Jump to content

முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும்


Recommended Posts

முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும்
 

முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல.   

அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக, எந்த விடயத்திலும் அரசியல் ஒரு பேசுபொருளாக இருந்ததில்லை. பள்ளிவாசல்கள் அரசியலை வழிநடாத்தியதாகவும் சொல்ல இயலாது.  

ஓர் அரசியல்வாதி தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யப் புறப்படுகின்ற வேளையிலும், வெற்றிபெற்று ஊருக்கு வருகின்ற வேளையிலும் வந்து, மார்க்கச் சடங்குகளைச் செய்துவிட்டுப் போகின்ற ஓர் இடமாகவே பள்ளிவாசல்கள் இருந்திருக்கின்றன.   

பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியலை வழிப்படுத்த முடியாமல் போனமைக்கான பிரதான காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எகத்தாள போக்காகும். பள்ளியின் அதிகாரம் கூட, தமது சட்டைப்பையில் இருக்க வேண்டுமென்றுதான் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள். எனவே பள்ளிவாசல்களும் அதன் நிர்வாகங்களும் அரசியல் அசிங்களில் இருந்து தூர விலகியிருக்கின்றன.   

இலங்கையில் பள்ளிவாசல்களையோ மதத் தலங்களையோ மையமாக வைத்து அரசியல் செய்ய முடியாது. ஆனால், நாம் இங்கு சொல்ல வருவது, அரசியலும் வாழ்வின் முக்கிய விடயம் என்றாகிவிட்ட பிறகு, அதை விட்டு முஸ்லிம்கள் விலகியிருக்க முடியாது.   

எனவே, முஸ்லிம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் போக்குகள், செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக அவதானித்து, நேரடியாக அரசியலுக்குள் இறங்காமல், நல்லுபதேசங்கள் மற்றும் பரிந்துரைகள் ஊடாக அந்த மக்களை வழிப்படுத்துவதில் மதஸ்தலங்கள் வெற்றிகாணவில்லை என்றே கூற விளைகின்றோம்.   

அந்தவகையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை வழிப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளை தட்டிக் கேட்பதில் மார்க்கப் பெரியார்கள், மௌலவிமார், குர்ஆனையும் ஹதீஸையும் படித்தறிந்தவர்கள் தங்களுக்கிருக்கும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்களா என்ற கேள்வி, இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது.   

இந்தக் கேள்வியின் அர்த்தம், பள்ளிவாசலை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதோ, மார்க்க அறிஞர்கள் எல்லாம் அரசியல் பேசுவதோ என்று யாரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.   

மாறாக, முஸ்லிம்களின் வாழ்வியலில் அரசியலும் முக்கிய கூறாக ஆகிவிட்டிருக்கின்ற நிலையில், அரசியல் தொடர்பில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக மேற்சொன்ன தரப்பினரால் எவ்வாறான காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற சுயவிசாரணையே இந்தக் கேள்வியின் உள்ளர்த்தம் ஆகும்.   

அப்படிப்பார்த்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இருக்கின்ற (ஒரு சிலரை தவிர மற்றெல்லா) புத்தி ஜீவிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக நலன்விரும்பிகள் இந்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, பலப்படுத்தி, அதனூடாக முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கச் செய்வதில் எந்தளவுக்கு தவறு விட்டிருக்கின்றார்களோ அதேயளவு ஈடுபாடற்ற தன்மையை முஸ்லிம் மார்க்கப் பெரியார்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே,பொதுவான அபிப்பிராயமாகும்.   

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் செய்யத் தவறிய எத்தனையோ விடயங்கள் தொடர்பில், அல்லது செய்து கொண்டிருக்கின்ற கேடுகெட்ட காரியங்கள் தொடர்பில், மேற்குறிப்பிட்டோர் தமது பரிந்துரைகளை முன்வைக்காமல் அல்லது முன்வைத்தும் அதில் வெற்றியடைய முடியாமலேயே உள்ளனர்.  

இந்த நிலைமை, தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் இருக்கின்றது. சிங்களச் சமூகத்தின் அரசியலின் போக்குகளைத் தமக்கேற்றால் போல் சீரமைப்பதில், பௌத்த பீடங்கள் குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.   
இந்த அடிப்படையில், அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், அண்மைக் காலத்தில் எடுத்த நிலைப்பாடு மிகுந்த கவனஈர்ப்பை பெறுகின்றது. ஒரு தேர்தல்காலத்தில், இந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்ட நகர்வுகள், பிராந்திய மற்றும் தேசிய அரசியலில் முக்கியமான சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நகர்வுகளை வரவேற்றலும் விமர்சித்தலும் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.   

இந்தக் கதை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதும், முன்கதைச் சுருக்கம் என்னவென்பதும் உங்களுக்குத் தெரியும். கல்முனை மாநகர சபையின் கீழ் இன்றுவரைக்கும் இருந்து வரும் சாய்ந்தமருது மக்கள், தமக்குத் தனியான ஓர் உள்ளூராட்சி சபை வேண்டும் என்று, குறைந்தது பத்து வருடங்களாகக் கோரி வருகின்றார்கள். அக்கோரிக்கை உச்சக்கட்டமடைந்திருந்த நிலையில், சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.   

