Jump to content

பிர­தமர் தற்­கா­லி­க­மாக பதவி வில­க­வேண்டும்.!


Recommended Posts

பிர­தமர் தற்­கா­லி­க­மாக பதவி வில­க­வேண்டும்.!

 

 

மத்­திய வங்கி மோசடி தொடர்பில் பிர­தமர் மீதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் பழி­சு­மத்­தி­விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தப்­பிக்க முயல்­கின்றார். எனினும் இந்த மோச­டி­யுடன் ஜனா­தி­ப­திக்கும் நேரடி தொடர்பு உள்­ளது. அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் நிய­ம­னங்­களை ஜனா­தி­ப­தியே செய்தார். ஆகவே ஜனா­தி­ப­தி­யினால் தப்­பிக்க முடி­யாது. இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று இருக்­கின்­றது என்று   முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜீ.எல் பீரிஸ் தெரி­வித்தார்.

Image result for ஜீ.எல் பீரிஸ்

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருக்கும் வரை சுயா­தீன விசா­ர­ணை­யொன்றை எதிர்­பார்க்க முடி­யாது. மேலும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான சட்ட நட­வ­டிக்­கையும் கன­வா­கவே மாறும். ஆகவே தற்­கா­லி­க­மாக பிர­த­மரை பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும குறிப்­பி­டு­கையில்,

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் வந்­த­வுடன் அதனை மூடி மறைப்­ப­தற்கு பிர­தமர் முயற்சி செய்தார். இதன்­படி சிறி­கொத்­தாவில் உள்ள சட்­ட­த­ர­ணிகள் கொண்ட குழு­வொன்றை அமைத்து விசா­ரணை செய்தார். இவ்­வாறு விசா­ரணை செய்­த­வர்­க­ளுக்கு மத்­திய வங்கி விட­யங்கள் தொடர்பில் போதி­ய­ளவு அறிவு இல்லை. எனினும் இந்த குழு­வினை அமைத்து மோச­டியை மூடி மறைக்க முயற்சி செய்தார். 

தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மத்­திய வங்­கியில் மோச­டிகள் நடை­பெற்­றுள்­ள­தாக கூறி­னாலும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துக்­களை ஒப்­பிட்டு பார்க்கும் போது பல வித்­தி­யா­சங்கள் உள்­ளன. பாரா­ளு­மன்­றத்தில் கம்­பீ­ர­மான முறையில் மத்­திய வங்­கியில் மோசடி நடக்­க­வில்லை என்றும் ஊட­கங்கள் அர­சாங்­கத்தை குழப்­ப­வ­தா­கவும் கூறி­ய­துடன் ஊட­கங்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலும் விடுத்தார். ஆனால் தற்­போது அவரின் கருத்­து­களில் பெரு­ம­ளவில்  வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதன்­ஊ­டாக இந்த மோச­டி­களை மூடி மறைக்­கவே பிர­தமர் முயற்­சித்தார் என்­பது தெட்ட தெளி­வாக விளங்­கு­கின்­றது.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருக்கும் வரைக்கும் மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணையில் சுயா­தீன தன்­மையை எதிர்­பார்க்க முடி­யாது.  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்  அறிக்கை பிர­காரம் நீதி­யான விசா­ர­ணை­யொன்று நடக்கும் என எதிர்­பார்த்தால் அது கன­வா­கவே அமையும். 

 மத்­திய வங்கி மோசடி விவ­கா­ரத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மீதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் சுமத்­தி­விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தப்­பிக்க முயல்­கின்றார். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வாக்­கு­களை சூறை­யாடும் வகையில் ஆக்­ரோ­ஷ­மான கருத்­து­களை ஜனா­தி­பதி தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் ஜனா­தி­ப­தியும் மத்­திய வங்கி மோச­டி­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்ளார். ஏனெனில் சிங்­கப்பூர் பிரஜை என்று அறிந்தும் அர்­ஜூன மகேந்­தி­ரனை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக ஜனா­தி­ப­தியே நிய­மித்தார். 

வர்த்­த­கத்­துடன் தொடர்­புப்­பட்­டவர் என அறிந்து கொண்டும் ரவி கரு­ணா­நா­யக்­கவை நிதி அமைச்­ச­ராக நிய­மித்­ததும் அவ­ரே­யாகும். மேலும் பிர­த­மரை காப்­பாற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைத்தார். எனவே இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து விட்டு தற்­போது ஒன்றும் தெரி­யா­தது போன்றும் தன்­னு­டைய அதி­ருப்­திக்கு அப்பால் சென்றே நிதி அமைச்சர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் நிய­ம­னங்கள் நடந்­த­தா­கவும் ஜனா­தி­பதி கூறு­கின்றார். 

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறந்த நாட­கத்தை அரங்­கேற்­று­கின்றார். ஆகவே இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாக்­கு­களை பெற்றே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்தார். ஆகவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பயந்தே ஜனா­தி­பதி செயற்­பட்டு வரு­கின்றார். 

அத்­துடன் அர்ஜூன் அலோ­சி­ய­ஸூடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது. எனினும் அது தொடர்பில் ஜனா­தி­பதி எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அவ்­வாறு எடுத்­தி­ருந்தால் சிறந்த முன்­னு­தா­ர­ண­மாக அமைந்­தி­ருக்கும். 

 தற்­போது ஜனா­தி­ப­தியின் வாள் எங்கே?. ஜனா­தி­பதி எடுப்­ப­தாக கூறிய நட­வ­டிக்கை எங்கே? இவை­ய­னைத்தும் நாட­க­மாகும். எனவே மத்­திய வங்கி குற்­ற­வா­ளி­களை நாம் தப்­பிக்க விட­மாட்டோம். எனவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்வை தற்­கா­லி­க­மாக நீக்க வேண்டும்.

அதே­போன்று மூன்று வரு­டங்கள் தான் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவில்லை என்றும் இனிமேல் நானே பொருளாதாரத்தை வழிநடத்துவேன் என்றும்  கூறியுள்ளார். அவ்வாறாயின் இவ்வளவு நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஜனாதிபதி என்ன செய்தார். இதுவரை காலம் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு கூறியதில்லை. உலக வரலாற்றில் இவ்வாறான ஜனாதிபதி இவர் மாத்திரமேயாகும். இவ்வாறான கருத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது அது முற்றிலும் அரசியலமைப்புக்கும் முரணாகும். நிறைவேற்று அதிகாரத்துக்கும் முரணாகும். இவ்வாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்றார். 

http://www.virakesari.lk/article/29801

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.