Jump to content

ஆணாதிக்க காவலராக மைத்திரி


Recommended Posts

ஆணாதிக்க காவலராக மைத்திரி
 
 

இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கிப் பார்ப்பவர்களுக்கு, ஒரு விடயம் மாத்திரம் உறுதியாகத் தெரிந்திருக்கும். சாதாரண சமூகத்தில், கலாசாரக் காவலர்கள் என்று கேலியாக அழைக்கப்படுபவர்களிடம் காணப்படும் அத்தனை குணாதிசயங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படுகின்றன என்பது தான் அது.

கலாசாரக் காவலர் எனும் சொற்கள், சாதாரணமாகப் பார்க்கும் போது, பழைமைவாதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் சொல்லாகவே தெரியலாம். ஆனால், நவீன காலக் கலாசாரக் காவலர்கள் என்போர், முன்னைய காலங்களில் காணப்பட்ட ஆணாதிக்கச் சூழலை மீண்டும் கொண்டுவருவதற்கே விரும்புகிறார்கள் என்பதை, சற்று அவதானித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி, அதுவும், போர் நாயகராகக் கருதப்பட்ட, பெரும்பான்மை இனத்தவர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒருவரை, அவரது கட்சியிலிருந்தே வந்து வெற்றிகொண்ட ஒரு ஜனாதிபதியை, சாதாரணமாக இவ்வாறு அழைத்துவிட முடியாது. ஆனால், ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர, வேறு வழிகளே இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால நடவடிக்கையாக, மதுபான சாலைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கும் மதுபான நிலையங்களிலிருந்து அவர்கள் மதுபானம் வாங்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியமையை, இரத்துச் செய்யுமாறு பணிப்புரை விடுத்தமை அமைந்திருந்தது.

இலங்கையின் மதுபான நிலையங்களுக்குப் பெண்கள் சென்று, மதுபானங்களை எந்தளவுக்கு வாங்குகிறார்கள் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கும் நிலையில், பெண்களுக்கு இவ்வாறான தடை காணப்பட்டமை, இத்தடை நீக்கப்படும் வரை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையானது.

அத்தோடு, இச்சட்ட ஏற்பாடு, முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதுவும் உண்மையானது. எங்காவது இதற்கான அனுபவங்களைப் பெற்ற பெண்களின் கருத்துகளைச் செவிடுத்தவர்களுக்குத் தான், இவ்வாறான சட்ட ஏற்பாடு இருப்பது தெரிந்திருந்தது.

என்றாலும் கூட, இப்படியான சட்ட ஏற்பாட்டை மாற்றுவதற்காக எடுத்த முடிவு, முக்கியமானது. ஆனால், அந்த முயற்சிக்கு எதிரான ஜனாதிபதி மைத்திரிபாலவின் எதிர்ப்பு, எந்த வகையிலும் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

பெண்கள், மதுபானங்களை வாங்குவதற்கு எதிரான தடையை நியாயப்படுத்துவோர், பிரதானமாக, இரண்டு வகையினராக இருக்கின்றனர்:

1) கலாசாரக் காவலர்கள் - “பெண்களே நாட்டின் தெய்வங்கள். அப்படியான தெய்வங்கள், மதுபானம் வாங்குவதா? ஐயகோ!” என்று சொல்பவர்கள் இவர்கள். பெண்கள் மீது மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ஆண்களால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள சமூக, சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும், பிற்போக்குவாதிகள் இவர்கள். இவர்களின் கருத்துகளை, காத்திரமான வாதக் கருத்துகளாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

2) மதுபானத்துக்கு எதிரானவர்கள் - “நாட்டின் மதுபானப் பாவனை, ஏற்கெனவே அதிகளவில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்துவதை விடுத்து, பெண்களையும் வாங்க அனுப்பது எவ்வளவுக்குப் பொருத்தமானது?” எனக் கேட்பவர்கள். முதற்பிரிவினருக்குக் காணப்படும், ஆணாதிக்கச் சிந்தனை, இவர்களிடம் கிடையாது என்றில்லை. ஆனால், மதுபானத்துக்கு எதிரான நிலைப்பாடும் இவர்களிடம் உண்டு.