சாய்ந்தமருது மக்களின் நியாயங்கள், கல்முனை மாநகர சபையைத் துண்டாடினால், கல்முனைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு, இவ்விரு பிரதேசங்களினதும் புவியியல் அமைவிடங்கள், இதை இரண்டு அல்லது நான்கு சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பரந்துபட்ட சிந்தனை எதுவும் இன்றி, வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல, இரண்டு பிரதேசங்களுக்கும் இருவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.   

இதற்குப் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அவரது கட்சி சார்பு பிரதியமைச்சராலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அவருடைய கட்சி சார்பு அரசியல்வாதியாலும் முறையாக வழிநடாத்தப்படவில்லை என்பதை ஹக்கீமும் ரிஷாட்டும் இப்போதுதான் உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.   

சாய்ந்தமருது மக்களுக்கு, ‘இதோ உள்ளூராட்சி மன்றம் கிடைக்கப் போகின்றது’ என்று ஆசைகாட்டப்பட்ட வேளையில், அதற்கெதிராக கல்முனை மக்கள் தூண்டிவிடப்பட்டனர்.   
பின்னர், ‘இல்லை எமக்குத் தந்தே ஆகவேண்டும்’ என்ற கோஷத்தோடு சாய்ந்தமருது மக்கள் எழுச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு இரு பிரதேசங்களுக்கிடையிலும் முறுகல் வந்தமையால் உள்ளூராட்சி சபையைப் பிரகடனப்படுத்தவே முடியாத நிலை வந்த பிறகுதான், இதை யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு செய்வது என்ற மீள்பரிசீலனை ஒன்று, முஸ்லிம் அரசியலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.   

முன்-பின் காரணங்கள், பின்புலங்களை அறியாமல் வெறும் கைதட்டல்களுக்காகவும் வாக்கைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்குகின்ற வெற்று வாக்குறுதிகளினால் முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள மிகப் பிந்திய பின்னடைவுக்கு உதாரணமாகச் சாய்ந்தமருது விவகாரத்தையும் அதன் வழிவந்த குழப்பங்களையும் கருதலாம்.   

இந்தநேரத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்தது. தேர்தல் நெருங்கிவந்த காலத்தில், மக்களை ஒருகுடையின் கீழ் ஒன்றுபடுத்தி, அதனூடாக அரசியல் அழுத்தத்தை கொடுப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டது. இது பலதரப்பாலும் கவனிக்கப்பட்ட ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். 

சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்னின்றமையும் அதற்குப் பின்னால் 95 சதவீதமான மக்களை ஒன்றுதிரட்ட முடிந்தமையும் கடந்த 30 வருடங்களிலான முஸ்லிம் அரசியல், சமூக செயற்பாட்டுக் களத்தில் மிக முக்கியமான மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.   
இந்தப் பின்னணியோடு, சாய்ந்தருது எழுச்சி கொண்டது. இவ்வளவு காலமும் இதைவிடப் பெரிய ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட நேரங்களில் அரசியல், சமூகக் காரணங்களுக்காகப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ், முஸ்லிம்கள் ஒன்றுசேரவில்லை என்பதுடன், பள்ளிவாசல்கள் தஞ்சமடையும் இடங்களாகவே பயன்படுத்தப்பட்டன.   

என்றாலும், சாய்ந்தமருது பள்ளிவாசலின் நகர்வும் அதனூடான ஜனநாயகப் போராட்டமும் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி முழுமொத்த தேசிய அரசியலிலுமே முன்னெப்போதும் இல்லாத அதிர்வொன்றை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.   

ஆனால், இந்த விவகாரம் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை எடுத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமையும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வகிபாகவும் பரவலாக மெச்சப்பட்டாலும் கூட, அது இப்போது ஒரு சட்டச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது அல்லது மாட்டிவிடப் பட்டுள்ளது.   

தார்மீகம் - ஜனநாயகம் - சட்டம் ஒழுங்கு என்ற மூன்று விடயங்களும் ஒரேநேர்கோட்டில் பயணிக்க முடியாத சூழல் வந்தபோது, சட்டத்தின் பிரயோகம் அங்கு மேவி நிற்பதை இப்போது காண்கின்றோம்.  

யாருக்கு கோபம் வந்தாலும், சில விடயங்களைப் பேசியே ஆகவேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சிகள் தம்மை ஏமாற்றிவிட்டன என்று கூறியும், தனியான உள்ளூராட்சி சபை தரும்வரை எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை என்று கூறியுமே சாய்ந்தமருது மக்கள் தனியான ஒரு சுயேட்சைக் குழுவை நிறுத்தினார்கள்.   

அந்தக் குழுவுக்கு 90 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. இந்த ஒற்றுமைப்பட்ட நகர்வு, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் ஒரு முன்மாதிரி என்பதை மறுக்க முடியாது. அந்தவகையில் சாய்ந்தமருது பள்ளி நிர்வாகமும் ஏற்பாட்டாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.   

