Jump to content

ரஜினி அரசியல்: -ஜெயிக்கிற குதிரை!


Recommended Posts

ரஜினி அரசியல்: 45 -குருஜியின் ஜெயந்தி விழா

 

 
rajni

‘யார் என்னை மையமாக வைத்து காவிரிப் பிரச்சினையை ஊதிப் பெரிசாக்குறாங்களோ, என் மேல உள்ள பொறாமையினாலும், என் மேல் உள்ள பயத்தினாலும் இதை வச்சு எனக்கெதிராக அரசியல் செய்றாங்களோ, அவங்களை நான் தேர்தல் வரும்போது பார்த்துக்கிறேன். அதுவரைக்கும் என் ரசிகர்கள் பொறுமையா சாந்தமா இருக்கணும்!’ என்று 2002 அக்டோபர் 9-ம் தேதி மீடியாக்களிடம் பேசிய ரஜினி, அதன் பிறகு தொடர்ந்த அரசியல் செயல்பாடுகள்தான் காவிரிக்கான உண்ணாவிரதம், தென்னக நதிகள் இணைப்புக்கான மக்கள் இயக்க அறிவிப்பு போன்றவை. இதில் எல்லாம் ரசிகர்கள் மத்தியிலும், மீடியாக்கள் மத்தியிலும் ரஜினி எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு இருந்தது.

அந்த உற்சாகத்துடனே அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான வேலைகளை ரஜினியின் நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்றாகவே ரஜினி 2004 மக்களவைத் தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவருடைய கட்சிக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்? என்று குறிப்பிட்ட மீடியா டீம் சர்வே செய்வதாகவும் தகவல்கள் கசிந்தன.

 

பொதுவாகவே ரஜினி தன் அரசியல் முடிவை தன் மனசாட்சியைக் கேட்டும், மனசாட்சியை வழி நடத்தும் ஆண்டவனைக் கேட்டும் எடுப்பதான கருத்தோட்டமே இருக்கிறது. அதிலும் அவருக்கு அரசியல் என்றால் பயம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆகப்பெரும் அரசியல் புலிகள் இருக்கும்போது, அவர்கள் பல முறை ஆட்சியாண்டதற்கு அடையாளமாக அதிகார வர்க்கத்தின் பெரும் தூண்களாக விளங்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.கள் இருகோஷ்டிகளாக இந்த இருவரின் பக்கம் நிற்கும் போது, தேர்தல் அரசியல் வெற்றியை நிலைநிறுத்தும் தொழிலதிபர்கள் இவர்கள் சார்ந்தே நகரும்போது, நாம் அரசியலில் குதித்தால் என்ன ஆவோம் என்பதை நன்றாக அறிந்தே இருந்தார் என்பதை அவரின் நெருக்கமான நண்பர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய் சோ போன்ற அரசியல் பத்திரிகையில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் அவருக்கு அனுசரணையாக அவர் எதிர்பார்ப்பதற்கும், சமூக, அரசியல் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். அதற்கு ஓர் உதாரணமாகவே 1996-ல் அரசியல் என்பது ரஜினி மாயைதான் என்ற கண்ணோட்டத்தில் அத்தனை மீடியாக்களும் பொழிப்புரை நிகழ்த்திக் கொண்டிருக்க, சோ மட்டும் தன் துக்ளக் வார இதழ் நடத்திய தேர்தல் சர்வேயுடன், ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை தனி சர்வேயாக நடத்தச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துக்கணிப்பின் விவரங்கள் சர்வே செய்தவர்களுக்கே அதிர்ச்சியை ஊட்டியிருக்கின்றன. அதில் எழுபத்தி ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்பதுதான் அது. மீதமுள்ள 25 சதவீதமும் இளைஞர்கள். அந்த சர்வேயை சோ தனது பத்திரிகையில் வெளியிடவில்லை. இதை சமீபத்தில் அந்த சர்வேயில் ஈடுபட்ட பத்திரிகையாளர் மணா ரஜினி குறித்த தன் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இங்கே அது முக்கியமில்லை. என்றாலும் கூட அந்த சர்வே முடிவுகள் யார் கைக்கு போயிருக்கும்? அவர் அதை வைத்து தன் வட்டாரத்தில் எத்தகைய ஆய்வுகள் செய்திருப்பார்? என்ன முடிவு எடுத்திருப்பார் என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது. ‘ரஜினியா, அரசியலா.. அதெல்லாம் 1996 தேர்தலோட முடிஞ்சு போச்சுய்யா!’ என்று வெற்றிலைச் சீவலை வாயில் மெல்லாத குறையாக சட்டென்று சொல்லும் இன்றைய அரசியல் விமர்சகர்கள் இந்த சர்வே குறித்து எத்தகையதொரு தீர்க்க தரிசனம் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

நான் கேட்பதெல்லாம் 1996 தேர்தலின் போது மட்டும்தான் ரஜினி அரசியலுக்கான சர்வே நடந்ததா? அதற்குப் பிறகு 2001 சட்டப்பேரவைத் தேர்தல், 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த சமயங்களில் எல்லாம் ரஜினிக்காக இத்தகைய சர்வேக்கள் நடந்ததா? அப்படி நடக்கவில்லை என்றால் கூட தனக்கான அரசியல் களம், தேர்தல் களம் ஈரம் பாய்ந்து உள்ளதா? விதைப்புக்கான நாள் நெருங்கி விட்டதா என்பதை ரஜினியும், அவருக்கு நெருக்கமான வட்டாரமும் பல்ஸ் பார்க்காமலா இருந்திருக்கும்?

அப்படியானால் 2002 அக்டோபரில் நடத்திய காவிரிக்கான உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் தென்னக நதிநீர் இணைப்புக்கான பணிகள் அதையொட்டி தான் ஆரம்பிப்பதாக சொன்ன மக்கள் இயக்கம் போன்றவை ரஜினியை திரைமறைவில் எந்த அளவுக்கு தேர்தல் அரசியலுக்கும் நெருக்கமாக நகர வைத்திருக்கும் என எண்ணிப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த உண்ணாவிரதம் மற்றும் மக்கள் இயக்கத்தின் போது சொன்ன, ‘காவிரியில் எனக்கு எதிராக அரசியல் செய்யும் குறிப்பிட்ட கட்சிக்கு பாடம் கற்பிப்பேன்!’ என சொன்ன அவரின் சொல்லுக்கு அர்த்தம் இருந்துதானே ஆகவேண்டும். அதை முன்வைத்துத்தான் 2004 மக்களவைத் தேர்தலில் ரஜினி அரசியலில் குதிப்பார் என்றே எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

அதற்கு ஏற்றாற்போல் ரஜினியின் திரைமறைவு அரசியல் 2002-ம் ஆண்டு டிசம்பரிலேயே நகர்கிறது. இதோ... ரஜினியின் ஆன்மீக குருவான சச்சிதானந்த மகராஜ் சுவாமியின் எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் விழா. கோவையில் நடைபெற ஏற்பாடாகிறது. அதில் ரஜினி கலந்து கொள்கிறார் என்பதை விட, அதில் அவர் அரசியல் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கிறார்கள் ரசிகர்கள்.

99419995rajnijpg

ரஜினி | கோப்புப் படம்.

 

‘காவிரி பிரச்சினைக்கான உண்ணாவிரதத்தின்போது வெளிமாவட்ட ரசிகர்களை சென்னை வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். அதனால் போக முடியவில்லை. சரி, தன் பிறந்தநாளின் போதாவது (12.12.2002) ரசிகர்களை சந்திப்பார். தரிசனம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. இப்போது கோவைக்கு வருகிறார். அதிலும் சச்சிதானந்த மகராஜ் பிறந்தநாளை தானே முன்னின்று நடத்துகிறார் என்றதும் அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவரை வரவேற்க, பேனர்கள் கட்ட, சுவர் விளம்பரங்கள் செய்ய என எகிறிக் குதித்தார்கள். அதற்கு எடுத்த எடுப்பிலேயே மன்றத் தலைமையிலிருந்து தடா. ரஜினி ஆன்மீகமா, அரசியலா என்பதை முடிவு செய்யவில்லை. நீங்கள் அதை அரசியல்படுத்துவதையும் விரும்பவில்லை. எந்த இடத்திலும் அங்கே அரசியல் வந்து விடக்கூடாது!’ என்றே உத்தரவுகள் பறந்தன.

அதனால் கையது கட்டி, வாயது பொத்தி ரசிகர்கள் சும்மா இருக்க, கோவையில் உள்ள சச்சிதானந்தா மகராஜ் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் இதையொட்டி ரெசிடென்சி ஓட்டலில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார்கள். சுவாமி சச்சிதானந்தா தன் ஜெயந்தி விழாவை வழக்கமாக தான் பிறந்த கோவையிலும், அடுத்த வருடம் அமெரிக்காவிலும் நடத்துவது வழக்கம். கோவையில் விழா நடக்கும்போது அமெரிக்காவிலிருந்து கோவைக்கு வந்து சுவாமிஜி விழாவில் பங்கேற்பார். அந்த சமயம் ரஜினி வரமாட்டார். வருவதாகச் சொன்னாலும் வேண்டாமென்று சொல்லி விடுவார் சுவாமிஜி. ஏனென்றால் ரஜினியைப் பார்க்கக் கூட்டம் கூடி விடும். ஜெயந்தி விழா ரஜினி விழாவாக மாறி விடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.

அதுவே சச்சிதானந்தா அமெரிக்காவில் பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம் அங்கே சென்று விடுவார் ரஜினி. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் சச்சிதானந்தா. ரஜினியும் கலந்து கொண்டிருந்தார். 2002 ஆம் வருடம் தன் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்கள் இருக்கும்போதே சமாதியாகி விட்டார். எனவே அவரது ஜெயந்தி விழாவை அமெரிக்காவில் நடத்தலாமா? அல்லது அவர் வழக்க முறைப்படி அவரின் பிறந்த மண்ணான கோவையிலேயே நடத்தலாமா என்று ரொம்பவுமே குழம்பிப் போயிருந்திருக்கிறார்கள் சச்சிதானந்தா டிரஸ்ட் நிர்வாகிகள். இந்த நிலையில்தான் இது சம்பந்தமாக ரஜினியைச் சந்தித்தனர் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள்.

‘இதிலென்ன உங்களுக்குத் தயக்கம்? குருஜி எப்படி தன் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகிறாரோ, அப்படியே செய்யுங்கள். போன வருடம் அமெரிக்காவில் கொண்டாடினார் என்றால் இந்த முறை கோவையில் கொண்டாடுவதுதானே முறை? கோவையிலேயே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். குருஜியின் போதனைகள், தத்துவங்கள் அமெரிக்காவில் பரவியதை விட, அதிகமாக நம் நாட்டில்தான் பரவ வேண்டும். அதற்கு நானே தூணாக நிற்கிறேன். நானே வந்து குருஜி சொன்ன வாக்குகளை பிரகடனப்படுத்துகிறேன்!’என்று ரொம்ப யதார்த்தமாக, அழுத்தமாகச் சொல்லயிருக்கிறார் ரஜினி. அதன் எதிரொலியாகவே இந்த விழாவுக்கான தடபுடல் ஏற்பாடுகளை டிரட் சார்பாக செய்ய ஆரம்பித்திருந்தனர் அதன் நிர்வாகிகள்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

ரஜினி அரசியல்: 46 - அதிர்ச்சி தந்த ரகசிய சர்வேக்கள்

 

 
rajinijpg

‘ரஜினி ரொம்பவும் அழுத்தமானவர். எதைச் செய்ய வேண்டுமோ அதை உடனே செய்து விடுவார். அவரைப் பொறுத்தவரை அரசியலில் விருப்பமேயில்லை. ஆன்மிக வழியில்தான் நிறைவு இருப்பதாக கருதுகிறார். அதில் தன் குருஜிக்கான ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது தன் தார்மீக கடமை என்று உணர்ந்தே இருக்கிறார். சென்னையில் இருந்தாலும், கோவையிலேயே இந்த விழா ஏற்பாட்டை செய்யச் சொன்னதோடு அடிக்கடி தொலைபேசியிலும் விழாக் குழுவினருடன் அவர் பேசி வருகிறார். விழா எப்படியெல்லாம் அமைய வேண்டும். நிகழ்ச்சி வரவேற்பு முதல் நன்றியுரை வரை எப்படி இருக்கவேண்டும். யாரெல்லாம் என்ன பேச வேண்டும். நிகழ்ச்சியில் டிசிப்ளின், பங்க்ச்சுவாலிட்டி எவ்வளவு முக்கியம் என்பதையெல்லாம் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

எந்த இடத்திலும் சினிமாவோ, அரசியலோ வந்து விடவே கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறார். அவரது ஒவ்வொரு அசைவையும் பார்க்கும்போது குருஜி வழியில்தான் அவரும் செல்கிறார் என்பதையே எங்களால் உணர முடிகிறது. குருஜி என்னவெல்லாம் செய்ய நினைத்தாரோ, அதையெல்லாம் செய்தாக வேண்டும் என்ற வேகத்துடிப்போடு நிற்கும் ஒரு சரியான சிஷ்யனின் நிலையை அவரிடம் காண முடிகிறது. அந்த வகையில் பார்த்தால், குருஜி ஜெயந்தி விழாவில் அவர் ஒரு மந்திரத்தை ஓதப்போகிறார். அது நிச்சயம் ஆன்மிக மந்திரமாகத்தான் இருக்கும்!’ என்பதை உறுதிபட சொன்னார்கள் டிரஸ்டியினர்

ஆனால் ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரமோ அதற்கு நேர் எதிரிடையான கருத்தைப் பேசியது. ‘சமீபத்தில் நடந்து முடிந்த காவிரி உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து ரஜினியே அறிவித்த மக்கள் இயக்கம் என்பதெல்லாம் அவரின் ஆன்மிகப் பயணத்தை உணர்த்தவில்லை. அதிலும் தன் மீது களங்கம் கற்பிக்க காவிரியைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் பதிலடி கொடுப்போம். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்த வார்த்தைகளுக்கு நிறைய அர்த்தம் உண்டு. அது வெறுமனே சந்நியாசம் கொள்ளும் ஆன்மிகத்திற்கான கூற்று அல்ல. அதை சச்சிதானந்த மகராஜ் ஆன்மாவும் கூட ஏற்றுக் கொள்ளாது.

