Jump to content

குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல்


Recommended Posts

குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல்

 

 
download%2010

குட்கா, வருமான வரித்துறை பிரமாண பத்திரம்   -  படம்: சிறப்பு ஏற்பாடு

குட்கா வழக்கில் புதிய திருப்பமாக அப்போதைய டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றியதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய காவல் உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பிருப்பதாக வருமான வரித்துறை ஆணையர் எழுதிய கடிதம் மற்றும் சிக்கிய டைரியின் பக்கங்களை ஆதாரமாக வைத்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதன் பின்னர் தான் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். டிஜிபி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வைத்து குட்கா விவகாரத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் சுசீ பாபு வர்கீஸ் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் நாங்கள் குட்கா நிறுவன மேலாளர் மாதவ்ராவிடம் பிரிவு 132(4)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் எச்.எம் மற்றும் சிபி (HM&CP) என குறிப்பிட்டது ஹெல்த் மினிஸ்டர் மற்றும் கமிஷனர் ஆஃப் போலீஸ் என்பதன் சுருக்கம் ஆகுமென்று தெரிவித்திருந்தார்.

2016 ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் 15, 2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.56 லட்சத்தை கொடுத்ததாகவும், மேலும் பல்வேறு நபர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 6 -2016 வரையிலான காலகட்டத்தில் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் அப்போதைய டிஜிபி அஷோக்குமாருக்கு 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி எழுதிய கடிதத்தை வைத்து அப்போதைய டிஜிபி அஷோக்குமார் ‘முக்கிய ரகசியம்’ என்று முதல்வருக்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி எழுதினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குட்கா விவகாரம் வெளிவந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வருமானவரித்துறை அதிரடியாக போயஸ் இல்லத்தில் உள்ள வேதா நிலையத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சசிகலாவின் அறைகள் சோதனையிடப்பட்டது.

சசிகலாவின் அறையில்  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அஷோக்குமார், செப்.2-ம் தேதி எழுதிய குட்கா விவகாரம் குறித்த கடிதம் சிக்கியது என வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை முதன்மை இயக்குநரின் அறிக்கையுடன் இணைத்து அப்போதைய டிஜிபி அஷோக்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ‘டாப் சீக்ரெட்’ கடிதத்தையும் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி ‘டாப் சீக்ரெட்’ என டிஜிபி அஷோக்குமார் என்ன எழுதியிருந்தார் என்பது குறித்து வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22430603.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெ., வீட்டில் சிக்கிய ரகசிய கடித விபரம்
என்ன?: வருமான வரித்துறை, 'பகீர்' தகவல்
 
 
 

ஜெயலலிதா வீட்டில் நடத்திய சோதனையின் போது, வரித்துறையிடம் ரகசிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், 'குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்போது, டி.ஜி.பி.,யாக அசோக்குமார் பரிந்துரை செய்திருந்த தகவல் அம்பலமாகி உள்ளது.

 

ஜெ., வீட்டில் சிக்கிய ரகசிய கடித விபரம் என்ன? வருமான வரித்துறை, 'பகீர்' தகவல்


இந்தக் கடிதத்தை அப்போது மறைத்துள்ள சசிகலா கும்பல், அசோக்குமாரை பதவியில் இருந்தும் விரட்டியடித்துள்ளது.
சென்னையில், 2016 ஜூலையில், குட்கா வியாபாரிகள் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, எம்.டி.எம்., என்ற, குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான, மாதவ ராவ் வீட்டில், டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழக அமைச்சர்; டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகள்; 55 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கு உதவிய, மத்திய கலால் துறை அதிகாரிகள்; மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தடை செய்யப்பட்ட குட்காவை விற்க அனுமதிப்பதற்காக, அந்த தொகை தரப்பட்டதாக, விசாரணையில், மாதவ ராவ் தெரிவித்திருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை, முதன்மை இயக்குனர், பாலகிருஷ்ணன் வாயிலாக, 2016 ஆகஸ்டில், தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவிடம் அந்த

விபரங்களை தந்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டது.மேலும், அந்த விபரங்களை இணைத்து, அப்போது, சட்டம் - ஒழுங்கு, டி.ஜி.பி.,யாக இருந்த, அசோக்குமாருக்கும் கடிதம் எழுதியது.
 

அழித்துவிடுவர்



இது தொடர்பாக, சிறப்பு பிரிவு விசாரணை கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜூலை, 27ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அப்படி ஒரு கடிதம் எழுதப்படவே இல்லை என, தமிழக அரசு தெரிவித்தது; வரித்துறை அதை ஏற்கவில்லை.
இதற்கிடையில், கோர்ட் உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை, அந்த வழக்கை விசாரிக்கத் துவங்கியது. அவர்கள், அந்த ஆவணங்களின் அசல் நகலை தரக்கேட்டு வரித்துறையினரை நச்சரித்தனர். ஆனால், ஒரே ஆதாரத்தை அழித்துவிடுவர் என்பதால், தர மறுத்தனர். பின், மதுரை உயர் நீதிமன்ற கிளையில், அந்த ஆவணத்தை வரித்துறையினர் தாக்கல்
செய்தனர்.

இந்நிலையில், 2017 நவம்பரில், சசி கும்பலிடம் சோதனை நடத்திய வரித்துறை, அதன் தொடர்ச்சியாக, ஜெ., வசித்த, போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடத்தியது.
அப்போது, சசிகலா அறையில் ரகசிய கடிதம் ஒன்று சிக்கியது. அது, வருமான வரித்துறை, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது உண்மை என்பதை நிரூபிக்கும் ஆதாரமாகும்.
இந்த தகவலை, வருமான வரித்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜன., 12ல் தெரிவித்தது. இது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடிதத்தில் இருந்தவிபரங்கள் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
 

கட்டாய பணி ஓய்வு



இது குறித்து, வரித்துறையினர்

கூறியதாவது:'வரித்துறை கடிதமே எழுதவில்லை' என, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் கூறியது. பின், ஒரு பேட்டியில், 'அந்த கடிதம் எழுதப்பட்டது உண்மை' என, ராமமோகன ராவ் கூறியிருந்தார். 2016 ஆகஸ்டில், தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கும், குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் குறித்து, கடிதம் எழுதியிருந்தோம்.அதன் அடிப்படையில், லஞ்சப் புகாருக்கு ஆளான உயர் போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை கோரி, முதல்வராக இருந்த ஜெ.,க்கு, டி.ஜி.பி., அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம், 2016 செப்., 2ல் எழுதப்பட்டு உள்ளது; அது தான், எங்களிடம் சிக்கியது. அந்த கடிதம், ஜெ., கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என கருதுகிறோம்.
இந்த மர்மமான சூழலில், ஜெ.,விடம் பெற்ற நன்மதிப்பு காரணமாக, பதவி நீட்டிப்பில் இருந்த, டி.ஜி.பி., அசோக்குமார், கட்டாய பணி ஓய்வில் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார். அவர், செப்., 7ல், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
எங்களின் கடிதம், ஜெ., கவனத்திற்கு செல்லாமல் மறைக்கப்பட்டு உள்ளது. இல்லையேல், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். மாறாக, அந்த கடிதம், சசிகலா கும்பலிடம் கிடைத்ததால், லஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நினைத்த அதிகாரியே பலிகடா ஆகியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1941882

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.