Jump to content

ஊமை! – சிறுகதை


Recommended Posts

ஊமை! – சிறுகதை

 

213074396515131591591668199385sirukathai.jpg

ரமே­ஷுக்கு அன்று முத­லி­ரவு. பால் செம்­பு­டன் படுக்­கை­ய­றைக்­குள் நுழைந்த மனைவி பத்­மாவை பாசத்­தோடு அர­வ­ணைத்து தனது அரு­கில் உட்­கார வைத்­தான். தன்­னைப் பற்­றி­யும் தனது குடும்­பத்தை பற்­றி­யும் விரி­வாக எடுத்­து­ரைத்­தான். நான் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் மேனே­ஜ­ராக வேலை பார்ப்­ப­தா­க­வும், தனக்கு ஒரு தம்­பி­யும் ஒரு தங்­கை­யும் உண்டு என்­றும், அப்பா ரயில்­வே­யில் வேலை பார்ப்­ப­தா­க­வும், அம்மா கொஞ்­சம் வாயா­டி­யா­னா­லும் அன்­பா­வ­ன­வர் என்­றும் கூறி­னான். நீ குடும்­பத்­தில் மூத்த மரு­ம­கள் என்­ப­தால் எல்­லோ­ரி­ட­மும் அன்­பா­க­வும் – பாச­மா­க­வும் நடந்து கொள்ள வேண்­டும் என்­றும் குடும்­பத்தை நல்ல முறை­யில் கவ­னித்து கொள்­ள­வேண்­டும் என்­றும், கூறி­னான்.

எல்­லா­வற்­றிற்­கும் சிரித்­த­ப­டியே "சரி.. சரி'' என்று தலையை ஆட்­டி­னாள் மனைவி. அதைப் பார்த்து மிக­வும் சந்­தோ­ஷம் அடைந்­தான் ரமேஷ். "ஆஹா.. நான் எவ்­வ­ளவு நேரம் பேசி­யும் வாய் ­தி­றந்து ஒரு வார்த்தை கூட பேச­வில்­லையே! எவ்­வ­ளவு அடக்­கம்! என்ன மரி­யாதை!! அழ­கும் – அடக்­க­மும் நிறைந்த மனை­வி­யல்­லவா நமக்கு கிடைத்­தி­ருக்­கி­றாள்! உண்­மை­யிலேயே நாம் கொடுத்து வைத்தவன்­தான்'' என்று நினைத்து மகிழ்ந்தான்.

மறு­நாள் காலை எல்­லோ­ரும் அமர்ந்து சிற்­றுண்டி சாப்­பிட்டு கொண்­டி­ருந்­த­னர். அப்­போது ரமேஷ் மாமாவை பார்த்து...

"மாமா, உங்க மகள் ஏன் வாய் திறந்து பேசவே மாட்­டேன்ங்­கி­றாங்க. ராத்­தி­ரி­யில இருந்து நானும் பார்க்­கத்­தான் செய்­கி­றேன். ஒரு வார்த்தை கூட பேசவே இல்­லையே? வெட்­கத்­தில பேச­வில்­லையா..? இல்லை மவுன விர­தமா..?''

"என்ன மாப்ளே.. எது­வும் தெரி­யா­தது போல கேட்­கி­றீங்க? அவள் எப்­படி பேசு­வாள்? அவள்­தான் ஊமை­யா­யிற்றே?''

இதை கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்­தான் ரமேஷ். "என்ன மாமா சொல்­றீங்க? பத்மா ஊமையா? உண்­மை­யைத்­தான் சொல்­றீங்­களா? இல்லை தமாஷ் பண்­றீங்­களா..?'' – பதட்டத்து­டன் கேட்­டான்.

"ஆமாம் மாப்­பிள்ளை, உண்­மை­யைத்­தான் சொல்­றேன். ஏன், பத்மா ஊமைங்­கிற விஷ­யம் உங்­க­ளுக்கு தெரி­யாதா? புரோக்­கர் இந்த விஷ­யத்தை உங்­க­கிட்ட சொல்­ல­லையா..?''

