Jump to content

அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி


Recommended Posts

அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி

 

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth

 
அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி
 
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறிய ரஜினிகாந்த், கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும் என்று கூறினார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். “ஆன்மீக அரசியல் என்பது ரஜினியின் நம்பிக்கை. எனது அரசியல் வேறு. மக்கள் தங்களின் பலத்தை உணரச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. மக்கள் பிரச்சனையை மக்களிடமே எடுத்துச் செல்வதற்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/17214300/1140751/Kamalhaasan-accepts-rajinikanth-comments-on-joint.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வௌவ்வால் வீட்ட வௌவ்வால் போனால் நீயும் தூங்கு நானும் தூங்கு" என்கிற மாதிரித்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை யுகங்கள் இந்த கூத்தாடிகள் பின்னால் தமிழகம் அலைக்கழிக்கப்படுமோ?

Link to comment
Share on other sites

38 minutes ago, ராசவன்னியன் said:

இன்னும் எத்தனை யுகங்கள் இந்த கூத்தாடிகள் பின்னால் தமிழகம் அலைக்கழிக்கப்படுமோ?

இவர்கள் நடிகர்களாக இருப்பதால் அரசியலுக்கு வர கூடாது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. நடிப்பு ஒரு தொழில் மட்டுமன்றி சினிமாவும் ஒரு கலை வடிவம் என்பதால் அதில் இருந்து வருபவர்களை அரசியல் செய்ய கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கு என புரியவில்லை. அத்துடன் அவர்களை வெறுப்பவர்கள் அவர்களை  'கூத்தாடிகள்' என விழிப்பதன் ஊடாக 'கூத்தாடிகள்' எனும் பதத்தை ஒரு அவமான / வசைச் சொல்லாக பயன்படுத்துவது தமிழ் பாரம்பரிய கலையான கூத்தையே அவமானப்படுத்தும் செயல்.

ஆனால் கமல் / ரஜனி மற்றும் இவர்களை போன்ற இன்னும் பல நடிகர்கள்  வெறுமனே  சினிமாவில் காட்டிய கதாநாயக  பிம்பத்தை மட்டும்  அடிப்படியாக கொண்டு தனி மனித வழிபாட்டை நம்பி அரசியலுக்கு வருவதை வெறுக்கின்றேன். இவர்களது கதாநாயக  பிம்பத்தை அப்படியே நம்பி தலைவர்களாக எண்ணும் மக்களின் பாமரத்தனத்தையும் முட்டாள்தனத்தையும் ஏற்க முடிகின்றதும் இல்லை.

கமல் டுவீட்டரில் நாலு கருத்து, விகடனில் ஒரு தொடர் என்று மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து விட்டால் அரசியலுக்கு தன்னை தயார்படுத்தி விட்டதாக நினைக்கின்றார்.
ரஜனி, மக்கள் போராட்டங்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுக்காது வெறுமனே தன் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களை சந்தித்து விட்டால் நேரடியாக தேர்தலில் குதித்து வாக்கு பெற்று விடலாம் என நம்புகின்றார். இவர்கள் எவரும் கட்சி ஆரம்பித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்களுடன் மக்களாக நின்று தோள் கொடுத்து மக்களுக்கான அரசியலை படிப்படியாக செய்ய எந்த விருப்பும் அற்று தேர்தலினூடாக பதவிகளை பிடிக்க பேராசையில் திரிகின்றனர். சனநாயகம் கொடுக்கும் சூழலை இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலை தான் மிகவும் ஆபத்தானது. சனநாயகம் கொடுக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி சனநாயகத்தினூடாக அதிகாரங்களை பெறும் அரசியலையே கேலிக்குரியதாக மாற்றுகின்றது. இந்த காரணங்க்களால் தான் இவர்களது அரசியல் வருகையை எதிர்க்க வேண்டும். வெறுமனே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற காரணத்தினால் அல்ல என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தென்னிந்திய சினிமாத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எங்கும் பேசப்படுவதாக இல்லை.

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

அதற்கு ரஜனியோ.. கமலோ தெரிவாக முடியாது. இது தான் இது விடயத்தில்.. எங்களின் சொந்தக் கருத்து.

