Jump to content

‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’


Recommended Posts

‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’
 
 

image_3b050440b5.jpg“நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும்.  அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.   

“வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, வள்ளவர். அந்த வெட்டுக்குத்துக்கு நான் ஏமாந்தது இல்லை. எனினும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய இருவரும் ஏமாந்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.   

ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி எழுதிய, “இன்னும் பெயர் வைக்கல” எனும் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-10, தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.  

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ.ராதாமேதா தலைமையில் நடைபெற்ற அந்த வெளியீட்டு விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“வெளிநாட்டில் வசித்தாலும் ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி, தாயத்தை மறக்கவில்லை என்று கூறப்பட்டது. தயாகம் என்றால் என்ன? என்னைப் பொருத்தவரையில் கொழும்பின் தயாகம், கொச்சிக்கடையாகும். அங்குதான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இது இங்குள்ள சிங்களத் தலைவர்களுக்குத் தெரியாது” என்றார்.  

“வெள்ளவத்தையில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கின்றனர். வடக்கில் ஏதாவது சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படும் போது அதனை தட்டிக்கேட்டால், வௌ்ளவத்தையில் ஏன்? தமிழர்கள் வாழவில்லையா எனக் கேட்பார்கள். வௌ்ளவத்தையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், கொச்சிக்கடையில்தான், தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். 1983 ஆம் கலவரத்தின் போது தமிழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். எனினும், கொச்சிக்கடையில் அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டவில்லை” என்றார்.  

“கொச்சிக்கடை தமிழர்களிடம், தமிழ்பற்று, வீரம், கோபம், துணிவு மற்றும் தன்னம்பிக்கை உள்ளிட்ட அனைத்தும் இருக்கின்றன. இவற்றை, முதலாவதாக தேர்தலில் போட்டியிடும்போது நான் கண்டேன். கொச்சிக்கடையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் புகுந்த, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான நிலந்தபெரேரா, கடைகளை கட்டும்போது, சுமார் இரண்டுமணிநேரம், அவ்விடத்தில் இருந்து,முழுக்கடைகளையும்
உடைத்தெறிந்தேன். என்னுடன் இணைந்து அங்கிருந்தவர்களும் உடைத்தெறிந்தனர். அம்மக்களும்கு அந்தளவுக்கு வீரமிருக்கிறது”  என்றார்.

“அந்த வீரத்தை, தீர்க்கதரிசனத்தையும், பெப்ரவரி 10ஆம் திகதி வாக்களிப்பிலும் அந்த மக்கள் காண்பிப்பார்கள். அந்த நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது. என்னதான் அரசாங்கத்தில் இருந்தாலும், அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சை எமது கூட்டணி வைத்திருந்தாலும், தமிழர்களுக்கென பிரச்சினைகள் வரும்போதெல்லாம் எனது குரல் ஓங்கியே இருக்கும். அந்த குரல், தமிழர்களுக்காக இன்னுமின்னும் ஓங்கி ஒலிக்கவேண்டுமாயின், எங்களுடைய பலத்தை அதிகரித்துக்கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொச்சிக்கடை-தமிழர்களை-போல-நான்-திமிரானவன்/175-210565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் கொச்சிக்கடையை தனிநாடக பிரகடனம் செய்தாலும் செய்வார் போல கிடக்கு

Link to comment
Share on other sites

பிரச்சினை என்றால் ஆரியாவோ சூரியாவோ வரப்போவதில்லை.!

 

 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில்  கொழும்பு மாவட்­டத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது பலத்தை  காண்­பிக்­க­வேண்டும்.  தமிழ் மக்­களின்  பலத்தை  காண்­பிக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே   இந்தத் தேர்­தலில்  நாம்  தனித்து போட்­டி­யி­டு­கின்றோம். நாம் பல­மாக இருந்­தால்தான்  பெரும்­பான்மை  கட்­சி­க­ளி­ட­மி­ருந்து  எத­னையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என்று  ஒரு­மித்த முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும்  தேசிய சக­வாழ்வு மற்றும் கலந்­து­ரை­யாடல் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  வலி­யு­றுத்­தினார். 

