Jump to content

சி(ரி)த்ராலயா


Recommended Posts

புதிய பகுதி: சி(ரி)த்ராலயா

 

 

12chrcjgopu%20close%20up
12chrcjDUO
 
 

அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலைமையை மாற்றி, இளமை ததும்பும் காதல் கதைகளின் பக்கம் தமிழ் சினிமாவைத் திசைதிருப்பியவர், இயக்குநர் ஸ்ரீதர்.

12CHRCJTHENNILAVU

தேன் நிலவு

அவரது முக்கோணக் காதல் கதைகள், ‘சித்ராலயா’ கோபுவின் விலா நோகச் செய்யும் நகைச்சுவை, வின்சென்ட்டின் குளிர்ச்சியான கேமரா, ஆனாரூனா என்ற திருச்சி அருணாசலத்தின் கருப்புவெள்ளை ஒளிப்படங்கள் துடிப்பான காட்சிகளுக்குப் பெயர்போன, சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தங்களது திறமைகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய பட நிறுவனம்தான் சித்ராலயா

கலையுலகில் புதிய அலைகளைத் தோற்றுவித்த சித்ராலயா நிறுவனத்தின் சின்னம், பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்த ஒன்று. படகைத் துடுப்பால் செலுத்தும் ஒரு வலுவான வாலிபன், அவன் முன்பாக ஒரு பெண் அந்தப் பயணத்தை ரசித்தபடி அமர்ந்திருப்பது போன்ற அந்த சின்னம் திரையில் தோன்றும் தொடக்கக் காட்சியில் பார்வையாளர்கள் சிலிர்ப்புடன் நிமிர்ந்து அமர்வார்கள்.

வாழ்க்கை ரசிக்கத்தக்க ஒரு ரம்மியமான பயணம் என்பதைக் கூறிய சின்னம் மட்டுமல்ல; அதைக் கண்டமாத்திரத்தில் ஏமாற்றாத படைப்பைக் காண வந்திருக்கிறோம் என்னும் கர்வத்தையும் அந்தச் சின்னம் தோன்றும் பின்னணியில் ஒலிக்கும் ‘லோகோ மியூசிக்’ தந்துவிடும்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று எல்லாப் பகுதிகளிலும் கொடி கட்டிப் பறந்தது சித்ராலயா. ராஜ்கபூர் குடும்பம், லதா மங்கேஷ்கர், ராஜேந்திர குமார், மெஹ்மூத், சசி கபூர், தேவ் ஆனந்த் , வஹீதா ரஹ்மான் உள்பட அனைத்து வடஇந்திய நட்சத்திரங்களையும் ஆட்டி வைத்தது சித்ராலயா.

இன்றும் சித்ராலயாவின் சாதனைகளை, பெருமைகளைப் பற்றிய பசுமையான நினைவுகளோடு தனது எண்பத்தி ஆறாவது வயதிலும், துடிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார் ‘சித்ராலயா’ கோபு. சித்ராலயா நிறுவனத்தைத் தனது பெயரிலேயே தாங்கிக்கொண்டு, ‘கல்யாணப் பரிசு’ காலத்தின் அதே நகைச்சுவை உணர்வு இம்மியளவும் குறையாமல், குரலிலும் எவ்வித நடுக்கமுமின்றி சென்னை திருவான்மியூரில் கலகலப்புடன் வசிக்கிறார்.

12chrcjchitralaya

காலை வாக்கிங் செல்பவர்கள் பய்ட் பைப்பரின் (pied piper) இசையில் மயங்கி அவரைப் பின்தொடரும் குழந்தைகளைப் போன்று, இன்றும் கோபு பின்பாகவே செல்ல, அவர் தனது திரைப்பட அனுபவங்களைக் கூறிக்கொண்டே செல்வது வழக்கம். ஆங்காங்கே அவர்கள் சிரித்துக்கொண்டு நிற்க நடைப்பயிற்சி, சிரிப்புப் பயிற்சியாக மாறிவிடும்.

அவரின் 'வாக் தி லாஃப்’ அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். ‘சித்ராலயா’ கோபுவுடன் `தி இந்து’ தமிழும் அன்றாடம் நடைப்பயிற்சி செய்து, சித்ராலயா நாட்களின் அனுபவங்களை உங்களுக்குப் புதிய தொடராக வழங்குகிறது.

கேமராவுக்கு, முன்பாகவும், பின்பாகவும், நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நிகழ்வுகளை, என் எஸ் கிருஷ்ணன் மனைவி டி.ஏ. மதுரம் தொடங்கி, பாலையா, தங்கவேலு, சாரங்கபாணி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், எம். சரோஜா, மனோரமா, சச்சு, ரமாப்ரபா, கோவை சரளா உட்பட அனைவருக்கும் நகைச்சுவை வசனங்களை எழுதிய அனுபவங்களை அவர் கூறக் கேட்டால் நேரம் போவதே தெரியாது.

சிவாஜி கணேசன், ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் தொடங்கி , இன்றைய விக்ரம், பாண்டியராஜன் வரை பல நடிகர்களுடனும் பத்மினி, ஜெயலலிதா, தேவிகா தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரை பலருடன் பணிபுரிந்து விட்டார். “அவரது திரைப்பட நகைச்சுவை ஒரு கால் பங்குதான். அவருடன் நேராகப் பேசினால்தான் அவரது முழு நகைச்சுவையையும் அனுபவிக்கலாம்” என்று கமல் ஹாசன் கூறியிருக்கிறார். கிரேசி மோகன் இவரைத் தனது ஆசானாகக் கருதி வருகிறார்.

12chrcjgopu%20close%20up

இனி ஒவ்வொரு, வெள்ளிக்கிழமையும் இந்த வேடிக்கை மனிதரின் அனுபவங்களை `தி இந்து தமிழ்’ உங்களுக்கும் கடத்தி உங்கள் நினைவுகளைக் கிளறவிருக்கிறது. மனம் விட்டுச் சிரிக்கத் தயாராக இருங்கள்.

படங்கள் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22421067.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 01: நகைச்சுவை நிலையம்

 

 
12chrcjDUO

ஸ்ரீதருடன் கோபு

ரியாக 68 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. வரலாறும் ஆன்மிகமும் செழித்தோங்கும் காஞ்சிபுரத்தில் ஒரு காலை. நகரின் மிக அகலமான திருக்கச்சி நம்பி தெருவில், வரதராஜப் பெருமாள் கோயில் யானை ஒய்யாரமாக நடைபோட்டபடி ஒரு வீட்டின் முன்பாகப்போய் நின்றது. புத்தாடை அணிந்திருந்த 18 வயது இளைஞன் யானையின் மீது ஏற்றப்பட்டான். நாதஸ்வரமும் தவிலும் இசைக்க, அவனைச் சுமந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தது யானை.

ஐந்தாம் வகுப்பிலிருந்து இணைபிரியாமல் தொடர்ந்த தன் உயிர் நண்பன் ஸ்ரீதரை விட்டுப் பிரிந்து வந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தனக்கு மிகவும் பிரியமான ஊராகிய செங்கல்பட்டையும் பிரிய நேர்ந்துவிட்டதே என்ற வருத்தமும் அவனது முகத்தில் தெரிந்தன. காஞ்சிபுரத்தில் வசித்துவந்த அத்தைக்கு அவனைத் தத்து கொடுத்திருந்தனர் அவனுடைய பெற்றோர். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் மங்கள வாத்தியம் இசைக்க அந்த யானை ஊர்வலம்.

 

யார் அந்த இளைஞன்?

இயற்பெயர் சடகோபன். வீட்டில் சிறுவயதில் அழைத்த பெயர் ‘குட்டி சட’. இவர் பணிபுரிந்த திரைப்படத்தின் முதல் கதாநாயகியான கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் உச்சரிப்பில் ‘ஜடை கோபால்’, வீனஸ் திரைப்பட நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றிய கே.எஸ் கோபாலகிருஷ்ணன், ‘ஆச்சாரி’ என்று அழைப்பார். இந்தப் பெயரே திரைப்பட யூனிட் முழுவதும் பரவி நிலைத்தது.

19chrcjchirithralaya

25 வயதில் கோபு

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முதன்முதலாக இயக்குநர் ஸ்ரீதர் தனது பால்ய நண்பனான இந்த இளைஞனை கோபு என்ற பெயருடன் வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். தனது பெயருக்கு இணையாக ஸ்ரீதர்-கோபு என்று அறிமுகப்படுத்த அன்றிலிருந்து கோபுவாக மாறினார். ஸ்ரீதரின் சித்ராலயாவுக்கு இவரே எல்லாம் என்பதால், பலருக்கும் இவர்தான் ஸ்ரீதரின் வலது கை. பின்னாளில் இவரே இயக்குநராக மாறியதும், திரைப்பட உலகம் இவருக்கு ‘சித்ராலயா’ கோபு என்னும் அங்கீகாரத்தை அளித்துவிட்டது.

சித்ராலயா நிறுவனத்தை ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், அருணாசலம், சி. வி. ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து தொடங்கினார்கள். ஆனால் , சித்ராலயா என்ற அடைமொழி கோபுவை மட்டும் தொற்றிக்கொண்டது. நகைச்சுவை சரளமாக இவர் வாயிலிருந்து தெறித்து விழும். எனவே, பலருக்கு இவர் ‘சிரித்ராலயா’ கோபு.

கோபு பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே செங்கல்பட்டில்தான். 1932- ல் பிறந்தவர் நான்கு வயதிலேயே செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கோபு புத்தகத்தைக் கையில் எடுத்துப் பொறுப்பாகப் படிக்கத் தொடங்கினால், அவரது அப்பா தர்ப்பை கட்டு தேடுவாராம் தர்ப்பணம் செய்வதற்கு. ஏனென்றால், கோபு படிக்க உட்கார்ந்தால், அன்று ஆடி அமாவாசையாக இருக்கும் என்று நக்கலடிக்கும் அளவுக்குப் படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு பெற்றோர் நொந்து நூலாகிப் போனார்கள்.

 

எது நகைச்சுவை?

ஒன்பதாவது வகுப்பு வரை குடுமிதான் கோபுவின் ஹேர் ஸ்டைல். அதை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொள்கிறேன் என்று வீட்டில் விண்ணப்பித்தபோது அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கிராப் வைத்துக்கொண்டு, திரையுலகில் சாதனைகள் பல படைத்த பிறகு, திடீரென்று மீண்டும் குடுமி வைத்துக்கொள்ள கோபுவுக்கு ஒரு வாய்ப்பு. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இயக்கி, தானே அதில் அம்மாஞ்சி சாஸ்திரியாக நடிக்க வேண்டியிருந்தது. ஒயிட் ஹவுஸ் முன்பாகக் குடுமியுடன் அப்போது நிற்க, வெள்ளைக்காரப் பெண்மணிகள் அவரது குடுமியைத் தொட்டுப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

“ஓய் ஆர் யூ வேரிங் திஸ்?” என்று குடுமியைக் காட்டி ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி கோபுவைக் கேட்க “ இட் இஸ் அவர் நாச்சுரல் ஹெல்மெட்” என்று பதில் நொடிக்குள் பதில் தந்தார் கோபு. அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சச்சு உள்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

நகைச்சுவையாகப் பேசுவது என்பது ஒரு கலை. ஜோக் என்ற பெயரில் தானே ஒன்றைப் பேசிவிட்டு, தானே சிரித்துக்கொண்டிருக்க, மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருப்பது நகைச்சுவை அல்ல. தான் சிரிக்காமல் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பேச, சுற்றியிருப்பவர்கள் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தால், அங்கே உதிர்க்கப்பட்டதுதான் உண்மையான நகைச்சுவை.

 

வீட்டில் பொங்கிய உணர்வு

கோபுவின் குடும்பத்திலேயே நகைச்சுவை உணர்வு அன்றாடம் பொங்கிக்கொண்டிருக்கும். அவரது வீட்டை ஒரு நகைச்சுவை நிலையம் எனலாம். அவருடைய தந்தை எம். இ. துரைசாமி பி ஏ. லிட் ஆசிரியர். அம்மா செல்லம்மாதான் வீட்டின் சர்வாதிகாரி. சங்கீதமும் நகைச்சுவையுணர்வும் ஊட்டப்பட்டுதான் வளர்ந்தார் கோபு. கோபுவுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவர்கள் என்று சொன்னால் இருவர். ஒருவர் அவருடைய தாய் செல்லம்மா. மற்றொருவர். ‘கலைவாணர்’ என்.எஸ் கிருஷ்ணன். சின்ன வயதிலேயே, ஜி. என் பாலசுப்ரமணியம், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி, என்.எஸ் கிருஷ்ணன் நடித்த ‘சகுந்தலை’ படத்தைப் பார்த்து, அதில் மீனவராக நடித்த என்.எஸ் கிருஷ்ணன்- துரைராஜ் ஜோடியின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களை அப்படியே ஒப்பிப்பார் கோபு.

19chrcjGOPU%20NOW

‘சித்ராலயா’ கோபு இன்று

 

தாய் செல்லம்மா ஓரிடத்தில் இருந்தால் அங்கே சிரிப்பு வெடிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். இவர் பேசியதும் எல்லோரும் குபீரென்று சிரிக்கத் தொடங்குவார்கள். வேடிக்கை என்னவென்றால், சிரித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவரைப் பற்றித்தான் இவர் கிண்டலாக எதையாவது கூறியிருப்பார். சம்பந்தப்பட்ட மனிதரோ தன்னைப் பற்றித்தான் செல்லம்மா கூறியிருக்கிறார் என்பதை அறியாமல் மற்றவர்களோடு சிரித்துக்கொண்டிருப்பார்.

செல்லம்மாவின் அதிரடி ஜோக்ஸ் செங்கல்பட்டில் மிகவும் பிரபலம். உதாரணத்துக்கு ஒன்று. தசரா சீசனில் அவர்கள் வசித்த தெருவில் எழுந்தருளியிருக்கும் அம்மன் கோயிலில் வாத்திய இசைவிழா களை கட்டும். பிரபல நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரிகளை வைத்து அமர்க்களப்படுத்துவார்களாம். 1945 -ல் நாதஸ்வர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை மிகப் பிரபலம். தோடி ராக எக்ஸ்பெர்ட். அப்பா துரைசாமியும் சங்கீதத்தில் கைதேர்ந்தவர். நாதஸ்வரச் சங்கதிகளை விசில் மூலமே வாசித்துக் காட்டுவார்.

ராஜரத்தினம் பிள்ளை கச்சேரிக்கு செல்லம்மா சென்றுவிட்டு வந்தார். அப்போது துரைசாமி மனைவியிடம், “செல்லம்மா! நேத்து ராஜரத்தினம் நாதஸ்வரம் கேட்டியோ?” என்று கேட்டார். உடனே செல்லம்மா, “நாதஸ்வரத்தைக் கேட்கலை. அதில் பிள்ளைவாள் வரிசையா தொங்கவிட்டிருந்த தங்க டாலர்ல ஒண்ணைக் கேட்டேன். ‘அதெல்லாம் தருவதில்லை’னு சொல்லிட்டார்,!” என்று கூலாகச் சொல்ல, கோபுவின் அப்பா கிளீன் போல்ட் ஆகிவிட்டார்.

இந்தச் சம்பவத்தை வைத்துத்தான் ‘சாந்தி நிலையம்’ படத்தில் நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சி ஒன்றை உருவாக்கினார் கோபு. அதில் நாகேஷிடம் அவருடைய நண்பர் சங்கீதம் பற்றிப் பேசுவார்.

நண்பர்: நேத்து ரேடியோவுல மாலி ப்ளூட் (புல்லாங்குழல்) கேட்டியோ?

நாகேஷ் : கேட்டேன்! தரமாட்டேனு சொல்லிட்டார்.

இந்தக் காட்சியின்போது அரங்கமே அதிர்ந்தது. இப்படி கோபு திரையுலகுக்கு நகைச்சுவையை வாழ்க்கையின் தெறிப்புகளிலிருந்து கொட்டிக்கொடுத்தது ஏராளம்…

- சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22463594.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலயா 02: கலைவாணர் எனும் குரு

 

 
26chrcjSridhar

பாராட்டு விழா ஒன்றில் ஸ்ரீதருடன் கோபு

நகைச்சுவையின் இயல்பான அம்சங்களில் முக்கியமான ஒன்று பகடி. அது பிறரைப் புண்படுத்திவிடாத நேர்மையுடன் இருக்க வேண்டும். அதே நேரம் அந்த நேரத்துக்கு மட்டும் குலுங்கிச் சிரித்துவிட்டு கடந்துபோவதாக அந்தப் பகடி இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையை ஊட்டுவதாகப் பகடி இருக்க வேண்டும் என்பார் கோபு. அப்படிப்பட்ட அசலான நகைச்சுவையை தன் அம்மாவின் வெள்ளந்தியான பேச்சுகளிலிருந்து உள்வாங்கிக்கொண்டவர்.

 

நடுவுல வந்தவன் நடுவுல போயிட்டான்

சூழ்நிலைக்கு ஏற்ப அம்மா செல்லம்மாவிடம் வெளிப்பட்ட அசலான நகைச்சுவை உணர்வைப் போலவே துணிவும் இணைந்தே வெளிப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளில் கூடச் சம்பந்தப்பட்டவர் ஒருகணம் திடுக்கிட்டு, அதே நேரம் அவர் அந்த இக்கட்டிலிருந்து விடுபட்டு வெளிவந்துவிடும்விதமாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டுவந்துவிடுவார். இப்படித்தான் அவருக்கு நெருக்கமான ஒரு பெண்மணியின் கணவர், வீட்டு முற்றத்தில் வழுக்கி விழுந்தபோது, அவரது தலை துணி துவைக்கும் கல் மோதி, அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

ns%20krishnan

‘உன் வாழ்க்கை இப்படிப் பாழாப்போச்சே. உன்விதி இப்படியா அமையணும், ஆத்துக்காரனுக்கு நல்ல சாவு…’ என்று ஊரார் ஒவ்வொருவராக வந்து, துக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் அவரது மனதையே சுக்கல் சுக்கலாக உடைத்துப்போட்டிருந்தார்கள். கோபுவின் அம்மா செல்லம்மா துக்கம் கேட்கப் போயிருந்தார். அன்று கை வளையல்களை உடைத்து, தலையிலிருக்கும் பூவை எடுத்து, நெற்றிக்குங்குமத்தை அழித்துவிடும் சடங்கு.

கணவனைப் பறிகொடுத்திருந்த பெண்மணி செல்லம்மாவைக் கண்டதுமே பெருங்குரலெடுத்து அழ, செல்லம்மா அவரை அதட்டினார்.

“எதுக்குடி அழறே! நடுவுல வந்தவன், நடுவிலேயே போயிட்டான், அதுவும் நடு முத்தத்துல வழுக்கி விழுந்து! அழறதை நிறுத்திட்டு, வேலைக்குப் போய் குடும்பத்தை நிமிர வைக்க பாரு. பிறந்ததுலேர்ந்து வச்சுக்கற குங்குமப் பொட்டை நடுவுல வந்தவனுக்காக எதுக்கு அழிக்கணும்?” என்று கேட்டதும் அங்கே வந்திருந்த கூட்டம் மொத்தமும் அசந்துபோனது, அரண்டும்போனது. ஆச்சார அனுஷ்டானங்கள் மிக்க அந்தக் காலத்தில் இப்படிப் பேசுவதற்கு எவ்வளவு துணிவு வேண்டும்?

 

எழுதி வாங்கினாயா?

இப்படி சிறுவயது முதலே அம்மாவின் அதிரடி நகைச்சுவைகளால் ஈர்க்கப்பட்ட கோபு, இக்கட்டான மற்றொரு சூழலில் அவர் உதிர்ந்த இன்னொரு ‘பிளாக் ஹியூம’ரையும் விவரித்துவிட்டுக் குழந்தையைப் போல் சிரிக்கிறார். கோபுவின் மாமியார் இறந்தபோது, உறவினர்கள் எல்லாரும் குழுமியிருந்தனர். திடீரென்று செல்லம்மா, கோபுவின் மனைவியிடம் வந்து, “கமலா! உங்கம்மா கிட்ட எழுதி வாங்கினியா?” என்று கேட்டார். அங்கிருந்த எல்லோருக்கும் பகீரென்று ஆகிவிட்டது. ‘கடவுளே.. சம்பந்தியம்மாள் சொத்துப் பிரச்சினையை இப்படிப் பட்டவர்த்தனமாக எழுப்புகிறாரே’ என்று பந்துக்கள் அனைவரும் பதைபதைத்துப் போனார்கள். அடுத்து செல்லமா என்ன கேட்பாரோ என்று எல்லோரும் குழம்பிப்போய் அவரது முகத்தைப் பார்க்க,

“உங்கம்மா ஆவக்காய் ஊறுகாய் பிரமாதமா போடுவாள். அவகிட்ட ரெசிபி எழுதி வாங்கிக்கிட்டியா?” என்று செல்லம்மா கேட்க, சாவு வீடு நகைச்சுவை மன்றமாகி குபீர் சிரிப்பொலியால் நிறைந்தது.

 

இரண்டாம் குரு

அம்மாவின் நகைச்சுவை உணர்வு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ‘கலைவாணர்’ என்.எஸ் கிருஷ்ணன் ஏற்படுத்திய தாக்கம், அவரைத் தனது இரண்டாம் நகைச்சுவை குரு என்று கோபு கூறும் அளவுக்கு அவரை வடிவமைத்திருக்கிறது. சி.வி.ராமன் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் ‘கிருஷ்ண பிடாரன்’(1942). இந்தப் படத்தில் சங்கீத வித்துவானாக வரும் என்.எஸ்.கேவின் நகைச்சுவைக் காட்சிகள் பற்றிப் படம் பார்த்தவர்கள் வந்து சிலாகிக்க, பத்து வயதில் அந்தப் படத்தைப் பார்க்கப் போனார் கோபு.

படத்தில் என். எஸ்.கே. ஒரு கர்நாடக சங்கீத வித்துவான். அவருடைய சகாக்கள் புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, சி.எஸ் பாண்டியன் ஆகியோர். (கவுண்டமணி, செந்தில் மாதிரி இவர்கள் அன்று பிரபலமான நகைச்சுவை அணி) கதைப்படி என்.எஸ் கிருஷ்ணனுக்கு ஆறு மணிக்கு சங்கீதக் கச்சேரி. மிருதங்க வித்துவானுக்கு ஏதோ பிரச்சினை. தன்னால் வர முடியவில்லை என்று மிருதங்கத்தை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு, ‘இன்றைக்கு மட்டும் யாரையாவது வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவார். மிருதங்கம் இல்லாமல் கச்சேரி களை காட்டாதே!

நொந்துபோகும் வித்வான் என்.எஸ்.கே., “மிருதங்கம் வாசிக்க யாரையாவது போய் அழைச்சிட்டு வாங்கோ” என்பார். ஆவர் அப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒரு பறை அறிப்பாளர், அரசனின் ஆணையைப் பறையடித்து கூறிக்கொண்டே வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு வந்து என்.எஸ்.கே. முன்பாக நிறுத்துவார்கள்.

என்.எஸ்.கே. அவரிடம் “தண்டோராக்காரரே! எனக்கு நீங்க மிருதங்கம் வாசிக்கணும்” என்பார். அவரோ விழித்தபடி “மிருதங்கம்னா என்னங்க அய்யா?”என்று கேட்பார்.

“அது ஒன்னுமில்லேப்பா… இப்ப நீ பறையைக் குச்சியால் அடிச்சே இல்லே. குச்சிய உபயோகப்படுத்தாம உன்னோட விரல்களைக் கொண்டு இந்த மிருதங்கத்தை ரெண்டு பக்கமும் அடிக்கணும். வாத்தியம்தான் வேற” என்பார். அவரும் ஒப்புக்கொள்ள, அடுத்த காட்சியில் கச்சேரி தொடங்கும்.

 

26chrcjKrishnapidaran2-01
கொஞ்சம் பக்கத்தில் வா

‘ராம நீ சமானமெவரு…’ என்று என்.எஸ்.கே. பாடுகிறார்.

பறையை அடிக்கும் அந்த தண்டோராக்காரர் ‘திருதிரு’வென விழித்தபடி ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்று மிருதங்கத்தை அடிக்கத் தொடங்க, என்.எஸ். கே திகைக்கிறார். அவரைப் பார்த்து, “தண்டோராக்காரரே! கொஞ்சம் கிட்டே வாங்க!” என்கிறார்.

தண்டோராக்காரர், மிருதங்கத்தைத் தூக்கிக்கொண்டு என்.எஸ்.கே. அருகில் வந்து உட்காருகிறார். என்.எஸ் கே. மீண்டும் திகைத்து, “நான் சொன்னது இந்த கிட்டே இல்லே! சங்கீதத்துக்குப் பக்கமா கொஞ்சம் கிட்ட வர சொன்னேன்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும், “ராம...நீ சமானமெவரு...” என்று பாடத் தொடங்குகிறார்.

தண்டோராக்காரர் மறுபடியும், ‘டண்டணக்கான டண்டணக்கா’ என்று தாளத்தைத் தன் வழக்கமான அடியில் தொடர… என்.எஸ்.கே. வேறு வழியின்றி, “நீ என்னோட ஒத்து வர மாட்டே! நான்தான் உன்னோட ஒத்துப் போகணும்” என்று சொல்லிவிட்டு, ‘ராமா நீ சமானமெவரு’ என்ற கர்நாடக கீர்த்தனையை, ‘ராமநீச.... மானமேவரூ...’என்று ‘டண்டணக்கா டண்டணக்கா’ ஸ்டைலில் வேகமாகவும் தாவித் தாவியும் பாட, இந்தக் காட்சியில் திரையரங்கம் குலுங்கியது. கோபுவினுள் இந்த நகைச்சுவைக் காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியெல்லாம் மக்களைச் சிரிக்கவைக்க முடியுமா என்று கலைவாணர் சிறுவன் கோபுவைச் சிந்திக்க வைத்துவிட்டார். இந்த ஒரு காட்சிக்காகவே ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பிய கோபு, அதற்காக வீட்டில் காசு திருடி படம் பார்த்திருக்கிறார்.

பத்து வயதில் பார்த்த ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தின் காட்சியை 86 வயதில் நினைவூட்டிக்கொண்டு, என்.எஸ்.கே.வின் குரலில் அப்படியே நடித்துக் காட்டுகிறார். கோபு ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதையும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். பின்னாட்களில் ஸ்ரீதரின் படங்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதியபோது கோபுவிடம் தன் தாயாரின் நகைச்சுவையில் இருந்த பகடி, துணிவு ஆகியவற்றுடன் கலைவாணரின் நாகரிகக் கோமாளித் தன்மையும் இணைந்துகொண்டது.

இதனால் கோபுவிடமிருந்து வெளிப்பட்டது அத்தனையுமே தரமான நகைச்சுவையாக அமைந்துபோனது. இதைப் பிரபல வார இதழ், ‘என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு, நாகரிகமான சிறந்த நகைச்சுவையை அளித்தவர் சித்ராலயா கோபு’ என்று பாராட்டி எழுதியது. ஆனால், தன் நண்பன் ஸ்ரீதரிடம் பாராட்டு வாங்குவதுதான் கோபுவுக்குக் குதிரைக் கொம்பாக இருந்தது.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22521499.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலாயா 03: பிரிந்த நண்பர்கள்... ஒளிர்ந்த நட்பு!

 

 
02chrcjKasethan%20Kadavulada

‘காசேதான் கடவுளடா’ படத்தில் லட்சுமி, முத்துராமன், ‘தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த்

ஸ்ரீ

தரும் கோபுவும் ஐந்தாம் வகுப்பில் தொடங்கி ஒன்றாகப் படித்தவர்கள். கோபுவின் வீடு செங்கல்பட்டு சின்னமணிக்காரத் தெருவில் இருந்தது. ஸ்ரீதரின் வீடு மறுகோடியில் நத்தம் என்ற பகுதியிலும் இருந்தது. பள்ளிவிட்டால் நண்பன் கோபுவைத் தேடி வந்துவிடுவார் ஸ்ரீதர். ஒன்பதாவது படிக்கும்போது ஸ்ரீதருக்குக் கலையார்வம் துளிர்த்தது. மனோகரா என்னும் நாடகத்தை எழுதி, பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றினார். அதில் ஸ்ரீதர் கதாநாயகனாகத் தோன்ற, அதே நாடகத்தில் காமெடியன் ரோலில் சக்கை போடு போட்டார் கோபு.

அதுமட்டுமல்ல; நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை கோபுதான் எழுதினார். ஸ்ரீதர்-கோபு கூட்டணி முதல்முதலாக உருவானது பள்ளியாண்டு விழாவில்தான். இவர்கள் இருவருடன் ரங்கநாதன் என்ற மாணவனும் படித்தார். இவர்தான் ‘கடுகு’ அகஸ்தியன் என்ற பிற்கால எழுத்தாளராக உருவெடுத்தார். இவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவிட்டால் அவர்கள் இருக்கும் இடம் கணஜோராகக் களை கட்டிவிடும். அடிக்கடி சாகசங்களிலும் இறங்கிவிடுவார்கள்.

 

காப்பாற்றிய கதாநாயகன்

அப்போது பாலாற்றுக் கரையில் மாந்தோப்புகள் நிறைய உண்டு. அந்தத் தோப்பு மாங்காய்களைத் திருடி அவற்றைத் துவைக்கிற கல்லில் உடைத்து உப்புக்கல் வைத்துத் தின்றால்தான் ருசி. தோட்டக்காரர் இல்லாத சமயத்தை உளவறிந்து மாங்காய் அடிக்கச் செல்ல வேண்டும். அப்படி மதிய சாப்பாட்டுக்கு அவர் சென்றிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்ரீதரும் கோபுவும் தோப்புக்குள் நுழைந்து மாங்காய் அடித்துக்கொண்டிருந்தார்கள். மாயக்காரன் மாதிரி அங்கே திடீரென்று வந்து நின்றார் தோட்டக்காரர். ஸ்ரீதர் உட்பட எல்லோரும் அலறி அடித்து ஓட்டம்பிடித்துவிட, சுதாரிப்பதற்குள் கோபுவைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டார் தோட்டக்காரர்.

பள்ளிக்கூடப் பிள்ளை என்று கூடப் பார்க்காமல் கோபுவின் முதுகை மத்தளம் ஆக்கினார் தோட்டக்காரர். இரக்கமில்லாத தோட்டக்காரர் ஆத்திரம் அடங்காமல் மாங்காய் திருடிய கள்வர்களின் தலைவனைப் பிடித்துவிட்டதுபோன்ற கர்வத்துடன் கோபுவை மரத்தில் கட்டிப் போட்டார். ஆனால், கோபுவுக்கு நண்பன் மீது நம்பிக்கை இருந்ததால் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காய்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதர் தனக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதரை அழைத்து வந்து கோபுவை மீட்டுக்கொண்டுபோனார்.

“என்னை மரத்தில் கட்டிப் போட்ட விவகாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று சத்தியம் செய்யச் சொன்னார் கோபு. ஸ்ரீதரும் சத்தியம் செய்துகொடுத்தார். ஆனால், மறுநாள் பள்ளிக்கூட மணியை அடித்துக்கொண்டே பியூன் கோபுவைப் பார்த்து “இன்னா கோபு, மாந்தோப்புல செம மாத்து மாத்திட்டாங்களாமே?” என்றான். அவன் கேட்ட விதம் பள்ளிக்கூடம் முழுவதும் மணியடித்துச் சொல்லி விட்டேன் என்பது போல இருந்தது கோபுவுக்கு.

“என்னடா ஸ்ரீ! நீ செய்த சத்தியம் அவ்வளவுதானா?” கோபு கோபத்துடன் கேட்டார்.

