Jump to content

பிரதாப முதலியார்


Recommended Posts

பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம்

ஓவியங்கள் : ரமணன்

 

ன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’

50 வருடத்துக்கு முந்திய கதை இது.  ‘கொக்குவில்’ ஒரு சின்னக் கிராமம். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக அந்தக் கிராமத்தில் ரயில் ஸ்டேஷன் இருந்தது. கொழும்பிலிருந்து வரும் ரயில் அங்கு நிற்கும். சனங்கள் இறங்குவார்கள். திரும்பிக் கொழும்புக்குப் போகும்போது ஏறுவார்கள். சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் வருவார்கள். கொழும்புக்குப் போவதென்றால், எங்கள் ஊருக்கு வந்துதான் ஆகவேண்டும். எத்தனை பெருமை எங்களுக்கு.

எங்கள் வீடு, பக்கத்தில்தான் இருந்தது. ரயில் கூவும் சத்தம் கேட்டால், நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடுவேன். ரயில், ஸ்டேஷனுக்கு வருவதற்கிடையில் நான் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவேன். ரயிலைப் பார்ப்பதும், கைகாட்டி மரம் விழுவதும், ரயில் கேட் மூடுவதும், ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடியைக் காட்டியதும் ரயில் கொஞ்சம் பின்னால் நகர்ந்து புறப்பட்டு வேகமெடுப்பதும் பார்க்க எனக்கு அலுக்கவே மாட்டாது. ஒரு மலைப்பாம்பைப் பார்ப்பதுபோல, ஒரு யானையைப் பார்ப்பதுபோல, ரயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது இல்லாவிட்டால்கூட முடிவைக் கண்டுபிடிக்க முடியாத தண்டவாளம் இருக்கிறது.

p92a_1514538606.jpg

அவனுடைய பெயர் தவராசன் என்று சொன்னான்.  பக்கத்தில் உள்ள தாவடிதான் அவன் ஊர். என்ன வகுப்பு, எந்தப் பள்ளிக்கூடம் என ஒன்றுமே அவன் சொல்லவில்லை. காதுக்குள்ளே சதுரமான ஐந்து சதக் குற்றியைச் செருகியிருந்தான், பெரிய ஆளைப்போல. ரயில் பற்றி சகல விசயமும் அவனுக்குத் p92b_1514538621.jpgதெரிந்திருந்தது.  நிறுத்தாமல் பேசினான். நான் ஏதோ சொல்லத் தொடங்கியபோது, இரண்டு கைகளையும் தோள் அளவுக்குத் தூக்கினான், யாரோ எனக்குப் பின்னால் நின்று துப்பாக்கியை நீட்டியதுபோல.

“என்னுடைய தாத்தா, வெள்ளைக்கார இன்ஜினீயர் தண்டவாளம் போட்டதைப் பார்த்திருக்கிறார். இந்த ரயிலை இங்கிலாந்தில் செய்கிறார்கள். நிலக்கரியும் அங்கேயிருந்துதான் வருகிறது. தண்ணீர் மாத்திரம் எங்களுடையது. எனக்கு அது புகை விடுவதும், கூவுவதும், சத்தமிடுவதும் பிடிக்கும். டீசல் ரயில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். அதிலே புகையும் வராது. சத்தமும் கேட்காது. ரயில்போலவே இருக்காது” - அவன் பேசிக்கொண்டே போனான். என்னுடைய பெயரை மட்டுமே கேட்டான். நான் என்ன வகுப்பு, எங்கே படிக்கிறேன் என்ற தகவல் அவனுக்கு முக்கியமே இல்லை.

அவன்தான் சூரியன் ஒரு நட்சத்திரம் என்ற தகவலை எனக்குச் சொன்னான். அது பூமிக்குச் சமீபமாக இருக்கிறது. அதனால்தான் பெரிதாகத் தெரிகிறது. நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், சூரியனிலும் பார்க்க பல மடங்கு பெரியவை. அவை இருக்கும் தூரமும் அப்படித்தான். சில நட்சத்திரங்களின் ஒளி பூமிக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றான்.

“இதை எப்படி நம்புவது?”

“நாகப்பாம்பு இரவிலே ரத்தினக்கல்லைக் கக்கிவிட்டு அந்த ஒளியிலே இரை தேடும் என்று யாராவது சொன்னால், நீ உடனே நம்புவாய். ஏனென்றால், பொய் பல்லக்கில் வரும்; உண்மை தெருக்கூட்டும்.”
“தெருக்கூட்டுமா?”

