Jump to content

பேய்கள் உலாவும் யாழ்.சிற்றங்காடி? கலக்கத்தில் வியாபரிகள்….


Recommended Posts

பேய்கள் உலாவும் யாழ்.சிற்றங்காடி? கலக்கத்தில் வியாபரிகள்….

peyi.jpg?resize=600%2C350

யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கு யாழ்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புதிதாக சிற்றங்காடி கடைத்தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினால் அமைத்து கொடுக்கப்பட்டது.

தற்போது குறித்த சிற்றங்காடி கடைத்தொகுதியிலையே வியாபாரிகள் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் குறித்த கடை தொகுதிகளில் இரவு வேளைகளில் அமானுசிய சக்திகள் உலாவுகின்றன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பில் GTN செய்தியாளருக்கு அவர்கள் தெரிவிக்கையில், “கடந்த 1995ஆம் ஆண்டுக்கு முன்னரான கால பகுதியில் சுடுகாடாக காணப்பட்டது. பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தது. நீண்ட காலத்திற்கு பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

இந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ளது அந்த ஆலயமும் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகின்றன.இந்த நிலையில் தான் இரவு வேளைகளில் அமானுசிய சக்திகள் இந்த பகுதிகளில் உலாவி அட்டகாசம் புரிகின்றன.

இந்த கடை தொகுதி திறக்கபட்டு மூன்று மாத காலமாகி விட்டன. இந்த மூன்று மாத கால பகுதியில் இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 02 தமிழ் வியாபாரிகள் , 02 முஸ்லீம் வியாபாரிகள் , மூன்று வியாபரிகளின் மனைவிமார், வியாபரி ஒருவரின் மாமனார் மற்றும் வியாபாரி ஒருவரின் தாய் ஆகிய ஒன்பது பேர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதற்கு காரணம் இங்கு உலாவும் அமானுசிய சக்திகள் தான்.

இங்கு வியாபரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னரே அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன. அத்துடன் இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளும் நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த கடை தொகுதி கட்டப்படும் போது , உரிய முறையில் சாந்தி செய்யாமையே அமானுசிய சக்திகள் உலாவ காரணம். தற்போது வியாபரிகள் ஒன்றிணைந்து சாந்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.” என தெரிவித்தனர். அது தொடர்பில் மாநகர சபை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது , பேய் பிசாசு உலாவுகின்றது என்பது மூட நம்பிக்கை அத தேவையற்ற கட்டுக்கதை என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2017/57370/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கடைகளை குறைந்த வாடகைக்கு பெற இப்படியொரு வழியாக்கும் உண்மையான பேய்கள் எல்லாம் புலம்பெயர்ந்து வந்து விட்டன .:14_relaxed:

Link to comment
Share on other sites

புலனாய்வுப்பிரிவினர் காவற்துறையினரை கிறுங்கடிக்கும் பேய் பிசாசுகளின் நடமாட்டம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

jaffna-market.jpg?resize=900%2C675

யாழ்.சிற்றங்காடியில் பேய் பிசாசு நடமாட்டம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.சிற்றங்காடி கடைத்தொகுதியில் பேய் பிசாசின் நடமாட்டம் காணப்படுவதாக வெளியான செய்திகளை அடுத்து பலர் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டனர் என யாழ்.சிற்றங்காடி கடை தொகுதி வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

சிற்றங்காடி கடை தொகுதியில் அமானுசிய சக்திகளின் நடமாட்டம் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மாலை வரையிலான கால பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , அவர்களின் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் பிரிவினர் , அவர்களின் புலனாய்வு பிரிவினர் , என பல தரப்பினர் பேய் பிசாசின் நடமாட்டம் உள்ளதா என விசாரணைகளை முன்னெடுத்து சென்றுள்ளனர். என வியாபரிகள் தெரிவித்தனர்.

