Jump to content

ஊனம் விடைபெற வேண்டும்!


Recommended Posts

ஊனம் விடைபெற வேண்டும்!
 
 
E_1514528015.jpeg
 

ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை.
மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு.
வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது.
பரந்து விரிந்து கிடந்த பொட்டல் காட்டில், தங்களது பச்சை துாரிகையை இழந்து, ஆங்காங்கே ராட்சச ஊதுவத்திகளை நட்டு வைத்தது போன்று காட்சியளிக்கும் மொட்டை பனை மரங்களையும், தண்ணீர் இல்லாமல் காய்ந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் குளங்களையும் கடந்து, ஊசி கோபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையில் கார் சென்று கொண்டிருந்தது.
பாளையங்கோட்டையில் படிக்கும்போது, தாமிரபரணியில் குளிப்பதற்கும், டவுனில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்கும் பலமுறை அவ்வழியாக சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் சாலையின் இரு மருங்கிலும் மருத மரங்களும், சாலைக்கு அப்பால், பச்சை கம்பளங்களை விரித்தது போன்ற வயல்வெளிகளையும் பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கும்.
இப்போது, அந்த மரங்களும், வயல்களும் இருந்த இடத்தில் காரைக் கட்டடங்களும், பாலமும் எழுந்து நின்று எரிச்சலை ஏற்படுத்தின. அந்த சுகமான அனுபவத்திற்கு மனம் ஏங்கியது. ஆனால், அது இனி கிடைக்காது என்று புத்தியில் உறைத்த போது, மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
''என்னங்க, இங்கதானே குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளது; அதை கொஞ்சம் காண்பியுங்களேன்,'' என்றாள் மனைவி.
''அதுக்கு இன்னும் கொஞ்ச துாரம் போகணும்; வரும்போது சொல்றேன்,'' என்றான் சிவகுமார்.
ஒரே சீராக சென்று கொண்டிருந்த கார், ரெட்டியார்பட்டி அருகே வரும் போது, சாலையில், தண்ணீர் லாரியை மொய்த்தபடி பெண்கள் கூட்டம்; காரின் ஒலிப்பான் ஓசையை யாரும் பொருட்படுத்தவில்லை. வரிசையில் வந்தால், எங்கே தன் முறை வருவதற்குள் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முண்டியடித்தனர். முகதாட்சண்யம் பாராது ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். தண்ணீருக்காக சகஜமாக பழகுகிறவர்கள் கூட சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க வேடிக்கையாக இருந்தது. ஓட்டுனர் போய் வழிவிட கேட்டுக் கொண்டதால், காரை, ஏற இறங்க பார்த்தவாறு வழி விட்டது, கூட்டம்.
அடுத்த ஊரிலோ, காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர், மக்கள்.
தண்ணீருக்காக மக்கள் படும்பாட்டை நேற்று அவன் பார்த்திருந்தால், நிச்சயமாக விழா ஏற்பாட்டை தடுத்திருப்பான்; இவ்வளவு அவமானமும், புறக்கணிப்பும் ஏற்பட்டிருக்காது.
இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில், மிக முக்கிய பொறுப்பில் உள்ளான், சிவகுமார். அவனது தலைமையில் உள்ள குழு, வான்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. இதுவரை, ரஷ்யா தான் அதிகபட்சமாக, 29 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் அனுப்பி, சாதனை படைத்திருந்தது. இப்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே விண்கலத்தில், 104 செயற்கைகோள்களை அனுப்பி, உலக சாதனை படைத்துள்ளது, இந்தியா. பிரதமரும், ஜனாதிபதியும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அவனது பேட்டியையும், படங்களையும் கண்டு அவனே பூரித்து போனான்.
இச்சமயத்தில் தான், அவன் படித்த ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
'தம்பி சிவகுமார்... இன்னைக்கு உலகம் முழுவதும் உங்கள பற்றிதான் பேச்சு... உலகமே பாராட்டுற உங்கள, ஊர்க்காரங்க பாராட்டாம இருந்தா எப்படி... ஊரில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்றோம்; கலந்துக்குவீங்களா...' என, கேட்டார் ஆசிரியர்.
பிறந்த ஊர் ஜனங்களின் பாராட்டு யாருக்குதான் கசக்கும்!
'கண்டிப்பாக கலந்துக்கிறேன் சார்... ஏற்பாடு செய்யுங்க...' என்றான் உற்சாகமாக!
