Jump to content

``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி


Recommended Posts

``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி

 

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துகொண்டவர் நடிகை நளினி. அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இவருடைய ப்ளஸ். தனக்கேயான பாசப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். 

“ 'வாணி ராணி' சீரியலில் வில்லியாக களம் இறங்கியிருக்கிறீங்களே...'' 

 

“நான் சின்னத்திரையில் நுழைந்தபோது, மோசமான மாமியாரா நடிச்சேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்கலை. தயவுசெய்து இனிமே நெகட்டிவ் ரோல் நடிக்காதீங்க'னு சொன்னாங்க. பசங்க சொல்லைத் தட்ட முடியலை. பிறகுதான் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். 'வாணி ராணி' சீரியலுக்குக் கூப்பிட்டபோது, 'இதில் சீரியஸான வில்லி கிடையாது'னு சொன்னதால் ஒப்புக்கிட்டேன். ஸோ, மோசமான வில்லியா எப்பவும் நடிக்க மாட்டேன்.'' 

நளினி

“மாடர்ன் டிரெஸ்ல நடிக்கிறது எப்படி இருக்கு?” 

“ ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் காமெடிக்காக மாடர்ன் டிரெஸ் போட்டிருக்கேன். 'வாணி ராணி'யில் ராதிகாவின் பெண் ரேயான் சொன்னதால், மாடர்ன் டிரெஸ்ல நடிக்க சம்மதிச்சேன். என் டிரெஸ்... ஹேர் ஸ்டெய்டனிங் இதுக்கெல்லாம் ரேயான்தான் காரணம். என்னை புதுவித தோற்றத்தில் பார்க்க அந்தக் குழந்தை விரும்புச்சு. நானும் ஓகே சொல்லிட்டேன்.'' 

“ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துப்போவீங்களாமே...'' 

“எனக்குச் சமைக்கிறது பிடிச்ச விஷயம். பல நேரம் சமையல் அறையிலேயே இருப்பேன். நான் ஹீரோயினா நடிச்ச காலத்தில், என் அம்மா எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வருவாங்க. அதே பழக்கம் எனக்கும் வந்திருச்சு. ஷூட்டிங் கிளம்பினால், காலைச் சாப்பாட்டிலிருந்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் வரை எடுத்துட்டுப்போய் எல்லோருக்கும் பரிமாறுவேன். அதில் ஒரு தனி சந்தோஷம் கிடைக்குது!'' 

நளினி

“உங்க சமையலுக்கு கிடைச்ச சமீபத்திய பாராட்டு எது?'' 

“என் சாப்பாட்டை சாப்பிடும் எல்லோருமே, 'அம்மா சூப்பரா இருக்கு'னு பாராட்டுவாங்க. 'வாணி ராணி' ஷூட்டிங்கிலும் சமைச்சு எடுத்துட்டுப் போனேன். அதைச் சாப்பிட்ட ராதிகா அம்மா, 'உங்க சாப்பாட்டின் ருசியைப் பார்த்ததும் என் டயட்டை ஃபாலோ பண்ண முடியலை'னு சொன்னாங்க.'' 

“கல்யாணமாகிவிட்ட உங்க பிள்ளைகளை பிரிந்து இருக்கிற ஃபீலிங் பற்றி...'' 

“வாழ்க்கைன்னா அப்படித்தானே இருக்கும். என் ட்வின்ஸ் குழந்தைகதான் என் உலகம். சிங்கிள் வுமனா அவங்களைப் பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்னைக்கு அவங்க பொறுப்பாக குடும்பம் நடத்துறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அவங்களை முதல்முறை பிரியும்போது, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. இப்போவரை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அழுதுட்டேதான் கிளம்புவாங்க.'' 

நளினி

“ஃப்ரீ டைம்ல என்ன செய்வீங்க?'' 

“என் பொழுதுபோக்கே சமையல் பண்றதுதான். ஃப்ரீயா இருக்கும்போது பசங்களுக்காக இட்லி பொடி தயார் பண்ணுவேன். அவங்க வீட்டுக்கு போகும்போது, பிடிச்ச உணவை ஆசையோடு சமைச்சு கொடுப்பேன்.'' 

“ராமராஜனுடன் பேசறதுண்டா?'' 

‘நானும் அவரும் இப்பவரைக்கும் குட் ஃப்ரெண்ட்ஸ்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, என் பேரனுக்கு கிடா வெட்டி மொட்டை போட்டாங்க. நான் ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்குப் போகமுடியலை. எனக்குப் பதில் அவருதான் அந்த நிகழ்ச்சியை முன்னாடி இருந்து நடத்திவெச்சார். என் பசங்க என் மேலே எவ்வளவு அன்பா இருக்கிறாங்களோ, அப்படித்தான் அவரிடமும் இருக்காங்க.'' 

நளினி

“உங்க சேலை கலெக்‌ஷன் எல்லாம் சூப்பரா இருக்கே...'' 

“தேங்க்ஸ். இப்போ டிரெண்ட்டான களம்காரியை, நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டேன். நான் அணியாத மாடலே கிடையாது. காட்டன், கைத்தறி பட்டில் ஆர்வம் அதிகம். எனக்கான சேலைகளை காஞ்சிபுரத்துலதான் வாங்கறேன்.” 

“சின்னத்திரை நடிகர்கள் பலர் உங்களை அம்மானு கூப்பிடறதை எப்படி உணர்றீங்க?” 

 

“நாம ஒரு பெரிய நடிகை. புதுசா மீடியாக்கு வரும் பசங்களுக்கு என்ன தெரியும் போன்ற எண்ணமெல்லாம் எனக்குத் துளியும் கிடையாது. எனக்கு எப்பவுமே கலகலனு இருக்கிறதுதான் பிடிக்கும். எல்லோருடனும் ஜாலியா மிங்கிள் ஆகிருவேன். அதனால், அவங்களும் அம்மா மாதிரி நினைச்சு பழகறாங்க. நாம அன்பைப் பரிமாறினால், குழந்தைகளும் அன்பாதானே இருப்பாங்க.”

https://cinema.vikatan.com/tamil-cinema/television/112412-this-is-my-changeover-secret-says-vani-rani-serial-actress-nalini.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.