மக்கள் விரும்பி அழைத்தால் ரஜினியை நானே அரசியலுக்கு போக வலியுறுத்துவேன் என்று அவர் சொன்ன கருத்தும் பொய்யாகாது. அந்த வகையில் தனக்கு தற்போது அரசியல் செல்வாக்கு எந்த அளவு இருக்கிறது. காவிரி உண்ணாவிரதம், நதிநீர் இணைப்பு பிரச்சாரம் எல்லாம் எந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறது என்பதையெல்லாம் முன்வைத்து ஒரு அரசியல் சர்வேயை அவரின் நெருக்கமான நண்பர்கள் செய்து முடித்துள்ளார்கள். அதை முன்வைத்து தன் அரசியல் பயணத்தை ரஜினி அறிவிப்பார்!’ என்றே அதில் குரல்கள் உயர்ந்து நின்றன.

அதையொட்டி ரஜினி அரங்கில் நெருக்கமான பத்திரிகை நண்பர் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம் இதுதான்:

1996. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக எந்த ஒரு சர்வேயும் தேவைப்படாத வருடம். அவரது வருகைக்காக பட்டுக்கம்பளம் விரித்துக் காத்திருந்தது தமிழக அரசியல். 1991 முதல் 1996 வரை கோட்டையில் இருந்த அதிமுக அரசின் மீதும், ஜெயலலிதா மீதும், ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்த தமிழக மக்கள், ஒரு புதுமுகத்தை விரும்பினார்கள். அது ரஜினியின் முகமாகவே இருந்தது.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் கலந்து, ரஜினிக்கு அசாத்திய பலம் வந்திருந்த அந்தச் சூழலில் ரஜினி வெளிப்படையாக தன் எண்ணத்தைக் கூறவேயில்லை. ஆனால் அவர் அப்போது பொதுவாகக் கூறிய ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. ரஜினியிடம் மக்களுக்கு இருந்த காந்த சக்தியைக் கண்ட மற்ற அரசியல் கட்சிகள், ஆளுக்கொரு தூண்டிலுடன் அவரைப் பிடிக்கக் காத்திருந்தன.

அப்போதும் நிதானத்தையே கையாண்ட ரஜினி, திமுகவிற்கும் அப்போதைய தமாகாவிற்கும் தனது ஆதரவைத் தந்தார். அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போதிலிருந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விஷயம் கூடுதல் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அதை உண்மையாக்கும் வண்ணம் ரஜினியின் படங்களில் அதிரடி அரசியல் வசனங்கள், 'பஞ்ச்'கள் வெடித்துக் கிளம்பின. தனிக்கட்சி ஒன்றைத் தலைவர் எப்போது அறிவிப்பார் என்ற காத்திருப்பில் ரசிகர்களின் பல்ஸ் எகிறியது.

அப்போதும் மவுனத்தையே தன் பதிலாக ரஜினி முன்வைத்தார். எந்த மவுனம் தன் பலம் என ரஜினி நினைத்தாரோ, அதுவே அவரது பலவீனமாகவும் போய்விட்டது. பொதுமக்களிடம், அவரது அரசியல் பிரவேசம் பற்றிய உற்சாகம் குறைந்தது. ரஜினிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம் என எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத் தேர்தல். இதிலாவது ரஜினி தனிக்கட்சி கண்டு போட்டியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தித்தனர்.

இம்முறை ரஜினியும் சில தீர்மானகரமான முடிவுக்கு வந்திருந்தார். அதனடிப்படையில் ரகசிய சர்வே ஒன்றும் எடுக்க முடிவானது. அந்த சர்வே ரஜினிக்கு நெருங்கியவர்களால் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. நிச்சயம் சாதகமான முடிவுகளை தரும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த சர்வே, ‘ஆன்ட்டி-க்ளைமேக்ஸ்’ ஆனது. ரஜினியும், அவருக்கு வேண்டியவர்களும் சர்வே முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியே அடைந்துவிட்டனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம், ஒரு போதும் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது. அதிமுக ஆதரவு வாக்குகளில் சில சதவீதங்கள் கூட ரஜினிக்கு வராது. திமுக போன்ற இதரக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் வேண்டுமானால், கணிசமான ஆதரவு ரஜினிக்கு வரக்கூடும். காரணம் அக்கட்சிகளில் பரவிக்கிடக்கும் ரஜினி ரசிகர்கள். அதிலும் தனிக்கட்சி மூலம் திமுக வாக்குகளையும் ரஜினியினால் அதிகமாகப் பெற முடியாது என்பதுதான் 2001-ல் எடுக்கப்பட்ட சர்வே சொன்ன தகவல்கள்.

rajjpg
 

இந்த கருத்துக் கணிப்புக்குப் பிறகு மறுபடியும் அமைதியாக விட்டார் ரஜினி. இந்த மவுனம் 'பாபா' பட அறிவிப்பு வரை நீடித்தது. அதன் பிறகு மீண்டும், ‘ஆன்மிகமா, அரசியலா? ரஜினி எதற்கு வருவார்’ என்ற கேள்விகள் இன்னொரு ரவுண்ட் வந்து தீவிரமாக அலசப்பெற்றன. இதற்கிடையே பாமக உள்ளே புகுந்து 'பாபா' படத்துக்கு பெரும் இம்சையைக் கொடுத்தது. தன் படத்திற்காக மட்டுமல்லாது, ரசிகர்களை சூடாக வைத்துக் கொள்வதற்காகவேனும், அதற்கும் எதிர் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக, கர்நாடக திரையுலகம் திடீரென குதிக்க, அரசியல் ரீதியாக இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடி ரஜினிக்கு ஏற்பட்டது. காவிரி பிரச்சினைக்காக வெற்றிகரமாக உண்ணாவிரதம் நடத்திய ரஜினி, ‘தேர்தல் வரும்போது பதில் சொல்வேன்!’ என தன்னை எதிர்த்தவர்களுக்கு பதில் சொன்னார். இந்த சமயத்தில்தான் ரஜினியின் செல்வாக்கு பற்றி மற்றுமொரு சர்வே எடுக்க திட்டமிடப்பட்டது.

இம்முறையும் ரஜினிக்கு நெருக்கமானவர்களே அந்த சர்வேயை எடுத்தனர். அதன் முடிவும் 2001-ம் ஆண்டு சர்வேயின் ஜெராக்ஸ் போலவே இருக்க, ஆடிப்போனது ரஜினி தரப்பு. எம்.ஜி.ஆரைப் போலவோ, என்.டி.ராமராவைப் போலவோ மாபெரும் அலையாக ரஜினி உருவாவது கஷ்டம். அதற்கான சூழல் 1996-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போதும் அதிமுகவைத் தவிர, பிற கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிரிக்கும். மற்றபடி தனி முத்திரை பதிக்க வாய்ப்பில்லை என்பதே இப்போது சொல்லியிருக்கும் சேதியும் ஆகும்.

சேலம் திருமண விழாவில் விஜயகாந்த் ஆவேசம், சரத்குமாரின் மன்றக் கொடி இவையெல்லாம் அவர்களுடைய ரசிகர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. அதுபோல கோவையில் தன் குருவுக்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி, என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ, அதை ரசிகர்கள் மட்டுமல்ல, பிற அரசியல் தலைவர்களும், மக்களும் கூட உன்னிப்பாக கவனிக்கக் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு அரசியல் ரீதியான ரிசல்ட்தான் பாசிட்டிவ்வாக இல்லை!’

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 47 - ஆன்மிக வழி; அன்பு வழி

 

 
rajinijpg

மந்த்ராலயத்தில் ரஜினி | கோப்புப் படம்.

சச்சிதானந்தா சுவாமிகள் டிரஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் ரஜினி ஆன்மிக மந்திரத்தைத்தான் மேடையில் உச்சரிப்பார் என்று சொல்லிக் கொண்டிருக்க, கோவை ரஜினி ரசிகர்களோ மேற்சொன்ன ரஜினி அரசியல் பிரவேச சர்வே மற்றும் முந்தைய காவிரி அரசியல், நதி இணைப்பு மக்கள் இயக்கம் போன்ற விஷயங்களை முன்னிறுத்தி அரசியல் சிக்னல்தான் கொடுப்பார் என்று நம்பிக் கொண்டு பேட்டிகளும் அறிக்கைகளும் விட ஆரம்பித்தனர்.

கோவை ரசிகர் மன்றங்கள் அப்போதே பல கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தன. அதில் வேணுகோபால், கதிர்வேல் ஆகிய இருவரது தலைமையில் இரண்டு கோஷ்டிகள் பலமாக இருந்தன. அவை இரண்டும் தன் பரிவாரப் படைகளைத் திரட்டும் வேலையை முடுக்கி விட்டிருந்தன.

 

அவர்களிடம் பேசியபோது, ‘தலைவர் உண்ணாவிரதத்தின் போது வெளிப்படையான அரசியல் கட்சி அறிவிப்பார்னு எதிர்பார்த்தோம். நடக்கலை. பிறந்தநாளின் போது அதிரடியாய் அறிவிப்பார்னும் நெனச்சோம். அப்பவும் டாட்டா காட்டிட்டார். தலைவருக்கு குருஜிதான் எல்லாம். எனவே அவர் ஜெயந்தி நாளில்தான் அதை வெளியிடுவார்னு நம்பறோம்!’ என மிகுந்த எதிர்பார்ப்புடன் பேசினார் ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி.

இதைப் பற்றி விழா ஏற்பாடு செய்து கொண்டிருந்த டிரஸ்டிகளில் ஒருவரிடம் கேட்டபோது, தலையால் தண்ணீர் குடித்தார். 'நிச்சயம் அவர் அரசியல் பேசப்போவதில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எல்லாம் தீனி போடக்கூடிய நிலையிலும் அவர் இல்லை. ரஜினி அந்த மேடையில் என்ன பேசப்போகிறார் என்கிற ஸ்கிரிப்ட்டும் கூட ரெடியாகி விட்டது. அதையே தருகிறோம். பாருங்கள். தயவு செய்து ரஜினியை அரசியலோடு சம்பந்தப்படுத்தி மட்டும் மற்ற பத்திரிகைகள் போல எழுதாதீர்கள்!' என்ற வேண்டுகோளுடன் ரஜினிக்கு நெருக்கமானவர் ஒருவர் என்னிடம் அவர் பேசவிருந்த அறிக்கையையே தந்துவிட்டார்.

‘நான் எட்டு வயது முதல் ராமகிருஷ்ணா மடத்தில் கல்வி பயின்றேன். அப்போது என் குருநாதராக ராமகிருஷ்ண பரமஹம்சரையே ஏற்றேன். பதினெட்டு வயதிற்கு மேல் குரு ராகவேந்திரரை என் அகக்கண்ணில் கண்டு அகமகிழ்ந்தேன். முப்பது - முப்பத்தி மூன்று வயது காலகட்டங்களில் திருவண்ணாமலை ரமண மகரிஷியைக் கண்டேன். சகல சஞ்சலமும் நீங்கப் பெற்று, உண்மையே ஒளியாகிக் கலந்தேன். அதன் பிறகு ஆறு ஆண்டுகள். குரு தெரியாமல் குழம்பிப் போனேன். ரிஷிகேஷம், இமயமலைச சாரல்களில் எல்லாம் சுற்றித்திரிந்த எனக்கு குருஜி புலனாகவேயில்லை. ஆறு வருட காலம் அல்லலுற்ற அந்நிலை வாழ்க்கையை என்னவென்பேன். அந்தக் கால சுழற்சியின் போது கிடைத்தவர்தான் சுவாமி சச்சிதானந்த மகராஜ். ஆரம்பத்தில் அவர்தான் குரு என்பதை அறியாமல் தத்தளித்தேன். அவர் மிகப்பெரும் ஆன்மிக சித்தர் என்பதை எந்த நிலையிலும் அவர் காட்டிக் கொண்டதேயில்லை. அவர் போதித்த போதனைகள், தத்துவநெறிகள்தான் எனக்கு மார்க்கம். அவர் கொடுத்த தீட்சையின் மந்திரங்கள்தான் இனி என்னையும், உங்களையும், ஏன் எல்லோரையும் வழிநடத்தப் போகிறது!’ என்றெல்லாம் நீண்டது அந்தப் பேச்சு அறிக்கையின் சாராம்சம்.

