Jump to content

ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் 
[Saturday 2017-12-30 19:00]
தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.

அதனை படித்து பார்த்து மக்களிற்கு சொல்ல முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கின்ற ஊடகங்கள் தான் எங்கள் மத்தியில் இருக்கின்றன.112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள். சமஸ்டி, ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது, ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எங்களது பின்னனைப்பில் இல்லை. அனைத்து கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இதைபற்றி பொய் பரப்புரை செய்யப்படுகிறது.

இந்த பொய் பரப்புரையை வைத்துக்கொண்டு ஒரு கட்சி மக்களிடத்தே கோருகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற வாக்காக இந்த உள்ளுராட்சி தேர்தலை பாவியுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை கொண்ட கட்சியினர். நாங்கள் சமஸ்ஸ்டியை கோருகின்ற கட்சியினர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒற்றையாட்சி கோட்பாடு கொண்ட கட்சி. சரித்திர பூர்வமாக சமஸ்டி தீர்வை எதிர்த்த கட்சி. இன்று கூறுகிறார்கள் நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுவிட்டோம்.

அதனால் இந்த தேர்தலிலே இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கின்றனர். அவர்களது ஒற்றையாட்சி கொள்கை பொருத்தமற்றது என்றுதான் இந்த இடைக்கால அறிக்கை கூறுகிறது. 2010இல் இரு தேசம் ஒரு நாடு என்றனர் பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர்.பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இதைதான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம்.

சமஸ்டியை பாட்டன், தகப்பன், மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள். இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள்தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர். படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். படித்தவர்கள் என சொல்பவர்கள் பல தீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். ஒருமணித்தியாலயத்தின் பின் சொல்கிறார்கள் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள். அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று பதிநான்கு ஆகியதால் மறதி வந்துவிட்டதா என தெரிவித்தார்.

.http://www.seithy.com/breifNews.php?newsID=196594&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

இது எங்களது பின்னனைப்பில் இல்லை

இதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது தெரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பண்டாரநாயக்கா காலந் தொடங்கி இன்றுவரை கூடிக்கூடி பேசுறதும் திட்ட வரைபு, சட்ட  வரைபு உருவாக்குகிறோம்   என்று  காலத்தை இழுத்தடிக்கிறதும்,  ஏமாத்திறதும்  கிழிச்சு எறியிறதும், அடிச்சு விரட்டிறதும்  தானே  கடந்த பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. வரைந்த திட்டங்களே  அமுலாகாமல் குப்பைதொட்டிக்கை போட்டுது. புதுசு புதுசாய் உருவாக்குகினமாம். இவையளும் தேர்தலில் வெல்வதற்காக புதுப் புது கரடி விடுகினம். அவங்களுக்கு தெரியும் தாங்கள் எந்தக் கட்சி ஆட்ச்சிக்கு ட் வந்தாலும் தங்கட நாடகத்தை நீங்கள் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் முண்டு குடுத்து தாங்குவீர்கள் என்று. மாறி மாறி ஆட்ச்சிக்கு வரும் கட்சிகள் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் வேறு. நீங்கள் ஆட்ச்சிக்கு வரும் எல்லாக் கட்சிகளோடும் எதிர்க்கேள்வி கேட்க்காமல் கை குடுக்கிறீர்களே, மூடி மறைத்து காப்பாற்றுகிறீர்களே. தேர்தல் முடிய நீங்களும் வேறொரு கதை சொல்லிக்கொண்டு காணாமற் போய்விடுவீர்கள்.

நன்றி நுணா.

Link to comment
Share on other sites

அதே பக்கத்தில் சமஸ்டி ஆட்சியே பொருத்தம் என்று பொருத்தமான தீர்வை சுட்டிக்காட்டத் தவறியதாலும், இல்லையெனில் எது பொருத்தம் என்று சொல்லப்படாததாலும் ஒற்றையாட்சி பொருத்தமில்லை என்று சொல்வது இழுத்தடிப்பு, ஏமாற்றல் தந்திரம்.

மேலும் உள்ளே பல இடங்களில் "ஏக்கிய" என்ற சொல் ஒற்றையாட்சியையே வலியுறுத்துகிறது.

சுமந்திரன் தனது பாரம்பரிய ஏமாற்றுத் தொழிலை செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட  எவரினதுமோ அல்லது கட்சியினதோ ஆதரவலனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல.

சுமந்திரனின் மிகவும் மெதுவான, நவீன தாராளவாத அணுகுமுறை, அவதானிக்கப்படக்கூடிய ஆனால் வெட்டு ஒன்று துண்டு என்னு இல்லாமல், கடிகாரத்தின் விநாடி நிலை மாறுவைத்து போல் நிலைபாட்டுகளை மாற்றுவது  சரியானதே.

ஆயினும், தமிழ் தரப்பில் முதல்வர் விக்னேஸ்வரன் இருப்பதுவும் வேண்டும், ஆனால் அத்தகைய அணுகுமுறையை சுந்திரன் விரும்பினாலும் பிரயோகியாமுடியாத நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் எதிர்பை சமாளிக்க ஏக்கய ராக்சிய என்ற சொல்லை புதிதாக சேர்த்தும் 

பெடரல் யுனிற்ரி ஸ்ரேற் என்ற ஏற்கனவே இருந்த சொற்களும் இல்லாமல் போய்விட்டதாகவே இடைக்கால ஒப்பந்தம் சொல்வதாக கூறுகிறார்கள்.

சிங்களத்தில் ஏக்கய ராக்சிய என்றால் ஒரு நாடு என்கிறார்கள்.

இதையே தமிழில் ஒரு நாடு என்றால் தமிழர் மத்தியில் கேள்வி எழும் என்பதால் ஒருமித்த நாடு என்று எழுதி தமிழர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.