Jump to content

தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது இப்­ப­டிச் சொல்­கி­றார் பசில் ராஜ­பக்ச


Recommended Posts

  •  
  • தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது
80745_basil-rajapakse-.jpg

தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது

இப்­ப­டிச் சொல்­கி­றார் பசில் ராஜ­பக்ச

 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மீது தமிழ் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­ப­கத் தன்­மை­யினை அந்­தக் கட்சி தகர்த்­துள்­ளது. வடக்கு மக்­க­ளுக்கு அந்­தக் கட்சி வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­களை கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.

அந்­தக் கட்சி வடக்­கில் அர­சி­யல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான பசில் ராஜ­பக்ச தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்கு வடக்­கில் நாம் எதிர்­பார்த்­ததை விட வர­வேற்­புள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எமக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கும் பரப்­பு­ரை­கள் அனைத்­தும் மக்­கள் மத்­தி­யில் பொய்ப்­பித்­துள்­ளது. ஏனெ­னில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சு­டன் இணைந்தே வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்து வந்­தது.

வடக்கு மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் எத­னை­யும் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. அந்த மக்­கள் மூன்று பிர­தான விட­யங்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு பெறல், பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­றல், அப்­பி­ர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­தல் என்­ப­னவே அவை. இந்த விட­யங்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பால் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.

 
 

அந்­தக் கட்சி மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இல்­லா­து­போ­யுள்­ளது. சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணியை இன­வா­தக் கட்­சி­யாக சித்­த­ரித்து அர­சி­யல் நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முற்­ப­டு­கி­றது. எனி­னும் எந்­தெ­வாரு இன­வாத நோக்­க­மும் எமக்­கில்லை. அத­னால்­தான் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஓராண்­டுக்­குள்­ளேயே நாம் வடக்­கில் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றோம்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­மீ­தும் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை தற்­போது இல்­லாது போயுள்­ளது. அக்­கட்சி சிறந்த நிர்­வா­கம் கொண்ட கட்­சி­யா­கவே மக்­கள் நம்­பிக்­கொண்­டி­ருந்­த­னர். அந்த நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது. எரி­பொ­ருள், மின்­சா­ரம், விவ­சாய உரம் உள்­ளிட்ட துறை­க­ளைக்­கூட முறை­யாக நிர்­வா­கம் செய்­ய­மு­டி­யாத நிலைக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலைமை தள்­ளப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சிக்கு வந்­தால் வர்த்­தக சமூ­கத்துக்கு சலுகை கிடைக்­கும் என­வும் கரு­தி­னார். அது­வும் பொய்ப்­பித்­துள்­ளது. ஊழல் மோச­டி­க­ளற்ற ஆட்சி முன்­னெ­டுக்­கும் என­வும் மக்­கள் எதிர்­பார்த்­த­னர். மத்­திய பிணை­முறி விவ­கா­ரத்­து­டன் அது­வும் பொய்­யா­கி­யுள்­ளது -– என்­றார்.

https://newuthayan.com/story/62375.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் ஆட்ச்சியில் காணாமற்போனவர்கள், உங்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் விடுதலை போன்ற விடையங்களுக்கான தீர்வையும்தான் எதிர்பாக்கிறோம்.   உங்களுக்கு வசதியாய் அவற்றை மறைத்து விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.