Jump to content

T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார


Recommended Posts

T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார

Sanga-3-696x464.jpg Image Courtesy - Cricinfo
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார்.

 

டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக கடந்த வருடமும் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த சங்கக்கார, அவ்வணியின் தலைவராகச் செயற்பட்ட அன்சுமன் ராத்துக்கு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார். இதன் காரணமாக அந்நாட்டு உள்ளூர் போட்டிகளில் கடந்த வருடம் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் மாறினார். எனினும், அவர் இம்முறை போட்டித் தொடரில் சிட்டி கைடெக் அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹொங் கொங் T-20 போட்டித் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பில் சங்கக்கார அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கடந்த வருடமும் இப்போட்டித் தொடரில் விளையாடக் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே இம்முறைப் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கு ஆவலுடன் உள்ளேன் என்றார்.  

ஹொங் கொங்கில் கிடைக்கின்ற கிரிக்கெட் அனுபவத்தை தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்த சங்கக்கார, திறமைமிக்க உள்ளூர் வீரர்களுடனும், உற்காசமளிக்கின்ற ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சங்கக்காரவின் மீள் வருகை குறித்து கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்கோட் மெகேனி கருத்து வெளியிடுகையில், இம்முறை போட்டித் தொடரிலும் சங்கக்காரவை அணியுடன் இணைத்துகொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய திறமை மற்றும் அனுபவம் என்பன இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எனவே அவரை ஒப்பந்தம் செய்யக் கிடைத்தமை எமது அணிக்கு சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுப்பதுடன், ஹொங் கொங் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

இதுவரை 56 T-20 போட்டிகளில் விளையாடி 1,382 ஓட்டங்களைக் குவித்துள்ள சங்கக்கார 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டியுடன் வர்வதேச T-20 அரங்கிற்கு விடைகொடுத்தார். அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் தொடர்களில் விளையாடி வருகின்ற அவர், இறுதியாக கடந்த வருடம் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணி பங்குபற்றியிருந்த 4 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்து கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனவே இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள கொவுலுன் கென்டன்ஸ், சிட்டி கைடெக், ஹுங் ஹொன்ங் மற்றும் அய்லன்ட் யுனைடெட் ஆகிய அணிகளுக்கு சவலாளித்து சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சீக்குகே பிரசன்ன கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காகவும், திலகரத்ன டில்ஷான் சிட்டி கைடெக் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இம்முறைப் போட்டித் தொடரிலும் பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொவுலுன் கென்டன்ஸ் அணி – சஹீட் அப்ரிடி, மார்லன் சாமுவேல்ஸ், டுவைன் ஸ்மித்

ஹுங் ஹொன்ங் அணி – மொஹமட் ஹபீஸ், டெரன் சமி, ஜொஹான் போதா, ஜேம்ஸ் பிரான்கிளின்

கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணி குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஜெஸ்ஸி ரைடர், சொஹைல் தன்வீர்

அய்லன்ட் யுனைடெட் அணி – மிஸ்பா உல் ஹக், இயென் பெல், சாமுவேல் பத்ரி, சயீட் அஜ்மல்  

சிட்டி கைடெக் அணி – திலகரத்ன டில்ஷான், கிறிஸ் ஜோர்டன்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.