“டேய் நீ மாட்டிக்கிட்டதும் உன்னைக் காப்பாத்தனுமேன்னுதான் நான் தப்பிச்சுப்போனேன். நானும் உன்னோட மாட்டியிருந்தா நம்மள யார் காப்பாத்தியிருப்பா சொல்லு?” என்று ஸ்ரீதர் பதில் சொன்னதும் கோபுவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கேள்வித்தாள் வள்ளல்

பள்ளித்தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் காமெடியன் கோபு ஹீரோவாக மாறிவிடுவார். கோபுவுடைய தந்தை துரைசாமிதான் இருவருக்கும் வகுப்பு வாத்தியார். அவர் வீட்டு பீரோவில்தான் கேள்வித்தாள்கள் அடங்கிய பைலை வைத்திருப்பார். ஸ்ரீதர் கோபுவை விசேஷமாகக் கவனிப்பார். கோபுவும் பீரோவைத் திறந்து தன் அப்பாவுக்குத் தெரியாமல் கேள்வித்தாள்களில் ஒன்றை உருவிடுவார். கேள்வித்தாள் இருந்து விட்டால் போதுமா, புத்தகத்தில் பதில்கள் எங்கே இருக்கின்றன என்று தேட வேண்டுமே! ஸ்ரீதரும் கோபுவும் ரங்கநாதனைத் தேடி ஓடுவார்கள்.

கையில் கேள்வித்தாள் கிடைத்ததும் ஸ்ரீதரும் கோபுவும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டவே மாட்டார்கள். இருவரும் பார்டர் மார்க் மேதாவிகள். ஆனால், ரங்கநாதன் மட்டும் சென்டம் வாங்கிவிடுவார்.

கோபுவையும் ஸ்ரீதரையும் குறித்து துரைசாமி வாத்தியாருக்கு எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஆனால், ரங்கநாதன் செண்டம் வாங்குவதைப் பார்த்து வியந்துபோன அவர், அந்தத் தகிடுதத்தத்தின் சூத்திரதாரிகள் கோபுவும் ஸ்ரீதரும் என்று தெரிந்து சுதாரித்துக்கொண்டார் வாத்தியார். தேர்வு நேரங்களில் கோபுவை வீட்டுச் சிறையில் தள்ளிவிடுவார். ஆனால், கோபு அசர மாட்டார். புழக்கடையிலிருந்து சின்ன சின்ன கற்களைப் பொறுக்கி வைத்து, கேள்வித்தாள்களைக் கல்லில் சுற்றி மடித்து வீதியில் எறிவார்.

ஸ்ரீதர் அதை லாகவமாகப் பிடித்து, ரங்கநாதனிடம் கொண்டுபோய்ச் சேர்த்து அவர் இரக்கப்பட்டுத் தரும் பார்டர் மார்க் பதில்களை மட்டும் தெரிந்துகொண்டு பதில்களை எழுதி, நண்பனுக்காக மீண்டும் கோபுவின் வீட்டு மாடியை நோக்கி கல்லில் எறிய, கோபு அதைத் தாவிப் பிடிப்பார். இந்தப் பரிமாற்றத்தில் தொடங்கிய இவர்களது லட்சியக் கூட்டணி, பின்னாளில் கதை-வசன தாள்களின் பரிமாற்றத்தில் முடியும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

 

02chrcjgopu%20sridar

ஓய்வுத் தருணம் ஒன்றில் கோபுவும் ஸ்ரீதரும்

பிரிந்த நண்பர்கள்

பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் ஸ்ரீதருடைய அப்பா அவரைக் கூட்டுறவு அலுவலகத்தில் வேலையில் அமர்த்திவிட்டார். ஸ்ரீதருடன் திரிந்து கொண்டிருந்த கோபுவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவரைக் காரைக்குடிக்கு நாடு கடத்துவதுபோல அழைத்துச் சென்று அழகப்பா கல்லூரியில் இன்டெர்மீடியேட் படிப்பில் சேர்த்தனர். இதற்கு கோபு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்துகொண்ட கோபுவின் பெற்றோர், அழகப்பா கல்லூரில் புகழ்பெற்ற கிரிக்கெட் டீம் இருப்பதை எடுத்துக்கூறி ஆசை காட்டி அவரைக் கல்லூரியில் அடைத்துவிட்டு வந்தார்கள்.

அதை உண்மை என்று நம்பிய கோபு, கல்லூரியின் கிரிக்கெட் அணியில் சேர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வெல்வதற்குக் காரணமாக இருந்தார். ஆனால், நண்பன் ஸ்ரீதர் நம் அருகில் இல்லையே என்ற கவலை அவரை அரித்துக்கொண்டேதான் இருந்தது.

அங்கிருந்து கோபுவுக்கு கடிதங்கள் எழுதி தனது நட்பைப் பத்திரமாக வைத்துக்கொண்டார். காரைக்குடியில் கோபு படித்துக்கொண்டிருந்தபோது அழகப்பா கல்லூரியின் பொறியியல் துறை கட்டிடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. சிவப்பு சிங்கமாக நின்றிருந்த காஷ்மீர் ஆப்பிள் நேருவைத் தொட்டுக் கைகுலுக்கி, நண்பன் ஸ்ரீதரிடம் பீற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.

ஆனால், நேருவை நெருங்க முடியவில்லை. மானசீகமாக நேருவின் கையைக் குலுக்கிவிட்டு, அவர் கல்லூரிக்கு வந்து சென்ற நிகழ்வை நண்பனுக்கு கோவையாக எழுதி அனுப்பினார். அவ்வளவு சீக்கிரம் பாராட்டிவிடாதவர் ஸ்ரீதர், ‘நானே நேருவைக் கண்டதுபோல் நல்ல வர்ணனையில் எழுதியிருக்கிறாய் சினேகிதா’ என்று ஸ்ரீதரிடமிருந்து பாராட்டு வரிகளுடன் பதில் வந்தது.

காரைக்குடியில் கோபு தங்கியிருந்த இடத்தின் பெயர் கல்லுக்கட்டி. அங்கிருந்த குளக்கரை எதிரில் இருந்த ஏ.வி.எம் சன்ஸ் கட்டிடத்தின் மாடியில்தான் நண்பர்களோடு தனது அறையைப் பகிர்ந்திருந்தார் கோபு. ‘வேதாள உலகம்’, ‘வாழ்க்கை’ போன்ற ஏ.வி.எம்மின் படங்களை அங்கிருந்த சரஸ்வதி தியேட்டரில் பார்த்த கோபு, எப்படியாவது ஏ வி எம் செட்டியாரைச் சந்தித்து அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார்.

ஆனால், பிற்காலத்தில் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏ.வி.எம். செட்டியார் வாங்கி, திரைப்படமாகத் தயாரித்து, அதைத் தன்னையே இயக்கச் சொல்வார் என்று கோபு சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. விதி இப்படித்தான் சிறு சிறு சம்பவங்களின் மூலமாக எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறும் என்பதை கோபு அப்போது உணர்ந்திருக்கவில்லை.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22621110.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிரித்ராலயா 04: அப்பாவையே சிரிக்கவைத்த விகடம்!

 

 
09chrcjPunarjenmam

புனர்ஜென்மம்

செங்கல்பட்டில் கோபுவின் வீடு சின்னமணிக்காரத் தெருவிலும், ஸ்ரீதரின் வீடு அதன் மறுகோடியில் நத்தம் என்ற பகுதியிலும் இருந்தது. கோபுவின் தெருவில் மிஸ் செங்கல்பட்டுகள் நிறையப் பேர் வசித்தனர். அந்தப் பெண்கள் எல்லாருமே தன்னைக் காண்பதற்கு வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கோபுவின் வீட்டிலேயே காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு தவம் கிடப்பார் ஸ்ரீதர்.

ஆனால், இந்த இளவட்டப் பெண்களுக்கு ஏற்கெனவே காதல் வலை வீசிக்கொண்டிருந்தான் அதே தெருவைச் சேர்ந்த பாக்ஸர் சுந்தரம். அந்தப் பதினாறு வயதில் திருத்தமான தோற்றத்துடன் சலவை செய்த பேண்ட் சட்டையில் கோபுவின் தெருவில் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டால் முடிந்தது கதை. “ ஹோய்…மைனர்... எங்க தெருப்பக்கம் உனக்கு என்னடா வேலை? ” என்று ஸ்ரீதரைப் பிடித்து நிறுத்தி பாக்ஸர் சுந்தரமும் அவனுடைய நண்பன் டெல்லி உள்ளிட்ட இளவட்ட கோஷ்டியினர் வீடு கட்டுவார்கள்.

அதற்கெல்லாம் அசராத ஸ்ரீதரை “ என் நண்பனைப் பார்க்க உங்களமாதிரி கோஷ்டிகிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கணுமா? இப்போ என்ன தடுத்தீங்கன்னா நத்தம் பக்கம் ஒரு பய வரமுடியாது?” என்று பதிலுக்கு மிரட்டிக்கொண்டிருக்கும்போதே நண்பனைக் காப்பாற்ற கோபு ஓடிவந்துவிடுவார்.

“இப்படித் துணிவுடன் அவன் காதலில் கசிந்துருகியதால்தான் தன் படங்களில் காதலையே முக்கிய கதாபாத்திரம் ஆக்கி அழகுபார்த்தானோ எனத் தோன்றுகிறது” என்று சிரிக்கிறார் இன்றைய 86 வயது இளைஞன் கோபு.

 

நாடகம் போட்ட நண்பர்கள்

கோபு – ஸ்ரீதரின் இளமைக் காலம் வயதுக்கே உரிய துடுக்கு மற்றும் துள்ளல்களோடு நின்றுவிடவில்லை. கோபு படிப்புக்கு அப்பால் காரைக்குடியில் வெறித்தனமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதரும் திரைப்படங்களைப் பார்த்தார் எனினும் தான் வேலைசெய்துவந்த செங்கல்பட்டு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வேகவேகமாகத் தனது வேலைகளை முடித்துவிட்டு சின்னச்சின்ன நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். கோபு தனது படிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் செங்கல்பட்டு வர, அவருக்காகவே காத்திருந்தவர் போல, ஸ்ரீதர் ஓடோடி வந்தார்.

“டேய் கோபு... போர் அடிக்கிறது. ஒரு டிராமா போடலாமா?” ஸ்ரீதர் கேட்டார்.

“டிராமாவா!? அதுக்கு எங்கேடா போறது?” கோபு கேட்டார்.

“அதப்பத்தி ஏன் கவலைப்படுறே… ‘உலகம் சிரிக்கிறது’னு நான் ஒரு நாடகம் எழுதியிருக்கேன். அதைப் போடுவோம்” ஸ்ரீதர் சொல்ல, கோபு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டார்.

“ உலகம் சிரிக்கிறது இருக்கட்டும். உன் நாடகத்தைப் பார்த்து ஊர் சிரிக்காம இருக்குமா?” கோபுவின் நக்கலுக்குச் சட்டென்று சிரித்தார் ஸ்ரீதர். “கவலைப்படாதே. அதுல உன்னோட காமெடியும் உண்டு. நாடகத்துக்கு ஆகற செலவுக்கு நம்மகிட்ட தேறாது. அதுக்கு நீ எனக்கு ஸ்பான்சர் மட்டும் பிடிச்சுக் கொடு அப்புறம் செங்கல்பட்டுல நாமதாண்டா கிங்ஸ்!” என்றார் ஸ்ரீதர்.

கோபுவுக்கு உற்சாகம் தீயாகப் பற்றிக்கொள்ள செல்வந்தரான தன் பெரியப்பா மகன் எம். இ .ரெங்கசாமியிடம் ஸ்ரீதரை அழைத்துச் சென்றார். கோபுவின் தந்தை பள்ளியாசிரியர். ஆனால், பிறந்தது பெரிய செல்வந்தர் குடும்பத்தில்.

ரங்கசாமி நாடகத்துக்கு நிதியளித்து உதவினார். ஒரு டிக்கெட்டின் விலை இரண்டு ரூபாய் என்று நிர்ணயித்து ரங்கசாமி டிக்கெட்களை அச்சடித்துத் தந்துவிட்டார். வசூல் எவ்வளவாக இருந்தாலும் என்னிடம் வந்துவிட வேண்டும் என்று ரகசியமாக கோபுவிடமும் சொல்லிவிட்டார். ஆனால், டிக்கெட் எங்கே விற்றது? போவோர் வருவோர்க்கெல்லாம் இடைத்தேர்தல் டோக்கன் போல் வாரி வாரி வழங்கப்பட்டது. கூட்டம் சேர்ந்தால் போதும் என்று டிக்கெட் விற்பனை காந்திக் கணக்காகிப்போனது.

 

காதலியாக வேடமிட்ட கோபு

திட்டமிட்டபடி மிகப் பொறுப்பாக ஒத்திகைகள் எல்லாம் பார்த்து ‘உலகம் சிரிக்கிறது’ நாடகம் அரங்கேறியது. எதிர்பாராதவிதமாக செங்கல்பட்டு ரசித்துச் சிரித்தது. ஸ்ரீதர் வழக்கம் போல் ஹீரோ. கதைப்படி ஒரு கட்டத்தில் ஹீரோவைக் கல்லூரியை விட்டு நீக்கிவிடுவார் முதல்வர். காதலியாக நடித்த கோபு நவீன கண்ணகியாகப் பொங்கி எழுந்து, தலைவிரி கோலத்துடன் முதல்வர் அறைக்குள் நுழைந்து, “ தீர விசாரிக்காமல் என் தலைவனை நீங்கிய உமக்கு டர்பன் ஒரு கேடா, எதற்கு குஷன் நாற்காலி, ஏனிந்த டாம்பீகம்?” என்றெல்லாம் அவரை நகைச்சுவை வசனங்களால் வருத்தெடுத்துவிட்டு “இந்தக் காதலி கண்ணீருக்குப் பரிகாரம் வேண்டும்.

இந்த ஆண்டு காலேஜ் ரிசல்ட் பணால் ஆகட்டும்! கரஸ்பாண்டெண்ட் உம் சம்பள உயர்வில் கை வைக்கட்டும்” என்று கையை நீட்டி கோபு ஆவேசமாகப் பேசத் தலையில் அணிந்திருந்த சவரிமுடி சடாரென்று தரையில் விழுந்து கோபுவின் சிறிய குடுமி வெளியே தெரிய, ரசிகர் கூட்டம் ஐந்து நிமிடம் சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

நாடகம் மாபெரும் வெற்றி. ஆனால், ஸ்பான்சர் செய்த பெரியப்பா மகன் ரெங்கசாமிக்கு நஷ்டம். ஆனால், நாடகம் தந்த அனுபவமும் அதற்குக் கிடைத்த பாராட்டும் கோபு ஸ்ரீதர் இருவரையுமே நிலைகொள்ளாமல் செய்தது.

 

மெட்ராஸ் திருப்பம்

திடீரென்று ஸ்ரீதரைப் பல நாட்களாகக் காணவில்லை. ஒரு நாள் கோபுவைத் தேடி பரபரப்புடன் வந்தார் ஸ்ரீதர். “டேய் கோபு... ‘ரத்த பாசம்’னு ஒரு நாடகம் எழுதினேன். அதை நாடக ஜாம்பவான்கள் டி.கே.எஸ்.சகோதரர்கள் வாங்கியிருக்காங்கடா. இனிமே ஒத்திகைக்காக நான் அடிக்கடி மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். அதனால மெட்ராஸ்ல தங்கலாம்னு இருக்கேன்.” ஸ்ரீதர் சொன்னதும் கோபுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. நண்பனுக்குப் பெரிய வாய்ப்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஒருபுறம், இனி அவன் செங்கல்பட்டில் இருக்கப்போவதில்லை என்ற வருத்தம் மறுபுறம்.

ஸ்ரீதர் சென்னை கிளம்பிவிட அப்போது ரங்கநாதன் கோபுவுக்குக் கைகொடுத்தான். ரங்கநாதன் என்ற ரெங்குடுவுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு. ஒருமுறை இருவரும் விகடன் சந்துருவின் விகடக் கச்சேரிக்கு சென்றிருந்தனர். அதனால் கவரப்பட்ட இருவரும், ‘நாமும் விகடகச்சேரி செய்தால் என்ன’ என்று யோசித்து பிறகு அதைச் செயல்படுத்தினார்கள். முதன்முதலாக கோபுவின் வீட்டு மொட்டை மாடியிலேயே விகட நிகழ்ச்சியை நடத்த, திரண்டிருந்த அக்கம்பக்கத்தினர் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தபோது கோபு ஆச்சரியமாக ஒருவரைக் கவனித்தார்.

அம்மாவின் நகைச்சுவை வெடிகளில் ஊசிப் பட்டாசாகிவிடும் அப்பா, அத்தனை சீக்கிரம் வாய் திறந்து சிரிக்காத மனிதர். அவரே மகனின் நகைச்சுவைத் தெறிப்புகளுக்குக் குலுங்கிக் குலுங்கி சிரிப்பதைக் கண்டதும் கோபுவுக்குத் தன் மீதிருந்த தன்னம்பிக்கை கடலாகப் பெருகி அலையாக ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு கோபு-ரெங்குடுவின் விகட நிகழ்ச்சி பிரபலம் ஆக, உறவினர்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் இவர்களின் விகட நிகழ்ச்சிக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியது. இதனால் கோபுவைப் பற்றிய கவலை பெற்றோருக்கு குட் பை சொல்லிவிட்டுச் சென்றது.

 

ஆசீர்வதித்த பிரபலம்

ஸ்ரீதர் மெட்ராஸ் போனதுபோலவே இவர்களது விகட நிகழ்ச்சி மெட்ராஸுக்கு ஏற்றுமதியானது. அப்படியொரு மெட்ராஸ் திருமணத்தில் கோபுவின் விகடகச்சேரிக்கு அமோக வரவேற்பு. வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் தன் கணவருடன் இணைந்து தமிழகத்தையே சிரிக்க வைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியும் மனம்விட்டு நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார். அவர் டி. ஏ. மதுரம். நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த மதுரம் “ பேஷ்... பேஷ்… அபாரம்... நல்லா வரணும்” என்று ஆசீர்வதித்துப் பாராட்டிவிட்டுச் சென்றார். பின்னாளில் மதுரம் தயாரித்த ‘புனர்ஜென்மம்’ படத்தில் ஸ்ரீதரும் கோபுவும் பணியாற்றப்போவதற்கு அந்த நிகழ்ச்சி ஒரு அச்சாரமாக அமைந்துபோனது.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22690955.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலயா 05: மேடை ஏறிய ரத்த பாசம்

 

 
16chrcjsridar%20and%20gopu%20with%20am%2

ஏ.எம்.ராஜாவின் கம்போஸிங் அறையில் தொடக்ககால ஸ்ரீதரும் கோபும்

காரைக்குடியில் இண்டர்மீடியட் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பினால் இன்னொரு சலுகையும் உண்டு என்று உறுதி அளித்திருந்தார் கோபுவுடைய தந்தை. குடுமியை எடுத்துவிட்டு கிராஃப் வெட்டிக்கொள்ளும் சலுகை அது. படிப்பு முடிந்து ரிசல்ட் வருமுன்பே கிராஃப் வெட்டிக்கொண்டார் கோபு. பெரிய விடுதலை கிடைத்ததுபோல ஒரு ஃபீல். ஆனால், நண்பன் ஸ்ரீதர் இல்லாத செங்கல்பட்டு கோபுவுக்குக் கசந்தது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை என்று கலகலப்பான குடும்பத்துடன் வசித்த கோபுவுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

ஆனால், ஸ்ரீதரின் இடம் அப்படியே காலியாக இருந்தது. ரெங்கடு என்ற ரங்கநாதன், பின்னாளில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் மூத்த அதிகாரியாக வட தமிழகம் முழுவதும் பெயர்பெற்ற வெங்கடேசன் என்ற வெங்கு ஆகிய இருவரும் கோபுவின் நட்பு வட்டத்துக்குள் வந்தனர். இந்தக் கூட்டணியுடன் வந்து இணைந்துகொண்டார் செங்கல்பட்டு திருமலை டாக்கீஸ் உரிமையாளர் நாயுடுவுடைய மகன் கிட்டப்பா.

அன்று கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பாலாற்றில் நீச்சலடிப்பதில் தொடங்கி பொதி சுமக்காமல் மந்தையில் திரிந்துகொண்டிருக்கும் கழுதைபோல் பொழுதை வீணாக்கிக்கொண்டிருந்தனர். இந்தக் கூட்டணியில் தனது வீரதீரச் செயல்களுக்காகச் செங்கல்பட்டு நகரத்தில் கோபு மட்டும் தனித்த புகழைப் பெற்றிருந்தார்.

 

வாத்தியாரை வாழ்த்திய மாணவன்

கோபு அப்போது செங்கல்பட்டில் பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பள்ளியில் சம்ஸ்கிருதம் அவருக்குச் சிறப்புப் பாடம். ஒருநாள் பள்ளியிலிருந்து சற்று முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பியிருந்தார் தந்தையார் துரைசாமி. அவரது முகத்தில் கோபமும் கையில் ஒரு புளியமரக் குச்சியும் துடித்துக்கொண்டு இருந்தன. அடித்தால் அத்தனை சீக்கிரம் உடையாது அந்தக் குச்சி. கோபு புத்தகப்பையுடன் வீட்டுக்குள் நுழையும்போதே கோபத்துடன் கேட்டார்.

“ ஏண்டா... இப்படிச் செஞ்சே?”

“பின்னே என்னப்பா? 35 மார்க் எடுத்தா பாஸ். 34 மார்க் எடுத்துட்டேன். ‘மீதி ஒரு மார்க் போட்டா உங்க பாட்டனார் வீட்டு ஆஸ்தி குறைஞ்சுப்போயிடுமா’ன்னு கேட்டேன். அவர் பதிலுக்கு... ‘தேவ பாஷையான சம்ஸ்கிருதத்தை நான் அசுரர் பாஷையா மாத்திட்டேன்’னு எல்லார் முன்னாடியும் திட்டினார். எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துடுச்சு!

அப்படியா, தேவ பாஷை சொல்லித் தர உங்களை இதோ இப்போ தேவர்கள் ஆசிர்வதிக்கிறா பாருங்கோன்’னு சொல்லி ஆன்சர் பேப்பரைச் சுக்கு சுக்கலா கிழிச்சு, சடார்ன்னு பெஞ்சுமேலே ஏறி அவர் தலையிலே கொட்டினேன். கிளாஸே கொல்லுன்னு சிரிச்சுது. வாத்தியார் சுதாரிக்கிறதுக்குள்ள உஷாராகி ஒரே ஓட்டம் எடுத்துட்டேன். நான் இனிமே சம்ஸ்கிருத கிளாஸ் போகமாட்டேன்ப்பா’

கோபு அப்பாவையே அதட்ட, அந்த அதட்டலில் வாத்தியார் துரைசாமியே ஆடிப்போய்விட்டார். அத்தனைக்கு மத்தியிலும் கோபுவின் மாடுலேசன் அவரது கோபத்தைத் தணித்து, சிரிப்பை வரவழைத்துவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பின் சில நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு மட்டம்போட்ட கோபுவை வாத்தியாரின் மகன் என்பதால் மன்னித்து மறுபடியும் உள்ளே அனுமதித்தது பள்ளி நிர்வாகம்.

 

போய்யா நீயும் உன் வேலையும்

இப்படிப் பள்ளிக் காலத்தில் புகழ்பெற்றிருந்த கோபுவின் எதிர்காலத்தைக் குறித்து அவருடைய பெற்றோர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். தங்கள் உறவினர் மூலம் கோபுவை தபால் ஆபீஸ் வேலைக்கு அனுப்ப முயன்றனர். உறவினர் மூலம் ஒரு தபால் அதிகாரியைப் பிடித்த பெற்றோர் அவரிடம் அனுப்பிவைத்தனர். பெற்றோரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் கோபுவும் அவரைக் காணச் சென்றார். கோபு கிராப் ஹேர் ஸ்டைல் வைத்து கொண்டிருப்பதைக் கண்டு அவரை ஏற இறங்கப் பார்த்தார் அந்த அதிகாரி.

“என்னடா அம்பி கிராப் வச்சிருக்கே? குடுமி வச்சுக்கோ. வேலை வாங்கித் தரேன்” என்றார் அவர்.

“அதெல்லாம் முடியாது. இந்த கிராப்பு தலைக்கு ஏத்த வேலை ஏதாவது இருந்தா தர முடியுமா?!” என்றார் கோபு.

“குடுமி வச்சுக்கிறதா இருந்தா குமாஸ்தா வேலை தரேன்!”

“அந்த வேலையை நீங்களே வச்சுக்கங்க..!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் கோபு. வீம்பாகப் பேசிவிட்டு திரும்பிவந்தகோபு பெற்றோருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருட்டியதும் மெல்ல வீட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று பொழுது சாயும்வரை காத்திருந்து தெருவுக்குள் நுழைந்தார். அப்போது இருட்டுக்குள்ளிருந்து…

“ டேய் கோபு அசையாதே.. அப்படியே நில்லு” என்று ஒரு குரல் மிரட்டியது. திடுக்கிட்டுப் பயந்து நின்ற கோபுவின் முன் வந்து நின்றார் ஸ்ரீதர். சென்னையிலிருந்து வந்திருந்த ஸ்ரீதர் அவருக்காகக் காத்திருந்தார்.

16chrcjrathpasam

“உடனே கிளம்பு! நான் எழுதிய ‘ரத்த பாசம்’ நாடகம் நாளைக்கு அரங்கேறுது. அதை நீ பார்க்க போறே!” என்றபடி அன்றிரவே ரயிலைப் பிடித்து கோபுவை அழைத்துக்கொண்டு மெட்ராஸுக்கு வந்தார் ஸ்ரீதர். மயிலாப்பூரில் நாடகம்.

இடைவேளையின் போது, ஸ்ரீதரை மேடையேற்றி, ‘இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் ஸ்ரீதர் இவர்தான்!’ என்று அறிவித்தார்கள். கோபுவுக்கு பரமானந்தம். கையைத் தட்டிக்கொண்டே இருந்தார். ஸ்ரீதருக்குக் கிடைத்த பெருமை, செங்கல்பட்டுக்கே கிடைத்தது போல் ஒரு பெருமிதம்.

 

திண்ணையில் ஒரு திரைக்கதையாளர்

ஸ்ரீதர் டி.கே.எஸ் நாடகங்களில் மும்முரமாக இருக்க, கோபு செங்கல்பட்டிலும் மெட்ராஸிலுமாக மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். வேலை கிடைக்காத கோபுவுக்குச் சொத்தாவது கிடைக்கட்டும் என்று தனது விதவைத் தங்கை கமலாவுக்கு அவரைத் தத்துக் கொடுத்துவிட்டார் அப்பா. இதனால் காஞ்சிபுரத்தில் அத்தையின் வீட்டில் குடியேற வேண்டிய கட்டாயம் கோபுவுக்கு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் கமலா அத்தையின் வீட்டுக்கு எதிரே கூரத்தாழ்வார் கோயில் இருந்தது.

அதற்கு இரு கட்டிடங்கள் தள்ளி திராவிட நாடு பத்திரிகையின் அலுவலகம். அதன் வெளித் திண்ணையில் உட்கார்ந்து சட்டை கூட போடாமல், ஒரு டவலைத் தோளில் போட்டுக்கொண்டு, மிக எளிய தோற்றத்துடன் தெரிந்த ஒருவர் மும்மரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கோபு தன் அருகே நின்றிருந்தவரிடம் ‘அவரு யாரு, என்ன எழுதறாரு.?’ என்று விசாரித்தார். “அவர்தான் சி.என். அண்ணாத்துரை. சினிமாவுக்கு கதை, வசனம் எழுதறாரு!” என்று பதில் வந்தது.

“ யார்!? ‘வேலைக்காரி’, ‘நல்லதம்பி’ படங்களின் கதாசிரியரா?” என்று வியப்பாகக் கேட்டார் கோபு. “ ரெண்டு படத்தையுமே பார்த்திருக்கிறாயே தம்பி…. நீ காஞ்சிபுரத்தானா இவ்வளவு விசாரணை தொடுக்கிறாய்?” என்று கேட்டவர் அரங்கண்ணல். அண்ணா அரசியலில் வளர்ந்திராத அக்கால கட்டத்தில் திரைப்படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த அந்த திண்ணைக்காட்சி கோபுவின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துபோனது.

பின்னாளில் எத்தனை பெரிய அல்லது சிறிய பட நிறுவனமாக இருந்தாலும் சரி ஹோட்டல் அறை வேண்டாம் என்று கோபு அன்புடன் மறுத்துவிட்டு, மாடிப்படி, மொட்டைமாடி, ஸ்ரீதர் காரின் முன்இருக்கை அல்லது பானட் ஆகியவற்றில் அமர்ந்து கிடுகிடுவென்று நகைச்சுவைக் காட்சிகளை எழுதிக் கொடுக்க அண்ணாவின் எளிமை கோபுவுக்குப் பெரும் தாக்கத்தைத் தந்தது. அப்படிப்பட்ட அண்ணாவுக்கு எதிராக கோபு தன் குழுவினருடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது.

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22770374.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிரித்ராலயா 06: ராஜசுலோச்சனா எடுத்த இன்சூரன்ஸ்!

 

 
23chrcjrajasolasan

ராஜசுலோச்சனா

கொல்லன் பட்டறையில் எறும்புக்கு என்ன வேலை? கோபுவின் எதிர்பாராத தேர்தல் பிரச்சாரம் அப்படித்தான் ஆகிவிட்டது. நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அப்போது மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் கோபுவின் நகைச்சுவை நிகழ்ச்சிக்குப் பரம விசிறி.

அப்போது தேர்தல் வர, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கோபுவின் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார் அண்ணா. அவரை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வரும்படி ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர் ஒரு லாரியைக் கொடுத்து அனுப்பினார். பிரச்சாரத்துக்குக் கிளம்பிய கோபுவின் மனக்கண்ணில் திண்ணையில் அமர்ந்து எளிமையான தோற்றத்தில் கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த அண்ணாவின் உருவம் வந்து நிழலாடியது.

அவரை எதிர்த்து பிரச்சாரமா என்று ஒரு கணம் தயங்கினார். ஆனால் தனது நலவிரும்பியான ஆத்தூராரிடம் முடியாது என்று சொல்ல முடியாதே. வேறு வழியில்லாமல் பேசும்படம் சம்பத்குமார், ரெங்குடு, வெங்கு என்று கிடைத்த நண்பர்களை லாரியில் அள்ளிப்போட்டுக்கொண்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் கோபு.

அப்போது திராவிட நாடு அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தவர் அரங்கண்ணல். அண்ணாவின் தேர்தல் மேனேஜரும் அவர்தான். கோபுவுடன் அவர் நன்றாகப் பழகியிருந்ததால் பிரச்சாரம் செய்யவந்த கோபுவைக் கண்டதும் அவருக்கு வியப்பு. “ என்னடா தம்பி? அண்ணாவுக்கு எதிரா மைக் பிடிக்கிற தைரியம் உனக்கு இருக்கா?” என்றதும் கோபுவின் அடிவயிறு கலங்கியது. அரங்கண்ணல் அப்படிக் கேட்டதும் லாரியைவிட்டு இறங்கி ஒருமுறை அத்தையின் வீட்டுக்குப்போய் கலங்கிய வயிற்றைக் காலி செய்துவிட்டுவந்து திரும்பவும் பிரச்சார லாரியில் ஏறினார்.

தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் அண்ணாவும் அப்போது காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். உஷாராக கோபு ஒரு உத்தியைக் கையாண்டார். அண்ணா பிரச்சாரம் செய்துவிட்டு சென்ற தெருக்களில் அவர் வாக்குச் சேகரித்து சென்றபின் லாரியை அந்தப் பகுதிக்குவிடச்சொல்வார்.

 

யார் இந்தப் பொடியன்?

