Jump to content

ஸ்துதி - சயந்தன்


Recommended Posts

ஸ்துதி - சயந்தன்

ஓவியம்: ரமணன்

 

லங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை.   

p106a.jpg

 நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது.

 அன்றைக்கு நான் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு ஓட்டோவில் பயணித்தபோது, கறுப்பு நிற டெனிம் ஜீன்ஸும் கறுப்புநிற ரிசேர்ட்டும் அணிந்திருந்ததாக நினைவு. என்னுடைய அக்காலத்துத் தோற்றங்களில் வெறும் இருபது, இருபத்
தொரு வயதுப் பையன் என்பதைக் கண்டு பிடிப்பது சற்றுச் சிரமமாயிருந்ததாகவே பேசிக்கொள்கிறார்கள் அல்லது அந்த ஓட்டோக்காரனுக்கு இருபது, இருபத்தொரு வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லா
மலுமிருந்திருக்கலாம். அவன் இரண்டொரு தடவை பின்பக்கப் பார்வைக் கண்ணாடிக்குள்ளாக என்னுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு, “பொஸ், நல்ல குட்டிகள் இருக்கு. போகப் போறீங்களா..” என்று வெடுக் என்று கேட்டான். பதறிப்போனேன். ‘இப்படி டக்கென்று கேட்டால்..?’ ஆயினும், இன்னதெனத் துலக்கமில்லாத ஏதோவொரு காரணத்தினால், ‘இல்லை போவதில்லை’ என்ற இறுதி முடிவை இரண்டொரு கணங்களிலேயே எடுத்திருந்தேன். அதை சட்டென்று அறிவித்துவிடவில்லை. அதுபற்றி துருவித் துருவி அறிய விரும்பியதில் ஒருவிதக் கிளர்ச்சியிருந்தது.

  “அவங்க எங்கையிருக்கிறாங்க...”

“நீங்க ம் என்று சொல்லுங்க பொஸ், கூட்டிட்டுப் போறேன்...”

 “ரஷ்யன்காரிகளா..?”

“இல்லை பொஸ், சிங்களக் குட்டிகள்.”

“ப்ச்.. பொலிஸ் பிடிக்கும். வேணாம்.”

“அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை பொஸ். முழுப் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம்.”

 “எத்தனை வயசிருக்கும்..?”

“நீங்க விரும்பிற வயசில... இருபதென்றால் இருபது, பதினெட்டென்றால் பதினெட்டு, இல்லை... முப்பதுதான் வேணுமென்றால் முப்பது. நீங்க சொல்லுங்க.”

நான் விலுக் என்று தலையுயர்த்தினேன். பிறகு எச்சிலை விழுங்கிக்கொண்டு அமைதியாகினேன். ஓட்டோ கொள்ளுப்பிட்டியை நெருங்கிக்கொண்டிருந்தது. “இல்லை, வேண்டாம். இதில நிப்பாட்டுங்க, நான் இறங்கிறன்.”

“ஏன் வேணாம் பொஸ்.”

“ஏனென்றால், எனக்கு சிங்களம் தெரியாது.”

ஓட்டோக்காரன் தலையிலடித்துக் கொண்டான். ஆனால், அந்தச் சம்பவம்  ஓர் அருட்டலாக நினைவுகளில் தேங்கிய படியே கிடந்தது. அன்றைக்கு அவன் கேட்டபோது போயிருந்தால்... என்ற கற்பனை தீண்டும். ஒரு பூனையைப்போல பின்னிரவுகளில் படுக்கைக்கும் கழிவறைக்கும் நடந்திருக்கின்றேன். “இருபதென்றால் இருபது... பதினெட்டென்றால் பதினெட்டு...” குரல் பின்தொடர்ந்து அலைக்கழிக்கும்.

 இன்றைக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு, சிலோன் ஸ்பா விடுதிக்கு முன்னால் காத்திருக்கின்ற துணிச்சல் அன்றைக்கு வாய்த்திருக்கவில்லை. ஒருவேளை வயது அதற்கொரு காரணமாயிருக்கலாம். அதற்குச் சாத்தியமுண்டு. பின்வாங்கும் இயல்பும், தனித்திருப்பதுவும், அகவயமாகச் சுருண்டிருந்ததுமான என்னுடைய மனநிலை சற்று முன்னகர்ந்திருந்தது. புதிய பணியிடத்துச் சூழலில் அதைத் தெளிவாக உணர்ந்தேன்.