‘சுவாமிஜி இருக்கும்போது அமெரிக்காவிலும் சரி, கோவையிலும் சரி ரொம்ப சிம்பிளாகத்தான் அவர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவோம். இப்போது சுவாமிஜி இறந்துவிட்டதால்தான் நாங்களாகவே ரஜினியை அழைத்தோம். அவர்தான் இதை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். அவரது தத்துவங்கள், ஆன்மிக நெறிகள், நம்நாட்டிலும் பரவிட வேண்டும். அதற்கு ஆரம்பமாக இந்நிகழ்ச்சி இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து, அவரவர் வேதப்படி ஒருங்கிணைந்து ஒரு தீபத்தை ஏற்றிட ஏற்பாடு செய்துள்ளோம். அதில் ரஜினியும் இருப்பார். அங்கே முழுக்க முழுக்க தியானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் இடம் பெறும்!’ என்று சொன்னார்கள் இந்த டிரஸ்ட் தலைவர் ராமசாமியும், விழாக்குழு அமைப்பாளர் கவிதாசனும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகள், சச்சிதானந்த மகராஜ் டிரஸ்ட் நிர்வாகிகளின் கூற்றுகள் இரண்டையுமே உள்ளது உள்ளபடி அப்போது நான் பணிபுரிந்து வாரமிருமுறை புலனாய்வு இதழில் முழுமையாக எழுதியுமிருந்தேன். அந்தச் செய்தி வெளியான சில நாட்களில் நிகழ்ச்சியும் வந்தது. அந்த நிகழ்ச்சி ஆன்மிக விழா போர்வையில் அரசியல் நிகழ்ச்சியாகவே மாறி விட்டது.

rajjpg

மோடியுடன் ரஜினி | கோப்புப் படம்: பிடிஐ.

 

‘நம் நாட்டு அரசியல் என்பது கபடி விளையாட்டு போல் ஆகி விட்டது. அதில்தான் ஓர் அணியினரிடம் இன்னொரு அணியினர் ஒரே ஒருவனைத் தேர்ந்துடுத்து அனுப்புவார்கள். அங்கே அவன், எதிரணியினர் எல்லோரையும் அடித்து விட்டு வருவான். அல்லது அவனை எதிரணியினர் அவுட் ஆக்குவார்கள். அரசியல்னா எல்லாவற்றுக்கும் ஒன்று; ஒன்றுக்காக எல்லாம் என்பது போல. என்னைப் பொறுத்தவரை அரசியல் கால்பந்தாட்டம் போல இருக்க வேண்டும். அதில்தான் யாரொருவன் கோல் போடுகிறானோ, அவனை மற்றவர் அத்தனை பேரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். எந்த அரசியலானால் என்ன? அது நமக்கெதற்கு?’என புது அரசியல் உபதேசத்தை உச்சரித்தார் ரஜினி.

பொதுவாக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சாதாரண உடையில் ஷேவ் செய்யப்படாத முகத்துடன், நரைத்த முடியுடன்தான் காட்சியளிப்பார் ரஜினி. ஆனால் அதற்கு மாறாக இந்த விழாவில் மழுங்க மழிக்கப்பட்ட தாடி, டை அடிக்கப்பட்ட தலை, பிஸ்கட் நிறத்தில் கதர் ஜிப்பா, கண்ணுக்கு அடக்கமான புதுவிதமான கண்ணாடி என இருந்தார். ஒரே ஒரு காந்த குல்லா மட்டும் மாட்டியிருந்தால் அசல் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தோற்றுப்போயிருப்பார்கள். இந்த சூப்பர் கெட்-அப்பைப் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சிகளின் எல்லைக்கே சென்று விட்டனர். ‘பாபாஜி’ என்று அழைத்தவர்கள் ஒரு கட்டத்தில் ‘நேருஜி’ என்றும் கூச்சல் போட்டு அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி கூடிய கூட்டம், கத்திய கத்தல், போட்ட கோஷத்தின் வெளிப்பாடோ என்னவோ ரஜினி முழக்கமும் ஆன்மிகம் கலந்த அரசியல் முழக்கமாக மாறி விட்டது.

‘ரஜினி மீறி மீறிப் பேசினால் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசுவார். அதில் பரிசுத்தமான ஆன்மிகம் மட்டுமே இருக்கும். சுவாமி சச்சிதானந்தாவுடனான நெருக்கம் குறித்த உணர்ச்சிகர சம்பவங்களே அதில் நிறைந்திருக்கும். அதை நாங்கள் படித்துப் படித்து சொல்லியும் நீங்கள் செய்தியை அரசியல் மயமாக எழுதி, அசிங்கப்படுத்தி விட்டீர்களே? என்று நான் எழுதிய செய்தியைப் படித்துவிட்டு நம்மிடம் விமர்சனம் செய்த விழாக்கமிட்டியினர் சிலர் கூட ரஜினியின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் விட்டனர். அதை விட வாயடைக்க வைத்தது, மற்ற ஆன்மிகத் தலைவர்களின் பேச்சு. ரஜினி பேசியது அரசியல் என்றால், மற்றவர்கள் பேசியது ரஜினி. ரஜினி, ரஜினியைப் பற்றித்தான்.

பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் பேசும்போது, ‘உங்கள் உள்ளத்தை கவர்ந்திருக்கிற ரஜினிகாந்த் உங்களை வழிநடத்திச் செல்லக்கூடிய தூதுவராக இருக்கிறார். அவர் வழி ஆன்மிக வழி. அவர் வழி அன்பு வழி. அந்த வழியில் நீங்களும் உங்கள் வாழ்வை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். ரஜினி வருவதற்கு முந்தைய காலத்தில் இருந்த சினிமா வேறு. ரஜினிக்கு பின்னால் வந்த சினிமா வேறு. அவர் மெய்வழி காணும் உத்தமராக விளங்குகிறார். அவரால் நிச்சயம் மனித சமுதாயம் மேன்மையடையும். அத்தகைய ஞானி நிலையை அவர் அடைந்திருக்கிறார். அவ்வழியே நீங்கள் மெய்வழி காணவேண்டும்!’ எனக் குறிப்பிட்டார்.

ரஜினியின் 'எஜமான்' படத்தின் படப்பிடிப்பிற்காக தன் அரண்மனையை அளித்தவரும், சமத்தூர் ஜமீனின் வாரிசுமான கிருஷ்ணராஜ் வானவராயர் பேசும்போது, ‘எஜமான்’ பட ரேஞ்சுக்கே போனார். ‘எத்தனையோ ஆன்மிகக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். எங்கேயும் இத்தனை கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது கூட்டப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. கூட்டி வரப்பட்ட கூட்டமாகவும் தெரியவில்லை். விரும்பி வந்த கூட்டமாக, தானா சேர்ந்த கூட்டமாகத் தெரிகிறது. அதிலும் ரஜினியிடம் விளக்கம் பெற வந்திருப்பதாகவே தெரிகிறது.

நீங்கள் வரவேண்டிய இடத்திற்குதான் வந்திருக்கிறீர்கள். அதற்காக அவர் ஒருவரைப் பாராட்டி நன்றி தெரிவித்தாக வேண்டும். ரஜினிகாந்த் நடிகரானார். அதை விட அவர் ஆன்மிகத்தில் ஆழ்ந்தார். உலகப் புகழ் பெற்றார். அவருடைய ரசிகர்கள் நீங்கள். சாதனையாளராகத்தான் விரும்புவீர்கள். இம்மண்ணில் பிறந்து வளர்ந்து உருவாகி... உண்மை ஒன்று, வழிகள் பல என்பதை உலகம் முழுக்க உபதேசித்து மறைந்தவர்தான் சுவாமி சச்சிதானந்தா. அவர் இறுதியாக உபதேசம் செய்தது யாருக்காக என்று சொன்னால், நீங்கள் யாருக்காக வந்திருக்கிறீர்களோ, அவருக்காக (கைதட்டல், ஆர்ப்பரிப்பு). நடிக்க மாட்டேன் என்றவரை நடிக்க வைத்துள்ளார் அவர்.

ஒரு முறை சுவாமிஜியுடன் ஆழியாறில் பேசும்போது ஒன்றை தெரிவித்தார். ‘நான் அவரை நடிக்க வைத்தது அவருக்காக அல்ல. அவரைக் கருவியாக உபயோகித்து நாட்டிற்காக பயன்படுத்தி உள்ளேன். அதுதான் 'பாபா' படம் என்றார். நண்பரே (ரஜினியை பார்த்து) நாடு உங்களிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறது. கோடானு கோடி இளைஞர்கள் உங்கள் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களை ஆன்மிக வழிக்கு அழைத்து வந்து இந்த பாரத தேசத்தை தூய்மைப் படுத்துங்கள்!’ என்றார்.

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 48 - 'ஆன்மிகத்தில் ரஜினி, அரசியலில் லதா'

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

இறுதியாக ரஜினி பேசினார்.

‘இது ரொம்ப வித்தியாசமான மேடை. நான் இன்னமும் ஆன்மிகத்தில் குழந்தை. பக்குவமடையாதவன். நான் என் குருநாதருடைய ஜெயந்தி விழாவில் ஆன்மிகத்தைப் பற்றி பேசுவேன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. இருந்தாலும் எனக்கு என்ன நடந்ததோ, அதை அப்படியே இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ரசுராமர். ஜமதக்கினியின் பிள்ளை. குருவை தேடிப்போனார். யாருமே அவரை சிஷ்யனா ஏத்துக்கலை. கடைசியா தத்தாத்ரேயர்கிட்ட போனார். அவர், ‘பதினான்கு ஆண்டுகள் புண்ணிய தலங்களுக்கெல்லாம் போய், ஆன்மிகப் பெரியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு பணி விடை செய்து விட்டு வா. உன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறேன்'னு சொன்னார். பரசுராமரும் பதினான்கு ஆண்டுகள் பல்வேறு மகான்களை சந்தித்து காடு, மலைகளில் எல்லாம் அலைந்து புண்ணியங்கள் செய்து விட்டு வந்தார்.

பரசுராமருக்குள் இப்போது ஒரு சிந்தனை. இந்த தத்தாத்ரேயரை குருவாக ஏற்றுக் கொள்ளலாமே. கூடுதல் சக்தி கிடைக்குமேன்னு நினைச்சார். தத்தாத்ரேயரிடம், ‘உங்கள் குரு யார்?’ என கேட்டார். அவர், ‘காற்று, மழை, பூமி, கடல், வாயு, அக்னி, ஒரு சின்னப் பொண்ணு, சிலந்தி’ன்னு முப்பத்தியிரண்டு பேர் இருப்பதாக சொன்னார். அதைப் பிறகு விளக்கினார். எப்படி?

நதி எப்படிப் போகுது? அது எங்கேயும் நிற்காது. குழி, குன்று, மலை, காடு, கடந்து கடல் நோக்கியே போயிட்டிருக்கும். ஆண்டவன்! அதை நோக்கி போயிட்டேயிருக்கணும். அதை நான் நதிகிட்ட கத்துகிட்டேன். அடுத்து பூமி. அதை யாரெல்லாம் என்னவெல்லாமோ அசிங்கம் பண்றாங்க. ஆனாலும் அது எல்லோருக்கும் நன்மையே கொடுக்குது.. என்னை யார் என்ன, எது செஞ்சாலும் நல்லதையே கொடுக்கிறேன். இதை பூமிகிட்டயிருந்து கத்துக்கிட்டேன்.

காற்று. அது மீன் மார்க்கெட்டுல இருக்கும்போது மீன் வாசனை அடிக்கும். பூ மார்க்கெட்டுல இருக்கும்போது பூ வாசனை அடிக்கும். அங்கிருந்து வெளியே வந்துட்டா. அது கூட எதுவுமே ஒட்டாது. தூய்மையா இருக்கும். ஸோ, நான் எங்கிருந்து எப்படி வந்தாலும் எதுக்குள்ளே போனாலும் எதிலும் ஒட்டாமல், நான் நானாகவே இருக்கணும். இதை நான் காற்றிடம் கத்துக்கிட்டேன் (பலத்த ஆரவாரம்).