``60 வருடச் சுழற்சியில் வருடங்கள் வரும். ஏன் தெரியுமா? பூமி, வியாழன், சனி கிரகங்களைத் தொடுத்தால் கிடைக்கும் முக்கோணம், அறுபது வருடங்களுக்கு ஒருமுறை அதே வடிவத்தில் வருகிறது.’’
``உனக்கு எல்லாமே தெரிகிறது. நிறையப் புத்தகம் படிப்பாயா?’’ என்று கேட்டேன்.

``ஓ, அவ்வப்போது படிப்பதுண்டு. வீடு முழுக்கப் புத்தகங்கள்தான்’’ என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சி, வீடு வந்த பிறகும் என்னைவிட்டுப் போகவில்லை. என்னுடைய வீட்டில் பாடப் புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும். வேறு நாவல்களோ, கதைப் புத்தகங்களோ, வாரப் பத்திரிகைகளோ கிடையாது. அவற்றை இரவல் வாங்கிப் படிக்கவும் முடியாது. ஐயா, `நாவல் உன்னைக் கெடுத்துவிடும். பாடப் புத்தகத்தைப் படி’ என்பார். அம்மா அப்படியல்ல. அவர் என் பக்கம் என்று எனக்குத் தெரியும். இரவல் வாரப் பத்திரிகைகள் கிடைத்தால் ஒளித்துவைத்து, ஐயா இல்லாத நேரங்களில் வாசிப்பேன். ஆனால், ஒரு நாவல்கூட படித்தது கிடையாது.

மூன்று நாள்களுக்கு முன்னர், ஒரு புதன்கிழமை அன்று தவராசனை மறுபடியும் ஸ்டேஷனில் சந்தித்தேன். நிறையப் புத்தகங்கள் தன் வீட்டில் இருக்கின்றன என்று அவன் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் ஊரில் மட்டை கிழிந்த நாவல் ஒன்று யாரிடமாவது கிடைத்தால், அது ஊர் முழுக்கச் சுற்றிய படியே இருக்கும். அம்மாவிடம் அவனைப் பற்றிச் சொன்னபோது, ``அவன் புளுகுறான்’’ என்று அம்மா தீர்மானமாகச் சொன்னார்.

``உன் வீட்டில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?’’ என்று அவனைச் சோதிப்பதற்காகக் கேட்டேன். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

``அதான் சொன்னேனே, எல்லாமே இருக்கிறது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகின்னு சகலதும் வீட்டிலே கிடக்கு. ஆசிரியர்கள்தான் வித்தியாசமேயொழிய, எல்லாமே ஒரே மாதிரி கதைகள்தான். `திகம்பர சாமியார்’, `ராதாரமணி’, `இரத்தினபுரி ரகஸ்யம்’. ஒன்று படித்தால் போதும். இவற்றையெல்லாம் வாசித்தால் மூளை வளராமல் நின்றுவிடும்.’’

``அவ்வளவு மோசமா?’’

``உன் உடம்பில் ஓடும் ரத்தம் வெளியே வரத் துடிக்கிறது தெரியுமா உனக்கு? கையை வெட்டினால் ரத்தம் பாய்ந்து வெளியேறும். செய்து பார்த்தால்தான் சில உண்மைகள் தெரியவரும். புத்தகத்தைப் படித்துப் பார். உனக்குப் புரியும்.’’

``உன் வீட்டில் இரவல் தருவார்களா?’’ என்றேன். எப்படியாவது ஒரு நாவலைப் படித்துவிட வேண்டும் என, என் இதயம் பெரிய சத்தத்துடன் அடிக்கத் தொடங்கியது. அவனிடமிருந்து வரும் பதில், என் வாழ்க்கையையே மாற்றிவிடும். கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்தேன். அவன் சொன்ன புத்தகங்களை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்றோருக்கு, தவம் செய்தால் மட்டுமே அவை கிடைக்கும். அம்மா வேறு சொல்லிவிட்டார், “இவன் புளுகுறான்” என்று. ஆனாலும், அவனை நம்பவேண்டும் எனப் பட்டது.

