Jump to content

திருமண வாழ்க்கை பற்றி ஒரு ஆண்மகனின் அழுத்தமான கடிதம்: அனைவரும் படியுங்கள்…!!!


Recommended Posts

திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது.

வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

பெண்களை பாதுகாக்க போட்டப்பட்ட சட்டங்களை அவள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, எங்களுக்கு எதிரான அனைத்தையும் திசைதிருப்பி விட்டாள். நான் காவல்நிலையம் சென்று எனது மனைவியால் எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தால், அவர்களுக்கு என்னை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

உனது மனைவி உன்னை அடித்தது உண்மைதானா? நீ அடிவாங்கினாயா? என்பது போன்ற உதாசீனமான கேள்விகளை கேட்டனர்.

இறுதியில் எங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. எனக்கு பெண் குழந்தை இருப்பதால் சட்டப்படி பெண் குழந்தை தாயின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதால் அவளை பெறுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை.

எனது மகள் அவளது தாய்வழி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருகிறாள். ஒரு நரகமான வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றாலும், எனது வாழ்க்கையும் சீரழிந்துவிட்டது என நினைத்து வருத்தப்படுகிறேன்.

இதனை எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றால், பெண்கள் மட்டுமே ஆண்களால் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று சமுதாயம் கருதுகிறது, ஆனால் ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.

வன்முறைகள் என்று வந்துவிட்டதால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். எனவே இருபாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

 

todayjaffna.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வர முதலாவது காரணம் பிள்ளை யாரையாவது விரும்பியிருக்கும்.சாதி மத பிரச்சனைகளால் விருப்பம் இல்லாத ஒருவருக்கு கட்டி வைத்து பெற்றோர் தமது கடமையை முடித்துவிடுவார்கள். பிள்ளை பெற்றோரின் கோபத்தை வந்தவரில் காட்டிக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு முற்றிலுமான கற்பனைக் கதை அல்ல...நிறைய உண்மைகள் கலந்திருக்கின்றன!

ஒரு பெண் நிறையக்  கனவுகளைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறாள்! அவற்றை நிறைவேற்ற வேண்டிய ஒரு ஒரு பெரிய சுமையை....தனது கணவன் மீது சுமத்தி விடுகிறாள்!  தனது கனவுகளை மட்டுமல்ல....தனது தாய் தந்தையர்....சகோதரர்களின் கனவுகளையும் கூட..அவன்  மீதே சுமத்தி விடுகிறாள்!

ஒரு அழகிய சிலை ஒன்று...விலை கொடுத்து வாங்கப் பட்டால்...அந்தச் சிலையை வடித்தவர்கள் ...அந்தச் சிலை மீதான முழு உரிமையையும் இழந்து போகின்றார்கள் என்பது தான் நிதர்சனம்! அந்தச் சிலை தங்கள் கண் முன்னாலேயே உருக்குலைந்து போவதைக் கண்டும் ..எதுவும் செய்ய முடியாத நிலையில் அவனைப் பெற்றவர்கள் அழுது வடிக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம்! சமுதாயம், குடும்பக் கெளரவம் எனப் பல காரணங்களினால்..அவனது பெற்றோரின் கரங்கள் கட்டப்பட்டு விடுகின்றன!

தங்கள் வசதிக்கேற்ற மாதிரி....,.வளர்ந்த சமுதாயத்தின் சட்டங்களையும்......வாழும் சமுதாயத்தின் சட்டங்களையும்...உபயோகித்துக் கொள்வார்கள்! இப்படியான மன நிலையில் உள்ளவர்களுக்கு....ஆலோசனை என்ற பெயரில்..உதவப் பலர் உள்ளனர்!

இளமையிலேயே தலை மயிர் நரைத்துப் போன பலரை நானும் அறிவேன்!

சுய நலம் என்பது வெறியாக மாறும் போது....அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகி விடுவதே....சாலச் சிறந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்! அது ஒரு நரம்பியல் மனநிலை சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதனால், மனநல  சிகிச்சை எடுத்திருந்திருக்கலாம்!

அதற்காக ஆண்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று அர்த்தமில்லை,

காலியான பல விஸ்கி போத்தலுகளுக்கு மட்டுமே தெரியும் ஆண்கள் அனைவருமே உத்தமர்கள் அல்ல என்று...

அடுப்படியில் கிடக்கும் பூரிக்கட்டைக்கு மட்டுமே தெரியும் பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள் அல்ல என்பது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

பெண் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்! அது ஒரு நரம்பியல் மனநிலை சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதனால், மனநல  சிகிச்சை எடுத்திருந்திருக்கலாம்!

அதற்காக ஆண்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று அர்த்தமில்லை,

காலியான பல விஸ்கி போத்தலுகளுக்கு மட்டுமே தெரியும் ஆண்கள் அனைவருமே உத்தமர்கள் அல்ல என்று...

அடுப்படியில் கிடக்கும் பூரிக்கட்டைக்கு மட்டுமே தெரியும் பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள் அல்ல என்பது!

இதுக்காகத் தான் நான் வீட்டில் பூரிக்கட்டையே உபயோகிக்கிறதில்லை!

ஏன்....பூரியோ..சப்பாத்தியோ...அல்லது ரொட்டியோ கூட வீட்டில செய்ய அனுமதிக்கிறதும் இல்லை!

ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தால்...இருக்கவே இருக்கு....இந்தியன் உணவகங்கள்!

அது சரி...வளவன்!

