Jump to content

புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு…


Recommended Posts

புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு…

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

funding-the-LTTE-to-stand-trial-in-Swiss

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண்டு இவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி, பணச் சலவை, கப்பம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/59596/

Link to comment
Share on other sites

கொடுத்தது சரி, வாங்கியது தவறு!

 

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று ஸ்விட்ஸர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்விட்ஸர்லாந்து, ஜேர்மன் மற்றும் இலங்கை நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

3_LTTE.JPG

கைது செய்யப்பட்டவர்களுள் உலகத் தமிழ் ஒருங்கமைச்சு சங்கத்தின் நிறுவனர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரும் அடங்குவர்.

1999 முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், தவறான வழிகளில் நிதிசேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுமார் 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் சேர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பதின்மூவர் மீதும் மோசடி, போலி ஆவணப்படுத்தல், பணச் சலவை மற்றும் பணம் பறித்தல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்விட்ஸர்லாந்தில் எல்.டி.டி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாமையால் அவ்வியக்கத்துக்கு நிதி வழங்கியதன் பேரில் சந்தேக நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

எனினும் பொய்யான ஆவணங்கள் மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் பணம் திரட்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும்.

இவ்வாறு பெறப்பட்ட நிதி சிங்கப்பூர், டுபாய் வழியாக எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்குச் சென்று சேர்ந்ததாகவும் அவற்றை ஆயுதங்கள் வாங்க விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகவும் கருதப்படுகிறது.

http://www.virakesari.lk/article/29017

Link to comment
Share on other sites

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…

Tamils-protest-outside-Swiss-court03.jpg

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிராக தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமையை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

13 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிச் சலவை, நிதி மோசடி, போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இந்த 13 பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இவ்வாறு நிதி திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த 13 பேருக்கு எதிராக பிழையாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

Tamils-protest-outside-Swiss-court3-1.jp

Tamils-protest-outside-Swiss-court3.jpg?

http://globaltamilnews.net/2018/60368/

Link to comment
Share on other sites

  • 1 month later...

விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு! 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

 

 

 

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு வார இடைவெளிக்குப்பின் Bellinzonaவிலுள்ள Federal Criminal நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையின் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அரச சட்டத்தரணியின் முடிவுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு காத்திருக்கிறது.

திங்கட்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளும், அரச தரப்பு சட்டத்தரணிகளும் சமீபத்திய ஆதாரம் குறித்து விவாதித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பின் சட்டத்தரணிகள், எட்டு ஆண்டுகளுக்குமுன் இந்த வழக்கு தொடங்கியதிலிருந்தே வழக்குடன் தொடர்புடையவர்களான Vaudஐச் சேர்ந்த இரண்டு பொலிஸாரை விசாரிக்க அனுமதி கோரினர்.

தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அரச சட்டத்தரணி.

அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்த World Tamil Coordinating Committee (WTCC) என்னும் தமிழ் அமைப்பின் காசாளர் சார்பாக வழக்காடிய சட்டத்தரணிகள், குறிப்பாக அரச சட்டத்தரணி அலுவலகம் மற்றும் WTCC அலுவலகங்களுக்கிடையே தொடங்கப்பட்டிருக்கவேண்டிய தொலைபேசித் தொடர்புகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் இலங்கையின் சிவில் யுத்தம் குறித்து நன்கறிந்த இன்னொரு வரலாற்று நிபுணர் மற்றும் இதர சாட்சிகளையும் நேர்காணல் செய்யவும் கோரிக்கை விடுத்தார்.

அரச சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த கோரிக்கைகளை எதிர்த்து கடுமையாக வாதிட்டார்.