"சொல்­லவே இல்­லையே? ஐய்யோ நான் ஏமாந்து போயிட்­டேனே? புரோக்­கர் என்னை ஏமாத்திட்­டானே? போயும்­போ­யும் ஒரு ஊமைய்­யய்யா நான் கல்­யா­ணம் பண்­ணி­னேன்? நேத்து ராத்­திரி நான் அவ்­வ­ளவு தூரம் பேசி­யும் பதி­லுக்கு ஒரு வார்த்தை கூட பேசா­மல் தலை தலையை ஆட்­டி­னாளே, அது இத­னால் ­தானா? பெண் பார்க்க வந்தபோது கூட என்னை பிடிச்­சி­ருக்­கான்னு கேட்­டேன். "ஆமாம்'' என்றுதான் தலையை அசைத்­தாள். அப்­போதே நான் உஷா­ராகி இருக்க வேண்­டுமே? வெளி அழகை பார்த்து மயங்­கி­விட்­டேனே? ஐயையோ இனி நான் என்ன செய்­வேன்?'' தலை­யில் அடித்­த­படி புலம்­பி­னான்.

"நாங்க எல்லா விஷ­யத்­தை­யும் புரோக்­கர்­கிட்ட சொல்­லித்­தான் இந்த கல்­யா­ணத்தை நடத்தினோம். எங்க மேல எந்த தப்­பும் இல்லை. நாங்க யாரை­யும் ஏமாத்­த­வும் இல்லை. பத்து வய­சு­ வரை அவள் நல்­லாத்­தான் பேசிக்­கிட்­டி­ருந்­தாள். அவளை நாங்க வாயா­டின்னு கூட சொல்­லு­வோம். யார் கண்­ணு­பட்­டதோ தெரி­யல. பத்து வய­சில வந்த டைபா­யிடு ஜுரம் அவளை வாய்­பே­சாத படி ஊமை ஆக்கிடுச்சு. மற்­ற­படி அவள் பிற­வி­யிலே ஊமை இல்லை. புரோக்­கர் செய்த தப்­புக்கு நான் மன்­னிப்பு கேட்­டுக்­கி­றேன்.'' மாம­னார் தனது பக்க நியா­யத்தை எடுத்­து­ரைத்­தார்.

'தனக்கு வாய்­பே­சாத ஊமை மனை­வி­யா­னதை நினைத்து வருந்­தி­னான் ரமேஷ். சரி நடந்­தது நடந்­தாச்சு . முறைப்­படி தாலி­கட்டி மனை­வி­யும் ஆக்­கி­யாச்சு , முத­லி­ர­வும் நடந்­தாச்சி. இனி ஏன்ன செய்­வது? குடும்­பம் நடத்­த­வேண்­டி­ய­து­தான். எல்­லாம் என் தலை­விதி' என்று தன்­னைத்­தானே சமா­தா­னப்­ப­டுத்தி கொண்­டான்.

ஊமை மனை­வி­யு­டன் அவ­னது வாழ்க்கை தொடர்ந்­தது. மனைவி ஊமை­யாக இருப்­பது ஒரு வகை­யில் அவ­னுக்கு நிம்­ம­தியை கொடுத்­தது. அவன் என்ன கத்­தி­னா­லும் அவள் வாய் திறக்க மாட்­டாள். என்ன திட்­டி­னா­லும் பதில் பேச­மாட்­டாள். கண­வன் – மனைவி சண்­டை­கள் நடக்­காத வீடு­கள் இல்லை. சில வீடு­க­ளில் கண­வ­னின் குர­லை­விட மனை­வி­யின் குரல் ஓங்கி நிற்க்­கும். கண­வன் வாயி­லி­ருந்து மடை திறந்த வெள்­ளம் போல தகாத வார்த்­தை­கள் வரும். அதற்கு ஈடு கொடுக்­கும் வகை­யில் 'நீ நல்­லா­யி­ருப்­பியா..? நீ நாச­மாக போக..!'  போன்ற சாபங்­கள் மனை­வி­யின் வாயி­லி­ருந்து வரும். ஆத்­தி­ரத்­தால் வீட்­டில் பாத்­தி­ரங்­கள் பறக்­கும். விலை­யு­யர்ந்த பொருட்­கள் உடை­யும். வாய் சண்டை முற்றி சில நேரங்­க­ளில் அடி ­த­டி­யில் முடிந்­து­வி­டும். அது சில சம­யங்­க­ளில்

விவா­க­ரத்து வரை சென்­று­வி­டும். இந்த பிரச்னைகள்  எது­வும்

ரமே­ஷின் வாழ்­வில் இல்லை. அந்த வகை­யில் அவன் நிம்­ம­தி­யாக

இருந்­தான்.