அண்ணா முதல்நாள் பொதுக்கூட்டம் பேசிய ஆடிசன்பேட்டை தெருவில்போய் கோபுவின் பிரச்சார லாரி நின்றது. முதலில் மைக் பிடித்த கோபுவுடைய நண்பன் வெங்கு,

“எல்லாரும் பொழுதோடு எழுந்து தீர்த்தமாடிட்டு வாக்குச்சாவடிக்குப் போய், நம்ம ராட்டை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேச பட்டென்று மைக்கைப் பிடுங்கினார் கோபு. “ஏன்டா... ஏற்கெனவே காங்கிரஸை அக்ரஹாரக் கட்சினு முத்திரை குத்திட்டா. நீ வேற தீர்த்தமாடி… அப்படி இப்படினு விழுற ஓட்டுக்கும் வேட்டு வச்சிடுவபோல இருக்கே!” என்று சொல்லிவிட்டு திராவிடக் கட்சிகளின் பாணியில் ஆரம்பித்தார் கோபு.

“காங்கிரஸ் சிங்கங்களே. வீர அடலேறுகளே. தமிழ் மண்ணின் தாய்க்குலமே ! பல்லவ நாட்டின் பல்கலைக்கழகமாம் காஞ்சியின் பகுத்தறிவு மிக்க சான்றோரே” என்று கவர்ச்சிகரமான வார்த்தைகளில் மாலை கோத்த கோபு காங்கிரஸுக்கு ஆதரவுகேட்டு, “ அடுக்குமொழியால் தமிழைத் திடுக்கிட வைக்கும் அண்ணாதுரை அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், அரசியல் அரங்கம் என்பது கதை, வசனம் எழுதும் கற்பனைக் கோட்டை என்று நினைத்துவிட்டாரா? வாய்ஜாலம் இங்கே எடுபடாது…

காஞ்சிபுரம் காங்கிரஸைக் கைவிடாது” என்று இடக்கு மடக்காகப்பேசிக்கொண்டே செல்ல, கொஞ்ச நேரத்தில் லாரியைச் சுற்றிக் கறுப்பு சிவப்புக் கொடிகள் ஏந்திய தொண்டர்கள் மொய்க்க, கோபு பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதுபோது, ‘அடடா! நமது பேச்சுக்கு இத்தனை கூட்டம் கூடிவிட்டதே!’ என ஆச்சரியமாகத் தொண்டர்களைப் பார்த்தார்.

அத்தனை தொண்டர்களின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்க கண்டு ‘அய்யோ! இவர்கள் அத்தனைபேரும் திமுக தொண்டர்கள் அல்லவா!’ கள நிலவரம் அறிவதற்குள் கோபுவுக்கு மறுபடியும் வயிற்றைக் கலக்க, ‘சீக்கிரம் அத்தை வீட்டுக்கு லாரியை விடச்சொல்’ என்றார் வெங்குவிடம். ஆனால், தொண்டர்கள் விட்டால்தானே! ஆடிசன் பேட்டையில் சந்துபொந்தெல்லாம் வீடு வீடாக வாக்கு சேகரித்துக்கொண்டு கோபு கூட்டணியின் லாரியின் அருகே வந்த அண்ணா, அரங்கண்ணலைப் பார்த்து “யார் இந்தத் துடுக்கான பொடியன், எங்கோ பார்த்திருக்கிறேனே?” என்று கேட்டார்.

அரங்கண்ணல் அண்ணாவிடம், “நம்ம தெரு பையன்தான். சம்ஸ்கிருத பண்டிட் மருமகன்” என்று சொல்ல, தொண்டர்களைப் போகச் சொல்லுங்கள் என்று கெஞ்சும் தொனியில் அண்ணாவைப் பணிவுடன் பார்த்தார் கோபு.

ஆனால், அண்ணா லாரி அருகில் வந்து “என்ன தம்பி! ஏதோ கேட்கணும்னு சொன்னியே” என்பது போன்ற ஒரு பார்வையை கோபுவின் பக்கமாக உதிர்த்துவிட்டு, கையைக் கூப்பி, “உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்ல, கோபு உள்ளிட்ட மொத்தக் கூட்டணியும் அவரைத் திரும்பிக் கும்பிட்டு “சரி அண்ணா” என்று சொல்ல, அங்கே கோபத்துடன் நின்றிருந்த மொத்த திமுக தொண்டர்களும் கொல்லென்று சிரித்துவிட்டு லாரிக்கு வழிவிட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரம் இப்படி அட்டர் பிளாப் ஆகும் என்று கோபு நினைக்கவே இல்லை. ஆத்தூரார் ‘‘பிரச்சாரம் எப்படி கோபு, பேஷா போச்சுதா, அண்ணா காதுக்கு உங்க டீம் பத்தி தாக்கல் போச்சா?’’ என்று கேட்டதும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாத கோபு சடரென்று, “அண்ணாவே லாரிகிட்ட வந்து நின்னு என் பேச்சைக் கேட்டார் என்றால் பாருங்கோ மாமா” என்று கூற ஆத்தூரார் ஆடிப்போனார்.

 

நிகழ்ச்சியிலிருந்து நாடகம்

இனி, கொட்டிக்கொடுத்தாலும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும் போவதில்லை என்று முடிவுசெய்த கோபு ‘நீயும் நானும்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை நண்பர் ரெங்குடுவோடு நடத்திக்கொண்டிருந்தார். அதிலிருந்து ஒருபடி முன்னேறி ‘மிஸ் மைதிலி’ என்ற நாடகத்தை எழுதி நண்பர்களுடன் திறந்த வெளியரங்கில் நாடகத் தொடங்க அதற்கு வரவேற்பு பெருகத் தொடங்கியது. பல அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து நாடகத்துக்கு அழைப்பு வந்தது.

ஒரு நாள், காட்டாங்குளத்தூரில் நடந்த அந்த நாடகத்துக்கு, எதிர்பாராதவிதமாக வருகை தந்த டி. ஏ. மதுரம், நாடகத்தை முழுவதுமாக பார்த்து மீண்டும் கோபுவை அருகே அழைத்து “நீ மெட்ராஸுக்கு வராமல் இந்தப் பட்டிக்காட்டுப் புழுதியில ஏன் ராசா கிடக்கிற?” என்று வாழ்த்திவிட்டுசெல்ல கோபு எனும் கலைஞனுக்குக் கண்கள் கலங்கிப்போயின.

23chrcjchirithralaya

25 வயது இளைஞராக கோபு

நாடகமும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் திருமண வயதை நெருங்கிவிட்ட ஒரு இளைஞனின் அன்றாடக் கச்சேரியை நடத்திவிடுமா? கையில் பணம் நடமாட சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நல்ல வேலை வேண்டுமே? மீண்டும் பெரியப்பா மகனே சரணம் என்று அவரைச் சந்திக்க சென்றார் கோபு.

 

ஆயுள் குறைந்த இன்சூரன்ஸ் வேலை

அவர் ஏஷியன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஜார்ஜ் டவுனில் இருந்த அலுவலகத்துக்குச் செங்கல்பட்டிலிருந்து சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்று வருவார். நண்பர்களுடன் ரயிலில் சீட்டு கச்சேரி, நகைச்சுவை நிகழ்ச்சிகள் சூடு பறக்கும். ‘தெரிந்தவர்களிடம் பாலிசி எடுத்து வாருங்கள்’ என்று இன்சூரன்ஸ் மேனேஜர் உத்தரவிட, நெருங்கி நண்பனாக இருந்த ‘பேசும்படம்’ சம்பத்குமாரை அணுகினார் கோபு.

“யாராவது சினிமாக்காரங்க பாலிசி எடுப்பார்களா?” கோபு கேட்டார். “அவ்வளவுதானே! என்னோடு வா” என்ற சம்பத்குமார் நேராக ராஜசுலோச்சனாவிடம் அழைத்துச் சென்றார். “என் சினேகிதனுக்காக ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்க முடியுமா மேடம்?” என்று சம்பத்குமார் கேட்ட உடனே பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு பாலிசி எடுத்தார் ராஜசுலோச்சனா.

அதுவரை வில்லன் பி.எஸ்.வீரப்பா போல முறைத்து வந்த மேனேஜர் நட்சத்திர பாலிசிகளுடன் கோபு வரத் தொடங்கியதும் குணச்சித்திரத் திலகம் நாகையா போன்று உணர்ச்சிவசப்பட்டார். “நீங்க இனிமே டை கட்டிட்டு பாலிசி பிடிக்கப்போங்க” என்று அறிவுரை வேறு கொடுக்க, மறுநாள் ஜானவாசத்துக்கு வாங்கிய அண்ணனின் டையை ஏடாகூடமாகக் கழுத்தில் கட்டி, அது இறுகி தொண்டை கம்மி எம்.ஆர்.ராதாவின் கீச்சுக்குரலில் பேசியபடி பலநாட்கள் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது கோபுவுக்கு.

அதுவுமில்லாமல் கோபு டை கட்டிக்கொண்டது பிரதமர் நேருவுக்குப் பிடிக்கவில்லை போல் இருக்கிறது. ஒரே இரவில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அனைத்தையும் அரசாங்கம் நாட்டுடைமை ஆக்கிவிட, ட்ரெயினியாக இருந்த கோபுவுக்குக் காலியானது இன்சூரன்ஸ் ஜோலி. ஆனால், கோபு மனம் தளரவில்லை. அவருக்குக் கோயிலாக அடைக்கலம் கொடுத்தது செங்கல்பட்டு திருமலை டாக்கீஸ் திரையரங்கம்.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22826066.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 07: நண்பனின் வளர்ச்சியில் பொங்கிய மகிழ்ச்சி!

 

 
02CHRCJENMANAIVI

‘என் மனைவி’ படத்தில் கே.ஆர்.செல்லம், சாரங்கபாணி

சென்னையின் நுழைவாயில் என்று செங்கல்பட்டுக்கு இன்று தடபுடலான பட்டப்பெயரை ரியல் எஸ்டேட்காரர்கள் வாரி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், செங்கல்பட்டுக்கு அநேக வரலாற்றுப் பெருமைகள் உண்டு. ஒரு காலத்தில் விஜயநகரப்பேரரசின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள கடல்போன்ற கொளவாய் ஏரி மதராஸின் கடந்தகால கடும் குடிநீர் பஞ்சங்களின்போதுகூட வற்றவில்லையாம். கொளவாய் ஏரி மட்டுமல்ல, ஊரைச் சுற்றி பல நீர் நிலைகள் இருக்கின்றன. அவற்றில் செங்கழுநீர் பூக்கள் என்று சங்க ப்பாடல்கள் குறிப்பிடும் அல்லி மலர்கள் நிறைந்திருந்தன.

அதனால் செங்கழுநீர்பட்டு எனப் பெயர்பெற்று காலப்போக்கில் செங்கல்பட்டு ஆகிவிட்டது. அப்படிப்பட்ட செங்கல்பட்டுக்கு நவீன காலத்தின் அடையாளமாக அமைந்ததுதான் ‘திருமலை டாக்கீஸ்’ திரையரங்கம். அதன் அதிபர் திருமலை நாயுடுவின் மகன் கிட்டப்பா, பால்யம் முதல் கோபுவின் நண்பர். எங்கே போனால் கோபுவைப் பார்க்கலாம் என்று கேட்பவர்களிடம், “தியேட்டருக்கென்றே ஒரு மகனைப் பெற்றிருக்கிறேன். திருமலை டாக்கீஸ் போங்க, கோபுவைப் பாருங்க” என்று பந்துக்களிடம் சொல்லுவாராம் அம்மா.

 

சம்பளம் இல்லாத ஆபரேட்டர்

டிக்கெட் கொடுப்பது, ஆப்ரேட்டருடன் சேர்ந்து பட ரீலை ஓடவிடுவது போன்ற வேலைகளை விருப்பத்துடன் ஏற்றார் கோபு. திரையரங்கில் ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியா புரொஜெக்டர்கள் இரண்டு இருக்கும். ரீல் பெட்டியிலிருந்து படச்சுருளை எடுத்து இரண்டு ரீல்களைச் சுற்றினால் ஒரு ஸ்பூல் என்பார்கள். சுமார் இருபது நிமிடம் ஓடும் அந்த ஸ்பூல். அது ஓடி முடிவதற்குள், மற்றொரு புரொஜெக்டரில் இரண்டு ரீல்களைச் சுற்றி அடுத்த ஸ்பூலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். முதல் புரொஜெக்டரில் உள்ள ஸ்பூல் முடியும் தருவாயில் ஆபரேட்டர் ‘ஸ்டார்ட்’ என்று சொன்ன உடனேயே அடுத்த புரொஜெக்டரை கோபு இயக்குவார். இந்தப் பணிகளை எல்லாம் மிகுந்த விருப்பத்துடன் நண்பன் கிட்டப்பாவுக்காகச் செய்து வந்தார் கோபு. புரொஜெக்டர் அறையின் சதுரத் துளை வழியே படங்களை இலவசமாகப் பார்ப்பதுதான் கோபு பெற்ற சம்பளம்.

 

காட்சிகள் கற்றுத் தந்த வித்தை

திரையரங்கில் ஒரே படத்தைப் பலமுறை சலிக்காமல் பார்த்து வந்த கோபுவுக்கு நகைச்சுவைக் காட்சிகள் வரும்போது உற்சாகம் ஊற்றாகப் பெருகும். அதேபோல மற்ற காட்சிகளைவிட நகைச்சுவைக் காட்சிகளை உன்னிப்பாகக் கவனிப்பார். என்.எஸ்.கே – மதுரம், காளி.என்.ரத்தினம் - சி.டி.ராஜகாந்தம் ஜோடிகள் அப்போது திரையுலகைக் கலக்கிக்கொண்டிருந்தன. சாரங்கபாணி கவுரவமான நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தார்.

‘என் மனைவி’ படத்தில் “சங்கீதம் பாடப்போறேன்… சினிமாவுல சேரப்போறேன்!” என்று ஆடிப்பாடி அமர்க்களப்படுத்தியிருந்த சாரங்கபாணி சினிமாவில் சேர வரும்படி தனக்கே அழைப்பு விடுவது போலத் தோன்றியது கோபுவுக்கு. பின்னாளில் அவருக்கே வசனம் எழுதியபோது இந்தக் காட்சியைச் சொல்லி கோபு பாராட்ட, அவரோ கோபுவின் நகைச்சுவை வசனங்களைக் கேட்டு தொப்பை அதிரச் சிரிப்பாராம். கோபுவை மிகவும் கவர்ந்த மற்றொரு ஹாஸ்ய குணசித்திரம் டி.ஆர். ராமசந்திரன்.

ஜெமினி நடித்த ‘மனம் போல் மாங்கல்யம்’ கே.ஏ.தங்கவேலு நடித்த ‘சிங்காரி’ ஆகிய அதிரடி நகைச்சுவைப் படங்கள் அனைத்தும் மதராஸில் ரிலீஸ் ஆகும்போதே திருமலை டாக்கீஸிலும் ரிலீஸாகிவிடும். ஜெமினிக்கு தான் வசனம் எழுதுவோம் என்று கனவுகூடக் கண்டிருக்கமாட்டார் கோபு. பிற்காலத்தில் ‘டனால்’ தங்கவேலுவுடன் சேர்ந்து இன்றும் மீம்களிலும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகளிலும் வலம் வந்துகொண்டிருக்கும் மன்னார் அண்ட் கம்பெனியை உருவாக்குவோம் என்று நினைத்திருப்பாரா என்ன?

 

பராசக்தி தந்த உந்துதல்

அப்போது தமிழக அரசியலையே புரட்டிப் போட்ட ‘பராசக்தி’ திருமலை டாக்கீஸில் ரிலீஸ் ஆனது. ஒரு திரைப்படம் நாட்டில் பல மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்தார் கோபு. ஒரு விதையாக அவர் மனதில் முளைவிட்டிருந்த சினிமா ஆசை, மரமாக வளர இந்தப் படம் ஒரு பெரிய உந்துதலாக அமைந்துபோனது.

புதுமுகமாகத் தோன்றிய சிவாஜியின் நடிப்பைப் பார்த்தும் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் அரசியல் வசனங்களைக் கேட்டும் காட்சிக்குக் காட்சி எழுந்த கரகோஷத்தை திருமலைத் திரையரங்கம் அப்போதுதான் பார்க்கிறது. அங்கே 50 நாட்கள் ஓடிய முதல் படம். பின்னாளில் ‘நடிகர் திலக’மாக தமிழுலகம் முடிசூட்டிய சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் ஆச்சாரியாக மாறப்போவதை அறியாமல் கோபு ‘பாராசக்தி’ படத்தைத் தினசரி பார்த்தபடி திருமலை டாக்கீஸில் தனது சினிமா உழவாரப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

 

02chrcjChitralayagopu%20%20and%20srithar

ஸ்ரீதரும் கோபுவும்

கோபுவும் கோபுலுவும்

நகைச்சுவைக் காட்சிகளை ரசித்து அதிலேயே திளைத்திருக்காமல் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் பத்திரிகைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்துச் சிலாகிப்பதும் அந்தத் துணுக்குகளுக்கு ப்ரிகுவெல்கள் சீகுவெல்கள் எழுதி நண்பர்களைச் சிரிக்க வைப்பதிலும் கோபுவுக்கு நாட்டம் இருந்தது. அன்று ஆனந்த விகடனின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்த கோபுலுவின் கார்ட்டூன்கள் கோபுவுக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியரான கோபுலுவுக்கும் தனக்கும் ஒரு எழுத்துதானே வித்தியாசம் என்று நினைப்பாராம்.

கோபுலுவின் கேலிச்சித்திர ஜோக்குகளைப் படித்ததும் அவற்றைத் தொடர்ந்து எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று தனக்குத்தானே பரீட்சை வைத்துக்கொள்வார். அதையே ஒரு நாடகமாகக் கூட மனதில் உருவாக்குவார். அதை எழுதி நண்பர்களிடம் படித்துக் காட்டுவார். தனது அம்மாவைப் போலவே இயற்கையாக அமைந்திருந்த நகைச்சுவை உணர்வு, மிமிகிரி செய்யும் ஆற்றல், பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை தூண்டும் ‘பாடி லாங்குவேஜ்’, திரைப்படங்கள் மற்றும் பத்திரிகைகளில் அவதானித்த நகைச்சுவையை கொலாஜ் செய்து புதிய பாணியில் வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றில் 25 வயதிலேயே விற்பன்னராக மாறிநின்ற கோபு இருக்கும் இடங்கள் கலகலப்பாகிவிடும்.

திருமலைத் திரையங்க வாசம், அதைவிட்டால் தனது துறு துறு குழுவுடன் ‘மிஸ் மைதிலி’ நாடகத்தை நடத்துவது என வலம்வந்துகொண்டிருந்த கோபுவைத் தேடி இரண்டாம் முறையாகச் சென்னையிலிருந்து வந்த ஸ்ரீதர், தனது ‘ரத்தபாசம்’ நாடகம் திரைப்படமாகத் தயாராக உள்ளதாகவும், தானே அதற்குத் திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் கூறினார். ஸ்ரீதர் கொண்டுவந்த இந்தத் தகவலைக்கேட்டு கோபுவுக்குத் தலைகொள்ளாத மகிழ்ச்சி. ‘மிஸ் மைதிலி’ நாடகத்தை ஸ்ரீதருக்கு போட்டுக் காண்பித்தார், கோபு. அதில் இருந்த நகைச்சுவை விருந்தைக் கண்டு வியந்த ஸ்ரீதர். “ பேஷ்டா… பிரமாதம்.. நான் ஸ்டாப் லாபிங்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு ஸ்ரீதர் ஊர் பக்கமே வரவில்லை. அப்போதுதான் திருமலை தியேட்டருக்கு ஸ்ரீதரிடமிருந்து ட்ரங்கால் வந்தது. “ டேய் கோபு ‘ரத்தபாச’த்தைத் தவிர, ‘எதிர்பாராதது’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ மேல ரெண்டு படங்களுக்கு வசனம் எழுதுறேண்டா… அதான் ஊருக்கு வரமுடியல. முடிஞ்சா நீ ஒரு எட்டு வந்து என்னைப் பார்த்துட்டுப்போ” என்றார் ஸ்ரீதர். ஆவலோடு மெட்ராஸுக்குக் கிளம்பிப்போய் நண்பனைப் பார்த்துவிட்டு வந்தார். நண்பனின் வசன பேப்பர்களை சினேரியோ வாரியாக படித்துப் பார்த்துவிட்டு கோபு சொன்ன கருத்துகளைக் கேட்ட ஸ்ரீதர், “ நீ என் கூட இங்க இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும். நீ ரசிகன் மட்டுமல்ல, நல்ல விமர்சகன்” என்றார். ஆனால் ‘மிஸ் மைதிலி’ நாடகத்துக்கும் மிமிக்ரி நிகழ்ச்சிகளுக்கும் அடுத்தடுத்து ஆஃபர்கள் வர கோபு செங்கல்பட்டு திரும்பவேண்டியதாகிவிட்டது.

 

நண்பனின் வளர்ச்சி

நாட்கள் மாதங்களாக ஓடிக்கொண்டிருக்க வசனகர்த்தாவாக இருந்த ஸ்ரீதர் வாழ்க்கையில் திடீர் திருப்பம். வீனஸ் நிறுவனத்தின் பங்குதாரராக வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜனுடன் இணைந்து சிவாஜி கணேசன் -பத்மினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாக செங்கல்பட்டுவந்து நண்பன் கோபுவுக்கே தான் தயாரிப்பாளராக உயர இருக்கும் இனிப்பான செய்தியைக் கூறினார். ‘பராசக்தி’ சிவாஜியுடன் ஸ்ரீதர் சேரப்போவதைக் கேட்டதும் துள்ளிக் குதித்தார் கோபு.

ஸ்ரீதரை வாழ்த்தி அனுப்பிவிட்டு வீடு சென்றபோது, “பொறுப்பில்லாமல் இருக்கும் உனக்கு ஒரு கால்கட்டைப் போட்டுட்டா சரியாகிடும்ன்னு ஜோசியர் சொல்றார்” என்று அம்மா கூற உறவினர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிசு முற்றத்தில் அமர்ந்து கையில் வரன்களின் ஜாதகங்களை எடுத்து அம்மாவிடம் காட்டிக்கொண்டிருந்தார். ‘கால்கட்டு’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பகீர் என்றது கோபுவுக்கு.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22894313.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலயா 08: வேலையை விட்டு வெளியே வா!

 

 
09CHRCJAMARADEEBAM

‘அமர தீபம்’ படத்தில் பத்மினி, சிவாஜி

ஒரு கால்கட்டைப் போட்டு விட்டால் பொறுப்பில்லாமல் இருக்கும் கோபு சரியாகிவிடுவார் என்று பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார் அவருடைய தயார். திருமணத்திலிருந்து தப்பிக்க மீண்டும் பெரியப்பா மகனிடம் சென்று தனக்கு மெட்ராஸில் வேலை வங்கித் தரும்படி கேட்டார் கோபு. இம்முறை ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலையை வாங்கித் தந்தார் அண்ணன்.

காவாலி பிரதர்ஸ் என்ற அந்த கம்பெனியில் கோபுவுக்கு மேனேஜர் உத்தியோகம். கோபுவின் ஒரே வேலை போன் கால்களுக்குப் பதில் தருவது. பொறுப்பான வேலை கைநிறைய சம்பளம் என்று உற்சாக இளைஞனாக மாறிவிட்ட மகனுக்கு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு பெண்ணைப் பார்த்தார் அம்மா. கோபுவுடைய பெற்ற அம்மாவின் இந்தப் பொறுப்பான செயலுக்கு, காஞ்சிபுர வளர்ப்பு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தார். “எனது தத்துப் பிள்ளைக்கு எப்போ கல்யாணம் செய்யணும்னு நேக்குத் தெரியாதோ? இப்போ...அவனுக்கு நோ மேரேஜ்!'' என்று அறிவித்துவிட்டார் வளர்ப்பு அம்மா கமலா.

பெற்ற அம்மாவுக்கோ கடும் கோபம். “என் பிள்ளைய சுக்கு தின்னு முக்கி பெத்தது நானாக்கும்! அவனுக்கு எப்படி, எப்போ கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்குத் தெரியும்” என்றார். கோபுவின் கல்யாண பேச்சு உரிமைப் போராட்டமாக மாறியது. ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் மற்றொருத்தியின் மகனாக மாறிய கோபுவின் பாடு திண்டாட்டமாக மாறியது. அவரது அவஸ்தையை லைவ் ஆக காண வேண்டுமா? கோபு, கதை, வசனம் எழுதி இயக்கிய ‘அத்தையா, மாமியா?’ படத்தில் மனோரமா, காந்திமதி இடையே ஜெய்சங்கர் படும் பாட்டைப் பார்த்தாலே போதும்.

 

கமலாக்கள் நிறைந்த குடும்பம்

கடைசியாக இரு அம்மாக்களுக்கும் சமரசம் ஏற்பட்டு அந்தத் திருவல்லிக்கேணி பெண்ணைப் பார்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபு போட்ட கண்டிஷன் ஒன்றுதான். “எனக்கு மனைவியாக வரப்போறவளுக்கு கமலா என்ற பெயர் இருக்கக்கூடாது!” அதற்குக் காரணம் கோபுவின் கூட்டுக் குடும்பத்தில் ஏற்கெனவே நான்கு கமலாக்கள் இருந்தனர். கோபு அப்பாவின் தங்கை பெயர் கமலா. கோபுவின் வளர்ப்பு தாயார் பெயர் கமலா. கோபுவின் பெரியப்பா மனைவி பெயர் கமலா.

கோபுவின் அம்மா வகை பெரியம்மா மகளின் பெயரும் கமலா. ஆக, அவரது கூட்டுக் குடும்பத்தில் கமலா என்ற பெயரால் நிறைய குழப்பங்கள் விளைந்து கொண்டிருந்தன. வரப்போகிற தனது மனைவிக்கு வேறு அந்தப் பெயர் இருக்க வேண்டாம் என்று பார்த்தார் கோபு. ஆனால், அந்தத் திருவல்லிக்கேணி பெண்ணின் பெயரும் கமலாதான். வேறு வழியின்றி பெண் பார்க்கச் சென்றார் கோபு.

இதை அறிந்த ஸ்ரீதர், “நான்தானே உனக்கு மாப்பிள்ளைத் தோழன், என்னை ஏண்டா அழைத்துப் போகல?'' எனச் சண்டை போட்டார். “அட போடா! நானே பெண்ணை சரியா பார்க்கலே! வந்தாள்.. டமால்.. என்று சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாள், போய்க்கொண்டே இருந்தாள்! நான் முகத்தைக்கூட பார்க்கலை. அதுக்குள்ளே பெரிசுங்க தட்டை மாத்திட்டாங்க. வெத்தலை போடற அவசரமோ என்னவோ!'' கோபு சலித்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வந்த ஸ்ரீதர் கேட்டார், “என்னடா கோபு! என்னாச்சு உன் கல்யாணம்?”. ''பொண்ணு வேணான்னு சொல்றாளாம்.

ரெண்டு மாமியார் இருக்கிற இடம்னு தயங்கறாங்க போல இருக்கே!'' கோபு கொஞ்சம் சோகம் கலந்த ஹாஸ்யத்துடன் சொல்ல, “புரியலையே..” என்றார் ஸ்ரீதர். பெத்த அம்மாவுக்கும் தத்தெடுத்த அம்மாவுக்கும் இடையே நடந்த சண்டையை நகைச்சுவையாக கோபு சொல்ல, அவரையே கவனித்தபடி சிரித்துக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று மவுனமாகி விட்டார். சற்றுநேரம் கோபுவையே ஏதோ யோசனையுடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று கிளம்பிச் சென்றார். கலைக்கடலில் தான் பயணிக்கும் தோணியில் கோபுவையும் சக பயணியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஸ்ரீதரினுள் தோன்றிவிட்டதை கோபு உணரவில்லை.

09chrcjcoupls

மனைவி கமலாவுடன் மணமான புதிதில் கோபு

 

 

துணிந்து காலை வை

பல படங்கள் புக் ஆகி பிஸியான வசனகர்த்தா ஆகிவிட்டிருந்தார் ஸ்ரீதர். அடிக்கடி கோபுவின் காவாலி பிரதர்ஸ் அலுவலகத்துக்கும் ஸ்ரீதர் விஜயம் செய்வது வழக்கம். அப்போதுதான்தான் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜனுடன் பாகஸ்தராகி ‘அமரதீபம்’ படத்தின் இணைத் தயாரிப்பாளராக மாறியிருந்தார் ஸ்ரீதர். “இப்போதுதான் கதை வசன கர்த்தாவாக புகழ்பெற்று வருகிறாய். அதற்குள் தயாரிப்பாளராக ஏன் ரிஸ்க் எடுக்கிறாய்?'' என கோபு கேட்க ஸ்ரீதர் சொன்னார்.

“பயப்படக் கூடாது கோபு! பாசிட்டிவ் எண்ணங்களுடன் துணிவாக காலை முன் வைக்க வேண்டும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதும் முக்கியம். அப்போதுதான் வளர முடியும்” என்றார். “நானும் ரிஸ்க் எடுத்துட்டேன். அதே திருவல்லிக்கேணி பெண்ணையே நிச்சயம் பண்ணச் சொல்லிடுறேன்!'' என்றார் கோபு. “சபாஷ் இதுதாண்டா வேணும்!'' என்றார் ஸ்ரீதர். கோபுவின் மாப்பிள்ளைத் தோழனாக ஸ்ரீதர் திகழ, 1957-ல் ஜார்ஜ் டவுனில் கோபுவின் திருமணம் மிக விமர்சையாக நடந்தது. பட அதிபர்கள் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன் ஸ்ரீதருடனேயே திருமண வைபவத்தில் பங்கேற்றனர்.

 

புது கார், புது டிரைவர்

திருமணத்துக்குப் பின் கோபுவின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனை ஏற்படுத்திய நாள் அது. அவரது அலுவலக வாசலில் ஒரு புத்தம்புது கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்தார் ஸ்ரீதர்.

“உடனே கிளம்பு!'' கோபுவைத் தர தரவென்று பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றார் ஸ்ரீதர். “நான் புதுசா கார் வாங்கியிருக்கேன். வா..சித்தாமூர் (மதுராந்தகம் அருகில் உள்ள சித்தாமூர்தான் ஸ்ரீதரின் சொந்த கிராமம்) வரைக்கும் போய் வரலாம்” என்று ஸ்ரீதர் டிரைவர் சீட்டில் அமைந்து காரை கிளப்ப, “எப்படா கார் ஓட்டக் கத்துக்கிட்டே?'' என்று ஆச்சரியமாகக் கேட்டார் கோபு. “நேத்துலேருந்து தான்'' என்றார் ஸ்ரீதர். “ஐயோ!'' என்று அலறிக்கொண்டே காரிலிருந்து குதிக்க எத்தனித்த கோபுவை அப்படியே அமுக்கிப்பிடித்து உட்கார வைத்து “உயிர் கொடுப்பான் தோழன்கிற நம்ம பண்பாட்டைக் காப்பாத்துடா..

நான் மட்டும் தனியா சாகமுடியாதுல்ல” என்று ஆக்ஸிலேட்டரில் ஒரே அழுத்தாகக் காலை வைத்து அழுத்த, ஒரு புரவியைப்போல பாய்ந்தது அந்தக் கார். பின்னாளில் ஸ்ரீதரின் திரைக்கதைகளில் இருந்த வேகத்தை அப்போதே தனது கார் ஓட்டும் வித்தையில் காட்டினார் ஸ்ரீதர். கார் சாலையிலிருந்து ஒரு அடி மேலே பறப்பதுபோன்ற வேகத்தை உணர்ந்த கோபு, வீட்டில் இருக்கும் தனது புதுமனைவியை வெள்ளை சேலையில் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினார் “டேய் வேகத்தைக் குறை. தயவு செய்து காரை நிறுத்து!'' கோபு அலறினார்.

“நிறுத்தணும்னா நான் சொல்றபடி செய்யறீயா?'' என ஸ்ரீதர் கேட்க, “எதுவா இருந்தாலும் செய்யறேன். காரை மெதுவா ஓட்டு, இல்ல என்னை இறக்கி விட்டுடு!'' கோபு கெஞ்ச, ஸ்ரீதர் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டுக் கேட்டார்.

