவர் ஹர்பஜனைக் கொண்டு வந்தார். பாவம் ஒரே ஓவரில் 19 ரன்கள் பறிகொடுத்தார் பாஜி!

தாகூர், சஹார், பாஜி என யாரையும் பீம்பாய் விட்டுவைக்கவில்லை. பந்து பேட்ஸ்மேனை தொடும் வேகத்தைவிட பவுண்டரி தொடும் வேகம்தான் அதிகமாக இருந்தது. 'Give me more' என வளைத்து வளைத்து அடித்தார் கெயில். பார்வையாளர்கள் எல்லாம் பீல்டர்களாக மாறினார்கள். விளைவு, பவர்ப்ளே முடிவில் 75 ரன்கள். அதற்கடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் கெயில். 22 பந்துகளில் அரைசதம். 7 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள். 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?' என சென்னை ரசிகர்கள் புலம்ப, 'அழாதே தோழா, பஞ்சாபின் கோதுமை வயல்களில் பச்சிளம்குழந்தையாக ஓடித்திரிந்த நான் இன்று உன் துயர் துடைக்க இருக்கிறேன்' என ரீ-என்ட்ரியானார் பாஜி. 'இந்தா அடிச்சுக்க' என அவர் ஆசை காட்டிய ஃபுல் டாஸ் பாலை பிராவோ கையில் கொடுத்து வெளியேறினார் ராகுல்.

இதுதான் சமயம் என பவுலிங் சேஞ்ச் கொண்டுவந்தார் தோனி. வாட்டோ வீசிய ஓவர் முதன்முறையாக பவுண்டரி இல்லாமல் கடந்தது. அதன்பின் வந்த பிராவோ ஓவரும் அப்படியே. பீம்பாய் கெயில் பற்றி ஒரு பழமொழி உண்டு. 'என்ன டெலிவரி போட்டாலும் சிக்ஸ் அடிப்பவர் எதிர்ப்பார்க்காத நேரத்தில் சப்பையாக அவுட்டாவார்' என! நேற்றும் அதுதான் நடந்தது. வாட்சன் வீசிய ஷார்ட் பாலை கெயில் லேசாக தொட, அது ஃபைன் லெக்கில் இருந்த தாஹிர் கையில் சரணடைந்தது. கெயில் அவுட்டாகும்போது ஸ்கோர் 12 ஓவர்களில் 127! அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் அவர்களின் பெயர்களை டைப் செய்வதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினார்கள். ஆரோன் பின்ச் இரண்டாவது முறையாக கோல்டன் டக். அடுத்த 48 பந்துகளில் தட்டித்தட்டி 60 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 220-க்கு குறையாது என நினைத்த ஸ்கோரை 197-க்கே சுருட்டினார்கள் சென்னை பவுலர்கள். முக்கியமாக பிராவோவும் தாஹிரும்.

நீண்ட இடைவேளைக்குப் பின் சென்னை அணிக்காக ஓபனிங் இறங்கினார் விஜய். தேவைப்பட்ட ரன்ரேட் பத்து என்பதால் முதல் பந்தில் இருந்தே அடித்தாட வேண்டிய கட்டாயம். போன மேட்ச்சில் சூப்பர் ஸ்டார்ட் அளித்த வாட்சன் 11 ரன்களில் வெளியேற ஒன் டவுனில் இறங்கினார் ராயுடு. நான்கு ஓவர்களில் 40 ரன்கள் என நல்ல ரன்ரேட் இருந்த நிலையில், 'ஐ மிஸ் மை பங்காளி வாட்சன்' என டை பந்தில் அவுட்டாகி வெளியேறினார் விஜய். அடுத்து இறங்கிய பில்லிங்ஸை சோதிக்க ஸ்பின் அட்டாக் கொண்டுவந்தார் அஸ்வின். இன்ஸ்டன்ட் பலன். அஸ்வின் பந்தை ஸ்வீப் அடிக்க முற்பட்டு பேடில் வாங்க ரிவ்யூ சென்று விக்கெட் வாங்கினார் அஸ்வின்.

கெயில்

தோனி...! அவர் களம்புகுமுன் ஒரு சின்ன டேட்டா! பஞ்சாப் அணியோடு ஆடுவதென்றால் தோனிக்கு பக்கெட் பிரியாணி சாப்பிடுவது போல. அந்த அணிக்கெதிராக நான்கு அரைசதங்கள். ஆவரேஜ் 45.30, ஸ்ட்ரைக் ரேட் 153.04! ஆனாலும் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால் டவுட்டில் இருந்தார்கள் ரசிகர்கள். எப்போதும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் தோனி முதல் பந்தில் இருந்தே ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தொடங்கினார். வசதியான பந்து கிடைத்தால் பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார்கள் தோனியும் ராயுடுவும். 

முஜிபுர் ரகுமானின் பந்தை தடுத்து சிங்கிள் எடுப்பது, ஃபாஸ்ட் பவுலர்கள் சிக்கினால் பவுண்டரி அடிப்பது என டீசன்ட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது இந்த ஜோடி. 13 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள். களத்தில் இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்கள். இவர்களைப் பிரிக்காவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார் அஸ்வின். அதன் விளைவு எப்போதும் பீல்டிங்கில் சொதப்பும் அஸ்வினே ராயுடுவை க்ளீன் த்ரோ செய்து ரன் அவுட்டாக்கினார். 'சரி அடுத்து பிராவோதானே, நல்லதுதான்' என ரசிகர்கள் நினைக்க, களமிறங்கியது ஜடேஜா!

அநியாயத்திற்கு பொறுமையை சோதித்தார் ஜடேஜா! சிக்ஸ் அடிக்க வேண்டிய பந்துகளில் எல்லாம் சிங்கிள் தட்ட, மறுபுறம் தோனிக்கு தசைபிடிப்பு வேறு! குட்டி பிஸியோதெரபி எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் களமிறங்கினாலும் குனிந்து ஆட சிரமப்படுவது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் ஜடேஜா சொதப்புவதால் வலியோடு பொறுப்பையும் சேர்த்தே சுமந்தார். மோகித் சர்மாவின் 18-வது ஓவரை குறிவைத்தார். இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அதில் 19 ரன்கள். டார்கெட் சட்டென குறைந்தது. அரைசதம் கடந்தார் தோனி. 34 பந்துகளில்...! Much needed Innings! 

கெயில்

இரண்டு ஓவர்களில் 36 ரன்கள். வலி அதிகமாக இருப்பதால் மின்னல்வேகத்தில் ஓடவும் முடியாது. ஒரே ஆப்ஷன் க்ரீஸில் இருந்தபடி பந்தை சிதறடிப்பதுதான். அதைத்தான் செய்தார். டை வீசிய 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி, பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு டூஸ்...! டெடிகேஷன் லெவல் - தோனி! கடைசி ஓவரில் 17 ரன்கள். ஒருவேளை நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் ஈஸியாக எடுத்திருக்கலாமோ என்னவோ! தோனி அசாத்திய வலியில் இருக்கிறார், குனிந்து ஆடவே முடியாது என்பதை உணர்ந்த மோகித் எல்லாப் பந்துகளையும் வைட் டெலிவரியாகவே போட்டார். அப்படியும் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பயங்காட்டினார் தோனி. 'நான் சில்லறையாதான் தருவேன். சிக்ஸ் எல்லாம் நோ' என திரும்பத் திரும்ப வைட் லென்த் டெலிவரிக்கள். கடைசி பால் சிக்ஸ் அடிக்க, நான்கு ரன்களில் தோற்றது சென்னை. தோனி 44 பந்துகளில் 79! அரங்கம் எழுந்து நின்று கைதட்டுகிறது. அஸ்வின் உள்ளிட்ட பஞ்சாப் வீரர்களும்!

 

தோற்றிருந்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் சென்னைக்கு நிறையவே இருக்கின்றன. ஒன்று டெத் ஓவர் பவுலிங்! போன ஆட்டத்தில் சொதப்பிய பவுலர்கள் டெத் ஓவர்களில் சூப்பராக பந்துவீசினார்கள். இரண்டாவது தோனியின் ஃபார்ம்! அணியில் வீக் லிங்க்காக இருந்த மிடில் ஆர்டர் தோனியின் கம்பேக் என்ட்ரி மூலம் பலமாகியுள்ளது. ரெய்னாவும் ஜடேஜாவும் இதேபோல் ரீ-என்ட்ரியானால் ப்ளே ஆஃப் செல்வது சுலபமாகிவிடும். எது எப்படியோ, கண்கள் பூக்கக் காத்திருந்த தோனி ரசிகர்களுக்கு நேற்றைய தினம் ஜாக்பாட்தான்!

https://www.vikatan.com/news/sports/122317-match-report-of-kxip-vs-csk.html

 

 

‘ஸ்மார்ட்டாக’ கேப்டன்ஷிப் செய்து ‘மிஸ்டர் கூல்’ தோனியை ஓரம்கட்டிய அஸ்வின்

 

 
aswin%20doni

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வினின் ஸ்மார்ட்டான கேப்டன்ஷிப்பும், வித்தியாசமான அணுகுமுறையும், தோனியின் தேய்ந்துபோன நுட்பங்களை உடைத்து எறிந்தது.