கொள்ளுப்பிட்டியில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அருகாக ஜெர்மன் துாதுவராலயத்திற்கு நேர் முன்னாக உயர்ந்திருந்த கட்டடத்தில் நிறுவனத்தின் பெயரும், கீழே ‘எதிர்காலம் இன்றே’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த அலுவலகத்தில் முதன்முதலாகப் பணி கிடைத்தது. என்னைச் சுற்றிலும் முற்றிலும் சிங்கள நண்பர்களாயிருந்தார்கள். ஆயினும் மேனக என்ற என்னைவிடவும் மூன்று வயதுகளே அகதிகமாயிருந்த மேலதிகாரிப் பெண் என்னை வைத்துக்கொண்டு வேறெ
வருடனும் சிங்களத்தில் பேசியதில்லை. சற்றுக் கடுமையாகத் திட்ட வேண்டியிருந் தால்கூட, தன்னுடைய சிற்றறைக்குள் பவ்வியமாக அழைத்தாள். அவளுடைய திட்டுக்களை ஒரு பிடித்த பாடலைக் கேட்பதைப்போல செவிமடுத்தேன்.   

p106c.jpg

சந்தன என்கிற என் வயதுக்காரன், வெளியே விருந்துக் கொண்டாட்டங்களுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், வீதிச் சோதனைச் சாவடிகளில் எனது அடையாள அட்டையைச் சந்தேகத்தோடு பார்க்கும் இராணுவக்காரனிடம் எதையோ சிரித்துப் பேசி அதை வாங்கித் தருவான்.

 சஜீனி, அவள் பிரியாவிடை பெற்ற சமயத்தில் நம் எல்லோருடையதுமான ஒரு பரிசுப்பொருளை என்னுடைய கையிலிருந்து பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டு வாங்கிக்கொண்டாள். அவள்தான் முதன்முதலில் தாய்மை, காதல் முதலான எதுவுமின்றி என்னைக் கட்டியணைத்த முதற்பெண் அல்லது இதிலேதேனும் ஒன்று இருந்திருக்கவும் கூடும். ஏனெனில், அது கதகதப்பான அணைப்பாகவிருந்தது.

 சரத்பொன்சேகா மீது குண்டு தாக்குதல் நடைபெற்ற அன்று, தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிய மேனக, வழியில் பகிர்ந்துகொண்ட பகிடிதான் ஒரு பெண் முதன்முதலில் என்னோடு பகிர்ந்துகொண்ட பாலியல் பகிடி. எப்போதும் என்னுடைய முகத்திலிருக்கும் சூக்குமம் நிறைந்த மர்மப் புன்னகை அன்றைக்குத்தான் உடைந்து பெரும் சிரிப்பானது. பிரேமதாசாவின் நாக்கை பிளேடு துண்டித்த பகிடியொன்றை இரண்டொரு நாள்கள் கழித்து அவளுக்குச் சொன்னேன். அது தனக்கு முன்னரேயே தெரியுமென்றும் ஆனால், அதில் ஜெயவர்த்தனவின் நாக்கே துண்டிக்கப்பட்டதென்றும் சொல்லிச் சிரித்தாள்.

 எனக்கு மேனகமீது ஒருவித ஈர்ப்பிருந்ததாக ஒருநாள் தோன்றிற்று. அப்படியெதுவுமில்லை என்று இன்னொரு நாள் தோன்றிற்று. இவையெல்லாம் சர்வ சாதாரணமான எண்ணங்கள் என்பதை அவளும் உறுதிப்படுத்தினாள். ஒருநாள் மாலை, தேனீர் அருந்தியவாறே “ஹேய்.. எனக்கு உன்மீது காதலென்று எதுவும் இல்லை. உண்மையில் நான் இன்னொரு வனைத் தீவிரமாகக் காதலிக்கவும் செய்கிறேன். ஆனாலும், அன்றைக்குச் சஜீனி உன்னைக் கட்டியணைத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது. ஏன்?” என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். எனக்குத் தேனீர் புரைக்கேறியது. சிரித்தேன். வழமைபோல அதில் கவிந்திருக்கிற வெட்கம் இல்லாத முதல் சிரிப்பு. “நானும் உங்களைக் காதலிக்கவில்லை. ஆனாலும், நீங்கள் யாரையோ காதலிக்கிறீர்கள் என்று சொல்லும்போது எனக்கு ஏன் பொறாமையாகவிருக்கிறது?” மேனக சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