இருந்­தா­லும், மனைவி பேசி பார்க்­க­வேண்­டும் என்ற ஆசை அவ­னுக்கு இருந்­தது. அவளை பேச வைப்­ப­தற்­கான பல முயற்­சி­களை அவன் மேற்­கொண்­டான். பல

டாக்­டர்­க­ளி­டம் சென்று ஆலோ­சனை கேட்­டான். அலோ­பதி, ஆயுர்­வே­தம், ஹோமி­யோ­பதி, அக்­கு­பஞ்­சர் என்று பல சிகிச்சைகளை செய்து பார்த்­தான். மந்­தி­ர­வா­தி­க­ளி­ட­மும் பணத்தை இழந்­தான். எதி­லும் பயன் இல்லை. எல்லா சிகிச்சைகளும் தோல்வி அடைந்­தன.

பத்து வரு­டங்­க­ளாக பல்­வேறு முயற்­சி­கள் செய்­தும் மனை­வியை பேச வைக்க முடி­ய­வில்லை என்று வேத­னை­யோடு இருந்­த­போது, அன்­றைய ஓர் ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஒரு செய்­தியை பார்த்­தான். "அமெ­ரிக்­காவை சார்ந்த பிர­பல காது, மூக்கு, தொண்டை மருத்­து­வ ­நி­பு­ணர் தாமஸ் சென்­னை­யில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னைக்கு வரு­கி­றார். பிறவி ஊமையை தவிர மற்­ற­வர்­களை பேச வைக்­கி­றார்'' என்று இருந்தது. இந்த செய்­தியை படித்த ரமேஷ் மகிழ்ச்­சி­யால் துள்ளி குதித்­தான். நம்­மு­டைய மனை­விக்கு விடி­வு­கா­லம் பிறக்க போகி­றது. நாம் நினைத்­தது நடக்க போகி­றது என்று சந்­தோ­ஷ­ம­டைந்­தான். உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு சென்று முன்­ப­திவு செய்­து­கொண்­டான்.

குறிப்­பிட்ட நாளில் மனை­வி­யை­யும் அழைத்­துக் கொண்டு மருத்­து­வ­ம­னைக்கு சென்­றான். மனை­வியை பரி­சோ­தித்த டாக்­டர் 'பிரச்னை எது­வும் இல்லை. தொண்­ட­டை­யில் ஒரு சிறிய ஆப­ரே­ஷன் செய்­தால் போதும். பேச்சு வந்­து­வி­டும். இரண்டு லட்­சம் ரூபாய் செலவு ஆகும்' என்­றார். இதை கேட்ட ரமே­ஷின் முகம் மலர்ந்­தது. "எவ்­வ­ளவு பணம் செல­வா­னா­லும் பர­வா­யில்லை டாக்­டர். என்­னு­டைய மனை­விக்கு பேச்சு வந்­தால் போதும்'' – என்று மகிழ்ச்சி பொங்க சொன்­னான்.