சரி, அந்த சின்னப் பொண்ணு பத்தின்னு கேட்டார் பரசுராமர். அதுக்கு அவர் சொல்றார். ஒரு பொண்ணு சமையல் செஞ்சு தர்றேன்னா. நானும் அங்கேயே தியானத்துல உக்காந்துட்டேன். அப்ப அந்தப் பொண்ணு கையில் நிறைய வளையல் போட்டிருந்தா. வேலை செய்யும்போது சத்தமா இருந்தது. அதனால் என் தியானத்துக்குப் பங்கம் வந்திடும்னு ஒவ்வொரு வளையலா கழற்றினா. கடைசியா ஒரு வளையல் மட்டும் இருக்கும்போது சத்தம் வரலை. அதைப் பார்த்து கூட்டத்தில் இருந்தா சாதிக்க முடியாது. சாதிக்கணும்னா தனிமையில் இருக்கணும்னு கற்றுக்கிட்டேன்’னு சொன்னார். உடனே பரசுராமர் சாஷ்டாங்கமா விழுந்து தத்தாத்ரேயரை, ‘குருதேவா’ன்னு வணங்கினார்.

இந்த ரஜினிகாந்துக்கும் பரசுராமர் நிலைதான். குருவைத் தேடி அலைந்தேன். கிடைத்தவர்தான் சுவாமி சச்சிதானந்தா. 1995-ல் அவரை சந்தித்தேன். ‘சுவாமிஜி என்ன சொல்றீங்க. ரஜினி பாலிடிக்ஸ் பேசறதைப் பத்தின்னு கேட்டிருக்காங்க சில பேர். அதுக்கு அவர் சொல்லியிருக்கார். ‘எண்பத்தஞ்சு வயசுல நான் என்னத்தை அவனுக்கு சொல்றது? அவனுக்குத் தெரியாதா? பாலிடிக்ஸ்ங்கறது வேணும்ங்கிறபோது சேர்த்துக்கிட்டு, தேவையில்லைங்கற போது கறிவேப்பிலை மாதிரி அவங்க தூக்கிப் போட்டுடுவாங்கன்னு. அவங்க தூக்கியெறியறதுக்கு முன்னாடி நாமளே வெளியே நின்னுடனும்னு முடிவு செஞ்சுட்டேன். இப்படி எவ்வளவோ விஷயங்கள் எல்லாமே சொல்லிவிட முடியாது.

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ன்னு அவர்கிட்ட கடைசியா ஒரு முறை நிருபர்கள் கேட்டாங்க. அதுக்கு அவர், ‘அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து அழைச்சா வருவார்னும், நானே அவரை அரசியலுக்கு அழைச்சு வருவேன்னும் அப்ப அவர் பதில் சொன்னார். அப்போ நான் பெங்களூர்ல இருந்தேன். உடனே குருஜி எனக்கு போன் செஞ்சு, ‘நீ அரசியலுக்கு வருவியா?’ன்னு பத்திரிகையாளர்கள் கேட்கிறாங்க. நீ என்ன சொல்ல நினைக்கிறே?ன்னு கேட்டாங்க. ‘குருதேவா நீங்க என்னை கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் நான் குதிப்பேன்னு. அதற்கு அவர் சொன்னார்: நான் உன்னை கிணற்றில் குதிக்க சொல்ல மாட்டேன்னு. இங்கே அரசியல்ங்கிறது கபடி விளையாட்டு மாதிரி இருக்கு. அதுவே கால்பந்தாட்டம் மாதிரி இருந்தா பரவாயில்லை. எந்த அரசியலா இருந்தா என்ன. அதில் நமக்கென்ன வேலை?’

குருநாதர் ஜெயந்தி விழாவில் இப்படி அரசியலைப் பற்றி மட்டுமல்ல, தேசிய நதி நீர் இணைப்பு பற்றியும் பேசி அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு யோசனையும் சொன்னார் ரஜினி.

01chkanLathaRajini

மணக்கோலத்தில் ரஜினிகாந்த் லதா தம்பதி. (கோப்புப் படம்)

 

‘நதிகள் இணைப்புப் பற்றி பேசினேன். அதற்கொரு மக்கள் இயக்கம் அமைக்கப்போவதாகவும் சொன்னேன். ஆனால் தெய்வாதீனமாக இப்போது உச்ச நீதிமன்றமே நதிகளை இணைக்க வேண்டும்னு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கு. பிரதமர் வாஜ்பாயும் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறார். இதனால் நாம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நதி நீர் இணைப்புக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு பகீரத யோசனா’ என்று பெயரிட வேண்டும். இது என்னுடைய யோசனை. இதனை நானே நேரடியா போ் பிரதமரிடம் சொல்லலாம்தான். ஆனால் இந்த மேடையில் சொன்னால், எனக்கு முன்னால் பத்திரிகைகள் வாயிலாக இந்தச் செய்தி அவருக்கு எட்டி விடுமே. அதற்காகத்தான் இங்கே இதைச் சொல்கிறேன்!’ என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

ரஜினி வரும்போதும், போகும்போதும் கொடீசியா கண்காட்சி வளாக அரங்கிற்குள்ளேயே அவரது கார் வந்து போக (மேடைக்கு அருகிலேயே) வசதி செய்யப்பட்டிருந்தது. அவருடன் வந்து விஐபி வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தபடி இருந்தார் லதா ரஜினிகாந்த். சில சமயங்களில் தன் தலைவர் ரஜினிகாந்தை நெருங்க முடியாத ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டாளம், லதாவை நெருங்கி, அவ்வப்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும், ஆட்டோ கிராப் வாங்குவதாகவும் இருந்தனர்.

இதில் இன்னொரு அதிர்ச்சி +ஆச்சர்யம்+வேடிக்கையான விஷயம். ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற தீராத குழப்பத்தில் இருந்த ரசிகர்களில் ஒரு கூட்டம் அப்போது தனியே பிரிந்து, ‘லதா ரஜினிகாந்த் ரசிகர் பேரவை’ என்று ஓர் அமைப்பை ஆரம்பித்து விட்டதுதான். அவர்கள் அத்தனை பேருக்கும் இங்கே நேரடியாகவே உத்தரவாதம் வழங்கி விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். இனி, ‘ஆன்மிகத்தில் ரஜினி, அரசியலில் லதா!’ என்ற புதிய கோஷத்தைப் பிரகடனப்படுத்தப் போவதாகவும் அவர்கள் சொல்லிக் கொண்டனர்.

ரஜினி இந்த நிகழ்ச்சியை நடத்தி சென்ற மூன்றாம் நாளே உறுதிப்படுத்தினர் ரஜினி ரசிகர்கள். கோவைக்கு ரஜினி வந்திருந்த வேளையில் கோவையிலுள்ள ரஜினி ரசிகர் கோஷ்டிகளில் ஒன்று லதா ரஜினிகாந்தை தனியே சந்தித்துப் பேசியிருக்கிறது. தாங்கள் லதா ரஜினிகாந்த் பேரவை ஒன்றை ஆரம்பித்து விட்டதாகவும், அதனால் இன்னொரு குரூப் தங்களை டார்ச்சர் செய்வதாகவும், ‘ஏற்கெனவே ‘அம்மாவை’ (லதாவைத்தான் அப்படி சொன்னார்கள்) வாழ்த்தி மிகப்பெரும் கட் அவுட் வைத்திருந்தோம். அதை சத்தியநாராயணாவை வைத்து மிரட்டி கழற்றி விட்டார்கள். அதை திரும்பவும் நாங்கள் வைக்க வழி வகை செய்ய வேண்டும்!’ என்று குமுறியிருக்கிறார்கள். அப்போது லதா, ‘இப்போதைக்கு எதுவும் வேண்டாம். இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள். நான் திரும்பவும் கோயமுத்தூர் வருகிறேன். அப்போது எல்லாம் விரிவாக பேசிக் கொள்ளலாம்!’ என்று சொல்லி சென்றிருக்கிறார்.

ரசிகர்களிடம் வாக்கு கொடுத்தபடியே மூன்று நாட்கள் கழித்து தன் மகள்களுடன் கோவை வந்தார் லதா ரஜினிகாந்த். அப்போது அன்னை தெரசாவே; ஆற்றலில் இந்திராவே!’ என போஸ்டர்கள் வைத்து அவரை வரவேற்று ஜமாய்த்து விட்டார்கள் ரசிகர்களில் ஒரு பிரிவினர். அது பெரிய சர்ச்சைகளையும் கிளப்பியது.

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 49 - லதாவும், சில ரசிகர்களும்

 

 
rajpg

அப்போது கோவை வந்த லதா ரஜினிகாந்த் நேரே பொள்ளாச்சி ஆழியாறில் உள்ள வேதாத்ரி மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினார். அவர் வருகைக்குண்டான காரணம், ‘ஆசிரமத்தில் மகள்களுடன் யோகா பயிற்சி எடுக்கிறார்’ என்பதுதான்.

ஆனால் ரசிகர்களில் ஒரு பிரிவினரோ, ‘ரசிகர்களுடன் கலந்து பேசி பேரவை எப்படி அமைக்கலாம். அதை எப்படி வழிநடத்துவது? அதற்கு யாரையெல்லாம் பயன்படுத்துவது? மக்கள் மத்தியில் பேரவையை எப்படி வலிமை பெறச் செய்வது? அதனால் ரஜினியின் இமேஜ் கூடுமா, குறையுமா? சரிந்திருக்கும் ரஜினி இமேஜை நம் பேரவை மூலம் எப்படி தூக்கி நிறுத்தலாம்?’ என்பதை ஆலோசிக்கவே என்று கூற்றை முன்மொழிந்தனர்.

   
 
 

அதன் நிமித்தம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் லதாவை சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்தனர். அவருடன் ஆலோசித்ததில் சம்மதம் கிடைத்ததன் விளைவாகவே லதா வந்து சென்ற வழியெங்கும் போஸ்டர்களை ஒட்டியதாகவும் குறிப்பிட்டனர் சிலர். ஆனால் அப்போதைய (2003 ஆம் ஆண்டு) கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த வி.வேணுகோபால் இது சுத்தமாக வதந்தி என்றார். இப்படியொரு போஸ்டர் அச்சடிக்கப்பட்டதும், ஒட்டப்பட்டதும் கூட தனக்குத் தெரியாது என்றே மறுத்தார்.

‘லதா ரஜினிகாந்த் பேரவை உருவாகியிருப்பது என்பதெல்லாம் வீண் வதந்தி. தலைவர் ரஜினி மீது அதீத பற்று கொண்ட சில இளைஞர்கள், அன்னையின் (லதாதான்) மீதும் அன்புகொண்டு குருஜி சச்சிதானந்த மகராஜ் ஜெயந்தி விழாவன்று ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அப்போதே அவர் வேதாத்திரி மகரிஷி ஆசிரமத்திற்கு ஓரிரு நாளில் வருவதாகத்தான் சொல்லிச் சென்றார். அப்படி வந்த அவரை ஆசிரமத்தில் சந்தித்து மரியாதை நிமித்தமாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் பேசினார்கள்.

அவ்வளவுதான். அவருக்கு வரவேற்பு போஸ்டர்களும் ரசிகர்களின் மகிழ்ச்சி வெளிப்பாடாகவே ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த போஸ்டரில் என் பெயர் இடம் பெற்றிருந்ததை கூட தெருவில் அது ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை!’ என்பதே அவரின் விளக்கமாக இருந்தது.

இப்படி லதா ரஜினி பேரவை சர்ச்சை என்பது 2003 ஜனவரியில் மட்டுமல்ல, அதற்கு சில மாதங்கள் முன்னரே கோவையை மையமாக வைத்து உருவாகியிருந்தது. அதன் உருவாக்கம் பல்வேறு பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியாகியிருக்கிறது.

ரஜினியின் ரசிகர்கள் என்பவர்கள் அந்த காலகட்டத்தில் செய் என்றால் செய்து முடிப்பவர்களாகவும், செய்து முடி என்றால் செய்து மடி என்கிற சித்தாந்தத்தோடு செயல்படக் கூடிய அளவில் இருந்து வந்தனர். தங்களது தலைவர் உத்தரவினை இடுவார்; அரசியலில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று பல வருடங்களாக காத்திருந்து சோர்ந்து போயிருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், அதில் ஜெயிக்கிற வேகம்; அந்தப் படத்தை ஓட வைக்க ரசிகர்களை உசுப்பேற்றுகிறதில் உள்ள வேகம், அரசியலில் தென்படுவதேயில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள். அதுவும் படம் எடுக்காத நேரங்களில் பூர்ண அமைதி என்பது ரசிகர்களை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.

ஆனால் அவர் மனைவி லதாவோ துடிப்பாக இருக்கிறார். கணவரின் பொறுப்புகளை சுமப்பதோடு, ரசிகர் மன்ற செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டுகிறார். இதனால் ரசிகர்களில் ஒரு பிரிவினர் ரஜினி வராவிட்டாலும் பரவாயில்லை. லதா ரஜினிகாந்த் வந்தால் கூட போதும். அரசியலில் ஓர் என்ட்ரியை கொடுத்துவிட முடியும் என ரசிகர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக நம்பினர். இதற்குள் கோஷ்டிப் பூசலும் ஒலித்தது.

lathajpg
 

ரஜினி ரசிகர் மன்றங்களில் சில தீவிரமான இளைஞர்கள், அகில இந்திய தலைவர் சத்தியநாராயணாவிற்கு கட்டுப்படாதவர்கள், அவரின் சொல்பேச்சு கேட்காதவர்கள், அவரால் பொறுப்புகள் தரப்படாதவர்கள், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராகப் புறப்பட்டனர். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு, கோஷ்டிகள் செயல்பட்டன. அதுவே கோவையில் வேணுகோபால், கதிர்வேல், உலகநாதன் ஆகிய நிர்வாகிகள் தலைமையில் மூன்று கோஷ்டிகளாக செயல்பட்டன.