குறிப்பாக கெயிலை களமிறக்கி கையாண்ட விதம், சூப்பர் ஓவர்களில் திறமையான பந்துவீச்சாளர்களை பயன்படுத்து ரன்களை கட்டுப்படுத்தியது, கடைசி ஓவர்களில் மோகித் சர்மா பந்துவீசச் செய்தது போன்றவை தோனிக்கு கேப்டன் நுட்பங்களை அவரிடம் இருந்து கற்று அவருக்கே அஸ்வின் பாடம் சொல்லிக்கொடுத்ததுபோல் அமைந்தது.

     

சண்டிகரில் நேற்று நடந்த 11-வது ஐபில் சீசன் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் அணி.

கடந்த 10 ஆண்டுகளாக தோனியுடன் இணைந்து விளையாடியதால், அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களை எப்படி பயன்படுத்துவார் தோனி என்பதை அஸ்வின் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அதற்கு ஏற்றார்போல் கடந்த இரு போட்டிகளிலும் வெடிகுண்டு வீரர் கெயிலை இறக்காமல் இருப்பு வைத்திருந்தார். ஏன் கெயிலை தேர்வு செய்து பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

gaylejpg

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் கெயில்

 

ஆனால், ஸ்டோய்னிஸ் கடந்த இருபோட்டிகளிலும் பந்துவீசி இருந்தாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இதனால், ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மன் கெயிலை சிஎஸ்கே அணிக்கு எதிராக அஸ்வின் இறக்கினார்.

ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலையாக 140 கி.மீ வேககதத்துக்கு பந்துவீசக்கூடிய அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மிதவேகத்தில் சராசரியாக 120 கிமீ வேகத்தில் வீசும் வீரர்களே இருப்பதால், கெயிலே இறக்குவது தொடக்தத்தில் நல்ல பலனளிக்கும் என்று அஸ்வின் எண்ணினார்.

அவரின் திட்டத்தை கச்சிதமாக கெயில் செயல்படுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். ஃபார்மில் இல்லாத கெயிலை ஏன் தொடக்க வீரராக ஏன் களமிறக்கினார் என்ற கேள்வி ஒருதரப்பினர் எழுப்பினாலும், அவர்களுக்கு பதில், வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் போட்டியில் கெயில் இரு சதங்கள் அடித்ததே பார்ஃமில் இருந்ததே எனக் கூறலாம்.

அதுமட்டுமல்லாமல், கெயிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஹர்பஜன் இருந்தார். இதனால், ஹர்பஜனின் முதல் ஓவரை மிகுந்த எச்சரிக்கையாகவே கெயில் கையாண்டார். ஏனென்றால், இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் இருந்தபோது, 8 இன்னிங்ஸ்களில் கெயில் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளார்.

அதில் 3 முறை ஹர்பஜனிடம் கெயில் ஆட்டமிழந்துள்ளார். இதை காரணமாக வைத்து கெயில் பேட் செய்ய வந்தவுடன் ஹர்பஜனை பந்துவீச தோனி வாய்ப்பு கொடுத்தார். முதல் ஓவரில் பொறுமை காட்டிய கெயில், ஹரபஜனின் அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒருபவுண்டரி விளாசி தோனியின் திட்டத்தை சிதறடித்தார்.

அஸ்வினைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும், பவர்ப்ளே ஓவர்களின் போது, சுழற்பந்துவீச்சை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார். ஆனால், சென்னை அணிக்கு எதிரான பவர்ப்ளேயில், தனது திட்டத்தை மாற்றிய அஸ்வின் கடும் நெருக்கடி கொடுக்கும் நோக்கில் மோகித் சர்மாவையும், ஆன்ட்ரூ டையும் பயன்படுத்தி பந்துவீசச் செய்தார். இதற்கு பலனும் கிடைத்தது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவால் எடுக்க முடிந்தது.

அதிலும் சண்டிகர் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஓரளவு எடுபடும் என்பதால், தொடக்க ஓவர்களில் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்காமல், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அஸ்வின் முன்னுரிமை அளித்து, 10 ஓவரக்ளுக்கு மேல், சுழற்பந்துவீச்சை பயன்படுத்தினார்.

10 ஓவர்களுக்கு மேல் அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் திறம்பட வீசினர். ரஹ்மான் 3 ஓவர்களில் 18 ரன்களையும், அஸ்வின் 32 ரன்களும் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி சிஎஸ்கே ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்.

bravojpg

பிராவோ

 

அடுத்ததாக, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் வியந்த விஷயம், இக்கட்டான நேரத்தில் பிராவோ களமிறக்கப்படாமல், ஜடேஜா களமிறங்கியதுதான்.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 99.58 என்று பாராட்டும்படி இருந்தாலும், பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 133.90 என்பது அவரைக் காட்டிலும் சிறப்பானதாகும்.

பிராவோ மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மன்,  பதற்றம் இன்றி பந்துகளை எதிர்கொண்டு அடித்து விளையாடக் கூடியவரை ஏன் கடைசி வரிசையில் தோனி பயன்படுத்துகிறார் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

பிராவோ சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்பது கடந்த கால புள்ளிவிவரங்களில் இருந்து அறியலாம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 111.50 என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 136.83 ஆகும்.

அப்படி இருக்கும்போது, ஜடேஜா பேட் செய்யவரும் போது, அஸ்வின், ரஹ்மான் பந்துவீசி முடித்து வேகப்பந்துவீச்சாளர்கள் களத்தில் பந்துவீச வந்துவிட்டனர். அந்த நேரத்தில் பிராவோவை களமிறக்கி காட்டடி அடிக்கச் செய்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால், ஜடேஜாவை களமிறக்கி பந்துகளை வீணாக்கிவிட்டார். இதனால் கடைசி நேர நெருக்கடியில் தோனியாலும், பிராவோவாலும் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

ஜடேஜா களமிறங்க வேண்டிய இடத்தில் பிராவோவுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்திருந்தால், சென்னை அணி வெற்றி பெற பெரும்பான்மையான வாய்ப்பு இருந்திருக்கும்.

Mohit%20SharmaBCCIjpg

மோகித் சர்மா

 

சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்பட்டு வெளியே வந்தவர் மோகித் சர்மா. ஆதலால், யாருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற கணிப்பு அவருக்கு தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், கடைசிநேரத்தில் நெருக்கடிகளை சமாளித்து, எதிரணி வீரர்களை ரன்களை எடுக்கவிடாமல் பந்துவீசச் செய்வதிலும் மோகித் சர்மா திறமையானவர்.

கடந்த 2015ம்ஆண்டில் இருந்து 16 முதல் 20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி மோகித் சர்மா 25 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார், எக்கானமி ரேட்டும் 9.32 மட்டுமே. பும்ரா மற்றும் டிவேன் பிராவோவின் எக்கானமியைக் காட்டிலும் மோகித் சர்மாவ சிறப்பாக இருக்கிறார்.

அதிலும் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா இரு யார்கர் பந்துகளையும், அடுத்து ஆப்சைட்டுக்கு விலக்கியே வீசியதால், தோனியால் அடித்து ஆடுவதில் பெரிய சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற அஸ்வின் தனது கேப்டன்ஷிப் திறமையை சென்னைக்கு அணிக்கு எதிராக ஸ்மார்டாக பயன்படுத்தி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23556017.ece

Link to comment
Share on other sites

தோனி படையைத் தோற்கடிக்க என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்..? கேப்டன்ஷிப் அசத்தல்கள்! #CSKvsKXIP #IPL

 
 

சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதைவிட தோனியை வென்றார் அஷ்வின் என்பதே சரியாக இருக்கும். எல்லோருமே சென்னை, பஞ்சாப் மோதலை மற்றுமொரு ஐபிஎல் மேட்சாகப் பார்க்க, அஷ்வின் மட்டும் அதை வாழ்வா- சாவா போராட்டமாக, தனக்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதை சோதிக்கும் போட்டியாகப் பார்த்திருக்கிறார். தோனி படையை வெல்ல என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்! #KXIPvCSK

KXIPvCSK

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சென்னையை எதிர்கொள்ளப்போகும் முன் அஷ்வினின் பெரிய கவலையாக இருந்தது பேட்டிங். அதுவும் ஓப்பனிங் பேட்டிங். கே.எல். ராகுல், மாயங்க் அகர்வால் என இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சென்னையின் பெளலிங் அட்டாக்கிற்கு முன்னால் எடுபடாது என்பதைக் கணித்ததுதான் அஷ்வினின் முதல் வெற்றி. போர் என வந்துவிட்டப்பிறகு  வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யத்துணிந்தார் அஷ்வின். 'கிறிஸ் கெய்ல் வெறும் பேட்ஸ்மேன். முதல் ஓவரிலேயே  அவர் அவுட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது, 20 பந்துகளில் அரை சதம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெறும் பேட்டிங்குக்காக மட்டுமே, அதுவும் ஏதோ ஒரு மேட்ச்சில் அடிப்பார் என்பதற்காக மட்டுமே, அவரை டீமில் வைத்திருப்பதற்கு பதிலாக ஆல் ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸை அணியில் வைத்திருக்கலாம்' என்கிற அறிவுறுத்தல் மட்டுமே கெயிலை, அஷ்வின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவிடாமல் விட்டதற்குக் காரணம். 

