Jump to content

“சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்”


Recommended Posts

“சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்”

நிலாந்தன்..

ilanthan.jpg?resize=800%2C667
தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை.இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஸங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை. இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஸமாகிய ‘தூய கரம் தூய நகரம்’ என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது. அதுபோல சங்கரி- சுரேஸ்- சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் ‘மாவை வைத்திருக்கும் ஐந்து தம்பிகள்’ என்ற கதை அதிகம் கேட்டுச் சிரிக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். இப்படி ஆக்கத்திறன் மிக்க அல்லது சிரிக்கத் தூண்டும் சூடான பிரச்சாரப் போரை தேர்தல் களத்திற்பரவலாகக் காண முடியவில்லை.

வாக்காளர்கள் மத்தியில் ஒருவித ஆர்வமின்மையும், சோர்வும், பின்வாங்கும் இயல்பும் காணப்படுவதாக வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் கூறுகிறார்கள். மக்கள் மத்தியில் இப்படியொரு சோர்வு தோன்றுவது இதுதான் முதற்தடவையல்ல. கடந்த பொதுத் தேர்தலின் போதும் இப்படியொரு சோர்வு காணப்பட்டது. ஆனால் தேர்தலன்று வாக்களிப்பு உற்சாகமாக நடைபெற்றது. எனவே இப்பொழுது வாக்காளர்கள் மத்தியில் காணப்படும் சோர்விற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. மக்கள் ஏற்கெனவே முடிவெடுத்து விட்டார்கள். எனவே பிரச்சாரங்களைக் கேட்பதிலோ, வேட்பாளர்களை சந்திப்பதிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை.

2. கடந்த எட்டாண்டுகளில் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. இவற்றினால் எதுவும் கிடைக்கவில்லை என்று மக்கள் நம்புகிறார்கள்.

3. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அல்லது குறைந்த பட்சம் ஒரு வாக்குத் திரட்சியாக மாற்றுவதற்கு உரிய தலைமைத்துவமோ, கட்சிகளின் கூட்டோ இல்லை. இந்த வெற்றிடம் மக்களை சலிப்படைய வைக்கிறது.

4. கூட்டமைப்பிற்கு எதிரான அணிக்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஆண்டில் மிக உயர்வாகக் காணப்பட்டது. ஆனால் அவர் ஓர் அமுக்கக் குழுவாக மட்டுமே தொழிற்படுவார். அல்லது கட்சிக்குள் ஒரு நொதியமாகத்தான் தொழிற்படுவார். அதற்குமப்பால் ஒரு பலமான எதிரணியைக் கட்டியெழுப்பி அதற்கு தலைமை தாங்கமாட்டார் என்று ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் விக்னேஸ்வரனை நோக்கித் திரண்டு வந்த எதிர்பார்ப்புக்கள் யாவும் இப்பொழுது வடியத் தொடங்கிவிட்டன.

5. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தில் ஒப்பீட்டளவில் நிம்மதியான ஒரு சூழல் ஏற்படும் பொழுது குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின் அப்படியொரு சூழல் உருவாக்கப்பட்ட பொழுது மக்கள் மெல்ல மெல்ல அரசியல் நீக்கம் செய்யப்பட்டு அரசியலில் ஆர்வமற்றவர்களாக மாறி வருகிறார்கள். தவிர அவர்களை அரசியல் நீக்கம் செய்வதற்கென்றே பல தரப்புக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக ஏற்கனவே எடுக்கப்பட்ட மாறா முடிவுகளோடுள்ள வாக்காளர்களை அல்லது அரசியல் ஆர்வமற்றுக் காணப்படும் வாக்காளர்களைக் கொண்ட மந்தமாகக் காணப்படும் ஒரு தேர்தல் களத்தில் கடந்த செவ்வாய்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில்; கூடிய மக்கள் திரள் எதிர் பார்க்கப்படாத ஒன்றுதான்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியராக இருக்கும் பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி சொர்ணராஜா உரையாற்றினார். அவரோடு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரனும் உரையாற்றினார். இவ்விரு உரைகளுக்கும் பின்; விக்னேஸ்வரன் தொகுப்புரை வழங்கினார். அதன்பின் கேள்வி, பதில் இடம்பெற்றது.

எழுநூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் பங்குபற்றினார்கள். இக்கூட்டம் முதலில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால் இது தேர்தல் காலம் என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையகத்திற்கு யாரோ முறைப்பாடு செய்ததாகவும் அதையடுத்து தேர்தல் ஆணையகம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட கூட்டத்தை நடத்தினால் அது சில கட்சிகளுக்கு ஊக்குவிப்பாகவும் சில கட்சிகளுக்கு பாதகமாகவும் அமையலாம் என்ற தொனிப்பட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். இது காரணமாக இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தியதை அடுத்து உபவேந்தர் கைலாசபதி கலையரங்கைத் தருவதற்கு மறுத்து விட்டார். அதனாலேயே கூட்டம் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.வீரசிங்க மண்டப நிர்வாகத்திற்கும் இப்படியொரு கடிதம் அனுப்பபட்டதாம். சிலவேளை அது கைலாசபதி கலையரங்கில் நடந்திருந்தால் இந்தளவிற்கு மக்கள் திரள் கூடியிருக்குமா? என்ற கேள்வியும் உண்டு. அக்கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது ஒரு சர்ச்சையாக்கப்பட்டது அவ்வளவு தொகை மக்கள் கூடியதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில்பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதையும் தாண்டியவர்கள். கூட்டம் 4 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல முதியவர்கள் 3 மணிக்கே மண்டபத்தில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். பேரவையின் தீர்வு முன்மொழிவை வெளியிட்டு வைத்த கூட்டத்திலும் இப்படித்தான் நடந்தது. செவ்வாய்க்கிழமைக் கூட்டத்தில் இளைஞர்களின் பிரசன்னம் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டது.பெண்கள் தொகை அதைவிடக்குறைவு.

கூட்டத்தில் பேசிய பேராசிரியர் சொர்ணராஜா பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றுவதுண்டு என்று கூறப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு ‘தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேசச் சட்டம்’ என்பதாகும். மூன்று களங்களினூடாக சர்வதேசச் சட்டத்தை கேடயமாக மாற்றலாம் என்று அவர் பேசினார். உலகளாவிய் மனிதாபிமானச் சட்டங்கள், பலமடைந்து வரும் தமிழ் டயஸ்பொறா, நிலைமாறுகால நீதி ஆகிய மூன்று களங்களினூடாக தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். அரசற்ற தரப்புக்களுக்கு சாதகமாக அனைத்துலகச் சட்டக்கட்டமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும்ஈழத் தமிழர்கள் தமக்குரிய நீதியைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு தொனி அவருடைய உரையில் இழையோடியது. தன் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்துவதற்கு பேராசிரியருக்கு தடைகள் இருந்ததாகவும் தோன்றியது.அவர் தனது தர்க்கத்தைச் செறிவாகவும் அழுத்தமாகவும் கட்டியெழுப்பவில்லை என்று சில கூர்மையான அவதானிகள் கருத்துத்; தெரிவித்தார்கள்.அதன் விளைவாகவே அவரை நோக்கிக் கேட்கப்பட்ட முதற் கேள்வியும் அமைந்திருக்கலாம். அனைத்துலகச் சட்டங்களை அமுல்படுத்தும் தரப்பு எது?என்பதே அக்கேள்வியாகும்.அது ஆங்கிலத்தில் கேட்கபட்டது.

மற்றொரு பேச்சாளரான குருபரன் இடைக்கால அறிக்கை தொடர்பில் உரையாற்றினார். ‘மாயைகளைக் கட்டுடைத்தல்’ என்பது அவருடைய தலைப்பு. ஒரு சட்டச் செயற்பாட்டாளராக அவர் இடைக்கால அறிக்கை மீதான விமர்சனங்களை தர்க்க பூர்வமாக முன்வைத்தார். அவருடைய தர்க்கம் பெருமளவிற்கு சுமந்திரனை அம்பலப்படுத்துவதாக இருந்தது. அவர் சுமந்திரனின் பெயரை நேடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் சுட்டிக்காட்டிய அநேக விடயங்கள் ஏற்கெனவே சுமந்திரன் முன்வைத்திருக்கும் தர்க்கங்களைமறுப்பவைதான்.