'பாபா' படம் வெளியான காலத்தில் இந்த மூன்று கோஷ்டிகளும் முதல் ஷோ விழாவை மூன்று இடங்களில் கொண்டாடினார்கள். இவர்கள் வைத்திருந்த போஸ்டர்கள், கட் அவுட் வாயிலாக அந்த பிளவு அடையாளப்படுத்தப்பட்டது. சிறப்பாகச் செயல்பட்ட பல மன்றங்களுக்கு மாவட்டத் தலைமை, 'பாபா' ரசிகர் காட்சிக்கு டிக்கெட் தரவில்லை. புறக்கணிக்கப்பட்ட மன்றத்தினர் அன்றே ஆவேசம் பொங்க மாவட்ட மன்றத் தலைவர் வீட்டிற்குச் சென்றனர். இந்த விவரம் தெரிந்த அவரோ கோவையில் 'பாபா' படத்தைக் கொண்டாடுவதை, முதல் ஷோ பார்ப்பதை தவிர்த்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர்களை எல்லாம் அகில இந்திய ரசிகர் மன்றத்தலைமையே உசுப்பேத்தி விடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இவர்களுக்கு எதிராக கோவையில் அபு, ஷாஜகான், முபாரக், சவுந்திரபாண்டியன், நந்தகுமார் என ஒரு பிரிவினர் நேரடியாகவே பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர்.

rajini%20-%20lathajpg
 

‘தமிழகம் முழுவதுமே மன்றங்களில் கோஷ்டிப் பூசல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சத்தியநாராயணா இதை குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. சின்ன சின்ன அமைப்புகள் கூட கோவையில் அலுவலகம் வைத்திருக்கும் நிலையில் கோவையில் ரஜினி மன்றத்திற்கென அலுவலகம் இல்லை. முறையான தலைமை இல்லாததுதான் இதற்கு காரணம். 'பாபா' பட டிக்கெட் போன்ற விவகாரங்களை கவனித்துக்கொள்ள சத்தியநாராயணா அவருக்கு வேண்டிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதனை அம்மா லதாவிடம் போனில் சொன்னோம். அதைத் தொடர்ந்து அந்த குழு ஏழு பேர் கொண்ட குழுவாக மாற்றப்பட்டது. லதா அம்மாவைப் பொறுத்தவரை ரசிகர் மன்றப் பிரச்சினைகள் தன் கவனத்திற்கு வந்தால் உடனடி ஆக்‌ஷன்தான். கோவைக்கு சத்தியநாராயணா வந்தால் முன்பெல்லாம் அவரை எளிமையாகச் சந்திக்க முடியும். ஆனால் இப்போது முடிவதில்லை. அவரது நண்பர்கள் வீட்டில் தங்கி விடுகிறார்.

ஒரு முறை ஒத்துக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் வீட்டுத் திருமணத்திற்கு வருவதாக சத்தியநாராயணா உறுதி கொடுத்திருந்தார். அவரும் அதை நம்பி ஏராளமாய் செலவு செய்து ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால் கல்யாணத்திற்கு அவர் வரவில்லை. நொந்து போன கிருஷ்ணகுமார் சத்தியநாராயணாவை போன் போட்டு, ‘என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்களே?’ என கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக மாவட்டத் தலைமையை தொடர்பு கொண்டு கிருஷ்ணகுமாருக்கும் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அறிவிக்கச் செய்தார். இப்படி சத்தியநாராயணாவின் கோபத்திற்கு ரசிகர்கள் பலர் பலியாகி உள்ளனர். இப்படி அகில இந்தியத் தலைவரால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய உள்ளனர். இதனால் எங்கள் மன்ற வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்கு முடிவு கட்ட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளோம்!’ எனச் சொன்னவர்கள் ‘இனிமேற்கொண்டு லதா பேரவை’ என்ற பெயரில் அமைப்பு உருவாக்கி செயல்படப் போவதாக அறிவித்தனர். இது நடந்தது 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்.

‘இப்படியொரு பேரவையை நாங்களாகவே தொடங்க உள்ளோம். எங்களை நற்பணிகள் செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் பாதை போட்டுக் கொடுத்தவரே லதா அம்மாதான். இந்த இக்கட்டான நேரத்தில் நிறைய ரஜினி ரசிகர்கள் அநாதரவாக கை விடப்பட்ட நிலையில் உள்ளோம். எங்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க அம்மாவே முன் வர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நிம்மதி. இதற்காக நாங்கள் சென்னை சென்று லதா அம்மாவை சந்திக்க உள்ளோம். அதன் பிறகு பேரவை அங்கீகாரத்துடன் செயல்படும்!’ என்றும் அறிவித்திருந்தனர்.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 50 - குடும்பம், வாரிசு, பாசம்

 

 
rajjpg

ரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு.

'பாபா' படம் ரிலீஸின்போது இந்த குறிப்பிட்ட ரஜினி ரசிகர்கள் ரஜினியுடன், லதா ரஜினியின் படத்தையும் வைத்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி விட்டார்கள். அதில், ‘வாழ்வில் பாதி நீ; வழி நடத்த வா நீ!’ என்ற வாசகங்களும், ‘எம் தலைவன் மெளனம் கலைய சக்தி (ல)தா!’ என பஞ்ச் வசனங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை மன்றத் தலைமை கொடுக்க மறுத்து விட்டதாம். அதற்கு முடிவு கட்டத்தான் லதா தலைமையில் அணி திரளப்போவதாக கோபம் காட்டியது இக்குழு.

அத்துடன், ‘தலைவா ரசிகர்களை மதிக்கத் தெரியாத உணர்வுகளை உணரத்தெரியாத, அறிவிக்கப்படாத கோவை மாவட்டத் தலைமை மன்றத்தில் நுழைந்துள்ள ஆதிக்கக் குழுவை நீக்கு!’ என மறுபடி போஸ்டர்கள் அச்சடித்து நகரெங்கும் ஒட்ட பரபரப்பாகியது. இதை இன்னொரு கோஷ்டி ரசிகர் மன்றத்தினர் இரவோடு இரவாக கிளம்பி இந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதன் தொடர்ச்சியாக உளவுத் துறையினர் ரஜினி மன்ற கோஷ்டி தகராறுகளை கவனித்து அரசுக்கு அனுப்பவும் தொடங்கினர்.

 
 

அதைத் தொடர்ந்துதான் கோவை கொடீசியாவில் நடந்த சுவாமி சச்சிதானந்தா மகராஜ் ஜெயந்தி விழாவுக்கு ரஜினி வரும்போது லதாவுக்கும் வரவேற்பு போஸ்டர் அச்சடித்து ஒட்டி ரசிகர்கள் ஜமாய்த்ததும், லதாவை ஓட்டலில் சந்தித்துப் பேசியதும், ஆழியாறுக்கு மகள்களுடன் அவர் வந்தபோது ரசிகர்களில் ஒரு பிரிவினர் அங்கே அவரைச் சந்தித்து சர்ச்சை கிளப்பியதும் நடந்தது.

இதையெல்லாம் இந்த இடத்தில் எதற்கு சொல்ல வேண்டும்? ஒரு ஜனநாயக நாட்டில், ஏதாவது ஒரு துறையில் பிரபல்யப்பட்ட ஒருவன், பொதுவாழ்க்கைக்கு வர முற்பட்டாலோ, அல்லது அவன் அதற்கு அவன் மீது மிக்க ஈடுபாடு உள்ளவர்களால் வேண்டி விரும்பி அழைக்கப்பட்டாலோ, அதில் வாரிசு அரசியல் என்பதும் உள்நுழைந்து விடுகிறது. இது ஒன்றும் பொதுவுடமை தேசமன்று. இங்கே எல்லாமே வர்த்தக மயமான முதலாளித்துவ தேசம். இந்த அமைப்பு முறையில் இதுதான் இப்படித்தான் நடக்கும் என்பது சமூக விஞ்ஞானம். அதில் இந்த வாரிசு அரசியலும் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இந்தியத் திருநாட்டின் அரசியல் அங்கிங்கெணாதபடி நிரூபித்தே வந்துள்ளது.

முடியாட்சி ஒழித்து குடியாட்சி வந்த காலத்திலேயே, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற நிலை ஏற்பட்டது. உள்கட்சியானாலும், பரந்துபட்ட பெரிய நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கம் ஆனாலும், மாநில, மாவட்ட, வட்ட, பஞ்சாயத்து நடைமுறைகளானாலும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின் அடிநாதம். ஆனால் முடியாட்சி எச்சத்தின் மிச்சம்.

இங்கே தனி மனித புராணங்களும், அவர் தம் வாரிசுகளுமே கட்சி அரங்கிலும், அதிகார அரங்கிலும் கோலோச்ச வழி ஏற்படுத்தி வருகிறது. அதுதான் அன்றைக்கும், இன்றைக்கும் அரசியல் என்றாகி வருகிறது. 1928 காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு இருந்தார். இளைஞர்களுக்கு வழிவிடுவதாக கூறிய மோதிலால் அடுத்த நிலையில் இருந்த சர்தார் வல்லபாய் படேலை தவிர்த்து தன் மகன் ஜவஹர்லால் நேருவுக்கே அந்த வாய்ப்பை அளித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்த போது 1959-ல் அவருடைய மகள் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்தனர். அதில் ஜனநாயகமும் அப்போது இருந்தது. அதனால், நேருவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகள் இந்திராவுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார்.

ஆனால், 1966-ல் சாஸ்திரி இறந்தபோது இந்திரா காந்தியை அப்பதவியில் இருத்தினர். இந்திரா இருந்தபோதே சஞ்சய் காந்தியை வாரிசு அரசியலில் வளர்த்தெடுத்தார். சஞ்சய் விபத்தில் அகால மரணம் தழுவ, விமான ஃபைலட்டாக இருந்த ராஜீவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தார் இந்திரா. இவர் மறைவுக்குப் பிறகு ராஜீவ் பிரதமரானார். அவருக்குப் பிறகு சில காரணங்களால் சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்கள் பிரதமராகா விட்டாலும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் காங்கிரஸ் கட்சியும், அதன் ஆட்சியும் இருந்தது.

இந்திய அரசியலில் இந்த வாரிசு அரசியலை கடுமையாகச் சாடினார் கருணாநிதி. பின்னாளில் அவர் மகன்கள் அழகிரி, மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி; மருமகன் முரசொலி மாறன், அவர் பிள்ளை தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வாரிசு அரசியல் வானில் பளீரிட்டனர். தற்போது அவர்களின் பிள்ளைகள் உதயநிதி, துரை தயாநிதி பெயரெல்லாம் வாரிசுகளாக கொடி கட்டிக் கொண்டிருக்கிறது.

வாரிசு அரசியலை துளி கூட கோடி காட்டாமல் வாழ்ந்த எம்ஜிஆர் வெள்ளிச் செங்கோலை ஜெயலலிதாவுக்கு கொடுத்தாலும், எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் அவர் மனைவி வி.என்.ஜானகி முதல்வராகி அதிர்ச்சியூட்டினார். ஜெயலலிதாவுக்கு குடும்பம், குழந்தைகள் இல்லை என்றாலும் கூட அவரின் உடன்பிறவா சகோதரியின் வாரிசுகள், உறவுகள் ஒன்றுக்கொன்று அரண்மனையைப் பிடிக்க வாரிசு சண்டையிட்டுக் கொள்வதை காண முடிந்தது. வாரிசு முறை இல்லாமல் அரசியல் என்பதை தீர்க்கமாக உணர்ந்தவர் போல் செயல்பட்டார் விஜயகாந்த். தான் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே தன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன் மேடைகளில் வலம் வந்தார். அவர்களுக்கே கட்சிப் பதவிகள் அளித்தார். அவர்களே கட்சியை, கட்சிப் பொறுப்புகளை தீர்மானித்தனர்.

Latha%20%20Rajinikanth

லதா ரஜினிகாந்த்

தேமுதிக கட்சி ஆரம்பிக்கும் முன்னரே ஒரு சந்திப்பில் விஜயகாந்திடம் நிருபர்கள், ‘நீங்க கட்சி ஆரம்பிக்கிற முன்னாடியே மனைவியோட வர்றீங்களே. இது வாரிசு அரசியல் இல்லியா?’ எனக் கேட்டனர். அதற்கு அவர் இடக்காக சொன்ன பதில், ‘நான் எம் பொண்டாட்டிய கூட்டிட்டுத்தானே வர்றேன். ஒங்களுக்கென்ன?’. அதற்கு பிறகு எந்த நிருபர்கள் சந்திப்பிலும் இந்த வாரிசு அரசியல் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதை நான் அறிந்ததேயில்லை.