ஆனால், சென்னை மேட்ச்சில் கெயில் அடித்தால் அடிக்கட்டும், அவுட் ஆனாலும் பரவாயில்லை என முதல் ரிஸ்கை எடுத்தார் அஷ்வின். கெயில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவார் என்பது யாருமே எதிர்பாராத முடிவு. அதேபோல் அஷ்வினின் கனவை கலைக்கவில்லை கெயில். 33 பந்துகளில் 63 ரன்கள். 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்...  ``நீ என்கிட்ட இதைத்தானே எதிர்பார்த்த... இந்தா வெச்சுக்கோ'' என்பதுபோலவே இருந்தது கெயிலின் பாடி லேங்வேஜ். அவருக்குமே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் தன்னை அதிக முறை அவுட்டாக்கிய, தன்னை அதிக ரன் எடுக்க விடாமல் தடுக்கக்கூடிய பெளலரான ஹர்பஜனை நேற்று ஓட ஓட விரட்டியடித்தார் கெய்ல்.

#KXIPvCSK

பெளலிங் பிளான்!

வாட்சன், முரளி விஜய் என சென்னை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றியிருப்பதால் ஸ்பின்னர்களை வைத்தே பவர் ப்ளே ஓவர்களை அஷ்வின் சந்திப்பார் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால், அதையும் நேற்று பொய்யாக்கினார் அஷ்வின். அக்ஸார் பட்டேல் இல்லாமலேயே மேட்சைத் தொடங்கினார் அஷ்வின். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் சரணிடம் கொடுத்தார். அதேபோல் பவர் ப்ளே ஓவர்களில் ஒரே ஓரு ஓவர் மட்டுமே ஸ்பின்னருக்குக் கொடுத்தார். அதுவும் தான் வீசாமல் முஜிப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார் அஷ்வின். பவர் ப்ளேவின் முடிவில் 2 விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை.

அந்த எல்டபிள்யு!

சாம் பில்லிங்ஸ்தான் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னையைக் காப்பாற்றியவர். அவரை வீழ்த்துவது மிக முக்கியம் என்பதால் அவரை வீழ்த்தத் துடித்தார் அஷ்வின். ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், நான்காவது பந்தை லெக் ஸ்பின்னாக மாற்றினார். கால் மேல் பலன். நடுவர், பில்லிங்ஸின் பேட்டில் பட்டு பந்து பெளண்டரிக்குப் போனதாக அறிவிக்க, அது க்ளீன் எல்பிடபுள்யூ எனக் கதறினார் அஷ்வின். ஆனால், டிஆர்எஸ் கேட்க அவருக்குச் சின்ன தயக்கம் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு துணிந்து முடிவெடுத்தார் அஷ்வின். அவரின் கணிப்பு உண்மையானது. ரீ-ப்ளேவில் பந்து காலில் பட்டுப்போனதும்,  சரியான லைனில் பிட்ச் ஆனதும் தெரிய, பில்லிங்ஸ் அவுட். பஞ்சாபுக்கும், அஷ்வினுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்த விக்கெட்தான்.

#KXIPvCSK

ராயுடு ரன் அவுட்!

ஃபீல்டிங் சொதப்பல், ரன் அவுட் சொதப்பல்களுக்குப் பெயர் பெற்றவர் அஷ்வின். பந்தை நோக்கி ஓடமாட்டார் என்பதோடு ஸ்டம்பைக் குறிபார்த்து அவர் அடித்ததாக வரலாறே இல்லை. ஆனால், தன்னுடைய ட்ராக்  ரெகார்டையே நேற்று மாற்றிக்காட்டினார் அஷ்வின். மின்னல் வேகம் என வார்த்தைக்காக சொல்லவில்லை. உண்மையாகவே நடந்தது அதுதான். எக்ஸ்ட்ரா கவருக்குப் பந்து வந்த வேகத்தில் அதைப் பிடித்து ஸ்டம்பை நோக்கி வீச 49 ரன்களுடன் களத்தில் இருந்த ராயுடு அவுட். அஷ்வினை ஒரு கேப்டனாக கொண்டாடவைத்தது இந்த ரன் அவுட்தான். 

மோஹித் ஷர்மாவுக்கு 2 ஓவர்!

3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்த எக்கனாமிக்கல் பெளலர் நஜீம் இருந்தாலும், டெத் ஓவர்களை வீச வேகப்பந்து வீச்சாளர்களையே தேர்ந்தெடுத்தார் அஷ்வின். சென்னை அணியில் இருந்த மோஹித் ஷர்மா நெட்களில் தோனிக்கு அதிகமுறை பந்து வீசியவர் எனத் தெரிந்தும், ஸ்பின்னரிடம் கொடுக்காமல் ஷர்மாவிடமே பந்தை அஷ்வின் கொடுக்கக் காரணம், தோனியின் மைனஸ்கள் அவருக்குத் தெரியும் என்பதே. ஆனால், 18-வது ஓவரை மோஹித் வீசியபோது  2 சிக்ஸர், 1 பவுண்டரி என பொளந்துகட்டினார் தோனி. அதனால் 20-வது ஓவர் ஸ்பின்னரிடம்தான் கொடுக்கப்படும் என எல்லோரும் நினைக்க, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்கிற நிலையில், முந்தைய ஓவரில் 17 ரன்கள் கொடுத்த அதே மோஹித் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் அஷ்வின். 

KXIPvCSK

18-வது ஓவரில் ஸ்டம்ப்பை நோக்கி பந்துகளை வீசிய மோஹித் கடைசி ஓவரில் வைடாகப் பந்துகளை வீசினார். தோனி முந்தைய ஓவரில் அடித்ததுபோல அடிக்கமுடியவில்லை. 1 பவுண்டரி 1 சிக்ஸர் மட்டுமே. பஞ்சாப் வென்றது. 

 

பஞ்சாபின் வெற்றிக்கு கெயில், முஜிப், மோஹித் என பலர் உரிமை கொண்டாடலாம். ஆனால், சரியான திறமைகளை சரியான நேரத்தில் முன்நிறுத்தி, ஒன்றாக ஒருங்கிணைத்து, பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்றி தோனியின் படையை வென்ற பெருமை அஷ்வினை மட்டுமே சேரும்!

https://www.vikatan.com/news/sports/122344-ashwin-outsmarts-old-mate-dhoni.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பஞ்சாப் வெல்லவில்லை......வெற்றிக் கனியை தோனி  அஸ்வின், அகஸ்தியன், ஈழப்பிரியனுக்கும் புடுங்கி கொடுத்து விட்டார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

சும்மா வதந்தியை கிழப்பகூடாது..tw_blush:

 

20 minutes ago, suvy said:

நேற்று பஞ்சாப் வெல்லவில்லை......வெற்றிக் கனியை தோனி  அஸ்வின், அகஸ்தியன், ஈழப்பிரியனுக்கும் புடுங்கி கொடுத்து விட்டார்......!  tw_blush:

 

 

மீரா எழுதியதை பார்க்கவும்..tw_blush:

 

 

 

 
 
 
முதுகை பயன்படுத்த வேண்டியதில்லை- கை அந்த வேலையைச் செய்யும்- டோனி பளிச் பதில்


முதுகில் வலி இருந்தபோதிலும் பந்தை தூக்கி அடிக்கும் ஷாட்டுகள் (lofted shots) எப்படி ஆடினீர்கள் என்று கேள்வி கேட்கபட்டது. இதற்கு டோனி பதிலளிக்கையில் ‘‘எனது முதுகு பக்கத்தில் அதிக வலி இருந்தது. ஆனால், கடவுள் எனக்கு ஏராளமான பவர் கொடுத்துள்ளார். என்னுடைய முதுகு பகுதியை அதிக அளவில் பயன்படுத்த தேவையில்லை. எனது கைகளால் அந்த வேலையை செய்ய முடியும்’’ என்றார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

சும்மா வதந்தியை கிழப்பகூடாது..tw_blush:

 

 

 

மீரா எழுதியதை பார்க்கவும்..tw_blush:

மீரா திண்ணையில் எழுதியதை பார்க்கவும் என்னைவிட கடுப்பில நிக்கிறார்.....!  tw_blush:

ஆனால் கடைசி ஓவர் போட்ட  சர்மா கெட்டிக்காரன் , விக்கட்டையே குறிவைக்கவில்லை எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....!