இதனைப் புரிந்து கொண்டு, மக்கள் காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளர்களை அங்கு நிறுத்துவதில்லை என்ற ஒரு தார்மீகமான அறிவிப்பை விடுத்தது. ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தியது.   

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மு.கா தலைவர், தமது ஊருக்குள் வரமுடியாத நிலைமையை உருவாக்கினார்கள். ஆனால், ஜனநாயக நாடொன்றில், தேர்தல் காலத்தில் பள்ளிவாசலை முன்னிறுத்திச் செயற்படும் ஊரொன்று இவ்வாறு செயற்படுவது நல்லதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

இலங்கையில் இனவாதம் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல்களில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகின்றது; கடும்போக்குவாதம் போதிக்கப்படுகின்றது என்று இனவாத சக்திகள் கூறிவருகின்ற ஒரு நாட்டில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.   

இந்தநேரத்தில், ஒரு ஜனநாயகப் போராட்டத்துக்குப் பள்ளிவாசல் தலைமை தாங்குவதும், அந்த ஊரே அதன்பின்னால் நிற்பதும், இனவாதிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியாளர்களுக்கும் ஜீரணிக்க முடியாத விடயமாகவே இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

பள்ளிவாசல் தலைமை தாங்குவதால், சாய்ந்தமருதில் எந்தவித கெட்ட சம்பவமும் பதிவாகவில்லை. இது பாரிய கிளர்ச்சியாக வெடிக்கவும் இல்லை என்பது வரவேற்கத்தக்கது.   

ஆனால், ஊரின் ஒரு மூலையில், சில இளைஞர்கள் முரண்பட்டுக் கொள்வதையும், யாரோ சில பக்குவமற்றவர்கள் கல்லெறிவதையும் என....பள்ளிவாசல் நிர்வாகம் ஒவ்வொரு விடயமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. அது சாத்தியமும் இல்லை.   

ஆனால், சாய்ந்தமருதில் என்ன சிறிய சம்பவம் நடந்தாலும் அது ‘பள்ளியின் வழிப்படுத்தலில் உள்ள தவறு’ என்றே சிங்கள சக்திகளாலும், அதிகாரிகளாலும் பார்க்கப்படலாம். அதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் எண்ணெய் ஊற்றுவார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

சாய்ந்தமருது நிர்வாகத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கலைக்கப் போகின்றது என்று இறக்காமத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதை, தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்திருந்தாலும், சாய்ந்தமருது விடயத்தில், சாய்ந்தமருது நிலைவரங்களை ஆணைக்குழு தொடர்ந்து அவதானித்து வந்திருக்கின்றது என்பதும் பொதுவான அபிப்பிராயங்களும் அனுமானங்களும் ஆகும்.   

அதாவது, தேர்தல் ஆணைக்குழு நேரடியாகப் பள்ளிவாசல் நிர்வாகத்திலோ அதனது செயற்பாட்டிலோ தலையீடு செய்ய முடியாது என்றாலும், தேர்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத் தரப்பு என்ற வகையில், அச்சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்துவதையும் தேர்தல்கால ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உரிய தரப்புக்கு அறிவிப்பதற்கும் ஆணைக்குழுவால் முடியும்.   

அந்த அடிப்படையிலேயே, சாய்ந்தமருது விவகாரத்தில் அதிகாரத் தரப்புகள் நடந்து கொண்டுள்ளதாகக் கருத நிறைய இடமுள்ளது. சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆயுட்காலம் வறிதாக்கப்பட்டமைக்கும் வக்பு சபையால் வேறு நிர்வாக சபை தற்காலிகமாக நிறுவப்பட்டமைக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை, உய்த்தறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று.   

இவ்வாறு பள்ளிவாசலின் நடவடிக்கைகள் விடயத்தில் அதிகாரத் தரப்புகள் சட்டப்படி நடந்து கொண்டிருந்தாலும், சாய்ந்தமருதில் வேறு நிர்வாக சபை பதவிக்கு வந்திருந்தாலும் அவ்வூரின் அரசியல் களநிலை மாறப் போவதில்லை என்பது மிகவும் முக்கியமானது.   

இதனால், இன்னும் அந்த மக்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றார்களே தவிர, எந்த வெளிக்கட்சிக்கும் அங்கு வாக்கு அதிகரிக்கவில்லை என்றே தெரிகின்றது.   

எனவே, முஸ்லிம் அரசியலில் பள்ளிவாசல்களின் வகிபாகம் மிக இன்றியமையாதது. ஆனால், பல்லின நாட்டில் நேரடியாக அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மாறாக, மக்களை வழிப்படுத்தலாம்; அறிவுறுத்தலாம்.   

ஆனால், எல்லாவற்றிலும் இஸ்லாமிய ஒழுக்கம் நிலைநாட்டப்பட வேண்டியது கட்டாயமானது. அதேபோல், எந்தக்கட்சிக்கும் எங்கும் தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் உரிமை இருக்கின்றது.  

அவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றால், எல்லோரும் ஒன்றுபட்டு வாக்களித்து, அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமே தவிர, நம்மீது சட்டம் கெடுபிடிகளைச் செய்யுமளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-அரசியலும்-பள்ளிவாசல்களும்/91-210188

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.