Jump to content

கூகிள் மப்பும் எனது கனவுகளும்.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் மப்பும் எனது கனவுகளும்.......

ஒரு பதினாறு வருடங்களிருக்கும், எனது தாயகம் என்று மனது பதிந்த வீ திகளை இறுதியாகத் தரிசித்து.
 அயல் தேசம் வந்தபின்னும் , தாயகம் பற்றிக் கனவுகள் கண்டு, வேர் கொள்ளா ஒரு ஊரில் அடைக்கலமாகி,
தமிழ் நெ ட்டும் , புதினமும் எம்வீரர் செயல் கூற, வெல்வோம் இனியென்று விறுமாப்பாய் இருந்துவிட் டேன்.
2009 இல் பேரிடிச் செய்தியாய் முள்ளிவாய்க்கால் வீழ்ந்திட, தாயகம் பற்றிய கனவுகளைக் கலைத்தேன்.
ஆக்கிரமிக்கப்படட என் தேசமும், அடிமை வாழ்வில் என் உறவுகளும் எனக்கு வேண்டாச் செய்தியாக மனதை இறுக்கிக் கொண்டேன் .
எதிரியிடம் தாயகம் கிடைக்க, மனம் புரண்டு அழுதது,ஏதாவது செய்ய வேண்டும்  என்றது.
வட்டுக்கோட்டைத்  தீர்மானம் என்கிறார்கள், மகிழ்ச்சியாய்ப்  போனேன் .
தனித்த தாயகம் வேண்டும் என்றேன்  , எதுவுமே நடக்கவில்லை.
"உன்னால் , நாங்கள் எங்கள் உறவுகளைப் பிரிந்துவிடடோம் , எங்களை கொழும்புக்குப் போக முடியாது செய்து விடடாய் " என்றார்கள் வீட்டில் .
பேசிப் பயனில்லை என்று பேசாமல் இருந்துவிட , அவர்களோ தாராளமாய்ப் போய்வந்தார்கள் .
நானோ இன்னமும் போகமுடியாமல் கட்டுப்பட்டிருக்க,
வராது வந்த மாமணியாய் வந்து சேர்ந்தது கூகிள் மப் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆதங்கம் மனசை நெருடுகின்றது.....! ஆயினும் என்ன சொல்வது......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் திரிந்த தெருவெங்கும் மேப்பில் ஓடினேன்.
விளையாடிய செம்பாட்டுக் காணிகளில் கண்கள் அலைந்து திரிந்தன. 
எனது  வீடும்,வீடிருந்த அயலும், அயல் முழுக்கச்  செம்மண் தோட் டமும் கண்ணுக்கு விருந்தாக ,
 கோண்டாவில்,உரும்பிராய், கரவெட்டி, தெல்லிப்பளை, மடடக்களப்பென்று இமைப்பொழுதில் நினைவுகள் கூகிளில் வந்து போயின.
 ஏ 9 வழியே எம்வீரர் சென்ற தடங்களில் மனது போக, ஈட்டிய வெற்றிகளும் , இமாலயத் தியாகங்களும், சேர்ந்தே  வளர்ந்த துரோகமும், முற்றான அழிவும் மனதினில் வந்து போக,
கண்கள் கசியத் தொடங்கியது.
எங்கள் இதய பூமியில் எதிரியின் கோட்டைகளும் கொத்தளங்களும்  எழுந்து நிற்க , எமது சமாதிகள் மேல் புத்தனது  கோபுரங்கள்  வீற்றிருக்க, 
அடிமை வாழ்வின் லட்ஷணத்தைக் காட்டியது கூகிள்.

முன்சென்ற வீரர் கனவுகள் நனவாகாதா  என்கிற ஏக்கங்கள் வழிநெடுகிலும் வந்துகொண்டிருக்க,
நானறியா எனது தாயகத்தின் மூலை முடுக்குகள் நோக்கி கூகிளில் தேடத் தொடங்கினேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் பாதையில் சுதந்திரபுரம் பகுதியில் இடதுபுறம் வரும் காணியொன்று தகடுகளால் மறைக்கப்பட்டுள்ளது. அதனுள் நுற்றுக்கணக்காக வாகனங்கள் பலுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கும் இறுதிப்  போருக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில், செய்மதியுடனான ஒளிப்படத்திற்கும், வீதியுடனான ஒளிப்படத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு. செய்மதியுடனாகத் தெரியும் படத்தில் கடற்கரையெங்கும் கருகிய வீடுகளும், காணிகளும்.  முழு வீச்சில் இனவழிப்பு நடந்தமைக்கான கறுப்புப் பெட்டல்கள். 