Image result for மனோ கணேசன் virakesari

கொழும்பு மாவட்­டத்தில்  தமி­ழர்­களின் தலை­ந­க­ராக  கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது.  கொச்­சிக்­க­டை­யா­னது  வீரம் செறிந்­த­வர்கள்  வாழும் பகு­தி­யாகும்.  கொச்­சிக்­க­டையை உள்­ள­டக்­கிய வட­கொ­ழும்­பி­லேயே தமிழ் மக்கள்  பெரு­ம­ளவில் வாழ்­கின்­றனர். எனவே கொழும்பு வடக்கில் வாழும் தமி­ழர்­களும்  ஏனைய பகு­தி­களில் வாழும் தமிழ் மக்­களும்   எமது தனித்­து­வ­மான பலத்தை காண்­பிக்கும் வகையில்  வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றும் அவர்  சுட்­டிக்­காட்­டினார். 

ஊட­க­வி­ய­லாளர்  மணி டன்ஸ்­டனின் ''இன்னும் பெயர் வைக்­கல்ல'' எனும் நூல் வெளி­யீடு நேற்று முன்­தினம் மாலை கொழும்பு டி. ஆர். விஜ­ய­வர்த்­தன மாவத்­தையில் அமைந்­துள்ள தபால் திணைக்­கள கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  அமைச்சர்  இவ்­வாறு  தெரி­வித்தார். 

இங்கு  அவர் மேலும்  உரை­யாற்­று­கையில்  கூறி­ய­தா­வது:-

கொழும்பில் தமி­ழர்­களின் தலை­ந­க­ர­மாக கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது.   கொச்­சிக்­க­டை­யா­னது  என்னை நம்பும் மக்கள் வாழும்  பகு­தி­யாகும்.  அது  எனது   கோட்­டை­யாகும். கொச்­சிக்­கடை  தமிழ் வீரம் செறிந்த  பகு­தி­யாக திகழ்­கின்­றது.   எனக்கும்   தமிழ் செருக்கு  காணப்­ப­டு­கின்­றது.  நான்  எட்­டி­யாந்­தோட்­டையில் பிறந்து  களனி கங்­கையின்  தண்­ணீ­ரையும் கண்­டியில் வளர்ந்து மகா­வலி கங்­கையின் தண்­ணீ­ரையும் குடித்து வளர்ந்­தவன். எனக்கும்  இத்­த­கைய   தமிழ் வீரம்  உள்­ளது.   உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில்  நாம்   தனித்து  போட்­டி­யி­டு­கின்றோம்.   ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும்   சில பகு­தி­களில் தனித்தும்  நாம்   மலை­ய­கத்­திலும் தென்­ப­கு­தி­யிலும்   போட்­டி­யி­டு­கின்றோம்.   

கொழும்பு மாவட்­டத்தில் நாம் எமது தனித்­து­வ­மான பலத்தை   காண்­பிக்­க­வேண்டும்.  பெரும்­பான்மை கட்­சிகள்   நாம்  கேட்­ப­தை­யெல்லாம் தட்டில் வைத்து  தரப்­போ­வ­தில்லை.  எமது பலத்தை  காண்­பித்­தால்தான்  அதற்­கான  சூழலை உரு­வாக்க முடியும். கொழும்பு மாந­க­ர­சபைத் தேர்­தலில்  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் எனது நண்­ப­ரு­மான ரவூப் ஹக்கீம்,  அகில மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் நண்­ப­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால்  ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.  இறு­தி­நே­ரத்தில்   அவர்­க­ளது வேட்­பா­ளர்­க­ளது  பெயர்கள்  பட்­டி­யலில் இருந்து வெட்­டப்­பட்டு வேறு­பெ­யர்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.  முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க   பெயர்­களை வெட்­டு­வதில் கெட்­டிக்­காரர். அவர்தான் இந்த விட­யத்­தினை மேற்­கொண்­டுள்ளார். 

இதே­போன்றே  ரவி கரு­ணா­நா­யக்க  எங்­க­ளது விட­யத்­திலும் செயற்­பட எத்­த­னித்தார்.   அவர்  சூரர் என்றால் நான் அத­னை­விட சூர­னாவேன். இத­னால்தான் நாம் தனித்து போட்­டி­யிடும் நிலை உரு­வா­னது. இவ்­வாறு தனித்துப் போட்­டி­யிட்டு நாம் எமது பலத்தை  காண்­பிக்­க­வேண்டும். 

