Jump to content

’வீரம் மட்டும் போதாது.. வியூகம் வேண்டும்!’ - ரஜினிகாந்த்


Recommended Posts

’வீரம் மட்டும் போதாது.. வியூகம் வேண்டும்!’ - ரஜினிகாந்த்

 
 

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது. 

rajinikanth
 

 

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் உள்ளனர். 

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன் ”முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. ரஜினி எடுக்கக் கூடிய முடிவு மிகவும் தெளிவானதாக இருக்கும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் ”இந்த நாளுக்காகதான் காத்துக்கொண்டிருந்தேன். கதாநாயகன் ஆக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ரஜினி ஸ்டைல் என்பது மகேந்திரன் அறிமுகம் செய்தது. 

என் அரசியல் அறிவிப்புகுறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  நான் அரசியலில் வருவதில் மக்களைவிட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். போர்வரும் போது பார்க்கலாம் என்றேன்.போர் என்றால் தேர்தல் தானா?

அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் முக்கியம்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/111825-rajinikanth-about-his-political-entry.html

Link to comment
Share on other sites

அரசியலுக்கு வருவது பற்றி டிசம்பர் 31ல் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வருவது பற்றி அறிவிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஐந்து மாவட்ட ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களைச் சந்திப்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில், மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களை செவ்வாய்க்கிழமை முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துவருகிறார்.

டிசம்பர் 27ஆம் தேதியன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களையும் 28ஆம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் 29ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களையும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மாவட்ட ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடையாள அட்டை வைத்துள்ள ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்.

புதன்கிழமை காலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

ரஜினிகாந்த்

அதற்குப் பிறகு பேசிய ரஜினிகாந்த், "காலா படத்தின் படப்பிடிப்பு, மழை, மனம் சரியாக இல்லாத காரணத்தால் மீதமிருக்கும் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது" என்று தெரிவித்தார்.

50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக கதாநாயகனாக மாறினேன்

வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் தன்னை பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம் அணுகி, கதாநாயகனாக நடிக்கும்படி கேட்டபோது தான் மிகவும் தயங்கியதாகவும் அதனால், ஒரு படத்திற்கு தான் வாங்கிக்கொண்டிருந்த 25 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாகக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் அந்த சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த 28-30 ஆண்டுகளாக தனது பிறந்த நாளின்போது வீட்டில் இருப்பதில்லையென்றும் தனியாக இருக்க வேண்டுமென விரும்பியதாகவும் ரஜினி கூறினார். ஆனால், இந்த முறை தன்னுடைய வீட்டின் அருகில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள்கூடியதாவும் அவர்கள் ஏமாற்றமடைந்ததற்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் ரஜினி கூறினார்.

தான் அரசியல் குறித்து என்ன சொல்லப்போகிறேன் என்பது குறித்து மக்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு பெரும் ஆர்வம் இருப்பதாகவும் தான் ஏற்கனவே போர் வரும்போது அரசியல் குறித்து யோசிக்கலாம் என்று சொல்லியிருந்த நிலையில், இப்போது போர் வந்துவிட்டதா என்றும் ரஜினி கேள்வியெழுப்பினார்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அப்படியிருக்கும் நிலையில், ஏன் தன்னை இழுக்கிறார்கள் என்று யோசிப்பதாகவும் ரஜினி கூறினார். அரசியலில் இருக்கும் கஷ்ட - நஷ்டங்கள் தெரிந்திருப்பதால்தான் தயங்குவதாகவும் யுத்தத்திற்குச் சென்றால் வெற்றிபெற வேண்டும் என்றும் கூறிய ரஜினி அதற்கு வீரம் மட்டும் போதாது என்றும் வியூகம் தேவை என்றும் தெரிவித்தார்.

இதற்கு அடுத்ததாக, வரும் டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்போவதாக ரஜினி கூறியதும் ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து குறுக்கிட்ட ரஜினி, தான் அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லையென்றும் அரசியல் குறித்து அறிவிக்கப்போவதாக மட்டுமே கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வரும் மோசமான செய்திகள் மனதை பாதிக்கும்வகையில் இருப்பதாகவும் அதனை மனதில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் ரசிகர்கள் தங்கள் குடும்பங்களை முதலில் காப்பாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டு ரஜினி தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

இதற்குப் பிறகு, ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு துவங்கியது.

http://www.bbc.com/tamil/india-42482316

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

வீரம் மட்டும் போதாது.. வியூகம் வேண்டும்!’ - ரஜினிகாந்த்

சும்மா பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி புறுபுறுத்துக்கொண்டு திரியிறதே வேலையாப்போச்சு....

வந்தமாம்...நடிச்சமாம்...நாலு காசை பாத்தமாம்.....பந்தாவாய் வாழ்ந்தமாம் எண்டில்லாமல்.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சும்மா பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி புறுபுறுத்துக்கொண்டு திரியிறதே வேலையாப்போச்சு....

வந்தமாம்...நடிச்சமாம்...நாலு காசை பாத்தமாம்.....பந்தாவாய் வாழ்ந்தமாம் எண்டில்லாமல்.....:cool:

தைரியமற்ற தமிழகத்தலைமைகளும் மஞ்சள் பத்திரிகைககள் போன்று செயற்படும் ஊடகங்களும் இருக்கும் வரை ராமராவைக் கடவுளென்று நம்பிய மக்களும் இருக்கும்வரை பழஞ்சீலைகளும் தமிழரது கொடியாகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அரசியலும் சினிமாவும் தமிழகத்தின் இரு கண்கள்போல, ஒன்றுக்காக இன்னொன்றை யாருமே பிடுங்கி எறியமாட்டார்கள் இந்த உண்மை ரஜனிக்கும் தெரியும், அது ரத்ததில் ஊறிபோன அவர்கள் கலாச்சாரம், ஒரு சிலபேரின் உசுப்பேத்தலை நம்பி கோதாவில் இறங்கினால் வேஷ்டியை உருவி அம்மணமாக்கி அவமானபடுத்திவிடுவார்கள் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கிறார் என்பதன் சாட்சியே இந்த அரசியலுக்கு வருகிறேன்,வந்துடுவேன்,வரபோறேன், வந்துகொண்டே இருக்கிறேன் என்று தனது படங்கள் வெளீவரும் காலகட்டத்தில் மட்டும் காட்டும்  குறளி வித்தைகள்!

