Jump to content

ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்


Recommended Posts

  •  
  • ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்
IMG_0024-750x430.jpg

ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்

 

இலங்கை அர­சி­யல்­வ­ர­லாற்­றில் ஈழத் ­தமி­ழி­னத்­துக்கு எதி­ராக அவ்­வப்­போது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் இன­வா­தத் தீ மூட்டி விடப்­பட்­ட­தற்­கும், ஜன­வரி மாதத்­துக்­கும் ஏதோ ஒரு­வித நெருங்­கிய தொடர்பு உள்­ளது.

தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்கு வேட்­டு­வைக்­க­வும் , உரிமைகளைப் பறித்­தெ­டுக்­க­ வும், பல படு­கொ­லை­களை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­ற­வும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, மற்­றும் சிங்­கள இடது சாரிக்­கட்­சி­கள் தேர்ந்­தெ­டுத்­தது, பெரும்­பா­லும் ஜன­வரி மாதத்­தையே என்­றால்­கூட அதில் தவ­றே­தும் கிடை­யாது.

அர­சி­யல் இலா­பம் ஈட்­டும் நோக்­கில், இன­வா­த­தத்தை முன்­வைத்து ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய தலைமை அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா தலை­மை­யி­லான அரசு, தனிச்­சிங்­க­ளச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது.

‘ஒரு ெமாழி என்­றால் இரு நாடு­கள், இரு­மொ­ழி­கள் என்­றால் ஒரு நாடு’ என்று நியா­யத்­துக்­கா­கக் குர­லெ­ழுப்பிய கலா­நிதி கொல்­வின் ஆர்.டி. சில்வா மற்­றும் இடது சாரித் தலை­வர்­கள், நாடு முழு­வதும் என்றல்­லாது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் மட்­டும் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்­மொ­ழி­வி­சேட ஏற்­பா­டு­கள் சட்­ட­மூ­லத்தை 1966 இல் எதிர்த்­தி­ருந்­த­னர்.

 

இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றும் உத்தி இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல

தமிழ் மொழிக்கு நிர்­வாக மொழி உரி­மையை நாட்­டின் குறித்­த­ வொரு பகு­திக்குத்தானும் வழங்­கி­னா­லும், அது சிங்­க­ள­மக்­க­ளுக் கெ­தி­ரா­னது என­வும், அத­னால் தமிழ்­மொ­ழிக்கு சட்­ட­ரீ­தி­யான எந்­த­ வொரு உரி­மை­யை­யும் வழங்­கக்­கூ­டாது என­வும் 1966 ஆம் ஆண்டு ஜன­வரி எட்­டாம்­தி­கதி நாட்­டில் கம்­யூ­னிஸ்­கட்சி, சம­ச­மா­ஜக்­கட்­சித்­த­லை­வர்­கள் உட் பட மற்­றும் இன­வாத அமைப்­பு­க்களது தலை வர்களும் ஒன்­று­சேர்ந்து எதிர்ப்பு ஊர்­வ­லத்­தை­யும் கண்­ட­னக்­கூட்­டத்­தை­யும் நடத்­தி­யி­ருந்­த­னர்.

ஊர்­வ­லத்­தைக் கலைப்­ப­தற்கு பொலி­சார் துப்­பாக்­கிச் சூடு மேற்­கொண்­ட­தில் பௌத்த பிக்கு ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம், ஐக்­கிய தேசி­யக்­கட்சி, தமி­ழ் அரசுக்­கட்சி உட்­பட சில இன­வா­தக்­கட்­சி­க­ளும் கூட்­டுச்­சேர்ந்து நடத்­திய ஆட்­சி­யின்­போது நடை­பெற்­றி­ருந்­தது.