தற்­போது   கொச்­சிக்­கடை உட்­பட கொழும்பில்  சன் ரீ.வி. , விஜய் ரீ.வி,  உட்­பட இந்­திய தொலைக்­காட்­சி­களை   தமிழ் மக்கள் பெரிதும் பார்­வை­யிட்டு வரு­கின்­றனர். இவ்­வாறு  படங்­க­ளையும்  நாடகத் தொடர்­க­ளையும் பார்க்­காது   எதிர்­வரும் 10ஆம் திகதி அனை­வரும் வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும்.  படத்தில்  வரும்  இந்­திய நடி­கர்­க­ளான  விஜயோ, அல்­லது  சூரி­யாவோ, ஆரி­யாவோ  உங்­க­ளுக்கு இங்கு  பிரச்­சினை வரும்­போது வரப்­போ­வ­தில்லை. ஆனால் மனோ கணேசன் மட்­டுமே  உங்­க­ளது வீடு­க­ளுக்கு  உடனே வருவான். எனவே  இதனை உணர்ந்து கொச்­சிக்­கடை மக்கள் உட்­பட கொழும்பு வடக்கு  மக்கள் உட்­பட  கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்­க­ளது வாக்­கு­களை  எமக்கு  அளிக்­க­வேண்டும். நாம் தனித்­து­வ­மான பலத்­துடன் இருந்தால் தான் நல்­லது. சூரி­யாவோ, ஆரி­யாவோ உங்களுக்கு இங்கு பிரச்சினை வரும்போது வரப்போவதில்லை. ஆனால் மனோ கணேசன் மட்டுமே உங்களது வீடுகளுக்கு உடனே வருவான். எனவே  இதனை உணர்ந்து கொச்சிக்கடை மக்கள் உட்பட கொழும்பு வடக்கு மக்கள் உட்பட  கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்களது வாக்குகளை  எமக்கு  அளிக்கவேண்டும்.  நாம் தனித்துவமான பலத்துடன் இருந்தால் தான் எதனையும் சாதிக்க முடியும்.

http://www.virakesari.lk/article/29757

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 

கஞ்சா செல்லையா, தூள்ஜோசா, தூள்செல்லா இவையளை தெரியுமெண்டால் "தாண்டவன் பபா"வை கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 

அண்ணேய் கோபப்படாமல் சொல்லுங்க அப்ப இந்த கொச்சிக்கடை காரர் 83 கலவரப் பொழுது என்ன செய்தவையல் நாங்க அப்ப சிறுசுகள் அறிந்துகொள்ள ஆவல் .,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அண்ணேய் கோபப்படாமல் சொல்லுங்க அப்ப இந்த கொச்சிக்கடை காரர் 83 கலவரப் பொழுது என்ன செய்தவையல் நாங்க அப்ப சிறுசுகள் அறிந்துகொள்ள ஆவல் .,

அப்ப எனக்கு 10 வயது பெருமாள் ஐயா. இரும்பு கம்பி எடுத்து கொண்டு இரவிரவாக குடும்பத்தலைவர்கள் சிங்களவனை அடிக்க சுற்றித்திரிந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வீரமும் தீரமும் திமிரும் கொண்ட தமிழர்களிடம் வாக்குப்பெற்று தேர்தலில் வென்றாலும் பதவி வகிக்கபோவது சிங்கள மன்னர்களின் முடியின்கீழ்தானே?!

வாக்கு அறுவடைக் காலம் வரும்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான உணர்ச்சிகளை தூண்டும் வீரவசன விளையாட்டுக்கள் அரங்கேறுவது வழமை, அதுபோலதான் இதுவும் ஒன்றா ?

சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்வதால் மனோ கணேசனின் கருத்துக்கள் சிங்களத்தால் மெளனமாக பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன், தேர்தலில் வென்றாலும் சிங்களவருடனான இணக்கப்பட்டுடனேயே அவர் அரசியல் நகரும் என்பதால்!