ஒரு ஆர்கே நகர் இடைதேர்தலுக்கே இத்தனை போட்டிகள்,பணபலம்,படைபலம்,சதிகள் ,திட்டங்களென போர்களமாய் காட்சியளிக்குதே தமிழகம், 234 தொகுதிகளில் பெரும்பான்மையில் ஒரு மனிதன் கட்சி ஆரம்பித்த உடனேயே வெற்றி பெற்று ஆட்சியமைப்பது சாத்தியமா? 

சரி இந்த தேர்தல் இல்லைனாலும், அடுத்த தேர்தல், அதுகடுத்த தேர்தலில் ஆட்சியமைப்பார் என்று வைத்தாலும் அப்போது இருக்ககூடிய ரஜனியின் வயசும், உடல் நிலையும் அதை சாதிக்குமா?

தலைவா அரசியலுக்கு வந்து தமிழகத்தை காப்பாத்து என்று முழங்குகிறார்கள் அவர் ரசிகர்கள், இப்போ மட்டும் தமிழ்நாடு என்ன பாகிஸ்தான்கிட்டயா பறிபோயிருக்கு?

மத்திய அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளில் பாராமுகமாக்கப்பட்டாலும் மொழியால், தனித்துவத்தால், கல்வியால்.வளர்ச்சியால் முன்னணியில் நிற்கும் ஒரு மாநிலத்தின் வீட்டு சாவியை கர்நாடக மொழியில் பிறந்து எப்போதும் ஜெய்கிந்த் என்று முழங்கும்  ரஜனியின் கையில் கொடுப்பதற்கு துடிக்குது அவரின் ஒரு பகுதி ரசிக சனம், ஆனால் ஒருபோதும் அது சாத்தியமில்லை!

நடிகர்களில் ரசிகர்களை  ஒரு கொந்தளிப்பு நிலையில் வைத்திருந்து தியேட்டர் பக்கம் வர பண்ணும் வித்தை தெரிந்த ஒரேயொரு வியாபாரமேதை ரஜனிகாந்த்! அனைத்து கட்சிகளிலும் ரஜனியின் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் அனைத்து கட்சியில் இருக்கும் அவர் ரசிகர்கள் ரஜனி எங்கிற அரசியல்வாதிக்கு ஒருபோதும் ரசிகர்களாக இருக்கபோவதில்லை!

Link to comment
Share on other sites

உங்களுக்கு நீங்களே எதிரியாகப் போகிறீர்களா ரஜினி?

 

 
rajini1234

ரஜினிகாந்த் | கோப்புப் படம்.

நான் திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்பைப் படித்துக் கொண்டிருந்த காலம். திருவாரூர் நகர தட்டு ரிக்‌ஷா சங்கத் தலைவராக பாபு என்பவர் இருந்தார். திருவாரூர் நகர தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர். அவரை 'ரஜினி பாபு' என்றால்தான் தெரியும். ரஜினி பாபுவாக நகரத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றிருப்பார். ரஜினிக்கு அரசியல் பிரவேச ஆசை துளிர்விட்ட சமயத்தில், 'தலைவா தரணி ஆள வா' என நகரின் அனைத்து பக்க சுவர்களிலும் நீலமும் வெள்ளையுமாக நிறைத்து விட்டார். நகரில் உள்ள அண்ணாமலை, தளபதி உள்ளிட்ட ரசிகர் மன்றங்களுக்கெல்லாம் நகர தலைமை ரசிகர் மன்றத் தலைவர் என்பதால் ஏக மரியாதை அளிப்பார்கள்.

நான் தங்கிப் படித்த இடத்துக்கு அருகில்தான் அவரது வீடு. காட்சிகள் நினைவுகளில் இருந்து மங்கிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாபுவுக்கு இரண்டு குழந்தைகள். இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டனர். பள்ளிக்கூடம் செல்லாத பெரியவன் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் சாந்தி ஓட்டலில் சப்ளையராக இருக்கிறான். பனிரெண்டாவது படிக்கும் பெண் குழந்தையை அடுத்து படிக்க வைப்பதற்கான வசதியோ, வழியோ இல்லை.

ரஜினி பாபுவை நாங்கள் கொண்டாடிய காலம், நடிகர் ரஜினிகாந்த் தனது திரை வாழ்வின் உச்சத்தில் இருந்த நாட்கள். இப்போது ரஜினி அரசியல் ஆசையின் உச்சத்தில் இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் 'பாபா', 'கோச்சடையான்', 'லிங்கா' என அவருக்கே திரை வாழ்வில் பல சறுக்கல்கள். ரஜினி பாபுவுக்கு இருக்காதா என்ன… இந்த இருபது ஆண்டுகளில் இருவரையும் இணைக்கும் புள்ளியில் வந்து நான் நிற்கிறேன்.

யாரை நம்பி ரஜினி அரசியலில் இறங்குகிறார்? அரசியலில் இறங்க வேண்டும் என்கிற அவரது ஆசைக்கு 20 ஆண்டுகளாக ஏன் ஒத்திகை பார்க்க வேண்டும்?

ரஜினிக்கு அரசியல் ஆசை இருப்பதில் தப்பில்லை. யாருக்கும் அரசியல் கதவுகள் அடைக்கப்படுவதில்லை. சாதுர்யமானவர்களுக்கு அரசியல் கதவு தானாக திறக்கிறது. சாமர்த்தியமானவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். சாமானியருக்குமான வாய்ப்புகளும் அரசியல் அரங்கில் அருளப்பட்டுள்ளது. ஆனால் 20 ஆண்டுகளாக அதை அடைகாக்கும் மர்மம்தான் என்ன…

எதற்காக இந்தக் காத்திருப்பு?