“இப்ப இருக்கிற வேலையில உனக்கு எவ்வளவு சம்பளம்?'' இரண்டு விரல்களைக் காட்டி, இரட்டை நூறு ரூபாய் என்றார். “நான் நானூறு ரூபாய் தரேன். வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, என்னோட ஸ்கிரிப்ட் எழுத வந்துடு!'' என்றார் ஸ்ரீதர்.

சிரிப்பு தொடரும்..

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22982951.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 09: எழுத்தாய் மாறிய வாழ்க்கை!

 

 
16chrcjKalyanaparisu

‘கல்யாணப் பரிசு’ படத்தில் பைரவனாக கே.ஏ. தங்கவேலுவும் மாலினியாக எம்.சரோஜாவும்

நண்பன் கோபுவுடன் தனது முதல் புதிய காரில் மதுராந்தகம் போய்விட்டு மெட்ராஸ் திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீதர், காபி குடிப்பதற்காக தாம்பரத்தில் நிறுத்தினார். காபி கிளப்பிலேயே கோபுவைச் சுடச்சுட ராஜினாமா கடிதம் எழுதவைத்து கையெழுத்தும் போட வைத்தார். வேலைநேரம் முடிவதற்குள் கோபுவின் அலுவலகத்துக்கு காரைச் செலுத்தினார்.

கோபுவின் பின்னாலேயே எஸ்கார்ட் போல சென்று அவர் தன் மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த அடுத்த நிமிடம் கோபுவின் மனம் மாறிவிடப் போகிறது என்று அவரை இழுத்துக்கொண்டு தியாகராயநகர் வடக்கு போக் சாலையில் இருந்த வீனஸ் பட அலுவலகத்துக்கு அழைத்துவந்தார் ஸ்ரீதர். மேலதிகாரி ராஜினாமா கடிதத்தைப் பிரித்துப் படித்த அந்தக் கணத்தில் உருவாகிவிட்டது ஸ்ரீதர் - கோபுவின் வெற்றிக் கூட்டணி.

 

பொத்தி வைத்த எழுத்தாளர்கள்

நானூறு ரூபாய் சம்பளத்தில் ஸ்ரீதரின் கம்பெனியில் உதவி வசனகர்த்தாவாகச் சேர்ந்துவிட்ட சினிமா எழுத்தாளர் அவதாரம் பற்றி மனைவியிடம் மூச்சு விடவில்லை கோபு. ‘கல்யாண பரிசு’ படத்தில் வரும் எம் சரோஜா போன்று, “என் கணவர் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்' கம்பெனியில் பெரிய உத்தியோகத்தில் இருக்கார்” என்று தன் தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கோபுவின் மனைவி கமலா.

அவரோ கணவனுக்குத் தெரியாமல் டி.கமலாதேவி என்ற பெயரில் சுதேசமித்திரன், கலைமகள், விஜயவிகடன் போன்ற பத்திரிகைகளுக்குச் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திவந்த ஜகன் மோகினி என்ற குடும்பப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

புகுந்த வீட்டுக்கு உண்மை தெரிந்தால் வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று விவரத்தைக் கூறாமல் கோபுவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார் கமலா.

கோபுவுக்கோ தனது விவகாரம் மனைவிக்கும் வீட்டாருக்கும் தெரிந்துவிட்டால் “ஓ… நீ சினிமாக்காரனா உத்தியோகத்துல ஒசந்திட்டியோ?” என்று கேட்டு வெளுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்! இப்படிக் கணவன் மனைவி இருவருமே தங்கள் எழுத்துப் பணியைப் பொத்தி வைத்திருந்தார்கள்.

 

இயக்குநர் ஆனார் ஸ்ரீதர்

ஒரு க்ரைம் த்ரில்லர் போல நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க ஒருநாள் ஸ்ரீதர் மூச்சிரைக்க ஓடி வந்து கோபுவின் முன் நின்றார். “கோபு… வீனஸ் கம்பெனியின் பங்குதாரர்கள், அடுத்த படத்தை என்னையே டைரக்ட் செய்ய சொல்லுறாங்கடா! நீ என்ன சொல்றே?'' என்று படபடப்புடன் கேட்டார். “நீ கார் ஓட்டுற மாதிரியே உன் வாழ்க்கையும் வேகமா சீறிப் பாயுது.

மூணு படங்கள்ல வசனம் எழுதினே. உடனே தயாரிப்பாளர் ஆகிற வாய்ப்பு தேடி வந்தது. இப்போ இயக்குநர் வாய்ப்பு தேடி வந்திருக்கு. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். உடனே எஸ் சொல்லிடு'' என்றார் கோபு.

உமா பிச்சர்ஸுக்காக ஒரு முக்கோணக் காதல் கதையை எழுதியிருந்தார் ஸ்ரீதர். ஆனால், உமா நிறுவனத்தார் பெரிய பட்ஜெட்டில் ‘சித்தூர் ராணிபத்மினி’ கதையைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர். அவர்கள் நிராகரித்த அந்த முக்கோணச் காதல் கதையின் மீது நம்பிக்கை வைத்து அதைப் பழைய பிலிம் டப்பாவில் போட்டு வைத்திருந்தார்.

பின்னர் அதைத் தூசிதட்டி, வீனஸ் கிருஷ்ணமூர்த்திக்கும் (இயக்குநர் மணிரத்னத்தின் சித்தப்பா) கோவிந்தராஜனுக்கும் (‘கலைவாணர்’ என்.எஸ்.கேயின் சகலை) கூற, “நல்ல லேடீஸ் சப்ஜெக்ட்” என்று அவர்கள் இருவரும் பாராட்டினார்கள். “நாங்களே தயாரிக்கிறோம்” என்று பச்சைக்கொடி காட்டி, “உடனேயே ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள்” என்றும் கூறிவிட்டார்கள். அவ்வளவுதான்! ஸ்கிரிப்ட் எழுத ஸ்ரீதரும் கோபுவும் பெங்களூரு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்று தங்கிவிட்டனர்.

“கோபு நகைச்சுவைப் பகுதியை நீ எழுது” என்று கூறிவிட்டு அந்த முக்கோணக் காதல் கதைக்குத் திரைக்கதை வடிவத்தை எழுதத் தொடங்கிவிட்டார் ஸ்ரீதர். அதுதான் ‘கல்யாண பரிசு’ படத்தின் கதை.

 

கதையுடன் இணைந்த நகைச்சுவை

“இம்போர்ட், எக்ஸ்போர்ட் விஷயமாக ஆந்திரா போக வேண்டியிருக்கிறது'' என்று சொல்லிவிட்டு ஸ்ரீதருடன் பெங்களூரு வந்திருந்த கோபுவின் முன்னால் அடிக்கடி அவரது மனைவியின் முகம் வந்து நிழலாடியது. தனது புளுகு மூட்டையை வைத்தே ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதினால் என்ன என்று தோன்றியது கோபுவுக்கு.

செங்கல்பட்டில் பழைய நண்பன் வெங்குவின் விதவிதமான ‘டூப்’ கதைகள் நினைவைக் கிளற, தன்னை முன்னிறுத்தியே ‘கல்யாண பரிசு’க்காக எழுத்தாளர் பைரவன் கதாபாத்திரத்தை உருவாக்கினார் கோபு. வெடுக் வெடுக்கென்று கேள்வி கேட்டு மடக்கும் தன் மனைவியையே எம். சரோஜா ஏற்று நடித்த மாலினி கதாபாத்திரமாக மாற்றினார்.

நெல்லூரில் தன் கசின் ரங்கசாமியின் மைத்துனர் நடத்தி வந்த மன்னார் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயரைக் கடன் வாங்கி தனது நகைச்சுவைப் பகுதியை எழுதினார்.

கோபு நகைச்சுவைப் பகுதியை எழுதி முடித்ததும் அதை வாங்கிப் படித்த ஸ்ரீதர், அவரை ஏற இறங்க நோக்கினார். என்னதான் பால்ய நண்பனாக இருந்தாலும் அப்போது அவர் ஒரு இயக்குநர் என்பதால் கோபுவுக்கு உள்ளூர நடுக்கம்.

“டேய்… இது உன் கதைதானே?'' ஸ்ரீதர் நக்கலான தொனியில் கேட்க, “டேய் எப்படிடா!” என்று ஆச்சரியப்பட்டு ஆமோதித்தார் கோபு. ‘இது வேண்டாம், வேற ஏதாவது எழுது’ என ஸ்ரீதர் சொல்லுவார் என்று எதிர்பார்த்தார், கோபு. “உன் காமடி என் கதையோட சூப்பரா ஜெல் ஆகுதுடா பிரமாதம்! பைரவனையும் கதாநாயகன் பாஸ்கரையும் இணைக்கிறேன் பார்” என்று தனது முதல் பாராட்டை நண்பனுக்கு மனம் திறந்து அளித்தார். கோபு திக்குமுக்காடிப் போனார்.

 

16CHRCJSRIDHAR

இயக்குநர் சி.வி.ஸ்ரீதர்

குட்டு உடைந்தது

‘கல்யாண பரிசு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கோபுவை அழைத்துச் செல்ல வீனஸ் கம்பெனியில் இருந்து வீடுதேடி அன்றாடம் கார் வந்தது. அவர் மனைவி கமலாவுக்குச் சந்தேகம். “ஏழு மணிக்கு கார் வந்து நிற்கிற அளவுக்கு என்ன வேலை செய்யறீங்க, அதுவும் இந்தக் காலை நேரத்துல என்ன ஏற்றுமதி இறக்குமதி?” கல்யாண பரிசு எம்.சரோஜாபோலவே கமலா கேள்விகளை அடுக்க தங்கவேலுவைப் போலத் திணறிப்போனார் கோபு.

எவ்வளவு காலம்தான் பொய் சொல்லித் தப்பிப்பது? “ஸ்ரீதருக்கு உதவி வசனகர்த்தாவாக சேர்ந்திருக்கேன். நானூறு ரூபாய் சம்பளம்!” என்று திக்கித் திணறி மனைவியிடம் சொன்னார். எரிமலை வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த கோபுவுக்கு ஆச்சரியம்.

“அட இது நல்ல விஷயம்தானே! நானும் ஒரு எழுத்தாளர்தான். பத்திரிகையில் துணை ஆசிரியரா வேலை பார்க்கறேன். உங்க அம்மாக்கள் ரெண்டு பேருக்கும் பயந்துதான் உண்மையைச் சொல்லலை. நான் தொடர்ந்து எழுதுவேன். உங்க வீட்டுக் காரங்களை நீங்க கன்வின்ஸ் பண்ணுங்க. நீங்க சினிமால சேர்ந்த விஷயத்தைச் சொல்லி எங்க வீட்டு ஆட்களை நான் சமாளிக்கிறேன்” என்று ஒரு கண்டிஷன் போட்டார் கமலா.

‘சித்ராலயா’ கோபுவுடைய மனைவி கமலா ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். கதவு, படிகள், ஊமை உறவுகள் உட்படப் பல பரிசுபெற்ற நாவல்களை எழுதி கமலா சடகோபன் என்ற பெயரில் புகழ்பெற்றவர். மங்கையர் மலர் பத்திரிகையின் இணை ஆசிரியையாகவும் பணி புரிந்துள்ளார். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைக்கும் கடவுள் தனக்கு ஒரு எழுத்தாளரையே முடிச்சுப் போட்டுவிட்ட திருப்தியில் கோபுவின் பேனா இன்னும் வேகம் எடுத்தது.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23262427.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 10: மாயமானது தங்கவேலுவின் மோதிரம்!

 

 
23CHRCJKALYANAPARISUPAIR

‘கல்யாண பரிசு’ படத்தில் எம்.சரோஜா, கே.ஏ.தங்கவேலு

‘கல்யாண பரிசு’ படப்பிடிப்பில் கோபுவுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம். தங்கவேலு, எம்.சரோஜா சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை கோபுவே நடித்துக் காட்டினார். அவர் மிமிக்ரி கலைஞர் என்பதால் தனது வசனங்களைத் தானே நடித்துக் காட்டிப் பேச, தங்கவேலுவும் சரோஜாவும் அதைக் கப்பென்று பிடித்துக் கொண்டார்கள்.

“ஆச்சாரி… உம்மைப் போல எல்லா வசனகர்த்தாவும் நடிச்சு காட்டிட்டா எங்களுக்கு வேலை மிச்சம்” என்று சொன்ன தங்கவேலு, ஸ்ரீதரிடம் சென்று கோபுவைப் பாராட்ட, உடனே ஸ்ரீதர், “நீயே சரோஜாதேவிக்கும் வசனம் சொல்லிக் கொடுத்துடு கோபு” என்று கூடுதல் பொறுப்பைக் கொடுத்தார்.

 

வசன வாத்தியார்

கதாநாயகிக்கே வசனம் சொல்லித்தரும் முக்கியப் பணி கிடைத்துவிட்ட கம்பீரத்துடன் சரோஜாதேவி முன்பாகப் போய் நின்றார் கோபு. பக்கத்தில் அவருடைய அம்மா. பெயரே ருத்ரம்மா!

“குட் மார்னிங் ஜடை கோபால்” சரோஜாதேவி கொஞ்சியபடி வரவேற்றார். “என் பேரு சடகோபன். ஜடை கோபால் இல்லை” கோபு விளக்கினார். “ஜடை கோபால்ங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?” கன்னடம் கலந்த தமிழில் கேட்டார்.

பெயர்தான் கொலை செய்யப்பட்டுவிட்டது. மதிப்பையாவது காப்பாற்றிக் கொண்டுவிடுவோம் என்று நினைத்த கோபு, “ஜடை கோபால்னா, ‘உலகத்திலேயே சிறந்த புத்திமான்’ என்று அர்த்தம்!” எனக் கூற, ருத்ரம்மா கோபுவை மலைப்புடன் நோக்கினார். சரோஜாதேவி தொடர்ந்து ஜடைகோபால் என்றே கோபுவை அழைக்க, படத்தின் ஒளிப்படக் கலைஞர் ‘ஸ்டில்ஸ்’ அருணாச்சலம் இந்தத் தகவலை ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டார்.

“அட்ஜஸ்ட் பண்ணிக்க கோபு, சின்ன வயசுல நீ ஜடையோட சுத்திட்டு இருந்தது சரோஜாதேவிக்கு தெரியுமோ என்னவோ!” என்று தன் பங்குக்கு நண்பனை கலாட்டா செய்தார் ஸ்ரீதர். இது நடந்து சுமார் 50 ஆண்டுகள் கழித்து கடந்த 2011-ல் நடந்த கோபுவின் சதாபிஷேக வைபவத்துக்கு சென்னை வந்திருந்த சரோஜாதேவி, ‘ஜடை கோபால்’ என்று அழைத்துக் கிண்டல் செய்ததை கோபுவுக்கு நினைவுபடுத்தி சிரித்துத் தீர்த்தனர்.

 

வழக்காறாக மாறிய வசனம்!

‘கல்யாண பரிசு’ படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்தவுடன் திருப்தியுடன் கோபுவிடம் வரும் தங்கவேலு, “ஆச்சாரி, நீ பெரிய லெவலுக்கு வருவே, நடிக்கிற எங்களாலயே சிரிப்பை அடக்க முடியுல, ஷாட் நேரத்துல நீயும்தானே பார்க்கிறே!” என்று மனதாரப் பாராட்டுவார். இப்படிப் பாராட்டும் மகிழ்ச்சியும் கலகலப்புமாகப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானபோது, முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்க்கச் சென்ற ஸ்ரீதருக்குப் பயங்கர அப்செட். சரோஜாதேவி அழும் இடங்களில் எல்லாம் ரசிகர்களும் கூடவே கிண்டலாக கேவ ஆரம்பித்தனர்.

“என்னடா கோபு! ரசிகர்கள் கேலி செய்யறாங்களே, படம் படுத்துடுமா?” என்று கவலையோடு கேட்டார். ஆனால், ஒரே வாரத்தில் பிக் அப் ஆகி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்கள் கூட்டம் திரையரங்குதோறும் மொய்க்க ஆரம்பித்தது. படத்தின் செண்டிமெண்ட் காட்சிகளில் மனம் இளகி குமுறிக் குமுறி அழுத பெண்கள், நகைச்சுவைக் காட்சிகளில் விலா நோகச் சிரித்த ஆண்களோடு இணைந்து கொண்டனர்.

படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப் பகுதி தனி ரெக்கார்டுகளாக விற்பனையில் சக்கைபோடுபோட்டது, பட்டிதொட்டியெங்கும் வயது பேதமின்றி அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தனர். பிரபல எழுத்தாளர் பைரவன் என்று சொல்லி மனைவியிடம் தனக்குப் பாராட்டு விழா நடந்ததாக டூப் விட்டு தங்கவேலு மாட்டிக்கொள்ளும் இடம் மிகவும் பிரமாதம் என்று பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டது.

“எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னேன். ‘தட்’னான் பாரு…!” என்று தங்கவேலு கூற, “உங்களையா?” என்று சரோஜா கேட்பார்.

“என்னை ஏன் தட்றான்? கையை தட்னான்… தட் னான்...தட்டிகிட்டே இருந்தான்!” என்று தங்கவேலு தொடந்து டூப் விடும் காட்சியின்போது திரையரங்குகள் அதிர்ந்தன. நடைமுறை வழக்கில் மன்னார் அண்ட் கம்பெனி என்றாலே ஏமாற்று வேலை என்று அர்த்தம் பெற்றுவிட்டது.

23chrcjGopu%20and%20Sdevi

கோபுவின் சதாபிஷேகத்தில் கலந்துகொண்டு வாழ்த்தும் சரோஜாதேவி

 

 

உருவப்பட்ட மோதிரம்

‘கல்யாண பரிசு’ படத்தின் வெற்றி, ஸ்ரீதரை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச்சென்றது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சூப்பர் ஹிட். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 25 வாரங்கள், ஐந்து சென்டரில் நூறு நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது. மற்ற மொழிகளிலும் படத்தின் ரீமேக் உரிமைக்கு ஏக கிராக்கி. தெலுங்கில் நாகேஸ்வரராவும் சரோஜாதேவியும் நடித்தனர். இந்தியில், ராஜ்கபூர் – வைஜயந்திமாலா ஜோடி நடித்தது.

ஊர் ஊராகக் ‘கல்யாண பரிசு’ படத்துக்கு வெற்றிவிழாக்கள் நடந்தன. படத்தில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர் வெற்றிவிழாக்களில் கலந்துகொண்டபோது மக்கள் கூடம் அலைமோதியது. மதுரையில் நடந்த வெற்றிவிழாவில் கோபு மேடையேறியபோது, “என் நண்பன் கோபு” என்றுதான் ஸ்ரீதர் அவரைக் கூட்டத்தினரிடையே அறிமுகப்படுத்தினார். இதில் நெகிழ்ந்து போன கோபு, ஸ்ரீதரின் இறுதி நாட்கள் வரை அவரைப் பிரியாமல் இருந்தார்.

ஸ்ரீதர் இயக்கிய கடைசி படம் வரையிலும் அதில் இணைஇயக்குநர் கோபு என்ற பெயர் கிரெடிட் கார்டில் ஒளிர்வதைக் காணலாம். ஒரு முக்கிய நகரத்தில் ‘கல்யாண பரிசு’ வெற்றிவிழா நடந்து முடிந்ததும் கோபு அருகில் வந்த தங்கவேலு, ‘கல்யாண பரிசு’ ஆச்சாரி...படத்துக்கு திருஷ்டி கழிந்தது” என்றார். விஷயம் புரியாமல் கோபு விழிக்க ‘கல்யாண பரிசு’ கையைக் குலுக்குற சாக்குல எவனோ என் இரண்டுபவுன் தங்க மோதிரத்தை உருவிட்டு போயிட்டான். அவன் நம்மளவிட பெரிய மன்னார் அண்ட் கம்பெனியா இருப்பான்போல” என்றார்.

‘கல்யாண பரிசு’ படத்தை ‘நஸ்ரானா’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார் ஸ்ரீதர். படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஸ்ரீதர் - கோபு இருவருக்கும் பிரிவு உபசார விருந்து ஒன்றைத் தனது வீட்டில் கொடுத்தார் படத்தின் நாயகன் ராஜ்கபூர். இதற்கு முன்தினம்தான் படத்தின் இசையமைப்பாளர் ரவி ரீ-ரெகார்டிங் பணிகளை முடித்து சவுண்ட் நெகட்டீவை ஒப்படைத்திருந்தார். ராஜ்கபூர் தரப்போகும் விருந்தை முடித்துக்கொண்டு சவுண்ட் நெகட்டீவை எடுத்துக்கொண்டு சென்னை செல்ல இரவு 9 மணி விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து முடித்தாகிவிட்டது.

மாலை ஏழு மணிக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார் ராஜ்கபூர். ஸ்ரீதரையும் கோபுவையும் கப்பல் போன்ற ராஜ்கபூரின் கார் அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றபோது மாலை 7.30 மணி. இருவரையும் வரவேற்றார் ராஜ்கபூர். அப்போது எக்ஸ்பிரஸ் கார்டு என்ற புதியவகை சீட்டு விளையாட்டை ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்ரீதருக்கு ஆட்டம் பிடித்துப்போக ராஜ்கபூரும் ஸ்ரீதரும் நேரம்போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சுவர்க்கடிகாரத்தைக் கண்ட கோபுவின் வயிறு கலங்கிப்போனது.

தனது கண்களை நம்ப முடியாமல் தனது கைக்கடிகாரத்தையும் பார்த்தார் கோபு. மணி அதே 8.30 காட்டியது. “ அய்யோ விமானம் புறப்பட இன்னும் சரியாக அரைமணிநேரம்தான் இருக்கிறது. எழுந்திரு ஸ்ரீ…” என்று கத்தியேவிட்டார் கோபு…அந்த சூப்பர் ஸ்டார் நாயகன் அதிர்ந்துபோய் கோபுவைப் பார்த்தார்...

சிரிப்பு தொடரும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23323938.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 11: கோபுவுக்காகக் காத்திருந்த விமானம்!

 

 
30CHRCJSridhar%20AND%20RAJKAPOOR

ஸ்ரீதரின் திருமணத்துக்கு வருகை தந்த ராஜ்கபூர் அருகில் நடிகர் சந்திரபாபு

ஒரு சிறந்த வெற்றியைக் கொடுத்துவிட்டால் போதும். இந்திப்பட உலகம் கைநீட்டி அழைத்துக்கொள்ளும். ‘கல்யாண பரிசு’ படத்தின் வெற்றியைக் கவனித்த பாலிவுட்டின் அன்றைய சூப்பர் ஸ்டாரான ராஜ்கபூர் அதில் நடிக்க விரும்பியதால் ஸ்ரீதர் இயக்க ‘கல்யாண பரிசு’ இந்தியில் ‘நஸ்ரானா’ ஆனது.

படப்பிடிப்பு முழுமையாக முடிந்து சவுண்ட் நெகட்டிவ் உடன் சென்னைக்குக் கிளம்பிய ஸ்ரீதருக்கும் கோபுவுக்கும் விருந்துகொடுத்தார் ராஜ்கபூர். விமானம் இரவு 9 மணிக்கு என்ற நிலையில் ராஜ்கபூர் அறிமுகப்படுத்திய எக்ஸ்பிரஸ் கார்டு என்ற புதியவகைச் சீட்டு விளையாட்டை 8.30 மணிவரை நேரம்போனதே தெரியாமல் ஸ்ரீதர் அவருடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

இன்னும் அரை மணிநேரம்தானே இருக்கிறது இன்னும் விருந்தும் சாப்பிடவில்லை, அப்படியிருக்க விமானத்தை எப்படிப் பிடிப்பது என்று கவலைப்பட்ட கோபு “நான் சவுண்ட் நெகட்டிவ்வோட முதல்ல கிளம்புறேன். நீ நாளை வா” என்று தமிழில் ஸ்ரீதரிடம் கூறினார் கோபு. ராஜ்கபூருக்குத் தமிழ் அந்நிய பாஷை அல்லவா? அவருக்குப் புரியாதென்று கோபு நினைத்தார். ஆனால், ராஜ்கபூர் “டோன்ட் வொரி, கோபுஜி! யூ வோண்ட் மிஸ் தி பிளைட். உங்களை விருந்து சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டேன்” என்று சமாதானப்படுத்தியவர் சட்டென்று மனைவியை அழைத்தவர் “கோபுஜியை விருந்துக்குக் கூட்டிட்டுப் போங்க..!” என்றார்.

ராஜ்கபூர் அடுத்துச் செய்த காரியம் கோபுவைத் திடுக்கிட வைத்தது. அவர் அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த சோபா இருக்கையின் திவான் அருகில் இருந்த தொலைபேசியை எடுத்துச் சுழற்றி யாரிடமோ பேசிவிட்டு, போனை வைத்தவர். பின்னர், கோபுவின் முகத்தைப் பார்த்துச் சிரித்தார்.

“கோபுஜி நீங்க போய் நிதானமா சாப்பிடுங்க! இன்னைக்கு நீங்க பெரிய வி.வி.ஐ.பி. நீங்க ஏர்போர்ட் போய்ச் சேராம பிளைட் கிளம்பாது” என்றார் ராஜ்கபூர். கிருஷ்ணா கபூர் மற்றும் அவருடைய சகோதரர் மேற்பார்வையில் விருந்து பரிமாறப்பட்டது. எவ்வளவு பணியாளர்கள்! ஒரு அரச குடும்பம் தோற்றது! மலைத்துப்போனார் கோபு. மாணவப் பருவத்தில் ‘ஆவாரா’ என்ற ராஜ்கபூர் படத்தைப் பார்த்து வியந்திருந்த தனக்கு, அந்த மாபெரும் நடிகரின் மனைவியின் மேற்பார்வையில் விருந்தா?

விருந்து முடிந்து கோபு ஏர்போர்ட்டை அடைந்தபோது இரவு 09.50 மணி. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் தாமதம். கோபு பிளைட்டுக்குள் ஏறிவந்தபோது பிளைட்டை இவ்வளவு நேரம் நிறுத்தி வைத்த அந்த வி.ஐ.பி. யார் என்று சக பயணிகள் விமானத்தின் வாயிலையே வெறித்துக்கொண்டிருந்த நேரத்தில் எளிய மனிதராக உள்ளே நுழைந்த கோபுவின் முகத்தை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க, கோபுவோ ராஜ்கபூரின் செல்வாக்கை நினைத்து ஆச்சரியப்பட்டுப்போனார்.

 

ராஜ்கபூரின் பெருந்தன்மை

‘நஸ்ரானா’ படப்பிடிப்பின்போது இன்னொரு சம்பவம். ‘நஸ்ரானா’ செட்டில் கேமரா அசிஸ்டன்ட் பி.என்.சுந்தரம் லைட்டிங்கை மிகுந்த டென்ஷனுடன் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைநோக்கி வந்த ராஜ்கபூர், “எடுக்கப்போகும் ஷாட்டுக்கு நீங்கள் அமைத்திருக்கும் லைட்டிங் போதாது என்று நினைக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறினார். சட்டென்று சுந்தரத்துக்குச் சுள்ளென்று ஏறிவிட்டது. “ சார்… எங்க வேலை எங்களுக்குத் தெரியும். நீங்க நடிப்பில் திறமையைக் காட்டுங்கள்” என்று சொல்லிவிட்டார். முகம் வாடிப்போன ராஜ்கபூர் மவுனமாகத் தனது இருக்கையில் அமர்ந்த கொஞ்ச நேரத்தில் அதை மறந்து உற்சாகமாகிவிட்டார். நடந்ததைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர் பதைபதைத்துப் போனார்.

ராஜ்கபூர் இந்தத் துடுக்குத்தனத்தை எப்படி எடுத்துக்கொண்டாரோ தெரியலையே என்று கோபுவிடம் வந்து புலம்ப, “பேசாமல் சுந்தரத்தை அழைத்துப்போய் ராஜ்கபூரிடம் வருத்தம் தெரிவித்துவிடலாம் என்று யோசனை கூறினார். “நீயே அதைச் செஞ்சிடு கோபு” என்று ஸ்ரீதர் உத்தரவிட, அடுத்த நொடியே பி.என்.சுந்தரத்தை அழைத்துக் கொண்டு ராஜ்கபூரிடம் சென்றார் கோபி. “சாரி கபூர்ஜி ஏதோ டென்ஷனில் பேசிவிட்டார். உங்களை அவமதிக்கும் எண்ணத்தில் அவர் கூறவில்லை” என்று கோபு சமாதானம் செய்ய, ராஜ்கபூர் எழுந்து சுந்தரத்துக்குக் கை கொடுத்தார்.

“நான்தான் சாரி கேட்கணும் கோபுஜி. என்னுடைய வேலை நடிப்பது. எனது கருத்துகளை மற்றவர்கள் மீது நான் திணிக்க நினைப்பது சரியல்ல. இந்த பம்பாயில் நான் எது சொன்னாலும் உடனே செய்வாங்க. ஆனா, உங்க யூனிட் ஆட்களின் டெடிகேஷன் ஆச்சரியம் தருகிறது. நடிகர்களுக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவம் தராமல், வேலைக்கே மதிப்பு தருகிறீர்கள். ஐ லவ் யூ ஆல்” என்று பாராட்டினார். மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தும் எத்துணை பெருந்தன்மை என்று கோபு வியந்துபோனார்.

 

அழைத்தார் மதுரம்

‘கல்யாண பரிசு’ வெளியாகி ஊரே அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது கோபுவைக் கூப்பிட்டு அனுப்பினார் டி.ஏ. மதுரம். அவரைக் கண்டதுமே “ உங்க ஆசீர்வாதம் நிஜமாகிடுச்சு” என்று கோபி நெகிழ்ந்து கூற “சினிமால பெரிய கம்பெனியையே தொடங்கிட்டியே கோபு! உன்னோட மன்னார் அண்ட் கம்பெனியத்தான் சொல்றேன். என்ன பிரமாதமான காமெடி” என்று பாராட்டினார். அப்போதே “எங்க கம்பெனி தயாரிப்புல ஸ்ரீதரை வச்சு ஒரு படம் பண்ணணும்” என்று வேண்டுகோள் வைத்த மதுரம், அதற்கான அறிவிப்பையும் அவரைச் சந்திந்த அடுத்த சில தினங்களிலேயே தந்துவிட்டார்.

அந்தப் படம்தான் ‘மீண்ட சொர்க்கம்’ வீனஸ் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் என்.எஸ்.கே – மதுரம் தம்பதி தயாரித்த படம். ஜெமினி கணேசன், பத்மினி, கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா, தாம்பரம் லலிதா போன்றோர் நடித்தனர். இதில் டி. ஆர்.ராமச்சந்திரன் ஏற்ற கதாபாத்திரத்துக்கு நண்பன் கோபுவின் பெயரையே வைத்தார், ஸ்ரீதர்.

30chrcjNazrana%201

‘நஸ்ரானா’ படத்தில் ராஜ்கபூர், வைஜெயந்திமாலா

 

 

திட்டித் தீர்க்க ஒரு ரத்த பந்தம்!

இந்தப் படத்தின் தொடக்கப் பணிகளின்போது ஸ்ரீதரின் மாமா பிள்ளை சி.வி.ராஜேந்திரன் ஒரு நாள் செட்டுக்கு வந்து கோபுவைப் பார்த்தார். அவர் அப்போது அரசுப் பணியில் இருந்தார். “கோபு! நான் உதவி இயக்குநராக சேர ஆசைப்படறேன். உன் நண்பன்கிட்ட சொல்லேன்!” என்றார்.

“உனக்கு எதற்கு சிபாரிசு.. நீதான் ரத்தபந்தமாச்சே!” என்று கோபு கேட்க, சி.வி.ராஜேந்திரன் தயங்கினார். ராஜேந்திரனின் கோரிக்கையை ஸ்ரீதரிடம் கோபு எடுத்துச் சொல்ல, “சரி..சரி..வந்து தொழிலை கத்துக்கச் சொல்லு.!” என்றார் ஸ்ரீதர்.

