Jump to content

இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண்


Recommended Posts

இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண்

 
ஹெப்பர்ஸ் கிட்சன் Image captionஅர்ச்சனா ஹெப்பர்

ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது.

சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், யூ டியூப் மற்றும் பின்ட்ரஸ்ட் போன்ற பல்வேறு தளங்களில் ஹெப்பர்ஸ் கிட்சன் பதிவேற்றும் சமையல் காணொளிகளை லட்சக் கணக்கான மக்கள் தினமும் பார்வையிடுகிறார்கள்.

பலர் இந்த ஹெப்பர்ஸ் கிட்சனின் சமையல் காணொளிகளை கண்டாலும், இதற்கு பின்னால் உள்ளது யார் என எவருக்கும் தெரியாது. அவரின் கைகளை மட்டுமே எல்லா காணொளிகளிலும் காண முடியும்.

சமையல்படத்தின் காப்புரிமைHEBBARSKITCHEN/FACEBOOK

அவர் அடையாளத்தை இதுவரை அந்த நபர் வெளிப்படுத்தியது இல்லை.

பொழுது போக்கிற்காக தொடங்கப்பட்ட ஹெப்பர்ஸ் கிட்சன் இந்த அளவிற்கு உயரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார் பிபிசியிடம் பேசிய இதன் நிறுவனர் அர்ச்சனா ஹெப்பர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த அர்ச்சனா, தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் வசித்து வருகிறார்.

இந்தியாவில் இருக்கும் சமையல் பக்கங்களில் இவரது ஹெப்பர்ஸ் கிட்சனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வுபடி, 2017ஆம் ஆண்டில் உணவு பிரிவில் ஹெப்பர்ஸ் கிட்சனின் காணொளிகள்தான் அதிகம் பார்வையிடப்பட்டுள்ளன.

ஹெப்பர்ஸ் கிட்சன்படத்தின் காப்புரிமைARCHANA

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும், சுமார் 9 கோடி பார்வையாளர்களை ஹெப்பர்ஸ் கிட்சன் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள காணொளிகள் பெற்றுள்ளன.

2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் தன் சமையல் பணியை தொடங்கினார் அர்ச்சனா.

ஹெப்பர்ஸ் கிட்சனின் ஆரம்பகால பயணம் குறித்து விவரித்த அர்ச்சனா, "திருமணத்திற்கு பின், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்தேன். நான் செய்து வந்த மென்பொருள் சோதனை பணியை இங்கு தொடர விரும்பினேன். ஆனால் இங்கு வேலை கிடைப்பது என்பது கடினமாக இருந்தது. அப்போது என் நேரத்தை கழிக்க, Wordpress இணையதளத்தில் கணக்கு தொடங்கி, அதில் சில எளிமையான சமையல் குறிப்புகளை செய்முறை மற்றும் புகைப்படங்களுடன் பதிவிட தொடங்கினேன். ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை. பல வெளிநாட்டு சமையல் குறிப்பு பக்கங்களை பார்த்து நம் இந்தியாவில் அதுபோல எதுவும் இல்லையே என்று தோன்றியது. என் சமையல்களை சிறிய வீடியோ பதிவாக ஆக்கி அதனை வெளியிட அதற்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்தது" என்றார்.

ஹெப்பர்ஸ் கிட்சன்

ஆரம்ப காலத்தில் இது மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்ட அர்ச்சனா, "நானே வீடியோ எடுத்து நானே அதனை எடிட் செய்வேன். என் கணவர் இணையதளம், மொபைல், ஆப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை பார்த்துக் கொள்வார். ஆரம்பத்தில் ஐ- ஃபோனில் வீடியோ எடுத்து மடிக்கணிணியில் எடிட் செய்து வந்தேன். பின்பு, DSLR கேமரா, எடிட் செய்வதற்கான சிறந்த மென்பொருள் மற்றும் உயர்நிலை கணிணியை என் கணவர் பரிசலிக்க, மேலும் கடினமாக உழைக்க என்னை இது தூண்டியது" என தெரிவித்தார்.

தான் செய்யும் வீடியோக்களை பதிவுடும் முன் தன் கணவரிடம் காண்பித்து கருத்து கேட்பதாக தெரிவித்த அவர், இந்தியாவின் அதிக பார்வையிட்ட ஃபேஸ்புக் சேனல்களில் முதல் ஆறு இடங்களில் ஒன்றாக ஹெப்பர்ஸ் கிட்சன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

ஹெப்பர்ஸ் கிட்சனின் பெரும்பாலான வீடியோக்கள் 2 நிமிடத்திற்கும் குறைவானவை. அர்ச்சனாவின் கைகள், சில பாத்திரங்களை தவிர அந்த வீடியோக்களில் எதுவும் காண முடியாது.

ஹெப்பர்ஸ் கிட்சன்படத்தின் காப்புரிமைHEBBARSKITCHEN

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநில மக்கள்களுக்கு ஏற்றாற்போல பல உணவு வகைகளின் செய்முறைகளை இந்த இணையதளத்தில் காணலாம்.

தனது அடையாளத்தை எந்தத் தளத்திலும் வெளிப்படுத்தாத அர்ச்சனா, தான் சொந்த விஷயங்களை வெளியிட விரும்பாதவர் என்று கூறினார்.

ஒரு நாளைக்கு ஒரு வீடியோவையாவது பதிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

வீட்டில் இருக்கும் பெம்பாலான பெண்கள், ஆர்ச்சனாவின் சமையல் குறிப்பு வீடியோக்கள் தங்களை ஊக்குவிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், தாங்களும் அது போன்ற ஒரு சமையலறையை உருவாக்கி வலைப்பதிவுகளில் பதிவேற்ற முயற்சிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஹெப்பர்ஸ் கிட்சன்

எளிமையான முறையில் சமையல் குறிப்புகளை, வீடியோவாக பதிவு செய்து மக்களை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் எனக் கூறுகிறார் அர்ச்சனா. முக்கியமாக உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சைவ சமையல் குறிப்புகளில் அவர் கவனம் செலுத்துகிறார்.


உந்து சக்திகள்: என் கணவருக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும். சமையலில் இவ்வளவு ஆர்வம் காட்ட அதுதான் காரணம்.

சமைக்க செலவிடும் நேரம்: இட்லி, தோசை, ரசம், சாம்பார், புலாவ் போன்ற உணவுகள் எல்லாம் விரைவில் சமைத்து விட முடியும். கேக், இனிப்பு வகைகள் எல்லாம் சிறப்பாக வர இரண்டில் இருந்து மூன்று முறை அதனை சமைக்க வேண்டும்.

முதல் வீடியோ சமையல் குறிப்பு: மென்தே தம்ப்லி(வெந்தய ரைத்தா) என்ற உடுப்பியின் பாரம்பரிய உணவு வகை.

பன்னீர் உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை

அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோ: ரசகுலா செய்முறை வீடியோவை 17 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.

சமைத்த உணவை என்ன செய்வீர்கள்?: பலகாரங்கள், காலை உணவுகளை எல்லாம் நாங்கள் வீட்டில் சாப்பிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்வோம். இனிப்பு வகைகள் செய்யும்போது, கணவர் தன் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விநியோகிப்பார்.

http://www.bbc.com/tamil/india-42681570

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.