இதுவே வடக்கில் இதே வசனங்களை யாராவது பேசி இருந்தால் இனவாதம்,கட்சியை உடனடியாக தடை செய்யவேண்டும்,நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் இவர்கள் புலிகளின் பினாமிகள் என்ற கோசம் சிஹல உறுமயவிலிருந்து ,தேரர்கள்,பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,பெரும்பான்மை கட்சிகள்வரை அனைவரிடமிருந்தும் வானுயர எழுந்திருக்கும்.

தனக்கு கீழே இருந்து கொண்டு தமிழர்கள் ஆவேசமாக உரிமைக்குரல் எழுப்பலாம் தப்பில்லை என்று சிங்களம் நினைக்கிறது அதற்கு உதாரணம், கருணா இப்போதெல்லாம் முஸ்லீம்களை நொருக்குவேன் எனும்போதும், அங்கே தாக்குதல் செய்தேன் இங்கே தாக்குதல் செய்தேன் நாங்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்ககூடாது என்பதனால் தனிகட்சி ஆரம்பித்தேன் என்று ரீல் விடும்போது கம்மென்று இருக்கிறது,

அதே வசனங்கள்போலன்றி நடைமுறையில் உள்ள இன சிக்கல்களை தீர்வுகளைபற்றி விக்னேஸ்வரன் பேசினால் இவர்,இனவெறியன், இன்னொரு பிரபாகரன்,அவரை கைது செய்யவேண்டும் என்கிறது.

வடகிழக்கில் பெரும்பான்மை தமிழர்களாய் வாழ்ந்துகொண்டு சிங்களவர்களுக்கெதிராய் திமிராய் நிற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை, தெற்கில் சிங்களவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டு திமிராய் நிற்கும் கொச்சிக்கடை தமிழர்கள் நிச்சயமாக துணிச்சலானவர்கள் என்பது மறுப்பிற்கிடமில்லாத உண்மைதான்,

அதேநேரம் கடந்தகாலத்தில் வாழைத்தோட்டம்,கொச்சிக்கடைபகுதி தமிழர்கள் பெரும்பாலும் பிரேமதாஸவின் ஆதரவையும் கொண்டிருந்தார்கள்,அதுவும் அவர்களின் ஒரு பலம் என்று அறிந்திருந்தேன், அது உண்மையா பொய்யா என்று அப்பகுதியில் பிறந்து வளர்ந்த colomban-தான் விளக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

13 hours ago, colomban said:

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 

என் வாழ்வில் இளம் வயதில் இருக்கும் இனிமையான பக்கங்கள் சில கொச்சிக்கடை பகுதியில் எழுதப்பட்டவை.

நான் A/L படித்தது விவேகானந்தா கல்லூரியில் தான். யாழ்ப்பாணத்தில் பரியோவான் கல்லூரியில் படித்து (St John's college) விட்டு கொழும்புக்கு வந்து அங்கு படித்த காலம் முழுதும் கொச்சிக் கடை, ஜிந்துப்பிட்டி, வாசல வீதி என்று அலைந்து திரிந்து இருக்கின்றேன். குணசிங்கபுர பகுதியில் பிரேமதாசா வீட்டிற்கு அருகில் தான் ஒரு flats இல் தங்கி இருந்தனான். அங்கிருந்து  Seas street, கதிரேசன் வீதி வழியாக கொச்சிக்கடைக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தோணியார் கோவிலுக்கு முன்பாக இருக்கும் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தான் 102 எடுத்து வெள்ளவத்தை பகுதிக்கு போவது. ராஜேஸ்வரி கல்வி நிலையம், பிரில்லியன்ட் சென்ரர் போன்றவற்றில் தான் உயர்தர பிரிவுக்கு ரியூசன் போனது.

பொன்னம்பலவாணேச்சர் கோவிலுக்கு போய் விட்டு அதற்கு கிட்ட இருக்கும் வெக்காளி அம்மன் கோவிலுக்கும் (ஒரு தோட்டத்தில் இருக்கும்) போய் விட்டு கொச்சிக் கடை சந்தியில் இருக்கும் ஹோட்டலில் வடையும் தேனீரும் குடித்து தான் சனிக்கிழமை ஆரம்பிக்கும் எனக்கு.