பண்டா, செல்வா ஒப்­பந்­தத்­தில் இடம் பெற்­றி­ருந்த மொழி தொடர்­பான குறிப்­பிட்ட விதி­களை அதா­வது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமி­ழை­யும் நிர்­வாக மொழி­யா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்ற விதியை எதிர்த்து கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்­குப் பாத­யாத்­தி­ரையை மேற்­கொண்ட ஜே.ஆர் ஜெய­வர்த்­தன, 1966 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி – தமி­ழ் அரசுக்­கட்சி கூட்­ட­ர­சில் குறித்த அந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்­த­வர் என்­ப­தும் இலங்கை அர­சி­ய­லில் வர­லாற்­றின் முக்­கிய பதி­வா­கும்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள மக்­க­ளைத்­தூண்­டி­விட்டு அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் பெற்று ஆட்­சியை காலம் கால­மா­கத் தக்­க­வைப்­பதே அன்­றைய சிங்­க­ளக்­கட்­சி­க­ளின் நோக்­க­மாக இருந்­தது.

தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­யா­யி­ருந்த பூர்­வீக நிலங்­கள், ஏனைய சொத்­துக்­கள் தென்­னி­லங்­கை­யி­லும், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் எவ­ரி­டம் கைமா­றி­யுள்­ள­ன? பலாத்­கா­ர­மாக எப்­ப­டித்­திட்­ட­மிட்­டுப் பறிக்­கப்­பட்­டுள்­ளன? என்­பதை வர­லாறு தெளிவு­ப­டுத்­தும்.

நாட்­டின் இன­வாத அடிப்­ப­டை­யில் தோற்­று­விக்­கப்­பட்ட வன்­மு­றைக் கலா­சா­ரம், அர­சி­யல் இலா­பம் கருதி இரு பெரும் சிங்­கள தேசி­யக்­கட்­சி களால் கடந்த 70 ஆண்­டு­க­ளாக காய் நகர்த்தப் பட்டு வரு­கின்­றது.

இதற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­த­தும் ஒரு ஜன­வரி மாத­மே­யா­கும். அது 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட் டாம்­தி­கதி இடம் பெற்ற முக்­கிய சம்­ப­வ­மா­கும்.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

நாடு முழு­வ­தும் ஒற்­று­மை­யாக வாழ்ந்த தமிழ்­மக்­களை 1958ஆம் ஆண்டில் இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரம் மூல­மாக சிங்கள அரசியல் வாதிகள் சிங்­கள மக்­க­ளுக்கு இனத்துவே­சத்­தை­ யூட்டி இனப்­ப­கையை உண்­டாக்­கி­ய­வ­ர­லா­றும் இச்­சம்­ப­வங்­க­ளுக்­குள் அடக்­கம்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதன்­மு­றை­யாக நான்கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்­பா­டு­கள் மேற்கொள்ளப்பட்டபோது அதனைக் கொழும்­பில் நடத்­து­மாறு அப்­போ­தைய தலைமை அமைச்சரான சிறி­மாவோ பண்­டார நாயக்கா தலை­மை­யி­லான அரசு, உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மன்­றத்­தி­ன­ரி­டம் கேட்­டுக்­கொண்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் முற்றுமுழுதாகத் தமிழ்­மக்­களே வாழு­கின்­ற­ப­டி­யி­னால் அங்­கேயே மாநாட்டை நடத்­து­வ­து­தான் பொருத்­த­மா­கு­மெ­னக்­கூறி அந்த அமைப்பினர் அதனை மறுத்­து­விட்­ட­னர்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி 4 ஆம் தொடங்கி 10 ஆம்­தி­கதி வரை யாழ்ப்பாணத்தில் கோல­ாக­ல­மாக நடை­பெற்ற தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் இறுதி நாளன்று நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த தமிழ் மக்­கள் மீது, குரோத உணர்­வு­டன் சிறி­மாவோ அரசு திட்­ட­மிட்டு பொலி­சா­ரைக்­கொண்டு தாக்­கு­தல்­களை நடத்தி முடித்­தி­ருந் தது.