அரசியலில் மட்டுமா? சினிமாவில்.. கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பாக்கியராஜ், சிவகுமார், கஸ்தூரி ராஜா, பாரதிராஜா, டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர், இளையராஜா என எத்தனை திரை அரசுகளின் வாரிசுகள் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்? இது மட்டுமா? வங்கியில், ஆசிரியப்பணியில், ரயில்வே பணியில் என வாரிசுகள் கோலோச்சாத இடம் எது? ஒரு குடும்பத்தில் ஒரு மருத்துவர் உருவாகி விட்டால் பிறகு அந்தக் குடும்பத்தில் தொடர் மருத்துவர்கள்தான். ஒரு குடும்பத்தில் வங்கி மேலாளர் ஒருவர் உருவாகி விட்டால் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தில் தொடர் வங்கி மேலாளர்கள்தான். யாரும், எதற்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை விடுவதில்லை.

இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ரஜினியின் மனைவி லதாவின் பெயரால், அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் பேரவை ஒன்றை உருவாக்கியதில் பெரிய ஆச்சர்யமில்லை. இன்றைக்கும் பத்திரிகை, மீடியா ஒரு பிரபல்யத்தை, விவிஐபியை பேட்டி எடுக்கச் செல்லும்போது அந்த விவிஐபிக்களுக்கு முன்னரே அக்குடும்ப உறுப்பினர்களை சந்தித்து விடுகிறார்கள். அதில் சிலர் லைட்ஸ் ஆன் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறார்கள். இதற்கு ஓர் உதாரணம் சமீபத்தில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தொடர் பெண்கள் பத்திரிகை ஒன்றில் கலக்கியதைச் சொல்லலாம்.

வாரிசுகள் இங்கே தானாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அதற்கான சூழலும் இங்கே இயல்பாக இருக்கிறது. அதுதான் ரஜினியின் மனைவி லதாவுக்கும் ரசிகர்கள் மூலம் அந்த காலகட்டத்தில் வாய்த்தது. தன் கணவருக்கு இருக்கும் செல்வாக்கு, அவர் மீது அதீத பற்று வைத்துள்ளவர்களுக்கு ஏற்படும் மனச்சஞ்சலத்தை ஓர் ஆறுதலுக்காகவாவது காது கொடுத்துக் கேட்காவிட்டால் என்ன ஆவது? அதுதான் அவருக்கும் அந்தக் காலகட்டத்தில் அவர் பெயரில் பேரவை உருவாக்க சில ரசிகர்களைத் துணிய வைத்தது.

இதுவெல்லாம் அரசியலில் சகஜம் என்பதை விட இதுவெல்லாம் இல்லாமல் அரசியல் இல்லை. இதுபோன்ற செயல்களில் மூழ்கி முத்தெடுக்காதவர்கள் சமகால வர்த்தக உலகு அரசியலுக்கு லாயக்கு இல்லை என்பது போலத்தான் நகர்கிறது உலகு.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 51- கிரேட்டஸ்ட் லிஸனர்

latha%20rajjpg

ரஜினி, லதா | கோப்புப் படம்.

இதில் மற்றவர்கள் எப்படியோ? ரஜினியைப் பொறுத்தவரை ஆதி முதலே தன் குடும்பத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள், கட்டுப்பெட்டியாக வளர்த்தியவர் என்பதை 2000 ஆம் ஆண்டில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஒரு ஆன்மிகப் பெரியவருடன் பேசியதில் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

‘இங்கே உலகெங்கிலும் இருந்து வரும் ஆன்மிகப் பெரியவர்களுக்கு தனித்தனியாக குடில்கள் உண்டு. அப்படி ஒரு வீடு ரஜினி குடும்பத்துக்கும் இருக்கிறது. அதில் ரஜினி எப்போதாவது வந்து தங்குவார். அடிக்கடி அந்த வீட்டில் அவர் மனைவியும் இரு மகள்களும் வந்து தங்குவது வழக்கம். ரஜினியுடன் வரும்போதம் சரி, அவர் இல்லாமல் வரும் போதம் சரி, அவர்கள் மூவருமே ஒரு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசுவார்கள். வெளியே செல்லமாட்டார்கள். ஆசிரமத்தில் பல ஏக்கர் பரப்பளவையும் சுற்றி வரும்போது ஒரு சாதாரண வீட்டுப் பிள்ளைகள் போலவே நடந்து கொள்வார்கள். இது எல்லாம் ரஜினிக்குள் உருவாக்கியிருக்கும் அற்புதம். அதற்கும் மேலாக ரஜினியும் அவர்கள் மீது ரொம்ப பாசமாக இருப்பார்.!’எனச் சொன்னார் அவர்.

 
 

அந்த ஆன்மிகப்பெரியவர் சொன்னது எந்த அளவுக்கு சரியானது?

அதன் ஆதாரசுருதியாய் ஒலிக்கும் லதா ரஜினிகாந்த் 2011 ஆம் ஆண்டில் பிரபல வார இதழுக்கு கொடுத்த ஒரு பேட்டியின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

‘நன்றாகப் படிக்கிறானே என்று அவரிடம் (ரஜினியிடம்) ஒரு வார்த்தை கூட கேட்காமல் திடீரென்று இங்கிலீஷ் மீடியத்திற்கு அவரை மாற்றி விட்டார்கள். ஒரு நிமிஷத்தில் எல்லாப் பாடங்களும் இங்கிலீஷ் ஆக மாறி விட்டது. ரஜினி ரொம்பவும் அப்செட் ஆகி விட்டார். திடீரென்று ரேங்க் குறைந்தது அவர் மனதை பாதித்தது. யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் வருத்தத்தோடு தவித்திருக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு பிராமின் ஃபேமிலி இருந்தது. அவர்கள் இவர் மீது மிகுந்த அன்பு காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கூட அவரால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மாறாக இந்த மாதிரியான சின்ன வயசுத் தாக்கங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கையே அவரை காப்பாற்றியிருக்கிறதாக சொல்லியிருக்கிறார்.

‘நான் நல்லவனாக வளர வேண்டும். கடவுள் அருளால் ஏதாவது சாதிக்க வேண்டும்!’ என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி நின்றிருக்கிறது. சின்ன வயதில் தினமும் நெற்றி நிறைய விபூதி அடித்துக்கொள்வார் அவர். அது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சின்ன வயதில் ராமகிருஷ்ண மடத்துக்கு தினமும் போவார். அங்கு தண்ணீர் பிடித்து வைப்பது. தரையைப் பெருக்குவது போன்ற பணிகளைச் செய்வார். ரஜினியை கவனித்து வந்த குருஜிக்கு இவர் மீது பாசம். தான் மாணவர்களிடையே சொற்பொழிவாற்றும் போது எல்லாம் ரஜினியையும் அன்புடன் அழைத்து உட்கார வைத்துக்கொள்வார். அப்போதும் சரி, இப்போதும் சரி ‘ரஜினி ஈஸ் கிரேட்டஸ்ட் லிஸனர்’. நீங்கள் ஒன்று அவரிடம் பேசினால் ரொம்ப பொறுமையாக, கவனமாகக் கேட்பார்!’

ரஜினி குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது தர முடியுமா?

‘உண்மையில் ஒரு போட்டோ கூட இல்லை. காரணம் அவரை யாரும் போட்டோ எடுக்கவில்லை. ஒரு சமயம் குடும்பமாக அமர்ந்து என் ஆல்பம், குழந்தைகளின் போட்டோக்களை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர், ‘என்னுடைய குழந்தைப் பருவ போட்டோதான் ஒன்று கூட இல்லை!’ என்று லேசாகப் புன்னகைத்தார். எனக்கும் குழந்தைகளுக்கும் மனசு கஷ்டமாகி விட்டது. தன் போட்டோ இல்லை என்று சொன்னதும் அவருடைய கரங்களை ஆதரவோடு கெட்டியாகப் பற்றிக் கொண்டேன். வீட்டில் அவர் ஜில்லு என்றுதான் அழைப்பார். மறு விநாடி. அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. ‘பிலீவ் மீ! சின்ன வயசில் கறுப்பா இருந்தாலும், துறுதுறுவென நன்றாகவே இருப்பேன்!’என்றார் உடனே!’

அவர் குழந்தைப் பருவம் சரி. பிற்பாடு புகழ் உச்சிக்குப் போன பிறகு தன் குழந்தைகளோடு அவரால் நேரம் செலவிட முடிந்ததா?

‘முடியாமல்தான் போனது. ஐஸ்வர்யா பிறந்த சமயம். அப்போது இவர் ரொம்ப பிஸி. இரவு பகலென்று பாராமல் உழைத்துக்கொண்டு இருந்த சமயம் அது. பிற்பாடு எல்லாமே ஒரு கன்ட்ரோலுக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடிந்தது’

lathajpg

லதா | கோப்புப் படம்.

 

ஐஸ்வர்யா பிறந்த சமயம் நீங்கள் நீங்கள் மெட்டர்னிட்டிக்குப் போனபோது ரஜினி துடித்துப் போனாராமே?

‘அது ஒரு வியப்பான விஷயம். ஐஸ்வர்யா பிறந்தது ஜனவரி 1-ம் தேதி. தன் ‘பர்த்டே’யை உலகமே கொண்டாடுகிறது என்று தமாஷாக அவள் சொல்வாள். நியாயமாக ஜனவரி 26-ம் தேதிதான் அவள் பிறக்க வேண்டிய, டியூ டேட்! ஒண்ணாம் தேதி காலையில் என் வயிற்றில் திடீரென்று குழந்தையின் மூவ்மென்ட் இல்லை. சில நிமிஷங்களில் சரியாகி விட்டது. அப்போது என் உதவிக்கு என் அம்மா கூடவே இருந்தார். காலையில் எனக்காக ஏதோ முக்கியமாகக் கடைக்குப் போக வேண்டி இருந்தது அம்மாவுக்கு. அப்பவே ‘ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றியே, அப்புறம் போறேனே!’என்றார். நான், ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என்று அம்மாவை வற்புறுத்திக் கடைக்கு அனுப்பி விட்டேன். இவரோ ஷூட்டிங் போயாகி விட்டது. திரும்ப இரவாகும்.

வீட்டில் தன்னந்தனியாக நான். திடீரென்று மறுபடியும் வயிற்றை ஏதோ பண்ணியது. வீட்டில் இரண்டு கார்களையும் அம்மாவும், அவருமாக எடுத்துச்சென்று விட்டார்கள். சட்டென்று என்னைக் கலவரம் சூழ்ந்து கொண்டது. அம்மாவை மடத்தனமாக அனுப்பி விட்டோமே என்று என் மீதே கோபம் வர கண்கள் கலங்கிப் போய் பூஜை அறைக்குள் சுவாமி படங்களுக்கு முன் உட்கார்ந்து ‘கடவுளே, என்னைக் காப்பாற்று!’ என்று பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தேன். திடீரென்று க்ரீச்சென்று கார் வந்து நிற்கும் சத்தம். மெல்லத் திரும்பிப் பார்த்தால் வாசலில் அவர்.

‘ஜில்லு என்ன ஆச்சு?ன்னு பதறியபடி ஓடி வர்றார். நான் விஷயத்தை மென்னு விழுங்கிச் சொல்றேன். அப்படியே என்னை அணைத்து தாங்கியவாறு அழைத்து சென்று காருக்குள் உட்கார வைத்தார். கார் வெலிங்டன் நர்சிங் ஹோமை நோக்கிப் போகுது. அவர் தோளில் என் தலையைச் சாய்த்திருந்தேன். ‘நீங்க எப்படி திடீர்’னு கேட்கிறேன். காரை வேகமா ஓட்டிகிட்டே, ‘ஷூட்டிங் இன்னைய்க்கு இல்லை. போரடித்தது. சரி வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போடுவோம்னு நினைச்சேன். ஒடனே வந்துட்டேன்’ங்கிறார். நர்சிங் ஹோம் போன கையோடு லேபர் ரூமுக்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து என்னை அழைத்துக்கொண்டு ஓடினார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்வர்யா பிறந்தாள். நேரே குழந்தையை எடுத்துக்கொண்டு போய் அவர் கையில் கொடுக்கச் சொன்னேன். அத்தனை நேரமும் பதற்றத்துடன், யாரோடும் பேசாமல் வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார் என்றும், அந்த நேரத்தில் ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை என்றும் அப்புறமா தெரிஞ்சுகிட்டேன். டென்ஷனாக இருந்தால் நிச்சயம் சிகரெட் பிடிப்பீர்கள். எப்படி மூன்று மணி நேரம் சிகரெட் பிடிக்காமல் இருந்தீங்கன்னு கேட்டேன். சாதாரண டென்ஷனுக்குத்தான் சிகரெட் பிடிக்கத்தோணும். இது அதை எல்லாம் தாண்டிப் போய்விட்ட மகா டென்ஷன்’னார் சாவகாசமாக’.

இரண்டு குழந்தைகளுக்கு பிறகு சிலரைப் போல ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தம் இருக்கிறதா?