``வேறு யாரிடம் கேட்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வா. புத்தகம் என்ன வேலையா செய்கிறது? நீ பாக்குவெட்டி இரவல் கேட்டால், நான் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ அரிவாள் இரவல் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ என் வீட்டுக் குடத்தைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. புத்தகம் என்ன வேலை செய்கிறது? சும்மாதானே இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. நீ வந்து எடுத்துப் போ’’ - அப்போது அவன் தவராசன் போலவே இல்லை. தேவதூதன் போலவே தெரிந்தான்.

தாவடி, பக்கத்து ஊர்தான். ஆனால், நான் தனியாகப் போனதில்லை. ஐயா என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார். அம்மாவிடம் சொன்னபோது அவரும் நம்பவில்லை. ``அதிகமாகப் பேசுபவன், உண்மை சொல்ல மாட்டான். இவனை நம்பி நீ எப்படித் தனியாகப் போகலாம்’’ என்று என் பயத்தைக் கூட்டினார். எனக்கு, அவன் அப்படி ஒன்றும் பொய் சொல்கிறான் எனப் படவில்லை.

அடுத்த முறை சந்தித்தபோது அவன் கேட்டான். ``நீ வரவே இல்லை?’’

``நீதான் சொன்னாயே, புத்தகம் படித்தால் மூளை வளராது என்று. பள்ளிக்கூடத்தில் நீ புத்தகம் படிப்பதில்லையா?’’

p92c_1514538643.jpg

p92c_1514538643.jpg

 

``பள்ளிக்கூடமா... நான் அங்கே ஏன் போறேன்? என்னுடைய பெயரில் ஐந்து எழுத்துகள். அதை எழுத எவ்வளவு நேரம் பிடிக்கும்? பேனாவில் மை முடிந்துவிடுமா? தலைமையாசிரியர் என் பெயரை எழுதவில்லை. நானும் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திவிட்டேன்.’’

 ``நான் தாவடிக்கு ஒரு முறையும் வந்தது கிடையாது. தனியா வரப் பயமாயிருக்கு’’ என்றேன்.

அவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து சிரித்தான். ``தாவடி என்ன பக்கத்து நாடா? நீ படகில் கடலைக் கடக்கப்போறியா அல்லது காட்டில் வழி கண்டுபிடிக்கச் சொல்கிறேனா? ஒருவேளை பாலைவனத்தில் வழி தவறிவிடுவோம் என யோசிக்கிறாயா? நீ எப்படித் தொலைந்துபோவாய்? வழி தவறினாலும்கூட பரவாயில்லை. `தவராசன் வீடு’ எனச் சொல். காட்டுவார்கள்’’ என்றான்.

``நீ உன் வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்திருக்கிறாயா?’’ என்று கேட்டேன்.

``நான்தான் சொன்னேனே. ஒன்று படித்தால் மற்றவை எல்லாம் படித்ததுபோலத்தான். உண்மையைச் சொன்னால், எனக்கு புத்தகங்கள்மீது வெறுப்பு உண்டு. அவை மனிதனுக்கு உதவி செய்வதில்லை; கேடு செய்கின்றன. ஏன் தெரியுமா? புத்தகம் படிக்கும் ஒருவன், தான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறான். சொந்தமாகச் சிந்திப்பதைப் புத்தகங்கள் ஊக்குவிப்பது இல்லை. `திகம்பர சாமியாரை’ப் படிப்பதால், நீ உன் வாழ்க்கைக்கு வேண்டிய ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறாயா, `இரத்தினபுரி ரகஸ்ய’த்தைக் கண்டுபிடிப்பதால் உனக்கு என்ன பயன், அதைவைத்து என்ன செய்வாய்?’’

``என்னுடைய ஐயா, ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்தார். விளக்கை ஏற்றிவைத்து இரவு 1 மணி, 2 மணி வரை படிப்பார். அடுத்த நாள் டவுனுக்கு மறுபடியும் போய், புத்தகங்கள் வாங்கி வருவார். அம்மாவுக்குப் பிடிக்காது. வீட்டில் சமையலுக்கான பொருள்கள் இல்லை. ஐயா, புத்தக மூட்டையோடு வந்து இறங்குவார். சண்டை தொடங்கும். அப்படியும் அவர் நிறுத்தவில்லை. புத்தகப் பைத்தியமாகவே இருந்தார். சில வேளைகளில் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். அப்போது இந்தியாவுக்குப் போய் புத்தகங்கள் வாங்கி வருவார்.’’

