Jump to content

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும்:-


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும்:-

Donald-Tusk.jpg?resize=350%2C234

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும், Britain must withdraw the decision to leave the European Union

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க கோரிக்கை விடுத்துள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுதற்கு அதிகளவானோ வாக்களித்துள்ள நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29ம் திகதிக்குள் பிரிந்து செல்வதற்கு பிரதமர் தெரேசா மே தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸில் இன்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய டொனால்ட் டஸ்க் தமது பிரித்தானிய  நண்பர்களின் மனங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து விலக வேண்டும் என்ற முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தால் பல எதிர்மறை விளைவுகளுடன் அது நடந்தேறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்தை ஜனநாயகம் எனகட கூற முடியாது எனத் தெரிவித்த அவர் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாங்கள் எங்கள் மனதை மாற்றிக்கொள்ளவில்லை எனவும் எங்கள் இதயங்கள் உங்களுக்காக இன்னும் திறந்தே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Jean-Claude-Juncke.jpg?resize=612%2C407

இதற்கு பதிலளிதத  ஐரோப்பிய ஓன்றியத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஜீன் கிளோட் ஜங்கர் இங்கு நீங்கள் பேசியது லண்டனுக்கு கேட்டிருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/61772/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுருதி மாறுது?  ஆரம்பத்தில் வெளியேறுவதை விரைவு படுத்தனும் என்று சவுண்டு விட்டவையல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயங்களை மூடியே வையுங்கள் .,மீண்டும் தட்டப்போவதில்லை,  முடியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

என்ன சுருதி மாறுது?  ஆரம்பத்தில் வெளியேறுவதை விரைவு படுத்தனும் என்று சவுண்டு விட்டவையல் .

பாவம் பாக்கினம் போலை...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.