Jump to content

தினகரனும், சுமந்திரனும், ஈழத்தமிழர் நலனும்….


Recommended Posts

தினகரனும், சுமந்திரனும், ஈழத்தமிழர் நலனும்….

 

SM1.jpg?resize=900%2C600
தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு என்றுமே இருக்கும் என அ.தி.மு.கவின் துணைச் செயலரும், ஆர்.கே நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆ.கே நகர் தேர்தலுக்கு முன்னதாக  கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில்,  சிறப்பு விருந்தினராக  தினகரன் கலந்துக் கொண்டிருந்தார். இதே நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் அழைக்கப்பட்டு இருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காணரணமாக  நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ. சுமந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.   இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தினகரன் ஈழத்தமிழரின் நலன் குறித்து கரிசனை வெளியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  இலங்கையின் தற்போதைய நிலவரங்கள், அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தினகரன் ஆழமான கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதாகவும்,  அதன்போது, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாஷைகளுக்காக இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும்  தினகரன் குறிப்பிட்டதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

SM3.jpg?resize=900%2C563SM2.jpg?resize=900%2C600

http://globaltamilnews.net/2017/57478/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா நரி வாலைகிளப்பி பரத நாட்டியம் ஆடுது என்றால் கதை இதுவா நானும் மனுஷனுக்கு உண்மையிலே சளி பிடிச்சுத்தான் ஆஸ்பத்துரியில் கிடக்கு என்று நினைச்சன் . (டெல்லியை பகைத்து கொள்ளாத ராஜதந்திரமாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என வாக்குகளை விலைக்கு வாங்கி ஆர்கே நகரில் ஊரெல்லாம் கொள்ளையடிச்ச பணத்தில் வென்ற ஒரு பொறுக்கி தினகரனுடன் ஒன்றாக மேடையில் தொன்றக்கூடியவர்களது தராதரம் எப்படி இருக்கும் எனப் புரிந்துகொள்ளுங்கள். பன்றியுடன் சேர்ந்து நாயும் ........ தின்னுது அதை வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு புல்லரிச்சுப்போய்கிடக்கினம். இந்தக்கேவலத்தில் புலம்பெயர் தமிழர்களில் சிலர் தாயகம் தமிழ்த்தேசியம் எனப்புலம்பித்திரியினம். இப்பதான் தெரியுது சுமந்திரன் வடமாராட்சியில் புரியாணி குவாட்டர் இவைகொண்டு தேர்தலில் ஜெயிச்ச போர்முலாவை எனக பிடித்தவர் என. உள்ளூராட்சித்தேர்தலில் இதைவிடப் பல சித்துவேலைகளை தமிழ்நாட்டின் அரசியல் சாக்கடை தினகரன் சுமந்திரனுக்கு இச்சந்திப்பின்போது கத்துக்கொடுப்பார். 

தமிழ்நாட்டின் அரசியல் சாக்கடை தனகரனது இலங்கைத்தமிழர்க்கான நேரடி அரசியல் வாரிசாக சாக்கடைச் சுமந்திரன் வருகிறார் பராக் பராக் பராக்

வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு  மானம் ரோசம் இவைகள் எல்லாம் அவர்களிடமிரிந்து உரிஞ்சு வெகுநாளாகிவிட்டது ஊரே அம்மணமாகிக்கிடக்கும்போது யாருக்கும் எதுவும் தெரியாது.

Link to comment
Share on other sites

ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு

 

T.T.V. Dhinakaran -M.A. Sumanthiranதமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் கலந்து கொண்ட போதே, ரிரிவி தினகரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது.

இந்த விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கவிருந்தார். அவர் சுகவீனமடைந்திருந்ததால், அவரது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த நத்தார் விழாவில் பங்கேற்றிருந்தார்.

T.T.V. Dhinakaran -M.A. Sumanthiran

இந்த விழாவில் பங்கேற்ற ரிரிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து, தி ஹிந்து அங்கில நாளிதழிடம் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,

“பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் இருவரும் சந்தித்து கலந்துரையாடினோம். போருக்குப் பிந்திய சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எப்படி உள்ளனர் என்று தினகரன் கேட்டறிந்து கொண்டார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட, தற்போதைய கூட்டு அரசாங்கம் சிறந்ததா என்று தினகரன் ஆதரவாளர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நான் இப்போதைய அரசாங்கம் பரவாயில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைத் தேடும் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன” என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/12/26/news/28169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயையோ. சுமந்திரன் போற இடத்தில தமிழர் நலன் ஏதாவது இருக்குமா? சிங்களவனை புகழவும், முதலமைச்சரை பதவி இறக்கவும் இரகசியமாய் ஏதாவது சொல்லி இருப்பார். அதுவும் தினகரனிடம் தமிழர் பற்றி .........? தாங்க முடியேல்லை இந்தப் பகிடியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T.T.V. Dhinakaran -M.A. Sumanthiran

கோதரிவிழ   இஞ்சையும்   பட்டுவேட்டியா?????? tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

T.T.V. Dhinakaran -M.A. Sumanthiran

கோதரிவிழ   இஞ்சையும்   பட்டுவேட்டியா?????? tw_dizzy:

தமிழகத்தில் உப்பு போட்டு சாப்பிடும் அரசியல்வாதி சீமானிடம்  போயிருந்தாலும் கொஞ்சம் தேறியிருக்கும் விதி தமிழனை விடாது .

Link to comment
Share on other sites

மத்திய அரசுகளிடம் பிச்சையெடுக்கும் இருவரின் சங்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.