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிய புலவர் நக்கீரர் என்றால், ஸ்ரீதரிடம் திட்டு வாங்கியே பெரிய இயக்குநராக உருபெற்றவர் சி.வி.ராஜேந்திரன். உதவியாளர் கோபுவை பால்ய நண்பன் என்பதால் திட்டுவதற்குத் தயங்குவார் ஸ்ரீதர். அவருக்கு ஒரு சிறந்த வடிகாலாகக் கிடைத்தார் சி.வி.ஆர்.! ஸ்ரீதர் எல்லாக் கோபத்தையும் ராஜேந்திரன் மீதுதான் காட்டுவார்.

‘மீண்ட சொர்க்கம்’ ஒரு முக்கோணக் காதல் கதை. பரதநாட்டியக் கலைஞரான பத்மினிக்கு இந்தக் கதாபாத்திரம் அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிட்டது. தனது அத்தனை திறமைகளையும் காட்டி அசத்திவிட்டார் பத்மினி. கல்யாணி ராகத்தில் அமைந்த ‘ஆடும் அருட்பெருஞ்சோதி’என்ற பாடல் வாகினி ஸ்டூடியோவில் பத்து நாட்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. பத்மினியின் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார் ஸ்ரீதர். ஆனால், ஸ்ரீதரையே ஒருமுறை கோபம் கொள்ள வைத்துவிட்டார் பத்மினி.

கோபம் தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23382988.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலயா 12: சினிமா ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜேந்திரன்

 

 
06chrcjCVRajendran

சி.வி.ராஜேந்திரன்

சென்ற வாரம் ‘சிரித்ராலயா’ தொடரில் சி.வி.ராஜேந்திரன் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருந்தது. சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்த சி.வி. ராஜேந்திரனைக் காணக் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் ‘சித்ராலயா’ கோபு. சென்னை பாண்டிபாஜாரை ஒட்டிய ஆர்க்காடு தெருவில் இயக்குநர் ராஜேந்திரன் வீடு. உற்சாகத்துடன் வரவேற்ற சி.வி.ஆர், “சிரித்ராலயா என்ற தலைப்பே அருமை. இந்த வாரம் என்னைப் பற்றிய அறிமுகம் அருமை. எனக்கே எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டாய். உடல்நலம் குன்றியுள்ள எனக்கு இப்போது சிரித்ராலயா நல்ல மருந்து” என்று பாராட்டிவிட்டு சுமார் ஒருமணிநேரம் பழைய நினைவுகளில் மூழ்கியபடி பேசிக்கொண்டிருந்தார்.

“துரதிஷ்டவசமாக காலனும் சிரித்ராலயா படித்து வருகிறான் போலும். சி.வி ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி அவரது சாதனைகளைப் பற்றி எழுதத் தொடங்கியபோது, சிரித்ராலயாவைக் கண்ணீர் ஆலயமாக மாற்றி விட்டானே” என்று கண்ணீர்விட்டுக் கலங்கிய கோபுவை சி.வி. ராஜேந்திரனின் மரணம், மிகவும் பாதித்து விட்டது.

“சித்ராலயாவின் கடைசித் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. இப்போது நான் தனிமரம்” என்று வருத்தத்துடன் கூறியவர், “மரணம் கொடுமை அல்ல. ஆனால், கூட்டாகச் சாதனைகளைச் செய்துவிட்டு, ஒருவர் மட்டும் தனியாக மற்றவர்களைப் பற்றிய நினைவுகளுடன் வாழ்வதுதான் மிகவும் கொடுமை” என்றார். நண்பனைப் பற்றிய நினைவுகளை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ‘தி இந்து’ தமிழ் வாசகர்களுடன் பகிர விரும்பிய கோபு அதை ஒரு கடிதமாகவே எழுதிக் கொடுத்தார். இதோ நினைவுகளை வருடும் அந்த உருக்கமான கடிதம்.

 

என் அருமை ராஜி...

இறைவனின் வீட்டில் இந்நேரம் உனக்கு இடம் கிடைத்திருக்கும். அற்புத அமைதியில் ஆழ்ந்திருப்பாய்… அதற்காகப் பிரார்த்திக்கிறேன். அங்கே நமது சித்ராலயா நிறுவனத்தின் தூண்களான ஸ்ரீதர், வின்சென்ட், பி.என்.சுந்தரம், ஸ்டில்ஸ் அருணாச்சலம், கலை கங்கா, எடிட்டர் என்.எம் ஷங்கர், எம்.எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கவியரசு கண்ணதாசன், எம். பாஸ்கர், என்.சி. சக்கரவர்த்தி போன்றவர்களைச் சந்தித்திருப்பாய்.

இவர்களது மறைவுக்கு, பிறகு உனக்கு நானும் எனக்கு நீயும் என இருந்தோம். நீ ஒருவன் இருக்கிறாய் என்றே என்னை இதுவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தேன். என்னைவிட நான்கு வயது சிறியவனான உனக்கு அப்படி என்ன அவசரம்? ‘இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய படமொன்றை இயக்கப்போகிறேன். முழுநீள நகைச்சுவை கதை ஒன்றை எழுதிக்கொடு கோபு’ என்று சொல்லிவிட்டு நீ இப்படி என்னைத் தவிக்க விட்டுச்சென்றது என்ன நியாயம்?

 

காதலிக்க நேரமில்லை

உனக்கு நினைவிருக்கிறதா, ராஜி! முதன்முதலாக ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் ஸ்ரீதரிடம் துணை இயக்குநராகச் சேர ஆசைப்பட்டாய். அதற்காக அரசுப் பணியை விட்டு விட்டு வந்து நின்றாய். ஸ்ரீதரிடம் என்னை சிபாரிசு செய்யச் சொன்னாய். ‘நீ அவருடைய மாமா மகன். இருந்தும் என் மூலமே ஸ்ரீதரை அணுகினாய். ஏனென்றால் என்னை உன் தோழனாய் ஏற்றுக்கொண்டவன். ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம்தான் நம்மை மேலும் நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது. அதுவரை ஸ்ரீதரிடம் பணிபுரிந்த பி.மாதவன் நமது யூனிட்டை விட்டு வெளியேறியபோது அவரது இணை இயக்குநர் பதவி தகுதிமிக்க உனக்குக் கிட்டியது. ‘காதலிக்க நேரமில்லை’ எத்தனை பேருக்கு வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாக்கியது.

ரவிச்சந்திரன், காஞ்சனா, முத்துராமன், ராஜஸ்ரீ, சச்சு, நாகேஷ் ஆகியோர் உயர்ந்த இடத்தைப் பெற்றார்கள் என்றால் நகைச்சுவை வசன கர்த்தாவாக எனக்கும் ஓர் உன்னத இடத்தைப் பெற்றுத் தந்தது அந்தப் படம். இணை இயக்குநரான உன்னுள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியதும் அந்தப் படம்தான். காஞ்சிபுரத்தில் கண்ணன் டாக்கீஸ் திரையரங்க முதலாளியின் மகன்கள் நிதியுதவி செய்ய, ஒரு தயாரிப்பாளரோடு என்னைக் காண திருவல்லிக்கேணி வீட்டுக்கு வந்தாய். “ கோபு! நான் முதல்முதலாக ஒரு படத்தை இயக்க வேண்டும். உன்னுடைய நகைச்சுவைக் கதை ஒன்றைத் தா. உனது எழுத்தும், எனது இயக்கமும் நிச்சயம் வெற்றியைத் தரும்...” என்று கேட்டாய்.

உனக்காக ‘அனுபவம் புதுமை’ என்ற நகைச்சுவைக் கதையை எழுதிக் கொடுத்தேன். முதல் படத்திலேயே உனது இயக்க முத்திரைகளையும் கேமரா ஜாலங்களையும் சிலாகித்துப் பத்திரிகைகள் எழுதின. ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போல் இருந்ததாகப் பத்திரிக்கைகள் கூறின. ‘அனுபவம் புதுமை’ படத்தைப் பார்த்த நம் குருநாதர் ஸ்ரீதர், ‘என்னடா... ரெண்டு பெரும் அமர்க்களப்படுத்துகிறீர்களே.. என்னை அம்போன்னு விட்டுடப் போறீங்க...” என்று சொன்னதுதான் நமக்குக் கிடைத்த நிஜமான விருது.

06chrcjKalattakalyanam

‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜி, நாகேஷ், ஜெயலலிதா

 

சிக்னலில் சிக்கிய தலைப்பு

உடனேயே நீ இன்னொரு படத்தை இயக்க முடிவு செய்தாய். ஜெய்சங்கர், நாகேஷ், பாரதி, ஜெயந்தி நடித்த ‘நில் கவனி காதலி’ திரைக்கதையை முடிவு செய்த அன்று “படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்” என்று பேசிக்கொண்டு நாம் இருவரும் காரில் சென்றபோது மவுண்ட் ரோடு, கன்னிமாரா சந்திப்பில் கார் நிற்க, அப்போது சிக்னலில் பளிச்சிட்ட ‘நில்.. கவனி.. புறப்படு ’ என்ற சொற்கள் என் கண்ணில் பட, “ராஜி நம்ம படத்துக்குத் தலைப்பு ‘நில் கவனி காதலி’ ” என்று நான் சொன்னபோது “ சூப்பர்…படம் வெற்றி கோபு” உற்சாகமாகக் கூவி காரை புகார் ஹோட்டலில் ஓரம் கட்டி நிறுத்திச் சுடச்சுட முஸ்லிம் டீ சாப்பிட்டது நினைவிருக்கிறதா நண்பா..

நீ சொன்னபடியே படம் பெரிய வெற்றி பெற்றது அல்லவா! ‘ஜில்லென்று காற்று வந்ததோ’ பாட்டை முதன்முறையாக நீச்சல்குளத்தின் அடியில் படம்பிடித்து பெயர் வாங்கிய இயக்குநர் நீ அல்லவா! அதே போன்று, ‘ராஜா குட்டி… ஓ மை டார்லிங்’ என்ற அதே படத்தின் மற்றொரு பாடலை உயர்ந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் படம் பிடித்துப் பாராட்டுகளைத் தட்டிச் சென்றாயே!

 

வெற்றியின் கூட்டணி

கோபு-சிவிஆர் என்றாலே வெற்றிதான் என்று திரையுலகம் கூறுமளவுக்கு நாம் தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படம் பெயர் பெற்றது. நட்சத்திர இரவுக்காக நான் எழுதிய ஒரு மணி நேர நாடகத்தை சிவாஜி கணேசன் திரைப்படமாக எடுக்க விரும்பியபோது என்னைக் கதை வசனம் எழுதுவதற்கு ஒப்பந்தம் செய்தார். பிறகு வேறு ஒரு இயக்குநரை அவர் ஒப்பந்தம் செய்ய இருந்தபோது, “என் ஸ்கிரிப்ட்டை சி.வி. ராஜேந்திரன் இயக்கினால் எனது வசனங்களைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே கொண்டு சேர்ப்பான்” என்று சொன்னபோது, அவர் உன்னையே இயக்குராக ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்த பிறகு, “ராஜேந்திரன் இனி நமது ராம்குமார் மற்றும் சிவாஜி பிலிம்ஸ்சின் ஆஸ்தான இயக்குநர்” என்று அறிவிப்பே செய்தாரே சிவாஜி கணேசன். நாம் இருவரும் சேர்ந்து தொடர் வெற்றியை அளித்துக்கொண்டிருந்தோம் அல்லவா…!

‘கலாட்டா கல்யாணம்’ டீமை வைத்து மற்றொரு படம் தயாரிக்க வேண்டும் என்று சிவாஜி சொன்னபோது, நாம் பேசிய கதைதான் ' ‘சுமதி என் சுந்தரி’. நானும் நீயும் ஜெயலலிதாவுக்குக் கதை சொல்லப் போனபோது ‘எனது மனநிலையைப் பிரதிபலிக்கும் கதை! இதில் நான் நடிக்காமல் யார் நடிக்கப் போகிறார்கள்?” என்று ஒப்புக்கொண்டு நடித்தது நினைவிருக்கிறதா. “என்னுடைய அபிமான இயக்குநருக்கும், எழுத்தாளருக்கும் ஒரே நேரத்தில் கலைமாமணி விருதைக் கொடுத்து கௌரவிக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன்'' என்று கூறி முதல்வர் ஜெயலலிதா நம் இருவருக்குமே 1992-ல் கலைமாமணி தந்து கவுரவப்படுத்தியதை மறக்க முடியுமா?

 

துக்கம் விசாரிக்கப்பட்டேன்

‘திக்கு தெரியாத காட்டில்’ என்ற எனது நாடகத்தைப் பார்க்க வந்திருந்த நீ, “இந்தநாடகத்தை எனக்குக் கொடு. நான் படமாக எடுக்கிறேன்” என்று உரிமையுடன் எடுத்துக்கொண்டாய். இன்றுவரை பாராட்டப்படும் படம் அந்தப் படத்தை எடுத்து முடித்து முதல் பிரதி பார்த்தபோது “என்ன ராஜி! படம் இவ்வளவு நீளமாக இருக்கு!” என்றேன். “உன் வசனங்களைக் குறைக்கவே மனசு வரலை கோபு!” என்றாய். “உன் நகைச்சுவை ஸ்ரீதருக்கு ஊறுகாய். எனக்கு அதுதான் சோறு” என்று கூறி என்னைக் கலங்க வைத்தவனல்லவோ நீ.

சிவாஜி மகன் பிரபுவை ‘சங்கிலி’ படத்தின் மூலம் நடிகனாக்கினாய். ‘ராஜாவீட்டுக் கன்னுகுட்டி’ படத்துக்கு கோபு கதை வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாம் இருவரும் ஒன்றாகப் பணியாற்ற வழி செய்தாய். “நீ உரத்த குரலில் பேசியது கிடையாது. அமைதியானவன், எதிரிகள் இல்லாதவன்” என்று கவிஞர் வைரமுத்து இப்போதுதான் தொலைபேசியில் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிஞர் வைரமுத்து உன்னை போற்றிக் கூறி,“யாரிடம் துக்கம் விசாரிப்பது என்று யோசித்தேன். பிறகு உங்கள் ஞாபகம் வந்தது” என்றபோது நம் இருவரின் நட்புக்குக் கிடைத்த பெருமையாகவே இதைக் கருதுகிறேன்.

ஸ்ரீதர் ராஜராஜ சோழன் என்றால் நீ ராஜேந்திர சோழன். அவரது படங்கள் பெரிய கோயில் என்றால் உனது படங்கள் கங்கை கொண்ட சோழபுரம். பழுவேட்டரையர் போன்று நான் இருவருக்கும் மதியூகியாக இருந்தேன் என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.

புகழுடன் வாழ்ந்து புகழுடன் மறைந்து விட்டாய். சித்ராலயா என்னும் ஆலயத்தின் கடைசித் தூணாக நான் இருக்கும் வரை உனது நினைவுகளும் என்னோடு இருக்கும்.

உலராத விழிகளோடு

‘சித்ராலயா’ கோபு

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23445409.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிரித்ராலயா 13: ஸ்ரீதரின் கற்பனைக்கு முதல் வெட்டு!

 

 
13chrcjpadmini

பரதக் கலைக்குத் தன் நாட்டியத் திறமையால் பேரொளி ஊட்டியவர் பத்மினி. மதுரம் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஸ்ரீதர் இயக்கிய இந்த முக்கோணக் காதல் கதையான ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் ஜெமினிக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு அமைந்தது என்றாலும் படத்தைத் தோளில் சுமந்த கதாபாத்திரம் என்றால் அது பத்மினியுடையதுதான். அந்த அளவுக்கு அவருக்காகவே வடிக்கப்பட்ட பெண் மையப் படமாக அது அமைந்தது. படத்தில் இடம்பெற்ற ‘ஆடும் அருட்பெருஞ்சோதி’ பாடல் காட்சியில் தனது நடனத் திறமை அனைத்தையும் கொட்டியிருந்தார் பத்மினி. அந்தப் பாடல் காட்சி படப்பிடிப்பின்போது ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆகும்போது ஸ்ரீதர் மனம்விட்டு பத்மினியைப் பாராட்டினார். அப்படிப்பட்ட ஸ்ரீதரையே டீலில் விட்டுவிட்டார் நம் நாட்டியத் தாரகை. என்ன காரணத்தாலோ ஒரு முறை படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்தார். இரண்டாம்முறையும் ஸ்ரீதர் கண்டுகொள்ளவில்லை. படப்பிடிப்பு மேலாளர் அழுத்தம் திருத்தமாக நட்சத்திரங்களுக்கு ‘புரோகிராம்’ சொல்லிவிடுவார். அப்படிக் கூறியும் பத்மினி மீண்டும் மீண்டும் தாமதமாக வர, ஸ்ரீதர் இதைச் சரிசெய்ய முடிவுசெய்தார்.

   

 

கோலி விளையாட்டு!

அன்று படப்பிடிப்பில் பத்மினியின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது ஸ்ரீதர் உதவியாளரை அழைத்து பெட்டிக்கடையிலிருந்து கோலிகளை வாங்கிவரச் சொன்னார்.

பத்மினி வரும் நேரமாகப் பார்த்து, “கோபு! வா கோலி விளையாடலாம்” என்று ஸ்ரீதர் அழைக்க, கோபு, சி.வி.ராஜேந்திரன், சுந்தரம், திருச்சி அருணாசலம் ஆகிய அனைவரும் கோலி விளையாடத் தொடங்கினர். பத்மினி வழக்கம்போல் தாமதமாக வந்து, மேக்-அப் போட்டுக்கொண்டு அரங்கில் வந்து நின்ற பத்மினி, இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்து, “சார், நான் ரெடி!” என்றார். “இரும்மா…இப்பதான் விளையாட ஆரம்பிச்சிருக்கோம்” என்றார் ஸ்ரீதர். “ஷூட்டிங் நேரத்துல கோலி ஆடினா எப்படி?” என்று பத்மினி படபடக்க, “வேற என்ன செய்யறது பப்பிம்மா? காலையிலேர்ந்து எல்லாரும் சும்மா உக்கார்ந்திருக்கோம்” என்று ஸ்ரீதர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினார். கற்பூரம்போல் புரிந்துகொண்டு விட்ட பத்மினி மறுநாள் முதல் காலை 8 மணிக்கெல்லாம் முதல் ஷாட்டுக்குத் தயாராக வந்து நின்றார். திரையுலகில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சித்ராலயா குழுவுக்கு அக்கறையில்லை. தொழில் சுத்தம்தான் முக்கியம் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் தொடங்கி கார் ஓட்டுநர், ஆபீஸ் பாய் வரை அனைவருமே இந்தத் தொழில் சுத்தத்தைக் கடைப்பிடித்தனர்.

 

தணிக்கையில் சிக்கிய கண்ணீர்

இந்தப் படத்தின் கதைப்படி, காதல் தோல்வி தந்த ஏமாற்றத்தில், நாட்டியம் ஆடுவதையே நிறுத்திவிடப்போவதாக முடிவெடுக்கிறார் பத்மினி. கடைசியாக ஒரு முறை ஆடலரசன் நடராஜப் பெருமான் சிலைமுன்பு வெறிபிடித்தவரைப் போன்று நாட்டியமாடுவார். அதைக் கண்டு நடராஜர் கண்ணீர் சிந்துவதுபோல் சிம்பாலிக்காக ஒரு காட்சியை எடுத்திருந்தார். அதாவது பத்மினி அதிவேகமாகச் சுழன்று ஆடும்போது அவரது கால் சலங்கையில் இருந்து ஒரு மணி தெறித்துச் சென்று, நடராஜர் சிலை அருகே தொங்கிக்கொண்டிருக்கும் சர விளக்கின்மேல் படுகிறது. அது பட்ட வேகத்தில் விளக்கு அசைந்தாடும்போது அதிலிருந்து விசிறியடிக்கப்படும் எண்ணெய் சொட்டுகளில் ஒன்று, நடராஜர் சிலையின் கண்களில் விழுந்து வழிய, பத்மினிக்காகப் பரதக் கடவுள் கண்ணீர் வடிப்பது போன்ற காட்சியைக் கற்பனை செய்திருந்தார் ஸ்ரீதர்.

13CHRCJMEENDASORGAM
 

இயக்குநருக்கான முத்திரை பளிச்சிட்ட இந்தக் காட்சியை கிராஃபிக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு 20-க்கும் அதிகமான ரீடேக்குகள் மூலம் அந்தக் காட்சியைப் படம் பிடித்திருந்தார் ஸ்ரீதர். படம் முடிந்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும் முன்பு, படத்தின் வியாபாரத்துக்காக விநியோகஸ்தர்களுக்கு ஒரு காட்சி திரையிடப்பட்டது. நடராஜர் கண்ணீர் சிந்தும் காட்சி வந்தபோது விநியோகஸ்தர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியிருந்தனர். ஆனால், தணிக்கையில் ஸ்ரீதருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தணிக்கைக் குழு உறுப்பினர்களுடன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரி, நடராஜரின் சிலை சிம்பாலிக்காகக் கண்ணீர் வடிப்பதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

‘மனிதக் காலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் மணியால் தெய்வத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது’போன்ற சித்தரிப்பு, தெய்வநிந்தனை போல உள்ளதாகக் காரணம் கூறினார்கள். அந்தக் காட்சியை நீக்கிய பிறகே ‘மீண்ட சொர்க்கம்’ தணிக்கையிடமிருந்து மீண்டது. ‘மீண்ட சொர்க்கம்’ படம் வெளியானபிறகு ‘ஸ்ரீதர் யூனிட் என்றால் தி பெஸ்ட் டெக்னிஷியன்ஸ்’ என்று பட உலகினரும் பத்திரிகைகளும் புகழ்ந்து பாராட்டினார்கள். வெட்டுப்பட்ட காட்சியும் படத்தில் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஸ்ரீதர் கோபுவிடம் நீண்டகாலம் புலம்பிக்கொண்டிருந்தார்.

 

சிவாஜியின் நிபந்தனை

‘மீண்ட சொர்க்கம்’ வெளியான சில நாட்களிலேயே கோபுவை அழைத்தார் ஸ்ரீதர். “சிவாஜி அண்ணன் பேசினார். அவருடைய பிரபுராம் நிறுவனத்திற்காக ஒரு படம் செய்துதரும்படி கேட்கிறார்” என்றார். “ கதைக்காக உடனே உட்காரலாம்” என்றார் கோபு. நல்ல தலைப்பு தேவை. ‘விடிவெள்ளி’ என்ற தலைப்பை வைத்துப் படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டுக் கதை விவாதம் செய்ய, சிவாஜி கணேசனின் தம்பி வி.சி.சண்முகம், ஸ்ரீதர், கோபு, ஒப்பனையாளர் ஹரிபாபு, அவர் மகன் நாணு ஆகிய ஐந்துபேரும் பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அறை எடுத்து கதையை விவாதிக்கத் தொடங்கினார்கள். விவாதம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்ட வி.சி.சண்முகம், “முழுக்கதையும் தயாரானவுடன் அண்ணனிடம் சொல்லுங்கள்.

13CHRCJSRIDAR
 

அவருக்குக் கதை பிடித்துவிட்டால் உடனே படத்தைத் தொடங்கிவிடுவார் எனக் கனவு காணாதீர்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார். அதற்கு உங்கள் டீம் ஒப்புக்கொண்டால்தான் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும்” என்று பஞ்ச் வைத்தார். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் விவாதத்துக்கு நடுவே இவரென்ன நந்தியைப் போல சிவாஜி நிபந்தனை விதிப்பார் என்கிறார் என்று நினைத்தகோபு, “அது என்ன நிபந்தனை என்று இப்போதே கூறிவிடுங்கள்” என்றார். ஆனால் சண்முகம் பிடிகொடுக்கவில்லை. “அது என்ன நிபந்தனை என்பது எனக்கே தெரியாது” என்று சஸ்பென்ஸ் வைத்தார் சண்முகம். இதைக் கேட்டு சின்னதாகப் புன்முறுவல் பூத்தார் ஸ்ரீதர்…

சிரிப்பு தொடரும்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23521845.ece

Link to comment
Share on other sites

சிரித்ராலயா 14: திரையுலகில் ஒரு கடப்பாரை நீச்சல்!

 

 
20CHRCJVidivelli

‘விடிவெள்ளி’ படத்தில் சிவாஜி, எம்.என்.ராஜம், பாலாஜி

சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் லண்டனில் படித்துவிட்டு வந்து, அண்ணன் சிவாஜியின் பட விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்த நேரம். ராணுவ அதிகாரியைப் போல வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவர். ஆனால், பழகப் பனித்துளிபோல மென்மையான மனிதர். அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வும் உண்டு. இதனால் கோபுவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டார்.

   

‘விடிவெள்ளி’ என்ற படத்தை சிவாஜியின் பிரபுராம் நிறுவனத்துக்காக இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஸ்ரீதர். முழுக்கதையும் தயாரானவுடன் கோபுவுடன் சென்று சிவாஜியைச் சந்தித்துக் கதையைச் சொன்னார். சிவாஜிக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. ஸ்ரீதருக்கும் கோபுவுக்கும் ஒரே குழப்பம். சி.வி.சண்முகம் கூறியதுபோல சிவாஜி எந்த நிபந்தனையும் நமக்கு விதிக்கவில்லையே என்று குழம்பினார்கள். சண்முகத்தைப் பிடித்து உட்கார வைத்து “ சிவாஜி அண்ணா பெரிய நிபந்தனை போடுவார் என்றீர்களே, அப்படி எந்த நிபந்தனையையும் அவர் போடவில்லையே?” என்று கேட்டனர்.

20CHRCJ

சிவாஜியுடன் அவரது தம்பி சண்முகம்

 

அதற்கு சண்முகம், “நூறு நாள் ஓடும்படியாகப் படத்தின் கதை இருக்க வேண்டும் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனை” என்றார் சண்முகம். “இது என்ன பெரிய நிபந்தனை! எங்க படங்கள் எல்லாமே நூறு நாட்களுக்குக் குறையாமல் ஓடும்” என்றார் கோபு. “கதை விவாதத்துக்கு முன்பே அப்படிக் கொளுத்திப் போட்டாத்தான் எங்களுக்கு நல்ல கதையைத் தருவீங்க என்று அப்படிச் சொன்னேன். நான் நினைச்ச மாதிரி நடந்திருச்சு. இல்லேன்னா நல்ல கதையை நீங்களே தயாரிச்சுடுவீங்களே!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சண்முகம். ‘விடிவெள்ளி’ படம் சிவாஜியும் சண்முகமும் எதிர்பார்த்தது போலவே நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றிபெற்றது. படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் கிராமத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படப்பிடிப்பு நடந்த நாட்களில் அந்தக் கிராமம் சித்திரைத் திருவிழா கண்டதுபோல அல்லோலகல்லோலப்பட்டது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை கோபுவால் இன்னும் மறக்க முடியவில்லை!

 

கடப்பாரை நீச்சல்

வேட்டைக்காரன்புதூர் கிராமத்தின் நிலச்சுவான்தார்களில் ஒருவர் முத்துமாணிக்கம். சிவாஜியின் நெருங்கிய நண்பர். படக் குழுவினருக்காக அனைத்து வசதிகளையும் அவர்தான் செய்து கொடுத்திருந்தார். முத்துமாணிக்கத்துக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் தென்னை, மா, பலா, வாழை, பாக்கு, நெல்லி என்று பசுமைப் பாய் விரித்திருந்த பிரம்மாண்டமான தோப்பு இருந்தது. சுமார் இருபது கயிற்றுக் கட்டில்களைத் தருவித்த சண்முகம், அவற்றை அந்தத் தோப்பில் வரிசையாகப் போட்டு வைத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் இரவு சிவாஜி உள்பட அனைவரும் அந்தக் கயிற்றுக் கட்டிலில்தான் படுத்துத் தூங்குவார்கள். சிலுசிலுவென்ற தென்றல் காற்று விடியவிடிய உடலைத் தழுவிக்கொண்டே இருக்கும். மாசு மருவற்ற காற்றை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே யாரும் மேற்சட்டை அணியாமல் அந்தத் திறந்தவெளி ரிசார்ட் சூழ்நிலையை அனுபவித்தார்கள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் பண்ணைத் தோப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பெரிய மண்டைக் கிணற்றில் குளிக்கச் செல்ல வேண்டும்.

20CHRCJSivaji%20AND%20SHANMUGAM
 

கிணற்றில் குளிப்பதில் எல்லோரையும் சிவாஜி முந்திக்கொள்வார். அவர் குளித்து முடித்து மேக்-அப் போட சென்ற பிறகு டைரக்‌ஷன் டீம் குளியலுக்குக் கிளம்பும். ஸ்ரீதர், கோபு, சண்முகம், நாணு ஆகிய நால்வரும் அன்று எடுக்கப்போகும் காட்சியைப் பற்றிப் பேசிக்கொண்டே கிணற்றை நோக்கி நடப்பார்கள். கிணற்றின் படிவழியே உள்ளே இறங்கிக் குளித்துவிட்டு மேலே வர வேண்டும். ஒருநாள் கோபு கிணற்றின் பிரம்மாண்டத்தை எட்டிப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். குறும்புத்தனத்துக்குப் பெயர் போன சண்முகம், நாணுவை பார்த்து கண்ணசைத்தார். அவ்வளவுதான் கோபு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாணு அவரை அலேக்காகத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிந்தார்.

‘தொபீர்…’ என்ற சத்தத்துடன் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்த கோபு, தண்ணீருக்கடியில் போய்ச் சடரென்று மேலே வந்ததும் மூச்சு முட்டியது. இரண்டு மூன்று மிடறு தண்ணீரையும் குடித்துவிட்ட கோபுவுக்குத் யாரோ தன் கால்களைப் பிடித்து கிணற்றுக்குள் இழுப்பதுபோன்ற ஒரு பிரம்மை. அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்று நினைத்து மீண்டும் உள்ளே மூழ்க வேண்டிய நேரத்தில், கோபு பின்னாலேயே கிணற்றில் குதித்திருந்த சண்முகம், அவரது தலைமுடியை கொத்தாகப் பற்றிப் பிடித்துகொண்டு, “பயப்படாதே கோபு… மூழ்கிட மாட்டே.. கை, கால்களை உதறிக்கிட்டே உடம்பை அசைச்சு எதிரே இருக்கிற படிக்கட்டுக் கல்லைப் போய்ப் பிடி. நான் சாப்போர்ட் கொடுக்கிறேன்” என்று கூறியபடியே 10 மீட்டர் விட்டம் கொண்ட அந்த மண்டைக் கிணற்றின் எதிர்பக்கம் இழுத்துச்சென்று கோபுவைப் பாதுகாப்பாகப் படிக்கட்டைப் பிடித்துக்கொள்ளச் செய்தார். மூச்சை நன்கு இழுத்துவிட்ட கோபு, “இதுக்குப்பேருதான் பாழுங்கிணத்துல தள்ளுறதா?” என்றார் கோபு.

“இல்ல…இதுக்குப் பேரு கடப்பாரை நீச்சல்!” சொல்லிவிட்டுச் சிரித்தார் வி.சி.ஷண்முகம். மறுநாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோபுவே கிணற்றில் தொபீர் என்று குதிக்க, ஸ்ரீதர், சண்முகம், நாணு என எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். அதன்பிறகு சண்முகத்தின் பயிற்சியில் கடப்பாரை நீச்சலில் கைதேர்ந்தவர் ஆனார் கோபு. இந்தக் கடப்பாரை நீச்சல் சம்பவத்தை வைத்தே நடிகர் பாண்டியராஜன் - ஊர்வசி தொடர்பான காட்சி ஒன்றை ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் வைத்தார் கோபு.

