Jump to content

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?


Recommended Posts

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழ் இளைஞர்களுக்கு,

இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும்.

அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.

தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும்.

பெண்படத்தின் காப்புரிமைANDREAS SOLARO

ஆனால், எந்த கலாசாரத்தில் இருந்தாலும் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம்பெண்ணின் விருப்பம். அதுவும் இக்காலத்தில், இந்த நூற்றாண்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும், மேலும் "பாலியல் உறவு" என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து இருப்பது போல தெரிகிறது.

சீதை போன்ற ஒரு மனைவிதான் வேண்டுமா?

சில நேரங்களில், எங்கள் கோபம் கண்களை மறைக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். எனவே, "நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்" என்று நினைத்தே வளர்ந்திருப்பீர்கள்.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது போதாது என்று, பெண்களை தேவதை போன்று சித்தரிக்கும் பல தமிழ் படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான் நீங்கள்.

ராமாயணத்தில் வரும் சீதையை பின்பற்றும், அழகான பதுமைகளாக பெண்களைப் போற்றும் அர்த்தமற்ற பல படங்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

அடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு

சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார்.

பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.

படையப்பாபடத்தின் காப்புரிமைYOUTUBE

இப்படி நீங்கள் பார்த்த புராணங்கள், படங்களில் எல்லாம் இரண்டு கோணங்களில்தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று, அடக்கமான அப்பாவியான பெண்கள் அல்லது காம உணர்வு கொண்ட மோசமான பெண்கள்.

அடக்கமான பெண்கள், காம உணர்வு கொண்டிருக்க கூடாதா?

உங்களால் இதை யோசிக்க முடியாது. ஏனெனில், ஒரு பெண்ணின் குணம் என்பது அவளது கற்பை வைத்தே இங்கு அளவிடப்படுகிறது.

பாலியல் சுதந்திரம் இருபாலருக்குமானது

ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு.

ஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலும், இந்த உரிமைகள் குறித்து கேள்வி கேட்பது இழிவானது போலவும், நீங்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ளது.

உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்கிறோம். பொறுமையாக கேளுங்கள். பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் உண்டு.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முழுமையான பாலியல் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று, எங்களுக்கும் அனுபவிக்க விருப்பம். இதை வைத்து எங்களை மதிப்பிட வேண்டாம். "திருமணத்திற்கு தகுதியற்றவள்" என கேலிக்குள்ளாகாமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.

எங்களை பெண்களாக இல்லாமல் ஏதோ போகப் பொருளாக பார்க்க வேண்டாம்.

இது மட்டுமில்லாமல் முதல் காதலனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனையை பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. உங்களைப் போலதான், இளம் வயதில் சாகசமும் வேடிக்கையும் எங்களில் சிலருக்கும் தேவை.

கற்பை வைத்து பெண்ணை வரையறுக்க வேண்டாம்

அடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்ற மோசமான சிந்தனையை அழித்து விடுங்கள்.

பாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள்.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து ஒரு பெண்ணை வரையறுக்கக் கூடாது.

ஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக, அவளது அறிவுத்திறன், சுதந்திரத் தன்மை போன்ற குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்,

இளம் தமிழ் பெண்கள்.

(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் நிவேதா ஆனந்தன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)

http://www.bbc.com/tamil/india-42591826

Link to comment
Share on other sites

On 9.1.2018 at 7:07 AM, நவீனன் said:

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?

அடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு

சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார்.

பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.

படையப்பாபடத்தின் காப்புரிமைYOUTUBE

(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் நிவேதா ஆனந்தன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)

http://www.bbc.com/tamil/india-42591826

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் முச்சந்தி   வேணுமா நாற் சந்தி வேணுமா என்று நாலு டயர் தேஞ்சு போக ஓடி எத்தனை கதை பேசியிருப்போம் ஒரு காலம்  அப்படி பகிடி விட்டு கதை பேசி இருக்கிறம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகள் இருபாலினத்துக்கும் பொதுவானதுதான்.....!

என்ன ஒரு கழுதை, ஆண்கள் டுகார்த்தி மோட்டார் சைக்கிள் மாதிரி பாய்ந்து ஏறி படார் என்று விழுந்து உருண்டு.....!

Image associée

பெண்கள் விமானம் மாதிரி அது பறக்கிறதுக்கு முன் சில நடைமுறைகள் உண்டு. பறந்தால் வழியில் நிறுத்த ஏலாது ,நிறுத்தினால் சேதாரம் அதிகம் .....!

    Image associée

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.