Jump to content

இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி


Recommended Posts

தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எப்படி எல்லாம் தொடங்கியது ...

2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் கனடாவிற்கா அல்லது இலங்கைக்கா என்று ஆலோசித்தோம்.

இறுதியில் இலங்கைக்கு செல்வதாக முடிவு செய்தோம். என் தாய்நாட்டிற்கு முதன்முறையாக செல்லப்போகிறேன் என்று உற்சாகம் பொங்கியது.

என் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் நபரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஜூலை மாதம் நாங்கள் இலங்கைக்கு வந்தோம். கொழும்பில் சில நாட்களை கழித்த பிறகு, யாழ்ப்பாணத்திற்கு சென்றோம். அங்குதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். எங்களுடன் அவர் அதிக நேரம் செலவிட்டார்.

அவரது நற்பண்பாலும் குணநலன்களாலும் ஈர்க்கப்பட்ட என் பெற்றோர் அவரை மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அந்த அளவுக்கு என் பெற்றோருக்கு அவரை பிடித்துப்போனது.

இலங்கைபடத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionஇலங்கையின் கண்கவர் தோற்றம்

திருமணம் செய்து கொள்கிறாயா என்று பெற்றோர்கள் என்னிடம் கேட்டபோது நான் வாயடைத்துப்போனேன். 'இலங்கையைச் சேர்ந்தவரை நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வாழ்க்கையை பற்றியும், எனது வருங்கால கணவரைப் பற்றியும் எனக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது' என்று கூறி மறுத்துவிட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நாங்கள் ஜெர்மனிக்கு திரும்பிவிட்டோம். புத்தாண்டு தினத்தன்று "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012!" என அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தேன். அவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பச் சொன்னார் அம்மா.

  •  

பதில் வரும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே அம்மா சொன்னதை செய்தேன். "நன்றி, மின்னஞ்சல் முகவரி அல்லது பேஸ்புக் கணக்கு இருக்கிறதா?" என்று பதில் வந்தது.

எனது பேஸ்புக் கணக்கை அனுப்பினேன். அதன்பிறகு அவர் செய்தி அனுப்ப நான் பதில் அனுப்ப என்று தகவல் தொடர்பு தொடர்ந்தது.

இலங்கைபடத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI

ஜெர்மனி மற்றும் இலங்கைக்கு 4.5 மணி நேரம் வித்தியாசமாக இருந்த்தால், எனக்கு செய்தி அனுப்புவதற்காக அவர் இரவு நெடுநேரம் விழித்திருந்தார், நானும் காலையில் விரைவாகவே எழுந்துக்கொள்வேன்.

சில மாதங்களுக்குப் பிறகுதான் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்று எனக்கு புரிந்தது! அவரது பண்பும், குணமும் எனக்கு பிடித்திருந்தது. என் மீது அவர் காட்டிய அக்கறை என்னை நெகிழ வைத்தது.

இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. காதல் என்னுள் ஏற்படுத்திய மாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர் அருகில் இருந்தபோது, திருமணம் செய்துக்கொள் என்று பெற்றோர் சொன்னபோது மறுத்துவிட்டேன்.

இப்போது வெகுதொலைவில் இருக்கும்போது, திருமணம் செய்துக்கொள்ள மறுத்தவரையே காதலிக்கிறேன். காதல் என்ற உணர்வுக்கு தூரம் ஒரு விஷயமில்லை என்று புரிந்துகொண்டேன்.

இலங்கைபடத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA

முதலில் தொலைதூரத்தில் இருப்பவரை காதலிப்பதாக சொல்லும் என் நண்பர்களை கேலி செய்து சிரிப்பேன். 'ஒருவர் நேரில் இல்லாதபோது எப்படி காதலிக்கமுடியும். தொலைவில் இருப்பவரை ஒருபோதும் காதலிக்கமுடியாது' என்று சீண்டுவேன். அப்படிப்பட்ட நான் தொலைவில் இருப்பவரை காதலிக்கிறேன்!

ஆனால் அது எனக்கே நடந்தது

அடுத்த 16 மாதங்களில் நான் என்னுடைய செல்போனுடன் நான் ஐக்கியமாகிவிட்டேன். எங்கள் இருவருக்குமான காதலை வளர்த்த்து செல்லிட பேசியே. நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு என் மீது பொறாமை ஏற்படுவதை உணர்ந்தேன்.

நான் செல்லும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பச் சொல்வார். சக மாணவனுக்கு அருகிலோ, ஒரு இளைஞன் அருகிலோ நான் அமர்ந்தவாறு புகைப்படம் இருந்தால் அவரின் வார்த்தைகளில் பொறாமை வெளிப்பட தொடங்கியது.