நினைத்த மாத்திரத்தில் குதித்துவிட அரசியல் என்ன குளியல் தொட்டியா… கடலல்லவா.. ஆழம் பார்த்துதான் இறங்க வேண்டும். அவசரப்படக்கூடாது. தருணத்துக்காக காத்திருக்கிறார் என்பவர்களுக்கு….

1995-ம் வருடத்தில் ஒருநாள், ரஜினியின் கார் போயஸ் தோட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களால் மறிக்கப்பட்டது. நடந்தே வீட்டுக்குச் சென்றார். அவரது பத்தடி தூர நடை, ஆட்சியை மதிப்பிடுவதற்கான உரை கல்லாக அமைந்துவிட்டது. அப்போது வந்த தேர்தலில், 'ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டனாலும் காப்பாற்ற முடியாது' என ரஜினி அறிக்கை விட்டார். அதை கப்பென பிடித்துக் கொண்டது திமுக. மூப்பனார் தலைமையில் தமாகா உருவாகி திமுகவுடன் கூட்டணி வைத்தது. பின்னர் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'பாபா' பட பிரச்சினையில் அவருக்கு தலைவலியை கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக 6 தொகுதிகளுக்கு மட்டும் அறிக்கை விட்டார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. அப்போது வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினை குறித்தெல்லாம் தொட்டிருந்தார். ரஜினிக்குத் தெரியாததல்ல… அதற்கு முன்னரும், பின்னரும் எந்த அரசியல் கருத்து குத்துகளையும் தமிழக மக்கள் மூஞ்சியில் குத்தியதில்லை. ஆக காத்திருக்கும் காலத்திலும் அவர் அரசியல் பேசியதில்லை…

ரஜினிக்கு அரசியல் ஆசை துளிர்க்கத் தொடங்கிய காலத்தில் நெறியாள்கை செய்வதற்கு ஜி.கே.மூப்பனார் இருந்தார். தவிர அவரது ஆஸ்தான நண்பர் சோ இருந்தார். சொந்த முடிவுகளுக்கே பழக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கே ஆலோசகராக இருந்தவர் மறைந்த சோ. அவர் இருந்த காலத்தில் ஏன் ரஜினிக்கு ஒரு நல்ல வழியைக் காட்டவில்லை. அல்லது எவ்வளவு காலம் வரை அவரைக் காத்திருக்கச் சொன்னார். அல்லது தமிழருவி மணியனை ரஜினியின் அடுத்த ஆலோசகராக கை காட்டிவிட்டுச் சென்றாரா… தேவைக்கேற்ற நெளிவு சுளிவுகளோடு இயங்கும் தமிழருவி மணியன்தான் ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்றால், நிச்சயம் தமிழருவி வந்தடைந்த இடம் சரியானது. அல்லது ரஜினியின் தேர்வும் மிகச் சரி.

உங்களில் ஒழுக்க சீலர்கள் யாரோ அவர்மீது கல்லெறியுங்கள் என்கிறார் இயேசு. ஒருவரும் கல்லெறியவில்லை. ஏனென்றால் யாரும் ஒழுக்க சீலர்கள் இல்லை. இதை வேதம் சொல்கிறது. ஆனால் அவர்களில் ஒருவரும் தங்கள் மீது தாங்களே ஏன் கல்லெறிந்து கொள்ளவில்லை. இது வாதம்.

ரஜினி மீது முன் வைக்கப்படும் கேள்வியும் இதுதான். பொது வாழ்வுக்கு வந்து ரஜினி செய்யப்போவது என்ன… சுத்தமான அரசியல், சுகாதாரமான அரசியல், நேர்மையான அரசியல் என்றால் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தின் தலைநகரில் இருந்து கொண்டு கண்ணெதிரே நடக்கும் அவலங்களைக் காணாமல் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாரா?. ஈழத் தமிழர் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது ஏன் குரல் கொடுக்கவில்லை? பரபரப்பு மிக்க ரயில் நிலையில் சுவாதி துடிக்கத் துடிக்க செத்தபோது ஏன் ரஜினியின் கண்கள் திறக்கவில்லை?

சாதி ஆணவ வெறியர்கள் , கட்டியவள் முன்னே கணவனை வெட்டிக் கொன்றார்களே? சட்டம் ஒழுங்கு சந்தியில் நிற்பது குறித்து உடுமலை சங்கருக்காக ரஜினியின் தொண்டைக் குழியிலிருந்து ஒரு சொல் வெளியேறவில்லையே ஏன்?.

இவையெல்லாம் ரஜினியின் அரசியல் அஜெண்டாவில் இல்லையா. இல்லை இவை தமிழ்நாட்டு அரசியல் இல்லையா... உண்மையில் ரஜினி களமாடப்போகும் களம் எது..?

நேரடியாக முதல்வர்தான் என்றாலும் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டுமே. ரஜினி என்ன சொல்லப் போகிறார். ஆற்றில் இறங்கினால்தான் நீந்த முடியும்… அரசியலில் குதித்தால்தான் அதிரடி காட்ட முடியும் என்றால் அவரின் ஸ்கிரிப்டுக்கு வேலை செய்யப் போவது யார்..?

rajini123
 

சொந்த வாழ்வில் நேர்மையா?

சொந்த வாழ்வில் நேர்மையா என்று கேட்பது அரசியல் வாழ்க்கைக்கு ஏற்புடைய கேள்வியல்ல… ஆனால் ஊழலற்ற அரசியல் வேண்டும் என்று களமிறங்கும்போது ரஜினி எத்தனை சதவீதம் அதில் சரியாக இருக்கிறார் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில் தப்பில்லை. ஒட்டுமொத்த தமிழகமும் ரஜினியின் கை வித்தைக்கு மயங்கும் ரசிகர்கள் இல்லை என்பதால் அவரின் சொந்த வாழ்க்கையின் நேர்மையை சோதனைக்கு உட்படுத்துவதுதான் அரசியல் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும்.