இல்லை. இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்வதும் நாட்டுக்கு செய்யும் சேவை என்பார் அவர். சிசேரியன் வேறு. மனைவியின் வயிற்றில் கத்தி. தையல், இதுவெல்லாம் தாங்க முடியவில்லை. இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையா என்று ரொம்ப அப்செட் ஆவார். எங்கள் ரெண்டு பேருக்குமே பெண் குழந்தைகள் அதிகமாகப் பிடிக்கும். ஆண் குழந்தை இல்லையே என்று ஒரு முறை கூட நினைத்தது இல்லை. ஒரு முறை அவரிடம், ‘உங்கள் பெரிய அக்காவும் திருமணமாகிப் போன பிறகு உங்கள் வீட்டில் எல்லோருமே ஆண்கள்தான். இப்போது அப்படியே உல்டா ஆகி விட்டது. இப்ப நம்ம வீட்டில் பெண்கள்தான் மெஜாரிட்டின்னு தமாஷ் பண்ணுவேன். எனக்கு அவரே ஒரு குழந்தை மாதிரிதான். இரண்டு பெண் குழந்தைகள் பேச்சு வரும்போது, ‘உங்களுக்குத்தான் இரண்டு பெண் குழந்தைகள். எனக்கு உங்களையும் சேர்த்து மூன்று குழந்தைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள்னு. உடனே தலை உயர்த்தி வாய்விட்டு சிரிப்பார்’

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 52 -‘ராஸை’ தோற்கடியுங்கள்

 

 
bajpg

'பாபா' பட பூஜையின் போது ரஜினி | கோப்புப் படம்.

கட்சியற்ற, அரசியலற்ற ஒரு அரசியலை ரஜினி ரசிகர்கள் நிகழ்த்தியதன் உச்சகட்டம்தான் அந்தக் காலகட்டத்தில் லதா ரஜினிகாந்த் வாரிசு அரசியல் சர்ச்சைக்குள்ளான சம்பவங்கள். அதன் வெளிப்பாடுகளும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எந்த இடத்திலும் துல்லியப்படுத்தாது இருந்த நிலையில்தான் 2004 ஜனவரியில் மக்களவைத் தேர்தலுக்கான சூடு கிளம்பியது.

அந்த சூடு தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்குள் எழும்பும் முன்னரே முதலில் புறப்பட்டது ரஜினி ரசிகர்களிடமிருந்துதான். 'பாபா' படத்தை ஓட விடாமல் பாமகவினர் செய்த ரகளைகளின் போது, ‘அவர்களுக்கு தேர்தல் வரும் போது பாடம் புகட்டுவோம்!’என்று சொல்லியிருந்தாரல்லவா ரஜினி. அந்த ‘பஞ்ச்’ வசனம்தான் இந்த காலகட்ட தேர்தல் அரசியலுக்கு முன்னோடியாக இருந்தது. அதன் தீவிரம் எடுத்த எடுப்பில் தமிழகமெங்கும் போஸ்டர்கள் வடிவில் புறப்பட்டது. அதில் கோவை ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கைதும் செய்யப்பட்டனர்.

 
 

‘இந்தப் படை எங்கள் வெற்றிக்காக அல்ல; பாமகவின் தோல்விக்காக!’ என்பதே என்பதே அவர்கள் போஸ்டரின் உச்சகட்ட கோஷமாக இருந்தது. கோவையில் பாமகவிற்கு பெரிய வாக்குவங்கியும் கிடையாது; தொண்டர்கள் பலமும் கிடையாது. ஆனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று பாமகவிற்கு எதிர் பிரச்சாரம் செய்வதாக அதில் அறிவித்திருந்தனர்.

அதில் இரண்டு போஸ்டர்களில், ‘கலைஞரே நியாயமா? அரசியல் சூதாடியுடன் கூட்டு. சூதாடிக்கு ஆறு சீட்டு. படையப்பாவின் படை ரெடி!’ என வாசகங்கள் தெறித்தன. மூன்றாவது போஸ்டரில், ‘தலைவா! அறிக்கை விடு. அழித்து விடுகிறோம் பாமகவை’ என்றது வாக்கியங்கள். இந்த கடைசி போஸ்டரில், ‘பாமக என்ற பெயரை ரஜினிகாந்த் காலால் உதைத்து தள்ளுவது போல் வடிவமைத்திருந்தார்கள்.

இந்த போஸ்டர்கள் நகரில் கடைவிரித்தவுடனே போலீஸாருக்கு என்ன தோன்றியதோ. உடனே கண்ணுக்கு தென்பட்டவற்றையெல்லாம் கிழித்தெறிய ஆரம்பித்தனர். கூடவே போஸ்டர் ஒட்டிய இரண்டு பேரை பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு போய் தங்கள் பாஷையில் பூஜையையும் ஆரம்பித்து விட்டனர். தவிர, போஸ்டரை அச்சடித்து ஒட்டச் சொன்னதாக சவுந்திரபாண்டியன், அபு, முபாரக் ஆகிய மூன்று ரஜினி ரசிகர்களை கைதும் செய்தது போலீஸ். அவர்கள் மீது தமிழ்நாடு முன்னெச்சரிக்கை தடுப்புச் சட்டம் 1959-ன்படி மக்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாக செயல்பட்டதாக வழக்கும் பதிவும் செய்தனர். இதையொட்டி அங்கிருந்த ரஜினி ரசிகர்களிடம் கோபாவேசம் புறப்பட்டது.

‘எங்கள் தலைவரை மட்டுமல்ல. நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கூட முதுகில் குத்திய கட்சி பாமக. அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் ராமதாஸுக்கு பாடம் புகட்ட ரஜினி ரசிகர்களான நாங்கள் புறப்பட்டால் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதுதானே இந்த போலீஸ்? அதை விட்டுவிட்டு தடைபோடுகிறார்களே. இது எந்த வகையில் நியாயம்!’ என்ற கண்டனக் குரல்கள் கிளம்பின. இது சம்பந்தமாக அப்போதைய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான உலகநாதன் பொங்கினார்:

‘இந்த போஸ்டர்களை நாங்கள் ஒட்டவில்லை. அது பற்றி எங்களுக்கு தெரியவும் தெரியாது. (கோவையில் அப்போதே இரண்டு கோஷ்டிகளாக ரசிகர் மன்றங்கள் இயங்கி வந்தன) நாங்களே முந்திக் கொண்டு இது சம்பந்தமாக அறிக்கை விடலாமென்று இருந்தோம். பாமக போட்டியிடும் இடத்திற்கு எங்கள் தலைமையில் ரசிகர்களை திரட்டிச் செல்வது, அங்கெல்லாம் பாமகவினருக்கு தொந்தரவு கொடுப்பது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் போலீஸ் இந்த போஸ்டர்களுக்கு தடை போட்டிருக்கிறது. அந்த போஸ்டர்களில் அப்படியொன்றும் வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் எதுவும் இல்லை. அப்படியிருக்க, அதற்கு ஏன் தடை போட வேண்டும்? கிழித்தெறிய வேண்டும்? வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்த ஒரு ரசிகரும் சும்மாயிருக்கமாட்டான். முன்வைத்த காலை பின்வைக்கவும் மாட்டான். பாமக இங்கே ஓட்டளவில் ஜீரோ. ஆனால் பாண்டிச்சேரியில் ஆட்சிக் கனவு காண்கிறார்கள். அதனால் நிச்சயம் அங்கே நாங்கள் திரண்டு செல்வோம். இங்கிருந்து எங்கள் அணி சார்பாக மட்டும் 25 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அங்கே தலைவர் ரஜினியின் கொடியை நாட்டி, பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். யார் தடுத்தாலும், கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் ஓய மாட்டோம்!’

போஸ்டர் ஒட்டியது தொடர்பாகக் கைதாகி ஜாமீனில் வந்திருந்தார் ரஜினி ரசிகர் அபு. அவர், ‘எத்தனையோ போஸ்டர்களை தலைவருக்காக ஒட்டியிருக்கேன். இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. எத்தனையோ பகுதிகளில் எத்தனையோ ஊர்களில் ரசிகர்கள் இப்போது போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். ஆனா இங்கே மட்டும்தான் இப்படி எப்.ஐ.ஆர் போட்டு எங்களை கைதும் செய்திருக்கிறார்கள். போலீஸிற்கு இதில் என்ன உள்நோக்கம்னு எங்களுக்குப் புரியவில்லை. அதைப் பற்றி போலீஸில் கேட்டதுக்கு ‘ஆமாய்யா, நீங்க இங்கே போஸ்டர் ஒட்டுவீங்க. அவங்க பதிலுக்கு இன்னொரு போஸ்டர் ஒட்டுவாங்க. அது உச்சகட்டத்துக்கு போகும். ஆளாளுக்கு வெட்டிகிட்டு சாவீங்க. எங்க தலையை உருட்டுவீங்க. அதுவரைக்கும் எங்க கை பூ பறிச்சுட்டு இருக்கும் இல்லியா?’ன்னு பதில் வருது. எங்களைப் பொறுத்தவரை நாங்க எங்க கருத்தை சொல்றோம். சொல்வோம். இந்த பாமக விஷயத்தில் எங்கள் அகில இந்தியத் தலைமையே தடுத்தாலும் நிறுத்த மாட்டோம். 'பாபா' படத்தை பாடாய்படுத்தியவர்களுக்கு பாடம் கற்பித்தே தீருவோம்!’ என ஆத்திரப்பட்டார்.

rjpg

ரஜினி | கோப்புப் படம்: ம.பிரபு.

மற்ற மாவட்டங்களில் போலீஸ் இது விஷயமாய் கண்டுகொள்ளாமல் இருக்க, கோவை போலீஸ் மட்டும் ஏன் இப்படியொரு கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்?

‘கோவை ஒரு சென்சிடிவ் நகரம். ஏற்கெனவே நடந்த மதக்கொலைகள், கலவரங்கள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் எல்லாமே ஏதாவது ஒரு போஸ்டர், நோட்டீஸ், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவர் எழுத்துகள் விவகாரம் மூலமே நடந்துள்ளன. எனவேதான் எந்த ஒரு போஸ்டர் ஒட்டுவதானாலும் காவல்துறை முன் அனுமதி வாங்கிவிட்டே ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள் முன் அனுமதி வாங்கவில்லை. தவிரி இவர்கள் இந்த போஸ்டரை ஒட்டிய இடங்கள் சென்சிடிவ்விலும், சென்சிடிவ்வான பகுதியான கோட்டை மேடுகள் பகுதிகள். எனவேதான் இதை முறையாக மேலிடத்திற்கு தெரியப்படுத்தி, அங்கே அனுமதி வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது!’ என்றனர் போலீஸார்.

இந்த நேரத்தில் பாமகவை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்ய பதினெட்டு பேர் கொண்ட கமிட்டி ரஜினி ரசிகர் மன்ற தரப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் வடமாவட்டங்களைச் சேர்ந்த பனிரெண்டு பேரும், தென்மாவட்டங்களை சேர்ந்த ஆறுபேரும் இடம் பெற்றிருந்தனர்.

மன்ற அளவில் ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த கமிட்டி உறுப்பினர்கள் பதினெட்டு பேரும் இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு ஓட்டலில் கூடி பேசியிருந்தார்கள். பாமக போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அதை தோற்கடிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அதில் வடிவமைக்கப்பட்டன. அதில் ஒரு திட்டத்தின் முதல் அஸ்திரம்தான் இந்த தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் அஸ்திரம்.

அதற்கு அடுத்த குறியாக இரண்டு லட்சம் நோட்டீஸ்களை தயாரித்திருந்தார்கள். ‘அரசியலில் இருந்து அப்புறப்படுத்த(?!) ஆயத்தப்பணிகள்’ என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களுக்கு இருபத்தைந்து கட்டளையிடும் இந்த நோட்டீஸ்கள் சிவகாசியில் அச்சிடப்பட்டு ரசிகர் மன்றங்களுக்கு விநியோகமும் செய்யப்பட்டன. இந்த நோட்டீஸ்கள் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வீடு, வீடாக அந்தந்த ரசிகர் மன்றங்கள் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நோட்டீஸ்களில் இந்த தேர்தலில் ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்; எதை செய்யக்கூடாது; எவ்வாறு வியூகம் அமைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நோட்டீஸ்களில் நேரடியாக ராமதாஸ் என்ற முழுப்பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக ‘ராஸ்’ என்று குறியீட்டு பெயர் இருந்தது. தவிர அதில் பாமக என்ற பெயரும் இல்லை. ‘ராஸின் ஆதரவாளர்களை தோற்கடியுங்கள்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ‘ராஸ் ஆதரவாளர்கள் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் வேலை செய்ய வேண்டும்’ என்ற கட்டளையோடு தொடங்கும் அந்த நோட்டீஸில் காணப்பட்ட முக்கிய வாசகங்கள் இதுதான்:

‘உழைத்துக் களைத்தவன் உணவருந்தப் போகும் போது கையைப் பிடித்துக் கொண்ட வலியை ராஸ் உணரவேண்டும். 'பாபா' படத்திற்கு இடையூறு செய்து ஆனந்தக் களிப்பாடிய ராஸ் முகத்தில் கரிபூசும் நேரம் இதுதான். நம் பலத்தை நிரூபணம் செய்யும் காலகட்டம் இது. இது ஒரு சுயபரிட்சார்த்தப் பணி. ராஸின் சுயரூபத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுங்கள். அரசியல் நம்பகத்தன்மை கிஞ்சித்தும் இல்லாத ராஸின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும். பழைய மரம்வெட்டிச் சம்பவங்கள், சாதிப் பார்வைகளை தெளிவாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இதற்காக ரஜினி ரசிகனுக்கும் ஒரு கிராமம் இலக்கு. அதேவேளையில் தனிமனித விமர்சனம் கூடாது..’என்று ஆர்ப்பாட்டமாய் சென்ற நோட்டீஸ் வசனங்கள், இறுதியில் ‘ உன் பணிகள் குறித்து பதினெட்டு பேர் கமிட்டியிடம் எந்த இரவிலும் பேசலாம். உதவிகள் உன்னை வந்து சேரும்!’ என்ற பின்குறிப்பும் இடம் பெற்றிருந்தன.

