Jump to content

ஈழத்தின் வேளாண் மன்னர்


Recommended Posts

ஈழத்தின் வேளாண் மன்னர்

 
vv.jpg


"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் ஆதனால் உழந்தும் உழவே தலை" என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு இணங்க பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. என்று தெளிவாக விளக்குகிறது அந்தக் குறள்.

இதனை எத்தனை பேர் விளங்கிக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைக் கொண்டாடும் நாம் எமது தாயகப்பிரதேசத்தில் வாழ்ந்து விவசாயத் துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிவிட்டு சாதாரணமாக இருக்கும் ஒருவரை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் வாழ்நாள் விவசாயிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் யாரையும் நாம் கண்டு கொள்ளாததன் விளைவு, தற்போது முழுநேர விவசாயிகள் பலரும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள். 

இன்றைய நிலையில் இயற்கை விவசாயம் என்பதே அருகிக் கொண்டு செல்லும் நிலையில், அதீத செயற்கை உரப்பாவனையால் மண்ணின் வளம் குன்றிக்கொண்டு போகிறது. இந்நிலையில் விவசாயத்தில் சாதித்த மூத்த விவசாயியைப் பற்றி நினைப்பது பொருத்தமானது. வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளிவந்த அறிவுக்கதிர் என்கிற இதழில் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1948 இல் பிறந்த கந்தையா முத்துக்குமார் விவசாயம் செய்து அதன்மூலம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 1964 இல் படித்துக் கொண்டிருக்கும் போதே தகப்பனார் கந்தையாவுடன் இணைந்து உழவுத்தொழிலில் ஈடுபட்ட முத்துக்குமார், பின்னர் 1968 - 1969 காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில்  நெற்செய்கையை சிறப்பாக செய்து ஏக்கருக்கு 177 புசல் நெல்லை அறுவடையாகப் பெற்றதற்காக வவுனியா அரச அதிபர் பி.சி பெரேரோவிடமிருந்து முதலாம் பரிசையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் 1974 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற பொருட்காட்சியில் தரமான தேசிக்காய் உற்பத்திக்காக 3 ஆம்  பரிசினையும், 1993 - 1994 காலப்பகுதியில் ஏக்கருக்கு 160 புசல் நெல்லை உற்பத்தி செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து வேளாண் மன்னர் என்கிற சிறப்பு பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். 1995 இல் உலக உணவு நிறுவனத்தின் சர்வதேச மட்ட நெல் உற்பத்திக்கான முதன்மைப் பரிசு, 1997 இல் வடக்கு கிழக்கு மாகாண மட்டத்தில் சிறந்த விவசாயிக்கான பரிசு, 2001 இல் வவுனியா விவசாயத் திணைக்களத்தினால் சிறந்த வீட்டுத்தோட்டத்துக்கான  பரிசு என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.
 
muthukumar.jpg
1995 ஆம் ஆண்டு உலக உணவு நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையும், உலக உணவு தினத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவையும் நினைவு கூரும் முகமாக பரிசில் வழங்கும் நிகழ்வு தாய்லாந்தில் இடம்பெற்றது. இலங்கை அரசும் இதனைக் குறிக்கும் முகமாக 2 ரூபாய் நாணயக் குற்றியை வெளியிட்டது.     இதன்போது தாய்லாந்து மாகாராணியிடம் இருந்து முதன்மைப் பரிசினை முத்துக்குமார் பெற்றுக் கொண்டார்.

விவசாய பொருளாதாரத்தையே முதன்மையாக கொண்ட எமது சமூகம் இன்று என்ன நிலையில் உள்ளது என்பதற்கு விவசாயத்தின் இன்றைய நிலையே உண்மையான சாட்சி. பசிக்கு சோறு போடும் விவசாயிக்கு நாங்கள் உரிய மதிப்புக் கொடுக்கின்றோமா? என்கிற கேள்வியை நாங்கள் எமக்குள்ளேயே நியாயமாக எழுப்ப வேண்டும்.

முத்துக்குமார் ஐயாவுடன் பேசும் போது அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு.  இயற்கையில் காணப்படும் மண், நீரை மூலதனமாகக் கொண்டு இவற்றை உச்ச பயன்பாட்டில் பயன்படுத்தி விவசாயத்தில் இடைவிடாது ஈடுபட்டேன்.  தூறல் நீர்ப்பாசனம் போன்ற நவீன தொழிநுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதனூடாக நீரை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் சேமிக்கவும் முடியும். கால்நடைகளை வளர்ப்பதனூடாக கிடைக்கின்ற சாணம், இலை தளைகளை பசளையாக  பயன்படுத்தவதனூடாக   மண் வளத்தை சரியான சமநிலையில் பேணவும், உயர்த்தவும் முடியும். என்னிடம் முன்னர் நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. போரால் அவை ஏராளமாக அழிந்து தற்போது சிலவே உள்ளன. தற்போது நெற்பயிர் பயிரிடுவதுடன் சேர்த்து மிளகாய், கச்சான், சோளம், பன் புரூட் போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறேன். இப்போது கூட்டிணைந்த பண்ணை தொடர்பில் அக்கறை செலுத்தி வருகிறேன்.

இன்று பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வருவதாக கூறி பயமுறுத்துகிறார்கள். இவை எல்லாம் உடல்நலத்துக்கு எவ்வளவு கேடு என்பதனை மக்கள் உணரவேண்டும். எல்லாரும் விவசாயத்தை நோக்கி வர வேண்டிய காலகட்டம் இது. 

முதலில் விவசாயத்தில் பற்று இருக்க வேண்டும். அடுத்து நம்பிக்கை இருக்க வேண்டும். நட்ட இலாபத்தை பார்க்கக் கூடாது. நாங்களே உற்பத்தி செய்து சாப்பிடுவோம் என்கிற நோக்கத்தைப் பார்க்க வேண்டும். விவசாயத்தில் நவீன தொழிநுட்பத்தை புகுத்த வேண்டும். பாரம்பரிய நெல் இனங்கள் எமக்கு மிகவும் உகந்தவை.  நஞ்சில்லா உணவை நாங்களும் சாப்பிட வேண்டும், மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்கிற நல்ல நோக்கம் முதலில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த நஞ்சில்லா உணவை நாங்கள் உட்க்கொள்கின்றோம் என்கிற நிலை உருவாகும். அதன் மூலம் நல்ல ஆத்மதிருப்திகிடைக்கும்.

இங்கே விவசாய திணைக்களத்தினர் முன்வந்து விவசாயிகளுக்கு உதவும் நிலை உள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் விவசாயத்தில் நவீன தொழிநுட்பங்களின் பயன்பாடு அவசியமானது.  விவசாய விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்கின்ற தொழிற்பாடு இருக்க வேண்டும். அதற்கான உதவிகளை விவசாய திணைக்களம் செய்து கொடுக்க வேண்டும். என்றார்.

http://www.nimirvu.org/2017/07/blog-post_48.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.