``இந்தியாவுக்கா... எப்படிப் போவார்? காசுக்கு என்ன செய்வார்?’’

``கள்ளத்தோணிதான். பெரிய கடையில் கொண்டுபோய் காசைத் தந்தால், தினகரன் பேப்பரில் மூன்றாவது பக்கம் ஏதோ கிறுக்கித் தருவார்கள். அதை இந்தியாவுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தால், அங்கே இந்தியக் காசு கிடைக்கும். எல்லாம் மட்டை கிழிந்த பழைய புத்தகங்களாக வாங்கி வருவார். `எதற்காகப் பழைய புத்தகங்கள்?’ என்று அம்மா கேட்டால், `அதே காசுக்கு இரண்டு மடங்கு வாங்கலாம்’ என்பார். அம்மாவுக்கோ, எனக்கோ ஒன்றுமே வாங்கி வந்ததில்லை. அவ்வளவு பெரிய புத்தகப் பைத்தியம்.’’

``இரவு பகலாகப் புத்தகம் படிப்பவர், பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமே?’’

``புத்தகத்துக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? ஒருநாள் எங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடி கழன்று விழுந்துவிட்டது. நாங்கள் வீட்டுக்குள்ளே இருந்ததால் வெளியே போக முடியவில்லை. கைப்பிடியை எடுத்து மறுபடியும் பூட்டினால்தான் கதவைத் திறக்க முடியும். ஐயா வெளியேதான் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்குரூவைப் பூட்டத் தெரியவில்லை. இரண்டு நிமிட வேலை. இவ்வளவு புத்தகங்கள் படித்ததுதான் மிச்சம். கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவைத் திறந்து எங்களை விடுவித்தார்.’’

``நாவல்  படிக்கக் கூடாது என்கிறாயா... அதில் சுவாரஸ்யம் இல்லையா?’’
 
``நீ ஏன் அவசரப்படுகிறாய்? சாப்பிடும் முன் விரல் சூப்பக் கூடாது. முதலில் படி. பிறகு, நீயே உணர்ந்துகொள்வாய். புத்தகப் படிப்பு முக்கியமல்ல. வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதுதான் முக்கியம். சிந்திக்கப் பழகுவதை வகுப்பில் பாடமாக வைக்க வேண்டும்.

இங்கிலாந்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டினார்கள். செல்வந்தர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பணம் போட்டார்கள். பிரமாண்டமான கப்பல் என்பதால் அவ்வளவு லாபம் கிடைக்கும். ஆயிரம் பேர் பல மாதங்களாக உழைத்தனர். 4,000 பேர் அதில் பயணம் செய்யலாம். கட்டி முடித்த பிறகு, கப்பலை எப்படிக் கடலுக்குள் கொண்டுபோவதென்று தெரியவில்லை. ஒரு வருடமாக முயன்றும் முடியவில்லை. அவ்வளவு புத்தகங்களைக் கரைத்துக் குடித்துக் கப்பலைக் கட்டிய இன்ஜினீயர், அதை எப்படி கடலுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டார். கப்பல் சொந்தக்காரர்கள், அதை உடைத்து இரும்பாக விற்றுவிடுவது என முடிவுசெய்தார்கள். அந்த இரவு, இன்ஜினீயர்  தூங்கவில்லை. இதே யோசனையாக இருந்தார். அதிகாலையில் ஆள்களின் ஆரவாரம் கேட்டு, கதவைத் திறந்தபோது கப்பல் கடலில் மிதந்தது. இரவு கடல் பொங்கியதில், தண்ணீர் பெருகிக் கப்பலைக் கொண்டுபோய்விட்டது. புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்பதைத்தான் சொல்கிறேன்.’’

``சரி. சரி... நீ இப்போது சொன்னதுகூட  எங்கேயோ படித்ததுதானே. அது  எப்படிக் குற்றமாக முடியும்?’’p92b_1514538657.jpg

`` `ராதாரமணி’ நாவலைப் படிக்க 20 மணி நேரம் எடுக்கும். அதே கதையை நான் உனக்கு ஒரு மணி நேரத்தில் சொல்ல முடியும். அப்படியானால், 19 மணி நேரம் லாபம்தானே! படித்துத் தெரிந்து கொள்வதைவிட, பார்த்து, கேட்டுத் தெரிந்துகொள்வது உத்தமம். நான், ‘கப்பல் கதை’யைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.’’