'தேதி சொல்லுங்க...'
'அடுத்த மாசம் அப்பாவ பாக்க வர்றேன்; அப்போ வைச்சுக்கலாம்...' என்றான்.
சிவகுமார் ஊருக்கு வந்து சேர்ந்தபோது, இருட்டி விட்டது. சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றங்கள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. வீட்டு வாசலில் கார் வந்து நின்றபோது, தெருவே வந்து வரவேற்க, அதைக் கண்டு நெகிழ்ந்து விட்டனர், அவன் மனைவியும், மகனும்!
இரவு முழுவதும் அவன் சரியாக துாங்கவில்லை; நாளை நடக்கப்போகும் பாராட்டு விழா பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. அவனது சாதனையையும், மகத்துவத்தையும் மற்றவர்கள் பேசப் பேச, அதைக் கேட்டு, ஊர் மக்கள், 'நீ இவ்வளவு பெரிய ஆளா... உன் சாதனை எங்களுக்கு இப்பதான் தெரிகிறது. நீ இந்த ஊர்க்காரன்ங்கிறதுல எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமை...' என்று அவர்கள் பேசப்போகும் வார்த்தைகளுக்காகவும், பாராட்டுகளுக்காகவும் காத்திருந்தான்.
மறுநாள் காலை, 10:00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது; மேடையில், பிரத்தியேக அலங்காரத்துடன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான், சிவகுமார். விஸ்தாரமாக போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் உட்கார்ந்திருந்தனர், ஊர் மக்கள். அனைவரது முகத்திலும் பிரகாசம்!
தலைமை ஆசிரியர் பேசும்போது, சிவகுமார், தங்கள் பள்ளியில் படித்தது, தங்கள் பள்ளிக்கு பெருமை என்றும், அவனை மாதிரி மாணவர்கள் அனைவரும் உயர்ந்த நிலைக்கு வந்து, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், அவன் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பதற்கு தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் கூட அவனை வெகுவாக பாராட்டினர். அவர்களின் பேச்சில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தான், சிவகுமார்.
'அடுத்து, நம் விழா நாயகன் பேசுவார்...' என்று தலைமை ஆசிரியர் அறிவித்தவுடன், அனைவரும் கைதட்டினர். உற்சாகம் கரை புரண்டோட, விசில் அடித்தனர், சிலர்.
சிவகுமார் எழுந்து, மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தபோது, 'தண்ணீர் லாரி வந்திருக்கு...' என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
அவ்வளவுதான், அடுத்த நொடி, அந்த இடம் காலியாகி விட்டது. மேடையில் இருந்த அனைவரும், ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அவமானத்தால் விக்கித்துப் போனான், சிவகுமார். எந்த மக்கள் அவன் பேசுவதை கேட்டு கைதட்டி பாராட்டி, அவனை தலை மேல் வைத்துக் கொண்டாடுவர் என்று எதிர்பார்த்தானோ, அவர்கள் அவன் பேச்சை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தண்ணீருக்காக ஓடிவிட்டனர்.
சிவகுமாருக்கு அங்கே ஒரு நிமிடம் கூட நிற்க பிடிக்கவில்லை; மேடையில் இருந்த அனைவரையும் பார்த்து இயந்திரத்தனமாய் கும்பிடு போட்டு, இறங்கி, 'விடுவிடு'வென்று நடந்து, வீட்டுக்கு வந்து விட்டான்.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட தலைமை ஆசிரியர் அவன் வீட்டிற்கு வந்து, 'மன்னிச்சிடுங்க சிவகுமார்... இப்படி நடக்கும்ன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல...' என்றார், குற்ற உணர்வுடன்!
'ஊர்க்காரங்க இப்படி நடந்து கொண்டதற்கு நீங்க என்ன சார் செய்வீங்க... உண்மையிலேயே என் மீதுள்ள அன்பாலும், அபிமானத்தாலும் இப்படி ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தீங்க... அது இப்படி முடியும்ன்னா நினைச்சீங்க...' என்றான்.
அப்போது, அவன் அருகில் நின்றிருந்த அவன் நண்பன் சுப்பிரமணியன், 'ஊர் ஜனங்களுக்கும் உன் மீது அன்பும், மரியாதையும் உண்டு...' என்றான்.
'கூட்டத் திலிருந்து எழுந்து ஓடுவது தான் மரியாதையா...' என்று கோபப்பட்டான் சிவகுமார்.
