Jump to content

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்!!!


Recommended Posts

தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம்

 

 
Capture

ராகுல் திராவிட் மகன் சமித்.

சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார்

ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். திராவிட் மகன் சமித் மட்டுமல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் எடுத்தார், இவரும் சமித்தும் இணைந்து பெரிய கூட்டணி அமைக்க மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 500 ரன்கள் குவித்தது.

சமித், ஆர்யன் ஜோஷி சாத்துமுறைக்குப் பிறகு விவேகானந்தா ஸ்கூல் அணியை வெறும் 88 ரன்களுக்குச் சுருட்டினர்.

2015-ம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article22413003.ece

Link to comment
Share on other sites

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்!!!

 

 

இந்தியா - கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பி.டி.ஆர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ட்ராவிட்டின் மகன் சமித் விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக  150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

samit-dravid-1024x576.jpg

ராகுல் ட்ராவிட்  நியூஸிலாந்தில்  இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

ட்ராவிட் மகன் சமித் மட்டுமல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் எடுத்துள்ளார்.

Av-GVD_CIAAVDKw.jpg

சமித்தும்,ஜோஷியும்  இணைந்து பெரிய கூட்டணி அமைக்க, மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை குவித்துள்ளது.

online_New_Slide__3_.jpg

சமித் மற்றும்  ஆர்யன் ஜோஷியின் துடுப்பாட்டத்திற்கு பிறகு விவேகானந்தா பள்ளி அணியை, மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளி  அணியினர் வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருட்டினர்.

2015 ஆம் ஆண்டு  கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/29264

Link to comment
Share on other sites

47 ரன்கள்...4 விக்கெட்! ஆஸ்திரேலியாவில் அசத்திய சச்சின் மகன் 

 
 

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் (வயது 18). இவரும் கிரிக்கெட் வீரராக களத்தில் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அர்ஜுன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 தொடரில் பங்கேற்று வருகிறார்.

ARJUN

 
 


சிட்னி கிரிக்கெட் மைதானம் சார்பில் கிளப் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணி சார்பில் அர்ஜுன் பங்கேற்று விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணியும், ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணியும் மோதிய போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில், பேட்டிங், பந்து வீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் கலக்கி எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசியதோடு, நான்கு விக்கெட்டுகளையும் அவர் அள்ளினார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட்டில் சாதனைகள் பல நிகழ்த்திய நிலையில், அவருடைய மகனும் சிறந்த வீரராக உருவெடுத்து வருவதையே இந்த ஆட்டம் காட்டுகிறது. 

இடக்கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை பேட்ஸ்மேனான அர்ஜுன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தனது ரோல் மாடல்களாகச் சொல்கிறார். 

https://www.vikatan.com/news/sports/113390-sachin-tendulkars-son-arjun-tendulkar-sparakles-in-australia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.