'படையப்பா' திரைப்படம் வந்தபோதே ஏரியா ரைட்ஸ் வாங்கியவர் ரஜினி. 'காலா' படத்துக்கான வரவு செலவு என்ன என்பதையோ, அப்படத்துக்காக பெறும் சம்பளத்தையோ ரஜினி பகிரங்கமாக வெளியிட முடியுமா… அனைத்தும் வெள்ளையாக இருந்தால் ரஜினியின் அரசியல் தூய்மையில் சந்தேகமேயில்லை.

பெருமைப்படுவதா? வருத்தப்படுவதா?

நாடாளுபவர்களே நடிகர்களாக இருக்கையில் நடிகர்கள் நாடாள ஆசைப்படலாமா என்று கேட்கவில்லை. ரஜினியின் ஓய்வு கால அரசியல்தான் கேள்வியாகிறது. ரஜினி தன் பரிசோதனை காலத்தை 40 வயதில் தொடங்கி இருக்கலாம். அல்லது 50 வயது, அல்லது குறைந்தபட்சம் 60 வயதிலாவது தொடங்கி இருக்கலாம். அடுத்த பட புராஜெக்ட் முடிக்கையில் அவர் 70 வயதை நெருங்கிவிடுவார். இந்த வயதில் ரஜினி தமிழகத்தின் தலையெழுத்தை தூக்கி சுமக்க நினைப்பதற்கு பெருமைப்படுவதா? அல்லது ஓய்வு காலத்தில் முதல்வராக ஆசைப்படுகிறார் என வருத்தப்படுவதா?

ரஜினி அடையாளப்படுத்தப்போவது எதை அல்லது யாரை?

அரசியலுக்கு வயது வரம்பு தடையில்லைதான். ஆனால் ஒரு பரந்த மாநில மக்களின் நல்லது கெட்டதுகளை தெரிந்து கொள்ள ஒரு காலம் வேண்டாமா.. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால அரசியலை தீர்மானித்தவர்கள் தமிழ் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியலுக்கு தங்களை ஒப்படைத்த வயதும் காலமும் முக்கியமானது. கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை திருவாரூரில் தொடங்கி இருக்கலாம். திரையில் கோலோச்சிய காலத்தில்தான் தேர்தல் அரசியலிலும் தீவிரமாக இருந்தார்.

மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் 30 வயதுகளிலேயே அரசியல் கருத்துகளோடு இருந்தவர். 50 வயதில் தனிக்கட்சி தொடங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1948ல் பிறந்து 1981ல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்கள் யாவரும் நேரடியாக முதல்வர் ஆனவர்கள் இல்லை. எம்.எல்.ஏ, எம்.பி. என படிப்படியாக உயர்ந்தவர்களே.

ஆந்திராவின் அரசியல் போக்கை தீர்மானித்த என்.டி.ஆரை எடுத்துக் கொள்ளுங்கள. 60 வயதில் அரசியலுக்கு தன்னை ஒப்படைத்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. தங்களுக்குப் பிறகான அரசியலை தொடர இவர்களின் கொள்கை இருந்தது. அல்லது குறைந்தபட்சம் வாரிசுகளாகவது இருந்தனர். ரஜினி அடையாளப்படுத்தப்போவது எதை அல்லது யாரை?

திரைக்கலைஞராக ரஜினியின் மீது கொண்டுள்ள அன்பையும், ரசிக தன்மையும் மட்டுமே அரசியலுக்குக்கான முதலீடாகிவிட முடியுமா… அவரின் சொந்தப் பிரச்சினைகளுக்கான அறிக்கைகளே அரசியல் செல்வாக்கை உரசும் உரை கல்லாக அமைந்துவிடுமா… உச்சநட்சத்திரமாக உருமாறிய காலத்தில் பின் தொடர்ந்த ரசிகர்களின் ரகம் வேறு. போஸ்டர்களுக்கு பசையை காய்ச்சித் தடவிய காலம். நாயக பிம்பங்களும் அதிகம் இல்லாத நாட்கள். இப்போதோ நேற்று வந்த நட்சத்திரங்களுக்கும் ஓப்பனின் சாங் வைக்கப்படுகிறது என்பதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும். லட்சம் கோடியை எண்ணால் எழுதினால், அதில் அதிகம் சைபர்கள்தான் என்கிற நவயுக தமிழன் காலம் இது. சறுக்கினால் ரஜினியும் ஒரு மீம்ஸ் கிளிப்பிங்ஸ்தான். வாட்ஸ் அப்- வறுவல்தான். யாரும் விதிவிலக்கில்லை.

இறுதியாக உறுதியாக ரஜினிக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால்... உங்களுக்கு நீங்களே எதிரியாகப் போகிறீர்களா? திரைவாழ்வில் சம்பாதித்த சுகமான நாட்களை அரசியல் நாட்களில் தொலைத்து விடாதீர்கள் ரஜினி.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22280137.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கன்னடனின் தமிழ்நாட்டு அரசியல் ஆசையால் இருக்கிற கொஞ்ச நஞ்ச இளசு பாட்டுக்கள் கூட பார்க்க அருவருப்பாய் உள்ளது .

Link to comment
Share on other sites

நிறைய பேச வேண்டி உள்ளது: இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ரஜினி சூசகம்

 

 
Rajinijpg

ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பில்   -  கோப்புப் படம்

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நிறைய விஷயங்கள் பேச வேண்டிய நேரங்கள் வரும், பேசவேண்டிய விஷயங்களும் உள்ளன என்று கூறினார்.

அரசியலுக்கு வருவதன் முன்னோட்டமாக கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், சிஸ்டம் சரியில்லை என்று பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டாம் கட்டமாக, ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி, நேற்று முதல் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. வருகிற 31-ம் தேதி வரை, ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி. நேற்று 31-ம் தேதி முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

நேற்றைய முதல் நாள் விழாவில், தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் முதலானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இரண்டாம் நாளான இன்று ரஜினி ரசிகர்களிடம் பேசியதாவது:

''மகிழ்ச்சியான ஒரு விழா, மறுபடியும் நண்பர் மகேந்திரன், கலைஞானத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள் ரொம்ப சந்தோஷம். ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பாருங்கள், படியுங்கள், அழிவுப்பூர்வமான விஷயங்களை பார்க்காதீர்கள்.