ஜெர்மன் நாட்டு கலாசாரம் அவருக்கு தெரியாததுதான் பிரச்சனை என்பதை புரிந்துகொண்டேன். ஜெர்மனியில் ஆணும் பெண்ணும் அருகில் அமர்வதும், அரட்டை அடிப்பதும் சகஜமாக இருப்பதுபோல் இலங்கையில் கிடையாது. அங்கு அவருக்கு ஆண் நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்பதால் அவருக்கு நான் வசிக்கும் வாழ்க்கை முறை புரியவில்லை.

இலங்கைபடத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA

2013, ஆகஸ்ட் மாதத்தில் நானும் அம்மாவும் இலங்கைக்கு மீண்டும் சென்றோம். அவருடன் அதிக நேரம் செலவழித்தேன். மீண்டும் திருமண பேச்சு எழுந்தது. இலங்கையில் என்னால் வாழ முடியுமா என்று என்னிடம் நானே கேள்வி எழுப்பினேன்.

ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த என்னால், அதற்கு முற்றிலும் மாறான இலங்கையில் வாழவே முடியாது. அதை என்னால் நினைத்து பார்க்கக்கூட முடியாது என்பதால், ஜெர்மனிக்கு வர சம்மதமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துக்கொண்டார்.

எங்கள் திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அப்போதுதான் அவர் ஜெர்மனிக்கு வரமுடியும். அவரது நண்பர்களின் உதவியால் சிவில் முறையில் திருமணம் செய்துகொண்டோம். நானும் அம்மாவும் ஜெர்மனிக்கு திரும்பினோம். அவர் விசாவுக்காக இலங்கையில் காத்துக்கொண்டிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு அவரது பொறாமை உணர்வு மேலும் அதிகமானது. இறுக்கமான ஆடைகளை போடாதே, சிறிய ஆடைகளை போடாதே என்று பல கட்டுப்பாடுகளை விதித்தார். ஆறு மணிக்கு மேல் வெளியே போக்க்கூடாது என்று கடிந்து கொள்வார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது நீண்ட நாட்களுக்கு தொடராது என்பதை உணர்ந்தேன். எனவே அவரை விரைவில் இங்கே அழைத்து வருவது நல்லது என்று நினைத்து பெற்றோரிடம்கூட செல்லாமல் இலங்கைக்குப் போக பயணச்சீட்டு பதிவு செய்தேன்.

அவருக்கு விசா கிடைக்க வேண்டுமானால், ஜெர்மன் மொழியில் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இலங்கைக்கு சென்று அவருக்கும், அவர் நண்பர்களுக்கும் ஜெர்மன் கற்றுக்கொடுத்தேன்.

மூன்று மாதங்களுக்கு பிறகு நான் ஜெர்மன் திரும்பும் நாளில் அவர் ஜெர்மன் மொழி தேர்வு எழுதினார். தேர்ச்சி அடைந்த அவருக்கு இரண்டு மாதத்தில் விசா கிடைத்தது, ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார்.

ஜெர்மனியில் எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும் என்ற என் கற்பனைகள் நிதர்சனத்தில் பகல் கனவானது. ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதைப்போல் முதலில் இருந்து எல்லாவற்றையும் அவருக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது.

இலங்கைபடத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionஇலங்கையின் கண்கவர் தோற்றம்

மொழி புதிது, இடம் புதிது அவரால் எங்குமே தனியாக செல்ல முடியாது, அவர் செல்லும் இடத்திற்கு நானும் செல்லவேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு இந்த கலாசார மாற்றத்தை எதிர்கொள்வது அதிர்ச்சியாக இருந்தது. தாய் நாட்டு நினைப்பினால் ஏக்கமும் ஏற்பட்டது. அவரை இயல்பாக உணரச்செய்ய பல்வேறு விதத்தில் முயற்சிகள் செய்தேன்.

அவர் பள்ளிக்கு சென்றார், வார இறுதியில் சலவைக்கடையிலும், துரித உணவு விடுதியிலும் வேலை பார்த்தார். அவருக்கும் அழுத்தம் அதிகரித்தது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் அவர் வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை.

எங்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் அதிகரித்தது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை, மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஏங்கினேன். எதாவது ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்தேன்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று இருவருக்கும் வேறு நல்ல வேலை கேட்க முடிவு செய்தோம். பிரபலமான ஒரு நிறுவனத்தின் கிடங்கில் என் கணவருக்கு வேலை கிடைத்தது. அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைSEAN GALLUP Image captionஜெர்மனி

மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எனது படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்கு நானும் செல்ல விரும்பினேன். இப்போது நாங்கள் இருவரும் ஒரே இட்த்தில் வேலை செய்கிறோம்.

மகிழ்ச்சியாக மனமொத்த வாழ்க்கை வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களிடையே பிணக்குகளும் இல்லை. நான் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட்து.

என் வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்ன? எந்தவொரு கடினமான சூழ்நிலையும் சில நல்ல படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும். எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்கூட ஜெர்மனிக்கு ஏற்றவாறு மாறுவதில் என் கணவருக்கு நான் ஆதரவாக இருந்தேன், அதேபோல் நான் மனச்சோர்வுடன் போராடிய சமயத்தில் அவர் எனக்கு உறுதுணையாக நின்றார்.

கசப்பான காலகட்டம் எங்கள் உறவை நெருக்கமாக்கியது. சவால்களை இருவரும் இணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டோம், இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

நான் முதன்முதலில் இலங்கைக்கு போவதற்கு முன் என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன தெரியுமா? 'இளங்கலை பட்டப்படிப்பை முடித்தபிறகு, உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்'.

இலங்கைபடத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA

ஆனால் என் லட்சியத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இன்று நான் அதற்காக வருத்தப்படுகிறேனா என்று சுய பரிசோதனை செய்து பார்க்கிறேன்…

இல்லை ஒருபோதும் இல்லை. நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கனவுகளை என் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தே நனவாக்குவேன். என்னுடைய மிகப்பெரிய வரம் எனது துணைவர். வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்பதை உணர்ந்து கொண்டேன்.

வாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)

http://www.bbc.com/tamil/global-42746056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

 

நிதர்சனமான உண்மை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

வாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

 

நிதர்சனமான உண்மை....!  tw_blush:

அப்படியே பெருக்கி கழித்து சமப்படுத்தியதும் உண்டு மறுக்க முடியுமா என்ன tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியே பெருக்கி கழித்து சமப்படுத்தியதும் உண்டு மறுக்க முடியுமா என்ன tw_blush:

நான் எதுக்கு மறுக்கப்போறன்....! தனித்து நின்று மனம் போனபடி வாழ்வது தவம்... , சில நண்பர்களுடன், ஒரு குழுவுடன் சேரும்பொழுது எமது விருப்பு வெறுப்புகளை அவர்களின் விருப்பு வெறுப்புகளுடன் சமப்படுத்தியே பயணிக்க வேண்டும். அதுவே ஒரு துணையுடன் விட்டு கொடுப்புகள் செய்து வாழ்வது வரம்.....!  tw_blush:

உ +ம் : ஊரில் இருக்கும் பையனுக்கு வெளிநாட்டில் பிறந்து படித்து வளர்ந்த பெண்ணை பார்த்து பேசி, இருவருக்கும் பிடித்து விட்டது. ஆர்வக் கோளாறில் அந்தப் பொண்ணு போனை எடுத்து தன் கூட வேலை செய்யும் ஒருத்தனை இழுத்து கன்னத்துடன் இழைஞ்சு மூஞ்சியை கோணலாக்கி ஒரு செல்ஃ பி எடுத்து அனுப்பினால் , உடனே சுனாமியாய் பொங்கக் கூடாது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஒரு நிமிடம் யோசித்து அந்த பெண்ணின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு ரசித்து சிரித்து உங்க கூட வேலை செய்பவருக்கும்  காட்டி மகிழும் மனவிசாலம்  வேண்டும்......!  tw_blush:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/21/2018 at 4:59 PM, suvy said:

நான் எதுக்கு மறுக்கப்போறன்....! தனித்து நின்று மனம் போனபடி வாழ்வது தவம்... , சில நண்பர்களுடன், ஒரு குழுவுடன் சேரும்பொழுது எமது விருப்பு வெறுப்புகளை அவர்களின் விருப்பு வெறுப்புகளுடன் சமப்படுத்தியே பயணிக்க வேண்டும். அதுவே ஒரு துணையுடன் விட்டு கொடுப்புகள் செய்து வாழ்வது வரம்.....!  tw_blush:

உ +ம் : ஊரில் இருக்கும் பையனுக்கு வெளிநாட்டில் பிறந்து படித்து வளர்ந்த பெண்ணை பார்த்து பேசி, இருவருக்கும் பிடித்து விட்டது. ஆர்வக் கோளாறில் அந்தப் பொண்ணு போனை எடுத்து தன் கூட வேலை செய்யும் ஒருத்தனை இழுத்து கன்னத்துடன் இழைஞ்சு மூஞ்சியை கோணலாக்கி ஒரு செல்ஃ பி எடுத்து அனுப்பினால் , உடனே சுனாமியாய் பொங்கக் கூடாது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஒரு நிமிடம் யோசித்து அந்த பெண்ணின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு ரசித்து சிரித்து உங்க கூட வேலை செய்பவருக்கும்  காட்டி மகிழும் மனவிசாலம்  வேண்டும்......!  tw_blush:  

என்ன ஒரு உதாரணம்   tw_confused:tw_confused: 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.