இதனை இன்னும் பல தமிழ் மக்களுக்கும்  அங்கீகரித்து நிற்கனும் என்றால்.. அந்த மக்களுக்கு அரசியல் என்பது அவர்களின் வாழ்வியல் சார்ந்த ஒரு தெரிவு என்பதை புரிய வைக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சம் அல்ல.. பிற மொழி..  நடிகர்களால்.. நடிகைகளால்.. அவற்றை நிரப்பிக் கொள்ள. 

தொழில் தேடி வந்த பிறமொழியினர் எல்லாம்.. தமிழனை.. தமிழ்நாட்டை  ஆளனும் என்ற நிலையில்.. தமிழ் மக்கள் தம்மையும்.. தம் மண்ணையும் வைத்திருப்பதை... ஒரு இன அழிப்பை இந்த உலகில் கண்டுவரும் இனம் என்ற வகையில்.. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கூத்தாடியும்(நடிகனோ, நடிகையோ) தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடட்டும், பிரச்சனைகளை தீர்க்கட்டும், தமிழ் மக்கள் மனதை வெல்லட்டும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள், ஆனால் அரிதாரம் பூசி, கவர்ச்சி அரசியல் மூலம் பேதைகளை போதையில் வைத்து ஆதாயம் தேடுபவர்களையே குற்றம் சொல்கிறோம்.

Link to comment
Share on other sites

8 minutes ago, nedukkalapoovan said:

 

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

அதற்கு ரஜனியோ.. கமலோ தெரிவாக முடியாது. இது தான் இது விடயத்தில்.. எங்களின் சொந்தக் கருத்து.

எனக்கு தெரிந்து கமல் பரமக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழர் என்றே அறிந்து உள்ளேன். ஆனால் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர். அதனால் அவர் தமிழ் இல்லை எனும் திராவிட அரசியலை ஒட்டி கருத்து சொல்கின்றீர்களா? நான் கமலை எதிர்க்கும் காரணத்தை மேலே தெளிவாக சொல்லியுள்ளேன்

அத்துடன் நான் மேலே சொன்ன கருத்து 'கூத்தாடிகள் பின்னால் தமிழகம் எத்தனை காலத்துக்கு அலைக்கழிக்கப்படுமோ' என்ற சொன்ன கருத்துக்கு; பின் வந்த உங்களின் பின்னூட்டத்துக்கு அல்ல

1 minute ago, ராசவன்னியன் said:

எந்த கூத்தாடியும்(நடிகனோ, நடிகையோ) தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடட்டும், பிரச்சனைகளை தீர்க்கட்டும், தமிழ் மக்கள் மனதை வெல்லட்டும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள், ஆனால் அரிதாரம் பூசி, கவர்ச்சி அரசியல் மூலம் பேதைகளை போதையில் வைத்து ஆதாயம் தேடுபவர்களையே குற்றம் சொல்கிறோம்.

இதை முதலிலேயே குறிப்பிட்டு இருக்கலாம். என் பதிலின் பின் திருத்தி கொண்டமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

..இதை முதலிலேயே குறிப்பிட்டு இருக்கலாம். என் பதிலின் பின் திருத்தி கொண்டமைக்கு நன்றி

கருத்தில் இன்னொரு எதிர்பார்ப்பை கவனிக்க தவறிவிட்டீர்கள், இதுவரை ஆண்ட எந்த கூத்தாடிகளும் தமிழர்களுக்கு நன்மை செய்யவில்லை( ஆட்சில் அமர்ந்து தங்கள் சொந்த சுகம் அனுபவித்தது தவிர்த்து)

இனியாவது படித்த புத்திஜீவிகளாவது ஆட்சிக்கு வரட்டும், தமிழ் இனம் மலரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புதான் எனது பதிவில் மேலோங்கியுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

எனக்கு தெரிந்து கமல் பரமக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழர் என்றே அறிந்து உள்ளேன். ஆனால் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர். அதனால் அவர் தமிழ் இல்லை எனும் திராவிட அரசியலை ஒட்டி கருத்து சொல்கின்றீர்களா? நான் கமலை எதிர்க்கும் காரணத்தை மேலே தெளிவாக சொல்லியுள்ளேன்

அத்துடன் நான் மேலே சொன்ன கருத்து 'கூத்தாடிகள் பின்னால் தமிழகம் எத்தனை காலத்துக்கு அலைக்கழிக்கப்படுமோ' என்ற சொன்ன கருத்துக்கு; பின் வந்த உங்களின் பின்னூட்டத்துக்கு அல்ல

 

44 minutes ago, nedukkalapoovan said:

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

நாங்களும் பொதுவாகச்  சொன்னம்.

