Jump to content

ரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல்

ஆர். அபிலாஷ்

 Image result for rajinikanth politics

ரஜினி தான் சொன்னது போல் அதிகார பூர்வ அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். ஏற்கனவே நான் இது குறித்து எழுதிய போது ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே கட்சிப் பணியை துவக்குவார்கள் என சொல்லி இருந்தேன். ரஜினி இப்போது வெளிப்படையாக அதை ஒத்துக் கொண்டிருக்கிறார். என் சிற்றறிவுப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் கட்சியை கட்டமைத்து, பல அடுக்கு நிர்வாகிகள், தலைவர்களை நிறுவி, கட்சியின் கொள்கையை விளக்கி, ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கைகள் விடுத்து போராட்டங்கள் செய்து தம்மை நிறுவிக் கொண்டு ஆற அமர தேர்தலுக்கு தயாராகவே ஒரு வருடமாவது ஆகும். விஜயகாந்த் தன் கட்சியை வளர்க்க ஒரு வருடத்துக்கு மேலாகவே எடுத்துக் கொண்டார். ஆனால் ரஜினி இப்போதைக்கு தன் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கிற பணியை மட்டுமே எடுத்துக் கொள்ளப் போகிறார். எந்திரன் 0.2, காலா ஆகிய சினிமாப் பணிகளை முடித்து விட்டு பொறுமையாய் அரசியலில் அவர் இறங்குகிற விதத்தை பார்த்தாலே அவருக்கு வெற்றி பெற்று ஒரு சின்ன எதிர்க்கட்சித் தலைவராகும் இலக்கு கூட இல்லை எனத் தெரிகிறது.

234 தொகுதிகளிலும் ரஜினியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றால் அதற்கான செலவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? இதற்கான ஆயிரமாயிரம் கோடிகளை ரஜினிக்காக வாரி இறைப்பது யார்? இக்கேள்வியை மீடியா நிச்சயம் கேட்க வேண்டும்.

ரஜினி அரசியலில் இறங்குவதால் அவருக்கு விளையப் போகும் ஆபத்துகளைப் பற்றி குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அவர் தோற்றால் கடுமையான விமர்சனங்களையும் கேலியையும் பழிகளையும், அரசியல் விரோதத்தையும் சம்பாதிக்க நேரிடும். முன்பு போல் அவரால் சுதந்திரமாய் வணிக படங்களில் நடித்து வெளியிட முடியாமல் கூட போகலாம். ரஜினி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என குஷ்பு குறிப்புணர்த்துவதாய் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் அவர் ஏன் இவ்வளவு ரிஸ்கை எடுக்கிறார்?

பணம் தான் பிரதான காரணம் என்பது என் கணிப்பு. ரஜினி மூன்று நான்கு வெற்றிப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட பல மடங்கு பணத்தை இத்தேர்தல் மூலம் அடைந்து விட முடியும் என நம்புகிறார். வென்றாலும் தோற்றாலும் அவருக்கு லாபமே. பாஜக கொடுக்கும் ஆயிரமாயிரம் கோடிகளை சிக்கனமாய் செலவழித்தால் மீதும் பணமெல்லாம் அவரது ஸ்விஸ் வங்கி கணக்குக்குத் தானே பாயும்?

அரசியலில் குதிப்பதற்கான அவரது காரணங்களைப் பாருங்கள். அரசியல் நிலைமை சீர்கெட்டுப் போயுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழக ஆரசின் நிர்வாகக் கேட்டை கேலி செய்கிறார்கள் – சரி தான். ரஜினி குறிப்பிடும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், மக்களின் துன்பம் ஆகியவை இப்போது தான் புதிதாய் நிகழ்கின்றனவா? ஏன் இப்போது அவர் அரசியல் நெற்றிக்கண்ணைத் திறக்கிறார்?