தாய் தந்தையை மதியுங்கள், அவர்கள் தான் வாழும் தெய்வங்கள், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். அவர்கள் தான் நமது ஆஸ்தி, சொத்துகள். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டிய நேரங்கள் வரும், பேசவேண்டிய விஷயங்களும் உள்ளன.

இவ்வாறு பேசினார்.

அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ம் தேதி அறிவிக்கிறேன். இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கிறது பொறுமையாக இருங்கள்'' என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22286043.ece

Link to comment
Share on other sites

‘ரஜினி கடவுள் மாதிரி; அரசியலுக்கு வேண்டாம்’

 

 
rajinijpg

சென்னையில் நேற்று ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், வரும் 31-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து, அவரது ரசிகர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

என்.ராமதாஸ் (சென்னை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத் தலைவர்)

‘நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன்’ என்று வரும் 31-ம் தேதி ரஜினிகாந்த் சொல்லும் வார்த்தைகள்தான் எங்களுக்கு புத்தாண்டு பரிசு. ‘ஒரு கிளாஸ் டீ, ஒரு கட்டு பீடி இருந்தால் போதும். திமுக தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காமல் கட்சிப் பணிகளை செய்வார்கள்’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். அதுபோல்தான் ரஜினியின் தொண்டர்களும். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தலைவருக்காக அரசியல் சார்ந்த வேலைகளைச் செய்ய காத்திருக்கிறோம்.

எம்.வீரமணிகண்டன் (திருநெல்வேலி தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி. இதனால் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும். அரசியலில் அவர் தனித்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் சூழ்நிலை கருதி கூட்டணி அமைத்தாலும் ரசிகர்கள் அதை ஏற்பார்கள். ஜெயலலிதாவுக்காகத்தான் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அதுபோல் ரஜினிகாந்துக்காக, அவர் அடையாளம் காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.

ஜே.பி.ரவி (ரஜினி ரசிகர் மன்ற சிவகங்கை மாவட்ட தலைவர்)

‘தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர்க்களத்தில் சந்திப்போம்’ என கடந்த முறை அறிவித்தபோதே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தற்போதைய சந்திப்பிலும் அதன் வெளிப்பாடு தெரிகிறது. வரும் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாட்டை அவர் உறுதியாக அறிவிப்பார். திமுகவை மக்கள் நம்பவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. மக்கள் ஒரு நல்ல தலைவரை எதிர்பார்க்கின்றனர். இந்த சாதகமான சூழ்நிலையை ரஜினி பயன்படுத்திக்கொள்வார்.

rajinifansjpg
 

பி.அழகர் (மதுரை பெத்தானியாபுரம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எப்படி செயல்படுவது என்பது வரை ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டு வருகிறோம். வரும் 31-ம் தேதி அரசியலுக்கு வருவதைப் பற்றி தெளிவாக சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் அவசர கதியில் அரசியல் கட்சியை அறிவித்து விடக்கூடாது. அரசியலுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு அதன்பிறகுதான் கொடியை, கட்சியை அறிவிக்க வேண்டும்.அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

கே.பாலசுப்பிரமணியம் (மாவட்ட அமைப்பாளர், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம்)

தற்போதைய அரசியலில் ஒரு மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியலை சுத்தம் செய்ய ரஜினி முன்வர வேண்டும். தேசிய மனப்பான்மை கொண்ட அவர், யாரையும் குறை கூறாமல், நல்ல கொள்கைகளை முன்வைத்து, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார். எனினும், பல சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அவற்றை எதிர்கொண்டு, நல்லாட்சி கொடுப்பார் என நம்புகிறோம்.

என்.நவநீதன் (மதுரை மாவட்ட ரஜினி மன்ற முன்னாள் ஆலோசகர்)

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதாலும் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற மாயை மட்டுமே உருவாகியுள்ளது.

எம். குட்டிமணி (ரஜினி ரசிகர், திருச்சி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டாரா என ஆண்டுக்கணக்கில் ஏங்கி காத்திருந்தோம். அந்த காலகட்டத்தில், அவர் அதற்கான எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. இப்போது அவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், இங்குள்ள அரசியல் சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை.

அவருக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை வைப்பதைவிட, தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு பெயர், புகழை கெடுப்பதற்காக இங்கு பெரும்கூட்டம் தயாராக உள்ளது. அவர்களுக்கு இரையாகிவிடக்கூடாது. அத்துடன் மாவட்டந்தோறும் ரசிகர் மன்றங்கள் 2, 3 பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. அனைவருக்குமே பதவி ஆசை உள்ளது.

எனவே, என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. மீறி வந்தால், கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் சம்பாதித்து வைத்துள்ள நற்பெயரை, அரசியல் என்னும் சாக்கடை மூலம் கெடுத்துவிட நேரிடலாம். ரஜினியை நாங்கள் தலைவராக காட்டிலும், கடவுள் மாதிரியே பார்க்கிறோம். அவர் இப்படியே இருந்துவிட வேண்டும், அரசியலுக்கு வர வேண்டாம் என்பது என் விருப்பம்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22284565.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

205cee.jpg

டிஸ்கி

அது ஒன்னுமில்ல தலீவரு அடுத்த படத்தில் ஐ.டி கம்பனியில சாப்ட்டுவர் இஞ்சினியரா ஆக்ட் குடுக்கார் அதான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DQQLSTVUQAYUfDF.jpg:large

ஜனவரியில் அரசியல் கட்சி குறித்து முடிவெடுப்பேன் - ரஜனி இது வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு அடிச்சு கொல்லுங்கடா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

‘ரஜினி கடவுள் மாதிரி; அரசியலுக்கு வேண்டாம்’

 

 
rajinijpg

தமிழ்நாட்டை ஆள நினைக்கும் இந்த கடவுளுக்கு தமிழ் சரளமாக பேச எழுத வருமா? :cool:

Link to comment
Share on other sites

`எனது காலில் விழ வேண்டாம்!' - ரசிகர்களுக்கு ரஜினியின் அன்பு வேண்டுகோள்

 
 

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமைத் தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று, மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் ரஜினி. 