Link to comment
Share on other sites

சென்னை தோற்றால் மீரா கடுப்புதான்... அது சொல்லியா தெரியவேண்டும்..:grin:

இன்று காலை நான் ஹிந்துவில் இருந்து இணைத்த செய்திக்கே மீரா கருத்து எழுதி இருந்தார்.

 

 

கடைசி ஓவர் போட்ட மொஹிட் ஷர்மா 2013 இல் இருந்து சென்னைக்கு விளையாடியவர்.

அஸ்வின் 8 வருடங்கள் சென்னைக்கு விளையாடியவர்.

இவர்களுக்கு தெரியும் டோனியின் பலவீனம்.

 

  எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....! // அதுதான் டோனியின் மிகப்பெரிய பலவீனம்.

20 minutes ago, suvy said:

மீரா திண்ணையில் எழுதியதை பார்க்கவும் என்னைவிட கடுப்பில நிக்கிறார்.....!  tw_blush:

ஆனால் கடைசி ஓவர் போட்ட  சர்மா கெட்டிக்காரன் , விக்கட்டையே குறிவைக்கவில்லை எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....!

 

Bildergebnis für mohit sharma chennai super kings

Link to comment
Share on other sites

`டெல்லி பௌலர்களைச் சோதித்த ரஸல், ராணா!’ - 200 ரன்கள் குவித்த கொல்கத்தா #KKRvsDD

 
 

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 

நிதிஷ் ராணா

Photo: Twitter/IPL

ஐ.பி.எல் 11 வது சீசனில் இன்று 13 வது போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் காரடன் மைதானத்தில் இரவு 8 மணிக்குத்  துவங்கிய இந்தப்  போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் பந்துவீச முடிவு செய்தார். 

 

அதன்படி, கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டகாரர்களாக கிரிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர் . டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் மற்றும் மோரிஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி திணறியது. சுனில் நரைன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துக்  களமிறங்கிய உத்தப்பா அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து, நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்திக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரஸல், 12 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ரஸலுடன் இணைந்து டெல்லி பௌலர்களைச் சோதித்த, நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ட்ரண்ட் போல்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். டிவாட்டியா வீசிய கடைசி ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து 3 வெக்கெட்டுகள் சாய்த்தார். அதேபோல், ட்ரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது. 

https://www.vikatan.com/news/sports/122393-kolkata-sets-massive-target-for-delhi-in-ipl.html

115/6
Link to comment
Share on other sites

முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?- பெங்களூருவுடன் இன்று மோதல்

 

 
493479-rohit-sharma-mi-run-700

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை இருக்கும் போதிலும் இந்த சீசனில் இரு அணிகளும் தொடக்கத்திலேயே தடுமாறி வருகின்றன. அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கி வரும் அந்த அணி சொந்த மண்ணில் இன்று முதல் வெற்றியை பெறுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும் அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மீண்டு வந்தது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் இலக்கை துரத்திய போது 19 ரன்களில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 59 ரன்களை வாரி வழங்கினார்.

யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே சிக்கனமாக ரன்களை வழங்கினர். இதனால் வேகப் பந்து வீச்சு கூட்டணியில் பெங்களூரு அணி சில மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். பேட்டிகில் விராட் கோலி பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கக்கூடும். முதல் இரு ஆட்டங்களிலும் மட்டையை சுழற்றத் தவறிய அவர், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பிரண்டன் மெக்கலம், டி வில்லியர்ஸ் ஆகியோரும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய மும்பை அணி கடந்த ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்தது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது நல்ல பலனை கொடுத்த போதிலும் சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவது பின்னடைவை கொடுத்துள்ளது. அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. மேலும் ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்க்கண்டே இந்த சீசனில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

அதேவேளையில் உலகத்தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தபடி செயல்படாததும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவர், மீண்டும் பார்முக்கு வரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்திப்பதில் இருந்து மும்பை அணி தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23567839.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார். #MIvRCB #RCBvMI

 
 
ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை
 
ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நாளை தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நான் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். என்னை பொருத்த வரையில் மிகப்பெரிய வீரர்களுக்கு எதிரான ஆட்டத்தை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொள்வேன்.

201804162050272338_1_pollard1-s._L_styvpf.jpg

ஒரு வீரராக எதிரணி எப்படி பட்டது, உங்களுக்கு எதிராக எப்படி செயல்பட இருக்கிறார்கள் என்பதை யோசித்து அதற்கு ஏற்றபடி கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். நாளைய போட்டி அணிக்கு மட்டுமல்ல, எனக்கும் சக்சஸ்புல் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

ஒருவேளை நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன்பின் நடைபெறும் 10 போட்டிகளும் வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துவிடும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16205027/1157366/IPL-2018-Mumbai-Indians-Kieron-Pollard-hungry-to-perform.vpf

Link to comment
Share on other sites

என்னாயிற்று டெல்லிக்கு? பந்து வீச்சில் நொறுக்கப்பட்டு பேட்டிங்கில் பெவிலியனை நோக்கி விறுவிறு

 

 
rana

டெல்லி பவுலிங்கை நொறுக்கிய ராணா-ரஸல் கூட்டணி.   -  படம். | பிடிஐ.

கொல்கத்தாவில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கவுதம் கம்பீர் தலைமை டெல்லி டேர் டெவில்ஸ் அணி படுதோல்வி கண்டது.

201 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய டெல்லி அணி முதல் 3 விக்கெட்டை 3 ஓவர்களில் இழந்தது, கடைசி 7 விக்கெட்டுகளை மேலும் விரைவு கதியில் 7 ஓவர்கள் வரை கூட எடுத்துக் கொள்ளாமல் பெவிலியன் நோக்கி பேட்ஸ்மென்களின் அணி வகுப்பாக அமைய 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது.

டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தவறாக கவுதம் கம்பீர் முடிவெடுத்தார். 201 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்சில் வலுவாக அமைய வேண்டிய பேட்டிங் குல்தீப் யாதவ், சுனில் நரைன் ஆகியோர் இணைந்து எடுத்த 6 விக்கெட்டுகளினால் எழும்ப முடியாமல் வீழ்த்தப் பட்டது.

உத்தப்பா அமைத்த அடித்தளத்தில் வெளுத்துக்கட்டிய ரஸல், ரானா:

கிறிஸ் லின், சுனில் நரைனுக்கு எதிராக பவுலிங், களவியூகத் தேர்வுகள் கடினம். ஆனால் டிரெண்ட் போல்ட்டும் அடிப்பதற்கு அவ்வளவு எளிதான பவுலர் கிடையாது, வாச்சாம்பொழச்சான் அடியெல்லாம் அவரிடம் சாத்தியமில்லை. கிறிஸ் லின்னை ஆட்டிப்படைத்து மெய்டனுடன் தொடங்கினார் போல்ட். பிறகு நரைனை (1) அருமையான பவுன்சரில் வீழ்த்தினார்.

போல்ட்டைத் தடவினாலும் லின்னை நம்ப முடியாது என்று கம்பீர் 6வது ஓவர் முதல் ஸ்பின்னர்களை இறக்கினார். இதனால் கிறிஸ் லின்னின் ஸ்ட்ரைக் ரேட் அடிவாங்கியது. 25 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்தார் அப்போது 10 ஓவர்கள் முடிந்திருந்தது. 5 ஓவர்களில் உத்தப்பாவும், லின்னும் 55 ரன்களைச் சேர்த்ததில் உத்தப்பாதான் பெரும்பங்களிப்பு.19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் விளாசி நதீம் பந்து வீச்சில் வெளியேறினார்.

என்னதான் உத்தப்பா டி20யில் அதிரடியாக ஆடினாலும் நம் ரவிசாஸ்திரி விராட் நிர்வாகம் ஸ்ரேயஸ் ஐயருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், ராயுடு என்னதான் திறமை காட்டினாலும் வாய்ப்பு கிடைக்காது, என்னதான் சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கினாலும் தோனியை நீக்க முடியாது, இதுதான் இந்திய அணியின் தற்போதைய நிலைமை. அணித்தேர்வு விவகாரம் திறமைகளின் அடிப்படையில் இல்லை என்பது தெள்ளத்தெளிவு, இதை வெளிப்படையாக தெரிவிக்கும் யாராக இருந்தாலும் பிசிசிஐ அவர்களை ஓரம் கட்டிவிடும், வர்ணனையாளர்கள் உட்பட.

லின்னுடன் ராணா இணைந்தார் 3.2 ஓவர்களில் 27 ரன்கள் சேர்த்தனர், கிறிஸ் லின் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஷமியின் ஏமாற்றும் ஸ்லோ பந்துக்கு வெளியேறினார். நிதிஷ் ரானா எதிர்முனையில் ஆக்ரோஷம் காட்ட 2 சிக்சர்களுடன் களத்தில் நிற்க 10 ஒவர்களில் 85/2 என்ற நிலைக்குப் பிறகுதான் லின் ஆட்டமிழந்தார்.