 

திறந்துகொள்ளும் லாக்கெட்

கயிற்றுக் கட்டிலில் இரவு தூங்கும்போது கோபுவைத் தேட ஆரம்பித்துவிடுவார் சிவாஜி, “ஆச்சாரி, நீதான் சிரிக்க சிரிக்கப் பேசுவியே எதையாவது பேசு” என்று குழந்தைபோல் கெஞ்சுவார். தனது மிமிக்ரி திறமைகளை வைத்து சிவாஜிகணேசனைச் சிரிக்க வைப்பார் கோபு. ஸ்ரீதர் உட்பட அத்தனைபேரும் விலா நோகச் சிரித்தபடி உறங்கச் செல்வார்கள். சிவாஜியோ கொஞ்ச நேரம் நினைத்து நினைத்துச் சிரித்துவிட்டுத் தூங்கிப்போவார்.

‘விடிவெள்ளி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு அற்புதமான கதாபாத்திரம். தங்கை எம்.என் ராஜத்துக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு வைர நெக்லஸைத் திருடித் தருவார். அந்த நெக்லஸில் லாக்கெட் ஒன்று இருக்கும். திருமணம் ஆனதும், அந்த லாக்கெட் திறந்து கொள்ள, அதில் ஒரு வாலிபனின் படம் இருப்பதைப் பார்த்து, கணவன் பாலாஜி ராஜத்தைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சிவாஜி எப்படி மீண்டும் தங்கையை வாழ வைக்கிறார் என்பதுதான் கதை. அந்த நெக்லஸ் கதாநாயகி சரோஜாதேவியுடையது. அவரையே பின்னால் சிவாஜி காதலிப்பார்.

 

காலதேவன் கொடுத்த தண்டனை!

இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் அம்மாவாக நடிக்க, தெலுங்கு தேசத்திலிருந்து சாந்தகுமாரியை ஒப்பந்தம் செய்திருந்தனர். சாந்தகுமாரி நல்ல நடிகை. முகபாவங்களை அற்புதமாக வெளிப்படுத்தி நடிக்கக்கூடியவர். அதுமட்டுமே போதுமா? திருத்தமாகத் தமிழ் பேச வேண்டுமே! சாந்தகுமாரி வாய் திறந்தால் தெலுங்கு வாசலில் வந்து காவல் காத்து, தமிழை உள்ளே நுழைய விடாதபடி தடுத்தது. பள்ளி வாத்தியாரைப் போன்று தன் முன்னால் வந்து நின்ற, கோபுவை ஏற இறங்கப் பார்த்த சாந்தகுமாரி, “செப்பண்டி கோபுகாரு! ஏமிட்டி நா டயலாகு?” என்றார்.

20chrcjchirithralaya

‘சித்ராலயா’ கோபு

கோபு தமிழில்,“ ‘கவலைப்படாதே சந்துரு, நான் சமைச்சு வச்சிடறேன்’ இதே மீறு டயலாக்” எனத் தனக்குத் தெரிந்த தெலுங்கில் அவருடன் பேசி சொல்லிக்கொடுத்தார். டயலாக்கைத் திருப்பிச் சொன்ன சாந்தகுமாரி “காவாலி படாதே சந்துரு, நேனு சமைஞ்சு வெஞ்சுடறேன்!” என்றார் . கோபுவுக்கு பகீர் என்றது. “சமைஞ்சு வெஞ்சுடறேன் காதம்மா ! சமைச்சு வச்சுடறேன்!” என்று திருத்திச் சொல்லிக்கொடுத்தார். இப்படியே ஒரு மணிநேரம் வகுப்பெடுத்து கோபுவுக்கு நெஞ்சு அடைக்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஓரளவுக்குச் சரிசெய்து சாந்தகுமாரியை ஷாட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்தார். ஆனால் ஷாட்டில் “ சமைஞ்சு வெஞ்சுடறேன்” என்று சாந்தகுமாரி கூற சிவாஜி உள்ளிட்ட மொத்த யூனிட்டும் சிரித்துத் தீர்த்தது.

ஸ்ரீதர் கோபுவை முறைத்தார். கேமராமேன் பின்னால் போய் ஒளிந்துகொண்ட கோபுவுக்குள் ஒரு ‘ப்ளாஷ் கட்’ ஓடியது. ‘சம்ஸ்கிருத வாத்தியாரின் தலையில் விடைத்தாளைக் கிழித்து போட்டதற்குத் தண்டனையாக, சாந்தகுமாரிக்குத் தமிழ் வசனங்களைச் சொல்லித் தரும் பணியை காலதேவன் தந்து விட்டானோ ?’ வேறு வழி இன்றி சாந்தகுமாரிக்கு கோபு புராம்டிங் செய்ய, அந்தக் காட்சி படமாக்கப்பட்டு, டப்பிங்கில் தமிழ் தப்பித்தது…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23611835.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 15: காஷ்மீரில் கட்டிப்போட்ட சலுகை!

27chrcjvaijeyanthi%20with%20her%20grandm

1959-ல் பிபிசி வானொலிக்கு பேட்டியளித்தபோது வைஜெயந்திமாலாவுடன் அவரது பாட்டி

 

சிவாஜி கணேசன் எதிர்பார்த்தது போலவே ‘விடிவெள்ளி’ சூப்பர் ஹிட் ஆனது. பத்திரிகைகளின் பாராட்டு மழையும் திரையரங்குகளில் வசூல் மழையும் பொழிய, சிவாஜி கணேசனுக்குப் பரம திருப்தி.

“கோபு! ஸ்ரீதரை அழைச்சுக்கிட்டு, நீ நம்ம கம்பெனிக்கு உடனே வா!” என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார் சிவாஜியின் தம்பி சண்முகம். “ஸ்ரீதர் சுதந்திரமான கலைஞன். அப்படியெல்லாம் சட்டுனு வரமாட்டான்!” கோபு சொன்னார். “வீனஸ் கம்பெனியில மட்டும் எப்படி இருக்கார் ?” சண்முகம் கேட்டார். “எனக்கே அது பெரிய ஆச்சரியம்தான்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீதர் வீட்டுக்கு கோபு போனபோது அவருக்காகவே காத்திருந்ததைப் போல “கோபு, வீனஸ் நிறுவனத்திலேர்ந்து நான் விலகப் போறேன்” என்று பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார் ஸ்ரீதர். வார்த்தை வராமல் திகைத்து நின்ற கோபுவிடம் நடந்ததைச் சொன்னார்.

“நிறைய வெளிப்படங்களை நீங்க ஒப்புக்கொள்றீங்க!” என்று வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதரிடம் ஆட்சேபம் தெரிவிக்க, “ஒரு டெக்னீஷியனை, ஒரு கலைஞனின் ஆர்வத்தை இப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது” என்று ஸ்ரீதர் சூடாகப் பதிலளிக்கப்போய், இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு கணக்கை முடித்துக்கொள்வது என்ற இடத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

“சரி... அடுத்து?” கோபு கேட்டார். “இனி நாம் ஒருத்தரிடமும் கையைக்கட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாமே ஒரு பட நிறுவனத்தைத் தொடங்குவோம்” என்றார் ஸ்ரீதர். நண்பர்களான கோபு, சி.வி.ராஜேந்திரன், வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை ஒர்க்கிங் பார்ட்னர்களாகக் கொண்டு, ஸ்ரீதர் தொடங்கிய பட நிறுவனம்தான் சித்ராலயா.

வேடிக்கை என்னவென்றால், எந்த வீனஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினாரோ, சென்னை தியாகராய நகரின் வடக்கு போக் சாலையில் இருந்த வீனஸ் பட அலுவலகம் இருந்த அதே கட்டிடத்தில் சித்ராலயா அலுவலகத்தைத் திறந்தார். கீழே வீனஸ் நிறுவனம், மேலே மாடியில் சித்ராலயா. ஒரு இளைஞன் தோணியைத் துடுப்பினால் செலுத்த, அவன் முன்பாக ஒரு பெண் அமர்ந்து அந்தப் பயணத்தை ரசிப்பது போன்ற சின்னத்தை நிறுவனத்தின் லோகோவாக வடிவமைத்தனர். ‘கலைக்கடலில் சித்ராலயா என்கிற தோணியில் பயணிக்கிறோம்’ என்று அறிவிக்கப்பட்டது.

 

முதல் தயாரிப்பு

சித்ராலயா தொடங்கப்பட்டதும் முதலில் விவாதிக்கப்பட்டது ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படத்தின் கதைதான். முதல் படமே சோகமாக இருக்க வேண்டாம் என்று ஜனரஞ்சகமாக ஒரு கதையை விவாதிக்க முடிவு செய்தனர். அந்தப் படம்தான் ‘தேன் நிலவு’. ‘காதல் மன்னன்’ ஜெமினிதான் கதாநாயகன். வைஜெயந்திமாலா கதாநாயகி. அப்போது, இந்திப் படங்களில் நடித்து வைஜெயந்தி மாலா மிகவும் பிரபலம் ஆகியிருந்தார். எம்.என். நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, புதுமுகம் பி.ஏ. வசந்தி ஆகியோர் நடித்தனர். ‘கல்யாண பரிசு’ படத்துக்கு ஹிட் பாடல்களைத் தந்த ஏ.எம். ராஜாதான் இசையமைப்பாளர். ஸ்ரீதர் படங்களுக்கு அவர்தான் அப்போது இசையமைத்து வந்தார்.

 

நடிகர்களுக்கு சலுகை

காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்குப் படப்பிடிப்பை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.குடும்பத்தினருடன் நடிகர்கள் காஷ்மீர் வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. டெக்னீஷியன்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.

ஜெமினி கணேசனுக்கு இரண்டு குடும்பம், தங்கவேலுக்கு இரண்டு குடும்பம். எல்லோரும் ஜேஜே என்று கிளம்பியதைப் பார்த்ததும் குறும்புக்காரரான எம்.என்.நம்பியார் “நான்தான் மடையன். ஒரே குடும்பம் வச்சிருக்கேன்!” என்று தடாலடியாக கூறிய ஜோக்கில் சித்ராலயா அலுவலகம் கலகலத்தது. சித்ராலயா வழங்கிய சலுகைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு எந்த நடிகரும் சென்னைக்கு போக வேண்டும் என்று கூறவேயில்லை.

 

கூப்பிடு சுபா மாப்பிள்ளையை!

படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் நாளே பிரச்சினை தலைதூக்கியது. காரணம், வைஜெயந்திமாலா. அப்போது அவர் மிகவும் பிரபலம். காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் அவரைக் காண கூட்டம் கூட்டமாக வந்தனர்; “வைஜெந்தி ...வைஜெந்தி!” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். போலீசைக் கொண்டு ரசிகர்களை அப்புறப்படுத்திய பிறகே படப்பிடிப்பு நடந்தது.

27CHRCJTHENNILAVU

‘தேன்நிலவு’ படத்தில்

வைஜெயந்திமாலாவின் பாட்டி யதுகிரி அம்மாள் அவருடன் காஷ்மீர் வந்திருந்தார். பாட்டி சொல்லைத் தட்டவே மாட்டார், வைஜெயந்தி. பாட்டியைச் சமாளிக்க, ஸ்ரீதர் கோபுவைத் தான் அனுப்புவார்.

காரணம், கோபுவின் மாமியார் சுபத்திரா அம்மாளின் தோழி, யதுகிரி அம்மாள். “அட! நம்ம சுபா மாப்பிள்ளை!” என்று கோபுவைப் பிடித்துகொண்டுவிட்டார், யதுகிரி அம்மா. தலைவலி தைலம் முதல் காஷ்மீர் குங்குமப்பூ வரை எது தேவை என்றாலும் அவர் “கூப்பிடு சுபா மாப்பிள்ளையை” என்று கோபுவைத் தான் கூப்பிடுவார். இதனால், ஜெமினி, ஸ்ரீதர், நம்பியார் எல்லாருமே, கோபுவை ‘சுபா மாப்பிளை’ என்று கேலி செய்ய ஒரே கலாட்டாதான்.

 

தால் ஏரியில் பாடல்

‘ஓஹோ எந்தன் பேபி !’ பாடலுக்காக, வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி, ஜெமினியும் வைஜெயந்திமாலாவும் பாடுவது போன்ற காட்சியைப் படமாக்க வேண்டும் என்று நினைத்தார் ஸ்ரீதர். ஜெமினி கணேசன் மிகவும் துணிச்சல்மிக்கவர். ஷூட்டிங் நாட்களில் ஓய்வு நேரத்தில், கிரிக்கெட், கால்பந்து என்று எதையாவது விளையாடுவார். வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி, டூயட் பாட வேண்டும் என்று சொன்னதும், ஓகே சொல்லிவிட்டார். ஆனால், யதுகிரி பாட்டியோ வைஜெயந்திமாலா வாட்டர் ஸ்கீயிங் செய்வதற்கு நோ சொல்லிவிட்டார். “மாயா பஜார்ல பாட்டு பாடிண்டே படகுல போவாளே. அந்த மாதிரி எடுங்கோ. ஸ்கீயிங் எல்லாம் வேணாம்” என்றார் யதுகிரி பாட்டி.

‘ஓஹோ எந்தன் பேபி...’ பாட்டை ‘ஆஹா இன்ப நிலாவினிலே...’ என்ற மெட்டில் மனதுக்குள் பாடிப் பார்த்த கோபு, பாட்டி சொன்னதை ஸ்ரீதரிடம் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று யோசித்தார். ‘சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்’ என்று எண்ணிய கோபு, ஸ்ரீதரிடம், “வைஜெயந்திமாலா ஸ்கீயிங் செய்ய அவருடைய பாட்டி ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்குப் பதில் டூப் போட்டுவிடலாம்” என்று சொன்னார். வைஜெயந்திமாலாவுக்கு என்ன தோன்றியதோ, “இல்லை, நானும் வாட்டர் ஸ்கீயிங் செய்கிறேன்” என்று வீம்பாகச் சொல்லிவிட்டார்.

வாட்டர் ஸ்கீயிங் கற்றுத் தர இரு படகுக்காரர்களை வரவழைத்தார் ஸ்ரீதர். இரண்டு மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்த வைஜெயந்திமாலா, பிறகு காட்சியில் நடிக்கத் தயாரானார். ஜெமினி, வைஜெயந்திமாலா இருவரும் தால் ஏரியில் விழுந்து விடாமல் இருப்பதற்காக, இரு புறமும் இரண்டு படகுகள் செல்ல ‘ஓஹோ எந்தன் பேபி ! நீ வாராய் எந்தன் பேபி!’ என்ற பாடல் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராமல் ஒரு விபத்து!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23684150.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா : கலவரம் ஏற்படுத்திய க்ளோஸ் - அப் ஷாட்!

 

 
04chrcjThennilavu%201

‘தேன் நிலவு’ படத்தில்

‘தேன் நிலவு’ படப்பிடிப்புக்காக பங்களா போன்ற பெரிய படகு வீடுகளை ஒப்பந்தம் செய்திருந்தது சித்ராலயா. பெரிய பெரிய படுக்கையறைகள், குளியலறை, சமையலறை, பால்கனி, மாடி என்று ஒரு பெரிய பங்களா மோஸ்தரில்தான் அந்த இரண்டு படகு வீடுகளும் இருந்தன. ஒரு படகு பங்களா படப்பிடிப்புக்கு உபயோகிக்கப்பட்டது. மற்றொரு படகு பங்களாவில் நடிகை, நடிகையர், வல்லுநர்கள், நடிகை நடிகையரின் குடும்பங்கள் எல்லாம் தங்கியிருந்தன. ஜெமினி கணேசனின் குடும்பம், நம்பியாரின் மனைவி, யதுகிரி அம்மாள், எல்லாரும் அந்த மற்றொரு படகு பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பைக் கண்டு வந்தனர்.

வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி ஜெமினியும் வைஜெயந்தியும் ‘ஓகோ எந்தன் பேபி’ டூயட் பாடலில் நடிக்க, ஸ்ரீநகரின் தால் ஏறி மிகவும் ஆழமானது என்பதால் எச்சரிக்கையுடன் படமாக்கி முடித்தார் ஸ்ரீதர். பிறகு படகு விட்டிலிருந்து வைஜயந்தியை ஏற்றிக்கொண்டு துடுப்புப் படகில் ஜெமினி செல்வதுபோன்ற காட்சியைப் படமாக்கினார்.

மற்றொரு படகு பங்களாவில் தங்கியிருந்த ஜெமினி கணேசனின் மனைவி, இந்தக் காட்சியின் படப்பிடிப்பைக் காண்பதற்காக வேகமாகப் படி ஏறி படகின் மேல்தளத்துக்கு விரைய அப்போது நிலை தடுமாறி, படகு வீட்டிலிருந்து தால் ஏரியினுள் விழுந்து விட்டார். அவர் விழுந்த பகுதி ஆழமான பகுதி. அவர் தண்னீரில் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. அனைவரின் கவனமும் படப்பிடிப்பில் இருந்தது.

 

நிஜ நாயகன்

ஆனால் ஜெமினி கணேசன் கவனித்துவிட்டார். படப்பிடிப்பில் இருந்தவர், சடாரென்று தண்ணீருக்குள் குதித்து நீந்திச் சென்று மனைவியின் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து படகு பங்களாவினுள் ஏற்றினார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் ஸ்ரீதர் பதைபதைத்துப் போனார். ஒருமணிநேரம் மனைவியின் அருகில் இருந்த ஜெமினி, ஒன்றுமே நடக்காதது போல வந்து, “நான் ஷாட்டுக்கு ரெடி!” என்றார். “ஜெமினி கணேசன் காதல் மன்னன் மட்டுமல்ல. தேவைப்பட்டால் நிஜ வாழ்வில் ஆக்ஷன் ஹீரோதான். அதன் பிறகு, அந்தக் காட்சியில் பிரமாதமாக நடித்துக் கொடுத்தார்!” என்கிறார் கோபு.

ஒரு வழியாக இரண்டு மாதம் காஷ்மீரில் தங்கி, தேனிலவு படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியது சித்ராலயா படக்குழு. ரிலீஸ் தேதியை ஸ்ரீதர் ஏற்கெனவே அறிவித்துவிட்டதால் சென்னை திரும்பியதுமே எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங் பணிகளை முடுக்கிவிட்டார். அப்போது, பி. மாதவன், ஸ்ரீதரிடம் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.

உதவி இயக்குநரான சி. வி. ராஜேந்திரன் எடிட்டிங் பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் எடிட்டிங் அறைக்கு வேகமாக வந்த ஸ்ரீதர், அங்கிருந்த சி.வி.ராஜேந்திரனிடம், “ஜெமினி-வைஜயந்திமாலா காதல் காட்சி ஒன்றில், ஓடைக்கு அருகே எடுத்த வைஜயந்தியின் க்ளோஸ் -அப் ஷாட் ஒன்றை உடனே பார்க்க வேண்டும்” என்று கேட்டார் ‘க்ளோஸ் ஷாட்’டின் காதலரான ஸ்ரீதர். “அதைத்தான் தேடிகிட்டு இருக்கோம்!” என்று ஸ்ரீதரிடம் பதில் கூறினார் ராஜேந்திரன். “என்ன நடக்குது இங்கே. பீப்பாயில குப்பையா பிலிம் போட்டு வச்சிருக்கீங்க! எப்போ கிடைக்கும் அந்த க்ளோஸ் ஷாட்?” என்று சத்தம் போட்டுவிட்டு ரீரெக்கார்டிங் கிளம்பினார்.

 

04CHRCJGEMINIWITHHISWIFEANDDAUGHTER

மனைவி பாப்ஜியுடன் ஜெமினி கணேசன்

கிடைக்காத ஷாட்டும் ஷார்க் ஸ்கின் பேண்ட்டும்

படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம். ராஜா. ‘ஓஹோ எந்த பேபி, பாட்டு பாடவா’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் போட்டுக்கொடுத்ததோடு, பின்னணி இசையிலும் பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்புடன் ரீரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஸ்ரீதர் அதை மேற்பார்வை செய்தபடி சில திருந்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது சவுண்ட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார் சி.வி.ராஜேந்திரன்.

அவரைப் பார்த்த ஸ்ரீதர், “நான் கேட்ட வைஜயந்தியின் கிளோஸ் அப் ஷாட் கிடைச்சுடுச்சா, பார்க்க வரலாமா?” என்று கேட்க, ராஜேந்திரன் தயங்கியபடி, “இன்னும் கிடைக்கலை. தேடிக்கிட்டு இருக்கோம்!” என்று சொன்னார். அப்போது ஸ்ரீதரின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. “என்ன வேலை செய்யறீங்க? ஷார்க் ஸ்கின் பேண்ட் (Shark Skin pant) போட்டுக்கிட்டு வரதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா வேலை செய்ய வக்கில்லை”என்று ஸ்ரீதர் வெடுக்கென்ற வார்த்தைளை வீச வெலவெலத்துப்போன ராஜேந்திரன் அங்கிருந்து துள்ளிக் குதித்து வெளியேறும் முன் இசையமைப்பாளர் ஏ.எம். ராஜாவைக் காணவில்லை.

ஸ்ரீதர் ‘அதுக்குள்ள மியூசிக் டைரக்டர் பிரேக் எடுக்கப்போயிட்டாரா, கூப்பிடு கோபு’ என்று ஸ்ரீதர் கத்த, வெளியே ஓடிவந்தால் தன் காரின் கதவைத் திறந்துகொண்டிருந்தார் ஏம்.எம்.ராஜா. “என்ன மிஸ்டர் ராஜா! என்னாச்சு? திடீர்னு கிளம்பிடீங்க” கோபு ஓடிப்போய் அவரை வழிமறித்தார். “என்ன கோபு சார்! உங்க டைரக்டர் இப்படிப் பேசிட்டாரு?” என்று ராஜா பொங்கினார்.

எதிர்பாராமல் அவரது பேண்டைக் கவனித்த கோபுவுக்கு பகீர் என்றது. ஏ. எம். ராஜாவும் ஷார்க் ஸ்கின் பேண்ட் அணிந்திருந்தார். “ஷார்க் ஸ்கின் பேண்ட் போட்டவனுக்கு வேலை செய்ய வக்கில்லைனு டைரக்டர் எப்படிச் சொல்லலாம்?” ராஜா கேட்டார். “என்ன சார் நீங்க! அவரோட மாமா பையன் ராஜேந்திரன் சொந்தக்காரன்ங்கிற உரிமையில அவர் எதோ சொன்னார். நீங்க அதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.?” என்று கோபு சமாதானம் செய்தார்.

“ஸ்ரீதர்தான் என்னை இசையமைப்பாளரா ஆக்கினார். அதற்கு நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனா, அவர் அடித்த கமெண்ட்தான் என்னால பொறுத்துக்கொள்ள முடியல!” என்று குழந்தைபோல குமுறியவரைக் கெஞ்சிக் கூத்தாடி, மீண்டும் சவுண்ட் ஸ்டுடியோவுக்குள் அழைத்து வந்தார் கோபு.

ரகசியமாக ஸ்ரீதரிடம் நடந்ததைக் கூற, “அய்யோடா சாமி! நான் சவுண்ட் ஸ்டூடியோ பக்கமே வரல, நீ அவரோட உட்காரு. நான் எடிட்டிங் பார்க்கிறேன்” என்று சங்கோஜத்துடன் நழுவியதைக் கண்ட ஏ.எம்.ராஜா முகத்தில் இப்போது பெப்பர்மிண்ட் மிட்டாய் கிடைத்த குழந்தையின் குதூகலம்.

அங்கிருந்து எடிட்டிங் அறைக்குச் சென்ற ஸ்ரீதர், அங்கு அனைவரும் இன்னமும் எதையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், ராஜேந்திரனைக் கேட்டார். “நான் கேட்ட அந்த 14- வது ரீல் க்ளோஸ் அப் ஷாட்டைத் தானே தேடறீங்க?” மாதவன் கூலாக ஸ்ரீதரைப் பார்த்தார். “அதைத் தேடலை சார், 14- வது ரீலையே காணோம். பிலிம் பீப்பாயினுள் எங்கேயோ மாட்டிக்கிட்டு இருக்கு!” என்றார்.

“ரீல் மாட்டிக்கிட்டு இருக்கோ இல்லையோ, சென்சார் தேதியைச் சொல்லிட்டு, நான்தான் உங்க கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கேன்..!” என்றபடி தலையைத் தன் இரண்டு கைகளாலும் கலைத்துக்கொண்ட ஸ்ரீதர், அதை ஒதுக்க மறந்து பரட்டைத் தலையுடன் கிளம்பிப் போனதை பார்த்த கோபுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23761321.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 18: கட்டப்பட்டது ஒரு திரை ஆலயம்!

 

 
11CHRCJNAGASH1JPG

ஜெர்ரி லூயிஸின் கையெழுத்திட்ட பொம்மையுடன் நாகேஷ்   -  படம்:ரமாமணி

தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்த மாமா மகன் சி.வி.ராஜேந்திரனை உரிமையுடன் ஸ்ரீதர் திட்டப்போய், அதைத் தவறாகப் புரிந்துகொண்டார் ‘தேன்நிலவு’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா. நடந்ததைத் தெரிந்துகொண்டு இசைப்பதிவுக் கூடத்திலிருந்து தெறித்து ஓடி எடிட்டிங் அறையில் விழுந்த ஸ்ரீதருக்கு, அங்கே தேடு தேடு என்று தேடியும் அந்தக் க்ளோஸ் - அப் ஷாட் கிடைக்காததில் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்.

“மற்ற எந்த தொழில்நுட்பக் கலைஞரையும்விட சினிமாவில் பொறுப்பும் மன அழுத்தமும் இயக்குநருக்கே அதிகம் என்பதை ஸ்ரீதரின் அருகிலிருந்து கவனித்து உணர்ந்திருக்கிறேன்” என்று கூறும் கோபு, அதன்பிறகு ‘தேன்நிலவு’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து போனார்.

 

 

அலைமோதியக் கூட்டம்

“அவர் ஒரு மெலடி கிங். ‘கல்யாணப் பரிசு’, ‘விடிவெள்ளி’, ‘தேன் நிலவு’ என்று தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்தவர், எளிமையானவர். உரத்த குரலில் கூடப் பேசமாட்டார். மிகச் சிறந்த இசையமைப்பாளர். தனது முந்தைய மெட்டுக்களையும் இசைக்கோர்ப்பையும் தானே முறியடிக்கவேண்டும் என்று நினைப்பவர்” என்ற கோபு, படக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் மத்தியில் நடந்த இதுபோன்ற நிஜ காமெடி ரணகளங்களைத் தாண்டி, சித்ராலயாவின் முதல் தயாரிப்பான ‘தேன் நிலவு’ சூப் ஹிட் ஆனதை மறக்கமுடியாது என்கிறார். இளைஞர் பட்டாளம் திரையரங்குகளில் அலைமோதியது!

வைஜெயந்திமாலாவின் இளமை, பாடல்களின் இனிமை, குறிப்பாக ‘காலையும் நீயே மாலையும் நீயே’ பாடலில் வைஜெயந்தி நிகழ்த்திக் காட்டிய நடன நுணுக்கங்கள், தங்கவேலு - சரோஜா ஜோடியின் நகைச்சுவை அதகளம், காஷ்மீர் லோக்கேஷன் என எல்லம் சரியான கலவையில் அமைந்துபோனதற்குப் பின்னால் ஒவ்வொரு துறையிலும் வேலையை இழைத்து இழைத்து வாங்கிய இயக்குநரின் திறமைதான் ஒளிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

 

திரை ஆலயம்!

ஸ்ரீதரின் திரைப் பயணத்திலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் கட்டப்பட்ட ஒரு திரை ஆலயம் என்றே ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை வருணிக்கலாம். தேன் நிலவின் வெற்றிக்குப் பிறகு, ஸ்ரீதர் முன்பே விவாதித்திருந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். கல்யான்குமார், தேவிகா, முத்துராமன், குட்டி பத்மினி ஆகியோரை அந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்தது சித்ராலயா நிறுவனம். அப்போது நடிகர் பாலாஜி ஒட்டடைக் குச்சிபோல் காணப்பட்ட ஓர் இளைஞரை கோபுவிடம் அழைத்து வந்தார். ''இவர் டிராமாவுல நடிச்சிட்டு இருக்கார்.

இவருக்கு உங்கப் படங்களில் கொஞ்சம் வாய்ப்பு கொடேன்.'' என்று அவருக்கு பாலாஜி சிபாரிசு கேட்டார். “கொஞ்சம் வாய்ப்புதான் கொடுக்க முடியும். ஆசாமியே கொஞ்சமாகத்தானே இருக்கார்.'' என்று கோபு பகடியாகச் சொல்ல, அந்த ஒல்லி குச்சி ஆசாமி பெரிய குரலில் சிரிக்க ஆரம்பித்தார். “சார்! நான் பார்க்க கொஞ்சமா இருக்கேனே தவிர, என் பெயர் செம புஷ்டியா இருக்கும். என் பெயர் குண்டு ராவ்.சில படங்களில் கொஞ்சம் கொஞ்சம் தலை காட்டியிருக்கேன்” எனச் சட்டென்று பதில் தந்த அவரை ஏற இறங்கப் பார்த்தார் கோபு. குரல் கணீர் என்று இருந்தது, அந்த நபருக்கு முகத்தில் அம்மை வடுக்கள் சிதறிக் கிடந்தன.

 

எதிர்பாராத அதிர்ஷ்டம்!

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், ஒரு கிராமத்துச் சாமானியன் வேடம் இருந்தது. கதைப்படி மனோரமா பேஷண்ட். அவரைக் காண மருத்துவமனைக்கு வரும் முறைமாப்பிள்ளை வேடம்தான் அது. அதை அந்த நபருக்குக் கொடுக்க நினைத்தார் கோபு. மருத்துவமனையின் வார்டு பாய் கதாபாத்திரம் நகைச்சுவை நடிகர் ராமராவுக்குத் தரப்பட்டிருந்தது. “இந்த நபரை முறைமாப்பிள்ளை வேடத்துக்குப் போடலாம்” என்று ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார் கோபு. “நீ சொன்னால் சரி!” என்று ஸ்ரீதர் சொல்லிவிட, ஒல்லி குச்சி இளைஞர் அந்த ரோலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மருத்துவமனைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கிய குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்புக்கு ராமராவ் வராததால், அந்த வார்டுபாய் கதாபாத்திரம் அந்த ஒல்லி குச்சி இளைஞருக்கே கிடைத்தது. இப்படி எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெற்ற அந்த ஒல்லி குச்சி இளைஞர் வேறு யாருமல்ல; ‘ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா’, ‘டாக்டர் திருப்பதி’ போன்ற கோபுவின் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் அவரது வசனங்களுக்கும் உயிர் கொடுத்து, பின்னாளில் ‘நகைச்சுவை சக்கரவர்த்தி’என்று புகழப்பட்ட நாகேஷ்!.

11CHRCJNENJIL

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா

 

 

தோழமையின் மற்றொரு உருவம்

எதிர்காலத்தில் தனது வசனங்களுக்கு நாகேஷ் உயிர் கொடுக்கப்போகிறார் என்று ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமாகிவந்த நேரத்தில் கோபு நினைக்கவில்லை. முதல் நாளில் இருந்தே இருவருக்கும் இயல்பாய் அமைந்துவிட்ட நகைச்சுவை உணர்வு, நாகேஷையும் கோபுவையும் நெருங்க வைத்துவிட்டது. முதல் முதலாக நாகேஷ் படப்பிடிப்பு அரங்கினுள் நுழைந்தபோது, “சார் !'' என்று கோபுவை அழைத்தார். மதியம், “கோபு சார்!'' என்று அழைத்தவர், மாலை ''கோபு'' என்று கூப்பிடத் தொடங்கினார். இரவு படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது, ''வரேண்டா...கோபு!'' என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டார்.