 இன்றைக்குச் சனிக்கிழமை, அலுவலக நேரத்தின் பிறகு முகாமைத்துவப் பிரிவில் யாரோ ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கீழ்த்தளத்தில் நடந்தது. இராஜ்ஜின் அஹங்கார நகரே என்ற சிங்களப் பாடல் காதைக் கிழிக்கிற மாதிரி ஒலித்துக்கொண்டிருந்தபோது, மேனக தன்னுடைய காதலனுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள். கூச்சலாக இருந்தது. ஒதுங்கி நின்றேன். கொண்டாட்டத்தின் பிறகு நானும் சந்தனவும் ஒரு மதுபான விடுதிக்குச் சென்றோம். அவனே தயங்கிய என்னை வற்புறுத்தி அழைத்தும் சென்றான். நான் பியர் அருந்தத் தொடங்கிச் சில காலங்களே ஆகியிருந்ததனால், கசப்பு மருந்தை அருந்துவதைப்போலவே வாயைக் கோணிக்கொண்டிருந்தேன். “மச்சாங் இன்னொரு கிளாஸ்” என்று தொடர்ந்து வருவித்துக்கொண்டேயிருந்தான். ஒரு தொடர்ச்சியில்லாமல் துண்டு துண்டாக நிறைய பேசினோம். எல்லாமும், பெண், பெண் உடல், காமம் என்ற பரப்பிற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது. “யாராவது பெண்ணைப் புணர்ந்திருக்கிறாயா” என்று கேட்டான். நான் பதிலேதுமின்றி சந்தனவின் கண்களை வெறித்துச் சிரிக்கத் தொடங்கியபோது “போதும்” என்று என்னுடைய கிளாஸிற்குள் பியரை ஊற்றுவதை அவனாகவே நிறுத்தினான். மிதப்பான நடையுடன் வெளியேறினோம்.

 “ஒரு ஓட்டோ பிடித்துவிடு சந்தன. நான் போய்க்கொள்கிறேன்” நான் அர்த்தமற்றுச் சிரித்தவாறே கேட்டேன்.

“நிதானமாக இருக்கிறாயா...”

“நிறைய...”

“சரி...”

எதிர்ப்பட்ட ஓட்டோ ஒன்றை மறித்து ஏறிக்கொண்டேன். கண்கள் நித்திரையில் துஞ்சினவா, போதையா என்று தெரியவில்லை. விழிகள் உட்புறமாகத் திரும்பி மண்டை ஓட்டுக்குள் ஒரு குட்டித்திரையில் காண்பதைப்போல காட்சிகள் மாறி மாறித் தோன்றின. மேனக காதலனுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள். மேனக, ஒரு சிறிய தவறுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். மேனக, நானிருக்கும்போதே, காதலனுடன் சிங்களத்தில் பேசினாள். மேனக காதலனின் கைகளை இறுகப் பற்றியிருந்தாள். நான், “உங்களுக்குத் தெரிந்த விலை உயர்ந்த மசாஜ் சென்ரர் ஏதாவது இருக்கிறதா” என்று உரத்த தொனியில் ஓட்டோக்காரனிடம் வினவினேன்.     p106d.jpg

சிலோன் ஸ்பாவின் கண்ணாடிக் கதவினைத் திறந்துகொண்டு வெளியேறிய ஓட்டோக்காரன் ஒரு துயரச் செய்தியைப் பகிரும் முகபாவத்தோடு, “இங்கே வருவதென்றால் நேர காலத்தோடு பதிவுசெய்ய வேண்டுமாம். இப்போது இடமில்லை என்கிறார்கள்” என்றான்.