தமிழ்­மக்­கள் சிதறி ஓடு­கை­யில் பொலி­சார் உயர் அழுத்­த­மின்­சா­ரக்­கம்­பி­கள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கம் மேற்­கொண்­ட­போது கம்­பி­கள் அறுந்து வீழ்ந்­த­தில் ஒன்­பது தமி­ழர்­கள் படு கொலை செய்­யப்­பட்­ட­னர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு கிழக்கு மாகா­ணத்­தில் பல படு­கொ­லைச்­சம்­ப­வங்­களை தனது 11 வரு­ட­கால ஆட்­சி­யில் நடத்­தி­யி­ருந்­தது. அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்த பல கிரா­மங்­க­ளில், மக்­கள் படை­யி­ன­ரால் கொன்­ற­ழிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களை எளி­தில் எவ­ரா­லும் மறந்திட ­மு­டி­யாது.

அதில் ஒன்று 1987 ஆம் ஆண்டு ஜன­வரி 28, 29 ஆம் திக­தி­க­ளில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள கொக்­கட்­டிச்­சோலை தமிழ்க்­கி­ரா­மத்­தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட அப்­பா­வித்­த­மிழ் மக்­கள் படை­யி­ன­ரின் தாக்­கு­தல்­க­ளில் கொன்­றொ­ழிக்­கப்­பட்ட கொடும் துய­ரம் மிக்க, தமி­ழர்­க­ளின் நெஞ்­சங்­களை உறை­ய­வைத்த சம்­ப­வ­மா­கும்.

இந்தக் கொ­லைச்­சம்­ப­வம் தொடர்­பாக மறைந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான யோசப் பர­ரா­ஜ­சிங்­கம் ஐ.நா.வின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தார். அதன்­பின்­னரே ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு செய்­தி­ருந்த அந்­தப் படு­கொ­லைச் சம்­ப­வம் குறித்த விவ­ரங்­கள் பன்­னாட்­டு­கள் மட்­டத்­தில் தெரிய வந்­தன.

இதுவரை நீதி வழங்கப்படாத திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரம்

2006 ஆம் ஆண்டு ஜன­வரி இரண்­டாம் திகதி திரு­கோ­ண­ம­லை­யில் பிர­பல கல்­லூ­ரி­க­ளில் உயர்­தர வகுப்­பில் கல்வி கற்று வந்த ஐந்த மாண­வர்­க­ள் வழ­மை­போன்று காந்தி சிலைக்­க­ரு­கி­லி­ருந்து உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­னர்.

2005,2006 ஆம் கல்­வி­யாண்டில் பல்­க­லைக்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கி­யி­ருந்த இந்­துக்­கல்­லூரி மாண­வர்­க­ளான நாலு­பே­ரும் அவர்­க­ளின் மாணவ நண்­ப­ரான மற்றொருவருமான ஐந்­து­பேரே அவர்­க­ளா­வர். தங்­கத்துரை சிவா­னந்தா, மனோ­கரன் ரஜீகர், சண்­மு­க­ராஜா கஜேந்­தி­ரன், லோ.ரோகன், யோ.ஹேமச்­சந்­தி­ரா ஆகிய மாண­வர்கள் துப்­பாக்­கிச் சூட்­டில் படு­ கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது அந்த வேளை­யில் தமி­ழர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சத்­தை­யும் ஆத்­தி­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதி­ர­டிப்­ப­டை­யி­னர் எனக்­க­ரு­தப்­பட்ட சீரு­டை­யி­னர், அந்த மாண­வர்­களை நிலத்­தில் படுக்­க­வைத்து காதுக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தால் மாண­வர்­கள் அனை­வ­ரும் மூளை சிதறி இறந்­தி­ருந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தப் படு­கொ­லை­கள் சம்­பந்­த­மாக சந்­தே­கத்­தின் பேரில் 12 ஆயு­தப்­ப­டை­யி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். குறித்த மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் சர்­வ­தேச அள­வில் கவ­னத்தை ஈர்த்த சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யி­ருந்­தது 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்­டின்­போது மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் ஆணை­யா­ளர் நாய­க­மான நவ­நீ­தம்­பிள்ளை 20 பக்­கங்­களை கொண்­ட­தும் 74 விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­துமான இலங்­கை­யில் இடம்­பெற்ற பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களை உள்­ள­டக்கி வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பிட்ட திரு­கோ­ண­ மலை மாண­வர்­க­வ­ளது படு­கொ­லைச் சம்­ப­வ­மும் உள்­ளக்­கப்­பட்­டி­ருந்­தது.