முதல்வரின் தொகுப்புரையில் அவர் கூட்டமைப்பை மறைமுகமாகச் சாடிய போதெல்லாம் கைதட்டல் எழுந்தது. குருபரன் பேசிய பொழுதும் இது நடந்தது. கைதட்டல்களால் முதல்வர் மேலும் உற்சாகமடைந்தவராகக் காணப்பட்டார். தனது விமர்சனங்களை மறைமுகமாக ஆனால் கூர்மையாக முன்வைத்தார்.; படைக்கட்டமைப்பில் உள்ள எல்லாரையும் தாங்கள் குற்றவாளிகளாகக் கூறவில்லையென்றும் அதிலுள்ள சில காவாலிகளையே தண்டிக்கக் கேட்பதாகவும் அவர் உரையாற்றினார். ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. ஸ்ரீலங்காப் படைத்துறையில் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் செய்த குற்றங்களா அவை? அல்லது ஒட்டுமொத்த படைக் கட்டமைப்பின் யுத்தக் கொள்கையின் விளைவாகத்தான் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டனவா?;. ஏற்கெனவே ஐ.நா போன்ற உலகப் பொது அமைப்புக்கள் போர்க்குற்றஙக்ளை ஒரு கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட குற்றங்களாகவே வகைப்படுத்தியுள்ளனவே?.
கேள்வி கேட்கலாம் என்று முதல்வர் அறிவித்ததும் கூட்டத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் எழுந்து சென்று விட்டார்கள். அவர்களிடம் ஒன்றில் கேள்விகள் இல்லை. அல்லது அவர்கள் கேள்வி கேட்க விரும்பவில்லை. அல்லது அவர்கள் இருள முன் வீடு திரும்ப வேண்டியிருந்தது. அலுவலகத்தை முடித்துக் கொண்டு கூட்டத்திற்கு வந்தவர்கள் இருட்டுவதற்கு முன் வீடு திரும்பப் புறப்பட்டு விட்டார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மக்கள் பேரவையில் ஓரணியில் நின்று உள்ளூராட்சித் தேர்தலோடு இரு வேறு அணிகளாகப் பிரிந்த சுரேசும், கஜனும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.ஆனால் இருவரும் இரு வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களில் சிவாஜிலிங்கம் வந்திருந்தார். மிகச் சோர்வாகக் காணப்படும் ஒரு தேர்தல் பிரச்சாரக் களத்தில் இப்படியொரு கூட்டத்திற்கு இவ்வளவு தொகை மக்கள் திரண்டனர் என்பது எதைக் காட்டுகிறது?

மக்கள் எதையோ வித்தியாசமாகக் கேட்க விரும்புகிறார்கள். அவர்கள் எதிர்க் கருத்துக்களால் அதிகம் கவரப்படுகிறார்கள். இடைக்கால அறிக்கையை உருவாக்கிய தமிழ்த் தலைமைகள் மீது அவர்கள் அதிருப்தியோடு காணப்படுகிறார்கள். அத் தலைமைகளை விமர்சிக்கும் போதெல்லாம் அவர்கள் உற்சாகமாகக் கை தட்டுகிறார்கள். இந்த உற்சாகத்தையும், எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஒருமுகப்படுத்தி அதற்கு தலைமை தாங்க ஒரு ஜனவசியமிக்க பேராளுமை இல்லையென்பதே இப்போதுள்ள பிரச்சினையெல்லாம். அப்படி ஒரு பேராளுமை மேலெழுந்தால் அது கூட்டமைப்பின் இடத்தை பிரதியீடு செய்யக்கூடும். அப்படி ஒரு பேராளுமையாக மேலெழுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்னெஸ்வரன் தொடர்ந்தும் தளம்பிக்கொண்டிருக்கிறார். இதனால் இப்பொழுது அவருக்கு கிடைக்கும் கை தட்டல்கள் வாக்குகளாக மாறும் என்று முடிவெடுப்பது கடினம். மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு காணப்படுவது கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கே சாதகமாக மாறியது. இம்முறையும் அப்படி நடந்துவிடக்கூடும். இது தொடர்பில் ஒரு தீவிர அரசியற் செயற்பாட்டாளர் ஓரு தமிழ் நாட்டு உதாரணத்தைச் சுட்டிக் காட்டினார்.