 “ஓ...” குரலின் சரிவைச் சுதாகரித்து நிமிர்த்திக் கொண்டேன். “பரவாயில்லை. நீங்கள் என்னுடைய வீட்டிற்குச் செல்லுங்கள்.”

“சரி”  ஓட்டோ உயிர்த்துச் சில மீற்றர்களே சென்றிருக்கும்.

“உங்களுக்குத் தெரிந்த வேறு மசாஜ் விடுதிகள் இருக்கின்றனவா..?”

“ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். இம்மாதிரியான பெரிய விடுதிகளில் எப்போதும் முன்பதிவு செய்துவிட்டுத்தான் வர வேண்டும். மேலும், இம்மாதிரிப் பெரிய விடுதிகளில் உண்மையிலேயே மசாஜ் மட்டும்தான் செய்வார்கள். வேறு சிறிய விடுதிகளுக்குப் போவோமா...”

 “சரி...” - ஓட்டோ நீண்ட தூரம் ஓடி ஒரு தெரு முகப்பில் நின்றது. “இருங்கள், நான் போய்க் கேட்டு வருகிறேன்.”  ஓட்டோக்காரன் இறங்கினான்.

“உனக்குத் தெரிந்த இடமா”

“இல்லை, ஆனால் உங்களை நான் அறிமுகப்படுத்தினால், எனக்குக் கொஞ்சம் கொமிஷன் கிடைக்கும். உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே.”

“இல்லை.” அவன் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, “இங்கும் இல்லை யென்றால் பரவாயில்லை. நாம் வீட்டுக்குப் போவோம்” என்று சொன்னேன். சுற்றி நோட்டமிட்டேன். நேரத்தைப் பார்த்தேன். இரவு பதினொரு மணியாகியிருந்தது. தெருவில் நடமாட்டங்கள் குறைந்திருந்தன. தனிமையுணர்வாயிருந்தது. ஓட்டோக்காரனை அழைத்து வீட்டுக்குச் சென்றுவிடலாமென்று தோன்றியது. அப்போது அவன் சிரித்த முகத்துடன் திரும்பினான். “வீட்டுக்குச் செல்வோம்” என்றேன்.
அவன், “வாருங்கள்...” என்றான். 

மெள்ள இறங்கி அவனைப் பின்தொடர்ந் தேன். மிக ஒடுங்கி மேலேறிச் செல்லும் படிகளில் நடந்தோம். இரண்டாவது மாடியில் ஒரு வீட்டின் முன்வாசலைப் போலிருந்த கதவில் தட்டினான். கதவில் மனித உடலின் பாகங்களும், மசாஜ்ஜின் வகைகளும் அவற்றுக்கான பிரத்தியேகப் பெயர்களும் ஒட்டப்பட்டிருந்தன. என்னை சிரத்தையெடுத்து இயல்பாக்கிக்கொண்டு நுழைந்தேன். ஒரு மருத்துவ நிலையத்தின் வரவேற்பறை போலிருந்தது. வரவேற்பு மேசையிலிருந்த பெண் பசையாக அப்பிய சிவப்புச் சாய உதடுகளை விரித்துச் சிரித்தாள். நான் கதிரையொன்றில் அமர்ந்து கொண்டேன். அப்பொழுது இதயத்துடிப்புகள் எண்ணிக் கணக்கிடக் கூடியனவாக இருந்தன. அவள் என்னைக் கண்களால் சுட்டி, எதையோ ஓட்டோக்
காரனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இவர் பொலிஸ் துறையைச் சேர்ந்தவர் இல்லைதானே’ என்று கேட்கிறாள்போல என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அவள் என்னை அழைத்தாள். ஓட்டோக்காரன் விடைபெற்றபோது என்னைத் தனியே விட்டுவிட்டுப்போகின்ற அந்தரமாயிருந்தது. அவன் செல்லும் திசையையே பார்த்தபடியிருந்தேன். அவள் ஒரு பதிவுப் புத்தகத்தை விரித்து “பெயர் என்ன?” என்றாள். 

“சசீவன்” என்றேன். பிறகு அவனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டேன். அடையாள அட்டையைக்        கேட்டுவிடுவாளோ என்று தோன்றியது. 