ரஜினி

 

ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, `ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய் மற்றும் தந்தை கால்களில் மட்டும்தான் விழவேண்டும். மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்க ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி' என்று கூறினார்.

 

இந்த சந்திப்பின் முதல் நாளன்று ரஜினி, `அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் முக்கியம்' என்று பேசியது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/tamilnadu/112017-ranikanths-request-to-his-fans.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்...!

தலைவா நீ வா தலைவா ..! 

நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்? 

சொல்லு தலைவா ? 

ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம் . நீங்க காவல் துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உங்க காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது ..

நீ வா தலைவா...!

எம்.ஜி.ஆர் செட்டப் லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கு தெரியப்போவுது!

நீ வா தலைவா ..!

என்னமோ நம்ம திமுக வுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க .. ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பு+திமுக +மூப்பனார் கூட்டணி னு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார் னு அள்ளி விடுரோமே இது எவனுக்கு தெரியப் போகுது.. 

நீ வா தலைவா...!

ஜல்லிக்கட்டு ,ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் “ஹேட்ஸ் ஆப் மோடிஜி “ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான் ..

நீ வா தலைவா...!

எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதை செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது , ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன் னு பீத்துரோமே..! 

நீ வா தலைவா ..!

46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீங்க சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனா னு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே... 

நீ வா தலைவா ..!

2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமாகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்த தேர்தலில் 6 தொகுதியிலுமே பா.ம.க அமோக வெற்றி பெற்றதும் (நம்ம மக்கள் செல்வாக்கு) இப்ப எவனுக்கு தெரியப்போவுது...!

நீ வா தலைவா ..!

60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உங்களை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே .. இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள...!

நீ வா தலைவா ..! 

ஐயா வீரப்பன் கொல்லப்பட்ட போது “அரக்கன் ஒழிந்தான்” னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காகவாது

நீ வா தலைவா ..!

உபயம்: முகநூல் 

Link to comment
Share on other sites

புதுக்கட்சி துவக்கமா: ரஜினி முடிவென்ன?
 
 
 

'என் அரசியல் நிலைப்பாட்டை, வரும், 31ல் அறிவிப்பேன்' என, ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் ரஜினி, திடீரென பின் வாங்குகிறார். 'இப்போதைக்கு, பேரவை மற்றும் அதற்கான, 'மொபைல் ஆப்' தான்; கட்சி அறிவிப்பு இல்லை' என்ற, முடிவுக்கு அவர் வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 

புதுக்கட்சி துவக்கமா: ரஜினி முடிவென்ன?

 

சமூக அக்கறை



நடிகர் ரஜினி, சில மாதங்களுக்கு முன், சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, 'தமிழகத்தில், 'சிஸ்டம்' சரியில்லை. போர் வரும் போது பார்க்கலாம்; அதுவரை காத்திருங்கள்' என, ரசிகர்களிடம் பேசினார்.

அவரின் இரண்டாம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு, மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. முதல் நாளில், 'என் அரசியல் பிரவேசம் குறித்து, வரும், 31ல், தெரிவிப்பேன்' என்றார்.
 

மறுநாள் முதல் தொடர்ந்து, ரசிகர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகிறார். இதனால், வரும், 31ல், நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என, அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், அரசியல் கட்சியை அறிவிக்காமல், பேரவை மற்றும் அதற்கான, 'மொபைல் ஆப்'பை மட்டுமே ரஜினி துவக்குவார் என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது.



ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:




ரஜினி நடித்துள்ள, '2.0, காலா' போன்ற படங்களில், 500 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட, 800 கோடி ரூபாய்க்கு மேலான வியாபாரம், ரஜினியை நம்பியே உள்ளது. இதில், 'காலா' படத்தை, ரஜினியின் மருமகன், தனுஷ் தயாரிக்கிறார். இந்த படங்கள் வெளியாகும் முன் ரஜினி, அரசியல் கட்சியை துவக்க மாட்டார்; மற்ற அரசியல் கட்சியிலும் சேரமாட்டார்.


'ராகவேந்திரா, பாபா' போன்ற படங்கள்வாயிலாக, ரசிகர்களுக்கு ஆன்மிக சிந்தனை வளர வேண்டும் என, விரும்பிய ரஜினி, இப்போதைக்கு தன்னை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களுக்கு, சமூக அக்கறை வர வேண்டும் என, விரும்புகிறார். 'கட்சி ஆரம்பித்தால், சம்பாதிக்க வேண்டும் என

 

நினைத்து, என்னுடன் வராதீர்கள்' என, ஏற்கனவே தெரிவித்து விட்டார்.அரசியல் கட்சி ஆரம்பிக்க அச்சாரம் போட்டுஉள்ள கமல், முன்னெச்சரிக்கையாக அடுத்த மாதம், 'மொபைல் ஆப்' ஒன்றை துவக்க உள்ளார். அவர் பாணியில், ரஜினியும், மொபைல் ஆப் துவக்குவார். இதற்காக, பேரவை ஒன்றையும் துவக்க உள்ளார்.
 

வாய்ப்பு இல்லை



மொபைல் ஆப் வழியாக ரசிகர்கள், மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அவர்களின் மனநிலை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னைகளை அறிய முடியும் என, ரஜினி கருதுகிறார். அதனால், நேரடி அரசியல் கட்சி துவக்கம் இப்போது இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1928228

Link to comment
Share on other sites

`சினிமாவானாலும் அரசியலானாலும் காலம் ரொம்ப முக்கியம்!' ரஜினி சொன்ன பன்ச்

 
 

சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார். 