மறு­நாளே ஆபரேஷன் வெற்­றி­க­ர­மாக நடந்­தது. "ஒரு மாதத்­திற்கு பிறகு மனைவி கொஞ்­சம் கொஞ்­ச­மாக பேச ஆரம்­பிப்­பாள்'' என்­றார் டாக்­டர். டாக்­டர் சொன்­னது போலவே ஒரு மாதத்­திற்கு பிறகு மனைவி பேச ஆரம்­பித்­தாள். முதன் முத­லில் 'அத்­தான்' என்று தன்னை அழைப்­பாள் என்று ஆசை­யோடு எதிர்­பார்த்­தான். ஆனால் அவள் "அ..ம்..மா'' என்று பேச ஆரம்­பித்­தாள். பிறகு "அ..ப்..பா'' என்று சொன்­னாள். 3–வதாக ரமேஷை பார்த்து "அ..த்..தான்'' என்று அழைத்­தாள். இதைப்­பார்த்த ரமேஷ்

மகிழ்ச்­சி­யால் துள்ளி குதித்­தான். மனைவி பேசு­வதை பார்த்து பர­வ­ச­ம­டைந்­தான். தனது முயற்சி வெற்றி பெற்­றதை நினைத்து பெரு­மை­ய­டைந்­தான். எல்­லோ­ருக்­கும்

இனிப்பு வழங்கி மகிழ்வை பகிர்ந்து கொண்­டான்.

நாட்­கள் செல்ல செல்ல, மனைவி சர­ள­மாக பேச ஆரம்­பித்­தாள். சில நேரங்­க­ளில் அள­வுக்­க­தி­மா­க­வும் பேசி­னாள். இது ரமே­ஷுக்கு வேத­னையை கொடுத்­தது. போக போக ரமேஷை ஏதிர்த்து பேச­வும் துணிந்­தாள். ரமேஷ்  ஒன்று சொல்ல, பதி­லுக்கு அவள் இரண்டு சொல்ல, அத­னால் அவர்­க­ளுக்­குள் அடிக்­கடி சண்­டை­கள் வர­வும் ஆரம்­பித்­தன.

ஒரு ­நாள் ஒரு நெக்­லஸ் வாங்­கி­ கேட்­டாள் மனைவி.

''என்­னி­டம் பணம் இல்­லை­'' என்றான் ரமேஷ்.

"ஆமா.. உங்­களை கல்­யா­ணம் பண்ணி பத்து வருஷமானது. என்ன சுகத்தை கண்­டேன்? நல்ல நகை­கள் உண்டா? நல்ல புட­வை­கள் உண்டா? பக்­கத்து வீட்டு ரமாவை பாருங்க. மாசத்­துக்கு ஒரு புடவை எடுக்குறா. வரு­ஷத்­துக்கு ஒரு நகை எடுக்குறா. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யானா ஸ்கூட்­ட­ரில் ஸ்டார் ஓட்ட­லுக்கு போயி ஜாலியா டிபன் சாப்­பிட்டு வர்­றாங்க. நீங்க என்ன வாங்கி தந்­தீங்க? வெளி­யில எங்­க­யா­வது கூட்­டிட்டு போனீங்­களா? பத்து வரு­ஷமா ஊமையா இருந்­த­தி­னால எது­வும் கேட்க முடி­யல. இப்ப ஒரு நகை வாங்கி கேட்டா இல்லேன்னு சொல்­றீங்க. சம்­பா­திக்­கிற காசெல்­லாம் என்ன செய்­றீங்க? உங்க குடும்­பத்­துக்கு கொடுக்­கி­றீங்­களா? எல்­லாம் என் தலை­யெ­ழுத்து''.

மனை­வி­யின் ஆவேச பேச்சை கேட்டு ரமேஷ் அதிர்ச்சி அடைந்­தான். என்ன சொல்­வ­து­ என்று தெரி­யா­மல் சிலை போல நின்று கொண்­டி­ருந்­தான்.

"என்ன பேசா­மல் நிற்­கி­றீங்க? கேக்குறதுக்கு பதில் சொல்­லுங்க. ஏன் நீங்க இப்ப ஊமை­யா­யிட்­டீங்­களா..?'' கிண்­ட­லாக கேட்­டாள்.

