Jump to content

கலக்கப்போவது யாரு


Recommended Posts

கலக்கப்போவது யாரு

1t4qwx.jpg

கலக்கப்போவது யாரு
 
கலக்கப்போவது யாரு
 

குட்டித் தேர்தலுக்கான அரசியல் சூழலோடு புதிய வருடத்தை வரவேற்கத் தயாராகிவிட்டனர் இலங்கை மக்கள். 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், அதன் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், அதன் பின்னர் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பு என வருடம் முழுவதும் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் வழமையைவிட சற்று பரபரப்பாகவே காணப்படப்போகின்றன, என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு (கூட்டணிகளுக்கு) கிடைக்கும் மக்கள் ஆதரவு, அதன் பின்னரான தேர்தல்கள் மற்றும் புதிய அரசியல் உருவாக்கப்பணிகளில் தாக்கம் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து நோக்குகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு (கூட்டணிக்கு) மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை கணிப்பது அவ்வளவு சுலபமல்ல.

காரணம், இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் (ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) மீதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவு, சிறிய கட்சிகளான (கூட்டணிகள்) மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன தொடர்பிலான மக்களின் எதிர்ப்பார்ப்பு என பல கோணங்களில் இது தொடர்பில் ஆராய வேண்டியிருக்கின்றது.

இந்த சூழலில் வடமாகாணத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களத்திலும் பரபரப்பிற்கும், குழப்பங்கள், பிரச்சினைகளுக்கும் பஞ்சமில்லை. வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், புதிதாக உருவாகியிருக்கும் கூட்டணிகள், புதுப்பிக்கப்பட்டிருக்கும் கூட்டணிகள் சவாலாகவே அமையப்போகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் நிரந்தரத் தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே இருப்பததாக நம்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவில் அவர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற வகையிலும், வடக்கு, கிழக்கில் மக்கள் செல்வாக்கைப் பெற்ற கட்சிகள் அதில் அங்கம் வகிப்பதுமே இதற்குக் காரணம். எனினும், தமிழ்க் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள், கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சற்று குறைவடையச் செய்துள்ளதோடு, அது முரண்பாடுகள், புதிய அரசியல் கூட்டணிகளை வடக்கில் உருவாக்கவும் வழி வகுத்துள்ளது.

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசுடன் முன்னெடுத்துச் செல்லும் இணக்க அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவை தந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.

அதற்குக் காரணமில்லாமிலில்லை. வழமையாகவே வடக்கு அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரிய போட்டி ஒன்றும் நிலவியதில்லை, தீவகப் பகுதியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஓளரவு வாக்குகளை பெற்றுக்கொள்ளுமே தவிர, கூட்டமைப்பிற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருந்ததில்லை.

இம்முறை அப்படியல்ல. பல அமைப்புகள், கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிகள், தேசிய அரசியலை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சற்று கலக்கமடையச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

களத்தில் யார்?

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்று வதற்காக, 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. முல்லைத்தீவில் உள்ள 11 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் நோக்கில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் போட்டியிடுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களில் 09 அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

புதிய கூட்டணி

தமிழரசுக் கட்சி மக்களின் ஆணையிலிருந்து விலகி தன்னிச்சையாக செயற்படுவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடாமல், பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்து பின்னர் கருத்து முரண்பாட்டால் பிரிந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து மாற்றுத் தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குகின்றன. இந்தக் கூட்டணிக்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பல மூத்த அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமான "உதயசூரியன்' சின்னத்தையே இப்புதிய கூட்டணி தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்தது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையிலும், கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் விலகிச்சென்று இந்த கூட்டணியுடன் கைகோர்த்துள்ளமையாலும் கணிசமான மக்கள் ஆதரவு இந்த புதிய கூட்டணிக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

ஏனைய சக்திகள்

அதேவேளை, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் வழøமாகவே எந்தத் தேர்தலிலும் ஓரளவு கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் இந்தத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவாலாகவே இருக்கப்போகின்றன. மேலும், சுயேச்சையாக பலர் இந்த தேர்தலில் வடக்கில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருமே அந்தந்த பிரதேசங்களில் மக்களுக்கு நன்கு பரீச்சயமுள்ளவர்களாக இருக்கின்ற நிலையில் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாகவே தந்திருக்கின்றன.

கூட்டமைப்பின் பின்னடைவு

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கியமைக்கு மூன்று காரணங்களே காணப்படுகின்றன. ஒன்று புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டணி, இரண்டாவது மக்கள் ஆதரவு பெற்ற அமைப்புகளின் (கட்சிகள்) ஒன்றிணைவு.

மூன்றாவது அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள அரசுகளுடன் பேசி ஒரு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை. எனினும், தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

காரணம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் யுத்தக் குற்றவிசாரரணை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, காணாமற்போனோர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லையென்பதில் மாற்றுக்கருத்தில்லை. தேசிய அரசுடன் தமிழ்க் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்புடனான அரசியல் செயற்பாடுகள், கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையாகவோ அல்லது தமிழரசுக் கட்சியின் கருத்துகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகள் என பல விடயங்களில் தமிழ்க்கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் கூட்மைப்பு மீதான மக்களின் ஆதரவு குறைவைடைவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின.

மேலும், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மக்கள சார் செயற்பாடுகள், குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானங்கள், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது எழுச்சி பேரணி என்பவற்றுக்கு எதிரான தமிழ்க் கூட்டமைப்பு தலைமையின் கருத்துக்கள் மக்களுக்கு கூட்டமைப்பு மீதான வெறுப்பினை அதிகரிக்கச் செய்தது. மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆசனப்பங்கீட்டு விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், உட்கட்சி மோதல்கள் என பல வழிகளிலும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பாரிய பின்னடைவுகளையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்றால் அது மிகையல்ல.

மக்கள் ஆதரவு யாருக்கு?

வடக்கிலும் உருவாகியிருக்கும் புதிய கூட்டணி, சரிந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் இந்தத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஓரளவு பின்னடைவு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்றாலும், புதிய கூட்டணியின் பிரசாரங்கள், அவர்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கையே அவர்களது வெற்றியை உறுதி செய்யும். மாறாக, கூட்டமைப்பு மீதான வெறுப்பு மாத்திரம் அவர்களுக்கு வெற்றியை தேடித்தந்துவிடாது.

ஏனைய பிரதேச மக்களைவிட, வடபகுதி தமிழ் மக்கள் தேசிய மற்றும் பூகோள அரசியல் தொடர்பில் கூடுதலான அறிவினை பெற்ற மக்களாக காணப்படுகின்றனர். கடந்த காலப் பிரச்சினைகள் அம்மக்களுக்கு அந்த அரசியல் அறிவினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் அம்மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி வாக்கு வங்கிகளை நிரப்பிவிட முடியாது. மாறாக, வட மாகாண தமிழ் மக்கள் எவ்வளவு நாட்களுக்கு கூட்டமைப்பின் பேச்சுக்கு அடிபணிந்து செல்வார்கள் என்ற கேள்வியும் எழாமலில்லை.

இவ்வாறான ஒரு இக்கட்டான, குழப்பகரமான சூழலில் வெற்றி யாருக்கு என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

https://www.sudaroli.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.