கொச்சிக்கடை தமிழர்கள் உண்மையில் வீரமானவர்கள்; சண்டியர்களும் கூட. அதே நேரத்தில் அன்பிற்காகவும் நட்பிற்காகவும் உயிரையே கொடுப்பவர்கள். 83 கலவரத்தில் சிங்கள காடையர்கள் கை வைக்க பயந்த இடம். அத்துடன் கொச்சிக் கடை தமிழர்கள்  மிச்ச பகுதியில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு கோவில்களில் வந்து தங்கிய தமிழர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலாக உணவு தொடக்கம் பல கொடுத்து உதவியவர்கள். இவர்களுடன் கிராண்ட்பாஸ் தமிழர்களும் இணைந்து இருந்தனர்.

நெற்றியில் பெரிய பொட்டுடன் மஞ்சள் அப்பிய முகத்துடன் அரை சாறி கட்டிக் கொண்டு வரும் கொச்சிக்கடை இளம் சிட்டுகளை கோவில்களில் பார்க்க அழகாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

என் வாழ்வில் இளம் வயதில் இருக்கும் இனிமையான பக்கங்கள் சில கொச்சிக்கடை பகுதியில் எழுதப்பட்டவை.

நான் A/L படித்தது விவேகானந்தா கல்லூரியில் தான். யாழ்ப்பாணத்தில் பரியோவான் கல்லூரியில் படித்து (St John's college) விட்டு கொழும்புக்கு வந்து அங்கு படித்த காலம் முழுதும் கொச்சிக் கடை, ஜிந்துப்பிட்டி, வாசல வீதி என்று அலைந்து திரிந்து இருக்கின்றேன். குணசிங்கபுர பகுதியில் பிரேமதாசா வீட்டிற்கு அருகில் தான் ஒரு flats இல் தங்கி இருந்தனான். அங்கிருந்து  Seas street, கதிரேசன் வீதி வழியாக கொச்சிக்கடைக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தோணியார் கோவிலுக்கு முன்பாக இருக்கும் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தான் 102 எடுத்து வெள்ளவத்தை பகுதிக்கு போவது. ராஜேஸ்வரி கல்வி நிலையம், பிரில்லியன்ட் சென்ரர் போன்றவற்றில் தான் உயர்தர பிரிவுக்கு ரியூசன் போனது.

பொன்னம்பலவாணேச்சர் கோவிலுக்கு போய் விட்டு அதற்கு கிட்ட இருக்கும் வெக்காளி அம்மன் கோவிலுக்கும் (ஒரு தோட்டத்தில் இருக்கும்) போய் விட்டு கொச்சிக் கடை சந்தியில் இருக்கும் ஹோட்டலில் வடையும் தேனீரும் குடித்து தான் சனிக்கிழமை ஆரம்பிக்கும் எனக்கு.

கொச்சிக்கடை தமிழர்கள் உண்மையில் வீரமானவர்கள்; சண்டியர்களும் கூட. அதே நேரத்தில் அன்பிற்காகவும் நட்பிற்காகவும் உயிரையே கொடுப்பவர்கள். 83 கலவரத்தில் சிங்கள காடையர்கள் கை வைக்க பயந்த இடம். அத்துடன் கொச்சிக் கடை தமிழர்கள்  மிச்ச பகுதியில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு கோவில்களில் வந்து தங்கிய தமிழர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலாக உணவு தொடக்கம் பல கொடுத்து உதவியவர்கள். இவர்களுடன் கிராண்ட்பாஸ் தமிழர்களும் இணைந்து இருந்தனர்.

நெற்றியில் பெரிய பொட்டுடன் மஞ்சள் அப்பிய முகத்துடன் அரை சாறி கட்டிக் கொண்டு வரும் கொச்சிக்கடை இளம் சிட்டுகளை கோவில்களில் பார்க்க அழகாக இருக்கும்.

