Jump to content

செய்திகள் வாசிப்பது மியாவ்


Recommended Posts

களத்தினர் மன்னிக்கவும்...

தற்போது குறிப்பிடும் படியான செய்திகள் எதுவும் இல்லை... செய்திகள் வரும் பொழுது தெரிவிக்கபடும்...

ஆவலோடு வந்தவர்களுக்காக... சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது... கடந்த ஏழு வருடங்கள் திரியில் "சார்ட்டில் எழுதி வைத்த பாடங்கள் (Subject) மறைந்து போனது" என்ற கால கட்டத்தில் நடந்தவை... அந்த திரியில் போன வருடம் என்று தவறுதலாக குறிப்பிட்டிருப்பேன்... அது ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன் நடந்தவை...

இன்னும் தெளிவாக கால நிலையை கூற வேண்டும் என்றால் அமெரிக்கா, சீனா தாங்கள் உருவாக்கிய ராக்கெட் ஏவுவதில் பிரச்சனை என்று செய்திகள் வந்த சமயம்... கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்... 

சரி, செய்திக்கு என்பதை விட நிகழ்வுக்கு வருவோம் என்று ஆரம்பிக்கிறேன்...

சிவப்பு நிறம் உடுப்பை அணிந்து பள்ளிக்கு எனது பப்ளீஷியஸ் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வேலைக்கு செல்லும் எனது மனைவியை பின் அமரச் செய்து என் குழந்தைக்கு பை (Bye) சொல்லிவிட்டு கிளம்பினேன்... எனது மனைவியை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அவருக்கும் ஒரு பை சொல்லிவிட்டு வண்டியை ஒரு பெட்டி கடையில் நிறுத்தி சிகிரெட்டை ஊதிவிட்டு வண்டியை பள்ளிக்கு செலுத்தினேன்... 

வண்டியில் செல்லும் பொழுது "சந்திரரே சூரியரே நச்சத்திர நாயகரே, அமரன் கதைய கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன், விரமுள்ள ஆம்புள, அவன் மறவ குல மணிப்புள்ள" என்று பாட்டுப் பாடிக்கொண்டே ஓட்டியவாறு சென்று கொண்டிருந்தேன்... பின்னால் ஒரு லாரி ஒட்டியவாறு வந்து கொண்டிருந்தது... இடது புற சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரு மாடுகளில் ஒன்று ஒருமாட்டை முட்டித்தள்ள இன்னொரு மாடு என் வண்டியின் இடது புறமாக நடு பகுதியில் வேகமாக பாய்ந்து மோதிவிட்டது... மோதிய வேகத்தில் வலது புறம் விழ வேண்டியவன், இடது புறத்திலேயே விழுந்தேன்... வலது புறம் ஒட்டியவாறு பின்னால் வந்த லாரி சிறிது தூரத்தில் சென்று நின்றது... நான் "நெனச்சேன்" என்று சொல்லியவாறு கீழே விழுந்த வண்டியை தூக்கினேன்... இது நடந்தது ஒரு பெரிய கம்பேனியின் முன்... அந்த கம்பேனியின் ஊழியர்கள் நின்று கொண்டு நடந்த நிகழ்வுகளை மௌனமாக அசைவற்று பார்த்துக் கொண்டிருந்தனர்... ஒருவர் கூட பக்கத்தில் வரவில்லை, சின்ன குரலும் கூட எழுப்பபவில்லை...

(நான் எந்த சூழ்நிலையிலும் பிரேக்கை (Break) எனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்பவன்... பிரேக்கை உபயோகப்படுத்தாதற்க்குக் காரணம், சடன் ப்ரேக் அடித்தால் எங்கே பின்னால் வரும் லாரி மோதிவிடுமே என்று எனது மூளை தன்னிச்சையாக இரண்டாம் விருப்பத்தை தேர்வு செய்துவிட்டது)

வண்டியை தூக்கிவிட்டு அனைவரையும் பார்த்தேன்... அனைவரும் என்னை பார்த்துக்கொண்டிருந்தனர்... லாரி ஓட்டுனர் மட்டும்  வலது கையை ஜன்னலின் வெளியே அசைத்து போ போ என்பது போல் என்னை முன்னால் போகச் செய்தார்... சிறிது தூரம் ஓட்டிய பிறகு பின்னால் திரும்பி பார்க்கும் பொழுது அந்த லாரியை காணவில்லை...

என்னை ஆசுவாசப்படுத்திக்கொகொள்ள மீண்டும் புகைப்பதற்க்கு சாலையோரத்தில் ஒரு மரத்திற்கு அடியில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தினேன்... இறங்கிய உடன் அங்கு ஒரு கருப்பும் வெள்ளையும் நிறம் கொண்ட நாய், எந்த சலனமும் இல்லாமல் தனக்கு அனைத்து பதிலும் கிடைத்துவிட்டது என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தது... 

இதன்பிறகு எனதுள்ளணர்வு ஆட்கொண்டுவிட்டது என யூகிக்கிறேன்... 

அந்த நாய் பக்கத்தில் சென்று நின்றேன்... எந்த சலனமும் இல்லை... பின்பு கருப்பும் சாம்பலும் கலந்த நிறம் கொண்ட  ஒரு மாடு என்னை முட்டுவது போல் வந்தது... எனது இடது காலை உயர்த்தி முட்டுவது போல் வந்த மாட்டின் பக்கத்தில் ஓங்கி தரையில் மிதித்தேன்... மாடு விலகி ஓடியது...