“2,000 ரூபாய்” என்றாள். எடுத்துக் கொடுத்தேன். ஒருமுறை உள்ளே சென்று வந்தவள், “போய் ஒருவரைத் தெரிவு செய்” என்று வழியைக் காட்டினாள். என் கால்கள் மெள்ளத் தள்ளாடுவதை உணர்ந்தேன். தண்ணீர் விறாய்த்தது. எத்தனை தடவைக்கு எச்சிலை விழுங்குவது..? அவளுக்குத் தலையாட்டிவிட்டு நுழைந்தேன். வேண்டுமென்றே குறைத்துக் கசியவிடப் பட்ட வெளிச்ச அறைக்குள் எத்தனை பெண்கள் இருந்தார்கள் என்பதை இன்றுவரைக்கும் நினைவுப்படுத்த முடிய
வில்லை. ஏழு பேராவது இருந்திருக்கக்கூடும். வாசலில் தொங்கிய திரைச்சீலையை விலக்கி நான் நுழைந்த கணத்தில் என் பார்வை எவளில் முதலில் படிந்ததோ அவள் மூக்குத்தி அணிந்திருந்தாள். அவளை நோக்கிக் கையை நீட்டினேன்.

தனித்தனிக் கூடுகளைப் போன்ற ஒடுங்கிய, திரைச்சீலைகளால் வாசல் அடைக்கப்பட்ட அறைகளைத் தாண்டி மூக்குத்திக்காரிக்குப் பின்னால் நடந்தேன். மஞ்சள் வண்ண ரீ சேர்ட் அணிந்திருந்தாள். அங்கிருந்த பெண்கள் எல்லோருமே ஒரு சீருடையைப்போல அதை அணிந்திருந்தார்கள். கறுப்பு நிற டெனிம் ஜீன்ஸ். இவள் டெனிமின் பின் பொக்கற்றில் தன்னுடைய கைப்பேசியைச் செருகியிருந்தாள். சொனி எரிக்சன் மொடல்.

 ஒடுங்கிய கூடத்திற்குள் நுழைந்து அவளைத் தாண்டி மிகக் கிட்டத்தில் முகத்தைப் பார்த்தேன். ஒரு படலம்போல பவுடர் பூச்சிட்டிருந்தாள். அவளுடையது எவரையும் நினைவுபடுத்தாத தனித்துவ முகம். மை பூச்சு எதுவுமின்றியிருந்த கண்கள் மிகக் கூர்மையானவையாக இருந்தன. ம்... அவளுக்கு முகத்தினின்றும் விழிகளைத் தாழ்த்தவைக்கும் முனைப்புள்ள மார்புகளிருந்தன, எனக்கு மிக அருகில்.

 “தண்ணீர் கிடைக்குமா..?” தாகத்தைச் சைகையினால் கேட்டேன். வெளியேறி, சற்று நிமிடத்தில் பளிச்சிட்ட கண்ணாடிக் குவளையில் நீர் வார்த்து வந்தாள். முழுவதையும் குடித்து முடித்தேன். அவளுக்குத் தாய்மொழி என்பதால் சிங்களம் சரளமாகத் தெரிந்திருந்தது. ஆங்கிலத்தை உடைத்து உடைத்துப் பேசினாள்.

“நீ எங்கிருந்து வருகிறாய்?”
 
“இந்தியாவிலிருந்து” பொய் சொன்னேன்.

பிறகு ஏனோ துணுக்குற்று, “அங்கே பெங்களுர் தெரியுமா... அங்கேயிருந்து” என்றேன்.  நானொரு தமிழன் இல்லையென்று உணர்த்துவதைத் தமிழுக்குச் செய்கின்ற ஒரு கடமையைப்போலச் செய்தேன்.

  அவள் உதட்டைப் பிதுக்கி, “எனக்கு இந்தியாவைத் தெரியும். போன வாரமும் ஒருவன் வந்தான்.”

 “இப்போது  நான் என்ன செய்ய வேண்டும்..?”