2011 ஆம் ஆண்டு தமிழகத்தேர்தல் களத்தில் வடிவேலு பேசிய பொது அவருடைய கூட்டங்களுக்கு பெருந் தொகையான மக்கள் திரண்டு வந்தார்கள் அக்கூட்டம் கருணாநிதிக்குக் கூடிய கூட்டத்தை விடக் கூடுதலாக காணப்பட்டது என்றும் கூறப்பட்டதுண்டு. ஆனால் அக் கைதட்டல்கள் எவையும் வாக்குகளாக மாறவில்லை. எனவே கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பதை விடவும் அம்மக்களை ஆதரவுத்தளமாக அல்லது வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதே இங்கு மிகவும் முக்கியம்.விக்னேஸ்வரன் இந்த தேர்தல் அரசியல் சூக்குமத்தை விளங்கி வத்திருக்கிறாரா?

கடந்த ஆண்டு விக்னேஸ்வரனைக் கவிழ்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்தபோது ஒருதொகுதி அரச ஊழியர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய சமகாலத்தில் படித்தவர்கள்.இவர்களில் ஒருதொகுதியினர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான அணி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கட்டுரையாசிரியரை அணுகினார்கள். ஒரு தனிநபரை மையப் படுத்துவதை விடவும் ஒரு கொள்கையை மையப்படுத்தி ஒரு அமைபாகுவதே நல்லது என்று அவர்களுக்கு கூறினேன் .அவர்களும் மாற்றத்துக்கும் பொறுப்புக் கூறலுக்கும் வெளிப்படத் தன்மைக்குமான ஓரமைபை உருவாக்க ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஓர் அமைப்பாகத் திரள முன்னரே விக்னேஸ்வரன் தான் கட்சித் தலைமைக்கு எதிராக ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க மாட்டார் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் சோர்ந்து போனார்கள் .எனினும் மறுபடியும் ஏதோ ஒரு நம்பிக்கையோடு முயற்சித்தார்கள்.அனால் அந்த இடையூட்டில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களில் சிலர் எதிரணியைச் சேர்ந்த கட்சியொன்றில் இணைந்து விட்டார்கள்.கூட்டமைப்புக்கு எதிரான உணர்வலைகள் உரிய காலத்தில் உரிய விதத்தில் ஒன்று திரட்டப்டாத வெற்றிடத்தில் அவர்களுக்கு வேறு மாற்று வழி இருக்கவில்லைப் போலும். அவர்களைப் போலவே ஆங்காங்கே கிராம மட்டத்தில் சிறியதும் பெரியதுமான ஆதரவு அணிகள் விக்னேஸ்வரனை நோக்கி திரண்டன. ஆனால் அவர் முடிவெடுக்கத் தயங்கிய ஒரு பின்னணிக்குள் இந்த ஆதரவு அணிகளில் பல கலைந்து போய் விட்டன.

இப்பொழுது விக்னேஸ்வரன் ஒரு மக்கள் மைய அமைப்பைப் பற்றி அதிகம் பேசி வருகிறார். அது தொடர்பாக அவரிடம் ஏதும் அரசியல் தரிசனங்களோ, வழிவரைபடமோ உண்டா? தேர்தல்அரசியலுக்குள் வராத ஒரு மக்கள் மைய அமைப்பை கட்டியெழுப்புவதென்றால் அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும், சித்தாந்தத் தெளிவும் அரசியற் திடசித்தமும் விக்னேஸ்வரனிடம் உண்டா? மக்கள் இயக்கங்களைக் குறித்த தகவல் யுகத்து அனுபவங்களை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்? தேர்தலில் ஈடுபடாமல் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வெகுசன மைய அரசியலொன்றுக்கு அவர் தலைமை தாங்கத் தயாரா?ஒரு பிரமுகர் மைய அமைப்பாகக் காணப்படும் பேரவையை ஒரு மக்கள் மைய அமைப்பாகக் கட்டியெழுப்புவது எப்படி? எப்பொழுது?

நிலாந்தன்..

http://globaltamilnews.net/2018/62467/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.