அங்கு சுற்றுவட்டாரத்தை நோக்கியதில் பலரில் சிலர் தங்கள் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு நடந்து கொண்டிருப்பதை கண்டும் காணாததுமாய் நின்று கொண்டிருந்தனர்...

பின் ஒரு வீட்டிற்க்குள் சென்று அங்கு நின்று கொண்டிருந்த வெள்ளை நிற மாடு பக்கத்தில் நின்றேன் எந்த சலனமும் இல்லை... பிறகு வெளியே வந்து சாலையை கடந்து மறுபுரம் சென்று அங்கிருந்த பழுப்பு நிற நாய்களின் பக்கத்தில் போன பொழுதும் அது அது "அது" வேலையை பார்த்தபடி என்னை நோக்கிவிட்டு சென்றது... சாலையை கடந்து மீண்டும் இந்த புறம் வரும் பொழுது அந்த முட்ட வந்த மாடு பக்கத்தில் வர, மறுபடியும் விரட்டினேன்... பின்பு மீண்டும் அந்த உறங்கிக் கொண்டிருந்த நாயின் பக்கத்தில் உதவி கேட்பது போல் உட்காரும் பொழுது, சற்று பயத்தில் எழுந்திரித்து மீண்டும் படுத்துக் கொண்டது... உட்கார்ந்த பிறகு சாலையின் மறு புறம் மரத்தின் மேல் இருந்த பறவைகள் விடாமல் கத்தியது... மீண்டும் சாலையை கடந்து சென்று குடில்கள் அமைந்திருந்த சாலையின் நடுவில் நடந்த பொழுது பத்து வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் பள்ளி சீறுடையில் சாலையின் வலது புற ஓரத்தில் வந்தவனின் பின்னால் வந்து கொண்டிருந்த முழு கருப்பு நிறம் கொண்ட நாய் என்னை கடந்து செல்லாமல் என்னை குரைத்தவாறு வந்த வழியே ஓடியது... நான் எந்த எதிர்வினையும் இல்லாமல் நடந்தேன், அந்த நாய் ஓடியேவிட்டது...

ஏதோ செய்தோம் என்று அந்த பெட்டிக் கடைக்கு வந்து ஃப்ளேக் ஒன்னு குடுங்கணா என்றேன்... கடைகாரர் சிகிரெட்டை கை நடுங்கியவாறு குடுத்தார்... சிகிரெட்டை ஊதி கொண்டிருக்கும் பொழுது "நான் ஒரு வீட்டிற்க்குள் சென்று பக்கத்தில் போய் நின்ற பொழுது எந்த எதிர் வினையும் இல்லாமல் இருந்த வெள்ளை நிற மாடு வெளியே வந்தது"... வெளியே வரும் பொழுது எந்த சலனமும் இல்லாமல் படுத்துக்கொண்டிருந்த அந்த குறிப்பிட்ட நாய், அந்த வெள்ளை நிற மாட்டை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது... சிறிது தூரம் சென்று அந்த மாடு சிறுநீர் கழித்தது...

சிகிரெட்டை ஊதி முடித்துவிட்டு வண்டியை பள்ளிக்கு செலுத்தினேன்...

பள்ளியில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்திருந்தேன்... பள்ளிக்கு சென்றவுடன் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் புகை படங்கள் இருக்கும் ஃபோல்டரை ஓபன் செய்துவிட்டு மௌசை (Mouse) மேலும் கீழுமாக ஸ்க்ரால் செய்துக்கொண்டே நடந்தவற்றை மனதில் சிறிது நேரம் ஓடவிட்டுக்கொண்டிருந்தேன்...

மாணவ மாணவியர் பிரார்த்தனைக்காக ஒன்று கூடிக் கொண்டிருந்தனர்... பிரார்த்தனைக்கு பள்ளியின் கோட்டை (Coat) மாட்டிக்கொண்டு கலந்து கொள்ள சென்றேன்...

பிரார்த்தனை ஸ்டான்ட் அட் ஈஸ் (Stand At Ease) என்று ஆரம்பித்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வரேல்லை இந்தப்பக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதென்ன    சின்னப்புள்ள  விளையாட்டு ..tw_blush:

Link to comment
Share on other sites

18 minutes ago, வல்வை சகாறா said:

நான் வரேல்லை இந்தப்பக்கம்

 

12 minutes ago, நிலாமதி said:

 இதென்ன    சின்னப்புள்ள  விளையாட்டு ..tw_blush:

நேரில் பார்க்கும் நானே திரும்பி பார்க்கும் பொழுது இதே கருத்து தான் தோன்றியது..

இன்றும் கூட சின்ன பிள்ளை விளையாட்டாதான் இருக்கிறது...

ஆனால் அதை எல்லாம் என் உணர்வு மறுக்க மறுக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...மேலும் வாசிக்க ஆவலாய் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

 இதென்ன    சின்னப்புள்ள  விளையாட்டு ..tw_blush:

அதை பெரியவர்கள் விளையாடினால் .......
எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன பரீட்ச்சார்த்தம். 

விளையாட்டில் கலந்து கொண்டதுக்கு நன்றி ! 

Link to comment
Share on other sites

  • 1 month later...

அதிமுகவுக்கும், பாஜ விற்க்கும் திமுக திடிர் அழைப்பு - தமிழ் முரசு...

காரணம் என்னவாக இருக்கும்... கமல் ரசினியை சந்தித்தது போல் நட்பு ரீதியில் இருக்குமோ...

உதயநிதி ஸ்டாலின் மீது மு.க. அழகிரி பாய்ச்சல் - எந்த செய்தித்தாள் மூலம் பாய்ந்தார் என்பதை கவனிக்க தவறவிட்டுவிட்டேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.