Jump to content

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா


Recommended Posts

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா

தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா
 
தேவையான பொருட்கள்:
 
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 4
 மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு
 
201801011514060126_1_virudhunagarmuttonmasala._L_styvpf.jpg
 
செய்முறை :
 
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிய பின்னர்  மிளகாய் தூள், உப்பு, கழுவி வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
 
அடுத்து குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும்.
 
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா ரெடி.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே சொல்கிறேன் 40 வருடங்களுக்கு முன் ஐந்து சந்தியில் ப்ளவ்ஸ் கடையில் சாப்பிட்ட  றோஸ் (மாட்டிறைச்சி) ஞாபகத்தில் வந்து தொலைக்குது. அதுக்காக இது 40 வருடங்களுக்கு முன் செய்தது என்று நான் சொல்லவில்லை.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நிஜமாகவே சொல்கிறேன் 40 வருடங்களுக்கு முன் ஐந்து சந்தியில் ப்ளவ்ஸ் கடையில் சாப்பிட்ட  றோஸ் (மாட்டிறைச்சி) ஞாபகத்தில் வந்து தொலைக்குது. அதுக்காக இது 40 வருடங்களுக்கு முன் செய்தது என்று நான் சொல்லவில்லை.....!  tw_blush:

மொக்கன் கடை, ரொட்டியும், ரோஸ் பீப்ஸ் கறியும் அருமையோ அருமை.

மொக்கன் என்ற பெயர் வந்தது, அருமையாக சமைக்கும் அளவுக்கு, கணக்கு பார்த்து, சரியான பில் சொல்லி, காசை வாங்கத் தெரியாததால். 

காசு இல்லாமல், பிளேன் டீ க்கு, தவண்டை அடிக்கிற மாணவர் கூட்டம், மொக்கனை நம்பி போகும். :grin: 

இதே பெயரில் கனடாவில், கடை திறந்த ஒருவர்..... கணக்காக பில் கொடுத்த காரணத்தால்.... கொஞ்ச நாளில் கடையை பூட்டினார்... :grin: 

****************

நவீனா,

நன்றி. படத்தில கருவேற்ப்பிலை தெரியுது. 

செய்முறையில் இல்லை. ஆகவே.... இது சேர்ப்பில்லை.  :grin:

சுவியர் கவனிக்காமல் விட்டுட்டாரே. tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ் நீங்கள் ஒரு பந்துல இரண்டு விக்கட் எடுத்துட்டீங்கள்....! (எல்லாம் இவர் நவீனனால் வந்தது). 

Link to comment
Share on other sites

கருவேற்பிலை கிலோ 30 யூரோ இங்கு. அதனால் கருவேற்ப்பிலையை எடுத்துவிட்டேன்..tw_blush:

வருடம் பிறந்து காலம் காத்தால எங்க இருந்து கிளம்பி வாரீங்க..:rolleyes:

42 minutes ago, Nathamuni said:

நவீனா,

நன்றி. படத்தில கருவேற்ப்பிலை தெரியுது. 

செய்முறையில் இல்லை. ஆகவே.... இது சேர்ப்பில்லை.  :grin:

சுவியர் கவனிக்காமல் விட்டுட்டாரே. tw_cry:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நாதம்ஸ் நீங்கள் ஒரு பந்துல இரண்டு விக்கட் எடுத்துட்டீங்கள்....! (எல்லாம் இவர் நவீனனால் வந்தது). 

வருசம் பிறந்து... ஆட்டு இறைச்சியை எடுத்துக் கொண்டோடிவந்து.... இப்ப கருவேற்ப்பிலைக்கு திரும்பி போக வேண்டி இருக்குது.....

எல்லாம் நவீனனால் வந்தது தான் சுவியர்...  :10_wink:

3 minutes ago, நவீனன் said:

கருவேற்பிலை கிலோ 30 யூரோ இங்கு. அதனால் கருவேற்ப்பிலையை எடுத்துவிட்டேன்..tw_blush:

வருடம் பிறந்து காலம் காத்தால எங்க இருந்து கிளம்பி வாரீங்க..:rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்கனியில் இருக்கும் வீட்டு தோட்டத்தில எல்லாத்தையும் புடுங்கி எறிஞ்சு போட்டு, கறுவேல்பிள்ளை மரங்கள் வையுங்கோ சுவியர்.

இப்போ இலங்கை போய் வரும் ஆக்கள்.... 10, 20 கிலோ மிளகாய்த் தூள்... 2, 3 கிலோ கறுவேல்பிள்ளை கொண்டுவந்து போன செலவை சரிக்கட்டுகினம்.

கறிவேல்பிள்ளையை, அங்கேயே 50 கிராம பிரிச்சுக் கட்டிகொண்டுவந்து கடைகளுக்கு 50 சதபடி கொடுத்தெல்லோ காசு பாக்கினம்.  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா

தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா
 

 

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சாப்பாடு ஸ்பெசலாய் இருக்கும்.....காரணம் அந்தந்த ஊர்தண்ணியிலைதான் எல்லாவிசயமும் அடங்கியிருக்கு கண்டியளோ......:cool:

ஜேர்மனியிலை இருந்துகொண்டு விருதுநகர் ரேஸ்ற் எடுக்கிறது வலு கஸ்டம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பால்கனியில் இருக்கும் வீட்டு தோட்டத்தில எல்லாத்தையும் புடுங்கி எறிஞ்சு போட்டு, கறுவேல்பிள்ளை மரங்கள் வையுங்கோ சுவியர்.

இப்போ இலங்கை போய் வரும் ஆக்கள்.... 10, 20 கிலோ மிளகாய்த் தூள்... 2, 3 கிலோ கறுவேல்பிள்ளை கொண்டுவந்து போன செலவை சரிக்கட்டுகினம்.

கறிவேல்பிள்ளையை, அங்கேயே 50 கிராம பிரிச்சுக் கட்டிகொண்டுவந்து கடைகளுக்கு 50 சதபடி கொடுத்தெல்லோ காசு பாக்கினம்.  :grin: 

உங்கள் வாய்க்கு சக்கரைதான் போடணும்...., இப்பொழுது எனது பால்கனியில் ஒரு ஜான் அளவு கறிவேப்பிலை கன்றும், ஒரு சாடிக்குள் ஆறேழு இலைகளுடனும் சின்ன குட்டியோடும் வாழை கன்றும் இருக்குது.பால்கனி முழுதும் பனி அடிக்காமல் பாலித்தீன் பேப்பரால் மூடி இருக்கிறன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சாப்பாடு ஸ்பெசலாய் இருக்கும்.....காரணம் அந்தந்த ஊர்தண்ணியிலைதான் எல்லாவிசயமும் அடங்கியிருக்கு கண்டியளோ......:cool:

ஜேர்மனியிலை இருந்துகொண்டு விருதுநகர் ரேஸ்ற் எடுக்கிறது வலு கஸ்டம். :grin:

தண்ணி இல்லை அண்ணோய்...

ஜேர்மனி செம்மறி ஆட்டிறைச்சியை வைத்து... விருதுநகர் வெள்ளாட்டு இறைச்சி ருசி எடுக்கேலுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

தண்ணி இல்லை அண்ணோய்...

ஜேர்மனி செம்மறி ஆட்டிறைச்சியை வைத்து... விருதுநகர் வெள்ளாட்டு இறைச்சி ருசி எடுக்கேலுமோ?

ஜெர்மனி செம்மறி இறைச்சியை ஜெர்மனி ரெட் வைனில் சமைத்து விருதுநகர் "தண்ணி"யுடன் சாப்பிட்டாலும்  அந்த ருசி வராதா....!   tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.