Jump to content

கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி


Recommended Posts

கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:-

keppapilavu1.jpg?resize=776%2C536
கேப்பாபிலவு

அடங்கி இருந்து
உடைமையைபெற்றிட
உறங்கியிருந்தனர்
முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும்
முடிவு!
அடக்கிவந்தவர் உடைமைகளை
முடக்கிக்கொண்டனர்
முடிந்தளவுமுனுமுனுத்தனர்
முற்றுப்புள்ளியில்லை

பசுமைவயல்
தென்னந்தோப்பு
குளிரூட்டும் தென்றல்
அப்புச்சி இருந்தமாமரம்
அதன் கீழ் ஒருஊஞ்சல் – என
கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும்
விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும்
அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர்

பெரியதலைகள் – உதவிக்கரங்களை
நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன
உரிமைகள் வாய் மூட
பலவாய்கள் திறந்து
விலைகளும் பேசின
வலக்கை இடக்கைக்கு
பணம் கொடுக்கவேண்டுமாம்
பரிதாபநிலை!பாருங்கள்

வலுப்பெற்றபோராட்டங்கள்
வலுவிழக்கின்றன
ஒற்றுமைஉடைபடும் போது– ஆம்
அடக்கிவாழ்வோர்
உணர்வுகள் உறங்கும்
இடத்தினைஉடைத்திடும்
உத்திகண்டனர் – அதில்
வெற்றியும் கண்டனர்

இன்றும்
அடக்குவோர் அடங்குவோர்
மாற்றமில்லை
உத்தியும் மாற்றமில்லை
அதேஉத்தியுடன்
இன்றும் கேப்பாபிலவு

முல்லைதாரிணி

Keppapulavu.jpg?resize=800%2C450

மனதினுள் மரித்திடாரணங்கள்

வருடங்கள் சென்றாலும்
மனதினுள் மரித்திடாரணற்களை
மௌனமாய் யாசிக்கும்
தாய்மைஉள்ளங்களில் – தம் மகவு
தரணியில் தளையிடும் – முன்
கிள்ளிஎறியப்பட்டமையும் – அதன்
நினைவுத்தடயங்கள்
கிளறிஎறியப்பட்டமையும்……

குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய
ஆலிங்கணம் – அன்று
அடைந்தஆனந்தத்தை
அசைபோட்டுபார்க்கிறது
அனைத்தும் அன்றய
நிகழ்வுகளின் நிழல்களாய்

பலவருடஓட்டத்தில்
புகைப்படம் தேடும் மனதுள்ளே
சிலகேள்விகள்
மனதைஅடக்கி
மருண்டுகிடக்கிறன

இறந்தபின்னும் – அவ்வுருவம்
இனவேற்றுமைசொல்லுமா?
நினைவுகளைசுமந்துநிற்கும்
சின்னங்கள் அழிக்கப்பட்டால்
நினைவுகள் அழிந்துவிடுமா?
நினைவுகளின் வலிமையை
நியங்களேஅறியும்

மஞ்சல் உடையைக்கண்டாலே
மனதுள் முளையிடும்
மகளின் ஞாபகங்களுன் – ஒருமனது
வேலைச்சுமைஅறிந்து
பலமைல்கள் கடந்து
தண்ணீhஎடுத்துவரும் – என் மகன்
பலவருடம் கடந்தாலும்; – அவன் மறைவு
வாட்டிவிடும் – என
எண்ணமறந்தானே–என
எண்ணிடும் ஒருமனது – என
பலஎண்ணங்களுடன்
பலமனதுகள்

உணர்வுகள் உந்தப்பட்டு
உண்மைஅறிய
எத்தணிக்கும் தருணங்களில்
உண்மையின் அர்த்தம்
எதுவுமில்லை
ஏன்?ஏதற்காக இவ் இழப்பு?
என்றும் துன்பத்துடன்
என்றும் பயத்துடன்
என்றும் ஏக்கத்துடன்
மனதுள் பலமுட்டுக்கட்டைகளாய்

பூமித்தாயும
;பூமியில் வாழும்தாய்களும்
வலியின் ரணங்களால்
நாளும் செத்தவண்ணம் – யாரோசிலரின்
பேராசையின் அசைபோடலால்

முல்லைதாரிணி

http://globaltamilnews.net/2018/60012/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.