jaffna-market4.jpg?resize=900%2C675jaffna-market3.jpg?resize=900%2C675jaffna-market2.jpg?resize=900%2C675jaffna-market1.jpg?resize=900%2C675

http://globaltamilnews.net/2017/57899/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமானுஸ்ய சக்தி???? மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் காற்றின் சலசலப்பையே வித்தியாசமாக உணர்கிறார்கள் போல் இருக்கிறது மேலே அமைக்கப்பட்ட கூரைக்குள் காற்று ஏறி இறங்கும்போதும் தகரங்களில் வெளிப்படும் ஒலியையும் வைத்து தீர்மானித்திருப்பார்களோ? மனப்பிராந்தி சுடலையில் கட்டப்பட்டது என்று கதைவேறு.. தமிழீழத்தின் எல்லாப்பாகங்களிலும் அவத்து சாவுகள் நிறைய அப்படியானால் அநேகமாக தமிழீழமே பேயுரையும் இல்லமாகும்... அட போங்கைய்யா போய் வேற வேலை ஏதாவது இருந்தால் பாருங்க.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கின் ஒவ்வொரு மூலையிலும் வாழணும் என்று ஆசைப்படும்போதே சாகடிக்கப்பட்டவர்கள் லட்சம்பேர்,  ஓவ்வொரு   சதுர அடியிலும் பேய்கள் இருக்கவேண்டிய சூழ்நிலையில் யாழ்நகர சிற்றங்காடியில் மட்டும் அவை ரெஸ்ட் எடுப்பது ஏனோ?

இராணுவம் இடத்தைவிட்டு விலகி செல்லும்போது  மனித உடல்களை புதைத்தபின் உருதெரியாமல் அழிக்க ஏதாவது ரசாயனங்களை ஊற்றிய புதைகுழியை விட்டுசென்றானோ தெரியயவில்ல,அவற்றின் சுவாச தாக்கமோ தெரியவில்லை.. பேய்களை நம்பி ஏமாறுவதைவிட இதனை நம்பி பார்க்கலாம் சாத்தியபாடு இருக்கும்! 

 விசாரணை செய்வதும் அவர்களதுபடை  விளங்கினமாதிரிதான்! உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மாலை வரையிலான கால பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , அவர்களின் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் பிரிவினர் , அவர்களின் புலனாய்வு பிரிவினர் , என பல தரப்பினர் பேய் பிசாசின் நடமாட்டம் உள்ளதா என விசாரணைகளை முன்னெடுத்து சென்றுள்ளனர். என வியாபரிகள் தெரிவித்தனர்.

 தேடிக் கண்டுபிடிச்சு      விசாரணைநடத்தி   முடிய    எல்லாப் பேய் பிசாசும் பயங்கர தடைச் சட்டத்தின்படி உள்ளே போகப் போகுதுகள் .   ஐ..... இனி வியாபாரிகளுக்கு பயமில்லை  

Link to comment
Share on other sites

பேயா? பிசாசா? முட்டாள் தனமான மூட நம்பிக்கை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

jaffna-market3.jpg?resize=800%2C600

யாழ்.சிற்றங்காடியில் பேய் , பிசாசு நடமாடி திரிவதாக கூறப்படுவது கட்டுக்கதை. எமது வியாபாரத்திற்கு எதிரானவர்களால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை என யாழ்.சிற்றங்காடி வியாபரிகள் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடை தொகுதியில் அமானுசிய சக்திகளின் நடமாட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த செய்தி கட்டுக்கதை எனவும் அவ்வாறு பேய் பிசாசு நடமாட்டம் எதுவும் இங்கில்லை என வியாபாரிகள் ஒருசாரார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அது தொடர்பில் தெரிவிக்கையில் ,

இங்குள்ள சிற்றங்காடி கடை தொகுதியில் 76 கடைகள் உள்ளன. அதன் மூலம் 125 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழில் வாய்ப்பினை பெற்று உள்ளனர். இங்கு இரண்டு வியாபாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இரு வியாபாரிகளும் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் சிறுநீரகம் செயலிழந்து இருந்தமையால் நோய் வாய்ப்பட்டு இறந்தார். மற்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர்கள் பேய் பிசாசு அடித்து உயிரிழக்கவில்லை. நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தார்கள்.

