Jump to content

கிழக்கில் சாதிக்கும் சோலை உற்பத்தி நிறுவனம்


Recommended Posts

கிழக்கில் சாதிக்கும் சோலை உற்பத்தி நிறுவனம்

 
 
 
 
 
 
IMG-fa1f3cabcd7ef6bebeb043e65261a13a-V.jpg
 
 


போரின் பேரழிவுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான கிழக்கும் பெருமளவுக்கு எதிர்கொண்டது. இறுதிப் போரின் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எவ்வாறு அதிகளவில் உருவானதோ, அதே போல் நேரடியாக போரின் தாக்கத்தால் கிழக்கிலும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகளவில் உருவாகின. இந்த நிலையில் ஏராளமான  குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் அதனை ஓரளவுக்கு தீர்த்து வைக்கும் நோக்கில் உருவானதே   மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் ஆகும். எல்லோரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை நிதர்சனமாக பார்க்கக் கூடியதாக உள்ளது.
24068137_755568891307366_5579347434715787673_n.jpg

விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், சிறு தொழில் முயற்சியாளர்களின் உள்ளுர்உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலுமே இவ்வமைப்பு உதயமானது. மக்களுக்கு பல்வேறு பொருளாதார வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கோடு சிறு உற்பத்தி விற்பனை நிலையம், விவசாய உள்ளீடுகள் விற்பனை நிலையம், இயற்கை பசளை விற்பனை நிலையம், சோலை நஞ்சற்ற மரக்கறி விற்பனை நிலையம்   உள்ளிட்ட பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளது.  மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் உருவாக்கிய உள்ளுர்  உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம்  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சோலை என்கிற பெயரில் இந்நிலையம் வந்தாறுமூலையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
24068132_755568904640698_3376143334807972274_n.jpg

இதன் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வரும் கே.எஸ் ரவிச்சந்திரனுடன் பேசினோம். எங்களது பிரதேசங்களில் கடந்த கால யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் இருந்தார்கள். அவர்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இருந்தார்கள். பெண்களை தலைமைத்துவமாக கொண்டியங்கும் குடும்பங்களும் இருந்தன.  சரியான தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் தொடர்ந்தும் வறுமைக்குள் தள்ளப்பட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.  300 க்கும் மேற்பட்ட மக்கள்   மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கின்றார்கள். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்தின் மயிலம்பாவெளியில் இருந்து வாகரை வரையிலான உயிலங்குளம், வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இந்த சம்மேளனமானது 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்திலும் முறையான வியாபாரப் பதிவும் இதற்கு இருக்கிறது. இதனூடாக நடுத்தர விவசாயிகளையும் சிறு உற்பத்தி முயற்சியாளர்களையும் இணைத்து மேம்படுத்துவது தான் எங்களின் நோக்கம். இதனூடாக உள்ளுர் உற்பத்திகளின் விற்பனையை மேம்படுத்துகிறோம். விவசாயப் பண்ணைகளை உருவாக்குகிறோம். பெண்களுக்கு பழத்தோட்டங்கள், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றில் உதவிகளைச் செய்து வருகிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயப் போதனாசிரியராக கடமையாற்றும் சுதாகரனே மேற்படி திட்டங்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்தவர் ஆவார்.
IMG-e3768afa0f7515fd7d4e4912d81331c9-V.jpg

சோலை உற்பத்தி நிலையம் ஊடாக வெள்ளை அரிசி மா, சிவப்பரிசி மா, உளுத்தம் மா, சத்து மா (போசாக்கு மிகுந்த 8 தானியங்களை உள்ளடக்கியது), தினை அரிசி, வரகு, குரக்கன் மா, பருத்தித்துறை வடை, எள்ளுப்பாகு, குறிஞ்சா இலைப்பவுடர், நாவல் விதை மா, பொரிவிளாங்காய், ஊறுகாய்கள், பனங்கட்டி, தோசை மாவு, யாழ்ப்பாண உற்பத்திகளான நெல்லிக்கிரஷ், மாதுளம்பழச்சாறு, முந்திரிகைச்சாறு, நன்னாரிச்சாறு, நல்லெண்ணெய், கச்சான் அல்வா, பனை உற்பத்திகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம். எமது உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் தான் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வரகின்றோம். இலங்கையின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆர்வமாக இருக்கின்றோம்.
IMG-fe9c43864a48ba0da4150839903d54ab-V.jpg
 

கண்டியில் இந்த ஆண்டு நடந்த உள்@ர் உற்பத்திகளுக்கான தேசிய மட்டப் போட்டியில் எங்கள் உற்பத்திகளுக்கு இரண்டாமிடம் கிடைத்தது. இந்த உற்பத்திகளால் போரால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களும், பின்தங்கிய கிராம மக்களும் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