'கோபப்படாதே... இங்குள்ள சூழ்நிலை அப்படி; சரியா மழை பெய்யாததால் ஆறு, குளம், கிணறு எல்லாம் வறண்டு, நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு போயிருச்சு. ஆழ்துளை கிணற்றிலிருந்து கூட தண்ணீர் எடுக்க முடியல. தாமிரபரணியிலிருந்து டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் எடுத்து வந்து, குளோரின் மாத்திரைகளை போட்டு வினியோகிக்கிறாங்க. இதை விட்டா, ஊர் ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது.
'அவங்கள பொறுத்தவரை இந்தியா ராக்கெட் விடுறதும், விடாததும், அதில் உலக சாதனை படைப்பதும் ஒரு பொருட்டே அல்ல. ஏன்னா, அது அவங்களோட வாழ்க்கையில எந்த ஒரு தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால், தண்ணீர் அப்படியல்ல; அது அவங்களோட வாழ்வாதாரப் பிரச்னை. தண்ணீர் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. இப்ப சொல்லு, எது முக்கியம்...' என்று கேட்டான், சுப்பிரமணியன்.
சிவகுமாருக்கு நிலைமை தெளிவாக புரிந்தது. மவுனமாக படியேறி அவன் மொட்டை மாடிக்கு வர, அவர்களும் கூட வந்தனர். அங்கிருந்து பார்த்த போது, மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து எலும்புக் கூடுகளாய் காட்சியளித்தன. வயல்வெளிகள் வெறும் தரிசு நிலங்களாகிப் போயிருந்தன.
பகல் பொழுதில் வந்திருந்தால், ஊருக்குள் நுழையும்போது, ஊரின் நிலைமை ஓரளவு புரிந்திருக்கும். விடிந்த பின்னும் வெளியே போக சந்தர்ப்பம் கிட்டவில்லை. குளித்து முடித்து சாப்பிட உட்காரும்போதே, வெகு நாட்களுக்கு பின் வந்திருக்கும் அவனையும், அவன் மனைவி மற்றும் மகனையும் பார்க்க, அக்கம்பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசி விடை பெறுவதற்குள், விழாவுக்கு அழைத்துப்போக தலைமை ஆசிரியர் வந்து விட்டார். இப்படி ஊரின் நிலைமையை புரிந்துகொள்ள முடியாதபடி சந்தர்ப்பங்கள் அமைந்து விட்டன.
'என்னை மன்னிச்சிடுங்க சார்... நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... ஆகாயத்தில் பறக்கும்போது, பூமியில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாது; அதுபோல வானத்தை அளந்து கணக்கிட்ட என் கண்களுக்கு, இங்குள்ள பிரச்னைகள் தெரியாம போயிருச்சு. துக்க வீட்டில், பிறந்தநாள் கொண்டாடத்தை எதிர்பார்த்தது என் தப்பு தான்...' என்று சொல்லி வருத்தப்பட்டான், சிவகுமார்.
'இதில், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல; நாட்டின் தகவல் தொடர்புக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உலக அரங்கில் நம் கவுரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் தீவிரமாக செயல்படுறோம். ஆனா, அதைவிட முக்கியமான, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகள தீர்ப்பதில் தீவிரம் காட்டுறதில்ல; நம் நாட்டில் வற்றாத ஜீவநதிகளுக்கு பஞ்சமில்ல. ஆனாலும், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுறாங்க, மக்கள். விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தற்கொலை செய்துக்கிறாங்க.
'உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரே சீராக வளர்ந்தால் தான் அது வளர்ச்சி; ஒரு உறுப்பு வளர்ந்து இன்னொரு உறுப்பு வளரலன்னா, அது ஊனம். நம் நாட்டு வளர்ச்சியும் அப்படித்தான் இருக்கு...' என்றான், சுப்பிரமணியன்.
ஒரு வழியாக, சிவகுமார் சமாதானம் அடைந்தாலும், ஏனோ, அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை. அவனுடன் சேர்ந்து உழைத்த சக விஞ்ஞானிகளும் இந்த சாதனைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பது அவனுக்கு தெரியும். அந்த உலக சாதனையை, தன் சொந்த ஊர் மக்களோடு பகிர்ந்துகொள்ள ஓடோடி வந்து, அது முடியாமல் போனமைக்காக மிகவும் வருந்தினான். அதே சமயம் சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமான, தண்ணீர் பிரச்னையை கூட தீர்க்க முடியாமல், மற்ற களங்களில் சாதிக்கும் சாதனைகளை எப்படி உண்மையான சாதனைகளாகும் என்று யோசித்தபடி காரில் பயணித்தான்.
அவனது கார், திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பழைய பேருந்து நிலையத்தை தாண்டி ரயில் நிலையம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.