Jump to content

`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ


Recommended Posts

`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ

 
 

_MG_0758_11122.jpg

"கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறிப்பிட்டு, தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். கூடவே, 'சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் 'என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவரிடம் வைரமுத்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் கூறிய வைகோவிடம், கமல், ரஜினி அரசியல் பிரவேசம்குறித்து கேள்வி கேட்டதற்கு,  உடனே நக்கலாகச் சிரித்தார். பிறகு, "எப்படி ஓட்டு போடுவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறதோ, அதேபோல கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது.  என்னுடைய  54 வருட பொதுவாழ்க்கையில், 50 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாகவும் சென்றிருக்கிறேன். 5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறேன். மக்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

கமலும் ரஜினியும், ஏதோ திடீர் புரட்சி செய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் இருவரும் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று கிண்டல் தொனியில் பதிலளித்தார். ஹஜ் புனிதப் பயணம் மானியம் ரத்து, முத்தலாக் விவகாரம், ஆண்டாள் சர்ச்சை, சரத்பிரபு போன்ற பல விஷயங்கள் குறித்து பதில் அளித்த வைகோ, கமல், ரஜினி பற்றிய கேள்விக்கு மறைமுகமாக விமர்சித்தும் கிண்டலாகவும் பதில்தந்தது, அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு வியப்பைத் தந்தது.

https://www.vikatan.com/news/tamilnadu/113870-vaiko-teased-kamal-and-rajini.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நவீனன் said:

`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ

 
 

_MG_0758_11122.jpg

"கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறிப்பிட்டு, தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். கூடவே, 'சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் 'என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவரிடம் வைரமுத்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் கூறிய வைகோவிடம், கமல், ரஜினி அரசியல் பிரவேசம்குறித்து கேள்வி கேட்டதற்கு,  உடனே நக்கலாகச் சிரித்தார். பிறகு, "எப்படி ஓட்டு போடுவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறதோ, அதேபோல கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது.  என்னுடைய  54 வருட பொதுவாழ்க்கையில், 50 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாகவும் சென்றிருக்கிறேன். 5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறேன். மக்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

கமலும் ரஜினியும், ஏதோ திடீர் புரட்சி செய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் இருவரும் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று கிண்டல் தொனியில் பதிலளித்தார். ஹஜ் புனிதப் பயணம் மானியம் ரத்து, முத்தலாக் விவகாரம், ஆண்டாள் சர்ச்சை, சரத்பிரபு போன்ற பல விஷயங்கள் குறித்து பதில் அளித்த வைகோ, கமல், ரஜினி பற்றிய கேள்விக்கு மறைமுகமாக விமர்சித்தும் கிண்டலாகவும் பதில்தந்தது, அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு வியப்பைத் தந்தது.

https://www.vikatan.com/news/tamilnadu/113870-vaiko-teased-kamal-and-rajini.html

எல்லாம் சரி 
நீங்க யாருடன் முதலில் கூட்டணி வைத்து ஆளை காலி  பண்ணப்போகிறீர்கள் ...சீக்கிரமாக சொல்லு தலீவா சஸ்பென்சு தாங்கமுடில 
முதலில் ரசனி அப்புறம் கமலா இல்லை உல்ட்டவா இப்படி என்னாலும் சரி அப்படி என்னாலும் சரி நமக்கு ஜாலிதான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.