மொகமது ஷமியை புரட்டி எடுத்த ரஸல்:

15வது ஓவரில் ரஸல் 0-வில் தான் இருந்தார். அப்போதுதான் மொகமது ஷமிப் பந்து வீச்சு பற்றி ரஸல் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஷமியின் ஓவரில் 3 மிகப்பெரிய அரக்க சிக்ஸர்களை அடித்து அந்த ஓவரில் 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஜேசன் ராய் ஒரு கேட்சையும் ரஸலுக்கு கோட்டை விட்டார்.

இந்த ஓவர் போதாதென்று மீண்டும் ரஸல், ஷமியை தென் செல்லப் பிள்ளையாக நடத்தி நெட் பவுலர் போல் மீண்டும் வைடு பந்து, லெந்த் பந்து, பிறகு பவுன்சர் 3 பந்துகளுமே ரஸல் மட்டையிலிருந்து கிளம்பி ஸ்டேடியத்தில் போய் விழுந்தது மீண்டும் ஷமி ஓவரில் 3 சிக்சர்கள். ஷமியை மட்டுமே 6 சிக்சர்கள் விளாசிய ரஸல் 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து போல்ட்டின் அபாரமான வேகம் குறைக்கப்பட்ட நல்ல திசையில் துல்லியமாக வீசிய யார்க்கரில் பவுல்டு ஆனார். அப்போது 18 வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.

கிறிஸ் மோரிஸின் ஓவரை ராணா கவனித்தார். புல்ஷாட்டில் ஒரு சிக்ஸ், பிறகு பாயிண்டில் ஒரு பவுண்டரி என்று ராணா கலக்கி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உடன் 59 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட் ஆகும்போதே ஸ்கோர் 193 ஆக உயர்ந்திருந்தது. 10 ஓவர்களில் 85/2 என்ற நிலையிலிருந்து 20 ஒவர்களில் 200/9 என்று முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டெல்லி தரப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக வீசியதில் போல்ட் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டெவாட்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

டெல்லியின் பெவிலியன் நோக்கிய அணிவகுப்பு:

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 91 ரன்கள் வெளுத்துக் கட்டிய ஜேசன் ராய் அச்சுறுத்தலுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினாலும் பியூஷ் சாவ்லாவை வைத்து ராயை 1 ரன்னில் வீழ்த்தினார். ஜேசன் ராயைப் பற்றிய அறிவு தினேஷ் கார்த்திக்குக்கு இருந்ததால் சரியாக அவரது லெக்ஸ்பின் பலவீனத்தை அறிந்து சாவ்லாவைக் கொண்டு வந்தார், அவரும் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

ஆந்த்ரே ரஸலின் வேகம் மற்றும் எழும்பிய பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அண்டர் 19 உலகக்கோப்பைப் புகழ் இளம் வேகப்புயல் ஷிவம் மால்வி பந்தை கவுதம் கம்பீர் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொள்ள டெல்லி 24/3 என்று முதல் 3 ஓவர்களிலேயே தோல்வியின் வாசனையை முகர்ந்தது.

suniljpg

டெல்லி பேட்டிங்கை காலி செய்த நரைன், குல்தீப் கூட்டணி.   -  படம். | பிடிஐ.

 

ரிஷப் பந்த் (43), கிளென் மேக்ஸ்வெல் (47) ஆகியோர் இணைந்து 5.3 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தனர், ஆனால் குல்தீப் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பந்த் விக்கெட்டைச் சாய்த்தார். பிறகு அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஷார்ட் பிட்ச்சாக இருந்தாலும் குல்தீப் மிக மெதுவாக வீச மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். 113/6 அதன் பிறகு 129 ஆல் அவுட்.

கிறிஸ் மோரிஸ் (2), விஜய் சங்கர் (2), ஷமி (7) ஆகியோரை சுனில் நரைன் காலி செய்தார். சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் நிதீஷ் ராணா.

http://tamil.thehindu.com/sports/article23568381.ece

Link to comment
Share on other sites

தோள்தட்டி வரவேற்று தோல்வியுடன் வழியனுப்பிய ஈடன் கார்டன்... கொல்கத்தாவில் கம்பீர் படுதோல்வி! #KKRvsDD

 

கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் கவுதம் கம்பீர். இந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியின் கேப்டன். அவர் தன் முன்னாள் ஹோம் கிரவுண்ட் ஈடன் கார்டனில் எப்படி ஜொலிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  #KKRvDD

#KKRvDD

 டாஸ் வென்ற கம்பிர், கொல்கத்தா அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார் ட்ரென்ட் போல்ட். மேட்ச்சின் முதல் ஓவரே மெய்டன்.  ஆட்டத்தின் முதல் 15 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி, அதிரடி தொடக்க வீரரான சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது. உத்தப்பா தனக்கே உரிய measured assault ஸ்டைலில் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசிய 6-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, அந்த ஓவரில் 18 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவுக்குத் தேவையான மொமென்ட்டை அளித்த உத்தப்பா, ரன் ரேட்டை மேலும் உயர்த்த நினைத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 62/2. மறுபுறம் லின் தன் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக ஆடினார். லின்னுடன் இணைந்தார் ராணா.

#KKRvDD

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், கொல்கத்தா அணி ரன் ரேட்டை நன்றாகவே நிலைநிறுத்தியது. ராணா எந்தவொரு லூஸ் பாலையும் விட்டுவைக்காமல் விளாசினார். எந்தவொரு இந்திய இளம் வீரரும் சற்று நன்றாக ஆட தொடங்கியதும் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லெட்ஜிங் முறையைக் கைப்பற்றுவர். இதையே டெல்லி வீரர் மோரிஸ் முயன்றார். தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் பந்து வீச்சில் ஒரு சிக்ஸரும், மோரிஸ் ஒவரில் ஒரே இடத்தில் 2 பவுண்டரியும் விளாசினார். ஆனால், அடுத்த பந்திலேயே அதே இடத்தில் மூன்றாவது பவுண்டரி அடிக்க முயன்று, விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கியது அதிரடி ரசல்.

இந்த மாறி சூழலுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ரசல், தன் பணியைக் கச்சிதமாகச் செய்தார். சென்னை அணி செய்த அதே தவறை கொல்கத்தா அணியும் செய்தது. எந்த இடத்தில் போட்டால் ரசல் ஸ்லாக் முறையில் பந்தை விளாசுவாரோ, அதே இடத்தில் பந்தைப் போட்டு டெல்லி பௌலர்கள் ஊட்டிவிட்டனர். சந்தித்தது 11 பந்துகள்தான். அதில் 6 சிக்ஸர்கள். 12-வது பந்தில் போல்ட் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் அவுட் ஆகும் தருணம் ராணா தன் அரைசதத்தைக் கடந்திருந்தார். ஒருகட்டத்தில் 210 - 220 ரன்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெவேத்தியா கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ராணா 59 ரன் குவித்தார். 

#KKRvDD

கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்ததால், நம்பிக்கையுடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பைக்கு எதிராக 91 ரன்கள் விளாசிய ஜேசன் ராய் 1 ரன்னில் சாவ்லா பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர், மூன்றாம் ஓவரில் கேப்டன் கம்பீர் என முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது டெல்லி.

நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பண்ட்- மாக்ஸ்வெல் கூட்டணி கவுண்டர் அட்டாக் செய்யத் தொடங்கியது. இவர்கள் அடிக்கத் தொடங்கினால் எந்தவொரு கிரவுண்டும், எந்தவொரு டார்கெட்டும் பெரிதல்ல என்பதற்கேற்ப, அசால்ட்டாக ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அடித்து வந்தனர். கொல்கத்தா அணியின் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் நரேன் ஓவரில்கூட, ரிஷப் பன்ட் வெளுத்து வாங்கினார். இந்த ஸ்கோரையும் எளிதாக சேஸ் செய்துவிடுவார்களோ என்று எதிர்பார்த்த நேரத்தில், தினேஷ் கார்த்திக் தன் இரண்டாம் துருப்புச் சீட்டான குல்தீப் யாதவைக் கொண்டுவந்தார். 

#KKRvDD

வீசிய மூன்றாவது பந்திலேயே பன்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் குல்தீப். விஜய் சங்கர், மோரிஸ் போன்ற வீரர்கள் இருந்தும் குல்தீப்பை சமாளிக்க தெவேத்தியாவை அனுப்பினார் கம்பீர். அவர் ஒரு ரன்னில் வெளியேற மொத்த பிரஷ்ஷரும் மேக்ஸ்வெல் பக்கம் திரும்பியது. குல்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் விளாசிய மேக்ஸ்வெல், மூன்றாவது சிக்ஸர் அடிக்க முயலும்போது ஆட்டமிழந்தார்.  