தவராசனைப் பார்த்தேன். 12 வயதுப் பையன்போலவே அவன் இல்லை. பெரிய மனிதர் தோரணையில் பேசினான். அவன் இவ்வளவு சொன்னாலும் அவனிடம் புத்தகம் இரவல் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அம்மாவிடம் சொன்னேன். அவர்,  ``சரி, நாளைக்குப் போய்ப் பார். நீ ஏன் அதற்காகக் குழம்ப வேண்டும்? பயப்படாமல் போ’’ என்றார்.

அதிகாலை எழுந்து புறப்பட்டேன். அவ்வளவு தூரத்தை நான் தனியாளாகக் கடந்ததில்லை.  பாதி தூரம் நடந்து வந்தும் ஒருவரையும் காணவில்லை. ஒரு மனிதர், பெரிய பனைமரக் குத்தி ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு நடந்தார். அவரிடம் வழி கேட்டால், அவர் முழுத் தலையையும் என் பக்கம் திருப்ப வேண்டும். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒன்று, `சலுங் சலுங்..’ என என்னை நோக்கி ஓடிவந்தது. வேலி ஓரத்தில் நிற்க, அது என்னைத் தாண்டிப் போனது. முதலியார் வீட்டுக்குப் போகிறது போலும்.

கன்றுக்குட்டி ஒன்றைக் கயிற்றில் கட்டி இழுத்துப்போன மனுஷியிடம், ``தவராசன் வீடு...’’ என்றேன். அவர் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் வீட்டைக் காட்டினார்.

வீட்டுக்கு முன்னால் நின்று ``வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்’’ என்று கத்தினேன். ஒரு சத்தமும் இல்லை. ``தவராசன்...’’ என்று கத்தினேன். கதவு படாரெனத் திறந்தது. துணிவைத்து முடியைக் கட்டியிருந்த மெலிந்துபோன ஒரு பெண் நின்றார். ஜன்னல்களுக்கு எதிரியான ஒருவர் கட்டிய வீடு. பாதி வெயிலிலும் பாதி இருட்டிலும் இருந்தது. ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் இரண்டு சிறுமிகள் உட்கார்ந்து இருந்தனர். `பாட்டு சொல்லிக்கொடுக்கிறார்’ என்று ஊகித்தேன்.

``தவராசன்...’’ என்றேன்.

``ஓ... நீதான் புத்தகம் இரவல் வாங்க வந்தனியா? அவன் இல்லை. வா வா உள்ளே’’ என்றார்.

அப்படியொரு காட்சிக்கு என்னை நான் தயார்படுத்தவில்லை. கூரையிலிருந்து தரை மட்டும் நீண்ட நீண்ட புத்தகத் தட்டுகள் இருந்தன. அவற்றில் நிரையாகப் புத்தகங்கள் அடுக்கியிருந்தன. சில புத்தகங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. முதுகு உயரமான நாற்காலி ஒன்றின் மேல் 20, 30 புத்தகங்கள் கிடந்தன. நான் எங்கே தொடங்குவது எனத் தெரியாமல் மிரள மிரளப் பார்த்தேன்.

p92d_1514538678.jpg

``தம்பி...’’ என ஆறுதலாகப் பார்த்து, ``புத்தகத்தை எடுத்துக் காட்டிவிட்டுப் போ’’ என்றார். நான் பல புத்தகங்களைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேன். பலத்த யோசனைக்குப் பிறகு, `பிரதாப’ என்று தொடங்கும் ஒரு புத்தகத்தை அவரிடம் காட்டிவிட்டு எடுத்துச் சென்றேன்.

இரண்டு நாள்கள், ரகசியமாக அதைப் படித்து முடித்தேன். அம்மா பக்கத்தில் படுத்துக் கதை கேட்க, முழுக்கதையையும் சொன்னேன். இரண்டு நாள்கள் படித்ததை இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்தேன். எனக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு இப்ப அம்மாவுக்கும் தெரிந்தது. `அண்டகடாகமும் சிரித்தது’ என்றும், `தேகவியோகமானார்’ என்றும் நான் சொன்னபோது அம்மா மெல்லிய புன்னகை பூத்தார். ஞானாம்பாள் ஆண் வேடமிட்டு விக்கிரமபுரியை ஆண்டதை விவரித்தபோது, நானே ஒரு மன்னன் ஆகிவிட்டேன்.