இந்த கமிட்டியில் இடம் பெற்றிருந்த 18 பேர் யார், யார் என்பதை ரஜினி ரசிகர் மன்றங்கள் மட்டும் ரகசியமாய் பாதுகாத்துக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. என்றாலும் பதினெட்டு பேர் கமிட்டியைப் பற்றி அப்போது நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்றிரண்டு நிர்வாகிகள் அகப்பட்டார்கள். அதில் நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரத்த தான கழகத்தலைவரும் ஒருவர் என்பதை அறியமுடிந்தது. அவர்தான் இந்த இரண்டு லட்சம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவரிடம் பேசியதில், ‘வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆக வேண்டும்? ரஜினியை எதிர்த்தவர்கள் அதன் பலனை அனுபவிச்சே தீரணும். ரஜினி ஒரு நடிகர். பொது நிகழ்ச்சிக்கு வரும்போது பாருங்க. மொட்டைத் தலை, தாடி, மீசையோட இயல்பா வர்றார். ஆனால் ராமதாஸ் ஓர் அரசியல்வாதி. தலைக்கும் மீசைக்கும் டை அடிக்காமல் அவர் வெளியே வர்றதில்லை. அப்ப யார் நடிக்கிறாங்க? ரஜினி நடிக்கிறதை பற்றி தனிமனித விமர்சனம் செய்ய ராமதாஸ் யார்? ரஜினி ரசிகர்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கம் வரை எங்கள் நடவடிக்கை தொடரும். ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை இது இரண்டாம் சுதந்திரப் போராட்டம்!’ என உணர்ச்சிகரமாக பதில் வந்தது.

- பேசித் தெளிவோம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை

 

 
rajinijpg

ரஜினிகாந்த் | கோப்புப் படம்.

கோவை போஸ்டர்கள், ரஜினி ரசிகர்கள் கைது நடவடிக்கை, அதைத் தொடர்ந்து புறப்பட்ட அவர்களின் ஆவேசம் மற்ற மாவட்டங்களிலும் பற்றிக் கொண்டது. அதன் வீரியம் அடுத்த வாரமே விழுப்புரத்தில் ஒரு சம்பவம் மூலம் கூடுதல் ஆனது.

04.02.2004 அன்று விடியற்காலை. விழுப்புரம் பேருந்து நிறுத்தம். பாமக நிறுவனர் ராமதாஸைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து பாமகவினர் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மீது வன்னியர் அறக்கட்டளையின் போஸ்டர்களை ஒட்டினார்கள்.

 
 

தாங்கள் ஒட்டிய போஸ்டர்களின் ஈரம் காய்வதற்குள் அதன் மீது பாமகவினர் போஸ்டர் ஒட்டியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், சென்னை -விழுப்புரம் சாலையில் மறியல் செய்யத் திட்டமிட்டுக் குழுமினார்கள். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் ஆனது. இதற்குள் அங்கு வந்த போலீஸார் ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இரண்டு தரப்புமே போஸ்டர் ஒட்டுவதை நிறுத்திவிட்டனர்.

அன்று இரவு எட்டு மணிக்கு, பஸ் நிலையத்திலுள்ள மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அலுவலகத்தில் குழுமி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அப்போது அங்கு வந்த பாமகவினர் கற்களை வீசினர். அதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவ, விஷயம் கேள்விப்பட்டதும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும் ரசிகர்கள் விழுப்புரத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். போலீஸார் அவர்களை ஆங்காங்கே நிறுத்தி சமாதானம் செய்து திருப்பி அனுப்புவதிலேயே இரவு கழிந்தது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா இரவே மாவட்ட மன்றத்தலைவர் இப்ராஹிமை போனில் அழைத்து விசாரித்தார். மறுநாள் காலையிலும் போனில் கூப்பிட்டு, ‘வழக்கு போட்டிருக்கிறார்களா? நம் மன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா?’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இந்த சம்பவங்களையெல்லாம் ரஜினியிடம் கூறி, ‘இனியும் பொறுமை காத்தால் நன்றாக இருக்காது!’ என்று அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து ரஜினியிடம் கிரீன் சிக்னல் கிடைக்க, சத்தியநாராயணா ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை அழைத்து, ‘தலைவரின் வாய்ஸ் வரும் என காத்திருக்க வேண்டாம். அவர்கள் போட்டியிடக்கூடிய ஆறு தொகுதிகளில் ஒன்றில் கூட பாமக ஜெயிக்க விடக்கூடாது!’ என அறிவுறுத்தியதாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் சங்கதிகள் புறப்பட்டது. அதுவே ரஜினியிடமிருந்து ரசிகர்களுக்கு பாமகவிற்கு எதிராக க்ரீன் சிக்னலையும் பெற்றுத்தந்தது. அதன் விளைவே 2004 மக்களவைத் தேர்தலின் போது பாஜகவிற்கான ஆதரவு நிலையை ரஜினியை எடுக்கவும் வைத்தது.

இந்த நேரத்தில் கோவையில் ஒரு லட்சம் வண்ண நோட்டீஸ்களை அச்சடித்திருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். அந்த நோட்டீஸின் மேலே ரஜினி 'பாபா' காஸ்டியூமில் தியானம் செய்கிற மாதிரி படம். கீழே டாக்டர் ராமதாஸ் குரங்கு போல சித்திரிக்கும் ஒருபடம். நோட்டீஸில் வாசகம்:

‘தமிழ் மக்களே, நம்மை காக்க, விதைக்குள் அடைக்கப்பட்ட ஆலமரம் கண் விழிக்கிறது. தயாராகுங்கள். குறிப்பாக புதுச்சேரி, தர்மபுரி, அரக்கோணம், திண்டிவனம், செங்கல்பட்டு, சிதம்பரம் வாழ் தமிழ் மக்களே, உஷராகுங்கள். சுயநலம் தேடி, மரம் விட்டு மரம் தாவும் துஷ்ட மந்தி வருகிறது. தூர விலகுங்கள்!’

இந்த நோட்டீஸ்களை பாமக போட்டியிடும் ஆறு நாடாளுன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களின் வீட்டுக் கதவுகளிலும் ஒட்டப்போவதாகவும் அறிவித்தார்கள் ரசிகர்கள். விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் இப்ராஹிம் தன்னிடம் சத்தியநாராயணா தொலைபேசியில் ஆறுதல் கூறியதையும், ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என காத்திருக்க வேண்டாம். செயலில் இறங்குங்கள் என வாய்மொழி அறிவுறுத்தலையும் ஒப்புக் கொண்டார். ‘பாமக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கக் கூடாது. அதற்கான பணியில் இறங்குங்கள். அதேநேரம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை கூறவில்லை!’ என்றே அவர் உத்தரவு இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த வாரத்தில் விழுப்புரம் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமணம் ஒன்றிற்கு வரும் சத்தியநாராயணா அங்கே ஆறு தொகுதிகளைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அசெம்பிள் ஆக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி கூடும் சமயம் யாருக்கு ஓட்டு என்பதை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் இருந்தது.

பாமகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்களின் திரட்சி இப்படி சென்று கொண்டிருந்த சமயம் ரஜினியை தன் அரசியல் கூடாரத்தில் இழுத்துப் போடுவதற்கான முயற்சியில் இறங்கியிருந்தது பாஜக. பாமகவை எதிர்ப்பது என்றாலே அது பாஜகவை ஆதரவு தெரிவிப்பது போலத்தானே? அதை நேரடியாகவே அறிக்கை மூலம் ஆதரித்து விடலாமே!’ என்று பாஜகவின் டெல்லி தலைமை பீடத்திலிருந்து ரஜினிக்கு நெருக்கமானவர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

05CHRGNRAJINIjpg

ரஜினி - கருணாநிதி சந்திப்பு, அருகில் ஸ்டாலின். | கோப்புப் படம்.

 

ரஜினியும் அவரிடம் கலந்தாலோசனை செய்ததில், அந்தப் பிரமுகரே பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல ஓர் அறிக்கையும் தயாரித்து, அதில் ரஜினியை கையெழுத்திட சொல்லியிருக்கிறார். ரஜினியும் அதில் கையெழுத்திட்டு தந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த ரஜினி மீண்டும் அந்த நபருக்கு போன் செய்து, ‘அந்த அறிக்கையில் சில வார்த்தைகளில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கு. கொஞ்சம் திருப்பி அனுப்புங்கள்!’ என்று கேட்டதாகவும், அதன்படி அந்த நெருக்கமான நண்பரும் அந்த அறிக்கையை திருப்பி அனுப்ப, ரஜினி அந்த அறிக்கையை கிழித்து எறிந்து விட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

‘அந்த நண்பர் மீது ரஜினிக்கு மிகுந்த மரியாதையுண்டு. அதனால்தான் அவர் சொன்னதும் நேரடியாக மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அறிக்கையை திரும்ப வாங்கிக் கொண்டார்!’ என்பதே அந்தத் தகவல்களில் உச்சபட்சமாக கசிந்த விஷயம்.

ஆனால் அப்போது இது சம்பந்தமாக என்னிடம் பேசிய ரஜினி மன்ற பிரமுகர் ஒருவர், ‘ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதையுண்டு. அவர் கூட்டணியில் ராமதாஸ் உள்ளார். பாஜகவை அதிமுக கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளது. இது ரஜினிக்கு சிக்கலான அரசியல் களம். எனவேதான் பாமகவை அது போட்டியிடும் ஆறு தொகுதியை மட்டும் எதிர்த்தாலும், பாஜகவை ஆதரிக்க அவர் மனம் ஒப்பவில்லை!’என்றார்.

இப்படியான சூழ்நிலையில் சில நாட்களில் ரஜினியே விழுப்புரம் சம்பவத்தை ஒட்டி அம்மாவட்டத் தலைவர் இப்ராஹிமை ரஜினி அழைத்துப் பேசினார். வரும் தேர்தல்- பாமக விஷயத்தில் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும். மற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அழைத்துப் பேசுவேன். அதன் பிறகு அறிவிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள்!’ என ஆறுதல்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன.

இது நடந்து ஒரு வாரத்தில் நீலகிரி ரஜினி மன்றப் பொறுப்பாளர்களில் ஒருவரான சுலைமான் என்பவருக்கு திருமணம் நடந்தது. அந்த விழாவிற்கு வந்திருந்தார் சத்தியநாராயணா. அவர் அங்கு செல்வதற்கு முன்னரே கோவை ரஜினி ரசிகர்களுக்கு ஊட்டிக்கு வரச்சொல்லி சிறப்பு அழைப்பு வந்தது. அதையொட்டி கோவையிலிருந்து மட்டும் ஐம்பத்தைந்து ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏக உற்சாகத்துடன் ஊட்டிக்குப் புறப்பட்டனர்.

சுலைமான் திருமணத்தில் கலந்து கொண்ட ரசிகர்களை மாலையில் ஊட்டியில் உள்ள ஒரு தியேட்டர் வராண்டாவில் சந்தித்தார் சத்தியநாராயணா. அப்போது கோவை ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ‘நம் தலைவருக்காக (ரஜினிக்காக) முதன்முதலா போலீஸ் ஸ்டேஷன் போனவங்க நீங்க. உங்க உணர்ச்சி கொந்தளிப்பு தலைவருக்கும் தெரியுது. இருந்தாலும் உங்களைக் கட்டுப்படுத்திக்ட்டு சைலன்டா இருங்க. அதைத்தான் தலைவர் உங்ககிட்ட சொல்லச் சொன்னார். கூடிய விரைவில் இப்ராஹிமை சந்தித்தது போலவே உங்களையும் தலைவர் சந்திப்பார். அதற்குள் அதிமுக கூட்டணிப் பங்கீடும் நடந்து முடியட்டும். அதற்குப் பின்னால் உங்களுக்கு தலைவர்கிட்ட இருந்து நல்லதொரு அறிவிப்பு வரும்!’ என்பதே அப்போது அவர் அறிவுறுத்தலாக இருந்தது.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.