 “ஆடைகளைக் களைந்துவிட்டு இதில் குப்புறப் படு.” வெற்றுக்குரல். அவள் நேரத்தைப் பார்த்தாள். “பத்து இருபதுக்கு ஆரம்பிக்கிறேன். பதினொன்று இருபதுக்கு முடியும்.” மூன்று தைலப் போத்தல்களைக் கையில் எடுத்தாள். நான் திரும்பி நின்று ஆடை களைந்தேன். ஆஸ்பத்திரிகளில் பயன்படும் ‘நோயாளி காவி’ போலிருந்த ஒராள் அளவே குறுகியிருந்த கட்டிலில் கைகளை மேற்குவித்துக் கவிழ்ந்தபோது ‘அரோகரா’ என்று புன்னகைத்துக்
கொண்டேன். வெண்ணிறத் துணியொன்றை இடுப்பில் போர்த்தியவள் என்னுடைய வலது கணுக்காலை இரு கைகளாலும் அழுத்தத் தொடங்கினாள். “முதல் இருபது நிமிடம் மசாஜ் செய்வோம். பிறகு எக்ஸ்ரா சேர்விஸ்...”

முதலிரண்டு நிமிடங்களிலேயே அவள் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட உடல் பிடிப்பாளர் அல்ல என்று தெரிந்துவிட்டது. கறுவா மணத்திலிருந்த தைலத்தைக் கைகளில் கொட்டி அப்படியும் இப்படியுமாகக் காற்தசையை அழுத்தியபடியிருந்தவளுக்கு முதல் 20 நிமிடங்களைப் போக்குவதுதான் இலக்காக இருக்கக்கூடும். ஒருவித சலிப்பினால் ஆளப்பட்டேன். “நான் திரும்பிப் படுக்கலாமா...”

“ஓ நிச்சயமாக...” திரும்பிக்கொண்டேன். முழங்காலுக்கு அருகாக நின்று கால்களை நீவத் தொடங்கினாள். வெண்ணிறத் துணிக்கு கீழாக விரல்களை ஒரு தவறுதலான செயல்போல அவள் நகர்த்துவாள் என்று எதிர்பார்த்தபடி சற்று நேரம் காத்திருந்தேன். அவள் இரண்டொரு தடவை நேரத்தைப் பார்த்தாள். நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். மூக்குத்தி. மங்கலாகப் பளிச்சிடும் கல் பதித்த மூக்குத்தி.

“மூக்குத்தி உனக்கு அழகாயிருக்கிறது. நீயொரு அழகான பெண்” என்றபோது, அவள் ‘க்ளுக்’ என்று சிரித்தாள். அப்போது அவளுடைய முகபாவம் ஒரு விளையாட்டுப் பெண்ணுடையதைப்போல தோன்றி மறைந்தது.

சுட்டுவிரலால் மூக்குத்தியைத் தொட்டு “அது பொட்டு” என்று சிரித்தாள். பொட்டு என்பதைச் சிங்களத்திலும் பொட்டு என்றுதான் சொல்வார்கள் என்று தெரிந்தது. அவள் தொட்டபோது மூக்குத்திப் பொட்டு உதிர்ந்து விழுந்தது.

நான் “அச்சச்சோ” என்றேன். 

“இன்றுதான் முதன்முதலாக மூக்குத்திப் பொட்டை அணிந்தேன். நீ அழகாயிருந்தது என்றாய். சந்தோசமாயிருக்கிறது” அவளுடைய கைகள் தொடர்ந்து கால்களில் இயங்கிக்கொண்டிருந்தன.

 “இன்று வேலை அதிகமா..?”

“இல்லை, நீதான் முதலாவது வாடிக்கையாளன். ஏழு மணியிலிருந்து காத்திருந்தேன். ஸ்துதி” நன்றியை மட்டும் சிங்களத்தில் சொன்னாள்.

“ஏன்..?”

“வாடிக்கையாளன் கிடைக்காமலும் போகலாமல்லவா... அவ்வாறென்றால் அன்றைக்கு எனக்கு வருமானமேதும் இல்லையல்லவா...”

“ஏன்...”

“இங்கே சம்பளம் என்று எங்களுக்கு எதுவுமில்லை.”

“ஐயோ நான் இரண்டாயிரம் கொடுத்தேனே...”