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புங்கையூரன் said:

 

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

புலத்தில் பல பெண்களின் வாழ்வு அடி,உதை,அவமானம் வறுமை , சிலவேளை அது கொலைவரை சென்று  அஸ்தமனமானது பல முழுநேர குடிகாரர்களால், அதை மனசில்  வைச்சுத்தான் அதை சொன்னேன்!

யாழிலேயே அதற்கு உதாரணமும் உண்டு: 

https://www.yarl.com/forum3/topic/205765-கனடாவில்-தமிழ்ப்-பெண்-அடித்து-கொலை-கணவன்-கைது /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மனைவி தனக்கு மட்டுமே உண்மையாக, தன்னை மட்டுமே சார்ந்தவளாக கிட்டத்தட்ட அடிமையாக இருக்க வேண்டுமென கணவன் நினைத்து நடக்கையில், மனைவிக்கும் அதே எண்ணம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்...?

You reap what you sow..!

இல்வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே சமம்தான், ஏற்றத் தாழ்வு கிடையாது,இருக்கவும் கூடாது.  இதில் நான் ஆண், என் எண்ணப்படிதான் அனைத்தும் நடக்கவேண்டும் என பெரும்பாலான கணவன்கள் நினைப்பது தவறு, அதுவே குடும்ப வன்முறைகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் காரணமாகிறது.

மனைவி என்பவள், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வரும் வேலைக்காரியோ, அடிமையோ அல்ல,( புங்கை கவனிக்க -அவள் கல்லாலான சிலை அல்ல, வாங்கி உங்கள் விருப்பதிற்கு ஆட்டுவிக்க..! non-2010.gif) அவளுக்கும் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் உண்டு அவற்றை மதித்து நிறைவேற்றுவது கணவனின் கடமை. இன்னமும் மனைவிகளை ஏளனமாக நடத்தும் கணவன்கள்தான் இவ்வுலகில் பெரும்பான்மையானவர்கள். stopnon.gif

ஆணாதிக்க எண்ணத்தில் தவறாக/குழப்பத்துடன் நடந்துவிட்டு, 'வாழ்க்கையே போச்சுது.. நிம்மதியே போச்சுது..!' என புலம்புவதில் ஒரு பயனும் இல்லை!

Link to comment
Share on other sites

9 hours ago, நிலாமதி said:

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

தற்போதும்  திருமணங்கள் மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.1.2018 at 4:30 PM, Paanch said:

-------

குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

----

 

Bildergebnis für தமிழ் கலியாணம்.

திருமணம் என்பது,  "சொர்க்கத்தில்.... நிச்சயிக்கப் படுவது"   என்று சொல்வார்கள்.
அந்தத் திருமண தம்பதிகளின், பெற்றோர்.... எத்தனை வருடங்கள் காத்திருந்து,  பல எதிர் கால கனவுகளுடன்... செய்து வைக்கும், திருமணங்கள்.... அடுத்த  தலைமுறையின், வாழ்க்கை  பாதிக்கப் படுவதை,  பார்ப்பது,  வேதனையான... விடயம்.  

எல்லா.... திருமணத்தையும், ஒரு பொதுவான... வரை முறைக்குள், அடக்க முடியாது என்றாலும், விட்டுக்  கொடுப்புகள், இரு பகுதியிலும்... இருக்க வேண்டியது.. மிக முக்கியம்.காரணம்:  இரண்டு திருமண தம்பதிகளும்.... ஒரு நாடு, ஒரு மொழி,  ஒரு  இனம், ஒரு  மதம்,  ஒரு கலாச்சாரம்  என்று... வாழ்ந்தாலும்.....அந்தப் பிள்ளைகளின்... வளர்ப்பு,  பழக்க வழக்கம்... போன்றவை ஒன்றாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அதனை... இரு பகுதியும்... எதிர் பார்ப்பது தான்.... பிரச்சினையின், மூல காரணம். 

தமிழர்கள் மத்தியில்....  ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கைக்கு அப்பால், வெளிநாட்டவர்களும், மிக மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கண் கூடாக அறிவீர்கள். பிரச்சினை... பொதுவானது. நாம்... பார்க்கும், பார்வை...  வேறானது  என நினைக்கின்றேன்.  :)

++++++++   ++++++++    +++++++++

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

கூகிள்..... ஆண்டவர்,  பிறக்க முன், நடந்த........ கதை, இது... ஈழப்பிரியன்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

ஆக மொத்தத்தில் உண்மையாக, மறைக்காமல் நடந்துகொள்வதில்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் படியுங்கள் என்ற கோரிக்கையோடு உள்ள இந்தக் கதை உண்மையாக இருக்க சாத்தியங்கள் குறைவு.

மேலும் கதையானது கணவனின் ஒரு தரப்புப் பார்வையாகவே உள்ளது. இதில் நிறைய கட்டுக்கதைகளும் இருக்கலாம். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளதுபோல, அடுத்த பக்கத்து மனைவியின் கதையையும் கேட்டால்தான் கதையில் உள்ள உண்மைகளை ஓரளவு அறிந்துகொள்ளலாம். 

கலியாணம் கட்டி வாழ்பவர்கள் எல்லாம் புரிந்துணர்வோடு காலங்காலமாக வாழ்கின்றனர் என்றில்லை. ஒவ்வொருவரும் அடிப்படையில் தனியன்கள். அவர்களுக்கான சுய விருப்பு வெறுப்புக்களில் ஒரு குறித்த வீதம் பொருந்தினால் அந்தப் பொதுவான தடத்திலேயே வாழ்க்கையை சிக்கல்களின்றி ஓட்டிவிடலாம். ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்து இயல்புகளை மாற்ற முயலும்போதுதான் விரிசல்களும் வெடிப்புக்களும் உருவாகின்றன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.