Jump to content

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்....19.01.2018


Recommended Posts

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

 
 
 
99657235980b1d4b-f26c-44dc-b811-ef678669

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை அச்சுறுத்தும் கடும்புயல்

வடக்கு ஐரோப்பாவெங்கும் வீசிவரும் கடும் சூறாவளி காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.

ஜெர்மனியில் துயர்துடைப்பு மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவ்விரு தீயணைப்பு வீரர்களும் இறந்தனர்.

இந்த கடும் புயலால் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் 13 குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெற்றோர்

99657788044136630jpg

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை கட்டிப்போட்டு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆஜரான பெற்றோர் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று வாதிட்டனர்.

56 வயதான டேவிட் டர்பின் மற்றும் 49 வயதான லூசி என்ற அந்த தம்பதியினர் மீது சித்தரவதை, துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளை அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

தான்கர்ப்பமாக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர்அறிவிப்பு

99657235980b1d4b-f26c-44dc-b811-ef678669

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தான் மற்றும் தனது கணவரான கிளார்க் கேபோர்ட் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் அச்சமயத்தில் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா: கேப்டவுனில் தண்ணீர் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு

99645317waterjpg

தண்ணீர் அற்ற உலகின் முதல் பெரிய நகரமாக மாறிவிடும் என்று அஞ்சப்படும் தென்னாப்பிரிக்க நகரமான கேப்டவுனில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு அடுத்த மாதம் முதல் ஒரு நாளைக்கு 50 லிட்டராக குறைக்கப்படவுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியால் பிரபல சுற்றுலா நகரமான கேப்டவுன் பாதிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22469975.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.