Jump to content

சினிமா விமர்சனம் - குலேபகாவலி


Recommended Posts

சினிமா விமர்சனம் - குலேபகாவலி

பிரபுதேவாபடத்தின் காப்புரிமைGULOBAKAVALI
நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு
   
இசை விவேக் - மெர்வின்
   
ஒளிப்பதிவு ஆர்.எஸ். அனந்தகுமார்
   
இயக்கம் கல்யாண்

1955ல் எம்.ஜி.ஆர். நடிக்க டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த குலேபகாவலி படத்தில் தந்தைக்குப் பார்வை கிடைப்பதற்காக பகாவலி நாட்டில் உள்ள ஒரு மலரைத் தேடி பயணம் செய்வான் கதாநாயகன். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் குலேபாவலி என்ற ஊரில் உள்ள புதையலைத் தேடிச் செல்கிறான் கதாநாயகன்.

1945ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறும் ஒரு பிரிட்டிஷ்காரரிடமிருந்து ஏமாற்றிப்பறித்த வைரங்களை குலேபகாவலி என்ற ஊரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் புதைத்துவைக்கிறார் ஒருவர். அவரது பேரன், அந்த வைரத்தை தற்போது கைப்பற்ற விரும்பி, ஆட்களை அனுப்புகிறான். சிலை கடத்தலில் ஈடுபடும் நம்பியின் (மன்சூர் அலிகான்) அடியாளான பத்ரியும் (பிரபுதேவா) அதே நேரத்தில், அதே ஊரில் உள்ள சிலையைக் கடத்துகிறான்.

ஹன்சிகா மோத்வானிபடத்தின் காப்புரிமைGULOBAKAVALI

ஆனால், ஊரார் சுதாரித்துவிட எல்லோரும் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். மீண்டும் புதையலை எடுக்க முயற்சிக்கிறது பேரனின் குழு. பத்ரி தவிர, சிறு சிறு திருட்டில் ஈடுபடும் விஜி (ஹன்சிகா மோத்வானி), கார் திருட்டில் ஈடுபடும் மாஷா (ரேவதி) ஆகியோர் வெவ்வேறு கட்டாயங்களால் ஒன்றாக இணைந்து இந்த புதையலைக் கைப்பற்றச் செல்கிறார்கள். இதற்கு நடுவில் அண்ணாச்சியின் (மொட்டை ராஜேந்திரன்) குழு, நம்பியின் குழு, குலேபகாவலி ஊர்க்காரர்கள் என பலரும் புதையலை எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து தடை ஏற்படுத்த, புதையல் கைப்பற்றப்பட்டதா என்பது மீதிக் கதை.

புதையலைத் தேடும் சாகஸக் கதை என்பதால் செண்டிமென்ட், காதல் போன்றவற்றுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தை நகர்த்தியிருப்பது ஆறுதலான விஷயம். துவக்கத்திலேயே சிலை கடத்தல், தொடர்ந்து ஏமாற்றுக்காரர்களின் அறிமுகம் என விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது படம். ஆனால், திடீர் திடீரென உள்ளே நுழையும் பாடல்கள், மனதில் ஒட்டாத சில காட்சிகள், கதாபாத்திரங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருப்பது என பல வேகத் தடைகளை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். பல சமயங்களில் திரையைப் பார்க்காமலேயே காட்சிகளை யூகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு எல்லோரும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளின் நீளமும் படத்தின் பலவீனங்களில் ஒன்று.

முனீஸ்காந்த்படத்தின் காப்புரிமைGULOBAKAVALI

ஆனால், படம் நெடுக வரும் நகைச்சுவை காட்சிகளும் சின்னச் சின்னத் திருப்பங்களும் இந்த வேகத் தடைகளை கடந்துசெல்ல உதவுகின்றன. ஹீரோ பாபுவாக வரும் யோகிபாபு பல காட்சிகளில் சிரிக்க வைத்துவிடுகிறார். மொட்டை ராஜேந்திரனின் துவக்க காட்சிகள் சற்று நாடகத்தனமானவை என்றாலும் பிற்பாதியில் அதை ஈடுகட்டிவிடுகிறார். கமல்ஹாசனைப் போல ஒருவரை மொட்டை ராஜேந்திரன் குழுவில் வைத்து, அவர் கமல் மாதிரியே நடந்துகொள்வது ஏக ரகளை.

இந்தப் படத்தில் கதை - திரைக்கதையே முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்பதால், பிரபுதேவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் சொல்லத்தக்க படமென்று கூறமுடியாது. ஆனால், முடிந்தவரை சிறப்பாகவே தங்கள் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார் திருடியாக வரும் ரேவதிக்கு இது முக்கியமான படம். தமிழ்த் திரையுலகில் அவருக்கு உள்ள சோக பிம்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பில்ட்-அப் கொடுத்துவிட்டு பிறகு அதை நகைச்சுவையாக்கிவிடும் உத்தி நன்றாகவே எடுபடுகிறது. முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும் வழக்கமான ஒரு படம் இது.

இன்னும் கச்சிதமான திரைக்கதையோடு, தேவையில்லாத காட்சிகளையும் பாடல்களையும் நீக்கியிருந்தால் ஒரு சிறந்த காமெடி - சாகஸமாகியிருக்கும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42651243

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.