நியாயமான கேள்வி தான். ஐரோப்போவுடன் ஒப்பிடும் போது, 5 மடங்கு அதிகமாக, தனிநபர் ஒருவருக்கான சராசரி மதுபான உள்ளெடுப்புக் காணப்படுகிறது என, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மது அருந்தும் நிலையில், சுமார் 20 சதவீதமானோரே இலங்கையில் மது அருந்துகின்றனர் எனவும், அதன் காரணமாக, மது அருந்துவோர், இன்னமும் அதிகம் அருந்துபவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

எனவே, இலங்கையில் மதுப் பிரச்சினை என்ற ஒன்று காணப்படுகிறது என்பது உண்மையானது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பொறுப்புக் கூட. ஆனால், தடை செய்வது தான் அதற்கான தீர்வா? வளர்ந்தவர்கள், தங்களது விருப்பத்துக்குரிய தெரிவை மேற்கொள்வதை அரசாங்கம் தடுப்பது, மக்களின் உரிமைகளில் தலை போடும் விடயம் இல்லையா? அப்படித் தடை செய்வதாக இருந்தாலும், பெண்களுக்கு மாத்திரம் தடை விதிப்பது ஏன்? இலங்கையிலுள்ள பெண்களின் 3 சதவீதமானோர் மாத்திரமே, மது அருந்துகின்றனர் என, இலங்கையின் அரச தரவுகள் கூறும் நிலையில், அதிகமாக மது அருந்தும் ஆண்கள், மதுபானம் வாங்குவதைத் தடை செய்தால், இலங்கையின் மதுப் பிரச்சினைக்குக் காத்திரமான தீர்வொன்று கிடைக்க வாய்ப்புள்ளது அல்லவா?

பெண்கள் குடிக்க வேண்டும் அல்லது அவர்கள் குடிப்பது தான் சமவுரிமை என்ற வாதத்தை முன்வைக்கத் தேவையில்லை. மதுபானம் வாங்குவதற்குப் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, மது பற்றியது கிடையாது. மாறாக, பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தும் ஒரு செயற்பாடே தவிர, வேறெதுவுமில்லை. நாட்டில் 51.5 சதவீதத்துக்கும் அதிகமானோராகக் காணப்படும் பெண்களை, இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவது என்பது, நாட்டின் எதிர்காலத்துக்கும் எந்தளவுக்குப் பொருத்தமானது என்பது கேள்வியே.

மதுபானங்களை வாங்குவதற்குப் பெண்களுக்குத் தடை என்ற, பாலின ரீதியாக ஒடுக்குகின்ற, பழைமைவாதச் சட்ட ஏற்பாடு இருப்பதென்பது ஒரு விடயம். அது பிரச்சினைக்குரியது என்பதை அறிந்து, அதை மாற்றுவதற்கான முயற்சியை எடுத்த பின்னர், மீண்டும் பழைய ஏற்பாட்டுக்கே செல்வதென்பது, இன்னமும் மோசமானது.

இவையெல்லாம், இன்னொரு விதத்திலும் ஏமாற்றத்தைத் தருகின்றன. அண்மைக்காலத்தில், இலங்கையில் பெண்கள் தொடர்பான முக்கியமான சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான கட்டாயமான 25 சதவீத ஒதுக்கீடு காணப்பட்டது. ஆண்களால் இன்னமும் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகங்களிலும் சபைகளிலும், பெண்களின் 25 சதவீத ஒதுக்கீடு காரணமாக, அவர்களுடைய பிரச்சினைகளை எந்தளவுக்குத் தீர்க்க முடியும் அல்லது விவாதிக்க முடியும் என்ற கேள்வி காணப்படுகிறது. ஆனாலும் அதைத் தாண்டி, பெண்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற இந்த ஏற்பாடு, தலைமைத்துவம் நோக்கிய, பெண்களுக்கான மிக முக்கியமான முதற்படியாக இருக்கிறது. இப்படி, ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படுத்தப்படும் அதே தருணத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிற்போக்கான, ஆணாதிக்கத்தனம் மிகுந்த நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்பது, அதிகமான வருத்தத்தைத் தருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெண்களின் சுதந்திரத்தில் அடிக்கடி தலையீடு செய்யும் வரலாற்றைக் கொண்டவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. இலங்கைக்கு வந்திருந்த பாடகர் ஒருவர் மீது, பெண்ணொருவர் தனது உள்ளாடையை வீசிய போது, அதற்கெதிராகப் பொங்கியெழுந்தவர் தான் ஜனாதிபதி. அதேபோல், சமபாலுறவாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், இருபால் விளைஞர் விடயத்திலும், பழைமைவாத அடிப்படைவாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இதுவொன்றும் புதிது கிடையாது.

ஆனால், ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை, பெண்கள் மீதான கரிசனை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், “மதுபானம் வாங்குவதற்குப் பெண்களுக்கு அனுமதியா? அனுமதிக்கவே மாட்டேன்” என்று ஜனாதிபதி பொங்கியெழுந்த இதே காலகட்டத்தில் தான், சிறுமியொருத்தி வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. இவ்வாறு, சிறுமிகள் வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படும் செயற்பாடுகள், அண்மைக்காலத்தில் அதிகரிப்பதை, ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

பெண்கள் பற்றிய உண்மையான அக்கறையைக் கொண்ட ஒருவராக இருந்திருந்தால், அதைப் பற்றிக் கவனமெடுத்து, இவ்வாறான விடயங்கள் ஏன் தொடர்கின்றன என, சட்டமும் ஒழுங்கும் அமைச்சரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும், ஜனாதிபதி கடிந்து கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்திருக்கவில்லை. 