அவர் WTCCயானது விசாரணை தொடங்கிய பத்து நாட்களுக்குப்பின் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதை சுட்டிக்காட்டினார். இது கணிப்புகளை அர்த்தமற்றதாக்கும் என்றார் அவர். தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

போருக்கு நிதியுதவி

ஜனவரியிலிருந்து சுவிட்சர்லாந்தில் வாழும் 12 தமிழர்கள் மற்றும் ஒரு ஜேர்மானியர் என மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

அவர்கள்மீது ஒரு குற்றவியல் அமைப்புக்கு உதவுதல், மோசடி, போலியான ஆவணங்களை உருவாக்குதல், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்கள்மீது விடுதலைபுலிகளின் போருக்கு நிதி உதவி செய்யும் ஒரு பெரும் அமைப்பை சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான ஃபெடரல் அலுவலகமும், 2002 மற்றும் 2006க்கு இடையேயான காலகட்டத்தில் WTCCயின் கல்வித்துறையின் பல்வேறு பாடத்திட்டப் பிரிவுகளுக்கு 100,000 பிராங்குகள் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கு விசாரணை சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கிரிமினல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

http://www.tamilwin.com/swiss/01/174822?ref=home-feed

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு

 

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கமென்று சுவிட்சர்லாந்தின் முதன்மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த கருத்தை வழக்கறிஞர் Juliette Noto தெரிவித்துள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய அனைத்தும் அம்சங்களும் விடுதலைப் புலிகள் அமைக்கும் இருப்பதாக அவர் கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Juliette Noto,

அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளால் எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இருக்கும் அதே பார்வையை தாம் சுவிட்சர்லாந்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பொருத்திப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவர்களது செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்குவதாகவும்,

ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அதன் கருத்தியலில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர் நிறுத்த காலகட்டங்களில், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் 2005 வரை விடுதலைப்புலிகள் இயக்கமானது தங்கள் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, திருகோணமலை பகுதியில் இஸ்லாமிய இனத்தை நிர்மூலம் செய்ததையும், அதே காலகட்டத்தில் 2 அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் Noto சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர் Noto,

பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் இயக்கமே கலவரத்தையும் போரையும் ஊக்குவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா ஒப்பந்தத்தை ஒருக்காலும் மதிக்காத விடுதலிப்புலிகள் இயக்கம் எப்போதுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது என்றார்.

தற்போது வழக்கை எதிர்கொள்ளும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 13 பேரும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர்கள்.

ஆதலால், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு சுவிட்சர்லாந்தில் சேகரித்த நிதி மொத்தமும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காகவே என வழக்கறிஞர் Juliette Noto திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி http://m.20min.ch

 

http://www.tamilwin.com/swiss/01/174864?ref=imp-news

Link to comment
Share on other sites

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

 

சுவிட்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் திரண்டு அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கண்டப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்ர் காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்ஸ்லாந்தின் பேர்ன் நகரில் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய வாழ் ஏராளமான புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

தமிழர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தமாக போராடிய தமிழீழ விடுதலை புலிகளை கொடூரமான ஆயுத ரீதியான யுத்தம் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்க செய்திருந்தது.

இந்த நிலையில் விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கமான அடையாளப்படுத்தி, அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்ததாக சுவிட்ஸலாந்தின் அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன தொடர்ந்துள்ள இந்த வழக்கு, தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை திட்டமிட்டு தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தே புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் பெண்கள், பெரியோர் என பலர் பங்குபற்றியிருந்ததுடன், சுவிட்ஸ்லாந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளனர்.

விடுதலை புலிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது வலுவாக இருந்த புலம்பெயர்ந்த மக்கள், தற்போதும் மௌனம் கலைத்து ஒற்றுமைப்பட வேண்டும் என சுவிஸ் தமிழ் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

சுவிஸ் அரசிற்கு எதிராக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

https://news.ibctamil.com/ta/internal-affairs/Diaspora-tamils-protest-against-switzerland

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – விசாரணைகள் முடிவு, தீர்ப்பு ஜூனில்

 

gavelசுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.

1999ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகளுக்காக 15 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியை சேகரித்து, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனார் என்று சுவிஸ், ஜேர்மனி, சிறிலங்காவைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக சுவிஸ்“ சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

பெலின்சோனா சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 8 வாரங்களாக நடந்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.

இந்த வழக்கிற்கு 3.79 சுவிஸ் பிராங் (4 மில்லியன் டொலர்) செலவு ஏற்பட்டுள்ளதாகவும், தமது கட்சிக்காரரான பிரதிவாதிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த செலவுத் தொகையை அவர்கள் செலுத்த நேரிடும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளரான ஜீன் – பியரே கர்பாடே தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/15/news/29798

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.