மோரிஸ், விஜய் சங்கர் இருவரும் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மோரிஸ் விக்கெட்டை எடுத்தபோது, நரேன் 100-வது ஐ.பி.எல் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் மலிங்கா, ஹர்பஜனுக்கு அடுத்ததாக ஒரே அணிக்காக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சேர்ந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் கொல்கத்தா அணியின் சுழற்பந்துக்கு சரணடைந்தனர். டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டானது. கொல்கத்தா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன், குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். 35 பந்துகளில் 59 ரன்கள் குவித்த ராணாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

#KKRvDD

 

டெல்லி அணிக்கு இது மிகப்பெரிய பாடம். மூன்று மேட்ச்களிலும் அவர்களின் பந்து வீச்சு சொல்லும்படியில்லை. அடுத்தப் போட்டிக்கு இன்னும் 4 நாள்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் கேப்டன் கம்பீர்,  பயிற்சியாளர் பாண்டிங் இருவரும் இணைந்து `plan b’ தயார்செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் , வழக்கம் போல புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டியது தான். 

https://www.vikatan.com/news/sports/122436-kolkata-beats-delhi-by-70-runs.html

Link to comment
Share on other sites

‘ப்ளே’ என்றவுடன் 2 பவுல்டுகள்: உமேஷ் யாதவ் மீண்டும் அசத்தல்

 

 
umesh

2 பந்துகளில் 2 பவுல்டு உமேஷ் யாதவ் சூப்பர்.   -  படம். | ஏ.பி.

மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு உமேஷ் யாதவ் மூலம் அபாரமான தொடக்கம் கண்டது.

சூரியகுமார் யாதவ்வும் எவின் லூயிஸும் முதலில் களமிறங்கினர். விராட் கோலி முதலில் சிராஜிடம் பந்தைக்கொடுப்பார் என்று தோன்றியது. ஆனால் திடீரென என்ன தோன்றிற்றோ உமேஷ் யாதவ்வை அழைத்து வீசச் செய்தார்.

உமேஷ் யாதவ் முதல் ஓவரைத் தொடங்கினார்.

முதல் பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே, மிகச்சற்றே நின்று வந்தது சூரிய குமார் யாதவ் தளர்வாக ஆட பந்து ஊடுருவி ஸ்டம்பைத் தாக்கியது, சூரியகுமார் யாதவ் கோல்டன் டக்.

சூரிய குமார் யாதவ் நல்ல பார்மில் இருப்பவர் முதல் பந்தில் வெளியேற, இஷான் கிஷன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் இவருக்கும் வேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர இஷான் கிஷன் தடுப்பாட்டம் எடுபடவில்லை மீண்டும் பவுல்டு. 2 பந்துகளில் 2 விக்கெட், ஹாட்ரிக் வாய்ப்பு.

ரோஹித் சர்மா இறங்கியவுடன் கால்காப்பில் வாங்கினார். ஹாட்ரிக் கிடைக்கவில்லை. அன்று ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய உமேஷ் இன்று முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரோஹித் சர்மா அவசரம் அவசரமாக பேடைக் கட்ட வைத்தார்.

ஆனால் அதன் பிறகு எவின் லூயிஸ் வெளுத்துக் கட்டி 37 ரன்களுடனும், ரோஹித் சர்மா 12 ரன்களுடனும் களத்தில் இருக்க மும்பை இந்தியன்ஸ் 6 ஓவர்களில் 60/2 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23576280.ece?homepage=true

143/3
Link to comment
Share on other sites

ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்

 

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் ஏழு அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளார். #IPL2018

 
ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்
 
ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதன்மூலம் 11 தொடர்களில் 7 அணிகளுக்காக விளையாடியவர் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

`ரோஹித் ஷர்மா அதிரடி!’ பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த மும்பை அணி #MIvRCB

 
 

ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 

ரோகித் ஷர்மா

Photo: Twitter/IPL

ஐ.பி.எல்   2018 -ல் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும்  14 -வது லீக் போட்டின் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி மும்பை அணிக்கு உமேஷ் யாதவ் அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். 

 

ரோஹித் ஷர்மா மற்றும் லீவிஸ் ஆகியோர் அணியைச் சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கினார். அதேநேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டனர். முதல்  6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு, அந்த அணி  60 ரன்கள் எடுத்தது. லீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்துகளில்   65 ரன்கள் எடுத்த அவர், கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய குர்னல் பாண்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார் . ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பொல்லார்ட் 5 ரன்னில் வோக்ஸ் பந்திவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா, கடைசி ஓவரில் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெடுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 

https://www.vikatan.com/news/sports/122497-with-the-help-of-rohit-sharma-mumbai-gets-massive-total-in-ipl-league-match.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட் - பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது. #IPL2018 #MIvRCB

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் - பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்
 
மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

மும்பை அணியின் துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார். அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கெட்டையும் எடுத்து மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார்.

201804172357251098_1_ipl-mivrcb1._L_styvpf.jpg

அடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, லெவிசுடன் கைகோர்த்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்த போதிலும் லெவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 65 ரன்கள் (பவுண்டரி 6, சிக்ஸ் 5) விளாசினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்கள் குவித்தது.

201804172357251098_2_aneidixp._L_styvpf.jpg

பின்னர் களமிறங்கிய குருனல் பாண்டியா 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஐ.பி.எல். போட்டி தொடங்கியதில் இருந்து பார்ம் இன்றி தவித்துவந்த கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 52 பந்தில் 94 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், கிவிண்டன் டீ காக்கும் களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். டி காக் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

201804172357251098_3_ipl-mivrcb3._L_styvpf.jpg

அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் நிலைத்துநின்று விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 92 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் குருனல் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா, மெக்லினகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. IPL2018 #MIvRCB

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17235725/1157578/IPL-2018-Mumbai-Indians-beat-Royal-Challengers-Bangalore.vpf

Link to comment
Share on other sites

ஆரஞ்சு தொப்பி இப்போது அவசியமா? : விரக்தியில் விராட் கோலி

virat

கவர் ட்ரைவில் விராட் கோலி.   -  படம். | ஏ.பி.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார்.

முதலில் உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் அணித்தேர்வு முதல் (நியூஸி. அணியில் இல்லாத கோரி ஆண்டர்சனைத் தேர்வு செய்தது.. மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு வாய்ப்பு அளிக்காதது), பந்து வீச்சு மாற்றம் வரை சோடைபோன கேப்டன் விராட் கோலி எவின் லூயிஸை பெவிலியன் அனுப்ப எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை, அவர் ஸ்பின்னர்களை வெளுத்துக் கட்டினார், அவர் வெளுத்துக்கட்டுவதைச் சாதகமாக்கிய ரோஹித் சர்மா ஒரு முனையில் நிலைத்து கடைசியில் பின்னி பெடலெடுத்தார். மொத்தத்தில் கோலிக்கு நேற்று தொட்டது எதுவும் துலங்கவில்லை, பேட்டிங்கில் அவர் போகப்போக மந்தமானார். வெற்றி பெற தேவைப்படும் ரன் விகிதம் எகிற எகிற கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதற்கேற்ப வலுப்பெறவில்லை.. முடிவு இன்னொரு தோல்வி.

 

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ரெய்னாவை அவர் முறியடித்து இன்னொரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஆரஞ்சுத் தொப்பிக்குச் சொந்தக் காரரான கோலி கூறியது:

“இந்தத் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை. நாங்கள் தூக்கித்தான் எறிந்தோம், எங்கள் விக்கெட்டுகளை நாங்கள் பறிகொடுத்த விதங்களை மீண்டும் ஒரு முறை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓரிரண்டு நல்ல கூட்டணிகள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்திருக்கும். மும்பை நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை.”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article23581316.ece?homepage=true

Link to comment
Share on other sites

கொல்கத்தாவுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

 

ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தாவுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்
 
ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்துடன் 9 விக்கெட்டில் தோற்று 2-வது போட்டியில் டெல்லியை 10 ரன்னிலும், 3-வது போட்டியில் பெங்களூரை 19 ரன்னிலும் வென்றது.

2 ஹாட்ரிக், 1 தோல்வியுடன் இருக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் சரக சாம்சன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

கொல்கத்தா அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி பெங்களூரை (4 விக்கெட்), டெல்லியை (71 ரன்) வீழ்த்தி இருந்தது. ஐதராபாத் (5 விக்கெட்), சென்னை (5 விக்கெட்), அணிகளிடம் தோற்று இருந்தது. 3-வது வெற்றி ஆர்வத்தில் கொல்கத்தா இருக்கிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 15 போட்டியில் கொல்கத்தா 9-ல் ராஜஸ்தான் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. #IPL2018 # #KKRvRR

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/18101304/1157620/IPL-2018--Today-match-between-Kolkata-Knight-Riders.vpf

Link to comment
Share on other sites

விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ- பிராவோ

 

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

 
விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ- பிராவோ
 
கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி ஸ்டிரைக்கரும் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ கருதப்படுகிறார். விளையாட்டில் எப்படி தனது திறமையை வெளிப்படுத்துகிறாரோ, அதேபோல் தனது உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதுபோல் உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ, விராட் கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ என்று தெரிவித்துள்ளார்.

