Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018


Recommended Posts

19 வய­துக்­குட்­பட்ட வட­மா­காண கிரிக்­கெட் அணி அறி­விப்பு

stx-cricket-615x400.jpg
 
 
 

இலங்கை கிரிக்­கெட் சபை எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யில் இருந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை கொழும்­பில் துடுப்­பாட்­டத் தொட­ரொன்றை நடத்­த­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்ள வட­மா­காண அணி நேற்­று­முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

வட­மா­காண 19 வய­துக்­குட்­பட்ட அணி விவ­ரம் – எஸ்.மது­சன் (தலை­வர் – யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி), என்.நிது­சன் (உப­த­வைர் – யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி), அபி­னாஸ் (யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி, பானு­யன் (கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி), சௌமி­யன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), அஜிந்­தன் (ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி), தனு­சன் (ஸ்கந்­த­வ­ரே­தா­த­யக் கல்­லூரி அணி), ஜெய­தர்­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), ராஜ் கிளிங்­டன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விஜஸ்­காந் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), விது­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), டினோ­சன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி), கபி­லன் (புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி அணி), இய­ல­ர­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி), வர­லக்­சன் (மகா­ஜ­னக் கல்­லூரி அணி).

 

 

யாழ். மத்தி அரை­யி­று­தி­யில்

5-cenral-750x430.jpg
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் அரை­யி­றுதி ஆட்­டத்­துக்­குத் தகு­தி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

பழைய பூங்­கா­வில் அமைந்­துள்ள கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்று இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி றிபேக் கல்­லூரி அணி மோதி­யது. 68:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

 

உடு­வில் மக­ளிர் அணி  அரை­யி­று­திக்­குத் தகுதி

1-lead-5-750x430.jpg
 
 

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வயது பிரிவு ஆண்­கள் கூடை­பந்­தாட்ட தொட­ரின் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணியை எதிர்த்து வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.

நான்கு கால்­பா­தி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது கால் பாதி­யில் 22:04 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று முன்­னிலை வகித்­தது.

 

இரண்­டா­வது கால் பாதி­யும் 18:02 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உடு­வில் மக­ளி­ரின் வச­மாக முதல் பாதி­யின் முடி­வில் அந்த அணி 40:06 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆதிக்­கம் செலுத்­தி­யது.

மூன்­றாம் கால்­பா­தி­யும் 18:6 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­ட­யில் உடு­வி­லின் வச­மா­னது. நான்­காம் கால்­பா­தியை 13:00 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வழித்­துத் துடைத்­தது உடு­வில் மக­ளிர் அணி. முடி­வில் அந்த அணி 71:12 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

சாதனையுடன் தங்கம் -தனதாக்கினார் ஆசிகா!!

4-aaselead-750x430.jpg
 
 

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­திய வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா தனது சாத­னையை சமப்­ப­டுத்­தி­ய­து­டன் தங்­கம் வென்­றார்.

குரு­ந­கர் சென். ஜேம்ஸ் வித்­தி­யா­லய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

20 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான 63 கிலோ எடைப் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.ஆசிகா 170 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்தை வென்­றார். அத்­து­டன் வட­மா­காண சிறந்த பளு­தூக்­கும் வீராங்­க­னை­யா­க­வும் தெரிவு செய்­யப்­பட்­டார்.

http://newuthayan.com/story/10/சாதனையுடன்-தங்கம்-தனதாக்கினார்-ஆசிகா.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
கட்டை இறுக்கி பயன்படுத்தப்படும் உபகரணங்கள்
 

image_5f49a46653.jpg

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், அதனைக் கட்டை இறுக்கி பயன்படுத்தி போட்டிகளை நடத்தி விநோதம் அண்மையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.

கோலூன்றிப் பாய்தல் தான், தேசிய விளையாட்டுப் போட்டியில் வடக்குக்கு பல பதக்கங்களை அள்ளி வருகின்றது. இவ்வாறானதொரு போட்டிக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் வட மாகாணத்தில் இல்லாதிருப்பது, பெரும் கவலைக்குரியதாகவுள்ளது.

கோலூன்றிப் பாய்தல் போட்டிதான், ஜெகதீஸ்வரன் அனித்தா, நெப்தலி ஜொய்சன், ரி. புவிதரன், நவநீதன், தனுஜா, பவித்திரா, டன்சிகா, நிலானி, ஹெரீனா, டிலக்சன். றிசோத், அன்ரனி பிரசாத், பவிள்சன், டினேஸ், சியானாஸ், வினுசன், என பல தேசிய சாதனை வீரர்களை அடையாளம் காட்டியிருந்தது.

 
 
சம்பியனாகியது மகாஜனா
 

image_54c4ff2f6c.jpgimage_ccc528a507.jpg

முன்னாள் கால்ப்பந்தாட்ட பயிற்றுநர் அமரர் ரி. பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி நிதியம், விளையாட்டு நிதியம், பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து யாழ். மாவட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய இக்கால்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரியையும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், தேவரையாளி இந்துக் கல்லூரியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.