திரு­கோ­ண­ம­லை­யில் படு கொலை செய்­யப்­பட்­ட­ஐந்து மாண­வர்­கள் தொடர்­பான வழக்கு பிர­சித்தி பெற்ற சட்டத்துறை நிபு ணர்கள் உள்­ள­டங்­கிய உத­ல­கம ஆணைக் கு­ழு­வி­னால் கடந்த 2006, 2007 காலப்­ப­கு­தி­க­ளில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த போதி­லும் மகிந்த அரசோ,குறித்த ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கையை ஒரு­போ­தும் வெளியிட்­டி­ருக்­க­வில்லை.

அதே காலப்­ப­கு­தி­க­ளில் ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­னா­லும் விசா­ரிக்­கப்­பட்­டி ­ருந்­தது.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு குறித்த படு­கொ­லை­கள் பற்­றிய மேல­திக விசா­ர­ணை­களை அரசு மேற்­கொள்ள வேண்­டு­மென நவ­நீ­தம் பிள்­ளை­யின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர் ரஜீ­க­ரின் தந்­தை­யான மருத்­து­வ­ரான காசிப்­பிள்ளை மனோ­க­ரன் 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேர­வை­யில் இப்­ப­டு­கொலை தொடர்­பாக பன்னாட்டு விசா­ரணை வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ ருந்­தார்.

2013 ஆம் ஆ்ண்டு பெப்­ர­வரி மாத­மும் இதே­பே­ர­வை­யில் இப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக இலங்கை அரசு எவ்­வித விசா­ர­ணை­களையும் மேற்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்­டை­யும் அப்­போது முன்­வைத்­தி­ருந்­தார்.

தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான இரா. சம்­பந்­தன் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றக் குழு அறை 14 இல் நடை பெற்ற தமி­ழர் பேர­வை­யின் மூன்­றா­வது ஆண்டு கருத்­த­ரங்­கில் உரை­யாற்­று­கை­யில் திரு­கோ­ண­ம­லை­யில் 5 மாண­வர்­க­ளின் படு­கொலை, மூதூ­ர।ில் தொண்­டர் அமைப்­பைச்­சேர்ந்த 17 உத­விப்­ப­ணி­யா­ளர்­க­ளின்­ப­டு­கொ­லை­கள் என்பவை தொடர்­பில் இலங்கை அரசு உறுதி மொழி வழங்­கி­யி­ருந்­தும் அந்த விசா­ர­ணை­க­ளைப் பூர்த்தி செய்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்­தின் முன் நிறுத்த மகிந்­த­ ரா­ஜ­பக்ச அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்­லை­யென குற்­றம் சுமத்­தி­யி ­ருந்­தார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரத்தில் தற்போதும் தொடரும் அழுத்தங்கள்

ஜன­வரி 25 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு சுட­ரொ­ளிப் பத்­தி­ரி­கை­யின் ஊட­க­வி­ய­லா­ள­ரான சுகிர்­த­ரா­ஜன் திரு­கோ­ண­மலை உவர்­ம­லை­யில் காலை வேளை சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இவர் தி­ரு­கோ­ண­ம­லை ­யில் இடம் பெற்ற மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மாக உண்­மைச்­செய்­தி­களை துணிச்­சலு­டன் வெளியிட்­டி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­கோ­ண­மலை மாண­வர்­கள் படு­கொலை தொடர்­பில் தாம­த­மா­கும் நீதி மறுக்­கப்­பட்ட நீதிக்­குச்­ச­மம் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத்­தூ­து­வர் அதுல்­கே­சாப் அண்­மை­யில் தனது ருவிட்­ட­ரில் பதிவு செய்­தி­ருந்­தார்.