மட்டுறுத்தினர் ஒருவர் எஙகள் பாடசாலையின் முன்னால் மாணவன் என்பதை குறித்து மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னை விட 3 வருடங்கள் ஜூனியர் ஆக இருக்கலாம் (தங்கையின் வகுப்பென நினக்கின்றேன்). 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, valavan said:

என்னதான் வீரமும் தீரமும் திமிரும் கொண்ட தமிழர்களிடம் வாக்குப்பெற்று தேர்தலில் வென்றாலும் பதவி வகிக்கபோவது சிங்கள மன்னர்களின் முடியின்கீழ்தானே?!

வாக்கு அறுவடைக் காலம் வரும்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான உணர்ச்சிகளை தூண்டும் வீரவசன விளையாட்டுக்கள் அரங்கேறுவது வழமை, அதுபோலதான் இதுவும் ஒன்றா ?

சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்வதால் மனோ கணேசனின் கருத்துக்கள் சிங்களத்தால் மெளனமாக பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன், தேர்தலில் வென்றாலும் சிங்களவருடனான இணக்கப்பட்டுடனேயே அவர் அரசியல் நகரும் என்பதால்!

இதுவே வடக்கில் இதே வசனங்களை யாராவது பேசி இருந்தால் இனவாதம்,கட்சியை உடனடியாக தடை செய்யவேண்டும்,நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் இவர்கள் புலிகளின் பினாமிகள் என்ற கோசம் சிஹல உறுமயவிலிருந்து ,தேரர்கள்,பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,பெரும்பான்மை கட்சிகள்வரை அனைவரிடமிருந்தும் வானுயர எழுந்திருக்கும்.

தனக்கு கீழே இருந்து கொண்டு தமிழர்கள் ஆவேசமாக உரிமைக்குரல் எழுப்பலாம் தப்பில்லை என்று சிங்களம் நினைக்கிறது அதற்கு உதாரணம், கருணா இப்போதெல்லாம் முஸ்லீம்களை நொருக்குவேன் எனும்போதும், அங்கே தாக்குதல் செய்தேன் இங்கே தாக்குதல் செய்தேன் நாங்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்ககூடாது என்பதனால் தனிகட்சி ஆரம்பித்தேன் என்று ரீல் விடும்போது கம்மென்று இருக்கிறது,

அதே வசனங்கள்போலன்றி நடைமுறையில் உள்ள இன சிக்கல்களை தீர்வுகளைபற்றி விக்னேஸ்வரன் பேசினால் இவர்,இனவெறியன், இன்னொரு பிரபாகரன்,அவரை கைது செய்யவேண்டும் என்கிறது.

வடகிழக்கில் பெரும்பான்மை தமிழர்களாய் வாழ்ந்துகொண்டு சிங்களவர்களுக்கெதிராய் திமிராய் நிற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை, தெற்கில் சிங்களவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டு திமிராய் நிற்கும் கொச்சிக்கடை தமிழர்கள் நிச்சயமாக துணிச்சலானவர்கள் என்பது மறுப்பிற்கிடமில்லாத உண்மைதான்,

அதேநேரம் கடந்தகாலத்தில் வாழைத்தோட்டம்,கொச்சிக்கடைபகுதி தமிழர்கள் பெரும்பாலும் பிரேமதாஸவின் ஆதரவையும் கொண்டிருந்தார்கள்,அதுவும் அவர்களின் ஒரு பலம் என்று அறிந்திருந்தேன், அது உண்மையா பொய்யா என்று அப்பகுதியில் பிறந்து வளர்ந்த colomban-தான் விளக்கவேண்டும்.

பிரேமதாச மேட்டுக்குடி மகனல்ல. அவர் ஒர் சாதாரண குடும்பத்தில் இருந்து. இலங்கை ஜனதிபதியானவர். ஏழைகளின் மனமறிந்து அரசியல் செய்தவர். தமிழ் மக்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இதனால் இவர் இப்பகுதி மக்களின் பிதாமகன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

குணசிங்கபுர பகுதியில் பிரேமதாசா வீட்டிற்கு அருகில் தான் ஒரு flats இல் தங்கி இருந்தனான். அங்கிருந்து  Seas street, கதிரேசன் வீதி வழியாக கொச்சிக்கடைக்கு அடிக்கடி வருவதுண்டு.

மலரும் நினைவுகள் சுகமானது ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.