“அது மெடம், பொஸ், பொலிஸ்... அவர்களுக்குப் போய்விடும். எங்களுக்கு வாடிக்கையாளர் தருகிற டிப்ஸ் மட்டுமே. அதிகம் கிடைத்தால் சந்தோசம். உனக்குத் தெரியுமா, நேற்று ஒருவன் எல்லாம் முடித்தபிறகு வெறும் ஐம்பது ரூபா மட்டுமே தந்தான்.”

 எனக்கு உண்மையிலேயே ‘அட சனியனே’ என்று தோன்றியது. “பிறகு..” என்று கேட்டேன். “அதை அந்த நாயிடமே திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஆனால், இந்தியர்கள் நல்லவர்கள்” அவள் நேரத்தைப் பார்த்தாள். இதற்கு மேலாவது இந்த உரையாடலின் போக்கைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். “சரி.. எக்ஸ்ரா சேர்விஸ் என்றால் என்ன” என்று கேட்டேன். அந்தக் கேள்விக்கான பதிலைக் கிளர்ச்சியுடன் எதிர்கொள்வதைப்போல உன்மத்த நிலைக்குத் தேகம் தயாரானது.  அவளுடைய மார்புகளில் வெறித்தேன். தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. வேண்டாம், தாகம் தொடரட்டும். நாக்கு வறளட்டும். அவளுடைய முகத்தை வெறித்தேன். தீவிரமாயிருந்தது. ஆகக் குறைந்தது மூக்குத்தியைச் சுட்டுவிரலால் தொட்டபோதிருந்த துடுக்குத்தனத் தோடாவது இருந்திருக் கலாம். அவள் எனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு பதிலைச் சொல்வதைப் போன்ற பாவனையில் “எக்ஸ்ரா சேர்விஸ் என்றால் ஹான்ட் ஷேக்கிங்... ம்ம்... அந்நேரத்தில் நீ என்னைத் தொடலாம்... ஆனால், என் ஆடையைக் களைய முடியாது... வேண்டு மென்றால் பட்டன்களை நீக்கலாம்.” ஒப்புவிக்கிற குரலில் அவள் மார்பைத் தொட்டுக் காட்டினாள். காலடியில் தீ எரியத் தொடங்கியது.

 “வேறு?”

“வேறு…” அவள் வேறும் சொன்னாள்.

 “அப்போதெல்லாம் உனக்கு எப்படியிருக்கும்?”

அவள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு “எதுவுமில்லை” என்றாள்.

“பிடித்திருக்காதா?”

p106d1.jpg“பிசுத?” பைத்தியமா என்று அதை மட்டும் சிங்களத்தில் கேட்டாள். முகத்தில் கேலியான புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. நானோ, அவள் மூக்குத்தியைத் தொட்ட போதிருந்த புன்னகையை அவளிடத்தில் தேடிக்கொண்டிருந்தேன். “இதுவொரு கடமை. அவ்வளவுதான்” என்றாள். பிறகு எங்கோ கனவுக்குள் நுழைவதைப்போல “ஒருவேளை இதையெல்லாம் என்னுடைய காதலனுக்குத் தரும்போது நிறையப் பிடித்திருக்குமல்லவா?” என்று ஒரு சந்தேகத்தைத் தெளிகிற தொனியில் கேட்டாள்.

“உனக்குக் காதலன் இருக்கிறானா?” அவள் பதில் சொல்லவில்லை. ஆனால், துடுக்குத்தனமும், கேலியும் படராத வெறுமையான ஒரு மூன்றாம் முகத்தைக் கண்டேன். மௌனம் எங்களிருவருக்கும் இடையில் புகுந்துகொண்டது. அவள் அடுத்தது என்ன என்பதைப்போல சுவரோடு சாய்ந்து நின்றாள். அவளை அருகாக அழைத்தேன். விரல்களைப் பிடித்தபடி “எனக்கு எக்ஸ்ரா சேர்விஸ் எதுவும் வேண்டியதில்லை” என்றேன். “ம்” என்றாள். “அதற்காக டிப்ஸ் எதுவும் தராமல் போய்விட மாட்டேன். இந்தியர்கள் நல்லவர்கள் அல்லவா...” கடவுளே, அவள் துடுக்குத்தனத் தோடு சிரித்தாள். “நீ மிக அழகானவள்...” வெட்கப்பட்டாள்.