பிர­தான சாட்சி வெளிநாட்­டில் இருப்­ப­த­னால் இந்த வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­மு­டி­ய­வில்லை என­வும், இந்த நிலை­யில் ஸ்கைப் தொழில் நுட்­பத்­தி­னூ­டாக வழக்கை முன்­னெ­டுப்­ப­ தாகவும் அமைச்­ச­ரான சாக­ல­ரட்­னா­யக்கா அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரான அதுல் கேசாப்­பிற்கு பதி­ல­ளித்­துள்­ளார்.

இன்­றைய கூட்டு அர­சு­கூட இந்த வ­ழக்கு ச் சம்­பந்­த­மாக வாய்­மூடி இருக்­கின்ற நிலை­யில், அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரின் கருத்து ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மான 12 ஆவது நினைவு மாத­மான தற்­போ­தைய ஜன­வரி மாத ஆரம்­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான நீதி எப்­போது கிடைக்­கும் என்று 12 ஆண்­டு­க­ளாக அவர்­க­ளது உற­வு­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமிழ்த்­தே­சி­யத்­திற்­காக தன்­னந்­த­னி­யாக நின்று குரல் கொடுத்த சட்­டத்­த­ர­ணி­யான குமார் பொன்­னம்­ப­லம் 2000 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5 ஆம் திக­தி­யன்று, முன்­னை­நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சிக் காலத்­தில் கொழும்­பில் வைத்து பகல் வேளை­யில் சுட்­டுக்­கொல் பப்­பட்­டி­ருந்­தார்.

அது தமி­ழி­னத்­தின் பெரிய இழப்­பாக அமைந்­தி­ருந்­தது.
போர் இறு­திக்­கா­லப்­ப­கு­தி­யில், 2008, 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­கா­லப் பகு­தி­க­ளில் வன்னி பெரு­நி­லப் பரப்பில் மகிந்த அர­சின் ஆத­ர­வு­டன் படை­யி­னர் பெருந்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு பல அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்..

2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திக­தி­ய­ள­வில் படை­யி­னர் கிளி­நொச்­சி­ யைக் கைப்­பற்­றிய பின்­னர் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­ருந்த மக்­கள் சகலரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்துக்கு இடம்­பெ­யர்ந்து சென்­ற­தும், ஜன­வ­ரி­மா­தத்­தி­லேயே ஆகும். தமி­ழி­னத்துக்கு எ­தி­ரான சிங்­கள அர­சு­க­ளின் நட­வ­டிக்­கை­கள் யாவும் காலத்­தின் முக்­கிய பதி­வு­க­ளா­கும்.

மகிந்த ஆட்­சி­யின்­போது சில ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்­லப்­பட்­டும், கடத்­தப்­பட்டு மிருந்­த­னர். 2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி, ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தியா­க­ராசா மகேஸ்­வ­ரன் கொழும்­பி­லுள்ள இந்து ஆல­யத்­தின் முன் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

ஜன­வரி 6 ஆம் திகதி சிரச ஊடக வலை­ய­மைப்பு மீது குண்­டுத்­தாக்­கு ­தல் நடத்­தப்­பட்­டது. ஜன­வரி 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­ய­ரான லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

ஜன­வரி 24 ஆம் திகதி ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்­டார்.இப்­ப­டிப்­பட்­ட­பல சம்­ப­வங்­க­ளு­டன் பல ஆண்­டு­க­ளின் ஜன­வ­ரி­மா­தம் பின்­னிப் பிணைந்­த­தான வர­லாற்­றுப் பதி­வு­கள் இலங்­கை­யின் கறை­ப­டிந்த வர­லா­று­க­ளாக அமைந்­து­விட்­டுள்­ளன.

http://newuthayan.com/story/62935.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.