கமல்.. அரசியல் தெரிந்த ஒருவரல்ல.. தமிழகத்தில் தமிழ் மக்களை ஆள. கமல் சினிமா பற்றி தெரிந்திருக்கலாம்.. ஆனால் தமிழகத்தை ஆளக் கூடிய அளவு அவருக்கு தமிழகத்தின் மீதும் அக்கறையும் இல்லை.. தமிழ் மக்கள் மீதும் அக்கறையில்லை.. அரசியல் அறிவும் இல்லை. ஹிந்திய எஜமான விசுவாசத்தில் ஊறித்திழைத்த ஒருவர் தான் கமல். அவரால்.. தமிழகத்தை.. தமிழர்களை ஆள முடியாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட அபிப்பிராயம் , கண்டிப்பாக கமலும்,ரஜனியும் அரசியலுக்கு வரவேண்டும் அடுத்த தேர்தலை சந்திக்கவேண்டும்.

இருபது வருடங்களுக்கு மேலாக தலைவா அரசியலுக்கு வா, தமிழகத்துக்கு வழிகாட்டுஎன்பதும் கற்பனைக்கு மீறிய துதிபாடல்கள் செய்வதும் அடங்கிபோக ஒரு வாய்ப்பாக இருக்கும், வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்றவகையில் தேர்தல் முடிவுகள் அவர்களுக்காக உயிரை கொடுக்கும் தொண்டர்களுக்கு அமையும்.

தமிழக வரலாற்றிலெயே பல கட்சிகள் பிரிந்து நின்று சந்திக்கபோகும் முதல்தேர்தல் இனிமேல் வரபோவதாய் இருக்குமென்று நினைக்கிறேன். மிகபெரிய வாக்குவங்கிகளை கொண்ட அதிமுக மூன்றாகவும், திமுக ஸ்டாலின் அழகிரி என்று இரண்டாகவுமாகி பிரதான கட்சிகளே ஐந்தாக நிற்கும்போது புதிதாய் இவர்கள் ஆரம்பிக்கபோகும் கட்சிகளுக்கும் ஏற்கனவே இருக்கும் பிற கட்சிக்குகளுக்குமான போட்டியில் பெரும்பான்மை பெற்று யாராவது ஆட்சியமைப்பார்கள் என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்துவிடாது என்பதே பலர் எண்ணம்.

குரங்கு அப்பம் பங்கிட்டதுபோல் கட்சிகள் வெற்றிபெறும் எண்ணிக்கை அமைந்து கூட்டாட்சியும் இல்லாமல், கூடி பண்ணும் அரசியலும் இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அவ்வாறான ஒரு நெருக்கடிமிக்க அரசியல்போட்டி தேர்தலில்

ஐந்து தொகுதியோ, பத்து தொகுதியிலோ அல்லது அதிலும் குறைவான இடங்களிலோ மட்டும் வெற்றி பெறப்போகும்

அவர்களது ஆதர்ச கதாநாயகர்களை பின்பு எந்த முகத்தை வைத்து , மீண்டும் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டு,மாற்றம் வேண்டும்,நீங்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று இவர்கள் இன்னொருமுறை கேட்பார்கள்?

சமூக வலைதளங்களில் அவர்களுக்கான கொந்தளிப்புகள் ,விவாதங்கள், பட்டாசு,பால்காவடி,மொட்டையடித்தல்,மண்சோறு,அலகு குத்துதல்,நாக்கை அறுத்தல் ,தற்கொலை முயற்சிகளாவது அடங்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக அரசியலும்,ஆட்சியும் என்பது வெறும் ரசிகர்மன்றங்களின் துணையுடன் சபையேறக்கூடிய காலமல்ல இது என்பதை அவர்கள் உச்சியில் ஆணியடித்ததுபோல் உணர்த்த மிக கிடைத்த அரியவாய்ப்பு, கண்டிப்பாக அவர்கள் போட்டியிடவேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.