மற்றும் மாநகர சபை ஆணையாளரிடம் புதிய கடைத்தொகுதிக்கு சாந்தி செய்ய வேண்டும் என கோரி இருந்தது உண்மை தான். எமது இந்து மரபின் படி நாம் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் போது புதிய கடை திறக்கும் போது சாந்தி செய்வது வழமை. ஆனால் இந்த கடைகள் திறக்கும் போது அவ்வாறு சாந்தி செய்யவில்லை. மற்றும் ஆடி மாதத்தில் கடை திறந்தமையினால் மனதிற்கு சங்கடமாக இருக்கின்றது. அதனால் சாந்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து தருமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளரை கோரியுள்ளோம். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

நாம் சாந்தி செய்ய கோரியது எமது மதம் சார்ந்த நம்பிக்கைக்காகவே தவிர பேய் பிசாசுக்கு பயந்தில்லை பேய் பிசாசு என்பதை இந்த காலத்தில் நம்புவது முட்டாள் தனமான மூட நம்பிக்கை அப்படி இங்கு எதுவுமில்லை. தொழில் போட்டி காரணமாக சிலர் அவ்வாறான கட்டுக்கதைகளை கட்டி விட்டுள்ளனர். மக்கள் அச்சப்படாமல் எமது கடைகளுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்து செல்லலாம். என தெரிவித்தனர்.

jaffna-market.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2017/58020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி இருக்கையில் இப்படி ஒரு இடத்தில் பேய்கள் ஒன்று சேர்ந்து கொட்டமடித்தது கிடையாது :14_relaxed:இந்த நாசம் கெட்ட நல்லாட்சி அரசு வந்தபின்தான் அதுகளுக்கும் குளிர் விட்டு ஆடுதுகள் :14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வல்வை சகாறா said:

அமானுஸ்ய சக்தி???? மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் காற்றின் சலசலப்பையே வித்தியாசமாக உணர்கிறார்கள் போல் இருக்கிறது மேலே அமைக்கப்பட்ட கூரைக்குள் காற்று ஏறி இறங்கும்போதும் தகரங்களில் வெளிப்படும் ஒலியையும் வைத்து தீர்மானித்திருப்பார்களோ? மனப்பிராந்தி சுடலையில் கட்டப்பட்டது என்று கதைவேறு.. தமிழீழத்தின் எல்லாப்பாகங்களிலும் அவத்து சாவுகள் நிறைய அப்படியானால் அநேகமாக தமிழீழமே பேயுரையும் இல்லமாகும்... அட போங்கைய்யா போய் வேற வேலை ஏதாவது இருந்தால் பாருங்க.....

பேய் இருக்கா இல்லையா அத சொல்லுங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பேய் இருக்கா இல்லையா அத சொல்லுங்க 

இல்லை என்று சொல்லல இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இல்லை என்று சொல்லல இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான்......!  tw_blush:

இல்லை என்று சொல்பவனை  ஒருக்கா இங்குள்ள சவக்காலைக்கு நள்ளிரவு 12 மணீக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணினாத்தான் நான் நம்புவன் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை என்று சொல்பவனை  ஒருக்கா இங்குள்ள சவக்காலைக்கு நள்ளிரவு 12 மணீக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணினாத்தான் நான் நம்புவன் tw_blush:

நான் கடவுளை நம்புறேன் அதனால் பேயையும் நம்புறேன் ..... சில அனுபவங்கள் கூட இருக்குதுதான்..... என்ன ஒரு சிக்கல் என்றால் இல்லை என்று சொல்லும்பொழுது சுலபமாய் விலகிப் போய்விட முடியும். இருக்கெண்டு சொன்னால் எங்க அதை நிரூபி லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் பிக்கல் பிடுங்கல் தேவையா. நீங்கள் வேற சும்மா தேரை இழுத்து தெருவில விட்டுக்கொண்டு....! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நான் கடவுளை நம்புறேன் அதனால் பேயையும் நம்புறேன் ..... சில அனுபவங்கள் கூட இருக்குதுதான்..... என்ன ஒரு சிக்கல் என்றால் இல்லை என்று சொல்லும்பொழுது சுலபமாய் விலகிப் போய்விட முடியும். இருக்கெண்டு சொன்னால் எங்க அதை நிரூபி லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் பிக்கல் பிடுங்கல் தேவையா. நீங்கள் வேற சும்மா தேரை இழுத்து தெருவில விட்டுக்கொண்டு....! tw_blush:

 

ஒரு முசுப்பாத்திக்குத்தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.