அதேபோல், முஸ்லிம் தனியார் விவாக - விவாகரத்துச் சட்டம், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதிக்கிறது என, முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தத்தை வேண்டிநிற்பவர்கள், தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பல்வேறுபட்ட அரசியல், சமூகக் காரணிகள் காரணமாக, அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சி, ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது போன்ற தோற்றம் காணப்படுகிறது. பெண்களுக்கான சமவுரிமையை, எந்தவிதமான எதிர்ப்புக்கு மத்தியிலும் பெற்றுக் கொள்ளத் தயார் என்று ஜனாதிபதி கருதுவாராயின், இச்சட்டத் திருத்தத்தை முன்னின்று நடத்தியிருக்க வேண்டுமல்லவா?

இல்லையெனில், கருக்கலைப்புத் தொடர்பாகக் காணப்படும் கடுமையான சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான முயற்சி கூட, அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் உடல் தொடர்பாக முடிவெடுக்கும் உச்சபட்ச அதிகாரம், பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தான், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது. ஆனால், கருக்கலைப்புச் சட்டங்களை, சிறியளவுக்குத் தளர்த்துவதற்கான முயற்சி கூட, முன்னேற்றமடையவில்லை. கிட்டத்தட்ட அனைத்து மதங்களையும் சேர்ந்த (ஆண்) மதத்துறவிகள், பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்து, கருக்கலைப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதையாவது முன்னின்று நடத்துவதற்கான முயற்சிகளை, ஜனாதிபதி எடுத்திருக்கலாம். அதையும் அவர் செய்திருக்கவில்லை.

இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்களில் 90 சதவீதமானவர்கள், பாலியல் ரீதியான தொல்லைகளை, துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என, தொடர்ந்து வெளிவரும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கெதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. அது தொடர்பாக, எவ்வாறான கவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால வெளிப்படுத்தியிருக்கிறார்? இல்லவே இல்லை. எதுவும் இல்லை.

ஏனென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய வாக்கு வங்கி என அவர் கருதும் கிராமிய வாக்காளர்களைக் கவர்வதற்கு, பழைமைவாதத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே அவருக்கு உதவுமே தவிர, உண்மையான, மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் கிடையாது. வாக்குகளைக் கவர்வதற்காக, “வர்த்தமானி தொடர்பில், ஊடகங்கள் மூலமாகத் தான் அறிந்தேன்” என்று, ஜனாதிபதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது, கிராமப்புற மக்களிடம் வேண்டுமானால், எடுபடவும் கூடும்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு, அரசினதும் அமைச்சரவையினதும் தலைவராக இருந்துகொண்டு, முக்கியமான தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்கள் மூலமாகத் தான் அறிகிறார் எனக் கூறுவது, அவரது தலைமைத்துவப் பண்புகளைத் தான் கேள்விக்குட்படுத்துகிறது என்பதை, அவர் உணர வேண்டும்.

ஜேம்ஸ் ஃபிறீமான் என்ற எழுத்தாளர் கூறிய விடயத்தைத் தான், இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது. “அடுத்த தேர்தல் பற்றிச் சிந்திப்பவன், அரசியல்வாதி. அடுத்த பரம்பரை பற்றிச் சிந்திப்பவன், தலைவன்”. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், கட்சி பேதமின்றி, அப்போதைய பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை அனைவரும் ஆதரித்தமை, அரசியல்வாதியாகப் பார்ப்பதற்குக் கிடையாது, மாறாக, நாட்டில் காணப்பட்ட தலைமைத்துவ இடைவெளியை நிரப்புவதற்கே. அதை அவர் செய்கிறாரா என்பதை, ஒரு கணம் தரித்து நின்று, அவதானிப்பது அவசியமானது.

ஏனென்றால், கவிஞனரொருவன் சொன்னது போல, “காதலும் அதிகாரமும், உச்சக்கட்டப் போதையைத் தருவன”. அதிகாரப் போதை, தலைக்கு ஏறியவர்கள், இதற்கு முன்னைய காலங்களில் சந்தித்த வரலாறுகளை, ஜனாதிபதி மறக்கக்கூடாது என்பது தான், மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆணாதிக்க-காவலராக-மைத்திரி/91-210458

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.