``அம்மைபோட்ட ஞானாம்பாள், கடைசியில் தப்பினாளா?’’ என்று அம்மா கேட்டார்.

எனக்கும் தெரியவில்லை. அட்டையும், கடைசி சில பக்கங்களும் கிழிந்துவிட்டன. நானே இட்டுக்கட்டி ஒரு முடிவைச் சொன்னேன்.

ஒரு வாரம்  சென்ற பிறகு, தவராசனை ஸ்டேஷனில் சந்தித்தேன். பழுதான ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றான். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.

``இதுவா?’’ என்றான்.

``உன்னுடைய அம்மாவிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்தேன்.’’

``ஐயா படித்த கடைசி நாவல் இது. விளக்கு மட்டும் அணையாமல் எரிந்தது. பாதி படித்தபடி காலையில் இறந்துபோய் கிடந்தார்’’ என்றான்.

``இதுதான் நான் படித்த முதல் நாவல்’’ என்றேன். பிறகு ஏன் அப்படிச் சொன்னேன் எனத் திகைத்து, பேசாமல் அவன் காதில் செருகிய ஐந்து சதக் குற்றியை உற்றுப் பார்த்தவாறே நின்றேன். பெட்டிகளில் கொழும்புக்கு என்ன அனுப்புகிறான் எனக் கேட்டபோது, ``புத்தகங்கள்தான். ஐயா இறந்த பிறகு அதுதான் எங்களுடைய வருமானம்’’ என்றான்.

பல வருடங்களுக்குப் பிறகு அதே புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தேன். அம்மாவுக்காக நான் இட்டுக்கட்டிய முடிவு மிகத் திறமாகத்தான் இருந்தது. 50 வருடங்களாகப் புத்தகத்தின் தலைப்பைத்தான் நான் வேறு என்னவோ என நினைத்திருந்தேன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``வேறு யாரிடம் கேட்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வா. புத்தகம் என்ன வேலையா செய்கிறது? நீ பாக்குவெட்டி இரவல் கேட்டால், நான் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ அரிவாள் இரவல் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. நீ என் வீட்டுக் குடத்தைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது வேலை செய்கிறது. புத்தகம் என்ன வேலை செய்கிறது? சும்மாதானே இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. நீ வந்து எடுத்துப் போ’’ - அப்போது அவன் தவராசன் போலவே இல்லை. தேவதூதன் போலவே தெரிந்தான்.

இங்கிலாந்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்றைக் கட்டினார்கள். செல்வந்தர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பணம் போட்டார்கள். பிரமாண்டமான கப்பல் என்பதால் அவ்வளவு லாபம் கிடைக்கும். ஆயிரம் பேர் பல மாதங்களாக உழைத்தனர். 4,000 பேர் அதில் பயணம் செய்யலாம். கட்டி முடித்த பிறகு, கப்பலை எப்படிக் கடலுக்குள் கொண்டுபோவதென்று தெரியவில்லை. ஒரு வருடமாக முயன்றும் முடியவில்லை. அவ்வளவு புத்தகங்களைக் கரைத்துக் குடித்துக் கப்பலைக் கட்டிய இன்ஜினீயர், அதை எப்படி கடலுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டார். கப்பல் சொந்தக்காரர்கள், அதை உடைத்து இரும்பாக விற்றுவிடுவது என முடிவுசெய்தார்கள். அந்த இரவு, இன்ஜினீயர்  தூங்கவில்லை. இதே யோசனையாக இருந்தார். அதிகாலையில் ஆள்களின் ஆரவாரம் கேட்டு, கதவைத் திறந்தபோது கப்பல் கடலில் மிதந்தது. இரவு கடல் பொங்கியதில், தண்ணீர் பெருகிக் கப்பலைக் கொண்டுபோய்விட்டது. புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்பதைத்தான் சொல்கிறேன்.’’

 

மிக அருமையான கதை......! மேற்கோள் காடடவேண்டும் என்றால் கதை முழுவதையும் "கோட்" பண்ண வேண்டி வரும்.....!  tw_blush:

பி.கு: நிழலி சமீபத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கின்றேன் படிக்க நேரமில்லை என்று சொல்லியிருந்திர்கள். இந்தக் கதையைப் படித்தபின் அவைக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.