இதற்கு அவர் தெளிவான காரணத்தை ஒன்றும் சொல்லவில்லை. ”இனியும் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் குற்றவுணர்வு அரித்து கொன்று விடும்” என்கிறார். அப்படி எனில் இத்தனைக் காலம் எப்படி குற்றவுணர்வில் இருந்து தப்பித்தார்? ஏன் எந்த அரசியல் சமூகக் கருத்துக்களும் தெரிவிக்காமல் லாலா கடை வியாபாரி போல் தேமேவென இருந்தார்? இப்போது அவரை சட்டென தூண்டிய நிகழ்வு எது?

ஒரு பக்கம் அவர் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டைப் பற்றி விமர்சிக்கிறார். அடுத்து உடனே தன் நிர்வாகிகளிடமும் ரசிகர்களிடமும் “நீங்கள் ஆளும் அரசியல் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசக் கூடாது” என்கிறார். இப்படி அறிவுறுத்தும் அவர் மட்டும் ஏன் அதிமுக அரசை சாடுகிறார்? என்ன குழப்படி பாருங்கள். இவர் கட்சி ஆரம்பித்த பின் இன்னும் என்னவெல்லாம் பிதற்றப் போகிறாரோ?

ரஜினி இப்படி தன் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்துவதன் நோக்கம் வேறு. ஆளும் அரசை அவர் விமர்சித்தால் இரண்டு விசயங்கள் நடக்கும். அதிமுக அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். அதிமுக அரசை ஆட்டுவிக்கும் மோடி இதை விரும்ப மாட்டார். அடுத்து, ரஜினியின் கட்சி உண்மையில் வளரும் வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு ரஜினி அலை உருவாவதை இப்போதைக்கு பாஜக விரும்பவில்லை. ஏனெனில் அப்படி ரஜினி தம் கையை மீறி வளர்வதை பாஜக ரசிக்காது. ரஜினியின் அறிவுறுத்தல் ஒருவிதத்தில் பாஜகவின் அஜெண்டாவை காட்டிக் கொடுக்கிறது.

இப்போதைக்கு அவர்களின் திட்டம் சீண்டாமல் தீண்டாமல் ஒரு புது மணப்பெண்ணைப் போல் ரஜினியின் கட்சியை அடுத்த தேர்தலுக்கு சற்று முன் அறிமுகப்படுத்துவது. கூடவே கமல், விஜய், விஷால் கட்சிகளையும் பக்கமேளக்காரர்களைப் போல் இறக்குவது. ஒரு குழப்பத்தை, பரபரப்பை ஏற்படுத்தி திமுகவின் ஓட்டைப் பிரிப்பது. 

அப்படியே ஒருவேளை இக்கட்சிகளும் ஒன்றிரண்டு இடங்களைப் பெற்று இன்னொரு பக்கம் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக இவர்களையும் வேறு சின்ன கட்சிகளையும் அதிமுகவின் ஒ.பி.எஸ் எடப்பாடிகளையும் வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்க முயலும்.

ஆக இந்த சூதாட்டத்தில் இந்த நடிகர்களுக்கோ பாஜகவுக்கோ எந்த பெரிய நட்டமும் ஏற்படாது. மீடியாவுக்கும் சமூக வலைதள போராளிகளுக்கும் தீனி கிடைக்கும். இந்நடிகர்கள் மக்களுக்கு தலைக்கு 5000 கொடுத்தால் அதன் வழி பாஜகவின் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி தமிழக எளிய மக்களை அடையும். மற்றபடி தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழாது.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2018/01/blog-post_72.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

234 தொகுதிகளிலும் ரஜினியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றால் அதற்கான செலவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? இதற்கான ஆயிரமாயிரம் கோடிகளை ரஜினிக்காக வாரி இறைப்பது யார்? இக்கேள்வியை மீடியா நிச்சயம் கேட்க வேண்டும்.

கேள்வி கேட்கும் ஊடகங்கள் அன்றே கேள்வி கேட்டிருந்தால் தமிழ்நாடு இந்த அளவிற்கு கேவல அரசியலுக்கு வளர்ந்திருக்காது. ஊடகவியளாருக்கும் லஞ்சம் கொடுக்கும் நாடு அது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.