201804171504563633_1_ronaldo-s21._L_styvpf.jpg

விராட் கோலி குறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘விராட் கோலியை கிறிஸ்டியானோ ரொனால்டோவுன் ஒப்பிடுவது சிறந்தது. விராட் கோலி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் எனது இளைய சகோதரரான டேரன் பிராவோ உடன் விளையாடியுள்ளார். விராட் கோலியிடம் என்னுடைய சசோதரர் பேட்டிங் மற்றும் கிரிக்கெட் பற்றி பேசுங்கள் என்ற கேட்டுக்கொண்டேன்.

201804171504563633_2_viratKohli-s._L_styvpf.jpg

நான் விராட் கோலியை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் ரொனால்டோவை பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக விராட் கோலி இந்திய அணிக்காகவும், ஆர்சிபிக்காவும விளையாடும்போது அவரது ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவரது திறமையை நான் கட்டாயம் பாராட்டுகிறேன். அவர் ஈடுபாட்டுடன் விளையாடும் கிரிக்கெட்டை வைத்து பார்க்கும்போது அனைத்து சாதனைகளுக்கும் தகுதியானவர்’’ என்றார்.
 
Link to comment
Share on other sites

நூலிழையில் தப்பிய இஷான் கிஷனின் வலது கண்: பதம் பார்த்த ஹர்திக் பாண்டியாவின் த்ரோ

 

 
ishan%20kishan

த்ரோவில் அடி வாங்கி வலியில் துடிக்கும் இஷான் கிஷன்   -  படம். | விவேக் பெந்த்ரே.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.

பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது.

வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் கிஷன்.

அதாவது பும்ரா வீசிய பந்தை விராட் கோலி தரையோடு தரையாக புல் ஷாட் ஆடினார். பந்து மிட்விக்கெட் பீல்டர் முன்னால் விழுந்தது ஹர்திக் பாண்டியா அடித்த த்ரோ பிட்சில் பட்டு இஷான் கிஷன் வலது கண் அருகில் பயங்கரமாகத் தாக்க அவர் கீழே விழுந்து வலியால் துடித்தார்.

வலது கண் வீங்கிய நிலையில் மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்து பெவிலியன் அழைத்துச் சென்றனர், இதனையடுத்து ஆதித்யா தாரே விக்கெட் கீப்பிங் செய்தார்.

பந்து கொஞ்சம் மேலே கண்களைத் தாக்கியிருந்தால் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவருக்கு ஏற்பட்டிருக்கலாம், எப்படியோ தப்பினார், ஆனாலும் அவரது காயத்தின் தீவிரம் குறித்து இனிமேல்தான் தெரியவரும்.

http://tamil.thehindu.com/sports/article23582520.ece

Link to comment
Share on other sites

கோலியின் அனைத்து பிளான்களும் ஃப்ளாப்... தொடரும் ஆர்.சி.பி. சோகம்! #MIvsRCB

 
 

`இந்த ஐ.பி.எல்-ல டாஸ் வின் பண்ணிட்டாலே மேட்ச் வின் பண்ணிட்ட மாதிரிதான்' என்ற அனைவரின் எண்ணத்திலும் கரியைப் பூசிவிட்டார்கள் இதயத் திருடர்கள். கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடிப் போராடி தோற்றுக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றியையும் பரிசளித்துவிட்டார்கள். 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றுவிட்டது ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏன் தோற்றது என்று எட்டு வருடமாகச் சொல்லிவரும் அதே காரணத்தைத்தான் இப்போதும் சொல்லப்போகிறோம். ஆம், அதேதான்...அந்த பௌலிங் தான். #IPL2018

#IPL2018

முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் வீசிய அந்த இரண்டு டெலிவரிகளும் உலகத்தரம். ஒரே லென்த்தில் இரண்டு பந்துகளையும் பிட்ச் செய்தார். ஆனால், வலது, இடது என இரு வேறு விதமான பேட்ஸ்மேன்களுக்கும் உள்ளே பந்தை ஸ்விங் செய்ததுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இஷான் கிஷான் போல்டான அந்த பந்து வான்கடே அரண்டுவிட்டது. இப்படி ஒரு அசாத்திய தொடக்கம். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அடித்தது 213. அந்த அளவுக்கு மோசமாக இருந்தது ஆர்.சி.பி-யின் பௌலிங். இதற்கு முழுக்க முழுக்க பௌலர்களை மட்டுமே குறை சொல்லிட முடியாது.

டாஸ் போடுவதற்கு முன்பு ஆர்.சி.பி அணியில் அறிமுகமாவதற்காக கோரி ஆண்டர்சன் கையில் Debut Cap கொடுக்கப்படுகிறது. காலின் டி கிராந்தோம், மொயீன் அலி என ஏலத்தில் எடுத்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு ரீப்ளேஸ்மென்ட் வீரராக வந்தவரைக் களமிறக்கினார்கள். இடது கை பௌலர் வேண்டுமென்பதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா? வெள்ளை நிறப் பந்தில் ஆண்டர்சன் விளையாடி 230 நாள்கள் ஆகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆடியதும் வெறும் மூன்றே முதல் தரப் போட்டிகள். அதிலும் பெரிதாகச் சோபிக்கவில்லை.  இது ஒருபுறமிருக்க, கேப்டன் கோலியின் பௌலிங் சாய்ஸ் வியக்க வைத்தது. 

#IPL2018

கடந்த 3 சீசன்களாக, குருனால் பாண்டியா ஓவரில் டி வில்லியர்ஸ் விக்கெட்டைப் பறிகொடுப்பதைப் பற்றியும், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விராட் திணறுவதைப் பற்றியும், லெக் ஸ்பின்னில் ரோஹித் ஷர்மா தடுமாறுவதைப் பற்றியும்தான் அத்துனை பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த 28 இன்னிங்ஸில் 9 முறை லெக் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துள்ளார் ரோஹித். ஸ்டிரைக் ரேட் கூட வெறும் 111.6 தான். அப்படியிருக்கையில் 9-வது ஓவர் வரை சஹால் கையில் கோலி பந்தைக் கொடுக்கவேயில்லை. ரோஹித் நன்றாக செட்டில் ஆகட்டும் என்று காத்திருந்தார்போல. சரி, தொடக்கத்தில்தான் இப்படியென்றால் ஃபினிஷிங் படுமோசம். 

மும்பை அணி 17 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருக்கிறது. வோக்ஸ் இரண்டு ஓவர்கள்தான் வீசியிருக்கிறார். சிராஜ், சஹால், ஆண்டர்சன் ஆகியோருக்கும் தலா 1 ஓவர் கைவசம் இருக்கிறது. முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்திருந்த சிராஜ், அடுத்த 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். அவர் 1 ஓவரும், வோக்ஸ் 2 ஓவர்களும் (அதுவரை எகானமி - 8.00) போடுவதுதான் சரி. எந்தக் கேப்டனாக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள். பட் கோலி...! அந்த ஓவர் சிராஜுக்கு. அடுத்த ஓவர் வோக்ஸ். அப்போ கடைசி ஓவர்..? கோரி ஆண்டர்சன் வீச, ரோஹித் சிக்ஸரும் ஃபோருமாக விளாச அந்த ஓவரில் 21 ரன்கள். இந்தப் போட்டிக்கு முன்புவரை ஐ.பி.எல் வரலாற்றில் டெத் ஓவர்களில் மிகக் குறைந்த ரன்ரேட் வைத்திருந்த அணி மும்பை இந்தியன்ஸ்தான். அதுவும் வெறும் 8.00! ஆனால், இந்தப் போட்டியின் கடைசி 5 ஓவர்களில் நம் பெங்களூரு வள்ளல்கள் கொடுத்தது 70 ரன்கள். இங்கு ஒரு 20 ரன்களையாவது குறைத்திருந்தால் சேஸிங் கொஞ்சம் ஈசியாக இருந்திருக்கும். 

rohit sharma

இந்தத் தவறெல்லாம் செய்தது போதாதென்று, சொதப்பிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை வேறு ஃபார்முக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். முதல் ஓவரில் களமிறங்கியவர், கடைசி ஓவர்வரை நின்று கதகளி ஆடிவிட்டார்.  வாஷிங்டன் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில்,அடித்த அந்த கவர் டிரைவ் கோலிக்கே சவால் விடும். அப்படியொரு கிளாசிக்கல் ஷாட். முதல் இரண்டு ஓவர்களை சூப்பராக வீசிவிட்டு, கெத்தாக இரண்டாவது ஸ்பெல் போட வந்த உமேஷை, முதல் பந்திலேயே சிக்ஸருக்கு அனுப்பிய அந்த அடி...மிரட்டல்! உமேஷ் காலி. அவரின் இரண்டாவது ஸ்பெல்லில் 28 ரன்கள். எல்லாம் ரோஹித் உபயம். 