மகாஜனாக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில், மகாஜனாக் கல்லூரி அணி, 4-2 என்ற ரீதியில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

குறித்த போட்டியின் நாயகனாக மகாஜனாக் கல்லூரியின் ஜக்சன் தெரிவானார்.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், தேவரையாளி இந்துக் கல்லூரியை வென்று யாழ். மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
யாழ். மத்திய கல்லூரிக்கு வெற்றி
 

image_741edc090e.jpg- குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும், பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

ஸ்கோர் விவரம்:

சென். பற்றிக்ஸ் கல்லூரி: 127/10 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: கே. றம்மிநாதன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரி. விதுசன் 3, ஆர். இயலரசன் 2 விக்கெட்டுகள்)

யாழ். மத்தி: 128/7 (45 ஓவ.) (துடுப்பாட்டம்: ஆர். ராஜ்கிளின்டன் 28, கே. இயலரசன் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: றெனோல்டோ 3, டிலக்சன் 2, றெமிஸ்டன் 2 விக்கெட்டுகள்).

 
 
சம்பியனாகியது சென்றலைட்ஸ்
 

image_58be9a9f29.jpg

 

யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனாகியது.

பழைய பூங்காவிற்கு பின்னாலுள்ள கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இத்தொடரில், நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ராஸ்ஸை எதிர்கொண்ட சென்றலைட்ஸ், 70-63 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • 1 month later...
சம்பியனானது சென்றலைட்ஸ்
 
 

image_844f108f17.jpg

சிறப்பான கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன எதிரணியின் ஆட்டங்களைக் கட்டுப்படுத்த, கௌதமனின் சிறப்பான துடுப்பாட்டம் வெற்றியிலக்கை இலகுவாக அடைய வழிகோல, யாழ். மாவட்ட பிரிவு மூன்று அணிகளுக்கிடையிலான தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனானது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இறுதிப் போட்டியில் விக்டோரியன்ஸ் அணியை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனானது.

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி, தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஒரு கட்டத்தில், 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிரணவன் - சாரங்கன் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. பிரணவன் 56, சாரங்கள் 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியில், விக்டோரியன்ஸ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், எரிக்துசாந்த் 3, சுஜன், அலன்ராஜ், டர்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், ஜெனோசன், கௌதமன், ஜெரிக்துசாந்த் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கௌதமன் ஆட்டமிழக்காமல் 70, ஜெரிக்துசாந்த் ஆட்டமிழக்காமல் 24, ஜெனோசன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுஜிதரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸின் கௌதமனனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக விக்டோரியன்ஸின் பிரணவனும், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸின் ஜெரிக் துசாந்தும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜெனோசனும் தெரிவாகினர்.

 

 

சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி
 

- கே. கண்ணன் 

image_4469416ff9.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடித் தொடரில், நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.

image_dc8d93b43f.jpgimage_ee49247491.jpg

இது தவிர, குறித்த பிரிவின் முதல் மூன்று இடங்களையும் வட மாகாண பாடசாலைகளே கைப்பற்றின. நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானதுடன், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தைப் பெற்றது.

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 37-19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக நெல்லியடி மத்திய கல்லூரியின் நிகாலினி தெரிவானார். 

இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் மகாபலிபுரம் வித்தியாலயத்தை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 59-09 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

 

 

சம்பியனாகியது சாவகச்சேரி இந்துக் கல்லூரி
 

- கே. கண்ணன்

image_ec8063ce23.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி சம்பியனாகியது. 

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், தமுத்துகம வித்தியாலயத்தை எதிர்கொண்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 36-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது. 

சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி
 

- கே. கண்ணன்

image_d7ccdf019d.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், நிந்தவூர் அல் அஸ்கர் பாடசாலையை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 58-32 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது. 

 
 
சம்பியனாகியது கிளிநொச்சி சிவநகர் அ.த.க
 

- கே. கண்ணன்

image_f611320ca0.jpg

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய மட்ட கபடித் தொடரில், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சம்பியனாகியது. 

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் மகாவலி தேசிய பாடசாலையை எதிர்கொண்ட கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 36-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-கிளிநொச்சி-சிவநகர்-அ-த-க/88-221551

Link to comment
Share on other sites

 
 
 

வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள்

 

Colombo (News 1st) 88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்தனர்.

18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் மூன்று இடங்களையும் மகாஜனா கல்லூரி வீரர்கள் கைப்பற்றினர்.

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின.

இன்று காலை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சுரேஷ்குமார் சுகிஹேரதன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 4 மீட்டர் உயரத்திற்குத் தாவி ஆற்றலை வௌிப்படுத்தினார்.

இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றொரு வீரரான சிவசாந்தன் ஜேம்ஸன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3.60 மீட்டர் உயரத்திற்குத் தாவிய ஆசிர்வாதம் ஜினோஜனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாஜனா கல்லூரியின் சி.ஹெரீனா வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.55 மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்திய ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

https://www.newsfirst.lk/tamil/2018/09/வட-மாகாணத்திற்கு-பெருமை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.