இவை தவிர சோலை விவசாய உள்ளீட்டு உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம், சோலை இயற்கை பசளை தயாரிப்பு நிறுவனம், சூழல் நட்பு சுற்றுலா, பண்ணை திட்டம் ஆகிய செயற்றிட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கவீனமான முன்னாள் போராளியான தங்கேஸ்வரன் சிரட்டை, மரங்களைப் பயன்படுத்தி நேர்த்தியாகவும், அழகாகவும் பல்வேறு   கைப்பணிப் பொருட்களையும் செய்து அசத்தி வருகிறார்.
IMG-f9ba152db6954e8075e756da311b1edf-V.jpg

மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி  இன்னும் பல திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றது. எல்லோரும் ஒண்றிணைந்து இப்படியான நல்ல திட்டங்களுக்கு ஆதரவளித்தால் இன்னும் வேறு வேறு புதிய மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்நகர்த்த முடியும். கிழக்கின் தரமான இந்த உற்பத்திகளும் சர்வதேச சந்தையை எட்டவேண்டும் என்பதே எம் எல்லோரினதும் விருப்பமாகும்.

தொடர்புகளுக்கு: ரவிச்சந்திரன்-0774047369





மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சத்துமா
phd.jpg

கிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் குழந்தைகள், சிறார்கள் பெரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில் குறித்த சத்துமா முயற்சி மிகவும் முக்கியமானது.  சோலை விற்பனை நிலையத்தில் அதிகம் விற்பனையாவதும் இந்த சத்துமா தான்.

குறித்த சத்துமாவுக்கான திட்டங்களை திறம்பட  உருவாக்கி செயற்படுத்திய திருமதி ரவிச்சந்திரன் நாகேஸ்வரியுடன் பேசினோம்,  கடலை, பயறு, உளுந்து, சோளம், சிவப்பரிசி, எள்ளு, கௌப்பி ஆகியவற்றை கழுவி வெயிலில் காயவைப்போம். பின்னர் அவற்றை வறுத்து ஒவ்வொன்றாக மா அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைப்போம்.  அதன்பின் எல்லா மாக்களையும் சேர்த்து தரமான சத்து மாவை தயார் பண்ணுகிறோம். முதன் முறையாக செங்கலடி பிரதேச செயலகத்தில் உள்ள ஊழியர்களிடம் இந்த மாவை அறிமுகப்படுத்திய போது நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு கிலோவுக்கு மேற்பட்ட சத்துமாவை அந்த ஊழியர்களிடம் விற்று வந்தேன். குழந்தைகள், சிறார்கள், வயதானவர்கள் எல்லோரும் இந்த  ஆரோக்கிய மாவை விரும்பி சாப்பிடுவதாக அவர்கள் சொன்னார்கள்.  250 கிராம் சத்துமா 130 ரூபாவுக்கு விற்பனை செய்கிறோம். இதனால் ஏழை எளிய மக்களும் விரும்பி வாங்குகிறார்கள். அதனைத் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். மட்டக்களப்பு நகரசபை விவசாய உற்பத்தி கண்காட்சியிலும் எனது சத்துமாவுக்கு முதலிடம் கிடைத்தது. 18 முயற்சியாளர்கள் அதில் பங்கேற்றிருந்தார்கள்.    பின் கொக்கட்டிச்சோலை , சத்துருக்கொண்டான், கண்டி ஆகிய இடங்களிலும் இடம்பெற்ற முயற்சியாளர் கண்காட்சிகளில் பங்கேற்று பல பரிசில்களையும் பெற்றிருக்கிறேன். இந்த சத்துமாவை கிழக்கு மாகாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருக்கின்றது. சற்தைப்படுத்தல் வாய்ப்புக்கள் கைகூடி வந்தால் எல்லாம் சாத்தியமாகும் என்கிறார் மகிழ்ச்சியுடன்.

http://www.nimirvu.org/2017/12/blog-post.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

இதற்கான சந்தை வாய்ப்புகளை புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் விற்பனையாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். கிழக்கின் அந்த ஏழை மக்களிற்கு வெளிநாடுகளில் சந்தைப்படுத்தக் கூடியளவிற்கு தொடர்பு வலையமைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. புலம்பெயர்ந்து நல்ல வசதியுடன் வணிகமாற்றும் யாழ்ப்பாணத்தார் மிக அதிகம் என்பதால், எமது இனத்திற்கான கடமையாக இந்த உழைத்து வாழும் மக்களிற்கு வெளிநாடுகளில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இப்படிச் சமூக உணர்வுடன் பொறுப்பாகவும் வினைத்திறனாகவும் செயற்பட வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.