ஆனால் ரோஹித் வெறுமனே சிக்ஸர்களும் பௌண்டரிகளும் அடிக்கவில்லை, அடிக்க முற்படவில்லை. சொல்லப்போனால் மிகவும் சென்சிபிளாக விளையாடினார். முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட் இழந்துவிட்ட நிலையில், இன்னிங்ஸைக் கட்டமைப்பதில் கவனமாக இருந்தார். வழக்கமான மொக்கை போடாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்தார். மறுமுனையில் ஈவின் லூயிஸ் வாணவேடிக்கை காட்ட, பவர்பிளே முடிவில் 60 ரன்கள். அப்போதே ஆட்டத்தை தன்பக்கம் எடுத்து வந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ். 

lewis

லூயிஸ் அவுட்டாகும் வரை அடிக்கத் தோதான பந்துகளை மட்டும் தேர்வு செய்து விளையாடினார் ரோஹித். காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்த அந்த கரீபிய வீரர் ஸ்டிரைக்கில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தார். 15 ஓவர்கள் முடிந்திருந்தபோது, ரோஹித் சந்தித்திருந்தது வெறும் 34 பந்துகள் மட்டுமே! அவரும் செட்டிலானார். ரன்ரேட்டும் ஒன்பதுக்குக் குறையாமல் நகர்ந்தது. அந்த அளவுக்கு இன்னிங்ஸை கணக்கிட்டு கச்சிதமாக நகர்த்தினார். லூயிஸ் அவுட்டானதும் ஹிட்மேன் மோடுக்கு மாறினார். தான் அதிக நேரம் ஸ்டிரைக்கில் இருப்பதை உறுதி செய்தார். குருனால், பொல்லார்ட் என அடுத்தடுத்த வந்தவர்களும் ரோஹித்துக்கு ஸ்டிரைக் கொடுப்பதில் கவனமாக இருந்தனர். 13-வது ஓவரில் 9.08-ஆக இருந்த ரன்ரேட் சத்தமில்லாமல் உயர்ந்து பத்தைத் தாண்டியது. மும்பை 213 என்ற இமாலய இலக்கை எட்டியது. 

ரோஹித் தெளிவாக இருந்த விஷயத்தில், மும்பை அணி கவனமாக இருந்த விஷயத்தில் ஆர்.சி.பி, கோலி கவனமாக இல்லை. அவர்களிடம் தெளிவும் இல்லை. மெக்கல்லம் இல்லாததால் தானே ஓப்பனிங் இறங்கினார் கோலி. 20 ஓவர்களும் அவுட்டாகாமல் நின்றார். ஆனால் அது என்ன பயன் கொடுத்தது? அவரும், டி வில்லியர்சும் டாப் ஆர்டரில் களம் கண்டுவிட, மிடில் ஆர்டர் ரொம்ப வீக் ஆனது. அவர்களால் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் ஆடவும் முடியவில்லை. கோலிக்கு ஸ்டிரைக் ரொட்டேட் செய்யவும் முடியவில்லை. பவர்பிளே முடிந்து 16-வது ஓவர் வரை ஒரு ஓவரில்கூட 10 ரன்களைத் தாண்டி எடுக்க முடியவில்லை. ரன்ரேட் 8 கூட இல்லை. கடைசியில் நிலைமை... 5 ஓவர்களில் 106 ரன்கள் தேவை. எப்படி முடியும்?

மனன் வோரா, பார்த்திவ் பட்டேல் என்று இரண்டு ஓப்பனர்களை வைத்துக்கொண்டும், தானே ஓப்பனிங் இறங்கியது நிச்சயம் தவறான முடிவுதான். ஏ.பி - இன்று என்ன ஆனதோ தெரியவில்லை? 5 ஓவர்கள்தான் முடிந்திருந்தது, ரன்ரேட்டும் ஒன்பதற்கும் மேல் இருக்கிறது. அப்படியிருக்கையில் தேவையில்லாத அவசரம். அந்த விக்கெட், அப்போதே ஆட்டத்தை மும்பை கையில் திணித்துவிட்டது. இப்படி இரண்டு வீரர்களை மட்டுமே ஒரு அணி நம்பியிருக்கும்போது அவர்கள் இருவருமே டாப் ஆர்டரில் களமிறங்குவது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது. அதற்கு இந்தப் போட்டி நல்ல எடுத்துக்காட்டு. 

#IPL2018

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட இந்தப் போட்டியில் எத்தனையோ விஷயங்கள் இருந்தது. 'அடுத்த கிறிஸ் கெய்ல்' என்று வர்ணிக்கப்படும் ஈவின் லூயிஸ், தன் கரீபிய வித்தையை மொத்தமாக இறக்கினார். முகமது சிராஜ், வாஷிங்டன் பந்துகளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கினார். ஆபத்தான பௌலராகக் கருதப்படும் சஹாலின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து அலறவிட்டார். 42 பந்துகளில் 65 ரன்கள். துவண்டு கிடந்திருந்த மும்பை இன்னிங்ஸை தூக்கி நிறுத்துவிட்டுச் சென்றார். கடைசி கட்டத்தில் ஹர்டிக் வந்து வாணவேடிக்கை காட்டி 5 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இப்படி இவர்கள் அடித்துக்கொண்டிருக்க, அந்த டென்ஷனையெல்லாம் அம்பயரிடம் காட்டி சண்டை போட்டார் கோலி.

ஐ.பி.எல்-லின் ஜாலி மேன் டேனி மாரிசன் அவருக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்தபோதும், "இப்போது இதை அணியும் மனநிலையில் நான் இல்லை" என்று வருந்தினார். அந்த வருத்தத்தில், அவர் ஆடிய அந்த அற்புத இன்னிங்ஸ், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை எல்லாம் மறைந்துபோனது. வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தம் அவரை அப்படி நடந்துகொள்ளச் செய்தது. 

virat kohli

 

ஆர்.சி.பி மீண்டுவருவது அவர்கள் பௌலர்கள் கையில் மட்டுமில்லை. மோசமான டீம் செலக்‌ஷன் செய்யும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கையிலும் இருக்கிறது. வழக்கமாக பாதித் தொடரில் சொதப்பும் பெங்களூரு இந்த முறை முதலில் இருந்தே தடுமாறி வருகிறது. பலமான அணியாக இருந்தும் வெற்றியை மிஸ் செய்வது எதனால் என்பதை அவர்கள் இனிமேலாவது யோசிக்கவேண்டும்.

https://www.vikatan.com/news/sports/122531-mumbai-indians-beat-rcb-to-register-their-first-win-of-the-season.html

Link to comment
Share on other sites

கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ்: பயிற்சியாளர் வெட்டோரி கடும் அதிருப்தி

 
  •  
 
vettori

இறுதி ஓவர்களை எப்படி கட்டுப்படுத்துவது ஆலோசனையில் ஆர்சிபி திங்க் டேங்க்.   -  படம். | ஜி.பி.சம்பத்குமார்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு வலுவான அதிரடி அணியாக பேப்பரில் தெரிந்தாலும் தொடர் தோல்விகளுக்குக் காரணம் அதன் இறுதி ஓவர்களின் ரன் வாரிவழங்கலே என்பது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியின் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது.

அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களைப் புரட்டி எடுத்த போது கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கியது பெங்களூரு இதனால் ராஜஸ்தான் 217 ரன்களைக் குவித்தது.

நேற்று மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் பக்கம் வாரி வழங்க ஸ்கோர் 213க்கு உயர்ந்தது.

இது குறித்து டேனியல் வெட்டோரி கூறும்போது, “கடைசி ஓவர்கள் பந்து வீச்சு வெறுப்படையச் செய்கிறது. பெரிய இலக்குகளை விரட்டும் போது கடும் அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். விராட் கோலி இன்று தனித்துவச் சிறப்புடன் ஆடினார் ஆனால் அவருடன் இணைந்து ஆட ஒருவரும் நிற்கவில்லை. ஆகவே தான் கடைசி 2 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

எவின் லூயிஸும், ரோஹித் சர்மாவும் ஆக்ரோஷமாக ஆடியதால் சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் தடுப்பு வியூகத்துக்குச் சென்றார்கள். இன்னும் கொஞ்சம் அட்டாக் செய்திருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி மாறாக தன் ஸ்பின்னர்களைக் கொண்டு வரும்போது அந்த அணி நல்ல நிலையில் இருந்ததால் அவர்கள் எங்களை நெருக்க முடிந்தது. பந்தை தைரியமாக பிளைட் செய்தார்கள் இதனால் அவர்கள் அடைந்த பயன்களை நாம் பார்த்தோம்.

ஆனாலும் மும்பை அபாரமாக பேட் செய்தது, எங்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் அவர்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்” என்றார் வெட்டோரி.

http://tamil.thehindu.com/sports/article23584749.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.