தோழமையின் மற்றொரு மறுஉருவமாக நாகேஷ் தெரிந்தார். கோபுவின் நகைச்சுவையை நாகேஷ் பெரிதும் ரசிக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக கோபுவின் பாடி லாங்குவெஜ் நாகேஷைப் பெரிதும் கவர்ந்து விட்டது. ‘காதலிக்க நேரமில்லை’, ‘வீட்டுக்கு வீடு’ போன்ற படங்களில் கோபுவின் தாக்கம் அவரது நடிப்பில் இருக்கும். கோபுவின் மீது உள்ள நெருக்கம், கடைசி வரையில் தொடர்ந்தது. திருவல்லிக்கேணியில் கோபுவின் வீட்டுக்குச் சென்று, அவரை மெரினா பீச் அழைத்துச் சென்று, மணிக் கணக்காக வம்படித்துக் கொண்டிருப்பார் நாகேஷ்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தொடங்கி, ‘போலீஸ்காரன் மகள்’, ‘சுமைதாங்கி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அவர் தொடர்ந்து நடித்துவந்தார். கோபு கூட்டணியில் ‘காதலிக்க நேரமில்லை’, ‘சாந்தி நிலையம்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘வீட்டுக்கு வீடு’, ‘கலாட்டாக் கல்யாணம்’, ‘அத்தையா, மாமியா’, ‘நில், கவனி, காதலி’, ‘சுமதி என் சுந்தரி’ என்று பல படங்களில் நடித்திருக்கிறார் நாகேஷ்.

‘நெஞ்சில் ஒரு ஆலய’த்தில் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸ் பாணியில் அங்க சேஷ்டைகளைச் செய்து நாகேஷ் நடிக்க, ஸ்ரீதருக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் தொடக்கத்தில், ஸ்ரீதரை கண்டு சற்றே பயந்தார் நாகேஷ். “அந்தப் பையன் நான் இருந்தால் நர்வஸ் ஆகிறான். நீ அவனை டைரக்ட் பண்ணிக்கோ'' என்று கூறிவிட்டு ஸ்ரீதர் வெளியே சென்று விட, கோபு சொல்லியபடி நாகேஷ் நடித்துக் கொடுத்து விடுவது வழக்கமானது.

 

கண்ணதாசனின் கோபம்

‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ பாடல் கம்போசிங்கில் அனைவரும் கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன், ' “தலைமுடியால் மலையைக் கட்டி இழுக்கிறமாதிரி இவருடன் போராட வேண்டியிருக்கிறது'' என்று கோபித்துக் கொள்ள, அதை யாரோ கண்ணதாசனிடம் வத்தி வைத்து விட்டார்கள். கண்ணதாசன் ஸ்டுடியோவுக்கு விரைந்து வந்தார் ஒரு கவிஞனுக்கே உரிய கோபத்துடன்...

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23839173.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 18: சொன்னது நீதானா விசு!

 

 
18chrcjNenchilorualayam

‘சொன்னது நீதானா’ பாடல் காட்சி

ஒரு நல்ல கதையைத் தாங்கிப் பிடிக்க உணர்வுபூர்வமான பாடல்கள் அமைந்துவிட்டால் அந்தப் படத்தின் வெற்றி எளிதாகிவிடும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கு மிகச் சிறந்த பாடல்களை அளித்துவிட்டது எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை. ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘சொன்னது நீதானா’ உட்படப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை உருகவைத்தது.

‘சொன்னது நீதானா’ பாடல் உருவான பின்னணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. பெரும்பான்மையான நேரத்தில் கண்ணதாசன் வரிகளை எழுதிக் கொடுத்த பிறகு மெட்டுப்போடுவதுதான் எம்.எஸ்.வியின் வழக்கம். ஸ்ரீதரும் பாடலுக்கான சூழ்நிலையை கண்ணதாசனிடம் முதல்நாளே கூறிவிட்டார். கண்ணதாசன் வருகைக்காகக் காத்திருந்தனர். இப்போது வருவார் அப்போது வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாளில் கண்ணதாசன் இரவாகியும் வரவே இல்லை. மன உளைச்சல் அடைந்த எம்.எஸ்.வி. “இவருடன் போராட வேண்டியிருக்கிறதே” என்று கோபித்துக்கொள்ள, அதைச் சிரமேற்கொண்டு கண்ணதாசனிடம் போய் இறக்கி வைத்து விட்டார்கள்.

 

இரண்டு தினங்கள் கழித்து கம்போசிங் வந்த கண்ணதாசன், கம்போஸிங் அறையில் நுழைந்து எம்.எஸ்.வியைக் கண்டதும் “விசு..! சொன்னது நீதானா! சொல் சொல்... என் உயிரே !” என்றபடி அவரை போய்க் கட்டிக்கொள்ள, “சூப்பர்…! இதையே பாட்டின் பல்லவியாகப் போட்டு விடுவோமே..!” என்று ஸ்ரீதர் சொல்ல, அப்போது பிறந்ததுதான் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘சொன்னது நீதானா’ பாடல்.

 

இயக்குநரின் மீடியம்

கேன்சர் நோயாளி கதாபாத்திரத்தில் முத்துராமன். அவர் மனைவியாக தேவிகா. அவருடைய முன்னாள் காதலன்தான் முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரான கல்யாண்குமார். முத்துராமன் கல்யாணகுமாரின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூவருக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

வெறும் 25 நாட்களில் ஒரே லொக்கேஷனில் எடுக்கப்பட்ட படம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் ரிலீஸ் ஆனதும் எங்கும் ஒரே பரபரப்பு. சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வளர்ந்துவரும் புதுமுகங்களைக் கொண்டு மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் ஒரு இயக்குநரின் மீடியம் என்பதை உணர்த்தி, பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

சென்னை, மதுரையில் 25 வாரங்கள் ஓடி சித்ராலயாவுக்கு பெரும் புகழைத் தந்தது. விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினார்கள். “இனி தரமான படங்கள் வெளிவர ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ உந்துதல் அளிக்கும்” என்று பாராட்டினார்கள்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளியாகி பத்து வாரங்கள் ஆகியும் திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை. இந்த நேரத்தில் சிவாஜி கணேசனும் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் இணைந்து எட்டயபுரத்தில் பாரதியார் விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையிலிருந்து ஒரு பேருந்து மற்றும் பத்து கார்களில் எட்டயபுரத்துக்கு நடிகர், நடிகையர், இயக்குநர்கள், வசனகர்த்தாக்கள் என சுமார் நூறு கலைஞர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்.

அதில் ஸ்ரீதரும் கோபுவும் அடக்கம். மதுரை நகரை அடைந்ததும் சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று கலைஞர்கள் அனைவரும் திறந்த ஜீப்களில் ஏறிக்கொண்டு மதுரை நகரை வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஒரு ஜீப்பில் கே.ஏ.தங்கவேலு, ஸ்ரீதர், கோபு, நாகேஷ், எஸ். வி. சுப்பையா ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கே.ஏ.தங்கவேலு பெரிய காமெடி நடிகர். கூட்டத்தினர் இவர்கள் சென்ற ஜீப்பை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வந்து “அதோ பாருடா நாகேஷ்..!” என்று ஆச்சரியமாய்க் கூவியபடி நாகேஷின் கைகளைப் பற்றி குலுக்கத் தொடங்கினர். அருகில் இருந்த தங்கவேலு, சுப்பையா ஆகிய இருவரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தங்கவேலுவின் முகம் இருண்டுபோனது.

 

18chrcjMSV%20kannadasan

எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனும்

படமும் பாடமும்

எட்டயபுரத்தைச் சென்றடைந்ததும் அனைவரும் ஒரு பங்களாவில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது தங்கவேலு கோபு இருந்த அறைக்கு வந்தார். கண்களில் நீர் மல்க, “சடகோபா…! ‘கல்யாணபரிசு’ வெற்றி விழாவை அஞ்சு பெரிய நகரங்கள்ல கொண்டாடினோம். என்னை ரசிகர்கள் எப்படி மொய்ப்பாங்க?” என்று கேட்டார். “ஆமா வேலு அண்ணே! உங்கக் கையைப் போட்டிபோட்டு குலுக்குவாங்க. அதுல யாரோ ஒரு ஆள், KAT என்று உங்க பெயர் பொறித்த தங்க மோதிரத்தைக் கழற்றிட்டுப் போய்ட்டானே.. அதை மறப்பேனா?” என்று ஜோக்கடித்து அவரது கலக்கத்தைப் போக்க முயன்றார் கோபு.

“ஆனா இன்னைக்கு நடந்ததையும் நீங்க பார்த்தீங்கதானே… ஒண்ணு சொல்றேன்…. ‘நெஞ்சில் ஓர் ஆலய’த்துல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்ச நாகேஷைப் பார்த்து, “அதோ பாருடா நாகேஷுனு ரசிகர்கள் கத்தறாங்க. இதுவரை 200 படங்கள்ல நடிச்சே என்னை நொடிப்பொழுதுல மறந்துட்டாங்க. இதுதான் சினிமா. சினிமால கிடைச்ச அந்தஸ்து, புகழ் நிரந்தரம்னு நினைக்கக் கூடாது. இன்னைக்கு நான் கண்டு அனுபவிச்ச காட்சி, எனக்குப் பெரிய பாடம்....அதிர்ச்சியும் கூட!” என்றார் தங்கவேலு.

தங்கவேலு சிறந்த நகைச்சுவை நடிகர். சிறந்த நாடகக் கலைஞர். அவர் நடிக்காத நகைச்சுவைப் படங்களே இல்லை. ‘ரம்பையின் காதல்’, ‘நான் கண்ட சொர்க்கம்’, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்று அவரது திரை நகைச்சுவை பலவித பரிமாணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. வசன உச்சரிப்பில் நகைச்சுவை உணர்வைப் பொதிந்து கொடுத்த முதல் ஆளுமை.

பண்பட்ட மனிதர். அவர் இப்படி மனம் புண்பட்டு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியது திரைப் புகழ் குறித்த நெருடலை ஏற்படுத்தியதாக நினைவுகூர்கிறார் கோபு. சினிமா புகழ் என்பதே மாயை என்பதை உணராததன் விளைவாக இன்று பல முன்னாள் நடிகர், நடிகையர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என்கிறார் கோபு.

 

பம்பாய் நோக்கி

எட்டயபுரத்தில் கோபுவுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. பிரபல நாதஸ்வர வித்துவான் காருக்குறிச்சி அருணாசலத்தின் வீடு எட்டயபுரத்தில் இருந்தது. ஜெமினி கணேசன் அவரைப் பார்க்க திட்டமிட்டு இருந்தார். சங்கீத நாட்டம் உள்ள கோபுவையும் உடன் அழைத்துக்கொண்டு அவரது இல்லம் சென்றார் ஜெமினி.

காருக்குறிச்சியாருடன் ராகங்களைப் பற்றி கோபு ஆர்வம் பொங்க பேச… “தம்பிக்கு நல்ல சங்கீத ஞானம்! யார் இவர்?” என்று ஜெமினியிடம் கேட்டார் காருக்குறிச்சியார். “சங்கீதம் மட்டுமில்ல, நல்ல ஹாஸ்ய ராஜன். இவன் இருக்கற இடம் கலகலன்னு இருக்கும். சித்ராலயா ஸ்ரீதரோட சினேகிதன்!” என்று ஜெமினி அறிமுகப்படுத்தினார்.

எட்டயபுரத்தில் பாரதி விழாவை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்கள் ஸ்ரீதரும் கோபுவும். ஒருநாள் கோபுவை அழைத்த ஸ்ரீதர், “நாம நாளைக்கே பம்பாய் போறோம். ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனாகுமாரி, மெஹ்மூத் எல்லோருக்கும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கதையைக் கூறி ஒப்பந்தம் செய்யப்போறோம்.” என்றார். கோபு மலைத்துப் போய் நின்றார்.

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23916201.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 19 படகு காரில்… பம்பாய் நகரில்…

 

 
27CHRCJCHIRRALAYA15

பம்பாயில் வெளியீட்டுக்கு முன் நடந்த ‘ஏக் தில் மந்திர்’ பட சிறப்புக் காட்சியில் பங்கேற்று ஸ்ரீதரைப் பாராட்டுகிறார்கள் ஜெமினி, சாவித்திரி தம்பதி.   -  THE HINDU

“உடனே புறப்படு கோபு! பம்பாயிலிருந்து அழைப்பு வந்திருக்கு. ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனாகுமாரி, மெஹ்மூத் எல்லோருக்கும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கதையைச் சொல்லி அவங்களை ஒப்பந்தம் செய்யப் போறோம்” என்று ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போய் நின்றார் கோபு. ‘பைஜூ பாவ்ரா’, ‘சாஹிப்’, ‘பீபி அவுர் குலாம்’ போன்ற படங்களைப் பார்த்து மீனாகுமாரியின் அபிமானியாக இருந்த கோபுவுக்கு, தான் அவர் எதிரே அமர்ந்து கதை சொல்லப் போகிறோம் என்றால் மலைப்பு ஏற்படாமல் இருக்குமா?

 

முட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்

   
 

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இந்தி மறு ஆக்கத்துக்கு ‘தில் ஏக் மந்திர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டது. தமிழைப் போலவே இந்தியிலும் இருபத்தி ஐந்தே நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது. இதன் இசையமைப்பாளர்கள், ஷங்கர் - ஜெய்கிஷன். ராஜ்கபூரின் ‘ஆவாரா’ படத்துக்குப் பிறகு இந்த இரட்டை இசையமைப்பாளர்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர்.

‘தில் ஏக் மந்திர்’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இசையமைப்பாளர் இருவருக்கும் இடையே விரிசல் உருவானது. விஸ்வநாதன் - ராமாமூர்த்தியைப் போல் பிரிந்துவிட முடிவுசெய்துவிட்டனர். அபாரத் திறமைசாலிகளான இவர்கள் பிரிந்தால் ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் இசையாக்கம் பாதிக்கும் என்று கவலைகொண்டது சித்ராலயா. ஆனால், பிரிந்துபோவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அப்போது ராஜ்கபூரிடம் தனது பிரச்சினையை ஸ்ரீதர் எடுத்துச் சொல்ல, உடனே ஷங்கர், ஜெய்கிஷன் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அவ்வளவு பெரிய நடிகர் கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை. தன்னை நம்பி வந்துவிட்ட ஸ்ரீதருக்கு உதவியே தீர வேண்டும் என்று முடிவுசெய்த ராஜ்கபூர், இசையமைப்பாளர்கள் இருவருக்கும் ஒரு யோசனை சொன்னார்.

 

ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனை

“நான் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ‘ஷங்கர் –ஜெய்கிஷன்’ கூட்டணி என்பது வணிகரீதியாக ஒரு பிராண்ட் நேம் ஆகி விட்டது. இசை: ஷங்கர் - ஜெய்கிஷன் என்ற உங்கள் பெயரைப் பிரிக்காமல் அப்படியே வைத்திருங்கள். ஒரு படம் ஒப்பந்தமாகும்போது, படத்தில் உள்ள பாடல்களைச் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். படத்தில் ஆறு பாடல்கள் என்றால், ஷங்கர் மூன்று பாடல்களுக்கும் ஜெய்கிஷன் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கட்டும்.

நீங்கள் இருவரும் நேருக்கு சந்தித்துக்கொள்ளவே வேண்டாம். பகைமையும் பாராட்ட வேண்டாம். ஈகோ பிரச்சினை இல்லாமல் உங்கள் பெயரைப் பிரிக்காமல், தனித்தனியாக இசை அமையுங்கள்” என்று ராஜ்கபூர் சொன்ன சமரச யோசனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இந்த முறையிலேதான் ‘தில் ஏக் மந்திர்’ படத்துக்கு இசையமைக்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஜெய்கிஷன் பார்ப்பதற்கு அழகான கல்லூரி மாணவரைப் போலவே காட்சிதருவார். அவர் ஸ்ரீதர்-கோபு இருவரையும் சந்திக்க பம்பாயின் சர்ச்கேட் பகுதியில் அவர்கள் தங்கியிருக்கும் ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார். ஜெய்கிஷனை அடையாளம் கண்டுகொள்ளும் கல்லூரி மாணவிகள் அவர் காரை விட்டு இறங்கியதுமே மொய்த்துவிடுவார்கள். அவ்வளவு விசிறிகள்!

27chrcj%20shankar%20and%20jaikishan

ஷங்கர் மற்றும் ஜெய்கிஷன்

 

 

படகு காரில் வீதியுலா!

ஜெய்கிஷனுக்கு கோபுவுடன் நெருக்கம் உருவாகக் கர்னாடக இசை, இந்துஸ்தானி இசையில் கோபுவுக்கு இருந்த ஆர்வமும் அறிவும் காரணமாக அமைந்துவிட்டன. ரஞ்சினி ராகத்தைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த கோபுவைப் பாடும்படி கேட்டு மகிழ்வார் ஜெய்கிஷன். கோபு – ஜெய்கிஷன் நெருக்கத்தையும் கோபுவுக்கு இருந்த இசை ஞானத்தையும் கண்டு பாடல் பதிவுப் பொறுப்பை கோபுவிடம் கொடுத்து விட்டு சென்னையில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

கோபு தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குக் காலையிலேயே வந்து, தனது சவுண்ட் ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போவார் ஜெய்கிஷன். பாடல் வேலைகள் முடிந்தபின் இரவு உணவுக்கு மரைன் டிரைவ் பகுதியில் இருந்த தன் வீட்டுக்கு கோபுவை அன்புக் கட்டளையிட்டு அழைத்துச்சென்றுவிடுவார். அந்த அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

எதிர்பார்த்தபடி இசை சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்தியாக முடிந்துவிட்டால் ஜெய்கிஷன் கோபுவைப் படகு போன்ற கூரை மடக்கப்பட்ட தன் காரில் ஏற்றிப் பக்கத்தில் அமர வைத்துக் கொள்வார். இடது கையால் காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு, பெண்கள் கல்லூரியின் பக்கமாகப் போய் கல்லூரி முடிந்து திரும்பும் மாணவிகளுக்குக் கையசைத்தபடி செல்வார். அவர்கள் “ஹோய்ய்ய் ஜெய்கிஷன்…” என்று குரலெடுத்து கத்தி ஆராவரம் செய்வதை வெகுவாக ரசிக்கும்போது ஜெய்கிஷன் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

கோபு பம்பாயில் தங்கியிருந்தபோது, இம்மாதிரி வீதியுலாக்களுக்கு அவரை அவ்வப்போது அழைத்துச் சென்றிருக்கிறார் ஜெய்கிஷன். “வேலை இல்லாமல் செங்கல்பட்டில் சுற்றிக்கொண்டிருந்த நான், புகழின் உச்சியில் இருந்த ஒரு இசையமைப்பாளரின் பக்கத்தில் அமர்ந்தபடி பம்பாய் வீதிகளில் உலா வந்ததைத் தன்னால் மறக்கவே முடியாது” என்று நினைவுகூர்கிறார் கோபு.

 

கோபு, சேட் ஆன கதை

‘தில் ஏக் மந்திர்’ படத்தில் ராஜேந்திரகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மீனாகுமாரி. இருவருமே அப்போது புகழின் சிகரத்தில் இருந்தார்கள். அவர்களுடன் பணியாற்றியது ஒரு கனவு போல் இருந்தது கோபுவுக்கு. சென்னை விஜயா ஸ்டுடியோவில்தான் ‘தில் ஏக் மந்திர்’ படப்பிடிப்பு நடந்தது. மீனாகுமாரி, ராஜேந்திரகுமார், ராஜ்குமார், நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான மஹ்மூத் ஆகியோர் தங்குவதற்காகப் படப்பிடிப்பு நடக்கும் தளத்தின் எதிரிலேயே ஒரு மினி மேக்-ஷிப்ட் பங்களாவை நிர்மாணித்திருந்தது சித்ராலயா.

27chrcjdil%20ek%20mandhir

‘தில் ஏக் மந்திர்’

அகில இந்திய நட்சத்திரங்களை இயக்குகிறோம் என்ற கவனத்துடன் தயாரிப்புப் பணிகள் முழுவதையும் கோபுவிடம் தந்துவிட்டு முழுக் கவனத்தையும் இயக்கத்தில் செலுத்திக்கொண்டிருந்தார் ஸ்ரீதர். மீனாகுமாரி தனக்கு எது தேவை என்றாலும் ‘கோபு சேட்’என்று அழைத்தபடி கோபுவிடம்தான் வருவார்.

பிழியப் பிழிய அழுது உணர்ச்சிகளைக் காட்டுவதில், தென்னாட்டின் சாவித்திரிக்குச் சரிசமமாக வட நாட்டில் மீனாகுமாரியின் கொடிதான் பறந்தது. மறுநாள் சோகக் காட்சிகளின் படப்பிடிப்பு என்பது முதல்நாள் மாலை சீன் பேப்பரைக் கையில் கொடுத்ததுமே தெரிந்துவிடும். சீனைப் படித்துச் சொன்ன நிமிடத்திலிருந்து தன்னைச் சோக நினைவுகளில் மூழ்கடித்துக்கொண்டு, சோகமாகவே காட்சி தருவார். காட்சி படமாக்கப்பட்டு படச்சுருள் ஓடுகிற சத்தம் மட்டுமே கேட்கும் செட்டில், ஸ்ரீதர் கட் என்று சொன்ன பிறகும் சற்று நேரம் அழுது விட்டுத்தான் ஓய்வார் மீனாகுமாரி.

அப்படிப்பட்ட சோககுமாரியைத் தனது மிமிக்ரி திறமையால் ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், மாதிரியெல்லாம் பேசிகாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பார் கோபு சேட். மீனாகுமாரிக்கும் தனிப்பட்ட முறையில் நிறையப் பிரச்சினைகள். அவற்றையெல்லாம் மறக்க அவ்வப்போது கோபுவின் வாயைக் கிண்டுவார். கோபுவும் மீனாகுமாரியும் மட்டும் தனியாகப் பேசிச் சிரித்துகொண்டிருப்பதை மொத்த செட்டும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.

படம் தயாராகி பம்பாயில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சிரத்தையுடன் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதரையும் கோபுவையும் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள் ஜெமினி –சாவித்திரி தம்பதி. ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் வெற்றி, அகில இந்திய அளவில் ஸ்ரீதருக்குப் புகழைத் தேடித் தந்தது. ‘தில் ஏக் மந்திர் –வாலா’ என்று இந்திப் படவுலகினர் ஸ்ரீதரை அழைக்கத் தொடங்கினர்.

ஸ்ரீதரை ஒப்பந்தம் செய்வதற்காகப் பெட்டி நிறைய பணத்துடன் சென்னைக்கு வந்து அவரது வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், ஸ்ரீதர் இந்தி பட மோகத்தில் விழவில்லை. முதலில் நான் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் என்று கூறி வருபவர்களைத் திருப்பி அனுப்பினார். மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டு, சாவகாசமாக ஸ்ரீதரும் கோபுவும் நாடகம் பார்த்து பொழுதைக் கழித்து கொண்டிருந்தார்கள்…

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23979151.ece

Link to comment
Share on other sites

சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்!

 

 
chithralaya
01CHRCJPOLICEKARANMAGAL1

‘போலீஸ்காரன்’ மகள் படத்தில் மனோரமா, பாலாஜி, சந்திரபாபு   -  THE HINDU ARCHIVES

01CHRCJPOLICEKARANMAGAL2

‘போலீஸ்கரன் மகள்’ படத்தில் முத்துராமன், விஜயகுமாரி, சகஸ்ரநாமம்   -  THE HINDU

01chrcjDUO

கோபு - ஸ்ரீதர்

 
 

இந்திப் படவுலகில், ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்புகளை ஸ்ரீதர் மறுத்தார். அத்தனைபெரிய வெற்றிக்குப் பின்னர் பரபரப்பு காட்டாமல் ஸ்ரீதரும் கோபுவும் நாடகங்களைப் பார்த்து அமைதியாகப் பொழுதைப் போக்கி வந்தார்கள். ஒருநாள் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக்குழு நடத்திவந்த நாடகம் ஒன்றைக் காணச் சென்றிருந்தனர். ‘மணிக்கொடி’ இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையா எழுதியிருந்த அந்த நாடகத்தின் கதை ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துப்போனது. நாடகம் முடிந்ததும் சகஸ்ரநாமத்தைச் சந்தித்த ஸ்ரீதர், அதைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கேட்டார். உடனே இசைவு தெரிவித்ததோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார் சகஸ்ரநாமம். அந்தப் படம்தான் ‘போலீஸ்காரன் மகள்’.

 

 

மதராஸ் பாஷைக்கு அப்ளாஸ்!

சகஸ்ரநாமம், விஜயகுமாரி, முத்துராமன், பாலாஜி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டம். சொந்த மகனான முத்துராமனையே கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துவரும் காவலராக சகஸ்ரநாமம் நடித்தார். விஜயகுமாரிதான் அந்த நேர்மையான போலீஸ்காரரின் மகள். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும், இளம் தென்றலை கேட்கின்றேன், உட்படப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞர் கண்ணதாசன், ‘கண்ணிலே நீர் எதற்கு...காலமெல்லாம் அழுவதற்கு’ என்றப் பாடலை பத்தே நிமிடங்களில் எழுதி முடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்கு மெட்டமைத்தார், ராமமூர்த்தி அந்தப் பாடலுக்கு இசைக்கோவை அமைத்தார். சந்திரபாபு சென்னைவாசிகளே வியக்கும் வண்ணம் சென்னை வட்டார வழக்கில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். அதற்காகவே சந்திரபாபுவுக்கு திரையரங்கில் ஸ்பெஷல் அப்ளாஸ்கள் கிடைத்தன. சந்திரபாபு – மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு.

சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்த முதல்நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, “கோபு, ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?'' என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார். “திர்லகேணி வாத்தியாரே!'' கோபு மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார்.'' ஆங்ங்…அதான பார்த்தேன்… பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது.! மதராஸ் பாஷை பிறந்ததே. ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்‌ஷா ஸ்டாண்டுலதான் அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?'' என்று கேட்டார் சந்திரபாபு.

ஆமோதித்த கோபுவுக்கு மதராஸ் பாஷையில் நாட்டம் பிறந்ததே என்.எஸ்.கிருஷ்ணனால்தான். ”மதராஸ்ல ரிக்‌ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனா… நேத்து உன்னே காணும்.? என்று. அதற்கு ''உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!'' என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!'' என்று என்.எஸ்.கே தனது கிந்தனார் காலாட்சேபத்தில் நகைச்சுவையாகக் கூறுவார்.

 

உயரத்தை இழந்த உன்னதக் கலைஞன்

கோபு எதிர்பார்த்தபடியே சந்திரபாபு அருமையாக சென்னை வட்டார வழக்கில் பேசி நடித்தார். ஆனால் நிஜவாழ்வில் பிரிட்டிஷ் உச்சரிப்புடன் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ந்தவர். மிகச்சிறந்த நடனக்கலைஞர். திரை உலகத்துக்கே உரித்தான ‘அண்ணே’ என்று உறவு கொண்டாடி அழைப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பெரிய நடிகர்கள் என்றாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபாபு, கோபு ஆகிய மூவரிடையே நெருக்கமான நட்பை உருவாக்கியது அவர்களிடம் இருந்த இசை சார்ந்த திறமையும் ரசனையும்.

‘போலீஸ்காரன் மகளில்’ இடம்பெற்ற ‘பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது’ பாட்டை மிகவும் அற்புதமாக அனுபவித்துப் பாடினார் சந்திரபாபு. நடிப்பின் நடுவே அங்க சேஷ்டைகளை செய்வது போல், பாட்டின் நடுவேயும் குரைப்பது, குழைவது என சந்திரபாபு தனது ‘எக்ஸ்ட்ரா’க்களைக் கொடுக்க எம்.எஸ்.வி அனுமதிப்பார். அவர்கள் இருவரிடையே அப்படி ஒரு நெருக்கம். அவர் நடித்திருந்த சில பாத்திரங்களை வேறு யாராலும் ஏற்று நடித்திருக்கவே முடியாது. அவ்வளவு உன்னதமானக் கலைஞன். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கை அடுத்த கட்ட உயரத்தைத் தொட அவரை அனுமதிக்கவில்லை.

 

மன்னிப்புக் கேட்ட சகஸ்ரநாமம்

‘போலீஸ்காரன் மகள்’ படப்பிடிப்பில் சுவையான அனுபவங்கள் உண்டு. சகஸ்ரநாமத்திடம் நடிப்பு சார்ந்து ஒரு பழக்கம். நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், மகள் விஜயகுமாரியை பெல்டினால் விளாசுவது போன்று காட்சி. விஜயகுமாரி அற்புதமாக முகபாவங்களைக் கொடுத்து நடித்திருந்தார். ஸ்ரீதர் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

“கோபு! விஜயகுமாரி என்னமா ஆக்ட் பண்ணிட்டாங்க! சகஸ்ரநாமத்துகிட்ட பெல்டால் அடிவாங்கற காட்சியில் பிச்சு உதறிட்டாங்க!'' என்றார். “பிச்சு உதறினது விஜயகுமாரி இல்லே ஸ்ரீ… சகஸ்ரநாமம்தான்! அவர் நிஜமாவே விஜயகுமாரியை பெல்டால் அடிச்சுட்டாரு. பாவம், அவங்க பொறுத்துகிட்டு நடிச்சாங்க'' என்று கோபு சொன்னதும்தான் அருகில் நின்றிருந்த சகஸ்ரநாமத்துக்கே தாம் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிட்டதை உணர்ந்தார். அதற்காக விஜயகுமாரியிடம் மன்னிப்பு கேட்டார் அந்த மகா கலைஞர். ‘போலீஸ்காரன் மகள்’ படமும் ஸ்ரீதருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

அலறிய ஸ்ரீதர்

‘போலீஸ்காரன் மகள்’ வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதர் ஒருநாள் திருவல்லிக்கேணியில் இருந்த கோபுவின் வீட்டுக்கு வந்தார். அவரை அழைத்துக்கொண்டு கடற்கரை ஐ.ஜி அலுவலகம் எதிரில் காந்தி பீச்சுக்கு போனார். சிலகாலமாகவே கோபுவின் மனதில் ஒரு ஆசை. அதை ஸ்ரீதரிடம் சொல்வதற்கு அதுவே நல்ல தருணம் என்று ஸ்ரீதரிடம் அதைக் கேட்டார்.

“ஸ்ரீ… நாம் ஏன் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை எடுக்கக்கூடாது.'' என்று கோபு கேட்டதும் ஸ்ரீதர் பதறிப் போனார். '' ஜோக் அடிக்காதே கோபு! ‘கல்யாண பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ போல கனமான படங்களைக் கொடுத்துட்டு நான் போய் நகைச்சுவை படம் எடுக்கிறதாவது, நோ சான்ஸ்!'' என்றார்.

“நீதானே என்கிட்டே சொன்னே… வாழ்க்கைன்னா ரிஸ்க் எடுக்கணும்னு! அதை நம்பித்தானே நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த ரிஸ்க்கையும் எடுத்து பாரேன்!'' கோபு சொல்லச் சொல்ல, ஸ்ரீதர் பரிசீலிக்கும் தொனியில் சிந்தனையை ஓடவிட்டவர், “சரி.. முயன்று பாப்போம்” என்ற படி ஸ்ரீதரும் கோபுவும் நகைச்சுவை கதை ஒன்றை அங்கேயே அப்போதே அலைகளுக்கு அருகில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விவாதத்தில் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்ற வகையில் ஒரு பெரிய திருப்புமுனைக்கு அஸ்திவாரமாக அமைந்த திரைப்படத்துக்கான திரைக்கதை பிறந்தது. அந்தப் படம்தான், இன்றுவரை ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’.

சிரிப்பு தொடரும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24044321.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதர் கோபுவுடன் அவர்களோடு இணைந்திருந்த பலரையும் பல சம்பவங்களையும் சேர்த்து நகர்த்திக் கொண்டு போகிறது தொடர். தொடருங்கள்  ஜி ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 21: நடிக்கத் தெரியாத நாகேஷ்!