மனைவி இப்­படி மோச­மாக பேசு­கி­றாளே என்று கவ­லை­ய­டைந்­தான் ரமேஷ். அவள் இப்­படி பேசு­வாள் என்று கொஞ்சம் கூட அவன் எதிர்­பார்க்­க­வில்லை. பத்து வரு­ஷம் பேச­றதை எல்­லாம் பத்து நிமி­ஷத்­தில் பேசி­விட்­டாளே என்று வருந்­தி­னான். ஊமை­யாக இருந்­த­போது எந்த பிரச்னையும் இல்­லா­மல் வீடு நிம்­ம­தி­யாக இருந்­தது. பேச ஆரம்­பித்­த­வு­டன் என்­னு­டைய நிம்­ம­தி­யெல்­லாம் போச்சே. கிளி மாதிரி பேசு­வாள் என்றுதானே நினைத்­தேன். இப்­படி பேய் மாதிரி கத்­து­வாள் என்று கன­வி­லும் நினைக்­க­வில்­லையே. இனிமே போக போக என்­ன­வெல்­லாம் பேச போகி­றாளோ. நினைத்­தால் பய­மாக இருக்­கி­றதே. ஐயோ இனி நான் என்ன செய்­வேன்?' என்று கண்­க­லங்­கி­னான். அவளுடைய பேச்­சுக்கு முடிவு கட்ட நினைத்­தான்.

"நீ ஊமையா இருந்­தப்போ எந்த பிரச்னையும் இல்­லாம வீடு சந்­தோ­ஷமா இருந்­தது. நீ பேச ஆரம்­பிச்­சவுடனே என் நிம்­ம­தி­யெல்­லாம் போச்சு. கொஞ்­ச­மும் மரி­யாதை இல்­லாம என்னை கேவ­லமா பேசுறே. பணத்தை செலவு பண்ணி உன்னை பேச வச்­சேனே, என்னை சொல்ல­ணும். உன்னை மீண்­டும் பேச முடி­யா­த­படி ஊமை­யாக்கி காட்­டு­கி­றேனா இல்­லை­யான்னு பாரு......'' என்று கோப­மாக பேசி­விட்டு விர்ரென்று வீட்­டை­விட்­டு வெளியே கிளம்­பி­னான்.

நேராக மருத்­து­வ­ம­னைக்கு சென்­றான். அங்­கி­ருந்த டாக்­டரை பார்த்து "சார்! அந்த அமெ­ரிக்க டாக்­டர் தாமஸ் மீண்­டும் எப்ப வரு­வார் சார்..?'' என்று கேட்­டான்.

"அடுத்­த­ மா­தம் முதல்­வா­ரத்­தில் வரு­வார். எதுக்கு கேக்குறீங்க?"

"இல்ல.. என் மனை­வியை மறுபடியும் ஊமை­யாக்­க­னும். அவள் பேசாம இருந்­தப்போ வீட்­டில சண்டை சச்­ச­ரவு எது­வும் இல்­லாம நிம்­ம­தியா இருந்­தது. இப்ப பேச ஆரம்பிச்சவுடனே என் நிம்­ம­தி­யெல்­லாம் போச்சு. என்­னையே

எதிர்த்து மரி­யாதை இல்­லாம பேசுறா. அத­னால அவளை மறுபடியும்

ஊமை­யாக்க முடி­யு­மான்னு கேட்கணும்.''

இதை கேட்டு டாக்­டர் கல­க­ல­வென சிரித்­தார். "இந்தா பாருங்க ரமேஷ். நீங்க நினைக்­கிற மாதிரி உங்க மனை­வியை மீண்­டும் ஊமை­யாக்க முடி­யாது. ஆனா உங்க பிரச்னைக்கு தீர்வு காண ஒரு வழி இருக்கு. அவங்க கத்­தி­னா­லும் அது உங்க காதில விழா­த­படி, உங்க காதை செவி­டாக்­கிட்டா போச்சு. அதுக்கு அமெ­ரிக்க டாக்­டர்­தான் வர­ணும்னு இல்லே. அந்த வேலையை நானே செய்­வேன். என்ன செய்­யட்­டுமா..?''

இதை கேட்­ட­தும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட்டம் பிடித்­தான்

ரமேஷ்.

http://www.dinamalarnellai.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை......! ராமேசுக்கு வேணும். லட்சத்தில ஒருத்தருக்குத்தான் இப்படி பொருத்தம் அமையிறது. அதுக்கு பரிகாரம் செய்து துலைச்சுப்போட்டு  நிக்கிறார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.