ஆனால் வீதிப்  படத்தில், அத்தரைகளெங்கும்  புற்களும் புதர்களுமாய், ஒரு முற்றான இனவழிப்பை இயற்கையே மறைப்பதுபோலத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றும் கூகுள் எர்த்தில் மட்டும் எமது ஊர் சாலைகளையும், நண்பர்களுடன் சுற்றிதிரிந்த இடங்கள்,கல்லூரி, வாழ்க்கை ஆரம்பமான தருணங்கள் எல்லாவற்றையும் ரசிக்கும் ஒரு சிலரில் ரகுனாதன்போல் நானும் ஒருவன்.

மாவீரர் கட்டவுட்டுக்கள் இருந்த பல இடங்களில் மஹிந்த கைகூப்பிக்கொண்டு நிற்பதைகவனித்து நிமிர்ந்தே பார்க்காமல் Cursor-ஐ நகர்த்தியிருக்கிறேன்

என்னோட வீட்டை கூகுள் உதவியுடன் படமாய் கணனி திரையில் சேமித்து பலநாள் ரசித்திருக்கிறேன்.

மகிந்தபோய் ,மைத்திரி வந்தாலும் ஆட்சிகளும் கோலங்களும் மாறினாலும், தமிழரின் தாயகங்கள் முற்றுமுழுதாக சிங்கள அரசின் பிடியில் என்றொரு நிலை இருந்தாலும், 

என்னை பொறுத்தவரை இன்றும் தமிழரின் பெரும்பான்மை தாயக நிலபரப்பு இன்னமும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகளின் வாகனங்கள் அங்கும் இங்கும் ஓடிதிரிகின்றன. அந்த மனநிலையில் இருந்து வெளியே வரமுடியவில்லை,அல்லது அந்த நினைவுகளைவிட்டு வேறொன்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எந்த மன்னர்களினதும், மண்ணினதும் அரசியல் சட்டங்கள்,தடைகள் எவற்றையும் பாதிக்காத,எவரும் தடைபோடமுடியாத மனசுக்குள் ரசிக்கின்ற சுமை அது.

முள்ளிவாய்க்காலுடன் அனைத்தும் முற்றுப்பெற்று பத்து வருடங்கள் ஆனாலும் இன்றும் அது நேற்று நடந்த சம்பவம்போல்தான் பலரின் மனசில் சுமையாய்  இருக்குமே அதுபோல .

நன்றி ரகுனாதன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

முள்ளிவாய்க்காலில், செய்மதியுடனான ஒளிப்படத்திற்கும், வீதியுடனான ஒளிப்படத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு. செய்மதியுடனாகத் தெரியும் படத்தில் கடற்கரையெங்கும் கருகிய வீடுகளும், காணிகளும்.  முழு வீச்சில் இனவழிப்பு நடந்தமைக்கான கறுப்புப் பெட்டல்கள். 

ஆனால் வீதிப்  படத்தில், அத்தரைகளெங்கும்  புற்களும் புதர்களுமாய், ஒரு முற்றான இனவழிப்பை இயற்கையே மறைப்பதுபோலத் தெரிகிறது.

கூகிள் செய்மதிப்படங்கள் பழையவை. அவற்றைப் புதுப்பிக்கச் சொல்லி கூகிளுக்கு மனுப்போடவேண்டும். அவற்றையும் மாற்றிவிட்டால் இடையில் வந்த முப்பது வருடங்களை இலகுவாக மறைத்துவிடலாம். நினைவில் வைத்திருப்பவர்களும் மறந்துகொண்டுதானே இருக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேசங்களில் பட்டினங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் முக்கிய தெருக்களின் பெயர்களை தமிழில் எழுதாமல் சிங்களத்திலும்  ஆங்கிலத்திலும் எழுதி இனத்துவேசத்தின் உச்சக்கட்டத்தை  வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கூகிழுடன் தொடர்புகொண்டு மாற்ற முயற்சித்தும் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல இடங்கள் போர் நடந்ததற்க்கான சான்றுகளே இல்லை ரகுநாதன் எல்லாம் மாற்றம் பெற்றுவிட்டது அன்று புலிகளின் காலங்களில்  எப்படியிருந்ததோ அதே போல் நினைவுகள் மட்டும் நிற்கிறது மனதில் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.