WhatsApp_Image_2017-12-29_at_9.25.27_AM_

 

கடந்த மே மாதத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தற்போது இரண்டாவது முறையாகக் கடந்த 26-ம் தேதி முதல் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். உறுப்பினர் அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கண்டிஷனுடன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. அந்தவகையில் 4-ம் நாளான இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்துவருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.  

 

என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, ‘என் குருநாதர்களில் ஒருவரான சச்சிதானந்தர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆன்மிகத்தைக் கற்றுக்கொடு; மதத்தை அல்ல என்பது அவரது அறிவுரை. அமெரிக்காவில் ஆன்மிகப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். கோவை விமான நிலையத்துக்கு சிவாஜியுடன் ஒருநாள் சென்றிருந்தேன். நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிந்திருந்தனர். நாங்கள் வெளியே வந்ததும், ரஜினி வாழ்க என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். மாபெரும் நடிகரான சிவாஜி முன்னால் ரசிகர்கள் என் பெயரைச் சொல்லி கோஷமிட்டது, எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடம்பில் பாம்பெல்லாம் ஊறுவதுபோன்ற சூழலை ஏற்படுத்தியது. அதைக் கண்டுகொண்ட சிவாஜி, ’’இது உன் காலம்டா. நல்ல படங்கள் நிறையக் கொடு’’ என்று வாழ்த்தினார். சினிமா என்றாலும், அரசியல் என்றாலும் காலம் மிகவும் முக்கியமானது. காலம் வந்தால் எல்லாம் தானாகவே மாறும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று நாம் வாழ வேண்டும். குடும்பத்தை முதலில் கவனியுங்கள். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே சமுதாயம் நம்மை மதிக்கும்’ என்று பேசினார். 

https://www.vikatan.com/news/tamilnadu/112107-rajinikanth-speech-in-4th-day-of-fans-meet-function.html

'காலமும் நேரமும் மாறும்!' - ரஜினி பேச்சு

 

 
rajini11jpg

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி | படம்: எல்.சீனிவாசன்

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக இன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள் ரசிகர்கள். காலமும் நேரமும் மாறும். மாறியே தீரும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது ரஜினி பேசியதாவது :

’நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது (என்று சொல்லி நிறுத்தினார். உடனே கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது). பிறகு இரண்டுநாள் என்றால்... நான் உங்களைப் பார்ப்பது. அப்புறம் உங்களை நான் மிஸ் பண்ணுவேன். அதைச் சொன்னேன்.

கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் முக்கியமான இடம் பிடித்த ஊர் இது. நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். என் குருநாதர்கள் இருக்கிறார்கள். சுவாமி சச்சினாந்தரின் ஆஸ்ரமம் இருக்கிறது. மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய படித்தவர். ஒருகட்டத்தில், பழனி சுவாமிகள் என்பவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். பிறகு இமயமலைக்குச் சென்றார். அங்கே சிவானந்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி, சச்சிதானந்த சுவாமிகளானார். பிறகு அவரின் குருநாதர் வழிகாட்டுதலின்படி, அமெரிக்காவுக்குப் போய் ஆன்மிகமும் தியானமும் பரப்பு என்று சொல்ல, அங்கே சென்றார்.

மதத்தைப் பரப்பச் சொல்லவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பச் சொன்னார். அங்கே இவரிடம் கற்றுக் கொண்ட தொழிலதிபர்கள், மிகப்பெரிய டாக்டர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் என பலரும் உண்டு. அந்த நாட்டில், பென்சில்வேனியா 700 ஏக்கரில் ஆஸ்ரமம் இருக்கிறது. அது சொர்க்கம். அப்படியொரு இடம்.

அங்கே இருந்துகொண்டு, ஆன்மிகப் பணிகள் செய்தார். எந்த ஆடம்பரமும் இல்லாமல், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் இல்லாமல் செய்தார்.

இவர் சொல்லித்தான் பாபா படம் எடுத்தேன். அந்தப் படத்தை அவரும் பார்த்தார். அவர் மகாசமாதி ஆவதற்கு முன்னதாக கடைசியாக அவரைப் பார்த்தது நான் தான். இதுவொரு பாக்கியம் எனக்கு!

அதேபோல, தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கோவையில், ஆனைக்கட்டியில் ஆஸ்ரமம் அமைத்து சேவைகள் செய்தார். இவர் என் குருநாதர் மட்டுமல்ல. மார்க்கதரிசியும் கூட! இப்படி எனக்கும் கோவைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு.

ஒருமுறை நண்பரின் இல்லத் திருமணம். சிவாஜி சார், நான் என பலரும் விமானத்தில் சென்று, கோவை ஏர்போர்ட்டில் இறங்கினோம். அங்கே என்னைப் பார்த்ததும் ஏகப்பட்ட கூட்டம். என் பேரைச் சொல்லி, வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டபடி முன்னே வருகின்றனர். எனக்கோ தயக்கம். கூச்சம். பக்கத்தில் எவ்வளவு பெரிய மேதை இருக்கிறார். அவர் இருக்கும் போது என் பெயரைச் சொல்லி வாழ்க கோஷம் போட்டால் எப்படி இருக்கும் எனக்கு.

இதையெல்லாம் பார்த்த சிவாஜி சார், ’என்னடா... என்னடா நழுவுறே. இது உன் காலம்டா. உன்னோட காலம். நல்ல படங்களாக் கொடுடா. வாடா... முன்னே வாடா’ என்று அழைத்துக் கொண்டு, பத்திரமாக காரிலேற்றி அனுப்பிவைத்தார் சிவாஜி சார்.