நேரத்தைப் பார்த்து “இன்னமும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன” என்றாள். எழுந்து உட்கார்ந்தேன். வெண்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டேன்.

“வேண்டுமென்றால் நான் இப்போதே வெளியேறுகிறேன் அல்லது அருகில் வந்து உட்காரேன். பேசுவோம்.”

“வேண்டுமென்றால் நான் தலைகோதி மசாஜ் செய்கின்றேன், இருபது நிமிடங்களுக்கு.”

“சரி.”

நிமிர்ந்தபடி உடலைச் சரித்தேன். மயிர்க் கற்றைகளுக்குள் விரல்களைக் கோத்துக் கோதத் தொடங்கினாள். சற்றுமுன்னர் அவள் கணுக்கால்களை அழுத்திய போதிருந்த விரல்களைத் தொலைத்துவிட்டு புதிய விரல்களைப் பெற்றிருப்பதாகத் தோன்றிற்று. ஏதும் பேசினாள் இல்லை. அவளுடைய கண்களை நீண்ட நேரத்திற்குப் பார்த்தபடியிருந்தேன். கனிவு சுரக்கின்ற புதிய கண்கள். சட்டென்று துள்ளியெழுந்தேன். இங்கிருந்து போய்விட வேண்டும். ஆடைகளை ஓர் அவசரத்துடன் அணிந்தேன். பர்ஸிலிருந்து 2,000 ரூபாய்த் தாள்களை உருவி அவளுடைய கையில் வாஞ்சையோடு வைத்தேன். “உன்னை ஒருமுறை கட்டியணைக்கலாமா..?” என்னையும் மீறி சொற்கள் வந்து விழுந்தன. நிமிர்ந்து பார்த்தாள். நான்காவது முகம். மொத்தமும் எனக்குள் ஒடுங்கி விடுவதைப்போல வந்து நின்றாள். ஒரு நீண்ட பெருமூச்சோடு கைகள் அவளை அணைத்துக்கொண்டன. எனக்குள் சஞ்சலங்கள் ஏதுமில்லையென்று நானே சொல்லிக்கொண்டேன். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டேன்.

அப்போது அவளுடைய கைகள் என்னில் சுற்றிப் படர்ந்து அழுத்தத் தொடங்கின.

அப்போது என்னுடைய நெஞ்சில் உரசிக்கொண்டிருந்த அவளுடைய முகம் நிமிர்ந்துகொள்ள அவள் தன்னுடைய உதடுகளால் என் உதட்டைக் கவ்விக் கொண்டாள்.

அப்போது நான் அவளுக்குள் ஒடுங்கிவிடுகிற தலைகீழ் அதிசயத்தை அவள் நிகழ்த்தத் தொடங்கினாள்.

அப்போது அவளுடைய மூர்க்கத்தின் முன்னால் நான் என்னைச் சொரியத் தொடங்கியிருந்தேன்.

அப்போது என்னுடைய உதடுகளை அவள் விடுவித்துக்கொண்டபோது நான் தலையைச் சரித்தபடி புன்னகைத்தேன். மஞ்சள் வண்ண ரீசேர்ட்டை அணிந்தவாறே, ``அதுவொரு துடுக்குத்தனமான புன்னகை’’ என்றாள் அவள்.

அப்போது வியர்வை பிசுபிசுத்த தன் விரல்களினால் என்னுடைய கையை விரித்து 2,000 ரூபாய்த் தாள்களையும் அழுத்தி மூடியவள் “ஸ்துதி” என்றாள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் பல தமிழ் கதாசிரியர்கள், சிங்கள பெண்களை தாங்கள் கற்பனைகளில் விபச்சாரிகளாக சித்தரித்து இன்பம் காணுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமணனின் ஓவியங்கள் நன்றாக உள்ளன. 

மசாஜ் கதைகளில் தமிழச்சிகளை கொண்டு  வந்தால் கலாச்சாரக் காவலர்கள் விடுவார்களா? மூக்குத்திக்காரி தமிழாக இருந்திருக்கலாம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.