Jump to content

பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்!


Recommended Posts

பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்!

 

கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார்.

Baheer_18503.jpg

 

Photo Credit: Afgan Cricket board

ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டியில் வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்கள் பட்டியலில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அறிமுகப் போட்டியில் 260 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பது மும்பை வீரர் அமோல் மஜூம்தார். அதேபோல், இளம்வயதில் முச்சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டடுக்கு அடுத்தபடியாக பஹீர்ஷா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். 

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பஹீர்ஷாவின் பேட்டிங் சராசரி 121.77. இது, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சராசரியை விட அதிகம். பிராட்மேனின் பேட்டிங் சராசரி 95.14 ஆகும். இதன்மூலம் உலக அளவில் முதல்தர போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் பேட்டிங் சராசரி அதிகம் வைத்திருக்கும் வீரர் என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் இளம் வீரர் பஹீர்ஷா படைத்துள்ளார். நியூசிலாந்தில் விரைவில் தொடங்க உள்ள ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. 

https://www.vikatan.com/news/sports/113287-afghanistan-cricketer-baheer-shahs-record.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.