Jump to content

வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


Recommended Posts

வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

வாட்ஸ்அப்படத்தின் காப்புரிமைREUTERS

சிறு தொழில் ஒன்றின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், உங்களுடைய எல்லா வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளையும் விரைவாக மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய நீங்கள் விரும்பியதுண்டா?

"வாட்ஸ்அப் பிஸ்னஸ்"

இந்தியா முழுவதுமுள்ள சிறு தொழில் உரிமையாளர்கள் தங்களின் சொந்த இணையதளத்திற்கு நிகரான ஒன்றை வாட்ஸ் ஆப்பில் உருவாக்கி செயல்திறன்மிக்க முறையில் வணிகம் செய்யும் மென்பொருளை (App) வாட்ஸ் ஆப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, இந்தோனீஷியா மற்றும் மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த மென்பொருள் "வாட்ஸ்அப் பிஸ்னஸ்" (WhatsApp Business - இணைப்பு: https://www.whatsapp.com/business/) என்று அழைக்கப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் ஆன்ட்ராய்டு செல்பேசிகளில் இந்தியாவில் இது வெளியாகவுள்ளது.

"வாட்ஸ்அப் பிஸ்னஸ்" என்ன செய்யும்?

வணிக விவரங்கள்: மின்னஞ்சல், கடை, முகவரி மற்றும் இணையதளம் அல்லது தொலைபேசி எண் ஆகிய அதிகாரப்பூர்வ தகவல்களை அவர்களின் பக்கம் கொண்டிருக்கும்.

குறுஞ்செய்தி அனுப்பும் கருவி: கம்பெனியை அறிமுகப்படுத்தும் வாழ்த்து செய்திகள் மற்றும் அதிக வேலையாக இருப்பது, வாடிக்கையாளுக்கு தெரியமாறு "வெளியே" என அமைத்து கொள்வது என பொது கேள்விகளுக்கு விரைவாக தானாகவே விடையளிப்பதை அமைத்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்படத்தின் காப்புரிமைWHATSUP

செய்தி புள்ளிவிபரங்கள்: வாசிக்கப்பட்ட செய்திகள் மற்றும் எது நன்றாக வேலை செய்கிறது என்பது பற்றிய எளிதான தரவுகள்.

வாட்ஸ்அப் வெப்: சாதாரண வாட்ஸ்அப் போல, மேசை கணினிகளிலும் இந்த "வாட்ஸ்அப் பிஸ்னஸ்" மென்பொருளும் செயல்படும்.

சரிபார்க்கப்பட்ட கணக்குகள்: வியாபாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணோடு ஒத்துப்போனால் ஒரு வணிகத்தின் எண் உறுதி செய்யப்படும். அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு சரிபார்க்கப்பட்டதை காட்டுவதாக பச்சை நிற அடையாளம் இடம்பெற்றிருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

இதற்கு வாடிக்கையாளர்கள் தனிப்பட்டதொரு மென்பொருளை தரவிறக்க வேண்டும் என்றில்லை. ஏற்கெனவே இருக்கின்ற சாதாரண வாட்ஸ்அப் கணக்கு மூலமே வணிக தொடர்பாடல்களை மேற்கொள்ளலாம்.

ஒரு வணிக நிறுவனத்தின் தொலைபேசி தொடர்பு எண்கள் உங்களுடைய தொலைபேசியில் இல்லாமல் இருந்தால், அந்த நிறுவனம் அனுப்பும் செய்திகள் அவர்களுடைய தொலைபேசி எண்களை காட்டாமல், பதிவு செய்யப்பட்டிருக்கும் வணிகத்தின் பெயரில் தோன்றும்.

'டெக்கிரன்ஜ்' இணையத்தளத்திடம் கடந்த ஆண்டு பேசியபோது, தங்களுடைய தொலைபேசி எண்களை பதிவிட்டு, வாட்ஸ்அப் வழியாக வணிகம் செய்யும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டவர்கள் மட்டுமே, மக்களை தொடர்பு கொள்ள முடியும் என்று வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியது.

வாட்ஸ்அப்படத்தின் காப்புரிமைLIONEL BONAVENTURE/AFP/GETTY IMAGES

விமர்சனங்கள்

இந்த ஆப் (App) பற்றிய தொடக்க விமர்சனங்கள் கலவையாக உள்ளன.

பாதுகாப்பான மின்னஞ்சல் முகவரி அல்லது கடவுச் சொல் (password) வழங்குவதை தவிர, வெறுமனே தொலைபேசி எண்ணை வைத்து வணிகத்தை மேற்கொள்வது பற்றி அமெரிக்கா புகார் தெரிவித்திருந்தது.

இந்தோனீஷியா மற்றும் மெக்ஸிகோவில் நடைபெறும் வணிகங்கள் மிகவும் நன்றாகவே நடைபெற்று வருகின்றன.

தற்போது இவ்வாறு வணிகம் நடத்துவது இலவசமாக நடைபெறுகிறது.

ஆனால், இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மேத் இடிமா செப்டம்பரில் வால் ஸ்டிரீட் பத்திரிகையிடம் பேசியபோது, "எதிர்காலத்தில் இவ்வாறு செய்யும் வணிகங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42747055

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.