 

 
08CHRCJKADALIKKANERAMILLAI

‘காதலிக்க நேரமில்லை’ சச்சு, நாகேஷ்

கா

ந்தி கடற்கரையில் அலைகளின் அருகே அமர்ந்திருந்தனர் கோபுவும் ஸ்ரீதரும். ஸ்ரீதர் கதை சொல்லத் தொடங்கினார். “இரண்டு சகோதரிகள். அவர்களுடைய காதலர்கள் இருவரும் நண்பர்கள். பெண்களின் தந்தை செல்வந்தர், அந்தஸ்து பார்ப்பவர். தங்கையின் காதலன், ஏழைப் பள்ளி வாத்தியாரின் மகன். இதனால் அந்தஸ்து குறுக்கிடுகிறது. ஏழை நண்பனுக்காகப் பணக்கார இளைஞன் அவனது தந்தையைப்போல் வேடமிட்டு பெண்களின் தந்தையை ஏமாற்றுவதற்கு முதியவர் வேடம் போடுகிறான்.

 
 

இது எப்படியிருக்கும்?” என்று கேட்டு ஸ்ரீதர் பிரேக் பிடித்து கதையை நிறுத்த, “ வேஷம் போடும் நண்பனின் அப்பாவே அந்தப் பெண்களின் அப்பாவுக்கு நண்பனாக வருகிறார்” என்று கோபு ட்விஸ்ட் கொடுக்க, ஸ்ரீதர் சிரித்து விட்டு “நல்ல திருப்பம்” என்றார்.

நண்பனின் நகைச்சுவை பகுதிகளை தனது காதல் பகுதிகளோடு இணைத்து, கதை, வசனம் ஸ்ரீதர்-கோபு என்று சரிசமமாகப் படத்தின் தொடக்கத்திலேயே டைட்டில் போட்டு கோபுவை அங்கீகரிக்கவும் செய்தார் ஸ்ரீதர். தன்னுடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீதரின் இந்தச் செயலை இன்றுவரை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் கோபு. பால்ய நண்பன்தான் என்றாலும் தொழிலில் கோபு தனித்துவம் பெறவேண்டும் என்கிற எண்ணத்தை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வெளிப்படுத்தினார்.

 

ஓஹோ புரொடக்‌ஷன் செல்லப்பா

திரைப்பட இயக்குநராக முயலும் நாகேஷ் சச்சுவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும் காட்சிதான் இந்தப் படத்துக்கு கோபு எழுதிய முதல் காட்சி. எஸ்டேட் முதலாளி பாலைய்யாவின் மகன் செல்லப்பாவாக நாகேஷ். அவர் (சச்சுவிடம்): மீனா! இப்ப காதலன் வந்து உன் முன்னாடி நிக்கிறான். நீ என்ன செய்வே?'' சச்சு: இரண்டு கையாலேயும் மூஞ்சியை மூடிப்பேன் சார்!''

08chrcjKathalikkaneramillai%20%203

பாலைய்யாவிடம் கதை கூறும் நாகேஷ்

நாகேஷ்: பலே! புதுமுகம்னு உன்னை போட்டிருக்கேன். சுத்தமா ரெண்டு கையாலேயும் மூஞ்சியை மறைச்சிக்கோ.. ஒரு பயலும் உன் மூஞ்சிய பார்க்கக் கூடாது” என்று நாகேஷ் நொந்துகொள்ளும் அந்தக் காட்சியில் திரையரங்கம் அதிர்ந்தது. கல்லூரி முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் நாகேஷின் சகோதரிகள் காஞ்சனாவும், ராஜஸ்ரீயும் அவரைக் காண வருவார்கள். அப்போது நாகேஷிடம், “படம் எடுக்க போறீயாமே?'' என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள்.

“இதென்ன... ஓஹோ புரோடெக்‌ஷன்ஸ்? பெயர் சகிக்கலே!'' என்பார் காஞ்சனா. ''படத்தைப் பார்க்கிற ஒவ்வொருத்தனும்.. ஓஹோ..ஓஹோனு சொல்லணும். அதனால இப்படியொரு பெயர். இவ்வளவு பேசறீங்களே. கடைசியா நீங்க பார்த்த படம் என்ன?'' என்று கேட்பார் நாகேஷ். அதற்கு காஞ்சனா, ''வி டோன்ட் சி டமில் பிலிம்ஸ். வி சி ஒன்லி இங்கிலிஷ் பிக்சர்ஸ்.'' என்பார். அதற்கு நாகேஷ், ''இப்படி சொல்றதுதான் இப்ப ஃபேஷன்--ஆகிப்போச்சு இல்லே. என் படம் வெளிவரட்டும். ஒவ்வொரு இங்கிலிஷ்காரனும் ‘வி டோன்ட் சி இங்கிலிஷ் பிச்சர்ஸ்.. வி சி ஒன்லி தமிழ் பிக்சர்ஸ்'னு சொல்லப் போறானா இல்லையா பாரு” என்று செல்லப்பா நாகேஷ் தளராமல் கூறுவார். சகோதரிகள் கிண்டல் செய்து விட்டு போய்விட, நாகேஷ், “இவங்க கிடக்குறாங்க. யூ கோ அஹெட் செல்லப்பா..!'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வார்.

 

திருவல்லிக்கேணி தேடி..

இந்தப் படத்துக்குப் பிறகு மளமளவென்று படங்கள் ஒப்பந்தமாகி ஒரு பெரிய நிலைக்கு வந்து விட்டார் நாகேஷ். ''கோபு! எந்த முகூர்த்தத்துல எனக்கு யூ கோ அஹெட் செல்லப்பானு எழுதினியோ, என் வாழ்க்கை கோயிங் எஹெட்டாதான் இருக்கு.!'' என்று பெருமையுடன் கூறுவார் நாகேஷ். தனது ஓய்வு நேரங்களில் திருவல்லிக்கேணிக்கு சென்று கோபுவுடன் கழிப்பார். இருவருமாக மெரினா கடற்கரைக்கு சென்று அளவளாவிக்கொண்டிருப்பார்கள். தனது மறைவுவரை, கோபுவிடம் ஆத்மார்த்தமான நட்பையும் மதிப்பையும் கொண்டிருந்தார் நாகேஷ். ‘காதலிக்க நேரமில்லை’ பட அனுபவங்களைக் கூறுவதற்கு முன்பாக நாகேஷை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து போனார் கோபு.

கோபுவும் நாகேஷும் உரையாட அமர்ந்துவிட்டால் கவாலி பாடல் போல மாறி மாறி ஜோக் அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் சிக்ஸர்களாகவே கேட்பவர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியாது. ஒரு முறை கோபுவை காண அவரது வீட்டுக்கு தனது காரில் வந்தார் நாகேஷ். அப்போது பார்த்தசாரதி கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. வைதீக வைணவர்கள் சிலர் கோபுவின் வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்தனர். காரை நிறுத்திய நாகேஷ், கோபுவின் வீட்டு வாயிலில் கூட்டமாக அமர்ந்திருந்த இவர்களை கண்டு தயங்கி காரை நிறுத்தாமல் அவரது வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்.

சிறிது நேரம் கழித்து கோபுவிற்கு போன் செய்தார். ''என்னடா கோபு! நான் உன் வீட்டுக்கு வந்தேன். வாசலுல ஒரே குருக்கள் கூட்டம்.!'' என்றார். ''கோவில் உற்சவம் நடக்குது. என் வீடு மாடவீதில இருக்கறதால, அவங்க காலாற உட்கார்ந்துட்டு போவாங்கடா. நீ பாட்டுக்கு வழி கேட்டுகிட்டு உள்ளே வரவேண்டியதுதானே'' என்றார் கோபு. உடனே நாகேஷ் ஜோக் அடித்தார்.

''கோபு, நம்ம சினிமா உலகம் மோசமானது. கோபு வீட்டு வாசலுல ஒரே அய்யர் கூட்டம்னு கோடம்பாக்கத்துல போய் சொல்லிட்டா போதும், அண்ணன் காலி, திண்ண ரெடின்னு அவனவன் கையில மலர் வளையத்தோட வந்துடுவான். இனிமே அவங்களை அப்படி உட்கார விடாதே!'' என்றார். ‘நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மாபெரும் கலைஞன் நாகேஷ்” என்று நாகேஷின் மரணத்தன்று இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து கோபுவின் மனதை வருத்தியது

மற்றொருமுறை, காரில் நாகேஷும், கோபுவும் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். நாகேஷின் கையில் பரிசுப்பொருள் ஒன்றுமே இல்லை. கோபு தனது கையில் பெரிய கிஃப்ட் பார்ஸல் ஒன்றை வைத்திருந்தார். ''என்னடா, நாகு! பெரிய வி.வி.ஐ.பி கல்யாணத்துக்கு போறோம். கையை வீசிட்டு வர்றே.. நீ கிப்ட் பண்ணலியா?'' என்று கோபு கேட்டதும் தனது சட்டை பையிலிருந்து ஒரு கவரை எடுத்துக் காட்டினார். ''இதோ இருக்கே நூறு ரூபாய்.!'' என்றதும் கோபு திகைத்தார். ''என்னடா நாகு! நூறு ருபாய்னு சொல்றே. அவர் எவ்வளவு பெரிய வி.ஐ பி. உன்னோட அந்தஸ்துக்கு நூறு ரூபாய்தானா, அட்லீஸ்ட் ஒரு பொக்கே கொடுத்தாலாவது கவுரவமா இருக்கும்!'' என்றார் கோபு.

 

கறார் நாகேஷ்

'' லைட்பாய், ஸ்டூடியோ தொழிலாளி எல்லாரும் எனக்கு ஒண்ணுதான். யாரா இருந்தாலும் ஸ்டாண்டர்ட்டா நூறு ரூபாய்தான்..!'' எல்லாரும் நேரே வந்து ஆப்பிள் பழம் வச்சு கல்யாணத்துக்கு கூப்பிடறாங்க. நாகேஷ்ன்ற இந்தக் கலைஞன் அவங்க வீட்டு விசேஷத்துக்கு வந்து தரிசனம் தர்றது எத்தனைபெரிய மொய்?” என்றாரே பார்க்கலம். கோபு அதன்பிறகு வாயைப்பொத்திக்கொண்டார். தயாரிப்பாளர்களிடத்தில் நாகேஷ் மிகவும் கறார். பணபாக்கி வசூலிப்பதில் மிகவும் சமர்த்தர். அப்படிப்பட்டவர் கோபு இயக்கிய அல்லது எழுதிய படங்களாக இருந்தால் அந்த கண்டிப்பு இருக்காது. ஊதியத்தையும் குறைத்துக்கொண்டு “கோபு படம் என்பதால் கொடுத்ததை வாங்கிக்கொள்கிறேன்” என்பார்

''கண்ணன் தேரோட்டியதால் அர்ஜுனனுக்கு வெற்றிடா… கோபு. நீ எனக்குக் கதை, வசனம் எழுதினா, அது நிச்சயம் எனக்கு வெற்றிதாண்டா.'' என்று வசனத்தைப் படிக்கும்போதே சிலாகித்து பேசுவார் நாகேஷ். அந்த அளவுக்கு திரைப்பயணத்தில் நாகேஷை ராக்கெட் ஏறிப் பறக்க வைத்துவிட்டது ‘காதலிக்க நேரமில்லை’. அப்பா பாலைய்யாவிடம் செல்லப்பா கதை சொல்லும் காட்சியில் திரையரங்குகள் கிடுகிடுத்தன. ஆனால் அந்தப் படத்துக்கு நடிகர்களைத் தேர்வு செய்ததில் ஸ்ரீதரும் கோபுவும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல!

சிரிப்பு தொடரும்..

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24104991.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 22: திருப்புமுனை தந்த சிரிப்பு!

 

 
15chrcjKathalikkaneramillai%20%202

‘காதலிக்க நேரமில்லை’ ராஜஸ்ரீ, ரவிச்சந்திரன்

 

ஒரு திரைப்படம் வசூல்ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால் அதை இயக்கிய இயக்குநர் முன் வரிசைக்கு வந்துவிடுகிறார். புதுமுகமோ பிரபல முகமோ நடிகர்களுக்கும் அந்தப் படம் திருப்புமுனையாக அமைந்துவிடுகிறது. தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தைத் தயாரிப்பதற்கான உத்வேகமும் பணத் தெம்பும் வந்துவிடுகின்றன. இந்த இருவரைத் தாண்டி ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மாபெரும் வெற்றியால் நகைச்சுவை நடிகராக நாகேஷ் உச்சநிலையை அடைந்தார்.

 

இயக்குநர்கள், நடிகர்களின் பெயர்களைக் கடந்து எழுத்தாளர் கோபுவின் பெயரையும் ரசிகர்கள் உச்சரித்தார்கள். “இதுதான் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான விருதும் வெற்றியும்” என்று கூறிய கோபு, “‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ஒரு பாடல் காட்சியுடன் ஸ்ரீதர் தூக்கிப்போட்ட கதையை மறக்காமல் கூற வேண்டும்” என்று நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார் கோபு.

 

சிவகுமாருக்கு கைநழுவிய வாய்ப்பு

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் டைட்டில் கார்டில் கேலிச்சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. டைட்டில் கார்டில் வரும் கடைசி கேலிச்சித்திரம் உயிர்பெற்று அதிலிருந்து படம் தொடங்கும். இந்த உத்தியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ரவிச்சந்திரனுடைய விண்டேஜ் காரின் சைலென்சர் பட்டாசு வெடிப்பதுபோல் வெடித்துக்கொண்டே செல்வதைப் பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்கச் சிரித்தார்கள். இதுபோல் ரசிகர்கள் சிரிப்பதற்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருந்ததோ அங்கெல்லாம் நுணுக்கமாக ஹாஸ்யத்தைப் புகுத்தியது ஸ்ரீதர் – கோபு கூட்டணி. இதில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் புகழ்பெற்ற மூத்த இயக்குநர் பீம்சிங் மகனான பி.லெனின் .

15chrcjKathalikkaneramillai%20%204

அறிமுக நாயகனாக ரவிச்சந்திரன்

 

காஞ்சனா, ரவிச்சந்திரன், சச்சு ஆகியோருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. ராமன் என்ற வாலிபர் மலேசியாவில் இருந்து நடிக்க வாய்ப்பு கேட்டு கோடம்பாக்கம் வந்தவர். இந்தப் படத்தில் ரவிச்சந்திரனாக அறிமுகமாகி, பின்னாளில், ஜெயலலிதா, கே. ஆர்.விஜயா போன்ற முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

இவரை ஒப்பந்தம் செய்யும் முன்பு அவரது கதாபாத்திரத்துக்கு நடித்த ஆடிஷனுக்கு அன்று இளைஞர்களாக இருந்த நடிகர் சிவகுமார், தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஆகியோரும் வந்து கலந்துகொண்டார்கள். சிவகுமாருக்கு அப்போது பள்ளி மாணவரைப் போன்ற முகம் இருந்ததால் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்தார் ஸ்ரீதர். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்குத் தமிழ் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

காஞ்சனாவாக மாறிய வசுந்தரா

காஞ்சனாவைத் தற்செயலாக விமானத்தில் பணிப்பெண்ணாகச் சந்தித்தார்கள். அழகும் நளினமும் இணைந்திருந்த பெண்ணான அவர் சிரித்த முகத்துடன் பயணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் ஸ்ரீதருக்கு இவரை நடிக்க அழைக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. காஞ்சனாவின் குடும்பம் மிகவும் கண்டிப்பானது. ஒருவழியாக அவருடைய பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் ஸ்ரீதர்.

15chrcjKathalikkaneramilli%202

‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா, முத்துராமன்

காஞ்சனாவின் இயற்பெயர் வசுந்தரா. ஏற்கெனவே வைஜயந்திமாலாவின் அம்மா வசுந்தரா அதே பெயரில் நடித்துவந்ததால் அவருக்கு காஞ்சனா என்ற பெயர் சூட்டப்பட்டது. காஞ்சனாவின் தாய்மொழி தெலுங்கு என்பதால் தமிழ் அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. ஒப்பந்தம் செய்துவிட்டு ஸ்ரீதர் ஒதுங்கிவிடுவார். ஆனால், இவர்களுக்குத் தமிழையும் வசனங்களையும் சொல்லித்தர கோபு கடும்பாடுபட வேண்டியிருந்தது. ஆனால், அதையெல்லாம் ஈடுபாட்டுடன் சந்தோஷமாகச் செய்ததாகக் கூறுகிறார் அவர்.

 

பாட்டிகளுடன் சந்திப்பு

பாலையாவின் மூத்த மகள் வேடத்துக்கு காஞ்சனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடைய காதலனாக முத்துராமனும் ரெடி. ஆனால் இரண்டாவது மகளுக்கான கதாபாத்திரத்தை ஏற்க யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்று தேடோ தேடென்று தேடியும் பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை. இறுதியாக, பரதநாட்டிய மாணவி என்று கூறி சாந்தி என்ற பெண்ணை அழைத்து வந்தார்கள்.

அமுல் பேபி போல இருந்த அந்தப் பெண்ணுக்குக் குழந்தை முகம். காஞ்சனாவின் தங்கையாக அந்தப் பெண்ணையே ஒப்பந்தம் செய்தது சித்ராலயா. அந்தப் பெண்தான், பின்னாளில் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவாகக் கொடிகட்டிப் பறந்தார். அவருக்கு ஜோடி ரவிச்சந்திரன்.

அடுத்து “நாகேஷுக்கு ஜோடியாக மனோரமாவை ஒப்பந்தம் செய்யலாம்” என்றார் கோபு. “இல்லேடா கோபு! சில காட்சிகளில் மேற்கத்திய ஆடைகள் போடணும். புதுசா யாரையாவது பிடி” என்றார் ஸ்ரீதர். அப்போது கதாநாயகியாக மட்டும் நடித்துக்கொண்டிருந்த சச்சு நினைவுக்கு வந்தார். சச்சுவுக்கு ஒரு பாட்டி இருந்தார். அவரிடம்தான் அப்போது கால்ஷீட் வாங்க வேண்டும். நடிகைகளின் பாட்டிகளைச் சமாளிக்கவென்றே கோபு திரையுலகில் நுழைந்திருப்பார் போலும். வைஜயந்திமாலாவை வாட்டர் ஸ்கேட்டிங் செய்யும் காட்சியில் நடிக்க அனுமதி மறுத்த பாட்டியையே சமாதானம் செய்து சமாளித்தவர் ஆயிற்றே! பின்னாளில் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு இந்தப் பாட்டிகளின் சந்திப்பு உதவியதோ என்னவோ!

சச்சுவை ஒப்பந்தம் செய்வதற்காக அவருடைய பாட்டியைச் சந்தித்தார். “கோபு! என் பேத்தி கதாநாயகியா நடிச்சுண்டு இருக்கா... அவளைப் போய் நாகேஷுக்கு ஜோடியா நடிக்க சொல்றீங்களே, இது நியாயமா?” என்று பாட்டி ஒரே போடாகப் போட்டார். ஆனால் கோபு அசரவில்லை. “படத்துல மூணு ஹீரோ பாட்டி. முத்துராமன். அவருக்கு ஜோடியா காஞ்சனான்னு ஒரு அறிமுகம். ரவிச்சந்திரன் புதியவர், அவருக்கு ஜோடி நிர்மலான்னு ஒரு புதுமுகம். நாகேஷ் ஒரு ஹீரோ. அவருக்கு ஜோடி உங்க பேத்தி சச்சு!” என்று பாட்டியிடம் பொய் கூறி சமாளித்து சச்சுவை ஒப்பந்தம் செய்தார் கோபு. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்’ என்று பாடி ஆடி நடித்ததால்தான் இன்றுவரை எவர்கிரீன் நட்சத்திரமாக தான் இருப்பதாக சச்சு இப்போதும் கூறுவார்.

 

திடீர் பின்வாங்கல்

காஞ்சனாவையும் சாந்தி என்னும் நிர்மலாவையும் வைத்து மகளிர் விடுதியில் ஒரு பாடல் காட்சியைக் கூடப் படமாக்கிவிட்டார் ஸ்ரீதர். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சாந்தி என்ற அந்தப் பெண்ணுக்கு முகம் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பதாக ஸ்ரீதருக்குப் பட்டது. இவ்வளவு சிறிய பெண்களைக் காதல் என்ற போதைக்குள் இழுத்துவிடுகிறீர்களா என்று விமர்சகர்களும் ரசிகர்களும் கேட்டுவிடக் கூடாது அல்லவா? அந்த இருதரப்புக்குமே அதிக முக்கியத்துவம் அளிப்பவர் ஸ்ரீதர். “‘கல்யாணபரிசு’, நெஞ்சில் ஒரு ஆலயம் போன்ற படங்களை எடுத்து, ‘தென்னாட்டு சாந்தாராம்’ என்று இந்திப் பட உலகால் புகழப்பட்டுவரும் நிலையில் எதற்காக நகைச்சுவை படம் எடுக்கிறீர்கள்” என்று கேட்டு சில மேதாவிகள் ஸ்ரீதரைக் குழப்பி விட, ஸ்ரீதர் மீண்டும் யோசிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில், “கோபு! இது சரிப்பட்டு வராது” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஹாஸ்டல் பாடல் காட்சியுடன் படத்தை ட்ராப் செய்ய தீர்மானித்துவிட்டார். கோபுவுக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது. எவ்வளவு இளமையான திரைக்கதை, எத்தனை தூய்மையான நகைச்சுவை, கதை முழுவடிவம் பெற்றபோது அவ்வளவையும் பாராட்டிய ஸ்ரீதரா படத்தை நிறுத்திவிடுவோம் என்கிறார்? இதை விடக் கூடாது என்று முடிவெடுத்த கோபு, ஸ்ரீதருடனான கடற்கரைச் சந்திப்புக்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பமும் வந்தது…

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24154008.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சி(ரி)த்ராலயா 23: ஒரு படம், ஓஹோ வாழ்க்கை!

 

 

 
22chrcjKathalikkaneramillai

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ

எவ்வளவு சொல்லியும் கேட்காத ஸ்ரீதர், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கைவிட்டு விட்டார். மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தார் கோபு. சிலநாட்கள் கழித்து கோபுவைத் தேடி, திருவல்லிக்கேணிக்கு வந்தார் ஸ்ரீதர். காலாற நடந்துசென்று மெரினா பீச் காந்தி சிலையின் பின்பாக வழக்கமாக அமரும் இடத்தில் நண்பர்கள் இருவரும் அமர்ந்தனர்.

ஸ்ரீதர் இப்போது ஒரு முக்கோணக் காதல் கதையை கோபுவிடம் கூறத் தொடங்கினார். ஆனால் கோபுவின் முகத்தைப் பார்த்த ஸ்ரீதர், “உன்னை இந்தக் கதை இம்பிரஸ் பண்ணினமாதிரி தெரியல.” என்றார். இதுதான் சமயம் என்று துள்ளிய கோபு, “ஸ்ரீ.. ‘ரோமன் ஹாலிடே’ படம் மாதிரி ரோமடி (ரொமான்ஸ் + காமெடி) வகைப் படம் தமிழ்ல இதுவரை வந்ததே இல்ல. நல்ல ஈஸ்ட்மேன் கலர்ல உன்னோட டிரேட்மார்க் காதலை, இளமை ப்ளஸ் இனிமை கலந்து கொடுத்தா வித்தியாசமா இருக்கும்” என்றார் கோபு.

 

“ பேசிப் பேசியே என்னை உன்பக்கம் இழுத்துடுறேடா. சரி! உன் ஆசையை நான் இதுக்குமேலயும் கெடுக்க விரும்பல. ஆனா இதுவரைக்கும் எடுத்ததை அப்படியே விட்டுவிடலாம். புதுசா தொடக்கத்துலேர்ந்து ‘காதலிக்க நேரமில்லை’க்கு வேற கதையை யோசிப்போம் என்று அங்கேயே கதையை விவாதித்தனர்.

இம்முறை கதை அவர்களது பிடிக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான், அடுத்தநாள் மாலையிலும் காந்தி பீச்சில் டேரா போட்டார்கள். அந்த ஹெரால்ட் காரின் பின் சீட்டில் ஸ்ரீதர் காதல் காட்சிகளை எழுத, கோபு முன் சீட்டில் உட்கார்ந்து நகைச்சுவைக் காட்சிகளை எழுதினார்.

பள்ளி மாணவியைப் போன்ற தோற்றத்தில் இருந்த ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை பின்னர் வேறு ஒரு படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த ஸ்ரீதர். அந்தத் தங்கை கதாபாத்திரத்துக்கு ராஜஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார். ராஜஸ்ரீ ஏற்கெனவே ‘பூம்புகார்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரைப் புதுமையான கோணத்தில் காட்டினார் ஸ்ரீதர். ‘காதலிக்க நேரமில்லை’ ராஜஸ்ரீக்குப் பெரும் புகழைத் தந்தது. அதன் இந்தி மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா’விலும் நாயகன் சசிகபூருக்கு ஜோடியாக ராஜஸ்ரீயையே நடிக்க வைத்தார்.

 

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

‘காதலிக்க நேரமில்லை’ பட இசையமைப்புக்கு முன்பு, தன் மனைவியுடன் ஏற்காடு சென்றிருந்தார் எம்.எஸ்.வி. அவரது வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். ஏற்காட்டிலிருந்து திரும்பியதும், ‘காதலிக்க நேரமில்லை’ பாடல் கம்போசிங் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசன் தனது காரிலிருந்து இறங்கி கம்போஸிங் அறைக்குள் நுழைந்து எம்.எஸ்.வியை நோக்கி நடந்தார்.

“என்னப்பா... விசு! நீ பாட்டுக்கு உல்லாசப் பயணம் கிளம்பிட்டே. இங்கே நாங்க எல்லாரும் வேலையில்லாம இருக்கோம். விஸ்வநாதா…வேலை வேண்டும். விஸ்வநாதா வேலை கொடு..!” என்று வேடிக்கையாகக் குரலை உயர்த்தி கோஷம் போடுவதுபோல் கூறிக்கொண்டே வர, அதைக் கேட்ட ஸ்ரீதருக்குள் ஒரு அதிர்வு.

உடனே கோபு பக்கம் திரும்பி, “பாலையா கதாபாத்திரத்துக்குப் பெயரை மாத்து. படத்துல அவர் பெயர் இனி விஸ்வநாதன்.” என்று கூறிவிட்டு எம்.எஸ்.வி பக்கம் திரும்பி, “கவிஞர் சொன்னதையே பல்லவியா வச்சு ட்யூன் போடுங்க எம்.எஸ்.” என்றார். அப்படி அங்கே, அப்போதே பிறந்த பாடல்தான், ‘விஸ்வநாதன், வேலை வேண்டும்’

எம்.எஸ்.வியின் குழுவில் பிலிப் என்ற ஒரு கிடார் கலைஞர் இருந்தார். அவர் ரெக்கார்டிங் இல்லாத நேரத்தில் ஏதாவது ஒரு பிறமொழிப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பார். 1940-ல் வெளியான ஒரு ஸ்பானிஷ் பாடலான ‘பீச்சாமே மொச்சு’ என்ற பாடலை அவர் பாடிக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட எம்.எஸ்.வி, அந்தப் பாடலை கர்னாடக ராகத்தில் மாற்றி மிக அழகான ஒரு மெட்டை கம்போஸ் செய்தார். அந்தப் பாடல்தான், ‘அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன்’.

அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது ஒரு ருசிகர சம்பவம். ஆழியார் அணையில் ஒரு நாள் இரவு, காட்சியைப் படம்பிடித்தார் ஸ்ரீதர், காட்சிக்கு ராஜஸ்ரீ, மற்றும் ரவிச்சந்திரனுக்குத் தேவையான ஆடைகள் வைத்திருந்த பெட்டியை காஸ்டியூம் டிபார்ட்மெண்ட்காரர்கள் படப்பிடிப்புக்குக் கொண்டுவர மறந்துவிட்டனர். வேறு வழியின்றி, ரவிச்சந்திரனுக்கு ஒரு நைட் கோட் மாட்டி, ராஜஸ்ரீயை ரோஸ் நிற நைட் கவுன் ஒன்றை அணிய வைத்து எடுத்தார்கள். வேடிக்கை என்னவென்றால், ராஜஸ்ரீயின் அந்த நைட் கவுன் பிரபலமாகி கடைகளில் பரபரப்பாக விற்பனை ஆனது.

 

பிஸியான படக் குழு

‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் மாஸ்டர் தங்கப்பன். இந்தப் பாடலில் ரவிச்சந்திரனுடன் நடனமாடினார் தங்கப்பனின் உதவியாளர் சுந்தரம். அவரது நடன அசைவுகளுக்கு தியேட்டரில் பலத்த வரவேற்பு. அதை அஸ்திவாரமாகக் கொண்டுதான் பிற்காலத்தில் பல படங்களில் நடனம் ஆடி, சுந்தரம் மாஸ்டராக அவர் பெயர்பெற்றார். அவருடைய மகன்கள் பிரபுதேவா, ராஜுசுந்தரம் ஆகியோர் இன்று கொடிகட்டி பறக்கிறார்கள்.

துணை வசன கர்த்தாவாகிய ‘சித்ராலயா’ கோபு, இந்தப் படத்தின் மூலம் கதை வசன கர்த்தாவாக மாறினார். பின்னர் பல முழுநீள நகைச்சுவைப் படங்களை படைக்க இந்தப் படம் தந்த புகழே உதவியது. அதன் தொடக்கமாக ஏவி.எம்மின் ‘காசேதான் கடவுளடா’ படத்தை எழுதி இயக்கவும் செய்தார் கோபு.

22chrcjgopu%20sridar

கோபுவும் ஸ்ரீதரும்

துணை இயக்குநராக இருந்த சி.வி.ராஜேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இணை இயக்குநராக மாறினார். பின்னாளில் நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கி ‘சூப்பர் ஹிட்’ இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். ஒரு படத்தின் மாபெரும் வெற்றி அந்தப் படத்தின் நடிகர், நடிகையர் மட்டுமல்லாது படக்குழுவில் இருந்த அத்தனை பேரையும் பிஸியாக்கிய அற்புதம் நடந்தது.

 

கூட்டு முயற்சியே வெற்றியின் ரகசியம்

ஸ்ரீதரோ ‘ட்ரெண்ட் செட்டர்’ என்ற பெயரை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் பெற்றார். மாநிலம் எங்கும் அப்போது இந்தப் படத்தைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. இப்படி, பலருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘காதலிக்க நேரமில்லை’. இன்றுவரை பேசப்படும் பசுமையான திரைப்படம். அதற்குக் காரணம், தேர்ந்த திறமைகளை கொண்ட ஒரு படக் குழுவின் கூட்டு முயற்சிதான்.

அருமையான, நாகரிகமான, நகைச்சுவை வசனங்கள், கண்ணதாசனுடைய இனிமையான பாடல்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இளமைத் துடிப்பு மிக்க மெட்டமைப்பு இப்படி ஒவ்வொரு அம்சமுமே சூப்பர் ஹிட். ‘அனுபவம் புதுமை’ பாடலை ஸ்ரீதர் படமாக்கிய விதம், இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. அந்தப் பாட்டுக்குத் தங்கப்பன் மாஸ்டரின் அங்க அசைவுகள், என். எம். சங்கரின் நேர்த்தியான எடிட்டிங்., கங்காவின் கண்ணைப் பறிக்கும் செட் அமைப்புகள், வின்சென்டின் கேமரா என்று எல்லாவற்றிலும் தி பெஸ்ட் என்று கூறப்பட்ட திரைப்படம்.

இவை அனைத்தும் சேர்ந்துதான், இன்றுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறுமளவுக்குப் பெயர் பெற்றது, ‘காதலிக்க நேரமில்லை’ அந்தப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப்பின் ஒருநாள் மீண்டும் மெரினா பீச். அதே காந்தி சிலையின் பின்னால் அடுத்த படத்துக்கான ஒரு நகைச்சுவைக் கதையைக் கூறத் தொடங்கினார் கோபு. ஸ்ரீதர் அவரைக் கையசைத்துத் தடுத்தார்.

(சிரிப்பு தொடரும்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24219263.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.