எவ்வளவு பக்குவப்பட்ட மனிதர் சிவாஜி சார். அவருடைய குணம் அப்படிப்பட்டது. பணமும் காசும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மரியாதை கொடுப்பார்கள். இப்படியான குணங்கள் இருந்தால்தான் மதிப்பு கிடைக்கும். இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு அவரின் குணங்களே காரணம். யாராக இருந்தாலும் குணம் நன்றாக இருந்தால், அவர் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மதிக்கப்படுவார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து, அதே கோவைக்கு வந்தேன். விமான நிலையத்தில் கூட்டம். என்னிடம் வந்து, ’சார்... அந்த நடிகர் வந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகம். அதனால் கொஞ்சநேரம் பொறுத்திருங்கள். அவர் போனதும் போய்விடலாம்’ என்றார்கள். நான் சிவாஜி சார் சொன்னதை நினைத்துக் கொண்டேன். காலம். இது அந்த நடிகருடைய காலம். இப்படி காலமும் நேரமும் மாறும். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும். காலமும் நேரமும் மாறியே தீரும் என்று பேசினார் ரஜினிகாந்த்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22323953.ece?homepage=true

Link to comment
Share on other sites

`ஒரு நாள் பொறுத்திருங்கள்' - ரசிகர்கள் சந்திப்புக்குப் பின் ரஜினி பேட்டி

 
 

2c_11061.jpg

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ``ஒருநாள் பொறுத்திருங்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். அப்போது, ``குடும்பம்தான் முக்கியம். முதலில் உங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். என் காலில் விழ வேண்டாம். கட்டுப்பாடுதான் மிக முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன்" என்று தடாலடியாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

அன்று முதல் இன்று வரை தனது போயஸ் கார்டனில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்குச் செல்லும் முன்பு செய்தியாளர்கள் தினந்தோறும் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளை எழுப்பிக்கொண்டே வருகின்றனர். அதற்கு, சிரிப்பே தனது பதிலாக அளித்துவிட்டுச் செல்வார். 

 

டிசம்பர் 31-ம் தேதி நாளை வர உள்ள நிலையில், இன்று தன் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, "சென்னை எனக்கு எப்போதுமே மெட்ராஸ்தான். சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தம்மை உயர்த்தியவர்கள் பாலசந்தர், சுரேஷ் கிருஷ்ணா. என்னை நடிகராக்குவதற்கு என் அண்ணன் மிகவும் கஷ்டப்பட்டார். இதற்காக என்னுடைய அண்ணன் வேலைக்குச் சென்றார். தமிழ் கற்றுக்கொண்டதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்" என்று பேசினார். பின்னர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்குப் புறப்படுவதற்கு காரில் ஏறுவதற்காக வந்தார். அப்போது செய்தியாளர்கள், அரசியல் பிரவேசம் எப்போது என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த ரஜினி, ``ஒருநாள் பொறுத்திருங்கள்'' என்றார்.
 

https://www.vikatan.com/news/tamilnadu/112213-wait-for-just-one-day-rajinikanth-to-his-fans.html

நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு

 

நேர்மையான வழியில் நமது லட்சியங்களை அடைய வேண்டும் என்றும் குறுக்கு வழியில் செல்லக் கூடாது என்றும் ரசிகர்கள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் பேசினார். #Rajinikanth #RajinikanthFansMeet

 
 
நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு
 
சென்னை:
 
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5-வது நாளாக இன்றும் ரசிகர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய சந்திப்பின்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது:-
 
என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973-ல் முதல் முறையாக சென்னை வந்தேன்.
1960-களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ்தான். 
 
தமிழ் சினிமாவிற்கு வந்தபோது எனக்குத் தமிழ் தெரியாது. இயக்குனர் பாலச்சந்தர் என்னிடம், ‘நீ தமிழை கற்றுக்கொள், உன்னை எங்கு கொண்டு செல்கிறேன் பார்’ என சொன்னார். தனது மகன்களுடன் சேர்த்து என்னையும் மகனாக பார்த்தவர் பாலச்சந்தர். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குனர்கள் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குனர் ஷங்கர், இந்தியாவிற்கே ரஜினிகாந்த் தெரியும்படி செய்தவர். 
 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக என் வளர்ச்சிக்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். இப்போது என்னுடைய கலைவாழ்க்கை 2 பாயிண்ட் ஓ-வில் வந்து நிற்கிறது.
 
கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம், அது கனவாக போகும் போது இருக்காது. நாம் கண்ட கனவு நனவாகவில்லை என்றால் வருத்தப்படத் தேவையில்லை. அதற்காக கனவு காண வேண்டாம் என்று கூறவில்லை. கனவு காணவேண்டும். ஆனால், அதை நியாயமான வழியில் நனவாக்க வேண்டும். குறுக்குவழியில் நமது கனவுகளை நனவாக்க முயற்சிக்கக்கூடாது.  நேர்மையான வழியில் லட்சியங்களை அடைய வேண்டும். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/30091821/1137474/Rajinikanth-says-honest-way-to-achieve-the-goal.vpf

காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: ரஜினிகாந்த்

 

 
 

காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.#Rajinikanth #Kaala

 
காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: ரஜினிகாந்த்
 
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார். 
 
அப்போது தனது அடுத்த படமான காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை இயக்குனர் ரஞ்சித் காண்பித்திருப்பதாகவும், காலாவிற்குப் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
 
‘எனது உயிரை மீட்டு கொண்டு வந்தது ரசிகர்களின் பிரார்த்தனைதான்.  ரசிகர்களின் அன்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்றபொழுது ரசிகர்கள் செய்த பிரார்த்தனையால் மீண்டு வந்தேன்.  சினிமா, அரசியலில் வர வேண்டாம்.  உயிரோடு வருவதே போதும் என சிகிச்சையின்பொழுது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதினார். முதலில் குடும்பமே முக்கியம், குடும்பம், உறவினர்களிடம் நல்ல மதிப்பை பெற வேண்டும்’ என்றும் ரஜினிகாந்த் பேசினார்.
 
எனவே, காலா படத்தின் பணிகளை முடித்தபின்னர் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/30100201/1137481/Rajinikanth-Rajinikanth-Fans-Meet-says-everything.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.